(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, October 23, 2009

வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!

சென்ற 17.10.09 ஆம் தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரே பரபரப்பு!

என்னவென்று நினைக்கிறீர்கள்?



"தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.

அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு வழக்கம் போல் எச்சரிக்கை செய்தது. ஆனால் நடந்தது என்ன?


கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர், அவர்களின் வண்டியில் வைத்திருந்த குண்டு வெடித்து மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் இந்துக்களான பட்டேல் மற்றும் நாயக் என்று அடையாளம் கண்டனர். விஷயம் அத்தோடு முற்றுப் பெறவில்லை. வழக்கத்திற்கு மாறாக இம்முறை அந்தக் குண்டுவெடிப்பைக் குறித்து நமது நடுவு(!)நிலை ஊடகங்களின், "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற கூக்குரல் வெளிவரும் முன்னரே, வேகமாகச் செயல்பட்ட காவல்துறையினர், ஸ்கூட்டரில் இறந்த இருவரும் எடுத்துச் சென்ற குண்டு, எதிர்பாராத விதமாக முன்னரே வெடித்துச் சிதறியதையும் குண்டு கொண்டு சென்றவர்கள் யாவர்? என்ற விசாரணையில், அவர்கள் இந்துத் தீவிரவாத அமைப்பான சனாதன் சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்பதையும் கோவா காவல்துறையினர் கண்டு பிடித்து விட்டனர்.

இந்த சனாதன் சான்ஸ்தா அமைப்பு எது? என்பது வாசகர்களுக்கு மறந்திருக்காது!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில மாதங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் பைக் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிரக்யா சிங் மற்றும் அந்தக் குண்டு வெடிப்பின் மாஸ்டர் மைண்ட் ஆகச் செயல்பட்ட இராணுவ அதிகாரி கர்னல் புரோகித் ஆகியோர் கைது செய்யப் பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். அவ்விருவரும் தீவிரமாகச் செயல்பட்ட "அபினவ் பாரத்" இயக்கத்துடன் தொடர்புடைய இயக்கம்தான் சனாதன் சான்ஸ்தா என்ற தீவிரவாத அமைப்பு. அபினவ் பாரதின் முக்கிய பணி, ஆங்காங்கே நாச வேலைகளைச் செய்து விட்டு, அதனை முஸ்லிம்கள் செய்ததாகத் திசை திருப்பி விடுவதாகும் அந்த இயக்கதோடு தொடர்புடைய மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இயக்கத்தின் தொண்டர்கள் இருவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்ததிலிருந்து, இவர்களே பயங்கர வாத-நாசவேலைகளைச் செய்து விட்டு காவல் துறையினரை ஏவி, முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து கைது செய்யத் தூண்டும் நடவடிக்கையாகவும் அதன் மூலம் இரு சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் அடித்தள முயற்சியாகவும் இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.

இதே நாளில் மற்றொரு சம்பவமும் நடந்ததை இவ்விடத்தில் ஒப்பு நோக்குவது பொருத்தமாக இருக்கும். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்டைப் பந்துப் போட்டி ஒன்று 17.10.09ஆம் தேதி அன்று ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொள்ள காஷ்மீர் மாநில கிரிக்கெட் குழுவினர் வருகை தந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்நாடக காவல் துறையினர் எவ்விதக் காரணமும் இன்றி திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் என்பவருடைய பையில் சோதனையிட்டபோது, காவலரின் கையிலிருந்த கருவியிலிருந்து ஒலி எழுந்துள்ளது. ரசூலின் பையைத் துருவி-துருவிச் சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்கவில்லை. இருந்த போதும் ரசூலையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கர்நாடக காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

கர்நாடகக் காவல்துறையின் இத்தகைய செயலுக்குக் காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஃபாரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களூரு போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி, "சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்துத் தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாக" அறிவிக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு வரும் வரை, "காஷ்மீரிலிருந்து வந்த முஸ்லிம் விளையாட்டு வீரர் கைது, தீவிரவாதியா? வெடிகுண்டா?" என்பது போன்றெல்லாம் பக்கங்களை நிறைத்த சில பத்திரிகைகள், "அந்த விளையாட்டு வீரர் அப்பாவி, தவறு நடந்து விட்டது" எனக் காவல்துறை கமிஷனர் அறிவித்த செய்தியினைக் கண்டு கொள்ளவே இல்லை. இவ்விடத்தில், கர்நாடக மாநிலத்தில் பெண் தீவிரவாதி பிரக்யாசிங்கிற்காகக் குரல் கொடுத்த பாஜக ஆட்சி செய்கின்றது என்பதையும் இதே மாநிலத்தில் தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பும் மிகச் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநியாயப் பழி சுமத்தி ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட டாக்டர் ஹனீஃபிடம், நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்டஈட்டுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. ஆனால் கர்நாடகக் காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூலின் பைச் சோதனையில் ஒன்றுமில்லை என்று அறிவித்து விட்டு, "அந்த வீரர் ரசாயன பரிசோதனை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது" என்றும் அறிவித்துள்ளது.

இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும் அது பெரும்பாலும் இளைஞர்களையும் மாணவர்களையும் கொண்ட அமைப்பாகவும் அவர்கள் வேலையே பெண்களைக் கவரக்கூடிய செல்போன் தொடர்பினை முஸ்லிம் பெண்களிடம் ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்குக் களங்கத்தினை ஏற்படுத்தி விட்டுத் தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. இது தொடர்பான சில ஆர்.எஸ்.எஸ்ஸின் உள் சுற்றறிக்கைகளைச் சில முஸ்லிம் அமைப்புகள் கைப்பற்றி வெளியாக்கியுள்ளன.

***

"ஃபாலஸ்தீனின் காஸா பகுதியில் பெண்கள்-குழந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 முஸ்லிம்களைக் கொன்று இனப் படுகொலையில் இஸ்ரேல் அரசு ஈடுபட்டது" என ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது! ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனைத் தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேலின் ஏஜண்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்:

சமீபத்தில் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரேல் நாட்டு பேராசிரியர் ஒருவர், "இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்" என்று பேசியிருக்கிறார். மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா? வேண்டாமா? என்ற விஷயம் விவாதத்திற்குட்டது என்று சொல்லும் போது, அந்நிய நாட்டைச் சேர்ந்த இவர் பி.ஜே.பியின் ஊது குழலாக மாறி, பொது சிவில் சட்டம் இந்தியாவுக்கு வேண்டும் என்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய விண்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் என்பவர் இஸ்ரேல் உளவாளியாக இருந்திருக்கிறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான சிலத் தகவல்களை, சில டாலர்களுக்காகப் பரிமாற்றம் செய்யும் போது, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐயிடம் கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி கையும் களவுமாக மாட்டியுள்ளார்.

நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் ஹிந்துத்துவாவும் உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வரும் இஸ்ரேலிய சியோனிஸமும் உள்கட்டமைப்பில் ஒரே அடிப்படைகளைக் கொண்டுள்ளதும் அவை உள்ளுக்குள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் அவ்வபோது வெளியாகும் தகவல்கள் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன. "மாலேகோன் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித், இஸ்ரேலைத் தலைமையாகக் கொண்டு ஒரு ஹிந்துத்துவ அரசை ஏற்படுத்துவது என்றும் அது இஸ்ரேலிலிருந்து இந்தியாவைக் கட்டுப்படுத்தும் வகையில் காய்களை நகர்த்தியதாகவும் அதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்றும் விரைவிலேயே அந்த ஆவணங்களுடன் மாலேகோன் குண்டு வெடிப்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாகவும்" மகாராஷ்டிரத் தீவிரவாதத் தடுப்புப்படை அதிகாரி ஹேமந்த் கார்கரே சுட்டுக்கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் மிக மிக அதிர்ச்சியளிக்கும் வகையில் அதற்கு அடுத்த நாள் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் அவர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். கார்கரே விசாரித்து வந்த மாலேகோன் குண்டுவெடிப்புத் தாக்குதலை விசாரிக்க, கார்கரேயால் விசாரணை செய்யப் பட்டவரும் மாலேகோன் குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியான கர்னல் புரோஹித்தின் நெருங்கிய நண்பருமான ஹிந்துத்துவவாதி என வெளிப்படையாகவே அறியப்படும் ரகுவன்ஷி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரகுவன்ஷி தலைமையேற்றவுடன், அதற்குச் சில தினங்களுக்கு முன்னர் கார்கரே கூறிய "ஹிந்துத்துவ-இஸ்ரேல் கூட்டணியை" நிராகரித்து விட்டு, "கர்னல் புரோஹித் அவ்வாறான திட்டம் போட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அந்தக் குண்டுவெடிப்புக்குச் சர்வதேச பின்னணி ஏதும் இல்லை" எனவும் அறிவித்தார். அடுத்தச் சில தினங்களில் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் முன்னர் கார்கரே கூறிய இஸ்ரேல் தொடர்பு குற்றச்சாட்டுகள் அடையாளமின்றி அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. நீதிமன்றமும் அந்தக் குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் நல்லப்பிள்ளையாக, அதுவரை "தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்த மாலேகோன் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் அனைவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுவித்ததோடு, சாதாரண வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு அவர்களின் வழக்கையும் 'மாற்றி' உத்தரவிட்டது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலந்து சிந்திக்கும் எவருக்கும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை எவ்வாறு அபாய நிலையில் உள்ளது என்பதும் நாட்டில் இந்துத்துவா-இஸ்ரேல் கூட்டணி தீவிரவாதம் மறைமுகமாகக் கட்டமைக்கப்பட்டு மிக நேர்த்தியாக வளர்ந்து வருவதையும் அறிந்துக் கொள்ள இயலும்.

இந்நிலையில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன? அவர்கள் எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை? தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும்?

உடனடியாக மிகத் தீவிரத்துடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயமாகும் இது. இப்பொறுப்பைச் சமுதாய அமைப்புகளிடமும் ஜமாஅத்துகளிடமும் தற்போதைக்கு விட்டு விட்டு, மிக அடிப்படையாக முஸ்லிம்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இங்குப் பட்டியலிடுவோம்:

ஜூம்மா தொழும் போது மக்காவிலுள்ள கஅபாவில் பாதுகாப்புக்காகக் காவலர்கள் இருப்பது போல இங்கும் இளைஞர்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.

பெரிய தப்லீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம் - ஹேண்ட் மேட் மெட்டல் டிடக்ட்டர்கள் பயன்படுத்தி, சோதனைக்குப் பின் அனுமதிக்க வேண்டும்.

பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களைத் தங்க அனுமதிக்கக் கூடாது.

திருமணம் போன்ற மக்கள் கூடும் சமூதாய நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைப்பேசி, இணையம் பயன்படுத்தும் முஸ்லிம் பெண்களை அவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் கவனமாகக் கண்காணிப்பதோடு, அப்பெண்களுக்கும் அநாமதேய அழைப்புகள் வரின் அதனை முறையாகப் பெற்றோர்/பாதுகாவலரிடம் தெரியப்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆளாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும். குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ரத், சொராபுதீன் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என்று போலி முத்திரைக் குத்தி அநியாயமாகப் படுகொலை செய்த பாஜக பயங்கரவாத நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள், வியாபாரத் தலங்கள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் ஆகியவைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைபார்க்கும் ஊர்களிலும் முஸ்லிம்கள் குறைந்த எண்ணிக்கையில் வாழும் ஊர்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஜமாஅத்துகள், அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்.

அரசு இயந்திரங்களின் முழு ஒத்துழைப்புடன் நாட்டில் ஆக்டோபஸ் போன்று பரவி வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்புப் பெற இத்தகைய நடவடிக்கைகள் மிகப் பெரிய பலனை ஏற்படுத்தி விடாது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவற்றை உடனடியாக கவனிப்பதோடு, முஸ்லிம் சமுதாயம் ஒன்றிணைந்து நாட்டில் வளர்ந்து வரும் ஹிந்துத்துவ-இஸ்ரேலிய கூட்டு பயங்கரவாதத்தை வேரடி மண்ணோடு சாய்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

இதுவே இப்போதைய உடனடித் தேவையாகும்.

- முஹம்மது அலி. ஐ.பி.எஸ்

4 comments:

  1. நம்பிக்கை கொண்டவர்களே!

    நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்.(உலகப்பொதுமறை 2:208)

    நம்பிக்கை கொண்டோரே!
    நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (உலகப்பொதுமறை 3: 102)

    நாங்கள் முஸ்லிம்கள்:
    எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக் கூறுகிறாரோ, அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்? (உலகப்பொதுமறை 41:33)


    news matum sollanum matham mara solla kudathu......stop.stop...............

    ReplyDelete
  2. சகோதரர் பாலாஜி அவர்களுக்கு ...

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக !

    நீங்கள் சுட்டிகாட்டிய (இணையதளத்தில் போடப்பட்ட) திருக்குர்ஆன் வசனத்தில் உங்கள் வாழ்க்கை வழிகாட்டியான இஸ்லாத்தை விட்டு வேறு ஒன்றை தேர்வு செய்யாதீர்கள் என்று நம்மை படைத்த இறைவன் சொல்கிறான்.
    நாங்கள் சொல்லவில்லை ..

    மேலும் இஸ்லாம் என்பது மதம் அல்ல அது ஒருமார்க்கம் ( வழிகாட்டி ) அதை தேர்வு செய்வதும மறுப்பதும நம் விருப்பம் . எதுவும் கட்டாயம் கிடையாது. அப்படி இருக்க இதை நிறுத்த சொல்ல வேண்டிய அவசியமுமில்லை அதை யாராலும் நிறுத்தவும்முடியாது.

    இணையதளத்தில் எவ்வளவோ அசிங்கங்கள் இருக்க .அதை எல்லாம் கண்டுகொள்ளாமல்..இதை நிறுத்த வேண்டும் என்று உங்கள் மனம் விரும்பினால் .. அந்த மனதிற்குள் இஸ்லாம் நுழையத்தயாராகி விட்டது என்றே தோன்றுகிறது. (இன்ஷால்லாஹ்)

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி .. உங்கள் மறுப்புரையை எதிர்பார்கிறேன்.

    ReplyDelete
  3. ஆமாம்..ஆமாம்...முஸ்லீம்களுக்கு ஒன்னுமே தெரியாது

    ReplyDelete
  4. முஸ்லிகளுக்கு ஒன்றுமே தெரியாது என்று நாம் சொல்ல வில்லை சகோதரே..

    மொட்டை பையானாக இருந்தாலும் உங்களுக்கு தெரிந்த அளவிற்கு இந்த தாடிவைத்த முஸ்லிம்களுக்கு தெரியவில்லை என்றே சொல்கிறோம்...

    கருத்துக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...