(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 23, 2015

தாக்கப்பட்ட மசூதிக்கு தனது சேமிப்பை அன்பளிப்பாக தந்த சிறுவன்!

அமெரிக்காவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்ட மசூதிக்கு சிறுவன் ஒருவர், தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத் தொகையாக வழங்கை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகானத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஜேக் ஸ்வான்சன். பாரீஸ் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சிலர் சிறுவன் ஜேக் ஸ்வான்சன் வசிக்கும் பகுதியில் வசிக்கும் பகுதியில் உள்ள மசூதியை சூறையாடியுள்ளனர். மேலும் மசூதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் கிழித்து வீசப்பட்டிருந்தது.


இந்த சம்பவத்தை கண்ட இச்சிறுவன் தனக்கு ஐபேட் ஒன்று வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த 20 டாலரை மசூதி நிவாரண செலவுக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.


இந்நிலையில் சிறுவனது செயலைப் பாராட்டி, அமெரிக்க முஸ்லிம்கள் சங்கம் ஸ்வான்சனை கௌரவப்படுத்தும் விதமாக நன்றிக் கடிதத்துடன் ஒரு ஆப்பிள் ஐ-பேட் சேர்த்து வழங்கி உள்ளது.

Friday, November 6, 2015

சகிப்புத் தன்மை - இந்துத்துவ ஸ்டைல்!

சகிப்புத் தன்மை - இந்துத்துவ ஸ்டைல்!
ந்தியாவின் பிரபலமான நடிகர் ஷாருக் கான். இந்தி சினிமா உலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் பெரிய நடிகர். அவர் தமது 50ஆவது பிறந்த நாள்யொட்டி 'ட்விட்டரி'ல், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கே கருத்து சுதந்திரம் உண்டு.
சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவுவதால் நாட்டுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இதே நிலை தொடருமேயானால், முன்னணி நாடாக இந்தியா உருவாவதற்குப் பெரும் தடைக்கற்களாக இந்த விஷயங்கள் இருக்கும்" என்று கூறி இருந்தார்.
ஒரு பொறுப்பான 'இந்திய பிரஜை' என்ற நிலையில், இந்தியா முன்னேறுவதற்குத் தடையாக, கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் இல்லாச் சூழல் நிலவுவதாக உண்மையான அக்கறையுடன் சொல்லிவிட்டார்.
அவர் சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில் - அதாவது இந்தியாவில் கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் இல்லை - என்பதை எழுத்துப் பிசகாமல் மெய்ப்பிக்கும் வகையில் - இந்துத்துவம் எதிர்வினை புரிந்துள்ளது.
வி எச் பி யின் அதிரடி நாலாந்தரப் பேச்சாளரான சாத்வி பிராச்சி, ''ஷாருக் கானின் சகிப்புத்தன்மை குறித்த கருத்திற்காக, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்து, அவரை பாகிஸ்தானிற்கு நாடு கடத்த வேண்டும்; மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ள பத்மஸ்ரீ விருதை, ஷாருக் கான் திருப்பியளிக்க வேண்டும்; ஷாருக் கான் பாகிஸ்தானின் ஆதரவாளராகச் செயல்படுகிறார்;. அந்நாட்டின் சித்தாந்தங்களைத் தமது கருத்துகளின் வாயிலாக அவர் இங்கு பிரதிபலிக்கிறார்" என்று புலம்பியிருந்தார்.
ஆளும் பா ஜ க பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா என்பவரும் இதே கருத்தை மொழிந்துள்ளார். ''ஷாருக் கான் இந்தியாவில் வசிக்கிறார். ஆனால் அவரது உயிர் பாகிஸ்தானில் உள்ளது. அவரது திரைப்படங்கள் நம் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்கின்றன. ஆனால், இந்தியா சகிப்புத்தன்மையற்ற நாடாக இருப்பதாக அவர் கருதுகிறார். சகிப்புத்தன்மை தொடர்பாக ஷாருக் கான் தெரிவித்த கருத்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகளும் வெளியிடும் கருத்துகளைப் போன்றே உள்ளன. மொத்தத்தில் ஷாருக்கான் தேச நலனுக்கு எதிரானவர்" என்று குதித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பா ஜ க உறுப்பினராக இருக்கும் இந்துத்துவ தீவிரவாதியான ஆதித்யநாத் என்பவரும் ஷாருக் கான் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டார். "ஷாருக்கானின் மொழிக்கும் ஹபீஸ் சயீதின் மொழிக்கும் அதிக வித்தியாசமில்லை. இவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்வதை வரவேற்கிறோம்.” என்று ஆதித்யநாத் கூறியுள்ளார்.
ஓர் 'இந்திய பிரஜை'க்கு இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லை; சகிப்புத் தன்மை இல்லை என்று சொன்னதை உடனடியாக இந்துத்துவம் நிரூபித்துள்ளது.
ஷாருக் கான் பாகிஸ்தான் பற்றி எதுவும் கூறாத நிலையில் இவர்கள் அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என்று சொல்கின்றனர். இந்துத்துவக் கும்பல் மட்டுமே எப்போதும் பாகிஸ்தானைப் பற்றி நினைத்துக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பது ஏன் எனப்புரியவில்லை.
இந்து சமயம் சார்ந்த, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி போன்றவர்களும் ரகுராம் ராஜன் போன்றவர்களும் சகிப்புத் தன்மையின்மை பற்றிப் பேசியபோதும் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களும் விருதுகளைத் திருப்பியனுப்பியபோதும் அவர்களை நாடுகடத்துவது பற்றி இந்துத்துவக் கும்பல் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவர்களை பாகிஸ்தானுக்குக் கடத்த முடியாது. உலகின் ஒரே இந்து நாடு என்று இவர்கள் சொல்லிக்கொண்டிருந்த நேபாளமும் இப்போது மதச்சார்பற்ற நாடாகி விட்டது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் சகிப்புத் தன்மையின்மை பற்றிப் பேசியுள்ளாரே; அவரை எந்த நாட்டுக்குக் கடத்துவீர்கள்?
முஸ்லிம்களை மட்டும் பாகிஸ்தானுக்கு நாடுகடத்துவதே இவர்களின் நோக்கம். இவர்கள் என்ன பாகிஸ்தானின் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளா ?
இந்தியாவில் கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் இல்லை என்பதற்கு நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி ஆகியோரின் படுகொலையும் தாத்ரியில் முகமது அக்லாக்கின் படுகொலையும் அண்மைக் காலச் சான்றுகளாக இருக்கின்றன என்று கூறி, அறிவுஜீவிகளும் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களும் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். அப்போது, "விருதுகளைத் திருப்பிக் கொடுப்பதா; ஆகுமா; அடுக்குமா" என்று இந்துத்துவச் சார்பாளர்கள் கொதித்தனர். இப்போது பிராச்சி, "ஷாருக் கான் விருதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்" என்கிறார்.
இவர்களுக்கு நிலையான ஒரு கருத்தோ கொள்கையோ கிடையாது. ஒரே கொள்கை இந்தியாவில் இருப்பவர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவது மட்டுமே :-)
ரகுராம் ராஜன் பொருளாதார மேதை. 2003 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சர்வதேச நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பணி புரிந்தவர். 2008ஆம் ஆண்டில் இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசகராக நியமனம் பெற்றார். 2012ஆம் ஆண்டில் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப பதவி உயர்வு பெற்றார். இப்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணிபுரிகிறார்.
இவர் அண்மையில் டெல்லி ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய போது , ”இந்தியக் கலாசாரம் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு அனுமதிக்கப்படவேண்டும். சகிப்புத் தன்மைக்கும் சுதந்திரத்துக்கும் போராட வேண்டியது அவசியமானது. ஏனெனில் சகிப்புத் தன்மைக் குறைவு என்பது பாதுகாப்பு இல்லாமைக்குச் சமமாகும். எனவே எந்தவொரு விஷயத்திலும் திணிப்பு என்பது இருக்கக் கூடாது. மாற்றுக் கருத்துகளுக்கும் மதிப்பளித்திடவேண்டும்.” என்று பேசினார்.
இந்துத்துவ ஊதுகுழலான சுப்பிரமணியன் சாமி, "ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கிக்குப் போக வேண்டும். தம் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். தாத்தா மாதிரி பேசக் கூடாது. ரிசர்வ் வங்கி நாசமாக ராஜனே காரணம். பிரதமர் உடனடியாக இவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். என்ன சகிப்புத் தன்மை? தீவிரவாதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியுமா?" என்று ட்விட்டரில் கேட்டுள்ளார்.
சித்தராமையா வழிப்போக்கனோ அல்லது சாதாரண பிரஜையோ அல்லர். ஒரு மாநிலத்தை ஆளுகின்ற முதலமைச்சர்.
அவர், "எனக்குப் பிடிக்கும் என்றால் நான் மாட்டிறைச்சி உண்பேன்." என்று சொன்னதற்காக, கர்நாடக மாநில, சிமோகா மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.என். சென்னபசவப்பா , ''சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சிமோகா வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். இங்கு வந்து பசுவை வெட்டிப் பார்க்கட்டும். அவரது தலையை உடலில் இருந்து எடுத்து நாங்கள் கால்பந்து விளையாடுவோம்'' என்று கொலை மிரட்டல் விடுத்தார்.
ஆளும் பா ஜ க உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலின் சகிப்புத் தன்மை என்பது இதுதான். இந்த விஷயத்தில் இவர்கள் எவ்வித ஒளிவு மறைவோ நளினமோ இன்றி உடனடியாக எதிர்வினையாற்றித் தங்கள் நிலையைத் தெளிவு படுத்தி விடுவார்கள்..இதுதான் இந்துத்துவ ஸ்டைல்!
பா ஜ க தலைவர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாய்க்கு வந்ததையெல்லாம் உளறினாலும் "அது கட்சியின் கருத்தில்லை; அவரது சொந்தக் கருத்து" என்று மழுப்பி விடுவார்கள். ஆனால் சகிப்புத் தன்மை- கருத்து சுதந்திரம் போன்றவற்றில் மட்டும் ஒரே குரலில் கூவுவார்கள்.
சகிப்புத் தன்மை இல்லையெனக் கருத்துச் சொன்னதற்காக தேசதுரோக வழக்குப் போட வேண்டும் என பிராச்சி கூறியுள்ளார். அதன் பிரிவு இ.த.ச 124 ஏ ( I P C 124 A )ஆகும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 A அரசுக்கு எதிரான குற்றம் எது என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
"சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை, மக்களுக்கு எதிராகச் செயல் படுகின்ற அரசாங்கம் என்கிற வெறுப்பையும் அல்லது விரோத உணர்ச்சியையும் தூண்டி விடுவதற்காக ஒருவர் தம்முடைய எழுத்தால் அல்லது பேச்சால் அல்லது சைகையால் அல்லது படத்தால் அல்லது வேறு எந்த விதத்திலாவது செயல்பட்டால் குற்றமாகும்.
இந்தக் குற்றத்திற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய அபராதமோ அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமோ அல்லது அபராதம் மட்டுமோ விதிக்கப்படும்."
இது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரால், விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இன்றுவரை அதை வைத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும் தமக்குப் பிடிக்காதவர்களையும் மிரட்டுவதற்காக ஆள்வோர் பயன்படுத்துகின்றனர்.
"சாராயக் கடையை மூடு" என்று பாடியதற்காக அண்மையில் பாடகர் கோவன் மீதும் இப்பிரிவு பாய்ச்சப் பட்டு, உயர்நீதி மன்றத்தில் அரசு சார்பில் பல்டியடிக்கப் பட்டது. கோவன் மீது பிரிவு 153 சமூகத்தில் இரு பிரிவினருக்கிடையில் மோதல் ஏற்படுத்துதல், பிரிவு 502/1 அவதூறு செய்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
நியாயமாகப் பார்த்தால் பிராச்சி, சாக்ஷி, ஆதித்யநாத் எச் ராஜா போறோர் மீது இப்பிரிவுகள் பாய்ச்சப்பட்டிருக்க வேண்டும்.
ஓர் ஆறுதலாக சுப்பிரமணியன் சாமி மீது இப்போது வழக்கு நடக்கிறது.
இந்து - முஸ்லிமிடையே வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதற்காக சுப்பிரமணியன் சாமி மீது டெல்லி, மும்பை, அஸ்ஸாம், மொகாலி மற்றும் திருவனந்தபுரம் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சாமி மனு கொடுத்திருந்தார்.. அதில் தாம் 2007ஆம் ஆண்டு எழுதிய பயங்கரவாதம் தொடர்பான புத்தகத்துக்கு எதிரான வழக்குகளுக்கும் அவர் தடை கோரியிருந்தார்.
சுப்பிரமணியன் சாமி மனு மீது பதிலளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை ஏற்று உள்துறை அமைச்சகம் , "கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது. இத்தகைய பேச்சுகளுக்குத் தண்டனை வழங்கக் கூடிய ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் மிகவும் சரியானவையே. இந்தியாவின் குடிமக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை நாம் அனுமதித்தால் மிக மோசமான நாசத்தையே ஏற்படுத்தும். இதனால் கலவரங்கள் ஏற்படும். சமூக அமைதியைப் பாதிக்கும் வகையில் நல்லிணக்கம் மிகவும் சீர்குலைந்து போய்விடும். பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்த அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையே நமது அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அமைதியை நிலைநாட்டவும் சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கவும் நமது அரசியல் சாசனம் விதித்துள்ள நியாயமான சில கட்டுப்பாடுகளையும் சட்டப்பிரிவுகளையும் கேள்விக்குள்ளாக முடியாது. வெறுப்புப் பேச்சுகளைப் பேசுவோருக்குச் சட்டப்படி உரிய தண்டனை வழங்க வேண்டும். மேலும் சுப்பிரமணியன் சாமி, 2007ஆம் ஆண்டு பயங்கரவாதம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகம் முழுவதுமே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளது. இந்த நூலை எழுதிய சுப்பிரமணியன் சாமி சட்டத்தை முழுவதுமாக மீறியுள்ளார். ஆகையால் சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து அவர் மீதான வழக்கில் விசாரணையைத் தொடர்ந்து நடத்த வேண்டும்." என பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
தாமதமாக இப்படிச் செய்வதை விடுத்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் கருத்து சுதந்திரமும் சகிப்புத் தன்மையும் சமூக நல்லிணக்கமும் நின்று நிலவும். இதை ஆள்வோர் புரிந்து கொள்வார்களா அல்லது இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்
ஏனெனில் முன்பு ஒரு முறை, சேதுசமுத்திர திட்டத்துக்கு முட்டுக் கட்டை போட, இந்துத்துவ சக்திகளும் அ இ அ தி மு கவும் ராமர்பாலம் இருக்கின்றது என்ற பிரச்சனையைக் கிளப்பிய போது, ராமாயணக் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் வரலாற்றுச் சான்று இல்லை என மத்திய அரசு கூறிவிட்டு, இந்துத்துவக் கும்பலின் எதிர்ப்பால் பல்டியடித்ததைப் போல் இப்போதும் பல்டியடிக்க மாட்டார்கள் என்ற உறுதி இல்லை.
நல்லது நடந்தால் நாடு உண்மையிலேயே முன்னேறும்.
இந்நேரம் 
இந்நேரம் .காம் // நன்றி  - நச்சினார்க்கினியன்

Monday, October 19, 2015

நீ யார் எங்களுக்குப் பிச்சை போட?

"முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்ந்து கொள்ளலாம்; ஆனால் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதை விட்டுவிடவேண்டும்" என ஆர் எஸ் எஸ் பிரச்சாரக் பொறுப்பிலிருந்த - இப்போது ஹரியானா மாநில முதலமைச்சராக இருக்கும் மனோஹர்லால் கட்டார் என்பவர் கூறியுள்ளார்.

இந்துத்துவ பயங்கரவாத சக்திகளால் ஆட்டுவிக்கப்படும் பா. ஜ. கட்சியானது, அறுதிப்பெரும்பான்மையுடன் இந்தியாவின் மத்திய அரசைக் கைப்பற்றியதுமே நடுநிலையாளர்களும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமுதாய மக்களும் எதற்காக அச்சப்பட்டார்களோ அது படிப்படியாக நிறைவேறி வருகின்றது.

ஆம்! இந்தியாவின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலைக்குமா என்ற அச்சம்தான் அவர்களிடம் இருந்தது.
2014 ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் முன்பே," மோடியைப் விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டியதுதான்; வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும்" என பீகார் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங் மிரட்டிய போத ு எவ்வித அதிர்ச்சியும் ஏற்படவில்லை. இவர்கள் அதிகாரத்துக்கு வரும் முன்பே இப்படி என்றால், வந்த பின் இன்னும் என்னென்னவெல்லாம் பேசுவார்களோ; செய்வார்களோ என்ற அச்சமும் ஐயப்பாடுமே ஏற்பட்டன.
 பாபா ராம்தேவுடன் மனோஹர் லால் கட்டார்தேர்தல் முடிந்தது. இந்துத்துவ சக்திகளே எதிர்பாராத அறுதிப்பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றது. தமக்காகப் பேசிய கிரிராஜ் சிங்கை மத்திய அமைச்சரவையில் சேர்த்து அழகு பார்த்தார் மோடி அதனால் அச்சக்திகள் இன்னும் வீரியத்துடம் களமிறங்கி, இந்தியாவின் ஜனநாயகத்துக்கும் கண்ணியத்துக்கும் பெருமைக்கும் அடையாளச்சின்னமாக விளங்கும் நாடாளுமன்றத்திலேயே "பாகிஸ்தானுக்கு ஓடு" எனும் வெறிக்கோஷத்தை முழங்கினர் .

"மோடியை விமர்சிப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்" என்று கிரிராஜ் சிங் சொன்னது 'வெளியில் பேசிய பேச்சு'. ஆனால் மதிப்பு மிகுந்த ஜனநாயக பீடமான நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் சக உறுப்பினர்களைப் பார்த்து "பாகிஸ்தானுக்கு ஓடு" எனக் கூறியது அவமானகரமானது
பா ஜ. க ஆட்சியைப் பிடித்த உடனே -- 2014 ஜூலை மாதம் 17 ஆம் தேதி -- டெல்லி மகாராஷ்டிர பவனிற்குச் சென்ற சிவசேனாக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மகாராஷ்டிர உணவு வகைகள் வழங்கப்படாததால் அங்கு பணியாளராக இருந்த அர்ஷத் ஸுபைர் என்பவரின் வாயில் வலுக்கட்டாயமாகச் சப்பாத்தியைத் திணித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

முஸ்லிமான அந்தப் பணியாளர் புனித ரமலான் நோன்பிருந்த நிலையில் அவரது வாயில் சப்பாத்தியைத் திணித்த பிரச்சனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பப்பட்டது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிவசேனா உறுப்பினர் ராஜன் விச்சாரேவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிக்கை முழக்கங்கள் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் ரமேஷ் பிதூரி என்பவர் அச்சுறுத்தும் வகையில் அவையின் மையப்பகுதிக்கு வந்து உறுப்பினர்களை நோக்கி, " பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்; இது ஹிந்துஸ்தான்" எனக் கத்தினார்.

இப்போது மாட்டைப் பிடித்துத் தொங்குகிறார்கள் .
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாத்ரியில் மாட்டுக்கறி தின்றதாக வதந்தியைப் பரப்பி முஹம்மத் அக்லாக்கை அடித்தே கொன்றனர் இந்துத்துவ பயங்கர வாதிகள்.

இதற்குப் பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்வினையாகப் பன்றிக்கறி உண்ணும் போராட்டம் நடத்தப் போவதாக பா ஜ கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் எனும் பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் பா ஜ கட்சியின் நாலாந்தரப் பேச்சாளர் ராஜா அறிவித்தார்.

தாராளமாகச் சாப்பிடு. மாடு தமக்குப் புனிதம் என ராஜா வகையறா கூறுகின்றனர் பன்றி அசுத்தம் என முஸ்லிம்கள் கூறுகின்றோம். எங்கள் மறை கூறுகிறது. எனவே ராஜா மட்டுமின்றி, ராமகோபாலன், மோஹன் பகவத், சுப்ரமணியம் சாமி சாக்ஷி மகாராஜ், கட்டார், மோடி ஆகியோரும் பன்றிக்கறி சாப்பிட்டால் முஸ்லிம்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை. மாட்டைப்போல் பன்றியையும் அவதாரமாகவும் தெய்வமாகவும் கருதும் இந்துகளின் கவலை அது.
பெரும்பான்மையான இந்துக்களால் உண்ணப்படும் மாட்டிறைச்சிக்கு முஸ்லிம்கள் மட்டும் தாக்கப்படுவது இந்துத்துவ பயங்கரவாதத்தால் மட்டுமே என்பதில் ஐயமில்லை.
வி எச் பி யின் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் எனும் அறிவிலி, சவூதியில் பன்றிக்கறி சாப்பிட முடியுமா என மகாப்பெரிய தத்துவத்தை உதிர்த்துள்ளார்.
அட 'அறிவுக்கொழுந்தே'!

பன்றி முஸ்லிம்களுக்கு அசுத்தமான- தடை செய்யப்பட - உணவு. அதனால் சவூதி மட்டுமின்றி உலகில் வாழும் எந்த முஸ்லிமும் பன்றிக்கறி சாப்பிட மாட்டான். முஸ்லிம் நாடுகளில் பன்றி வளர்க்கப்படுவதுமில்லை.வாழ்வதுமில்லை. 

ஐக்கிய அரபு அமீரகம், போன்ற வளைகுடா முஸ்லிம் நாடுகளில் வாழும் ஐரோப்பியர், சீனர், ஃ பிலிப்பைனியர் போன்ற வெளிநாட்டவருக்காகச் சில பேரங்காடிகளில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இறைச்சி விற்கப்படுகிறது.ஆனால் மாடு அப்படியன்று. உலகில் மத வேறுபாடின்றி எல்லா நாடுகளிலும் மாடுகள் வளர்க்கப்படுகின்றன. 

பால் கறந்து குடிக்கப் படுகின்றது.அதன் இறைச்சி உண்ணப்படுகிறது. இந்துக்களில் ஒரு பிரிவினர் மட்டுமே புனிதமாகக் கருதும் மாடு, பெரும்பான்மையான இந்துக்களால் உண்ணப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சி என்ற காரணம் சொல்லப்பட்டு முஸ்லிம்கள் மட்டும் தாக்கப்படுவது இந்துத்துவ பயங்கரவாதத்தால் மட்டுமே என்பதில் ஐயமில்லை.
மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மீது பா ஜ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாட்டைக் கொன்றால் 5 ஆண்டு சிறை, மகாராஷ்டிர மாநிலத்தில்... மத்திய பிரதேசத்தில் 7 ஆண்டுகள்,....ஹரியானாவில் 10 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுமாம். . மாட்டை விற்கும் விவசாயி அல்லது வியாபாரி, வாங்குபவர், மாடுகளை ஏற்றிச் செல்லும் வண்டியோட்டி, மாடுகளை அறுப்பவர், சமைப்பவர், சாப்பிடுபவர் உள்ளிட்ட அனைவரும் இச்சட்டங்களின்படி தண்டனைக்குரிய குற்றவாளிகள் ஆவர்.. மாட்டுக்கறி வைத்திருப்பதாகவோ, சாப்பிடுவதாகவோ சந்தேகப்பட்டால் ஒரு கீழ்நிலைக் காவலர் கூட வீடு புகுந்து சோதனை செய்யலாம் என்ன ஒரு அறிவாளித்தனம்.?

கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுள் ஒருவரான சாக்ஷி மகாராஜ் தம் வழக்கமான கொலை வெறிப்பேச்சில், தம் தாயான மாட்டைக் காப்பாற்ற " கொலைக்கும் தயங்க மாட்டோம்" என்று அறிவித்து விட்டார். கூடவே உ.பி. மாநில அமைச்சர் ஆஸம்கான் பாகிஸ்தானி என "அடையாளம் கண்டு" விஷம் கக்கியுள்ளார்.
இந்நிலையில்தான் ஹிமாச்சல் பிரதேசத்தில் நேற்று, மாடுகளை விற்பனைக்காகக் கொண்டு சென்ற, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20  வயதேயான அக்தர் எனும் பெயருள்ள ஒரு முஸ்லிம் இளைஞனை இந்துத்துவ பயங்கரவாதக் கும்பல் மாட்டின் பெயரால் அடித்தே கொன்றுள்ளது. "மாட்டுத் தாய்க்காகக் கொலையும் செய்வோம்"  என்று சாக்ஷி மகாராஜ் சொன்னதை மெய்ப்பித்து அடித்தே கொன்றுள்ளனர் பயங்கரவாதிகள்.

இத்தனை நடந்தும் மோடி வாய்திறவாமல் ரசித்துக் கொண்டுள்ளார்.
ஹரியானா முதலமைச்சர் முஸ்லிம்களுக்குப் பிச்சை போடுகிறார் - "வேண்டுமானால் இந்தியாவில் வாழ்ந்து கொள்" என.. இந்தியாவில் வாழ முடியாவிட்டால் பாகிஸ்தானுக்குத்தானே முஸ்லிம்கள் போக வேண்டும் என்ற எண்ணம்.

நாங்கள் என் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்?
நீ யார் எங்களுக்குப் பிச்சை போட?

இது எங்கள் நாடு; ஆயிரம் ஆண்டுகள் நாங்கள் வாழ்ந்த - வாழும் நாடு. ஆண்ட நாடு!

உங்கள் சதியால் பாகிஸ்தான் பிறந்த போதும் அங்கு போகாமல் இங்கே வாழும் எம் தாய் நாடு இது.

அறுதிப் பெரும்பான்மையும் அதிகார மமதையும் எப்போதும் கூட வாரா. ஐந்தாண்டுகளுக்கொருமுறை தேர்தல் வரும். அப்போது இந்திய மக்கள் பாடம் புகட்டுவார்கள். மாட்டரசியலுக்கு மாற்றரசியலைத்தேடி ஒரு முடிவு எடுப்பார்கள். அப்போது அது உங்களுக்கு மரண அடியாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.


நன்றி - மஹ்மூத் அல் ஹஸன்

Thursday, October 1, 2015

மாட்டுகறிக்காக , மனிதஉயிரை கொலை செய்த மிருகங்கள்.

பிஜேபி ஆட்சியில் நாடு நர மாமிசக் காடாகி விட்டது
பசுவைக் கொன்று சாப்பிட்டதாகப் வேண்டுமென்றே புரளியை கிளப்பி, திட்டமிட்டு முஸ்லிம் ஒருவரை  படுகொலை செய்துள்ளனர், அவரது மகனின் கண்களும் குருடாக்கப்பட்டுள்ளன.. நடவடிக்கை எடுத்த காவல்துறையின்மீது இந்து அமைப்புகள் தாக்குதல் நடத்தியுள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...



தாதரி (உபி) அக்.1  உத்தரப் பிரதேசம் மாநி லம் தாதரி நகருக்கு அரு கில் உள்ள ஒரு கிராமத் தில் மாட்டு மாமிசம் சாப்பிட்டார்கள் என்று கூறி தந்தை கொல்லப்பட் டார். அவருடைய மகனை  அடித்துக் கண்களைக் குருடாக்கிய கொடூரச் சம்பவமும் நடந்துள்ளது.  தாதரி நகருக்கு அருகில் உள்ள பிசாரா என்ற கிராமத்தில் திங்கள் அன்று பசுமாடு ஒன்று காணாமல் போய்விட்ட தாகவும், அந்தப் பசுமாட் டின் மாமிசம் முகமது அக் லாக் வீட்டில் இருப்பதாக வும் சிலர் வேண்டுமென்றே கூறினர்.

இந்த நிலையில் முக மது அக்லாக் மற்றும் அவர்களது வீட்டில் உள் ளவர்கள் தான் பசுவை வெட்டி சமைத்து தின்று விட்டார்கள் என்றும், மீதமுள்ள மாமிசத்தை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளார்கள் என்றும் அந்த ஊரில் உள்ள சில இந்து அமைப்பைச் சார்ந் தவர்கள் வதந்தி பரப் பினர்.

இதனை அடுத்து அந்த ஊரில் உள்ள கோவில் ஒன்றில்  இந்து அமைப்பினர் மக்கள் அனைவரையும் கூடச் சொன்னார்கள். கூட்டத் திற்குப் பிறகு முகமது அக்லாக் பசுவை வெட்டிய தாகவும் அதைத் தின்று விட்டு மீதமுள்ள மாமி சத்தை தெருவில் வீசிய தாகவும், ஆகையால் பசு வைத் தின்ற குடும்பத் திற்கு தகுந்த தண்டனை தரவேண்டும் என்றும் மக் களை தூண்டிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட முகமதுவின் மகளான சாஜிதா பத்திரிகையாளர் களிடம் கூறும்போது எங்கள் வீட்டிற்கு திங்கள் கிழமை நள்ளிரவு காவிக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு பலர் கும்பலாக வந்தனர்.

கும்பலைக் கண்டு பயந்து கதவை மூடி விட்டோம். ஆனால் அந்த கும்பல் கதவைக் கோடரி மற்றும் கம்பிகள் கொண்டு தாக்கத் துவங்கி விட்டனர். சில நிமிடங் களில் கதவு உடைந்து விட்டது. உள்ளே வந்த சிலர் என் தந்தையை அடித்து வெளியே இழுத் துச் சென்றனர் பிறகு கோடரியால் தலையில் அடித்தனர். எனது மூத்த சகோதரனை செங்கலால் தாக்கினர்.

எனது தாயாரையும் அடித்தனர். பிறகு எனது ஆடைகளையும் கிழித்து எறிந்து என்னை அரை நிர்வாணமாக்கினார்கள் என்று கூறினார். இச்சம்பவம் நடந்த போது அந்த ஊர் மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்துகொண்டு இருந் தனர். இந்தச் சம்பவத்தில் முகமத் அக்லாக் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். அவரது 26 வயது மகன் டானிசின் பார்வையும் பறிபோனது.  இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை ஆணையர் கூறும் போது, ஊரில் உள்ள கோவிலில் சிலர் கூடி வதந்திகளைப் பரப்பியுள்ளனர்.  சரியாக இரவு 10 மணியளவில் ஊரில் ஒன்று கூடிய மக்களில் சிலர் பசுவைத் திருடி அதைக் கொன்று சாப்பிட்டவர்களுக்கு தண்டனை தர வேண்டும் என்று கூறினார்கள்.

இதனை அடுத்து திரளான மக்கள் கையில் ஆயுதங் களுடன் அக்லாக் வீட் டிற்குச் சென்று தாக் குதல் சம்பவத்தில் ஈடு பட்டுள்ளனர்.    மொத்தம் 10 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் தலைமறைவாகியுள் ளனர் என்று கூறினார்.   இந்து அமைப்புகள் எதிர்ப்பு   காவல்துறையினர் 4 பேரைக் கைது செய்ததை எதிர்த்து ஊரில் உள்ள இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வன்முறை யில் இறங்கினர். காவல் துறையினரின் இரண்டு மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தனர். காவல் துறை வாகனத்தையும் அடித்து நொறுக்கித் தீ வைத்தனர்.

வன்முறைச் சம் பவம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் சிறப்பு காவல்படையினரை சம்பவ இடத்திற்கு வரவ ழைத்தார். சிறப்புக்காவல் படையினர் ஊருக்கு வராமல் தடுக்க சாலை களில் சேதமேற்படுத்த முனைந்த கலவரக்காரர் கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். ஆனால் வன்முறையாளர்கள் காவல்துறையினர் மீது பயங்கர ஆயுதங்களால்

தாக்கத் தொடங்கியதும் காவல் துறையினர் துப்பாக் கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் காயமடைந்தார். கல வரக்காரர்கள் தாக்கியதில் 3 காவலர்கள் காயமடைந்த னர்.   சிறப்பு கலவரக் கட்டுப் பாட்டு பிரிவு காவல்துறையி னர் 3000 பேர் அந்த பகுதி யில் முகாமிட்டுள்ளனர்.  கொலை செய்யப்பட்ட அக்லாக் என்பவர் மட்டும் தான் அந்த ஊரில் வசதியாக வாழ்ந்தவர். சுமார் 400 குடும் பங்கள் அடங்கிய அந்த ஊரில் 2 முஸ்லீம் குடும்பம் மாத்திரமே உள்ளன. பக்ரீத் பண்டிகைக்காக ஒரு குடும் பத்தினர் வெளியூர் சென்று விட்டனர்.  பசு மாட்டின் மாமிசம் அல்ல இந்த நிலையில் மாநில காவல்துறை ஆணையர் கூறும் போது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள மாமிசம் ஆரம்ப பரிசோதனையின் படி  அது பசு மாட்டின் மாமிசம் அல்ல என்று கூறினார்.

உலகளவில் பரபரப்பு!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிசாரா கிராமத்தில் மாமிசம் வைத்திருந்தார் என்ற வதந்தியை அடுத்து அடித்துக் கொலைசெய்யப் பட்ட முகமது அக்லாக் மற் றும் கண்கள் குருடாக்கப் பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கும் அவரது மகன் டானிஸ் விவகாரம் உலக அளவில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.  இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அமெரிக்கா சென்ற மோடி இந்தியா முன்னேறி வருகிறது, நான் பிரதமர் ஆன பிறகு உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க் கிறது என்று கூறியிருந்தார். ஆனால் அவர் இதைச் சொல்லிவிட்டு டில்லி திரும் பும் முன்பே மாட்டு மாமி சத்தை வைத்திருந்தார்கள் என்ற வதந்தியின் பெயரில் இந்து அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பத்தையே அடித்து நொறுக்கியுள்ளனர். அனல் கக்கும் உ.பி. எம்.பி.,

இது குறித்து உத்தரப்பிர தேச சமாஜ்வாடி நாடாளு மன்ற உறுப்பினர் ஆஜம் கான் கூறியதாவது: மோடி பிரதம ரானதில் இருந்து அவரது பரிவாரங்கள் மிகவும் உற் சாகமாக இருக்கின்றன. அவர்களின் உற்சாகம் அள வுக்கு மீறிச் சென்று கொண் டிருக்கிறது. மனிதர்களின் உயிரை எடுப்பதுதான் மோடி பரிவாரங்களின் முழு நேரவேலையாகப் போய்விட் டது. இந்துத்துவா அரசியல் என்பது இப்படி முஸ்லீம் மக்களின் உயிரை எடுத்துத் தான் நடத்தவேண்டும் என் பது முசாபர் நகர் கலவரத்தி லேயே தெரிந்து விட்டது. ஆனால் உங்கள் பரிவாரத் தின் இந்த அராஜகப் போக் கால் இந்தியாவின் நற்பெயர் உலக அளவில் களங்கமேற் பட்டு வருகிறது. 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் வடு இன்னும் ஆறவில்லை. உங்கள் பரிவாரத்திற்கு நீங் கள் தலைமை வகிக்கின்றீர் கள். அப்படி என்றால் இவர் களின் இந்த கொடூர வன் முறைக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்கவேண்டும். ஊரில் தனியாக உழைத்து முன்னேறி வாழ்ந்த ஒரு இஸ்லாமியனை இப்படி வன்மம் வைத்து அடித்துக் கொலை செய்வது நீதியா? மோடி அவர்களே, அடக்கி வையுங்கள்

குஜராத்தில் கொலைக ளைச் செய்த போதே அமை தியாக இருந்த உங்களுக்கு இது எல்லாம் பெரிதாகவே தெரியாது. ஆனால் இந்தியா போன்ற மாபெரும் குடியரசு நாட்டில் இது போன்ற செயல்கள் தற்போது தொடர்ந்து நடந்துவருவது மிகவும் அபாயகரமானது. உங்களின் பரிவாரங்களை அடக்கிவையுங்கள் என்று கூறினார். மேலும் 2017இல் நடை பெற இருக்கும் உத்தரப் பிர தேச தேர்தலுக்கு முன்பு பாஜக இதைவிடக் கொடூர மான செயல்களைச் செயல் படுத்தத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.

ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை முகமது அக்லாக்கை இந்து அமைப்புகள் கொலை செய்த விவகாரம் தொடர் பாக பேசிய உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசும் போது, அக்லாக் கொலையா னது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும், கொலையான முகமது அக்லாக் குடும்பத்தி னரின் வீடு முற்றிலும் சேத மடைந்துள்ளது. அவர்க ளுக்கு முதல்வர் நிவாரண உதவியாக ரூ10 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். பலத்த காயத்துடன் மருத்துவமன யில் சேர்க்கப்பட்ட அவரது மகன் டானிஸின் அனைத்து மருத்துவ உதவிகளையும் அரசு சார்பில் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை கள் எடுக்க உத்தரவிட்டுள் ளேன் என்றார்.

பாஜ.க. எம்.எல்.ஏ. ஆணவப் பேச்சு

உத்தரப் பிரதேச பாஜக தலைவர்களுள் ஒருவரான சிறீசந்த சர்மா என்பவர் கூறும் போது மக்களின் உணர்வு களை மதித்து நடக்கவேண் டும், ஊர் மக்கள் இந்துக்கள். இந்துக்கள் பசுவைத் தெய்வ மாக மதிப்பவர்கள், அவர் களுக்குப் பசுவைக் கொலை செய்து அதை சாப்பிடுவ தைப் பார்த்தால் ரத்தம் கொதிக்கத்தான் செய்யும், என்றார். அப்பகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் நாகர் சிங் கூறியதாவது:

ஊரில் ஒருவர் மாட்டி றைச்சியைத் தின்பதைப் பார்த்துக் கொண்டு அமைதி யாக இருந்து அதற்காக காவல்துறையை எதிர்பார்ப் பது என்பது மக்களால் இய லாத காரியம், இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கும் போது காவல்துறை யால் என்ன செய்யமுடியும்? என்றார். ஊரில் பட்டறை வைத்து பிழைப்பு நடத்தும் முகமது அக்லாக் சமீபத்தில் விளைநிலமும் வாங்கியுள் ளார். மிகவும்  ஏழைக் குடும் பமாக இருந்த தனது குடும் பத்தை தனி மனிதனாக உழைத்து வீடுகட்டி, தற் போது நிலமும் வாங்கியுள் ளார். அவருடைய மகன் தற் போது விமானப் படையில் பொறியாயளராக பணியாற்றி வருகிறார். அவர் மனைவி, மற்றும் 70 வயது தாயாரும் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு அங்குள்ள  கோவில் ஒன்றி லிருந்து முகமது அக்லாக் கையும் அவர்களது குடும்பத் தையும் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொலை செய்யுங்கள் என்று அறி வித்து இருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஊர் கோவில் அர்ச்சகரை காவல் துறையினர் விசா ரணை செய்து வருகின்றனர்.

இதற்கான விலையை விரைவில் இவர்கள் கொடுத்தே தீரவேண்டும்.


நன்றி : விடுதலை..

Thursday, September 17, 2015

ஏன் இசையமைக்கவில்லை என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால்..!! -ஏ.ஆர்.ரஹ்மான்.

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்..

சமீபத்தில் மீடியாக்களில் மிக பெரிய விவாத பொருளாக மாறியிருக்ககூடிய செய்தி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிராக மும்பையை சார்ந்த ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு கொடுத்த ஃபத்வா (மார்க்க தீர்ப்பு).



அதவாது இரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கும்  முஹம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்’       ( நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு) என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மும்பையைச் சேர்ந்த 'ராஸா அகாடமி' என்ற முஸ்லிம் அமைப்பு ஃபத்வா கொடுத்திருந்தது.

அந்த அமைப்பு கொடுத்த ஃபத்வாவில் இந்த படத்தின் பெயரே எங்களுக்கு உடன்பட்டதில்லை, இந்த படத்தில் நபிகள் நாயகத்தை ஒருவேளை தவறாக சித்தரித்திருந்தால் பலர் கேலி செய்யும் நிலை ஏற்படலாம்..  எனவே இந்த படம் தடை செய்யபட வேண்டும் , இந்த படத்தை இயக்கிய  மஜிதி மற்றும் ஏ.ஆர்.,ரஹ்மான் மீண்டும் கலிமா சொல்லி இஸ்லாத்திற்குள் வர வேண்டும் என்று  அந்த அமைப்பு மார்க்க தீர்ப்பு கொடுத்துள்ளது.

இதற்க்கு ஏ.ஆர்.,ரஹ்மான் விளக்கமும் அளித்துள்ளார்.

இதில் பல விசயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்/

முதலில்  ராஸா அகாடமி என்ற மும்பையை சேர்ந்த இந்த அமைப்பிற்கு ஃபத்வா வழங்க தகுதி இருக்கிறதா.. இந்த அமைப்பு இந்திய முஸ்லிம்களின் பிரதிநிதியா என்றால் கண்டிப்பாக இல்லை.. மேலும் இந்த அமைப்பு இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிரான சூபிசம் கொள்கையை பின்பற்றும் அமைப்பு.

சரி இவர்கள் ஃபத்வா கொடுக்கலாம் என்று வைத்துகொள்வோம். முறையாக இஸ்லாத்தை பின்பற்றும் அமைப்பு என்று வைத்துகொள்வோம். இவர்கள் ஃபத்வா வில் ஏதாவது உருப்படியான வாதம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை முரண்பாட்டின் மொத்த உருவமாகவே  இருக்கிறது. எப்படியெனில்...

**முஹம்மது - மெசஞ்சர் ஆஃப் காட் என்ற திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதனால் அதில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தவறாக சித்தரிப்பு என்பது இவர்கள் அனுமானமே ஆகும் ஆகவே அனுமானங்களை வைத்து மார்க்க தீர்ப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன.

**முஹம்மது என்ற பெயரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி  படம் எடுப்பதே உடன்பட்டதில்லை  என்றால்.., ஏற்கனவே the message  - the story of islam என்ற படம் 1976ல் வெளியாகி உலகம் முழுவதும்  பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அந்த படம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின்  தூதர் நபி(ஸல்) அவர்களை பற்றியது தான்.  அதற்க்கு எந்த எதிர்ப்பும் , இதுநாள் வரை இவர்கள் தெரிவிக்கவில்லை... முஹம்மது என்று திரைபடத்திற்கு பெயரிடுவதே மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் செயல் என்று எந்த அடிப்படையில் இவர்கள் மார்க்க தீர்ப்பு வழங்குகிறார் என்று தெரியவில்லை.

** மேலும் அந்த படத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவத்தை பிரதிபளிப்பது போன்ற ( நபி(ஸல்) இப்படி தான் இருப்பார்கள் என்பது போன்று வேறு ஒருவரை நடிக்க வைப்பது)  காட்சிகள் இருக்கிறது என்று இயக்குனரோ , அதன் தயாரிப்பாளரோ கூறியதில்லை...

**மாறாக அப்படியான எந்த காட்சியும் இருக்காது என்று தான் இந்த திரைபடத்தை துவங்குவதற்கு முன்பே அந்த திரைப்பட குழுவினரால் தெரிவிக்கபட்டது. மேலும் ஆதாரபூர்வமான வாழ்க்கை வரலாற்றை தான் திரைப்படமாக எடுக்க இருக்கிறோம் என்று கூறினார்கள்...ஏற்கனவே வந்த தி மெசேஜ் படத்திலும் நபி(ஸல்)அவர்களின் கண்ணோட்டத்தில் காட்சி நகர்வது போன்று தான் இருக்கும். தனியாக அந்த charaterல் யாரும் நடிக்க வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

**மஜிதி மற்றும் இசைஅமைப்பாளர் ஏ.ஆர் இருவரும் சினிமா துறைவில் பல காலமாக இருந்துவருபவர்கள் என்பதை அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சூபித்துவ கொள்கையில் இருக்கும் ராஸா அகாடமி என்ற அமைப்பை பொறுத்தவரை இசை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள். இதே நிலைப்பாட்டில் தான் ஏ.ஆர்.ரஹ்மானும் இருக்கிறார்.

** தர்கா, தர்காவாக  போகக்கூடிய ஏ.ஆர் ரஹ்மானை பற்றி எதுவும் பேசாத இந்த அமைப்பு , இசையை ஆதரிக்கும் இந்த அமைப்பு , முஹம்மது என்ற படத்திற்கு இசை அமைத்த காரணத்திற்காக மீண்டும் கலிமா சொல்ல வேண்டும் என்று மார்க்க தீர்ப்பு வழங்க என்ன அருகதை இருக்கிறது இவர்களுக்கு என்று தெரியவில்லை.

**ராஸா அகாடமி இந்த அமைப்பு கேலிக்கூத்தான மார்க்க தீர்ப்பை வழங்க காரணம் சுய விளம்பரத்திற்காக தான் என்பது தெளிவாக தெரிகிறது.  மேலும்
நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க ராஸா அகாடமி ஃபத்வாவிற்கு மீடியா இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க காரணம் வழக்கம்போல் மக்களின் சிந்தனை மாற்றத்திற்கும் TRPக்கும் தான்.
ஆகவே இதுபோன்றவை ஃபத்வா மார்க்கத்தை கேலிகூத்தாக்கும் செயல் எனவே இதை முஸ்லிம்களான நாம் புறந்தள்ளவேண்டும்.

இந்நிலையில் இந்த பத்வாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்துள்ளார்.



அதில் "முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

நான் அல்லாஹ்வை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று அல்லாஹ் என்னிடம் கேட்டால் நான் என்ன செய்வது...? என்று அப்பாவி தனமாக எதிர்கேள்வி கேட்டு தனது நிலைப்பாடு சரிதான் இதில் என்ன தவறை கண்டீர்கள் என்பது போல் விளக்கமளித்துள்ளார்.

அல்லாஹுடைய மார்க்கமான இஸ்லாத்தில் செய்யகூடாது என்று தடுக்கப்பட்ட ஒன்றை ஏன் செய்யவில்லை என்று அல்லாஹ் எப்படி கேட்பான் என்று  நாம் ரஹ்மானுடன் எதிர் கேள்வி வைக்கலாம். ஆனால் உண்மைய சொல்ல வேண்டும் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் புரிந்துள்ள இஸ்லாத்தில் இசை ஹலால் தான். இவ்வாறு தான் அவர் புரிந்துள்ளார். 

ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை அவர் புரிந்துகொண்ட இஸ்லாத்தை அவர் நேசிக்கிறார் அதற்காக நேரம் ஒதுக்குகிறார் , மார்க்கத்திற்கு முக்கியதும் அளிக்கிறார் என்பதெல்லாம் சரி தான். எனினும் அவர் எந்த அளவிற்கு இஸ்லாத்தின் உண்மையான போதனைகளுக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது விவாதத்திற்குறியதே.

இசை இஸ்லாத்தில் ஹராம் என்பது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தெரியாதா , யாரும் சொல்ல வில்லையா என்றெல்லாம் நம்மில் பலர் பேசிகொள்வதுண்டு.

ஏ.ஆர்.ரஹ்மான் இஸ்லாத்தை தழுவ காரணமாக இருந்தது சூபிசம் கொள்கைவாதிகள் தான் எனவே அதன் அடிப்படையிலே தர்கா இசை பற்றிய பார்வை அவருக்கு இருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானை விடுங்கள் நம்மில் பலருக்கு கூட இசை மார்க்கத்தில் அனுமதிக்கபட்டதா இல்லையா என்ற தெளிவு இல்லை...
காரணம் பெரும்பான்மையானவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் இசை ஹலாலாக இருந்திருக்க கூடாதா என்றே எண்ணத்திலேயே இசைக்கு ஆதரவான ஆதாரத்தை இஸ்லாத்தில் தேடுகிறார்கள்.

சில விஷயங்கள் தெளிவாக இருந்தாலும் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை காரணம் நம் உள்ளம் சத்தியத்தின் பக்கம் இல்லை, மன இச்சைபடியே செல்கிறது என்பதே உண்மை.


அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

Wednesday, September 16, 2015

மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து பதிவிட்ட பா.ஜ.க நிர்வாகி கைது!

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

சென்னை: மக்கா விபத்து குறித்து மகிழ்ச்சி தெரிவித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வேல்முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று மாலை முஸ்லிம்களின் புனித நகரமான மக்காவில் கடும் மணல் காற்று மற்றும் பலத்த மழையின்போது கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் முறிந்து விழுந்தௌ சுமார் 107 ஹஜ் யாத்ரீகர்கள் சஹீதானார்கள்.

உலகையே அதிர்ச்சியடைய செய்த இச்சம்பவத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற பா.ஜ.க நிர்வாகி, "மக்கா சம்பவம் சந்தோஷமான செய்தி" என்று பதிவிட்டிருந்தார். அதனை அவரது நட்பில் உள்ள சிலரும் ஆதரித்திருந்தனர்.


இந்த நிலையில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மத ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாகவும் இருந்த இப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சில சமூக ஆர்வலர்கள் வேல்முருகனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த அஜ்மிர் அலி என்பவர் இந்த குரூர மனப்பான்மை கொண்ட பதிவு குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தார்.


இந்த புகாரின் அடிப்படையில், வேல்முருகனை காவல்துறை கைது செய்தனர். மேலும் இவர் மீது 153,295,(505(1)(C) மற்றும் (505) (2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...