(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, December 31, 2012

உண்மையை சொன்னால் தேசதுரோகியா ?


பிரபல சமூக ஆர்வலரும் பத்திரிக்கை பிரமுகருமாகிய அருந்ததிராய் டெல்லி நடந்த  கற்பழிப்பு பற்றி கூறிய சில கருத்துக்களை மிகைப்படுத்தி சில ஊடகங்கள் அவர்மீது அவதூறுகளை பரப்பிவருகிறது...







அவர்கூறிய வார்த்தைகள்...

"கற்பழிப்பு எங்கு நடந்தாலும் அவை கண்டிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால் எல்லாவிஷயங்களையும் போன்று இந்த விஷயத்திலும் நம்நாட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது.


குஜராத்தில் பலநூறு முஸ்லீம் பெண்களின் கற்புகள் காவிகொடூரர்களால் சூரயடபட்டப்போது இந்த ஊடகங்கள் ஏன் அமைதிகாத்தன?

காஷ்மீரில் அபலைபெண்கள் இந்தியரானுவத்தினரால் சீரழிக்கப்படும்போது அவர்களை தூக்கிலடவேண்டும் என்று கோரிக்கைவைக்கபடாதது ஏன்?

சட்டீஸ்கரில் ஆதிவாசிபெண் சோனி சோரிபோலீசாரால் கற்பழிக்கப்பட்டு அவளுடைய மர்மஉருப்பு கற்களால் சேதபடுத்தபட்டபோது ஏன் இவர்கள் வாயை திறக்கவில்லை?

இப்போது டெல்லியில் கர்ப்பழிக்கபட்டப்பெண் பஸ்சிலிருந்து நிர்வாணமாக தூக்கிவீசபட்டப்போது நூற்றுகனக்கானோர் வேடிக்கைபார்த்து கொண்டிருந்தனரே  தவிர அவளுக்கு தன்னுடைய சட்டையை கழட்டிதரக்கூட யாரும் முன்வரவில்லை..

கற்ப்பழிக்கபட்டது எந்த ஜாதியாகவும்,மதமாகவும் இருந்தாலும் பாகுபாடில்லாமல் அதனை எதிர்க்கவேண்டும் இதுவே என்னுடைய கோரிக்கை என்று கூறியுள்ளார்.

சமீபகாலமாக முஸ்லீம்களுக்கும்,ஆதிவாசிகளுக்கும்,தலித்துகளுக்கும் ஆதரவாக கருத்து தெரிவுக்கும் அருந்ததிராய்க்கு எதிராக
அவரை தேசதுரோகி எனவும் அவரை தாக்கவேண்டும் என்றும் ஏசியாநெட் போன்ற காவிஊடகங்கள் மக்களை உசுப்பெத்திவருகின்றன.



இன்று யாரேனும் நியாயத்திற்கு குரல்கொடுத்தாலோ , முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தாலோ அவர்கள் ஊடகங்களில் தேசத்தின் துரோகியாகவே சித்தரிக்கபடுவது வழக்கமாகிவிட்டது.

Friday, December 21, 2012

குஜராத் எதில் சாதித்துதிருக்கின்றது தெரியுமா? மோடியின் வண்டவாளத் தண்டவாளத்தில் ஏற்றும் கட்சு!


இந்தியாவிலேயே வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலம் குஜராத். அதுவும் மோடியின் தலைமையில்.மோடியை அப்படியே தூக்கி பிரதமர் பதவியில்அமர்த்திவிட்டால் இந்தியா ஒரேயடியாக முன்னேறிவிடும் என்றொரு மாயை உருவாக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து குஜராத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு உண்மையை உடைத்து இருக்கிறார் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவர் மார்கண்டேய கட்ஜு.
அவர் தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்,
குஜராத்தில் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து இருக்கிறதா அல்லது இல்லையா என்பதனை நாம் பார்க்க வேண்டும். குஜராத் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, “குஜராத் மிளிர்கிறது” என்று மக்கள் மத்தியில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி அதில் மோடி வெற்றி பெற்று விட்டார்.
2002 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தவிர்த்து வேறு என்ன சாதனை புரிந்து உள்ளார். பட்டியல் இதோ,.
குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?
குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.
குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.
பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.
குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.
மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,
என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்...
குஜாரத்தில் தேர்ததில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளதாகவும் அரசியல் வாதிகள் பணம் கொடுத்து ஊடகங்களில் செய்தி வெளியிட வைத்தாகவும் பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனக்கு புகார் வந்ததும் இதை விசாரிக்க “உண்மை கண்டறியும் தனிக் குழுவை” அமைத்து அவர்களை இது குறித்து விரிவாக விசாரித்து தனக்கு அறிக்கை சமர்பிக்குமாறு கட்சு உத்தரவிட்டுருந்தார்.
பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இது குறித்து விசாரித்து முதல் கட்ட தகவலை கடந்த 17-12-2012 அன்று கட்சு அவர்களிடம் தெரிவித்துள்ளது.
பிரஸ் கவுன்சில் தலைவர் கட்சு அவர்கள் இது குறித்து கூறுகையில்:
”பத்திரிக்கை ஊடகங்கள் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி ஊடகங்களும் இதில் பெருமளவு ஈடுபட்டுள்ளது. பணத்தை வாங்கிக் கொண்டு குஜராத் தேர்தலில் அரசியல் வாதிகளுக்கு சாதகமாக செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது” என பிரஸ் கவுன்சில் உறுப்பினர் ராஜிவ் ரஜ்சன் என்னிடம் முதல் கட்ட அறிக்கை அளித்துள்ளார்.
எனினும் இந்த புகார் குறித்த முழுமையான அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கின்றது. அது விரைவில் என்னிடம் சமர்பிக்கப்படும், முழு அறிக்கை எனது கைக்கு வந்ததும், தேர்தல் ஆணையத்திற்கு ”பணம் கொடுத்து செய்தி வெளியிடச் செய்த அனைத்து அரசியல் வாதிகளின் கேட்டிடேட்களையும் ரத்து செய்யுமாறு தெரிவிக்கப் போகின்றேன். சமீபத்தில் உபி தேர்தலில் ரத்து செய்யப்பட்டது போன்று!
எனக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆனையத்திற்கு தெரிவிப்பதோடு சம்பந்தப்பட்ட இலாக்கா அதிகாரிகளிடமும் இது குறித்து பேசவிருக்கின்றேன் என தற்போது கட்சு கர்ஜித்துள்ளார்.
கட்சு ஒரு பிரச்சனையை கையில் எடுத்தால் அவன் எவ்வளவோ பெரிய ஆளாக இருந்தாலும் அவனை ஆட்டம் காண வைத்து விடுவார் என்பது மஹாராஷ்ட்ர முதல்வர் சவான் விசயத்தில் அனைவரும் அறிந்ததே!
மோடி கதி என்னா ஆகப்போகின்றது எனத் தெரியவில்லை..
மோடியின் வெற்றி செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவிக்கப் போகி்ன்றதா? பொறுத்திருந்து பார்ப்பாம்.

ஜசாகல்லாஹ் : tntj.net


Wednesday, December 5, 2012

குண்டூஸ் ஆக மாறிவரும் குட்டீஸ்: எச்சரிக்கை ரிப்போர்ட்


ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்யூட்டர் என அடைந்து கிடைப்பதாலும், அதிக அளவு பாஸ்ட் ஃபுட் உணவுகளை உட்கொள்வதாலும் 20 சதவிகித குழந்தைகள் உடல்பருமன் நோய்க்கு ஆளாகிவருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுவயதிலேயே இதயநோய், நீரிழிவு நோய்க்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிர்ச்சியளிக்கும் ஆய்வு
போர்ட்டிஸ் மருத்துவமனையின் மெட்டபாலிக் நோய்கள் மற்றும் எண்டோகிரைனாலஜி துறை சார்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.
இந்தியாவில் சராசரியாக 15 முதல் 21 சதவீத குழந்தைகள் குண்டாக உள்ளனர். ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் ஐட்டங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதாலும் உடலுக்கு பயிற்சி அளிக்காமல் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதாலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஓடி விளையாடு பாப்பா
நகர்ப்புறங்களில் வசிக்கும் குழந்தைகளில் 68% பேர் ஓடியாடி விளையாடுவதில்லை. வெளியே விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல், கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் என்று அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கின்றனர்.
பதின்பருவ சிறுவர்களில் 9 சதவீதத்தினர் தொப்பையுடன் இருக்கின்றனர். இளம் வயதில் தொப்பை விழுவது இன்சுலின் சுரப்பை நேரடியாக பாதித்து சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.


ஜங்க் ஃபுட் கலாச்சாரம்
உணவு பழக்கம், உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட செயல்பாடுகளில் இருக்கும் குறைபாடுகள்தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணம். இது பெரியவர்களை மட்டுமின்றி தற்போது சிறுவர்களையும் அதிகம் பாதிக்கிறது. உடலுக்கு ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளை விடுத்து நகர்ப்புற குழந்தைகள் கொழுப்பு சத்து. இனிப்பு அதிகம் உள்ள உணவு பொருட்கள், ஃபாஸ்ட்புட், ஜங்க் புட் நிறைய சாப்பிடுகின்றனர். இதுவே உடல்பருமனுக்கு காரணமாகிறது.
இதனால் சிறுவயதிலேயே இவர்களுக்கு நீரிழிவு, அதிக ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். தவிர இன்னும் 20 ஆண்டுகளில் சராசரி ஆயுள்காலம் குறையும் அபாயமும் இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர் எச்சரித்துள்ளார்.
சத்தான உணவு கொடுங்களேன்
கொழு கொழுவென்று என்று இருக்கும் குழந்தைதான் ஆரோக்கியம் என்று கருதாமல் சத்தான உணவுகளை கொடுத்து குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதோடு அவர்களுக்கு உடற்பயிற்சி செய்யவும் கற்றுக்கொடுங்களேன். ஆரோக்கியமான எதிர்காலத்தை இன்ஷாஅல்லாஹ் நம் குழந்தைகளுக்கு நாம் அமைத்து கொடுக்கலாம்.
( குறிப்பு : பிள்ளைகளுக்கு சொல்லும் முன்பு நாம் இதை பின்பற்ற வேண்டும் )
நன்றி: தட்ஸ்தமிழ் 

Saturday, December 1, 2012

கடமையை மட்டும் அல்ல கயமையையும் செய்யும் சட்டம்..!!

அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டு விட்டார்கள்


அப்துல் நாசர் மதானியை சிறையில் பூட்டி விட்டார்கள்


அல் உம்மா பாஷாவுக்கு 'ஆயுள்' விதித்து விட்டார்கள்


அதிரை அன்சாரியிடம் 'அவர்கள் பாணியில்' வாக்குமூலம் பெற்று விட்டார்கள்...


அயோத்தியில் பாபர் மஸ்ஜி
தை இடித்தவர்கள் நாடாளுமன்றத்தில்..


குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தவர்கள் 
சட்டமன்றத்தில்..

மும்பையில் வெறியாட்டம்  போட்ட தாக்கரேயின் உடல் ராணுவ மரியாதையில்...

சென்னையில் கூடிய ஆர்.எஸ்.எஸ். செயற்குழு உயர்பாதுகாப்பு வளையத்தில்...







காந்தியையே கொன்றாலும் அவர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதி உண்டு


குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டாலும் அவர்கள் கூடிப்பேச பாதுகாப்பு உண்டு


கொலைக் குற்றமே செய்தாலும் சங்கராச்சாரிக்கு ஜாமீன் உண்டு


காவிகளை எதிர்த்தால் செய்யாத குற்றத்துக்கு தண்டனை உண்டு...




எல்லோருக்கும் 'கடமை'யைச் செய்கிற சட்டம்

எங்களுக்கு மட்டும் 'கயமை'யைச் செய்கிறது!



நன்றி : ஆளூர் ஷாநவாஸ்

Monday, November 26, 2012

நாகூர் தர்கா திருவிழாவுக்கு 40 சந்தனகட்டைகள் இலவசம் : தமிழக அரசு !!!


நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக ரூ. மூன்று இலட்சம் மதிப்பிலான 40 சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தமிழக அரசின் செய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவிக்கிறது.

நாகூர் சந்தனக்கூடு விழாவுக்காக வாங்கப்படும் சந்தனக் கட்டைகளை மானியமாகvவழங்க வேண்டும் என்று நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், பரம்பரை ஆதினமுமாகிய  சையத் காமில் சாஹிப் காதிரி முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, சந்தனக்கூடு நாளன்று சமாதியில் பூசுவதற்காகத் தேவைப்படும் ரூ.3 லட்சம் மதிப்பிலான
சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு  தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


இது நாட்டுக்கும் நம்ப ஊருக்கும் ரொம்ப முக்கியம்....??!!!!!!!!!


ரூம் போட்டு யோசிப்பாங்களோ ...


 நன்றி : இந்நேரம்.காம் 

Sunday, November 18, 2012

சொல்வதெல்லாம் உண்மை-அம்பலமாகும் அசிங்கங்கள்.!



கணவனை சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பெரும் பங்குண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி  இதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
இந்நிலையில்   இந்த நிகழ்ச்சிகள் குறித்து பதிலளிக்குமாறு, வழக்கொன்றில் மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்த வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த நபர் குறித்த பகுதியை ஒளிபரப்ப உடனடித் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்தவரும், மத்திய அரசின் முன்னாள் அலுவலருமான பெர்னாட்ஷான் (61 வயது) என்பவருக்கு ஜீ டிவி என்னும்  தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து அழைப்பொன்று வந்துள்ளது. 

அந்த அழைப்பில் அவருடைய மனைவி செல்வராணியிடம் பேசிய தொகா நிறுவனத்தார் 'சமையல் கலை' நிகழ்ச்சிக்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர். அதன்பேரில் பெர்னாட்ஷான் தனது மனைவி செல்வராணியுடன் தொலைக்காட்சி அலுவலகம் சென்றுள்ளார்.  


படப்பிடிப்பு அரங்கில் கணவனை வெளியே அமரவைத்துவிட்டு, மனைவியிடம் பேட்டி கண்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி திடுமென்று பெர்னாட்ஷாவிடமும் குடும்ப வாழ்க்கை குறித்து தாறுமாறாகக் கேள்விகளைத் தொடுத்துள்ளார். இதனால் திகைப்படைந்த பெர்னாட்ஷாவுக்கு அப்போதுதான் இது சமையல்கலை நிகழ்ச்சி அல்ல வென்றும், 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி என்றும் தெரிய வந்துள்ளது.

ஊர் திரும்பியதும் உடனடியாக இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று  பெர்னாட்ஷான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டார்.

தனது மனுவில், "என்னை பற்றிய அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் கண்ணீர் விட்டு அழுதேன்.

அதற்கு ஒருங்கிணைப்பாளர்கள் மறுத்து விட்டனர். பிரச்சினைக்குரிய காட்சியை நீக்கி விட்டுதான் ஒளிபரப்புவோம் என்றும் கூறினர். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் பொது இடத்தில் அடுத்தவரின் குடும்ப வாழ்க்கையை கேவலப்படுத்துகின்றனர். 


எனவே ஜீ டி.வியில் `சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ஏற்கனவே படம் பிடிக்கப்பட்டுள்ள எனது குடும்ப வாழ்க்கை குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் தடை விதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.



இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயத்தை ஒளிபரப்பினால் தனது மரியாதை பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே மனுதாரரின் குடும்ப வாழ்க்கை குறித்த விஷயத்தை ஜீ டி.வியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுகிறது," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரச்சனை பெரும்பாலும் முடிவதில்லை மாறாக உசுப்பி விட்டு மேலும் கொழுந்து விட்டு எறிய வழிவகுகிறார்கள்.

அப்படி என்ன பெருசா இந்த நிகழ்ச்சியில் நடக்குது என்று யோசிப்பவர்களுக்கு ஒரு  சூடான SAMPLE EPISODE ... 


நம் சமுதாய மக்கள் குறிப்பாக பெண்கள் அதிலும் குறிப்பாக பள்ளியில் ,கல்லூரியில் படிக்கும் பெண்கள்  மார்க்க அறிவுமின்றி , உலக நடைமுறை அறிவுமின்றி எப்படி சீரழிகிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு ஒரு சான்று தேவையில்லை...


இது எங்கோ நடந்துவிட்ட நிகழ்வல்ல நம்மை சுற்றி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு... 


வயது வந்த பிள்ளைகளை எப்படி கையாள்வது என்பதை பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டும் .


வயதாகிவிட்ட பெற்றோர்கள் என்ன சொல்கிறார் ,எதுக்கு சொல்கிறார்கள் என்று பிள்ளைகளும் காது கொடுத்து கேட்க்க  வேண்டும்.


அப்பத்தான் நம் குடும்பம் உருப்படும்..... 




எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இந்த காதல்(?) ஜோடிகள்  வெகு சீக்கிரம் சீரழிவை சந்திக்கும் அதையும் சொல்வதெல்லாம் உண்மையில் பார்க்கலாம்.. பொறுத்திருங்கள்.


Friday, November 16, 2012

கூத்தாடி விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு நல்ல விளம்பரம்.


 முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரிப்பதில் ஹாலிவுட்டை மிஞ்சிவிடும் நமது தமிழக கூத்தாடிகளின் திரைப்படம் என்றால் அது மிகையாகாது.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் என்றால் கறிக்கடை நடத்தும் பாய், சாம்பிராணி போடும் பாய் என்று தான் பழைய படங்களில் காட்டி வந்தனர். கதாநாயகர்களை சிறைக் கைதியாகக் காட்டினால் அவர்களது சிறை எண் 786 என்று நிறைய படங்களில் காட்டி முஸ்லீம் ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள் பழைய கூத்தாடிகள்..

பின்பு நாளடைவில் இயக்குனர் மணிரத்னம், கூத்தாடி விஜயகாந்த்,அர்ஜுன் போன்றவர்களின் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க துவங்கினர்.

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களை இழிவு படுத்துவதென்பது புதிய விசயமல்ல; அது ஒரு தொடர் நிகழ்வு. பலர் திட்டமிட்டு இழிவு படுத்துகிறார்கள்; சிலர் பத்திரிக்கை செய்திகளை அடிப்படையாகக் கொண்டு படம் இயக்குகிறார்கள்.

எது எப்படியாயினும் அவர்கள் படம் எடுக்கும் இடத்திலும், நாம் அதை பார்க்கும் இடத்திலும் இருக்கின்றவரை தீர்வு பிறக்காது.சினிமா என்பது ஊடகம்; ஊடகம் என்பது ஆயுதம்; அந்த ஆயுதம் நம் எதிரிகளின் கைகளில் இருக்கும்வரை நாம் தாக்கப்பட்டுக் கொண்டே இருப்போம்!

இந்நிலையில் வேலாயுதம் படத்தை தொடர்ந்து.. கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது கூத்தாடி விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம். படம் முழுக்க முஸ்லிம்கள் என்றாலே வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் பதியவைக்கும் விதமாக துப்பாக்கி திரைப்படம் அமைந்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இத்திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி கூத்தாடி விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதில் வெடிகுண்டு வைக்கும் தீவிரவாதிகள், அவர்களுக்கு மூளையாக செயல்படுபவர், ராணுவ பாதுகாப்பு அதிகாரி என அனைவரும் முஸ்லிம்களாக சித்தரித்துள்ளனர்.


இந்தப் படத்திலிருந்து இவர்கள் தரும் செய்தி, நாடெங்கும் ஸ்லீப்பிங் செல்களாக முஸ்லிம்கள் செயல்பட்டு வருகின்றனர். அண்டை நாட்டு (பாகிஸ்தான்) தீவிரவாத கும்பலின் உத்தரவுப்படி செயல்படக் கூடியவர்களாக நாடெங்கும் இவர்கள் உள்ளனர். ராணுவ பாதுகாப்புத் துறையிலிருக்கும் முஸ்லிம்களும் தீவிரவாத கும்பலுக்கு உதவி செய்கின்றனர். இதுதான் இப்படித்தின் மெசேஜ்.

இப்படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் “ நான் எடுக்கும் படங்களில் சமூக கருத்தை வைத்து தான் படம் எடுப்பேன் என்று பேசி இருந்தார் “ இப்போது தான் தெரிகிறது அவரின் சமூக கருத்து என்ன வென்று..
இது போன்று முஸ்லிம்களை தீவிரவாதியாக திட்டமிட்டு சித்தரிக்கும் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது ... 

அதை பார்த்து ரசிப்பதும் அதை பற்றி பேசி நேரத்தை வீனடிப்பதும் , ரசிகர்மன்றம் வைத்து கூத்தடிப்பதும் நம் மக்கள் தான் என்பது வேதனையான உண்மை.
முதலில் மாற்றம் வர வேண்டியது நம்மிடம் தான். நாம் செய்ய வேண்டியது சினிமாவை, சீரியலை நாம் ஒவ்வொருவரும் முழுமையாக புறக்கணிக்க வேண்டும்..

காதல் ,காமம் இதை தாண்டி உலகில் எவ்வளவோ உலக மக்கள் பார்க்க வேண்டிய , சிந்திக்க வேண்டிய விசயங்கள் இருக்கிறது அதை இஸ்லாமிய வரம்பிற்குள் நின்று காட்சிபடுத்தி மாற்றத்தை முஸ்லீம்கள் கொண்டு வர வேண்டும் ...

அடுத்து அநீதிக்கு எதிராக வீதியில் போராடுவதோடு நில்லாமல் ..சட்டரீதியாக எதையும் சந்திக்க நம் சமுதாயம் எப்போதும் தயாராக இருக்க முன்வர வேண்டும் ....

இப்போது விஜய் வீடு முற்றுகை செய்தோம் .. என்ன ஆனது ?!! .. முன்பே காவல்துறை கூத்தாடி வீட்டிற்கு காவலுக்கு நின்று, முற்றுகைக்கு போனவர்களை கைதுசெய்து விடுவித்தது. பொதுவாக இது உப்பு சப்பு இல்லாமல் போயிருக்க வேண்டிய விஷயம் ஆனால் நபிகள் நாயகத்தை அவமதித்த ஹாலிவுட் பட விவகாரத்தில் நம் இஸ்லாமிய அமைப்புகள் சில மாதங்களுக்கு முன் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை நகரையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. 

இதே நிலை துப்பாக்கி படத்துக்கு நேர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்துபோன துப்பாக்கி தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ விஜய் ஆகியோர், அதிரடியாக சரண்டர் ஆகி மன்னிப்பு கேட்டுக்கொண்டு சில காட்சியை நீக்குவதாக உறுதிஅளித்துள்ளனர்.

(ஒற்றுமையுடன் ஒருமுறை ஒன்றினைந்தோம் எப்படி அலறுகிறார்கள் பார்த்தீர்களா !!!)

உடனே நம் மக்கள் ஏதோ படத்தை தடை செய்தது போல் மகிழ்ச்சியில் திளைகிறார்கள். ஆனால் உண்மையில் நாம் இப்பொழுதும் ஏமாற்றபட்டிருக்கிறோம். படம் முழுக்க தீவிரவாதிகளை பிடிக்கும் சமாசாரம் தான். முஸ்லீம்கள் இல்லாமல் எப்படி விஜய் தீவிரவாதிகளை பிடிப்பார்.?? சும்மா பேருக்கு இரண்டு சீன்களை கட்செய்வார்கள்,படம் ஓடிக்கொண்டு தான் இருக்கும் ...

ஒருவேளை நாம் இந்த படத்தை சட்டரீதியாக எதிர்த்தால் ,நீதி மன்ற தடை உத்தரவை கூட வாங்க முடியும் ...
உண்மையை சொல்லணும் என்றால் தற்போது இந்த படத்திற்கு விளம்பரமே முஸ்லீம்களான நாம் தான்.

அந்த அளவிற்கு என்ன முஸ்லிம்களை பற்றி தவறாக எடுத்திருக்காங்க என்று முஸ்லிம்களே படத்தை பார்க்க ஆவலாக இருப்பது பரவலாக தெரிகிறது – வேலகிங்டும் போங்க...

(துப்பாக்கி இதுவரை உலக அளவில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.)

இதில் நன்மை என்றால் ஒன்றை மட்டும் சொல்லலாம் இனி வரும் படங்களில் முஸ்லிம்களை தவறாக சித்தரிக்க இயக்குனர்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள்.

அடுத்து விஸ்வரூபம் வர காத்திருக்கிறது ... என்ன செய்ய போகிறோம் ...
யோசித்து வச்சுங்க பா...

துணுக்கு  : துப்பாக்கி படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் முருகதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். உங்கள் துப்பாக்கி படத்தை 2 தடவை பாத்தேன். அருமையாக உள்ளது. நல்ல படம் என்றாராம்.. ??!! நம்மாளுங்க.. இவன போய் தலைவன் சொல்லிகிட்டு அலையுதுங்க 

Tuesday, November 6, 2012

வி.சி கட்சி பிரமுகர் நாகூரில் வெட்டி கொலை ..!


நாகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்
நாகூர் அமிர்தானந்தமயி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் சத்தியமூர்த்தி (வயது35). இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகூர் நகர பொறுப்பாளராக உள்ளார். நேற்று மாலை சத்தியமூர்த்தி தனது நண்பருடன் நாகைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் இரவு 7 மணி அளவில் நாகையில் இருந்து நாகூருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றார்.
நாகை கலெக்டர் அலுவலகத்தை அடுத்துள்ள நாகூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே அவர் சென்றபோது சத்தியமூர்த்தியை ஒரு மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. உடனே சுதாரித்துக் கொண்ட சத்தியமூர்த்தி தப்பி ஓட முயன்று, அங்குள்ள ஒரு சிறிய சந்துக்குள் சென்றார். ஆனால் அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் பின் தொடர்ந்து அவரை சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
கொலை வெறி தாக்குதல்
இதில் கழுத்து உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களில் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச்சொட்ட கீழே விழுந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதன்பின் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.இது குறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பழனி, தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கடைகள் அடைப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. நாகையில் இருந்து நாகூருக்குச் சென்று கொண்டிருந்த ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சத்தியமூர்த்தியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கினர். 
இதனால் நாகை– காரைக்கால் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த கொலை குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொலை செய்யப்பட்ட சத்தியமூர்த்தியின் தம்பி ரெங்கையன் கடந்த ஜனவரி மாதம் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, October 31, 2012

டெங்குவிற்கு சூப்பர் மருந்து கிடைச்சாச்சே..... :-)


தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.
ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்..... 


அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.
எப்படியெனில் பப்பாளி இலையின் சாற்றை பருகினால், காய்ச்சல் உள்ளவர்களின் உடலில் உள்ள இரத்த வெள்ளை அணுக்கள் மற்றும் இரத்த தட்டுக்களின் எண்ணிக்கை 24 மணிநேரத்திற்குள் போதிய அளவு அதிகரித்துள்ளது. மேலும் டெங்குவால் பாதிக்கப்படும் கல்லீரல் பிரச்சனை நீங்கி, கல்லீரல் நன்கு செயல்படும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பப்பாளியின் இலையில் ஆன்டி-மலேரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருட்கள் உள்ளன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட்டால், உடலில் இருக்கும் நோயை தடுக்கலாம் என்றும் கூறுகிறது.
மேலும் இந்த பப்பாளி இலையில் போதுமான ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ, பி, ஈ போன்றவை இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் ஏற்படாமல் தடுக்கிறது.
பப்பாளி இலையின் சாற்றை எப்படி சாப்பிடலாம்?
* முதலில் பப்பாளியின் இலையை நன்கு சுத்தமான நீரால் அலசிட வேண்டும். பின் அதனை கைகளால் நசுக்கி, அதிலிருந்து சாற்றை எடுக்க வேண்டும்.
* ஒரு பப்பாளி இலையின் சாற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் சாறு வரும்.
* இந்த சாற்றை ஒரு நாளைக்கு மூன்று முறை பருக வேண்டும். அதிலும் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒரு டேபிள் ஸ்பூன் பருக வேண்டும்.
தற்போது டெங்குவாள் பாதிக்கபட்டவர்களும் , ஏற்கனவே பாதித்து அதிலிருந்து மீண்டவர்களும் கூட இந்த முறையை பயன்படுத்தி தங்கள் உடல் நிலையை இன்ஷாஅல்லாஹ் சரி செய்து கொள்ளலாம்..
நன்றி : தட்ஸ்தமிழ்

Saturday, October 13, 2012

பிஜேபி மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும் முஸ்லீம்களுக்கு எதிரானவை தான் : நீதிபதி சச்சார்



லக்னோ : முஸ்லீம்களின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலை குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் 2005ல் தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு முஸ்லீம்களின் நிலை குறித்து தெரிவித்த ஆய்வு முடிவுகள் முஸ்லீம்களின் பின் தங்கிய நிலையை தெளிவாக சுட்டி காட்டியது
.
லக்னோவில் சோசலிச கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பேசிய அக்குழுவின் தலைவரான ராஜேந்தர் சச்சார் நிமேஷ் புலனாய்வு அறிக்கையை உ.பி அரசு உடனே வெளியிட வேண்டும் என்று கூறினார். 2007 ல் உத்தரபிரதேசத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஆஸம்கரிலிருந்து காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காசிமி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டது சம்பந்தமான உண்மை நிலையை அறிய அமைக்கப்பட்டது தான் நிமேஷ் கமிட்டி என்பது குறிப்பிடத்தக்கது.


நிமேஷ் கமிட்டி தன் அறிக்கையை ஆகஸ்டு 21 அன்றே உ.பி அரசிடம் சமர்பித்த பிறகும் ஏன் உ.பி அரசு அறிக்கை வெளியிட மறுக்கிறது என்று வினா எழுப்பிய ராஜேந்தர் சச்சார் இது இரு இளைஞர்களின் வாழ்வு குறித்த பிரச்னை மாத்திரமல்ல என்றும் குண்டு வெடிப்பில் இறந்து போனவர்களுக்கான நியாயமாகவும் உண்மை குற்றவாளிகள் சமூகத்தில் தோலுரிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் தான் மற்றும் பிற முஸ்லீம் சிறைவாசிகள் சிறையில் படும் உளவியல் பிரச்னைகள் குறித்து தாரிக் எழுதிய கடிதத்தையும் நிருபர்களிடம் காண்பித்தார் சச்சார்.

சமீப காலமாக முஸ்லீம் இளைஞர்கள் பத்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நிரபராதியாக விடுதலையாவது முஸ்லீம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழக்க காரணமாகி விடும் என்று எச்சரித்த சச்சார் மேலும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை நொறுங்கி போய் விடும் என்றும் கூறினார்.

பாஜக மாத்திரம் மதவாத கட்சி என்று கூறுவது தவறு என்று கூறிய சச்சார் மத்தியிலும் தில்லியிலும் காங்கிரஸ் அரசுகள் இருக்கும் போதும் முஸ்லீம்கள் தவறாக பெருவாரியாக தீவிரவாத குற்றச்சாட்டில் சிறை வைக்கப்படுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது தான் தில்லியில் 16 முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பின் ஜாமியா ஆசிரியர்கள் சங்கத்தின் அறிக்கை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் என்றார்.

புனேவின் யர்வாடா ஜெயிலில் போலீஸ் காவலில் கதீல் சித்திகி இறந்ததை குறித்து கருத்து தெரிவித்த சச்சார் நாஜிசம் ஒரு போதும் இந்தியாவில் வெற்றியடைய விட கூடாது என்றார். 

சவூதி அரேபியாவில் இந்திய உளவு துறையிடம் ஒப்படைக்கப்பட்ட ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அந்நிய முதலீடு குறித்து கருத்து தெரிவித்த சச்சார் கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவை அடிமைப்படுத்தியதை விட மோசமான அடிமைத்தனத்துக்கு வழிவகுக்கும் செயல் என்று கூறினார்.  

இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சோசலிச கட்சியின் பொது செயலாளர் ஓம்கார் சிங் தாம் ஆட்சிக்கு வந்தால் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை சிறையில் இருந்து விடுவிப்போம் என்று சமாஜ்வாதி கட்சி கூறியதாகவும் ஆனால் சமாஜ்வாதி ஆட்சிக்கு பின் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்திருக்கவே செய்திருக்கிறது என்றும் கூறினார்.

நன்றி : இந்நேரம்.காம் 

Friday, September 21, 2012

உண்மையை உலகுக்கு உரக்க சொல்லும் நேரம் வந்துவிட்டது


முஸ்லிம்கள் தங்களது உயிரை விட மேலாக மதிக்கக்கூடிய உத்தம தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை தீவிரவாதியாககாமுகராக சித்தரித்து படமெடுத்ததன் மூலம் இஸ்லாத்தை அழித்து விடலாம் என்று நினைத்து திட்டம் தீட்டினர் அயோக்கிய யூதனும்கேவலப்பட்ட பாதிரியும்.

     ஆனால் எப்போதெல்லாம் இஸ்லாம் தாக்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சியடைந்து வரும் நிகழ்வுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.
     இதற்கு முன்பாக 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. தகர்த்தது இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கூறி ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தது அமெரிக்கா.

     அமெரிக்கா தாக்குதல் தொடுத்தது ஆஃப்கானிஸ்தான் மீது மட்டுமல்லஇஸ்லாத்தின் மீதும்தான்.
     இஸ்லாம்தான் இத்தகைய தீவிரவாத செயல்களைத் தூண்டுகின்றது. அவர்களது வேதம்தான் உலகத்தின் நிம்மதிக்கு குண்டு வைக்கின்றது. அவர்களது இறைத்தூதரின் வழிகாட்டுதல்கள்தான் அவர்களை தீவிரவாதிகளாக்குகின்றன என்று இஸ்லாத்தின் மீது அபாண்டமான அவதூறுகளும்,பொய்யான குற்றச்சாட்டுகளும் பரப்பிவிடப்பட்டன.
    இவர்களது இந்த பொய்ப்பிரச்சாரம்தான் 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகமெங்கும் குறிப்பாக அமெரிக்கா முழுவதும் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி பெறுவதற்கு அடிகோலியது.

இவர்களது இந்த கேடுகெட்ட பிரச்சாரத்தினால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் என்ன தெரியுமா?
    திருக்குர்ஆன் விற்பனை அதிகமானது: அமெரிக்காவிலுள்ள அனைத்து மகாணங்களிலும்அத்தனை புத்தக நிலையங்களிலும் திருக்குர்-ஆன் அதிக அளவு விற்பனையானது. இவர்கள் இஸ்லாத்தின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றார்களே! இஸ்லாம் என்னதான் சொல்ல வருகின்றது என்று இஸ்லாமியரல்லாதவர்களை ஆய்வு செய்ய அவர்களது பொய்ப்பிரச்சாரம் தூண்டியது.

இணைய தளம் மூலம் எகிறிய அழைப்புப்பணி:
    இணைய தளம் மூலமாக திருக்குர்-ஆன் ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் அதிக அளவு  பதிவிறக்கம் செய்யப்பட்டது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட திருக்குர்-குர்ஆனை மக்கள் சிந்திக்க அது வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது.

பள்ளிவாயில்களை நோக்கி படையெடுத்த பிறமதத்தவர்கள்:
    அமெரிக்க அயோக்கிய அரசோ மற்ற இஸ்லாமிய நாடுகள் மீது தீவிரவாத முத்திரை குத்தி படையெடுத்த நேரத்தில்பிறமத மக்கள்  பள்ளிவாயில்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல தேவாலயங்களும்கேளிக்கை பார்களும் மூடப்பட்டு அவைகள் பள்ளிவாசல்களாக உருமாறின.

இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது :
     இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

கூகுளில் குர்-ஆன் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன :
     இஸ்லாமிய எதிரிகள் குர்-ஆனைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குர்-ஆன் குறித்து தேடுவோர்மற்றும் இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

நூலகங்களில் குர்-ஆன் காணாமல் போயின :
     எத்தணை பிரதிகள் வாங்கி வைத்த போதும் ஐரோப்பாகனடாஅமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குர்-ஆனையே குறிவைத்து அனைவரும் படிப்பதற்கு எடுத்துக் கொண்டு போவதால் குர்-ஆன் ஸ்டாக் இல்லாமல் போனது.

முஸ்லிம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :
     மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பணி இவர்களது அவதூறுப் பிரச்சாரத்தால் மிச்சமானது. முஸ்லிம்கள் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

அணி அணியாய் மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் :
     முன்பைக் காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.
     இப்படி இவர்கள் இஸ்லாத்தை இழிவுபடுத்த நினைத்தபோதெல்லாம் இஸ்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அதுபோல இப்போது இவர்கள் எடுத்துள்ள இந்தத் திரைப்படமும்அதனால் முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்,முஸ்லிம்காளின் போராட்டமும் கோடிக்கணக்கான இஸ்லாமியரல்லாத பிறமத மக்களை இஸ்லாத்தைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டியுள்ளது.

    அத்தோடுமட்டுமல்லாமல்நபிகளாரை தீவிரவாதியாகஓரினச்சேர்க்கையாளராககாமுகராக சித்தரித்த மானங்கெட்டவர்களுக்கு பதிலடி கொடுக்க முஸ்லிம்களைத் தூண்டிவிட்ட ஒரு மாபெரும் உந்து சக்தியாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

    அந்த மானம்கெட்டவர்கள் நமது நபி  மீது சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. அவதூறானவை. ஆனால் அவர்கள் வேதப்புத்தகமாக வைத்துள்ள பைபிளும் அவர்களது மத வழிகாட்டுதல்களும்அவரது பாதிரிகளும்தான் அப்படிப்பட்டவர்கள் என்பதை உலகமக்களுக்கு உரத்துச் சொல்லவும்உண்மையை உலகறியச் செய்யவும் இப்போதுதான் முஸ்லிம்களுக்கு காலம் கனிந்துள்ளது. தங்களது அழைப்புப்பணியின் வாயிலாக இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்க இஸ்லாமிய உலகம் தயாராகிவிட்டது.

     ஒவ்வொரு தாக்குதல்களின் இறுதியிலும், "இஸ்லாத்திற்கே இறுதி வெற்றி" என்பது இந்த நிகழ்விலும் உண்மையாகும். முஸ்லிம்கள் அதை தங்களது செயல்களின் வாயிலாக நிரூபித்துக்காட்டுவார்கள். இன்ஷா அல்லாஹ்.

 (ஏக இறைவனை) மறுப்போர்உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.  (அல்குர்-ஆன் 5 : 3)  

source: onlinepj.com

Wednesday, September 19, 2012

வெங்காய வியாபாரி" தமீம் அன்சாரி தீவிரவாதியா..?!!


இந்திய ராணுவ ரகசியங்கள் மற்றும் ராணுவ பயிற்சி மையங்களின் புகைப்படங்களை வெளிநாட்டுக்கு கடத்த முயன்றதாக கூறி, தமீம் அன்சாரி (35) என்பவரை "கியூ பிரிவு போலீஸார்" கைது செய்துள்ளனர்.


அதிராம்பட்டினத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்பவரின் மகன் தமீம் அன்சாரி,வெங்காய வியாபாரி. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அழகம்மாள் நகர், தாஜ் ரெசிடென்சி என்ற முகவரியில் வசித்து வருகிறார். 

எம்.ஏ. பட்டதாரியான அன்சாரியால், வீடியோ, வரைபடங்கள் ஆகியவற்றை "இணையதளம்" மூலம், இலங்கைக்கு அனுப்ப இயலவில்லையாம்(?) இதனால், இலங்கைக்கு நேரடியாகச் சென்று அதை வழங்க தமீம் அன்சாரி முயன்றதாக போலீசார் கூறுகின்றனர். இது வரை பாகிஸ்தானுக்கே செல்லாத அவர் மீது, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 




தமீம் அன்சாரியிடமிருந்து 3 செல்போன்கள், 25 CDக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். (யாருக்கு தெரியும் இது அவரிடம் இருந்ததா இல்லையா என்பதும் ,அதில் என்ன இருந்தது என்பதும்...) 
தமீம் அன்சாரி மீது, இந்திய அரசாங்க ரகசியங்கள் சட்டம் 1923-ன் 3,4,9 பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


வழக்கம் போல் இதில் பல செட்டப்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் மலிந்து கிடக்கின்றன.
இந்த கைதின் பின்னணியில் பல்வேறு மர்மங்கள் உள்ளன. குறிப்பாக  தமீம் அன்சாரி 
ரகசியங்களை  ஒய்வு ஒரு  பெற்ற ராணுவ அதிகாரியிடமிருந்து பெற்றதாக முதலில் செய்தி  வெளியிட்ட மீடியாக்கள் அந்த ராணுவ அதிகாரியின் பெயரை மறைத்து  விட்டதும், ஒரு சில மீடியாக்கள் இவர் பாக்கிஸ்தானிற்கு ராணுவ ரகசியங்களை கடத்த முயன்ற போது கைது செய்யப்பட்டதாகவும் சில மீடியாக்கள்  இலங்கைக்கு கடத்த முயன்ற போது  கைது செய்யப்பட்டதாகவும் மாறி மாறி செய்திகள் வெளியிட்டதும் மர்மமாகவே  உள்ளது. 

இது குறித்து உண்மையறியும் குழு அமைத்து விசாரித்து வருகிறோம்" என அதிரம்பட்டினத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரும் மனித உரிமை ஆர்வலருமான Z.முஹம்மது தம்பி கூறியுள்ளார்...

இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் உண்மை வெளிவரும்...


அல்லாஹ்வின் தூதரை அவமதிக்கும் திரைபடத்தை எதிர்த்து நாம் போராடிவரும் இவ்வேளையில்  முஸ்லீம்களின் மேல் வழக்கம் போல் தீவிரவாதி பழிபோட்டு ஊடகத்தை திசை திருப்பும் முயற்சியாக கூட இது இருக்கலாம்.. 

நன்றி : அதிரை தண்டர்.
Related Posts Plugin for WordPress, Blogger...