(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, October 19, 2015

நீ யார் எங்களுக்குப் பிச்சை போட?

"முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்" என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த - இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக இருக்கும் மனோஹர்லால் கட்டார் என்பவர் கூறியுள்ளார்.

இந்துத்துவ பயங்கரவாத சக்திகளால் ஆட்டுவிக்கப்படும் பா. ஜ. கட்சியானது, அறுதிப்பெரும்பான்மையுடன் இந்தியாவின் மத்திய அரசைக் கைப்பற்றியதுமே நடுநிலையாளர்களும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமுதாய மக்களும் எதற்காக அச்சப்பட்டார்களோ அது படிப்படியாக நிறைவேறி வருகின்றது.

ஆம்! இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலைக்குமா என்ற அச்சம்தான் அவர்களிடம் இருந்தது.
2014 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் முன்பே," மோடியைப் விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியதுதான்; வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும்" என பீகார் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங் மிரட்டிய போத ு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இவர்கள் அதிகாரத்துக்கு வரும் முன்பே இப்படி என்றால், வந்த பின் இன்னும் என்னென்னவெல்லாம் பேசுவார்களோ; செய்வார்களோ என்ற அச்சமும் ஐயப்பாடுமே ஏற்பட்டன.
 பாபா ராம்தேவுடன் மனோஹர் லால் கட்டார்தேர்தல் முடிந்தது. இந்துத்துவ சக்திகளே எதிர்பாராத அறுதிப்பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றது. தமக்காகப் பேசிய கிரிராஜ் சிங்கை மத்திய அமைச்சரவையில் சேர்த்து அழகு பார்த்தார் மோடி அதனால் அச்சக்திகள் இன்னும் வீரியத்துடம் களமிறங்கி, இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் கண்ணியத்துக்கும் பெருமைக்கும் அடையாளச்சின்னமாக விளங்கும் நாடாளுமன்றத்திலேயே "பாகிஸ்தானுக்கு ஓடு" எனும் வெறிக்கோஷத்தை முழங்கினர் .

"மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்" என்று கிரிராஜ் சிங் சொன்னது 'வெளியில் பேசிய பேச்சு'. ஆனால் மதிப்பு மிகுந்த ஜனநாயக பீடமான நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் சக உறுப்பினர்களைப் பார்த்து "பாகிஸ்தானுக்கு ஓடு" எனக் கூறியது அவமானகரமானது
பா ஜ. க ஆட்சியைப் பிடித்த உடனே -- 2014 ஜூலை மாதம் 17 ஆம் தேதி -- டெல்லி மகாராஷ்டிர பவனிற்குச் சென்ற சிவசேனாக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மகாராஷ்டிர உணவு வகைகள் வழங்கப்படாததால் அங்கு பணியாளராக இருந்த அர்ஷத் ஸுபைர் என்பவரின் வாயில் வலுக்கட்டாயமாகச் சப்பாத்தியைத் திணித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

முஸ்லிமான அந்தப் பணியாளர் புனித ரமலான் நோன்பிருந்த நிலையில் அவரது வாயில் சப்பாத்தியைத் திணித்த பிரச்சனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிவசேனா உறுப்பினர் ராஜன் விச்சாரேவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் அச்சுறுத்தும் வகையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து உறுப்பினர்களை நோக்கி, " பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்; இது ஹிந்துஸ்தான்" எனக் கத்தினார்.

இப்போது மாட்டைப் பிடித்துத் தொங்குகிறார்கள் .
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரியில் மாட்டுக்கறி தின்றதாக வதந்தியைப் பரப்பி முஹம்மத் அக்லாக்கை அடித்தே கொன்றனர் இந்துத்துவ பயங்கர வாதிகள்.

இதற்குப் பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்வினையாகப் பன்றிக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப் போவதாக பா ஜ கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் எனும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் பா ஜ கட்சியின் நாலாந்தரப் பேச்சாளர் ராஜா அறிவித்தார்.

தாராளமாகச் சாப்பிடு. மாடு தமக்குப் புனிதம் என ராஜா வகையறா கூறுகின்றனர் பன்றி அசுத்தம் என முஸ்லிம்கள் கூறுகின்றோம். எங்கள் மறை கூறுகிறது. எனவே ராஜா மட்டுமின்றி, ராமகோபாலன், மோஹன் பகவத், சுப்ரமணியம் சாமி சாக்ஷி மகாராஜ், கட்டார், மோடி ஆகியோரும் பன்றிக்கறி சாப்பிட்டால் முஸ்லிம்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை. மாட்டைப்போல் பன்றியையும் அவதாரமாகவும் தெய்வமாகவும் கருதும் இந்துகளின் கவலை அது.
பெரும்பான்மையான இந்துக்களால் உண்ணப்படும் மாட்டிறைச்சிக்கு முஸ்லிம்கள் மட்டும் தாக்கப்படுவது இந்துத்துவ பயங்கரவாதத்தால் மட்டுமே என்பதில் ஐயமில்லை.
வி எச் பி யின் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் எனும் அறிவிலி, சவூதியில் பன்றிக்கறி சாப்பிட முடியுமா என மகாப்பெரிய தத்துவத்தை உதிர்த்துள்ளார்.
அட 'அறிவுக்கொழுந்தே'!

பன்றி முஸ்லிம்களுக்கு அசுத்தமான- தடை செய்யப்பட - உணவு. அதனால் சவூதி மட்டுமின்றி உலகில் வாழும் எந்த முஸ்லிமும் பன்றிக்கறி சாப்பிட மாட்டான். முஸ்லிம் நாடுகளில் பன்றி வளர்க்கப்படுவதுமில்லை.வாழ்வதுமில்லை. 

ஐக்கிய அரபு அமீரகம், போன்ற வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வாழும் ஐரோப்பியர், சீனர், ஃ பிலிப்பைனியர் போன்ற வெளிநாட்டவருக்காகச் சில பேரங்காடிகளில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி விற்கப்படுகிறது.ஆனால் மாடு அப்படியன்று. உலகில் மத வேறுபாடின்றி எல்லா நாடுகளிலும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. 

பால் கறந்து குடிக்கப் படுகின்றது.அதன் இறைச்சி உண்ணப்படுகிறது. இந்துக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே புனிதமாகக் கருதும் மாடு, பெரும்பான்மையான இந்துக்களால் உண்ணப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சி என்ற காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் மட்டும் தாக்கப்படுவது இந்துத்துவ பயங்கரவாதத்தால் மட்டுமே என்பதில் ஐயமில்லை.
மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது பா ஜ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாட்டைக் கொன்றால் 5 ஆண்டு சிறை, மகாராஷ்டிர மாநிலத்தில்... மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள்,....ஹரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுமாம். . மாட்டை விற்கும் விவசாயி அல்லது வியாபாரி, வாங்குபவர், மாடுகளை ஏற்றிச் செல்லும் வண்டியோட்டி, மாடுகளை அறுப்பவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள் ஆவர்.. மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு கீழ்நிலைக் காவலர் கூட வீடு புகுந்து சோதனை செய்யலாம் என்ன ஒரு அறிவாளித்தனம்.?

கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான சாக்ஷி மகாராஜ் தம் வழக்கமான கொலை வெறிப்பேச்சில், தம் தாயான மாட்டைக் காப்பாற்ற " கொலைக்கும் தயங்க மாட்டோம்" என்று அறிவித்து விட்டார். கூடவே உ.பி. மாநில அமைச்சர் ஆஸம்கான் பாகிஸ்தானி என "அடையாளம் கண்டு" விஷம் கக்கியுள்ளார்.
இந்நிலையில்தான் ஹிமாச்சல் பிரதேசத்தில் நேற்று, மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு சென்ற, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20  வயதேயான அக்தர் எனும் பெயருள்ள ஒரு முஸ்லிம் இளைஞனை இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் மாட்டின் பெயரால் அடித்தே கொன்றுள்ளது. "மாட்டுத் தாய்க்காகக் கொலையும் செய்வோம்"  என்று சாக்ஷி மகாராஜ் சொன்னதை மெய்ப்பித்து அடித்தே கொன்றுள்ளனர் பயங்கரவாதிகள்.

இத்தனை நடந்தும் மோடி வாய்திறவாமல் ரசித்துக் கொண்டுள்ளார்.
ஹரியானா முதலமைச்சர் முஸ்லிம்களுக்குப் பிச்சை போடுகிறார் - "வேண்டுமானால் இந்தியாவில் வாழ்ந்து கொள்" என.. இந்தியாவில் வாழ முடியாவிட்டால் பாகிஸ்தானுக்குத்தானே முஸ்லிம்கள் போக வேண்டும் என்ற எண்ணம்.

நாங்கள் என் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்?
நீ யார் எங்களுக்குப் பிச்சை போட?

இது எங்கள் நாடு; ஆயிரம் ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்த - வாழும் நாடு. ஆண்ட நாடு!

உங்கள் சதியால் பாகிஸ்தான் பிறந்த போதும் அங்கு போகாமல் இங்கே வாழும் எம் தாய் நாடு இது.

அறுதிப் பெரும்பான்மையும் அதிகார மமதையும் எப்போதும் கூட வாரா. ஐந்தாண்டுகளுக்கொருமுறை தேர்தல் வரும். அப்போது இந்திய மக்கள் பாடம் புகட்டுவார்கள். மாட்டரசியலுக்கு மாற்றரசியலைத்தேடி ஒரு முடிவு எடுப்பார்கள். அப்போது அது உங்களுக்கு மரண அடியாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.


நன்றி - மஹ்மூத் அல் ஹஸன்

Thursday, October 1, 2015

மாட்டுகறிக்காக , மனிதஉயிரை கொலை செய்த மிருகங்கள்.

பிஜேபி ஆட்சியில் நாடு நர மாமிசக் காடாகி விட்டது
பசுவைக் கொன்று சாப்பிட்டதாகப் வேண்டுமென்றே புரளியை கிளப்பி, திட்டமிட்டு முஸ்லிம் ஒருவரை  படுகொலை செய்துள்ளனர், அவரது மகனின் கண்களும் குருடாக்கப்பட்டுள்ளன.. நடவடிக்கை எடுத்த காவல்துறையின்மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...



தாதரி (உபி) அக்.1  உத்தரப் பிரதேசம் மாநி லம் தாதரி நகருக்கு அரு கில் உள்ள ஒரு கிராமத் தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி தந்தை கொல்லப்பட் டார். அவருடைய மகனை  அடித்துக் கண்களைக் குருடாக்கிய கொடூரச் சம்பவமும் நடந்துள்ளது.  தாதரி நகருக்கு அருகில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் திங்கள் அன்று பசுமாடு ஒன்று காணாமல் போய்விட்ட தாகவும், அந்தப் பசுமாட் டின் மாமிசம் முகமது அக் லாக் வீட்டில் இருப்பதாக வும் சிலர் வேண்டுமென்றே கூறினர்.

இந்த நிலையில் முக மது அக்லாக் மற்றும் அவர்களது வீட்டில் உள் ளவர்கள் தான் பசுவை வெட்டி சமைத்து தின்று விட்டார்கள் என்றும், மீதமுள்ள மாமிசத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்கள் என்றும் அந்த ஊரில் உள்ள சில இந்து அமைப்பைச் சார்ந் தவர்கள் வதந்தி பரப் பினர்.

இதனை அடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில்  இந்து அமைப்பினர் மக்கள் அனைவரையும் கூடச் சொன்னார்கள். கூட்டத் திற்குப் பிறகு முகமது அக்லாக் பசுவை வெட்டிய தாகவும் அதைத் தின்று விட்டு மீதமுள்ள மாமி சத்தை தெருவில் வீசிய தாகவும், ஆகையால் பசு வைத் தின்ற குடும்பத் திற்கு தகுந்த தண்டனை தரவேண்டும் என்றும் மக் களை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட முகமதுவின் மகளான சாஜிதா பத்திரிகையாளர் களிடம் கூறும்போது எங்கள் வீட்டிற்கு திங்கள் கிழமை நள்ளிரவு காவிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பலர் கும்பலாக வந்தனர்.

கும்பலைக் கண்டு பயந்து கதவை மூடி விட்டோம். ஆனால் அந்த கும்பல் கதவைக் கோடரி மற்றும் கம்பிகள் கொண்டு தாக்கத் துவங்கி விட்டனர். சில நிமிடங் களில் கதவு உடைந்து விட்டது. உள்ளே வந்த சிலர் என் தந்தையை அடித்து வெளியே இழுத் துச் சென்றனர் பிறகு கோடரியால் தலையில் அடித்தனர். எனது மூத்த சகோதரனை செங்கலால் தாக்கினர்.

எனது தாயாரையும் அடித்தனர். பிறகு எனது ஆடைகளையும் கிழித்து எறிந்து என்னை அரை நிர்வாணமாக்கினார்கள் என்று கூறினார். இச்சம்பவம் நடந்த போது அந்த ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந் தனர். இந்தச் சம்பவத்தில் முகமத் அக்லாக் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். அவரது 26 வயது மகன் டானிசின் பார்வையும் பறிபோனது.  இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை ஆணையர் கூறும் போது, ஊரில் உள்ள கோவிலில் சிலர் கூடி வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.  சரியாக இரவு 10 மணியளவில் ஊரில் ஒன்று கூடிய மக்களில் சிலர் பசுவைத் திருடி அதைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதனை அடுத்து திரளான மக்கள் கையில் ஆயுதங் களுடன் அக்லாக் வீட் டிற்குச் சென்று தாக் குதல் சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனர்.    மொத்தம் 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் தலைமறைவாகியுள் ளனர் என்று கூறினார்.   இந்து அமைப்புகள் எதிர்ப்பு   காவல்துறையினர் 4 பேரைக் கைது செய்ததை எதிர்த்து ஊரில் உள்ள இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறை யில் இறங்கினர். காவல் துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தனர். காவல் துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர்.

வன்முறைச் சம் பவம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் சிறப்பு காவல்படையினரை சம்பவ இடத்திற்கு வரவ ழைத்தார். சிறப்புக்காவல் படையினர் ஊருக்கு வராமல் தடுக்க சாலை களில் சேதமேற்படுத்த முனைந்த கலவரக்காரர் கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆனால் வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களால்

தாக்கத் தொடங்கியதும் காவல் துறையினர் துப்பாக் கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். கல வரக்காரர்கள் தாக்கியதில் 3 காவலர்கள் காயமடைந்த னர்.   சிறப்பு கலவரக் கட்டுப் பாட்டு பிரிவு காவல்துறையி னர் 3000 பேர் அந்த பகுதி யில் முகாமிட்டுள்ளனர்.  கொலை செய்யப்பட்ட அக்லாக் என்பவர் மட்டும் தான் அந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர். சுமார் 400 குடும் பங்கள் அடங்கிய அந்த ஊரில் 2 முஸ்லீம் குடும்பம் மாத்திரமே உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக ஒரு குடும் பத்தினர் வெளியூர் சென்று விட்டனர்.  பசு மாட்டின் மாமிசம் அல்ல இந்த நிலையில் மாநில காவல்துறை ஆணையர் கூறும் போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மாமிசம் ஆரம்ப பரிசோதனையின் படி  அது பசு மாட்டின் மாமிசம் அல்ல என்று கூறினார்.

உலகளவில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிசாரா கிராமத்தில் மாமிசம் வைத்திருந்தார் என்ற வதந்தியை அடுத்து அடித்துக் கொலைசெய்யப் பட்ட முகமது அக்லாக் மற் றும் கண்கள் குருடாக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் அவரது மகன் டானிஸ் விவகாரம் உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்ற மோடி இந்தியா முன்னேறி வருகிறது, நான் பிரதமர் ஆன பிறகு உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க் கிறது என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இதைச் சொல்லிவிட்டு டில்லி திரும் பும் முன்பே மாட்டு மாமி சத்தை வைத்திருந்தார்கள் என்ற வதந்தியின் பெயரில் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பத்தையே அடித்து நொறுக்கியுள்ளனர். அனல் கக்கும் உ.பி. எம்.பி.,

இது குறித்து உத்தரப்பிர தேச சமாஜ்வாடி நாடாளு மன்ற உறுப்பினர் ஆஜம் கான் கூறியதாவது: மோடி பிரதம ரானதில் இருந்து அவரது பரிவாரங்கள் மிகவும் உற் சாகமாக இருக்கின்றன. அவர்களின் உற்சாகம் அள வுக்கு மீறிச் சென்று கொண் டிருக்கிறது. மனிதர்களின் உயிரை எடுப்பதுதான் மோடி பரிவாரங்களின் முழு நேரவேலையாகப் போய்விட் டது. இந்துத்துவா அரசியல் என்பது இப்படி முஸ்லீம் மக்களின் உயிரை எடுத்துத் தான் நடத்தவேண்டும் என் பது முசாபர் நகர் கலவரத்தி லேயே தெரிந்து விட்டது. ஆனால் உங்கள் பரிவாரத் தின் இந்த அராஜகப் போக் கால் இந்தியாவின் நற்பெயர் உலக அளவில் களங்கமேற் பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் வடு இன்னும் ஆறவில்லை. உங்கள் பரிவாரத்திற்கு நீங் கள் தலைமை வகிக்கின்றீர் கள். அப்படி என்றால் இவர் களின் இந்த கொடூர வன் முறைக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்கவேண்டும். ஊரில் தனியாக உழைத்து முன்னேறி வாழ்ந்த ஒரு இஸ்லாமியனை இப்படி வன்மம் வைத்து அடித்துக் கொலை செய்வது நீதியா? மோடி அவர்களே, அடக்கி வையுங்கள்

குஜராத்தில் கொலைக ளைச் செய்த போதே அமை தியாக இருந்த உங்களுக்கு இது எல்லாம் பெரிதாகவே தெரியாது. ஆனால் இந்தியா போன்ற மாபெரும் குடியரசு நாட்டில் இது போன்ற செயல்கள் தற்போது தொடர்ந்து நடந்துவருவது மிகவும் அபாயகரமானது. உங்களின் பரிவாரங்களை அடக்கிவையுங்கள் என்று கூறினார். மேலும் 2017இல் நடை பெற இருக்கும் உத்தரப் பிர தேச தேர்தலுக்கு முன்பு பாஜக இதைவிடக் கொடூர மான செயல்களைச் செயல் படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை முகமது அக்லாக்கை இந்து அமைப்புகள் கொலை செய்த விவகாரம் தொடர் பாக பேசிய உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசும் போது, அக்லாக் கொலையா னது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும், கொலையான முகமது அக்லாக் குடும்பத்தி னரின் வீடு முற்றிலும் சேத மடைந்துள்ளது. அவர்க ளுக்கு முதல்வர் நிவாரண உதவியாக ரூ10 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். பலத்த காயத்துடன் மருத்துவமன யில் சேர்க்கப்பட்ட அவரது மகன் டானிஸின் அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை கள் எடுக்க உத்தரவிட்டுள் ளேன் என்றார்.

பாஜ.க. எம்.எல்.ஏ. ஆணவப் பேச்சு

உத்தரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான சிறீசந்த சர்மா என்பவர் கூறும் போது மக்களின் உணர்வு களை மதித்து நடக்கவேண் டும், ஊர் மக்கள் இந்துக்கள். இந்துக்கள் பசுவைத் தெய்வ மாக மதிப்பவர்கள், அவர் களுக்குப் பசுவைக் கொலை செய்து அதை சாப்பிடுவ தைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும், என்றார். அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகர் சிங் கூறியதாவது:

ஊரில் ஒருவர் மாட்டி றைச்சியைத் தின்பதைப் பார்த்துக் கொண்டு அமைதி யாக இருந்து அதற்காக காவல்துறையை எதிர்பார்ப் பது என்பது மக்களால் இய லாத காரியம், இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கும் போது காவல்துறை யால் என்ன செய்யமுடியும்? என்றார். ஊரில் பட்டறை வைத்து பிழைப்பு நடத்தும் முகமது அக்லாக் சமீபத்தில் விளைநிலமும் வாங்கியுள் ளார். மிகவும்  ஏழைக் குடும் பமாக இருந்த தனது குடும் பத்தை தனி மனிதனாக உழைத்து வீடுகட்டி, தற் போது நிலமும் வாங்கியுள் ளார். அவருடைய மகன் தற் போது விமானப் படையில் பொறியாயளராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி, மற்றும் 70 வயது தாயாரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு அங்குள்ள  கோவில் ஒன்றி லிருந்து முகமது அக்லாக் கையும் அவர்களது குடும்பத் தையும் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்யுங்கள் என்று அறி வித்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஊர் கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் விசா ரணை செய்து வருகின்றனர்.

இதற்கான விலையை விரைவில் இவர்கள் கொடுத்தே தீரவேண்டும்.


நன்றி : விடுதலை..
Related Posts Plugin for WordPress, Blogger...