(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, December 21, 2014

ஏன் காந்தியை கொன்ற கோட்சேவிற்கு இவர்கள் சிலை வைக்கிறார்கள்...!

இந்நாட்டின் தந்தை (Father of the Nation) என்று அழைக்கப்பட்ட காந்தியார் இந்து மதவெறிக்கு எப் படிப் பலியானார். ஏன் பலியா னார்? என்பதை வேதனையுடன் நினைவுபடுத்திக் கொள்ள நாம் கடமைப் பட்டுள்ளோம். அதே சமயம் .. இன்று காந்தியை கொன்றவனுக்கு சிலை வைக்கவேண்டும் என்று கொலைகாரகூட்டம் ஏன் விரும்புகிறது என்பதையும் விளங்கிகொள்ள வேண்டும்.

மகாத்மாவின் கொலை என்ற தலைப்பில் பஞ்சாப் உயர்நீதிமன் றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.டி.கோஸ்லா அவர்கள் 1963-இல் ஒரு நூல் எழுதி, 1977 வரை மூன்று பதிப்பு களுக்கு மேல் அது விற்பனை யாகியுள்ளது.

அதில் அவர், காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்ற மராத் திப் பார்ப்பனர், அவருடைய சகோதரர் கோபால் கோட்சே, அவருக்கு மிகவும் உறுதுணை யாக இந்தக் கொலையில் ஒத்துழைத்த நாராயண் ஆப்தே, தத்தாத்ரேயா இவர்கள் எல்லாம் இந்துமத தர்மத்தின்படிதான் இக் கொலையைத் தாங்கள் செய்யத் துணிந்ததாகவும், பகவத் கீதையின் தாக்கத்தின் விளைவு அது என்றும் தெளிவாக நீதி மன்றத்திலே அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். மேற்காட்டிய நூலில் இதை விரிவாக எழுதியுள்ளார் நீதிபதி கோஸ்லா அவர்கள்.



கொலை செய்ததாகவும், கொலை செய்வதற்கான சதியில் ஈடுபட்டதாகவும், ஆயுதங்கள் வெடி பொருள்கள் சட்டத்தின் கீழ்த் தண்டனைக்குரிய குற்றங் களைச் செய்ததாகவும் பின்வரும் எட்டுப் பேர் குற்றம் சாட்டப் பட்டிருந்தனர்.

1. நாதுராம் கோட்சே, வயது 37, ஆசிரியர், ஹிந்து ராஷ்டிரா, புனா.
2. அவருடைய சகோதரர் கோபால் கோட்சே, வயது 27, ஸ்டோர் கீப்பர், இராணுவ டெப்போ, புனா.
3. நாராயண் ஆப்தே, வயது 34. நிர்வாக இயக்குநர், ஹிந்து ராஷ் டிரா, ப்ரகாஷம் லிமிடெட், புனா.
4. விஷ்ணு கர்க்காரே, வயது 37, உணவக உரிமையாளர், அகமத் நகர்.
5. மதன்லால் பாவா, வயது 20, அகதி முகாம், அகமத்நகர்.
6. ஷங்கர் கிஷ்டய்யா, வயது 27, வீட்டு வேலையாள், புனா.
7. தத்தாத்ரேயா பர்ச்சூரே, வயது 49. மருத்துவர், குவாலியர்.
8. விநாயக் சாவர்க்கர், 65, பார்-அட்-லா, நிலக்கிழார், சொத்து உடைமையாளர், பம்பாய்.
கங்காதர் தந்வதி, கங்காதர் ஜாதவ், சூர்யதேவ் சர்மா ஆகிய மூவரும் தலை மறைவாகி விட்டதாகச் சொல்லப்பட்டது.

1948-ஆம் ஆண்டு ஜூன், 24-ஆம் நாள் சாட்சிகள் விசாரணை தொடங்கப் பட்டது. மொத்தத்தில் 149 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர்.திகம்பர் பாட்கே என்பவர் அப்ரூவராக மாறிச் சாட்சிய மளித்தார். சாட்சிகள் விசாரணை நவம்பர் 6-ஆம் நாள் நிறைவடைந்தது.

1949-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் நாள் தீர்ப்பு வழங்கப் பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்களில் சாவர்க்கர் விடு விக்கப்பட்டார். நாதுராம் கோட்சே, அவரது நண்பர் நாராயண் ஆப்தே ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. தண்டனை பெற்ற ஏழு பேரின் சார்பாகப் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை குறித்துக் கோட்சே எதிர்ப்புத் தெரிவிக்க வில்லை. கொலை செய்வதற் கான சதி நடைபெற்றது என்பதை மறுப்ப தாகவே கோட்சேயின் மேல்முறையீடு அமைந் திருந்தது. காந்தியின் கொலைக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு இல்லையென்றும் கோட்சே உறுதியாகத் தெரிவித்தார்.
(அப்போது தான் ஆர்.எஸ்.எஸ் சை காப்பாற்ற முடியும்)

உயர்நீதிமன்றத்தில் 1949-ஆம் ஆண்டு, மே 2-ஆம் நாள் மேல் முறை யீட்டின் மீதான விசாரணை தொடங் கியது. தனக்காக வழக்குரைஞர் வாதாடு வதை நாதுராம் கோட்சே ஏற்றுக் கொள்ளவில்லை. தனக் காகத்தானே வாதாடுவதற்கு அனுமதிக் குமாறு நாதுராம் கோட்சே கேட்டுக் கொண்டார்.

 நாதுராம் கோட்சேயின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வழக்கறிஞர் வைத்து வாதாடும் அளவுக்கு வசதி இல்லாத ஏழை என்று கோட்சேயைப் பற்றிச் சொல்லப்பட்டது உண்மையல்ல; துணிச்சல் நிறைந்த தேச பக்தன் என்றும் இந்துமதக் கொள்கையில் வெறியுடையவன் என்றும் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனக்கு வழக்கறிஞர் தேவை யில்லை என்று அவர் தெரிவித்தார் என்பதுதான் உண்மை.
இந்துப் பண்பாட்டையும் இந்துக்களி டையே ஒற்றுமையை யும் காப்பதற்கு உறுதிபூண்ட ஓர் அமைப்பாகிய ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்.) நாதுராம் கோட்சே தனது 22-ஆம் வயதில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு புனாவில் குடியேறினார். அங்கிருந்த போது இந்து மகாசபையின் உள்ளூர்க் கிளைச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். அய்தராபாத் நிஜாமின் முஸ்லிம் அரசு இந்துக்களின் உரிமை களைப் பறிப்பதாகச் சொல்லப்பட்டு அதனால் நடைபெற்ற ஒத்து ழையாமை இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.அதற்காகக் கைது செய்யப்பட்டுச் சில காலம் சிறைத் தண்டனையும் பெற்றி ருந்தார்.

இப்பொழுது நாதுராம் கோட்சே இந்து மதம் சார்ந்த அரசியலில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். நாட்டு வரலாறு, சமுதாய வரலாறு ஆகியவற்றை ஆழமாகப் படித்தார். ஏற்றுக் கொண்ட கொள்கைக்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள முடிவு செய்தார். பூனாவிலிருந்தபோது நாராயண் ஆப் தேயைக் கோட்சே சந்தித்தார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண் டிருந்த ஆப்தே அகர்னி என்ற செய்தித் தாளைத் தொடங்கினார். அகர்னி என்ற பெயர் பின்னாளில் ஹிந்துராஷ்டிரா என்று மாற்றப்பட்டது. முஸ்லிம்களுக்கு இணக்க மாகக் காந்தியார் பேசியதையும் ஜின்னாவின் கோரிக்கைகளுக்குக் காந்தியார் இணங்கிப் போவதையும் கோட்சே கடுமையாக எதிர்த்தார்.

இஸ்மாயில் என்று பச்சை குத்திகொண்டு - முஸ்லீம்கள் போல் கத்னா செய்து கொண்டு .. காந்தியை கொலை செய்த அயோக்கியன் - தீவிரவாதிக்கு இன்று  ஊர் ஊராக சிலை வைக்க வேண்டும் என்று கொக்கரிகிறது பார்பனிய கூட்டம்... 

கோட்சே கூறுகிறான் :

காந்திஜி இல்லாத இந்திய அரசியல், நடைமுறை சாத்தியமானதாக, பதிலடி கொடுக்கத் தக்கதாக, ஆயுத சக்திகளுடன் கூடிய ஆற்றல் மிகுந்ததாக இருக்கும் என உறுதியாக நம்பினேன். என்னுடைய எதிர் காலம் முழுமையாகப் பாழாகிவிடும்; ஆனால், பாகிஸ்தானின் ஊடுருவலிலிருந்து நாடு காப்பாற்றப்படும்; இதில் அய்யப்படுவதற்கு எதுவுமில்லை.
மக்கள் என்னை அறிவில்லாதவன் என்றோ முட்டாள் என்றோ அழைக்கலாம். ஆனால், வலிமையானதாகத் தேசம் உரு வாவதற்குத் தேவையென நான் நினைக் கின்ற அறிவார்ந்த வழிமுறை களைக் கடைப் பிடிப்பதற்கு உரிய உரிமை கிடைத்துவிடும். இதைப்பற்றியெல்லாம் முழுமையாக எண்ணியபிறகு நான் இறுதியாக முடிவெடுத் தேன்; ஆனால், எனது முடிவைப் பற்றி நான் யாரிடமும் பேசவில்லை.(ஆர் எஸ்.எஸ் காப்பற்ற) என் இருகைகளிலும் துணிச்சலைத் தேக்கினேன்; பிர்லா மாளிகையில், பிரார்த்தனைத் திடலில் 1948, ஜனவரி 30-ஆம் நாள் துப் பாக்கியால் காந்திஜியைச் சுட்டேன்.

இனி, நான் சொல்வதற்கு எதுவும் இல்லை; மனிதர்களால் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்திற்கு அப்பால் வெறொரு நீதி மன்றம் இருக்கு மானால் அங்கு என்னுடைய செயல் அநீதியானது என்று சொல்லப்பட மாட்டாது என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது. சாவுக்குப்பிறகு செல்வதற்கு அப்படிப்பட்ட ஓர் இடம் இல்லை என்பதால் அதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மனித குலத்தின் நன்மையைக் கருதியே அந்தச் செயலை நான் செய்ய நேர்ந்தது. இலட்சக்கணக்கான இந்துக் களுக்கு அழிவைத் தருகின்ற கொள்கையைக் கொண்டிருந்த ஒருவரைத்தான் துப்பாக்கி யால் நான் சுட்டேன்.

 -இவ்வாறு கோட்சே உயர்நீதிமன்ற மேல்முறையீட்டில் தனது வாக்கு மூலத்தைக் கூறிமுடித்தார்.

மதவெறி மோதல்களை உருவாக்கி நாட்டை - இந்துநாடு என்று அறிவிப்பதே இந்த காவி தீவிரவாதிகளின் ஒரே குறிக்கோள் ... அதே நிறைவேற்ற என்ன சூழ்ச்சிகளையும் செய்வார்கள் ...

படைத்தவன் அதைவிட சூழ்ச்சிகாரன்... அல்லாஹ்வே நமக்கு போதுமானவன்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் எங்கிருந்து வந்தேறினார்கள் ?. வரலாற்று குறிப்பு.

- பொறியாளர் பி.கோவிந்தராசன்
ஆரியர்கள் உருவாக்கியது தான் வேதமதம். இந்த  மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை(?) உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.
அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்:
ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்றாளர், “History” என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். சமீபத்தில் இவரும் இவரது நண்பர் நாத்திகர் டாக்டர் சூசன்பிளாக்மோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை பெரியார் திடலில் சந்தித்து உரையாடினார். (விடுதலை நாளிதழ் 4.2.2012) 
ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vidic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and Shiva the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana (கலைஞர் தொலைக்காட்சியில் எனது நேர்காணலில் நாள்: 02.09.2011 சொல்லியவை)
மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு. ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (சிவன்) போன்ற உபக்கடவுள்களையும், அவர்களின் மனைவிகளையும் உள் அடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள், இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது...
பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்:
சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.
பாரசீக மொழியும் ஆரியரும்:-
வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார் மற்றும் அதன் உட்பிரிவான இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப்பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகள் தருகின்றன.
அவைகள் கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது)
1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாம் இந்தியாவுக்கு பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுதது வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.
2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈராணியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.
3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.
4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600அய்ச் சார்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு.1400 சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.
5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேணு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைப்பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.
6. இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
7. பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.
8. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.
9. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.
10. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.
11. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது.  இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
12. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், நிணீஹ்ணீ/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.
13. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிததலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.
14. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை,  முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹுமாயுன் / முகலாயர் காலத்தல் படைவீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது) (Camp=  பாசறை).
15. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.
16. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.
முடிவுரை:
1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தியால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப்படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.
2. பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.
3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
4. Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.
5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.
6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”
7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க்மேனிஸ்தான்) இருந்து வந்தார்கள் என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டு கழகமும் போற்றுதலுக்குரியவர்கள்.

Monday, November 24, 2014

பரோலில் வந்துள்ள சகோ. அப்துல் காதர் அவர்களுக்கு நிக்காஹ்.

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)....

நாகூரை சேர்ந்த அப்துல் காதர் என்ற சகோதரர் கடந்த பதினைந்து ஆண்டுகளாக விசாரணை கைதியாக  சிறையில் இருந்து வருகிறார்...

இந்நிலையில் தற்போது பத்து நாள் பரோலில் வந்துள்ளதையடுத்து அவருக்கு திருமண ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அருளால் நேற்று நிக்காஹ் என்னும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது...

பாரகல்லாஹ்.. 

இந்த சகோதரரின் நிரந்தர விடுதலைக்காகவும் இன்னும் விசாரணை கைதியாக தங்கள் வாழ்நாளை சிறையில் களித்து கொண்டிருக்கும் சகோதரர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் இன்ஷால்லாஹ்  பிரார்த்திப்போம்.  






Thursday, November 20, 2014

தமிழகத்தில் ஜனவரி முதல் நேரடி சிலிண்டர் மானியம் – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி முதல் சமையல் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1 முதல் சமையல் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கே வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுளள இந்த திட்டம் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது, முழு தொகையையும் செலுத்த வேண்டும். பதிலுக்கு அவர்களுக்கான மானியத் தொகையை அரசு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும். 


இந்த மானியத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரத்தை எரிவாயு முகவர்களிடம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : ஒன் இந்தியா.

Sunday, November 9, 2014

நாகூரை சேர்ந்த சகோதரி ஷஃபீரா அனீக்கா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

விமான நுட்பப் பொறியியல் என்று வழங்கப் படும் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங் படிப்பில் அண்ணா பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஷஃபீரா அனீக்கா என்ற மாணவி. தமிழகத்தின் நாகூரைச் சேர்ந்த அவருக்கு வாழ்த்துகள் கூறி ஒரு சிறு நேர்காணல் செய்தோம்.
ஷஃபீரா அனீக்கா, தமிழக முஸ்லிம் உலகின் கண்ணதாசன் என்று கருதப்படும் மறைந்த கவிஞர் நாகூர் சலீம்தம் பேத்தியாவார் என்பது சிறப்புக் குறிப்பு.


சிங்கையிலிருந்து கணிப்பேசி வழியாக தனது சிறிய தகப்பனார் ஜாஃபர் சாதிக் முன்னிலையில் அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:

வாழ்த்துகள் சகோதரி ஷஃபீரா!  இந்தப் படிப்பு (ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரீங்) பற்றி சொல்லுங்களேன்

"ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் என்பது புவி எல்லைக்குட்பட்ட பறக்கும் இயந்திரங்கள் குறித்த, அவற்றின் கட்டுமானங்கள் குறித்த படிப்பாகும். பறக்கும் இயந்திரங்களின் வடிவமைப்பு, வேகம் என்பனவற்றில் மேலும் மேலும் முன்னேற்றம் காணத்தக்க வகையில் இக்கல்வி அளிக்கப்படுகிறது. இதில், ஏரோ ஸ்பேஸ் இஞ்சினியரிங் என்பது புவி எல்லைக்கு அப்பால் செல்லும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்கள் பற்றிய அறிவைத் தரும் வேறு ஒரு பிரிவாகும்.

இன்றைக்கு தொழிற்நுட்பம் வளர்ந்துவரும் வேகத்தில், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் முன்னேற்றம் வழிகோலப்படுகிறது. மானுடத்திற்கு இதில் பெரும் தேவையுண்டு!".

உங்களின் இச்சாதனையில் என்ன சிறப்பம்சம்?

"சிறப்பம்சம் என்று கேட்டால், இயந்திரப் பொறியியலின் கீழ் வருகிற 'ஆண்கள் மட்டுமே படிக்கத்தக்கப் படிப்பு' என்று பொதுவாகக் கருதப்படுகிற இந்தப் படிப்பில் நானும் - ஒரு முஸ்லிம் பெண்ணாக - படித்துச் சாதித்திருப்பதுதான். ஏராளமானோர் 'ஆண்கள் மட்டுமே படிக்கத்தக்கப் படிப்பில் நீ ஏன் சேர்ந்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அவ்வளவு ஏன், எங்கள் வகுப்பில் கூட நாங்கள் நால்வர் மட்டுமே பெண்கள். அதிலும் நான் மட்டுமே முஸ்லிம் பெண் - ஹிஜாப் என்னும் இஸ்லாமிய ஆடை அணிந்து படித்துவந்தேன்"

உங்கள் பெற்றோர், உறவினர்கள் எந்த அளவுக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்தார்கள்?

"மிகப்பெரும் ஊக்கம் அளித்தார்கள். அதிலும் என் தகப்பனார் அவர்கள் இந்தப் படிப்பை எனக்கு அறிமுகப்படுத்தி இதில் எனக்கிருக்கும் ஆர்வத்தைக் கண்டு தொடர்ந்து படிக்க ஊக்கமளித்தார்கள். என் தாயாரும் தகப்பனாரும் அளித்த உறுதுணை மிகவும் போற்றத்தக்கது. அதுபோன்று, என் குடும்பத்தார்கள், உறவினர்கள், குறிப்பாக என் சின்னாப்பா ஜாஃபர்சாதிக் அவர்கள் அளித்த ஊக்கமும் அளப்பரியது."

மகிழ்ச்சி; உங்கள் ஆசிரியர்களின் பங்களிப்பைப் பற்றியும் சொல்லுங்களேன்

"அருமையான ஆசிரியர்கள்; வெறும் ஏட்டுக் கல்வி மட்டுமே போதிக்காமல், பலப்பல செய்முறை விளக்கங்களையும், சம்பந்தப்பட்ட படிப்புக்கான தேடல்களையும் அளித்தார்கள். அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்"

நல்லது, இந்தப் படிப்புக்கான எதிர்காலம், வாய்ப்புகள் பற்றி சொல்லுங்களேன்!

"மிகப் பிரமாதமான எதிர்காலம் இருக்கிறது. விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது, உதாரணமாக, இலண்டனிலிருந்து அமெரிக்க நகரங்களுக்கு விமானத்தில் செல்ல 10 மணி நேரங்கள் பிடிக்கிறது என்றால் அதை 4 மணியாகக் குறைக்கும் அளவுக்கு விமானங்களின் வேகத்தைக் கூட்டுவது பற்றியெல்லாம் ஆராயலாம். மேலும் போர்விமானங்கள் இன்றைக்குத் தேசப் பாதுகாப்பின் தவிர்க்க இயலாத அம்சங்களாகிவிட்டன. அவற்றிலும் ஆராய்ச்சி செய்வதன் மூலமாக தேசப் பங்களிப்பும் செய்யலாம்."

உங்களுடைய அடுத்தக் கட்ட படிப்புகள் பற்றி

"மேல்நிலைப் படிப்பைத் தொடர்வதுடன், அரபு மொழியில் புலமை பெறவும் திட்டமிட்டுள்ளேன். அதன்மூலம் குர்ஆனில் வேற்றுக் கிரக வாசிகள் குறித்து கூறப்படுபவற்றிலும் ஆராய்ச்சி செய்யப் போகிறேன். அதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரையும் எழுதி வருகிறேன்"

மகிழ்ச்சி, நீங்கள் எழுதும் அந்தக் கட்டுரையை அனுப்பி வைக்க இயலுமா?

"நிச்சயமாக, எழுதி முடித்ததும் அனுப்பிவைக்கிறேன்"

நல்லது சகோதரி, முஸ்லிம் பெண்கள் கல்வியில் பெரிதும் பின்தங்கி இருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன? முஸ்லிம் சகோதரிகளுக்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?

"ஆம், எந்தச் சூழ்நிலையிலும் கல்வியைக் கைவிட்டு விடக் கூடாது;  பொதுவாக, முஸ்லிம் பெண்கள் படித்து என்ன ஆகப் போகிறது என்ற மனப்பான்மை நிலவுகிறது. மேலும் சவூதி போன்ற அரபுநாடுகளின் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாகப் பார்க்கும் நிலையும் இருக்கிறது. இவை தவறானவை.
சில முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம் பெண்கள்  வாகனம் ஓட்டவும் அனுமதி இருப்பதில்லை. ஆனால் இஸ்லாமிய வரலாற்றில் நபித்தோழியர் பெண்கள் வாளேந்தி போர்புரிந்துமிருக்கிறார்கள். ஆகவே, அரபுநாடுகளின் கலாச்சாரத்தை இஸ்லாமிய கலாச்சாரமாகப் பார்க்கக்கூடாது; முஸ்லிம் பெண்கள் கல்வியில் சிறக்க வேண்டும். தங்கள் அடையாளத்தை விட்டுவிடக் கூடாது. கல்விதான் சிறந்த அடையாளம்"

"அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி, வாழ்த்துகள். நீங்கள் மென்மேலும் வாழ்வில் உயரங்களை அடைய பிரார்த்தனைகள்!"

நேர்காணல் : இ.ஹ

நன்றி : இந்நேரம்.காம்.

ரேஷன் கார்டுகளில் ஒரு ஆண்டிற்கு மீண்டும் உள்தாள்

ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்க, கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. எனவே, தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டில், மீண்டும், உள்தாள் ஒட்டி, அடுத்த ஆண்டு வரை நீட்டிக்க, தமிழக அரசு, முடிவு செய்து உள்ளது.

தமிழகத்தில், அரிசி கார்டு, சர்க்கரை கார்டு, காவலர் கார்டு என, மொத்தம், 1.98 கோடி, ரேஷன் கார்டுகள் உள்ளன.ரேஷன் கடைகளில், குறைந்த விலையில், உணவு பொருட்களை வாங்கவும், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் பெறவும், ரேஷன் கார்டு, முக்கிய ஆவணமாக திகழ்கிறது.தமிழகத்தில், உணவு வழங்கல் துறை சார்பில், கடந்த, 2005ல், ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ல் நிறைவடைந்தது.அதன்பின், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, அவற்றின் செல்லத்தக்க காலம், ஆண்டுதோறும், நீட்டிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, வரும் டிசம்பர் வரை, ரேஷன் கார்டு, செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.



'போலி ரேஷன் கார்டுகளால், அரசு செலவு அதிகரிப்பதை தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு, 2012ல் அறிவித்தது.ஆனால், அறிவிப்பு வெளியானதோடு சரி, அதற்கான பணிகளில், அரசு, அக்கறை காட்டாததால், இதுவரை, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.

மத்திய அரசு, தமிழகத்தில், விழி, விரல் ரேகை; புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, ஆதார் அடையாள அட்டை வழங்கி வருகிறது. மத்திய அரசிடம் இருந்து, மேற்கண்ட விவரங்களை பெற்று, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்க, தமிழக அரசு, முடிவு செய்தது.இதையடுத்து, 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு'; ரேஷன் கடையில், 'ஸ்மார்ட்' கருவி; சர்வர் மையம் உள்ளிட்ட, ரேஷன் கடையின் ஒருங்கிணைந்த அனைத்து பணிகளையும், தனியார் நிறுவனம் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.இந்த பணிகளை செய்யும், தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்ய, தமிழக அரசு, கடந்த, செப்., 16ம் தேதி, ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டது.இதையடுத்து, அதே மாதம், 18ம் தேதி, 'டெண்டர்' அறிவிப்பு வெளியாகி, அக்., 20ம் தேதி, 'டெண்டர்' நடத்த முடிவு செய்யப்பட்டது.

'டெண்டர்' தேதியை நீட்டிக்க, தனியார் நிறுவனங்கள், அரசுக்கு, கோரிக்கை விடுத்ததை அடுத்து, இம்மாதம், 12ம் தேதி வரை, 'டெண்டர்' தேதி நீட்டிக்கப்பட்டது.ஆனால், டிசம்பர் முடிவடைய, இன்னும், ஒரு மாதம் மட்டுமே எஞ்சி இருப்பதால், 'டெண்டர்' பணிகளை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.இதனால், ஜனவரி முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது, புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி, ஓராண்டிற்கு நீட்டிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

'டூப்ளிகேட் கார்டு'

தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டு வழங்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், பெரும்பாலான கார்டுகள், கிழிந்து, கந்தல், கோலமாக உள்ளன.எனவே, அவற்றில், உள்தாள் ஒட்ட வசதி இல்லை என்றால், சென்னையில், உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகம்; மாவட்டங்களில், வட்ட வழங்கல் அலுவலகங்களில், கிழிந்த கார்டை கொடுத்து விட்டு, அதற்கு பதில், 'டூப்ளிகேட் கார்டு' பெற்று கொள்ளலாம்.
தாமதத்திற்கு காரணம் என்ன?


உணவு மற்றும் கூட்டுறவு துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மத்திய அரசின், ஆதார் அட்டை விவரங்கள் அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட இருக்கிறது.'டெண்டர்' விவரங்களை, தமிழக அரசின் தலைமை செயலர் தலைமையிலான மூத்த அதிகாரிகள் குழு தான், இறுதி செய்யும்.இந்த பணிகள், ஒரு மாதத்திற்குள் முடிய வாய்ப்பில்லாததால், அடுத்த ஆண்டிற்கும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டப்பட்டு, செல்லத்தக்க காலம், அடுத்த டிசம்பர் வரை, நீட்டிக்கப்பட இருக்கிறது.அடுத்த ஆண்டு, ஏப்ரல் அல்லது ஜூலையில், பழைய கார்டுகள், திரும்ப பெற்று கொண்டு, 'ஸ்மார்ட் கார்டு' வடிவில், ரேஷன் கார்டு வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Related Posts Plugin for WordPress, Blogger...