(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, January 31, 2010

பார்வையற்றோர்கள் இனி நாவினால் பார்க்கலாம்: புதிய கருவி!

ஆஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ‘பார்க்கும்’ வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி ‘ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ‘ ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது.



இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும்.

தேடித்தந்தவர்-சிராஜ்

இந்த கருவி பற்றிய மேலதிக தொழிலில் நுட்ப தகவல்கள் http://science.howstuffworks.com/brainport3.htm

இந்த கருவியை ஒரு பார்வையற்றவருக்கு பரிசோதனை செய்யும் வீடியோ



NAGOREFLASH//thanks 2 tntj.net

Saturday, January 30, 2010

இஸ்லாமிய வரலாற்று சுவடுகள்

Mount Hira: Jabal Al-Nur (Mount of Light) near Mecca, with the cave of Hira where Prophet Muhammad received the first revelation. (Sura 96: 1-5)




A page from the copy of the Holy Qur'an, from the time of Caliph Uthman, kept in Tashkent(Sura 2:7-10; part of the left margin has not been reproduced)

Take a copy of the Qur'an available today and compare.



Another page from the copy of the Holy Qur'an, from the time of Caliph Uthman, kept in Tashkent (Sura 7:86-87)
Take a copy of the Qur'an available today and compare




The Holy Qur'an: From the time of Caliph Uthman kept in the Topkapi Museum, Istanbul.


கண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல்

1. கண்திருஷ்டி என்றால் என்ன?

தீங்கை ஏற்படுத்தும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி அல்லது கண்ணேறு என்று கூறுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள், 'கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி), நூல்: புஹாரி 5740, 5944,)

'ஆந்தையினால் ஏதும் இல்லை, (ஆந்தை அலறுவதால் ஏதும் இல்லை) கண்ணேறு உண்மையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஹாபிஸ் அத்தைமீமி (ரலி), நூல்: திர்மிதி 2140)

2. கண்திருஷ்டி எவ்வாறு ஏற்படுகிறது?

கண்திருஷ்டி கெட்டவர்களினால் ஏற்படுகிறது, அதற்கு நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் ஆதாரமாகும்.

கண்ணேறு பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, 'அது ஷைத்தானின் வேலையாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அபூதாவூது 3859)

3. கண்திருஷ்டியின் பாதிப்புகள் எவ்வாறு இருக்கும்?

கண்ணேறு முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரையை உண்டாக்கும். அதற்கான ஆதாரம்.

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில் இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறது என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5739)

கண்திருஷ்டியினால் வியாதிகள், சுகவீனம் உண்டாகும் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.

விதியை மாற்றுவதை மாற்றும் வலிமை வாய்ந்தது. அதற்கான ஆதாரம்.

'அல்லாஹ்வின் தூதரே! ஜஃபரின் குழந்தைகளுக்கு அடிக்கடி கண்பட்டு விடுகிறது. அவர்களுக்காக நான் மந்திரிக்கலாமா? என்று அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆம்! விதியை வென்று விடக்கூடிய ஒன்று இருக்குமானால் கண்ணேறு அதை வென்றுவிடும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உபைத் பின் ரிபாஆ அஸ்ஸுரகீ (ரலி), நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா 3510, திர்மிதி 2136)

விதியை எதுவும் மாற்றாது, மாற்ற முடியாது. அப்படி ஏதாவது ஒன்று இருந்திருந்தால் அதை (அந்த ஒன்றை) இந்தக் கண்ணேறு மாற்றும், விதியை மாற்றாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

4. கண்திருஷ்டியிலிருந்து மீள்வது எப்படி?

எளிமையான ஒரே வழி ஃபலக், நாஸ் என்ற அல்குர்ஆனின் கடைசி இரண்டு அத்தியாங்களை ஓதுவது தான்.

'ஃபலக், நாஸ் அத்தியாயங்கள் இறங்கும் வரை கண்ணேறு, ஷைத்தான் ஆகியவற்றிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். அவ்விரு வசனங்களும் இறங்கிய பின் அதை எடுத்துக் கொண்டு மற்றவைகளை விட்டு விட்டார்கள்' என்று அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள்: நஸயீ, இப்னுமாஜா 3511, திர்மிதி 2135)

மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவதே கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க வழியுமாகும்.

5. ஓதிப்பார்த்தல்:

கண்திருஷ்டியிலிருந்து மீள்வதற்கு ஓதிப்பார்க்க அனுமதி உண்டு. அதற்குரிய ஆதாரங்கள்.

'விஷகடி, கண்ணேறு, சிரங்கு ஆகியவற்றுக்காக மந்திரிக்க நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள்' என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதி 2132)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீய விளைவி)லிருந்து விடுபட ஓதிப்பார்த்துக் கொள்ளும்படி கட்டளையிட்டார்கள் அல்லது எனக்குக் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புஹாரி 5738)

'சிரங்கு, கண்ணேறு ஆகியவற்றுக்குத் தவிர மந்திரித்தல் கிடையாது' நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி), நூல்: திர்மிதி 2134)

மந்திரித்தல் ஓதிப்பார்த்தல் இரண்டும் ஒரே பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் அனுமதித்த முறையில் ஓதிப்பார்ப்பது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். அதுவல்லாத முறையில் ஓதிப்பார்ப்பது தடுக்கப்பட்டதாகும். அதற்குரிய ஆதாரங்கள்.

'யார் சூடுபோட்டுக் கொள்கிறாரோ அல்லது மந்திரிக்கிறாரோ அவர் தவக்குலில் (உறுதியான நம்பிக்கையில்) இருந்து நீங்கி விட்டார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி), நூல்கள்: அஹ்மது, நஸயீ, இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம், திர்மிதி 2131)

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கண்திருஷ்டியை கழிப்பதற்காக கட்டப்பட்ட கயிற்றை அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். மிருகங்களுக்கு கூட கறுப்புக் கயிறு கட்ட நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை. மனிதர்களுக்கு எப்படி அதை கட்ட முடியும்.

நான் அல்;லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன கண் திருஷ்டி கழிவதற்காக கட்டப்படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று கருப்பை விரட்டுவதற்காக கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும் என்று (பொது மக்களிடையே) அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் அப்போது மக்கள் தங்கள் உறங்கும் இடத்தில் இருந்தார்கள் என்று அபூபஷீர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் எண்ணுகிறேன் என்று கூறுகிறார்கள். (நூல்: புஹாரி 3005)

'எந்த வித விசாரணையும் இன்றி சொர்க்கம் செல்லும் எழுபதினாயிரம் பேர் ஓதிப் பார்க்காது, இறைவனையே சார்ந்திருப்பவர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5705)
இங்கே ஓதிப்பார்ப்பது என்பது நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த முறையில் அமையாததை குறிக்கும். நபி (ஸல்) அவர்கள் தனக்குத் தானே ஓதிப்பார்த்திருக்கிறார்கள் என்பதிலிருந்தும் அனுமதிக்கப்பட்ட முறையில் ஓதிப்பார்க்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

6. ஓதிப்பார்க்கும் முறை:

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வொரு இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல்ஹுவல்லாஹுஅஹத், குல்அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் னாஸ் ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து பிறகு முகம் பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி), நூல்: புஹாரி 5017)

7. நடை முறை:

நடை முறையில் கண்திருஷ்டியை கழிக்க 'தலைசுற்றிப் போடுதல்' என்ற முறை உள்ளது. இது மாற்றுமத சமூகத்திலிருந்து முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து விட்ட வழக்கமாகும். பட்ட மிளகாய், உப்பு, முச்சந்தி மண், வீட்டுக் கூறையின் ஓலை இவை போன்றவற்றை கண்திருஷ்டி பட்டவரின் தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடுவார்கள். இன்னும் இது போன்ற வழக்கங்களும் நடைமுறையில் உள்ளன.

இம்முறைகள் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டிய மூடப்பழக்கமாகும். இதனால் கண்திருஷ்டி குணமாகாது.

NAGOREFLASH // THANKS 2 http://www.idhuthanislam.com/

மார்க்க வியாபாரிகள் !! --அழைப்பாளர்கள் சிந்திக்கட்டும்

உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்! (அல்குர்ஆன் 2:41)

தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)

இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள்.

இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம்.

முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.

நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது.

அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.

குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.

தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.

பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.

'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.

மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.

நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.

ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.

எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.

மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.

நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.

நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.

வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை

NAGOREFLASH// THANKS2http://www.idhuthanislam.com

Friday, January 29, 2010

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை பாதிக்கும் தமிழக அரசின் கட்டாய திருமண பதிவுச்சட்டம்

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை பாதிக்கும் தமிழக அரசின் கட்டாய திருமண பதிவுச்சட்டம்








NAGOREFLASH//thanks2intj.in

செல்போன்கள் --அறிவியல் அதிசயம்

தொலைபேசிகள் இயக்கத்திற்கு வந்த பிறகும்கூட தொலைபேசியின் மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால் பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி. பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின் வளர்ச்சி.


செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின் எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை 1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும் அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும் பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை பற்றிப் பார்ப்போம்.

இன்றைய செல்போன்களில் கீழ் காணும் பலவிதமான நேர்த்தியான செயல்பாடுகள் கொண்டிருக்கிறது. அவைகள்.


1. அழைப்புப் பற்றிய விரிவான விவரங்களை பதிவு செய்யும் வசதி.

2. செய்ய வேண்டிய காரியங்கள் பற்றிய குறிப்பு.

3. சந்திப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் நினைவூட்டி ஏற்படுத்திக் கொள்ளும் வசதி.

4. எளிமையான கணக்குகளை போடுவதற்கு ஏற்ற உட்பொருத்தப்பட்ட கால்குலேட்டர்.

5. சிறு தகவல் சேவை (SMS)

6. மின் அஞ்சல் வசதி(email)

7. வலைத்தளங்களிலிருந்து தகவல்களை பெறும் வசதி.

8. வலைத்தளங்களை அலசும் வசதி. (Web Browsing)

9. சிறு விளையாட்டுகளை விளையாடும் வசதி.

10. Pனுயுளஇ ஆP3 மற்றும் புPளு அலை ஏற்பிகளை இணைக்கும் வசதி.

11. பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகள் கேட்கும் வசதி (FM Radio)

12. ஆச்சர்யதக்க வகையில் எண்ணற்ற MP3 பாடல்களை பதிவு செய்து கொண்டு தேவைப் படும்பொழுது கேட்கும் வசதி.

13. "புகைப்படம்" மற்றும் "வீடியோ" எடுக்கும் வசதி.

14. புகைப்பட தகவல் சேவை (Multi-Media Massaging Service - MMS)


சிறு தகவல் சேவை

இலக்குமுறை மின்தளங்கள் வசதி கொண்டிருக்கும். இச்சேவையில் 160 வரியுருக்களை மின்தள இயக்க சேவை மையம் மூலமாக செல்போன்களுக்கு அனுப்பவும் பெறவும் முடியும். இணையதளங்களில் நஙந நுழைவு வாயில் மூலமாகவும் சிறு தகவல் சேவை பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. செல்போன்கள் இயக்கத்தில் இல்லாதபோதும், அலை வீச்சுக்கு அப்பாற்பட்ட இடத்தில் உள்ளபோதும் இத்தகவல்கள் பதிவு செய்யப்பட்டு செல் போன்கள் இயக்கத்தில் வந்தவுடன் கிடைக்கப்பெறுகிறது. விளம்பரம் முதல், உலக செய்திகள், ஓட்டு வேட்டை முடிவுகள், கிரிக்கெட் இப்படி எல்லாமே நஙந தான்.



உடனடித் தகவல் உரையாடல்:

உடனடித் தகவல் தேவை ஏற்கனவே இணையதளங்களில் இருப்பதை அறிந்திருப்பீர்கள். இச்சேவை பெறுவதற்கு கணினி மூலம் இணைய இணைப்பு பெற்ற வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது இணைய மையங்களிலோ தான் பெறமுடியும். ஆனால் செல்போனிலோ நீங்கள் பள்ளி, கல்லு}ரி செல்லும் போதோ அலுவலகம் செல்லும்போதோ எங்கிருந்தாலும் தொடரா இணைப்பில் உள்ள உங்கள் நண்பருடன் உரையாட முடியும். செல்போன் களில் உடனடித் தகவல் சேவை ஊர்தி ஆள்கலத்திற்கு ஆழடிடைந னழஅயin) மாற்றப்பட்டிருப்பதால் இவ்வசதி கிடைக்கப் பெறுகின்றன.

செல்போன்களில் பங்கேற்பவர்கள் அனைவரும் உள்ளிடும் உரையாடல்களை உடனடியாக பெறும் வசதி கொண்ட அனைவரையும் அழைத்து உரையாடல் நிகழ்த்தலாம். இதற்காக உடனடித் தகவல் சேவை பயன் படுத்துபவர்களுக்கு உரையாடு அறை ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கிறது. நண்பர்களும், நண்பி களும் மற்றும் தோழர்கள் இன்று கம்ப்யூட்டர் மையம் செல்லாமல் வகுப்புகளிலேயே செல்போன் மூலம் உரையாடுவது செய்வது இப்போது சாதாரணமாக உள்ளது.

ஜாவா மிதக்கும் செயல்நிரல்:



செல்போன்கள் உபயோகிக்கும் பெரும் பாலானோர் தங்கள் விருப்பத் திற்கேற்றவாறு வளைத்தொனி ஃமணியோசை மற்றும் திரைக்காப்பிகளை இணையத்தளத்திலிருந்து செல் போன்களுக்கு இறக்கம் செய்து கொள்கின்றனர். இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது ஜாவாவின் தொழில்நுட்பம். அன்றாட வாழ்க்கையின் நிர்வாக சாதனங்கள், பயண சம்பந்தமான பயனூறுகள், தகவல் சேவைகள் மற்றும் ஒளிக்கற்றை விளையாட்டுக்கள் போன்றவற்றையும் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பெறலாம். மேற்கூறிய அம்சங்களையெல்லாம் செல்போனில் ஏற்றிக் கொள்வதும், தேவையில்லாதபோது அதை அகற்றி விடுவதும் மிக எளிது.

ஜாவாவின் தொழில் நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பயனூறுகளை தேர்வு செய்வதோடு முடிவதில்லை, அவற்றைப் பார்த்து மகிழ்ந்து அது முழுமையாக உணர்வதற்கும்தான். இதன் வடிவமைப்பாளர்கள், வாடிக்கையாளர்களின் பல்வேறு விருப்பத்திற்கேற்ப பல டிசைன்களில் ருஐ எனப்படும் பயனீட்டாளர்கள் இடைமுகத்தை ஏற் படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். இவ்வித பயனூற்றங்களை கம்பியில்லா பயனூறு வழிமுறை மேம்பாடுகளை பயன்படுத்தி தேடிக் கொள்ளலாம். நவீன நோக்கியா கைச் சாதனத்தில் உள்ள பயனூறு உறையைப் பயன்படுத்தி இவ்வித பயனூற்றங்களை நேரடியாக இறக்கம் செய்து கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். பல பயனூற்று வடிவமைப்பாளர்கள் தங்களின் கற்பனை மற்றும் படைக்கும் திறமைகளைக் கொண்டும் எல்லையில்லா ஜாவாவின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் கம்பியில்லா தகவல் தொடர்பு உலகத்தில் பல சாதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மொபைல் வீடியோ:


ஊர்தி ஒளித்தோற்றம் செல்போன்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பலவிதமான வழிகளில் வீடியோக்களை அனுப்பவும் பெறவும் வசதி உண்டாக்கப்பட்டிருக்கின்றது. இந்த வசதி ஒளித்தோற்றங்களை பார்ப்பதற்கும், அனுப்புவதற்கும், தங்களின் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளவும் மற்றும் இவற்றை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுகிறது.

ஊர்தி ஒளித்தோற்றத்தில் இறக்க உள்ளடக்கம் தொடரோட்ட உள்ளடக்கம் என இரண்டு வகைகள் உள்ளன. இறக்க உள்ளடக்க வகையில் ஒளித்தோற்றங்கள் சிறு ஆயத்தப் படமாக இருக்கும். இவைகள் செல்போன்களில் உள்ள நினைவகத்தில் தேக்கி வைக்கப்படுகிறது.

பல் ஊடக தகவல் சேவையும் இதே முறையில்தான் தேக்கிவைக் கப்படுகிறது. இரண்டாவது வகையான தொடரோட்ட உள்ளடக்கம் செயலாற்றும் விதம் ஏறக்குறைய தொலைக்காட்சி பெட்டியைபோல் இருக்கும். இவ்வசதி கொண்ட செல்போன்கள் காட்சியமைப்பு போல் செயலாற்றும். இருந்தாலும் இவற்றில் எந்தவொரு தகவலையும் தேக்கி வைக்க முடியாது. இதனால் அதிக அளவில் உள்ள உள்ளடக்கங்களை காண்பதற்கு மிகவும் ஏதுவாக திகழ்கிறது இந்த தொழில் நுட்பம்.

மொபைல் வீடியோ மூலம் கீழ்காணும் சேவைகளைப் பெறலாம்.

* மனதிற்கு உடன் சந்தோஷத் தினை தந்திட

* நண்பர்கள் மற்றும் குடும்பத்தி னருக்கான தனிப்பட்ட ஒளித்தோற்ற வாழ்த்துக்கள்

* பல்ஊடக தகவல் சேவை மூலம் பொழுது போக்கு அம்சங்கள், கார்ட்டூன்கள், திரைப்பட முன் னோட்டங்கள், இசை ஒளித் தோற்றங்கள்

* பயிற்சி வகுப்புகள்.

* தொடர் செய்திகள், வானிலை அறிக்கைகள் மற்றும் விளையாட்டு சிறப்புச் செய்திகள்.

* உங்களின் கற்பனை மற்றும் படைப்புத் திறனுக்கு தீனி.

GSM (Global System for Mobile communication):



செல்போன் பூகோள தகவல் தொடர்பு அமைப்பு GSM' என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. முதல் ஐரோப்பிய இலக்க நிர்ணய முறை மேம்படுத்தப்பட்டு செல்போன்கள் சேவை முறைகள் ஐரோப்பியா முழுவதும் நிறுவப்பட்டது. இதன் வெற்றியின் எதிரொலியால் இன்று உலகம் முழுவதும் சுமார் 80 எநங மின் தளங்கள் பரவி இயக்கத்தில் உள்ளன. இது 900GSM அதிர்வெண் கொண்டவை ஆகும்.

செல்போன் தொழில்நுட்பத்தில் புதிய சேவைகள்:


MMS செல்போன்கள் தொழில் நுட்பத்தால் வளர்ந்த பலவிதமான சேவைகளில் மிக நேர்த்தியாக விளங்குகிறது மிக அண்மையில் அறிமுகப்படுத்தப் பட்ட பல் ஊடக தகவல் சேவை
(. செல்போன்களின் ஆரம்பகாலத்திலிருந்து அனுப்பப்படும், SMS சேவையை போலவே MMS மூலம் தகவல்கள் தானியங்கு முறையிலும் துரிதமாகவும், அனுப்பப்படுகிறது. இருந்தாலும் MMS-ல் உள்ள பல்வேறு சிறப்பு அம்சங்கள் SMS-ஐ விட பல மைல்கள் கடந்து முன்னேறி நிற்கிறது. MMS மூலம் தகவல் அனுப்புபவர்கள் தகவல்களுடன் படம், ஒலி மற்றும் பல மேம்பட்ட உள்ளடக்கங்களை வைத்து தங்களது விருப்பத்திற் கேற்றவாறு ஒலி மற்றும் படத் தகவல்களை அமைத்து அனுப்பலாம்.

ஆஆளு-ன் தொழில் நுட்பம் உள்ளடக்கத் தகவல்களை அகலப்படுத்துவது மற்றும் ஒரு செல்போனிலிருந்து மற்ற செல்போனுக்கு MMS தகவல் அனுப்புவதோடு முடிந்து விடவில்லை இதன் பணி. ஒரு செல் போனிலிருந்து மின் அஞ்சல் அனுப்பு வதற்கும் மற்றும் பெறுவதற்குண்டான வசதியையும் உள்ளடக்கியிருக் கிறது என்பது இதன் சிறப்பு. மேற் கூறிய சிறம்பம்சங்கள் அனைத்தும் செல் தகவல் தொடர்பு, தனி உபயோகம் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களிலும் மிக உன்னதமான பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

பல்ஊடக தகவல் சேவைகள் , செல் தகவல் தொடர்பை முற்றிலுமாக மாற்றி அமைத்து தனி உபயோக, நம்பகத்தன்மை கொண்ட மற்றும் எளிதாக புரிந்து கொள்ளக் கூடியதாக கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இந்த MMSு-ன் சிறப்பம்சம் இக்கால சந்ததியினருக்கு ஏற்றதாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

தகவல் தொகுப்பு:
எம்.ஜே.எம்.இக்பால்,
துபாய்.

Wednesday, January 27, 2010

வெளிநாட்டில் வேலை செய்பவரா நீங்கள்..?

வெளிநாட்டில் வேலை செய்பவரா நீங்கள்..? கொஞ்சம் நேரம் ஒதிக்கி இத படிங்க..
இது உங்களை பற்றியது

இஸ்லாமியர்களில் பலர் பொருளாதார தேவைக்காக வெளிநாடு சென்று, அங்கேயே பல ஆண்டுகளாக தங்கி வேலை செய்பவர்களாக இருக்கின்றார்கள். இஸ்லாத்தின் பார்வையில் இதுபோன்ற பயணம் கூடுமா? என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
இஸ்லாத்தில் பொருளாதாரத்தை அதிகளவில் திரட்டுவது தவறோ, பாவகாரியமோ அல்ல.ஆனால் அதை மட்டும் காரணம் காட்டி மற்ற கடமைகளை புறக்கணிப்பது, உதாசீனப்படுத்துவது மிகவும் தவறாகும்.


இஸ்லாத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை காரணம் காட்டி கூட நம் பெற்றோர்களுக்கு, மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விடமுடியாது.
அவ்வாறு ஒருவர் செய்வாரானால் அவர் இறைவனிடத்தில் இறை நேசராக கருதப்படமாட்டார். மாறாக குற்றவாளியாகவே கருதப்படுவார்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சமயங்களில் தெளிவு பட உணர்த்தியிருக்கின்றார்கள்..

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ”அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப் படுகிறதே!'' என்று கேட்டார்கள். நான் ;ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். நபி (ஸல்) அவர்கள் ;இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்(சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில் உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன .

உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச்செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்றபத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!'' என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால், என்மீது சிரமம்
சுமத்தப்பட்டுவிட்டது! ;

அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!'' என்று நான் கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்; “தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம்!'' என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது?' என்று நான் கேட்டேன் ; ”வருடத்தில் பாதி நாட்கள்!'' என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலிலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின் நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய்விட்டேனே!' என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள்!'' என அபூசலமா அவர்கள் கூறுகிறார்கள். (நூல்: புகாரி 1975)

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள்
சல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) ஆகிய இரு வரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சல்மான் அபுத்தர்தாவைச் சந்திக்கச் சென்றபோது (அபுத்தர்தாவின் மனைவி) உம்முத் தர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார். உமக்கு என்ன நேர்ந்தது?' என்று அவரிடம் சல்மான் கேட்டார். அதற்கு உம்முத் தர்தா (ரலி) அவர்கள், உம் சகோதரர் அபுத்தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையுமில்லை' என்று விடையளித்தார்.

(சற்று நேரத்தில்) அபுத்தர்தா வந்து சல்மானுக்காக உணவு தயாரித்தார். சல்மான் (ரலி) அவர்கள்
அபுத்தர்தா விடம், உண்பீராக!' என்று கூறினார். அதற்கு அபுத்தர்தா, நான் நோன்பு நோற்றிருக்கிறேன்...' என்றார். சல்மான் ;நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்'' என்று கூறியதும் அபுத்தர்தாவும் உண்டார். இரவானதும் அபுத்தர்தா (ரலி) அவர்கள் நின்று வணங்கத் தயாரானார்கள்.. அப்போது சல்மான் (ரலி) அவர்கள், உறங்குவீராக!' என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் சல்மான், உறங்குவீராக!' என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் சல்மான் (ரலி) அவர்கள், இப் போது எழுவீராக!' என்று கூறினார்கள். இருவரும் தொழுதனர்.


பிறகு அபுத்தர் தாவிடம் சல்மான் (ரலி) அவர்கள்,“*நிச்சயமாக உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன* உம் குடும்பத்தாருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன அவரவருக்குரிய கடமைகளை.,நிறைவேற்றுவீராக! என்று கூறினார்கள். பிறகு அபுத்தர்தா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார் கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், சல்மான் உண்மையையே கூறினார்*!'' என்றார்கள்.
(நூல்: புகாரி 1968)


இந்த செய்திகளும் இதுபோன்ற பல செய்திகளும் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை காரணம் காட்டி, மனைவிக்கு செய்ய வேண்டிய தாம்பத்தியம் எனும் கடமையை புறக்கணிப்பதையோ பெற்றோரை பராமரித்தல் எனும் கடமையை நிறைவேற்றத் தவறுவதையோ மிகவும் வன்மையாக கண்டிப்பதை காணலாம். இந்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொண்டு வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேளை செய்பவர்களின் நிலையை பார்த்தோம் என்றால்..,

இன்று வெளிநாடுகளில் தங்கி வேளை பார்ப்பவர்களில் பலர் திருமணம் முடித்தவர்களாக, பிள்ளைகளை பெற்றவர்களாக, வயதான பெற்றோரை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் சிலர் திருமணம் முடித்துவிட்டு புது மனைவியை விட்டு
வந்தவர்களும் இருக்கின்றார்கள்அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மிகவும் சாதாரணமாக புறக்கணிக்கின்றார்கள்.

தொழுகையை காரணம் காட்டியே மற்ற கடமைகளை புறக்கணிக்கக் கூடாது எனும்போது, பொருளா தாரத்தை காரணம் காட்டி இதர கடமைகளை புறக்கணிப்பது இறைவனிடத்திலும், இறைத் தூதரிடத்திலும் எவ்வளவு பாரதூரமான பாவகாரியம் என்பதை இதுபோன்ற சூழ்நிலையில் சிக்கித்தவிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

பெரும்பாலானோர் பொருளாதார பிரச்சனையை காரணம் காட்டி தான் வெளிநாடு செல்கிறார்கள் , ஆனால் வெளிநாட்டில் சென்று எந்த வேலையாவது செஞ்சி குடும்பத்த காப்பாத்தலாம் என்று உறுதியோடு செல்லும் நம் சகோதரர்களுக்கு நமது சொந்த நாட்டில சம்பாதிக்க முடியும் என்ற உறுதி இல்லாமல் போய்விட்டது .

இதையல்லாம் வேண்டும் என்று நாங்கள் செய்யவில்லை , குடும்ப , கால சூழ்நிலைகள் எங்களை இப்படி செய்ய வைக்கிறது என்கிறார்கள் உண்மைதான் ஆனால் அதற்காக காலமெல்லாம் ஆங்கேயே இருக்கிறது நாயமா ? அதற்க்கான மாற்று ஏற்பாடு செய்ய மாடீர்களா ?

வெளிநாட்டில் வேலை செய்வது தான் பெருமை , சந்தோஷம் என்று நீங்கள் இருந்தால் நீங்கள் தான் ஏமாளி ... எத்தனை பேர் மனைவியின் பிரசவத்திற்கு ஊரில் இருகிறார்கள் ?
எத்தனை பேர் பெற்றோரின் உடல் நல குறைவிற்கு கூட இருந்து கவனித்து கொள்கிறார்கள் ?
எல்லாத்தையும் போனில் சரி செய்து விடுவார்களா ?

31:14 நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."

இதில் கொடுமை என்ன வென்றால் சில மனைவி மார்களே வலுகட்டாயமாக கணவன்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைகிறார்கள் என்ன கொடும..

எத்தன பேர் தன் இளமையை வீனடிகிறார்கள் தெரியுமா? எல்லாம் அற்ப சந்தோசத்திற்கு , வருடத்திற்கு ஒரு முறை ஊர் வருபவர்கள் ரொம்ப குறைவு அப்படியே வந்தாலும் ஒரு மாசம் அவ்ளோது தான் உடனே ஸ்டைலா கேளபிடுரங்க .. சிலர் இரண்டு வருத்திற்கு ஒரு முறை , இன்னும் சிலர் ஐந்து , பத்து வருடம் கழித்து வருபவர்களும் இருகிறார்கள் (ஏதோ சும்மா சொல்லணும் என்பதேக்காக இங்கே சொல்லவில்லை இது நம் ஊரில் நடக்கும் உண்மை நிலை )

எத்தனை பேர் தன் குழந்தையுடன் அமர்ந்து பேசி இருப்பீர்கள் ? குழந்தை பிறந்து நான்கு , ஐந்து ஆண்டுகள் கழித்து வரும் வாப்பாவை பார்த்து யாரும்மா இது என்கிறது பெற்ற பிள்ளை என்ன கொடும பாத்திங்களா ? வாழ்கையை எப்படி வாழ்வது என்றே நமக்கு தெரியவில்லை ...

ஒரு பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையான முறையில் வெளிநாட்டில் இருந்து கொண்டு எப்படி நிறைவேற்றமுடியும்? வாரந்தோறும் போன் செய்து விசாரிப்பதின் மூலமோ, மாதாமாதம் பணம் அனுப்பி வைப்பதினாலோ தங்களது கடமை நிறைவேறிவிட்டது என்று தப்புக் கணக்கு போட்டு விடக்கூடாது.

இதையும் தாண்டி இங்கிருந்து கொண்டு நிறைவேற்ற முடியாத பல கடமைகள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

17:23 அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

17:24 இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக!


நமது பிள்ளைகளையும், பெற்றோரையும் வேண்டுமானால் மற்றவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும் என்று வைத்துக் கொள்வோம். மனைவியின் தேவையை கணவரைத் தவிர வேறு யாரால் நிறைவேற்ற முடியும்? மணிக் கணக்கில் போனில் பேசி குடும்பம் நடத்தவா திருமணம் செய்தோம்.? இதனால் கணவன் மனைவிகளுக்கு இடையே வீண் சந்தேகங்களும் ஏற்படுகின்றன என்பது எதார்த்தமான உண்மை

நீங்கள் இங்கயே சம்பாரிதாலும் , அங்கே போய் சம்பாரிதாலும் எல்லாம் ஒன்று தான் , நீங்கள் அங்கே செலவழிப்பதும் , பிரயாண செலவையும் கூட்டி கழிச்சு பாருங்க , சரியா வரும் ..

குடும்பத்துடன் வெளிநாட்டில் இருப்பதற்கான எல்லா வசதிகளும் ஒருவருக்கு
கிடைத்தால் அதை மார்க்க அடிப்படையில் குற்றம் கூற முடியாது. ஆனால் அந்த நிலை பெரும்பாலோனோருக்கு அமைவதில்லை. எனவே இதுபோன்ற தவறை செய்பவர்கள் இதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்ய வேண்டும். வாழ்நாளில் பெரும் பகுதிகளை வெளிநாட்டிலேயே கழிப்பவர்கள் முக்கியமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய வாழ்க்கையை அமைத்து கொள்வது நம்முடைய கையில் தான் இருக்கிறது , மாற்றதிற்கு முயற்சி செய்யுங்கள் இன்ஷால்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு துணைபுரிவான்.


NAGOREFLASH

Tuesday, January 26, 2010

ஹதீஸ்கள் பலவீனப்படுமா.. எப்படி?

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா ? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

பலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள
இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர்
அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபிதோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போதும் தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம் மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும்
பேசலாம், தவறில்லை என்ற கொள்கைவாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 7:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்.

இத்தனை பரிசோதனையில் தேர்ச்சி பெற்றால் தான் அது ஆதாரபூர்வமான நபி மொழி .

குறிப்பு: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

நன்றி http://tamilmuslimpage.blogspot.com/

தமிழகம் முழுவதும் சிக்குன் குனியா !! - நமதூரிலும்

மீண்டும் தமிழகம் முழுவதும் பரவும் சிக்குன் குனியா

தென் மாவட்டமான குமரியில் தொடங்கி, தலைநகர் சென்னை வரை எங்கு பார்த்தாலும் சிக்குன் குனியா நோயாளிகள் மருத்துமனைகளில் வரிசையில் நிற்கின்றனர்.

மாவட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த நோய் தாக்கப்பட்டதால் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறையே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சில மாதங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் சிக்குன் குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தனர்.ஆனால் மோசமான காலநிலை, மாசடைந்த நிலத்தடி நீர் , கொசு போன்றவை காரணமாக சிக்குன் குன்யா வைரஸ் வேகமாக பெருகி விட்டது .


இதுகுறித்து சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் சுப்புராஜ் கூறுகையில், "தமிழகத்தின் பல பகுதிகளில் சிக்குன் குனியா நோயால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். இது வைரஸ் காய்ச்சல்தான். மோசமான சுற்றுச் சூழல் காரணமாகவே இந்த வகை வைரஸ்கள் வேகமாகப் பரவுகின்றன.

சிக்குன் குன்யா நோயைக் கட்டுப்படுத்த ரூ.3.6 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் 10 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐந்து நவீன கொசு ஒழிப்பு இயந்திரங்கள், 45 லட்சம் ரூபாயில் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்க 9,000 ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

ஆனால் இந்த நடவடிக்கைகள் பரவலாக எடுக்கப்படுவதில்லை , ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கொசு மருந்து அடிக்கப்படுவதெல்லாம் வெறும் அறிவிப்புதான்.

நமதூரிலும் சிக்கன் குன்யா நோய் பாதிப்பு அதிகமாக தான் இருக்கிறது.
இந்த நோயின் தாக்கம் கடுமையாக இருக்கிறது , காய்ச்சலில் ஆரம்பிக்கும் இந்த நோய் கடுமையான மூட்டு வலியில் வாட்டி எடுக்கிறது என்கிறார்கள் பாதிக்கபட்டவர்கள்.
உடல் முழுவதும் உள்ள ஆத்தனை மூட்டுக்களிலும் வலி பின்னி எடுக்கிறதாம். இதில் வேதனைக்கு உரிய செய்தி - சின்ன குழந்தைகளை கூட விட்டு வைக்க வில்லை , வலிக்குது என்று சொல்ல தெரியாத குழந்தைகள் கூட பாதிக்கபட்டுள்ளார்கள் ...

எப்படியாவது வலி குறையாத என்ற ஆவலில் அரசு மருத்துவமனை ,அலி டாக்டர் , கம்பவுண்டர் , மெடிக்கல் நோக்கி மக்கள் சென்றவண்ணம் உள்ளனர்.

“ஏடிஸ் வகை கொசுக்களால் தான் இந்த நோய் பரவுவது குறிப்பிடத்தக்கது”

இதை காய்ச்சல் வந்த உடனே கவனித்தால் இதன் பாதிப்பை குறைக்கலாம்,பலர் பழக்க தோஷத்தில் இதற்கு மெடிக்கல்லில் மருந்து கேட்கிறார்கள் ..

இதெற்கென உள்ள ஊசி போட்டுகொண்டால் தான் கொஞ்சமாவது (இன்ஷால்லாஹ் )கேட்கிறது என்கிறார்கள் .

நம்மை நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும் இதை வராமல் தடுக்க சில யோசனைகள் :

>கொசு தான் இதற்கு முழு காரணம் . எனவே வீட்டில் கொசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .

>கொசுக்கடியை தவிர்க்க, இரவு வெள்ளை நிற ஆடை அணிய வேண்டும்,கால் வெளியே தெரியாமல் போர்த்திக் கொள்ள வேண்டும்,

>காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் .

>மிக முக்கியமாக நோய் தாக்கபட்டவர்கள் வீட்டில் உள்ளவர்களை விட்டு
குறிப்பாக சிறு பிள்ளைகளை விட்டு சற்று விலகி இருப்பது நல்லது.

>கொதிக்க வய்த்த தண்ணீரை மட்டும் பருக வேண்டும்.உணவுகளை திறந்து போட கூடாது .

>நோய் தாக்கியவர்கள் கோழி கறியை தவிர்ப்பது நல்லது

>இநத நோய்க்கு கருவாடு சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்

>தூய்மை என்பது இஸ்லாத்தில் பாதி என்பது நபி மொழி ' ஆகையால் தூய்மை எங்கே இருக்கிறதோ அங்கே ஆரோக்கியம் இருக்கும் இன்ஷால்லாஹ் .

நம் ஊர் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் ஆனைவரும் பிரார்த்திப்போம் !
அல்லாஹ்தான் நோயையும் தருகிறான் , நிவாரணத்தையும் தருகிறான் ..

NAGOREFLASH

Saturday, January 23, 2010

Q&A by Dr.K.V.S.Habib Mohamed

வேறு நபி வந்தால் இஸ்லாத்தின் நிலை என்ன? Q&A by Dr.K.V.S.Habib Mohamed



அல்லாஹ்வை உணர்வது எப்படி? Q&A by Dr.K.V.S.Habib Mohamed



முஸ்லிம்கள் பீதியில் வாழ்கிறார்களா..?



காதலிக்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?





NAGOREFLASH//THANKS 2 ONLINEPJ.COM

Thursday, January 21, 2010

மின்னஜ்சலில் வந்த நகைசுவை உரையாடல் - படியுங்கள்




THANKS FOR SENDING MAIL

ஹிஜாபைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி
யுவான் ரிட்- ஊழுதிய கட்டுரை அது.

""நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன். செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு அப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ல ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.



என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன். ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு "கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை நானா? அல்லது அவர்களா?).

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்அனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன்.

எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக எற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, எமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது.

அன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக்ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. அவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு ஆதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.

புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும். கட்டாயத் திருமணங்கள் பற்றியும் அவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். அந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் அவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். அவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு அவர்களது அறியாமையைத் தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. அவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970களில் போராடி பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் அகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். அதில் வேடிக்கை என்னவென்றால், அவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.

நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன் அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. "வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். அனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.

அம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் ஆடை அணிகின் றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்த வரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள். அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன். வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸ் பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணியவாதியாகத்தான் இருந்தேன். அனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம்கள் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் ஈடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். அந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. அவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் ஈபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், S.M.S. தகவல்கள் மற்றும் ரேடியோ 'ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும். கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. .இஸ்லாத்தின் எந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. அது மதம் மொழி இனம் கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Survey நடத்திய அய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் அது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும் நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் அது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின் அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. அது குர்அனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். அதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! ஊன்பதுதான்.

அதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992ல் கூறிய கருத்து இதோ: ""பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து கணவர்களை விட்டு ஒடுகின்ற தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஒர் ஆயத்தமாகும்''.
இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''

(சகோதரி யுவான் ரிட்- லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் "In the Hands of Taleban: Her Extra ordinary Story என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh@aol.com என்ற இமெயி-ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் 2001ம் வருடம் அவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து அவரது நேரடி பேட்டி அப்போது "நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)
நன்றி: மக்கள் உரிமை

அந்த பேட்டியின் தமிழாக்கத்தை காண இநத லிங்கை காப்பி & பேஸ்ட் செய்யுங்கள்
http://www.tamilmuslim.com/Manamadram/ridley.htm

THANKS 2 IDHUTHAAN ISLAM //NAGOREFLASH

இ-மெயில் மிரட்டலா,மோசடியா? - தெரிந்து கொள்ளுங்கள்

இ-மெயில் மிரட்டல் மற்றும் மோசடிகள் காணப்பட்டால் த‌மிழ‌க‌த்தில் உள்ள சைபர் கிரைம்
செல்-ஐ அணுகவும்.

இணைய‌க் குற்ற‌ங்க‌ளால் பாதிக்க‌ப்பட்டவர்களுக்கு கீழ்கண்ட முகவரி பயனுள்ளதாக இருக்கும் (இன்ஷா அல்லாஹ்)

Cyber Crime Cell,Crime Branch CID.,
Admiralty House,Government Estate,
Chennai - 600 002.Tamil Nadu.

தொலைபேசி :
044-25389779, 044-25393359

இணையதளம்:
http://www.cbcid.tn.gov.in/

மின்னன்ஞ்சல்:
cbcyber@tn.nic.in

பிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை

பிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது ....


பாரிஸ் : "பிரான்சில் பொது இடங்களில் பர்தா அணிந்து நடமாடினால்

50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம் பிரான்ஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா அணிவது அடிமைத் தனத்தைக் குறிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் பிரான்சில், இதுபோன்ற உடைகளை அனுமதிக்க முடியாது' என்று அறிவித்திருந்தார்.


இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனம் வந்தாலும், இம்மாதம் முதல்வாரத்தில் பிரான்ஸ் பார்லிமென்டில், "பொது இடங்களில் பர்தா மற்றும் நிக்கா உடை அணிந்து வந்தால், 51 ஆயிரம் ரூபாய் (750 யூரோ) அபராதம் விதிக்கப்படும்' என்ற மசோதா கடும் வாக்குவாதங்களுக்கிடையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.


அதிபர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் கோப் இது குறித்து கூறியதாவது: உடலை முழுவதுமாக மறைத்து, கண்களுக்கு மட்டும் திரையிடும் பர்தாவுக்கும், உடலை மறைத்து கண் மட்டும் தெரியும் வகையில் உள்ள நிக்கா உடைக்கும் இந்த அபராதம் பொருந்தும். கலாசார விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. இந்த சட்டம் மத அடிப்படையில் அல்ல. மத மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த அறிஞர்களிடம் நாங்கள் பேசிய போது, பர்தா என்பது மத அடிப்படையில் உருவானதல்ல என்று அவர்கள் உறுதிபடுத்தினர். இவ்வாறு கோப் தெரிவித்தார்.


கோபன்கெகன் :
டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

டென்மார்க் நாட்டில் மொத்த மக்கள் தொக 55 லட்சம். இதில் 1.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 1 லட்சம் முஸ்லிம் பெண்கள் உள்ளனர்.


அவர்கள் பர்தா அணிய தடை விதிக்கலாம் என்று சிபாரிசு செய்தனராம்
இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் ரசும்சென் டென்மார்க்கில் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

டென்மார்க் வெளிப்படையான ஜனநாயக நாடு. இங்கு யார்-யாரை சந்தித்தாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்ளலாம். எனவே யாரும் முகத்தை மறைத்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் பர்தா அணிய தடை விதிக்கப்படுகிறது என்று பைத்தியகார தனமான காரணத்தை கூறி வருகின்றனர் .


அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முயல்கிறார்களா ? என்ன ..!!

மின்சார கட்டண உயர்வு- அரசு அறிவிப்பு

சென்னை :"வணிக மற்றும் வீட்டு மின் இணைப்பு வைத்துள்ளவர்களில், இரு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண உயர்வு கிடையாது' என, மின்வாரியம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால், மாதம் 100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர், "ஷாக்' அடைந்துள்ளனர். அத்தியாவசிய மின்சாதனப் பொருட்கள் வைத்திருப்போர், இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள இரண்டு கோடியே ஐந்து லட்சத்து 16 ஆயிரம் பேரில், ஒரு கோடியே, 38 லட்சம் பேர் வீடுகளுக்கு இணைப்பு பெற்றுள்ளனர். அவர்களில், இரண்டு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்துவோர், ஒரு கோடியே 20 லட்சம் பேர்.



மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வாரியம் விடுத்துள்ள கோரிக்கையில், இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட் வரை வீடுகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு, எந்தவிதமான கட்டண உயர்வும் செய்யப்படுவதாகத் தெரிவிக்கவில்லை. எனவே, 200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும், ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு தற்போது உத்தேசித்துள்ள மின் கட்டண உயர்வால் எந்த பாதிப்பும் கிடையாது.

இரண்டு மாதங்களுக்கு, 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் 18 லட்சம் பேர் மட்டுமே, வாரியம் உத்தேசித்துள்ள குறைந்த பட்சக் கட்டண உயர்வை ஏற்க நேரிடும். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, இரு மாதங்களுக்கு 1,500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோரும்,வணிக நிறுவனங்களில் இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கும், கட்டணத்தில் எந்தவிதமான உயர்வும் கிடையாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் புது உத்தரவுப் படி பார்த்தால், ஒரு மின்விசிறி, "டிவி', பிரிட்ஜ் வைத்திருப்போர் கூட, அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள், "ஷாக்' அடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலை ஏற்றம் இல்லை என்று அறிவித்து விட்டு - மின்சார கட்டணத்தை உயர்த்தி சாமார்த்தியமாக சரிகட்டுகிறது அரசு.

INSHAALLAH//thanks 2 dailynewspaper

Wednesday, January 20, 2010

உயிரே ஓடி வா!

“எவர் மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கவா? பொய் சொல்லும் ஒவ்வொரு பாவியின் மீதும் ஷைத்தான்கள் இறங்ககின்றனர். (அல்குர்ஆன் 26: 221, 222)

மனிதன் இறந்தபின் அவனது உயிர் எங்கே செல்கிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் அவர்கள் இன்னும் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதுபற்றி நாம் பெரிதாக அக்கரை எடுத்துக் கொள்ளத் தேவையுமில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல இறைவனும் அவனது திருத்தூதரும் நமக்கு போதுமான விளக்கத்தை தந்துள்ளனர்.

குர்ஆன், ஹதீஸை ஆராய நேரமில்லாதவர்கள் இறந்தவர்களின் உயிர் பற்றி தவறான கருத்துகள் கொண்டுள்ளனர். அதனை மக்களிடமும் பிரச்சாரம் செய்கின்றனர். “இறந்து போன நல்லவர்களை நாம் பலமுறை அழைக்கும்போது அவர்கள் அந்த இடத்துக்கு ஓடி வருகிறார்கள். இது நம்மில் சிலரது நம்பிக்கை. வேறு சிலர் “இறந்து போன நல்லவர்களின் உயிர்கள் உயிருடன் உள்ளவர்களின் உள்ளெ இறங்கி பேசுகின்றன” என்று கருதுகின்றனர். இரண்டுமே தவறான நம்பிக்கையாகும்.

நல்லடியாபுகளில் பல பிரிவினர் உண்டு. நபிமார்களுக்கு அடுத்த இடத்தை “அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம்” அடைந்தோர் பெறுகின்றனர். அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் “அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டோரை மரித்தவர்கள் என்று நிச்சயமாக நீங்கள் எண்ணாதீர்கள்!” தம் ரப்பினிடத்தில் (இறைவனிடத்தில்) அவர்கள் உயிருடனே இருக்கிறார்கள். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் 3:196)

அவர்கள் இறைவனிடமும் எவ்வாறு உயிருடன் உள்ளனர் என்பதை நபிகள் (ஸல்) அவர்கள் விளக்கமுற்படும் போது, அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள் நுழைந்து சுவனத்தில், தான் நினைத்தபடி சுற்றித்திரிகின்றன,” என்று குறிப்பிட்டார்கள்.
(ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊது(ரழி)


இத்தகைய உயர்ந்த நிலையை அடைந்துள்ள ஷஹீதுகள் தங்களுக்கு கிடைத்த இந்தபெரும் பேறை, உலகுக்கு வந்து சொல்லிவிட்டு திரும்புவதற்காக அல்லாஹ்விடம் அனுமதி கேட்டனர். அல்லாஹ் “உங்கள் சார்பாக உங்கள் நிலையை நான் உலகமக்களுக்கு அறிவிக்கிறேன்” என்று கூறி மேற்கூறிய வசனத்தையும், அதற்கு அடுத்து வருகின்ற இரண்டு வசனங்களையும் இறக்கினான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தனர்.
ஆதாரம் : அபூதாவூது அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)

மேற்கூறிய இரண்டு நபிமொழிகளும் “அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டு வீரமரணம் அடைந்தவர்கள் சுவனத்தில் பறவை வடிவத்தில் வாழ்கின்றனர் என்பதையும், அவர்கள் இந்த உலகுக்கு வந்து உடனே திரும்பிச் செல்ல அனுமதி கேட்டும் அல்லாஹ் அதற்கு அனுமதிக்கவில்லை” என்பதையும் நமக்குத் தெளிவாக்குகின்றன,

“அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவர்கள் அதிலிருந்து வேறிடம் செல்ல விரும்ப மாட்டார்கள்” (அல்குர்ஆன் 18:108)

அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரின் உயிர்கள் இந்த உலகுக்கு வரமாட்டா என்று தெளிவாகின்றது. ஏனைய நல்லடியார்களின் நிலைபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

கப்ரில் நல்ல மனிதனை வைக்கப்பட்டு அவனிடம் விசாரணைகள் முடிக்கப்பட்டவுடன் அவனுக்கு உரிய இடத்தைக் காட்டி “இதுவே கியாமத் வரை உனது தங்குமிடமாகும்” என்று மலக்குகள் கூறுவர் (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)

“கப்ரில் மனிதன் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த உடன் நான் எனது குடும்பத்தினரிடம் சென்று எனக்குக் கிடைத்த மகத்தான வாழ்க்கை பற்றி கூறிவிட்டு வருகிறேன்” என்று கேட்பார். (பேசாமல்) புதுமணமகனைப் போல் அயாந்து உறங்குவீராக! என்று அவருக்குக் கூறப்படும். (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி)

கப்ரில் வைக்கப்பட்டு விசாரணை முடிந்த பின் சுவனத்து ஆடை அணிவிக்கப்பட்டு, சுவனத்து விரிப்பு விரிக்கப்படும். சுவனத்தின் நறுமணம் அவர்களை நோக்கி வீசிக் கொண்டிருக்கும். (நபிகள் நாயகம் -ஸல்) ஆதார நூல் : அபூதாவூது, அறிவிப்பவர்: பரா, இப்னு ஆஸி

மேற்கூறிய நபிமொழிகளிலிருந்து இறந்துவிட்ட நல்லடியார்கள் “சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளனர்” என்றும், “இன்னும் சிலர் மண்ணறையிலேயே சுவனத்து இன்பங்களில் திளைத்துக் கொண்டுள்ளனர்” என்றும் அவர்கள் இவ்வுலகுக்கு வந்து செல்ல அனுமதி கேட்டும் அவர்களுக்கு அனுமதி தரப்படமாட்டாது என்பதையும் தெளிவாகவே நம்மால் விளங்க முடிகின்றது.

இறந்துபோன நல்லடியார்கள் எவரும் திரும்பவும் இந்த உலகுக்கு விஜயம் செய்கிறார்கள் என்றோ, இன்னொருவர் உடலுக்குள் வந்து புகுந்து கொள்கின்றனர் என்றோ, யாரேனும் நம்பினால் மேற்கூறிய அல்லாஹ்வின் வசனங்களுக்கும், நபிமொழிகளுக்கும், மாறு செய்த மாபெரும் குற்றவாளியாகின்றனர்.

மனிதனது உடலக்குள் புகுந்து கொண்டு ஆள்மாறாட்டம் செய்வது ஷைத்தான்தான், நல்லடியார்கள் அல்ல. அதனை நாம் இக்கட்டுரையின் துவக்கத்தில் எழுதிய குர்ஆன் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். பொய் சொல்கின்ற, தீய செயல்கள் செய்கின்றவர்கள் மீது தான் ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கு ஏற்ப, இன்று பேயாடுவோர், பல்வேறு இறை கட்டளைகளை உதாசீனம் செய்தவர்களே அவர்களையே ஷைத்தான் ஆட்டுவிக்கிறான்.

நல்லடியார்கள் தங்களுக்கு வல்ல அல்லாஹ்வால், தரப்பட்டிருக்கும் அளவிடமுடியாத பெரும் சுகவாழ்வை அனுபவித்துக் கொண்டுள்ளனர். சுவனத்து இன்பங்களில் திளைத்தவர்களாக உள்ளனர். சுகமான நித்திரையில் இருக்கின்றனர்.

அழியாத பெருவாழ்வை அடைந்துள்ள நல்லவர்கள், அழிந்துவிடக் கூடிய இந்த அற்ப உலகத்துக்கு எப்படி வருவார்கள்?

நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

“அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்தவர்களுக்கு “பிர்தவ்ஸ்” என்னும் சுவாக்கம் தங்குமிடமாக உள்ளது. அதில் (அவர்கள்) என்றென்றும் நிலைத்திருப்பாாகள். அங்கிருந்து (வேறிடம்) திரும்பிச் செல்ல அவர்கள் விரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன்)

இந்தத் திருக்குர்ஆன் வசனமும் இந்த உண்மையைத் தான், நமக்கு உணர்த்துகிறது. “உயிரே ஓடி வா” என்று அழைத்தவுடன் எவரது உயிரும் இங்கே வரப்போவதுமில்லை. பிறரது உடலுக்குள் புகுந்து கொள்வதுமில்லை.

உறுதியான ஈமான் இல்லாதவாகளிடமும், தீய செயல் புரிவோரிடமும் கோழை மனது கொண்டவர்களிடமும், ஷைத்தான்கள் ஊடுருவிக் கொண்டு உளறுகின்றவைகளைக் கண்டு,பாமர மக்கள் “வலியுல்லா” வந்து விட்டதாக நம்பி வருகின்றனர். இவ்வாறு நம்புவதன் மூலம், சுவனத்து இன்பங்களையும், அல்லாஹ்வின் நேசர்களையும், அவமதிக்கின்றனர்.

அல்லாஹ் இதுபோன்ற தவறான நம்பிக்கை கொள்வதிலிருந்து நம்மைக் காப்பாற்றுவானாக! ஆமீன்!!

நன்றி
அந்நஜாத்//http://www.annajaath.com

Monday, January 18, 2010

ஹதீஸ் - அடிப்படை விளக்கம்

ஹதீஸ் என்றால் என்ன?

ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்பொருள்படும்.

இஸ்லாமிய உலகில் ஹதீஸ: என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது சொல் செயல் ஆகியவற்றுக்கும் அவர் மௌனமாக இருந்து அங்கீகரித்த விசயங்களுக்கும் சொல்லப்படும்.

அதே போல நபித்தோழர்களது சொல் செயல் அங்கீகாரத்திற்கும் ஹதீஸ் என்று சொல்லப்படுவதுண்டு. ஒரு சாரார் இதற்கு அஸர் என்று வேறுபெயரிட்டு அழைப்பர்.

ஹதீஸ் குத்ஸி

ஹதீஸ் குதுஸி என்றால் அல்லாஹ் சொல்கிறான் என்று முன்னுரையிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லும் பொன்மொழியாகும். இந்த தகவல் குர்ஆனில் இருக்காது.

உதாரணமாக பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் சொல்கிறான் மனிதன் என்னை திட்டுகிறான். மனிதன் காலத்தை திட்டுகிறான் . காலத்தை நானல்லவா படைத்தேன். (முஸ்லிம்)

ஹதீஸ் வகைகள்

ஸஹீஹ்

அறிவிப்பாளர் தெடர் முழுமையாக சொல்லப்பட்டு அவர்கள் அனைவரும் பரிபூர்ண நம்புக்ககைக்குரிய நேர்மையாளராகவும் மிக்க மனன சக்தியுள்ளவராகவராகவும் மனிதத்தன்மை மிக்கவராகவும் இருந்து அவர்களால் சொல்லப்படும் ஹதீஸ் அவர்களைவிடச்சிறந்தவர்களின் அறிவிப்புக்கு முரன்படாமலும் இருந்தால் அது ஸஹீஹ் என்ற முதல் தரமான ஹதீஸ் ஆகும்.

ஹஸன்

அறிவிப்பாளரின் தகுதிகள் முழுமை பெற்றிராத நிலையில் ஒரு ஹதீஸின் கருத்துக்கள் வேறு பல வழிகளில் அறிவிக்பபட்டிருக்குமானால் அது ஹஸன் என்றழைக்கப்படும்.

லயீப்

அறிவிப்பாளர்களின் தகுதியில் குறைப்பாடுகள் இருந்து மற்ற விதிமுறைகளில் தேறாத ஹதீஸ்கள் லயீப் எனப்படும்.

மவ்லூஉ

உண்மை அல்லாத பொய்யாக இட்டுக்கட்டி சொல்லப்பட்ட ஹதீஸ:கள் மவ்லூஉ எனப்படும்.



ஹதீஸ் தொகுப்புகள்:

என் சம்பந்தமாக எதையும் எழுதிவைக்காதீர்கள் என நபிகள் நாயகம் உத்தரவிட்டடிருந்தார்கள் .

குர்ஆன் எழுதிப்பதிவு செய்யப்படும் சுழ்நிலையில் ஹதீஸூம் எழுதப்பட்டால் எது குர்ஆன் வசனம் ? எது நபிகளாரின் பொன்மொழி? என்பதில் குழப்பம் நேர்ந்துவிட வாய்ப்புள்ளதால் இப்படி ஒரு உத்தரவை நபிகள் நாயகம் சொன்னார்கள். ஆகவே நபிகள் நாயகம் அவர்களது பொன்மொழிகளை அவரது தோழர்கள் எழுதிப் பதிவு செய்யவில்லை

ஆயினும் அபூஹூரைரா போன்ற ஓரிரு நபித்தோழர்கள் தங்களுக்கு அத்தகைய குழப்பம் ஏற்படாது என்று தெளிவுபெற்றிருந்தமையால் சில பொன்மொழிகளை ஏடுகளில் எழுதி வைத்திருந்தார்கள். எனினும் அவை பெரிய அளவிலோ தெகுப்பு வடிவிலோ இருக்கவில்லை.

நபித்தோழர்கள் அபரிமிதமான தங்களது நினைவாற்றலில் இருந்தே நபிகளாரின் பொன்மொழிகளை வாய்வழியாக உலகுக்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் அக்காலங்களில் நபிகளாரின் பொன்மொழிகளை மனனம்செய்வது சிறந்தமார்க்க சேவையாக கருதப்பட்டது. இன்றை காலத்தில் திருக்குர்ஆனை மனனம் செய்பவர் ஹாபிழ் என்று அழைக்கப்படுகிறார். அன்றோ ஒரு இலட்சம் பொன்மெழிகளை மனனம் செய்தவர் ஹாபிழ் என அழைக்கப்பட்டார். அதுமட்டுமல்ல மனனம் செய்யப்படும் பொன்மொழிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஹாகிம் ஹூஜ்ஜத்துல் இஸ்லாம் ஆகிய சிறப்புபெயர்கள் வழங்கப்பட்டன.


முதல் தொகுப்பு
ஹிஜ்ரீ முதலாம் நூற்றாண்டைச் சார்ந்த உமைய்யா வம்ச ஆட்சியாளர் ஹஜ்ரத் உமர் பின் அப்துல் அஸீஸ் (61101ஹி 681717கி.பி.) ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஒரு யுத்தத்தில் பெருமளவில் நபித்தோழர்கள் மரணமடைந்த போது ஹதீஸ்கள் நூல் வடிவத்திவ் தொகுக்கப்படவேண்டியதன் அவசியம் உணரப்பட்டது.

உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களது உத்தரவிற்கேற்ப இமாம் முஹம்மது பின் முஸ்லிம் பின் `ஹாப் அஸ்ஸூஹரீ ( ஹி 124 ) நபிகளாரின் பொன் மொழிகளின் முதல் தொகுப்பை திரட்டினார். அதற்குப்பின் பக்திசிரத்தையோடும் அக்கறையோடும் பலரும் நபிகளாரின் பொன்மெழிகளை திரட்டத்தொடங்கினார்கள்.

அந்த ஆர்வத்தின் முடிவில் சில பிரச்சினைகளும் எழுந்தன. நபிகளாரின் பொன்மொழிகள் அல்லாத பலவும் திரட்டுக்களில் இடம்பெற்றன . தவறான எண்ணத்தோடு மார்க்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவுத் அரசியல் மற்றும் குழுஉணர்வின் தாக்கத்தாலும் பலர் பெய்யான செய்திகளை இட்டுக்கட்டடியி நபிமொழி என்ற பெயரில் உலாவ விட்டிருந்தனர். அவையும் திரட்டுக்களில் இடம் பெறத் தொடங்கின. இப்பொய்ச் செய்திகள் மார்க்கத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் ஆபத்தாக அமைந்தன.

இந்நிலையில் தான் இமாம் முஹம்து பின் இஸ்மாயீல் புகாரி ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் ஆதாரப்பூர்வமான பொன்மெழிகளை திரட்டித்தர முதன்மையான உறுதி பூண்டார். மார்க்கத்திற்கும் சமுதயத்திற்கும் மிகப்பொரிய சேவையாற்றுவதற்காக பிறப்பபெடுத்தது போல் 16 ஆண்டுகால பெரும் முயற்ச்சிக்குப்பின் தனக்கு மனனமாக இருந்த சுமார் 6 இலட்சம் பொன்மொழிகளிலிருந்து 7586 பொன்மொழிகளை தேர்வு ஆதரப்பூர்வமான பொன்மொழிகள் தொகுப்பை உலகுக்கு வழங்கினார். அதற்குப்பிறகு அவருடைய வழியை அடியொட்டி பலரும் ஆதராப்பூர்வ தொகுப்புகளை திரட்டித்தந்தனர். அவற்றுள் மக்களால் பெருமளவில் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்புகள் ஆறு .


1. ஸஹீஹூல் புகாரீ

நூலின் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (புகாரீ)

முழுப் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் அல்முஸனத் அல்முக்தஸர் மின் உமூரி ரசூலில்லாஹி வ சுனனிஹி வ அய்யாமிஹி)

ஆசிரியர் பெயர் :அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் இஸ்மாயீல் அல்பபுகாரீ (ரஹ்)

பிறப்பு :ஹிஜ்ரீ 194 (கி.பி. 810) `வ்வால் மாதம் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு

இறப்பு :ஹிஜ்ரீ 256 (கி.பி. 870) `வ்வால் மாதம் முதல் நாள் சனிக்கிழமை இரவு


இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தமது பதினெட்டாம் வயதில் ஸஹீஹூல் புகாரீ ஹதீஸ் தொகுப்பு நூலை எழுதத் துவங்கினார்கள். தமது முப்பத்து நான்காம் வயதில் ஏறத்தாழ பதினாறு ஆண்டு கால அயராத உழைப்பிற்குப் பிறகு அதனை எழுதி முடித்தார்கள். அன்னார் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். இந்நூலில் 7563 (ஃபத்ஹூல் பாரீயின் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹூல் புகாரிக்கு அடுத்ததாக அபூதாவூத் எனும் நூல்தான் இயற்றப்பட்டது.


2. சுனன் அபூதாவூத்

நூலின் பெயர் :சுனன் அபூதாவூத்
ஆசிரியர் பெயர் :அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் அஸ்ஸிஜிஸ்தானீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 202
இறப்பு :ஹிஜ்ரீ 275 (கி.பி. 889) ஹவ்வால் 16ஆம் நாள் வெள்ளிக்கிழமை



Eரானிலுள்ள ஸிஜிஸ்தான் நகரில் பிறந்த அபூதாவூத் சுலைமான் பின் அல்அ`அஸ் (சஜிஸ்தானீ) (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர் ஆவார். ஹதீஸ்களுக்காகவே இவ்வுலகில் பிறந்து வாழ்ந்தவர் என்று இவரைக் குறித்துப் பெருமையாகக் கூறுவர். இவர் தம்முடைய பிரசித்தி பெற்ற சுனன் அபூதாவூத் எனும் ஹதீஸ் தொகுப்பு நூலை இயற்றி தம்முடைய ஆசிரியர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அவர்கள் தமது மாணவரை மிகவும் பாராட்டினார்கள். இந்நூலில் 5274 (முஹ்யித்தீன் இலக்கம்) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து ஸஹீஹ் முஸ்லிம் இயற்றப்பட்டது.


3. ஸஹீஹ் முஸ்லிம்
நூலின் பெயர் :அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்
ஆசிரியர் பெயர் :அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அந்நைசாப+ரீ அல்குi~ரீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 204 (கி.பி. 819)
இறப்பு :ஹிஜ்ரீ 261 (கி.பி. 875) ரஜப் மாதம் 25ஆம் நாள் ஞாயிறு மாலை


இன்றைய மேற்கு ஈரான் நாட்டிலுள்ள நைசாபூர் நகரில் பிறந்த அபுல் ஹ_ஸைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் அல்குi~ரீ அன்நைசாபூரீ (ரஹ்) அவர்களும் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் மாணவர்களில் ஒருவர் ஆவார். பிற்காலத்தில் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவராகவும் இருந்துள்ளார்கள்.ஆதாரபூர்வமான ஆறு ஹதீஸ் தொகுப்பு நூற்களில் (ஸிஹாஹ் சித்தா) ஸஹீஹ_ல் புகாரிக்கு அடுத்ததாக ஸஹீஹ் முஸ்லிம் கருதப்படுகிறது. ஆனால் இந்நூல் அமைக்கப்பட்டள்ள முறையையும் அதில் ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒழுங்கையும் கவனித்து

இது ஸஹீஹ_ல் புகாரீயைவிட மேம்பட்டதாகும் என மொராக்கோ போன்ற மேற்கத்திய நாட்டினர் சிலர் கூறியுள்ளனர். இந்நூலில் 7345 (நவவீ இமாம் இலக்கம்) ஹதீஸ்கள் உள்ளன.

4. ஜாமிஉத் திர்மிதீ

நூலின் பெயர்:அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்
ஆசிரியர் பெயர்:அபூரூடவ்சா முஹம்மத் பின் ரூடவ்சா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்)
பிறப்பு ஹிஜ்ரீ 209
இறப்பு ஹிஜ்ரீ 279 (கி.பி. 892)


இன்றைய உஸ்பிகிஸ்தான் நாட்டிலுள்ள திர்மித் நகரத்தில் பிறந்த அபூஈசா முஹம்மத் பின் ஈசா பின் சூரா அத்திர்மிதீ (ரஹ்) அவர்கள் புகாரீ (ரஹ்) அவர்களின் மாணவர்களில் மிக முக்கியமானவர் ஆவார். புகாரீ (ரஹ்) அவர்களின் பிரதிநிதி (கலீஃபா) என்று இவரைக் குறித்துக் கூறப்படுவதுண்டு. இந்நூலில் 3891 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

5. இப்னுமாஜா

நூலின் பெயர் :சுனன் இப்னுமாஜா
ஆசிரியர் பெயர்:அபூஅப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ருப்ஈ (ரஹ்)
பிறப்பு:ஹிஜ்ரீ 209
இறப்ப:ஹிஜ்ரீ 273 (கி.பி. 887)

காஸ்பியன் கடலுக்கு தெற்கே அமைந்துள்ள ஈரானிய நகரமான கஸ்வீனில் பிறந்த அப+ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் அல்கஜ்வீனீ பின் மாஜா அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் தமது சுனன் இப்னு மாஜா நூலை ஹாஃபிழ் அப+ ஜர்ஆ அர்ராஜீ (ரஹ்) அவர்களிடம் சமர்பித்தபோது அதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களை அன்னார் ஆராய்ந்து இந்நூலில் சுமார் முப்பது பலவீனமான ஹதீஸ்கள் மட்டுமே உள்ளன என்று கூறினார்கள். இதில் 4341 (அப்துல் பாகீயின் இலக்கம்) ஹதீஸ்கள்.


6. சுனன் நஸயீ
நூலின் பெயர் :சுனன் நஸயீ
ஆசிரியர் பெயர் :அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ~_ஐப் அந்நஸயீ (ரஹ்)
பிறப்பு :ஹிஜ்ரீ 215
இறப்பு :ஹிஜ்ரீ 303 (கி.பி. 915)


கிழக்கு ஈரானிலுள்ள நசா எனும் நகரத்தில் பிறந்த அபூஅப்துர்ரஹ்மான் அஹ்மத் பின் ~_ஐப் அன்னஸயீ (ரஹ்) அவர்கள் முஸ்லிம் (ரஹ்) அவர்களைவிட அதிகமாக ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள். இந்நூலில் 5769 ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன.

இவை தவிர இன்னும் ஏராளமான ஆதாரப்பூர்வமான பொன்மொழித் தொகுப்புகள் உண்டு.

Friday, January 15, 2010

தொடர் கிரகணங்களும்-இறைவனின் எச்சரிக்கையும்

இஸ்லாத்தின் பார்வையில் கிரகணங்கள் :

அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.
(புஹாரி பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1059 )


(புஹாரி பாகம் 1, அத்தியாயம் 16, எண் 1053)
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு சூரிய கிரகணத்தின்போது ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அப்போது ஆயிஷா(ரலி)வும் மக்களும் தொழுது கொண்டிருந்தனர். நான் மக்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி) தம் கையால் வானத்தை நோக்கிச் சைகை செய்து 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினார்கள். ஏதேனும் அடையாளமா? என்று கேட்டேன். 'ஆம்' என்பது போல் சைகை செய்தார்கள்.

எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்கு நானும் (தொழுகையில்) நின்றேன். பின்னர் என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு 'நான் இதுவரை காணாத அனைத்தையும் இந்த இடத்தில் கண்டேன் செர்க்கம், நரகம் உட்பட, மேலும் கப்ருகளில் தஜ்ஜாலின் சோதனை போல் அல்லது அதுற்கு நெருக்கமான அளவுக்கு நீங்கள் சோதிக்கப்படுவீர்கள் என்று எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அறிவிக்கப்பட்டிருக்கிறது. உங்களில் ஒருவரிடம் வானவர் வந்து 'இம்மனிதரைப் பற்றி உம்முடைய முடிவு என்ன? என்று கேட்பார்.

நம்பிக்கையாளர் உறுதியுடனிருந்தவர் 'அவர்கள் முஹம்மது நபியாவார்கள். எங்களிடம் தெளிவான மார்ககத்தையும் நேர்வழியையும் கொண்டு வந்தார்கள். நாங்கள் அவர்களின் அழைப்பை ஏற்று, நம்பிப் பின் பற்றினோம்' என்று கூறுவார். அவரிடம், நல்லவராக நீர் உறங்குவீராக! நிர் நம்பிக்கையாளராக இருந்ததை நாம் நிச்சயமாக அறிவோம்' என்று கூறப்படும். நயவஞ்சகர் சந்தேகத்திலிருந்தவர் (இக்கேள்விக்குப் பதில் அளிக்கும் போது) 'மக்கள் எதையோ சொன்னார்கள்; நானும் சொன்னேன். எனக்கு எதுவும் தெரியாது' என்று விடையளிப்பார்'
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


கிரகணங்கள் சொல்வது என்ன ?


கடந்த வருடம் இரண்டும் கிரகணங்கள் நிகழ்தன,பொதுவாக வருடத்திற்கு அதிகபட்சம் 2 கிரகணங்கள்தான் நிகழ்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு, இன்றைய கங்கண சூரியகிரகணத்தையும் சேர்த்து மொத்தம் நான்கு கிரகணங்கள் வருகின்றன என்கிறார்கள்.
உலகில் நடக்கும் கொடுமைகளும் , அக்கிரமங்களும்மே இதற்கு காரணம் என்பதை நபி மொழியில் இருந்து காண முடிகிறது .

நபி(ஸல்)அவர்கள் கிரகணத்தை பற்றி குறிப்பிடும்போது "தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான்" என்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்
எல்லாம் வல்ல அல்லாஹ் மனிதர்களை அவர்களின் உலக சிந்தனையை இந்த கிரகணத்தின் மூலம் தடுத்து மறுமையையும் , அவனின் வல்லமையையும் நினைஊட்டுகிறான்.

அல்லாஹ்வின் அத்தாட்சிகளை உலகமே வியந்து பார்க்கிறது. ஒரு மணி துளியாவது ஒவ்வொரு மனிதனும் இந்த நிகழ்வை பற்றி அவனவன் புத்திக்கு தகுந்தாற்போல் யோசிக்கிறான் .ஆனால் இதை செய்விப்பவனை பற்றி யோசிப்பதில்லை -இவர்களுக்கும்

இதை செய்விப்பவனின் ஆற்றலை தெரிந்தும் அலட்சியமாக இருக்கும்-முஸ்லிம்களுக்கும் !! என ஒட்டு மொத்த உலக ஜீவராசிகளுக்கும் - பொதுவான எச்சரிக்கையே இது போன்ற கிரகணங்கள் என்பதை மறக்க கூடாது.

சமீபத்தில் நடந்த ஹைத்தியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்கள் நினைவிருக்கலாம் - நாமும் இதே உலகத்தில் தான் இருக்கிறோம் என்பதை மறவாதிர்கள். அங்கே ஆடிய பூமி இங்கே ஆட எவ்வளோ நேரமாகும் ..??

மரணம் நம்மை நெருங்கிக்கொண்டு இருக்கிறது - நம்மிடம் மறுமைக்காக தயாரிப்பு என்ன இருக்கிறது உங்களிடம் நீங்களே கேட்டுகொல்லுங்கள்...


NAGOREFLASH

Wednesday, January 13, 2010

டாக்டர் அப்துல் கலாம்.-சிறிய வயது பள்ளிக்கூட விவாதம்

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம்.
சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன்.

(இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)




ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)

ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை

இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?

கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை? கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)
ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?

கலாம்: (பதிலில்லை) — (இங்கிருந்து கவனமாக படியுங்கள்) —

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது.

நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.

(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும் கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது.

நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும்

அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்க[1] அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா?

இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள்.

கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள்.

ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை.

மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை.

இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது.

இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?

(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள்

அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?
(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?

(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா?

எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது.

தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?

(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது. (முடிந்தது…

நன்றி:
வாஞ்சூரார்
Related Posts Plugin for WordPress, Blogger...