(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, September 30, 2010

உங்கள் செல்போன் உரையாடல்கள் record செய்யப்படலாம்- எச்சரிக்கை !!

"நெட்மூலம் பகிரங்கமாகிக்கிட்டு இருக்கும் என் மானத்தை நக்கீரன்தான் காப்பாத்த ணும்'’’என்றபடி நம்மிடம் கண்ணீருடன் வந்தார் அந்த இளம் குடும்பத்தலைவி. துணைக்கு தன் அக்காவையும் அழைத்துவந்திருந்த அவரிடம் ஏகத்துக்கும் பதட்டம்.

"முதல்ல கவலையை விடுங்க. என்ன பிரச்சினை?  உங்க படத்தை யாராவது...?'’ என நாம் முடிக்கும் முன்பே...

""இல்லைங்க. எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம்தான் ஆகுது. கல்யாணமான நாலாவது மாசமே என் கணவர் குவைத் போயிட்டார். என் மேல் அளவுகடந்த காதல் அவருக்கு. அதனால் இரவு நேரங்கள்ல எங்கிட்டே ரொமாண்டிக்கா பேசுவார். என்னையும் அவர் அளவுக்கு பேசவைப் பார்..''’சொல்லும்போதே அவர் கண்கள் சங்கடம் கலந்த பயத்தில் தவித்தது. அவரைத்தேற்றும் விதமாக நாம்.. ‘

"சரி விடுங்க. இது பல இடங்கள்ல நடக்கு றதுதானே... இதில் என்ன பிரச்சினை?'’ என்றோம்..

அந்த குடும்பத் தலைவி, அடுத்து சொன்ன தகவல் நம்மை ஏகத்துக்கும் அதிரவைத்தது.

""அவரும் நானும் ரொமாண்டிக்  மூடில் எல்லை மீறி பேசிய கிளுகிளு பேச்சுக்கள்... இப்ப இண்டர் நெட்டில் வருதாம். யாரோ ஒரு கிரிமினல் பேர்வழி... எங்களுக்கே தெரியாமல்... எங்க பேச்சை ரெக்கார்டு பண்ணி... இப்படிப் பண்ணியிருக் கான். இதை என் வீட்டுக்காரர்தான் பார்த்துட்டு... அதிர்ந்துபோய்... எனக்குத் தகவல் சொன்னார். கூடவே "நக்கீரன்ட்ட உதவி கேள்'னும் சொன்னார். அதான் வந்தேன்''’என்று நம்மை அதிரவைத்த வர்... அந்த இணையதள முகவரியையும் நம்மிடம் கொடுத்தார்.

அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்த நாம்... அவர் சொன்ன விவகாரமான இணையதளத் தை கவனித் தோம்.

கணவன்- மனைவிகள், காதல் ஜோடி கள், கள்ள உறவு ஜோடிகள் என பலதரப்பட்ட ஆண் -பெண்களின் லச்சையற்ற அப்பட்டமான உரையாடல்கள்... அங்கே பதியப்பட்டிருந்தன. காதுகள் கூசும் அளவிற்கு... பலரும் தங்களது அந்தரங்க உணர்வுகளை யார் கவனிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில்..


நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம்.

பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ... ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு...  ""இந்த மாதிரி யான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை... நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. 

இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா... யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க... நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு.

மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், "உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்'னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம்''’என்றார் விரிவாக.


வழக்கறிஞரான ரமேஷ்கிருஸ்ட்டி நம்மிடம் ""சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித் தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ... அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா... அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல்... இன்னொரு விஷேச ஆண்ட னாவையும் அங்க விக்கிறாங்க. அந்த  மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும்... அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும்  ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க  20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம். நாடு எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான டேஞ்சரஸ் விவகாரங்களை உடனே அரசாங்கம் தடுக்கணும்'' என்றார் கவலையாக.

சென்னையில் உள்ள சைபர் க்ரைம் பிரிவு ஏ.சி. சுதாகரிடம் இதுபற்றி நாம் கேட்டபோது...’""மொபைல்ல சாஃப்ட்வேர்ஸ் இன்ஸ்டால் பண்ணி ரெக்கார்ட் பண்ணிக்கறது அவுங்களோட தனிப்பட்ட விருப்பம். ஆனா அத வச்சி மிரட்டறது, வெளியிட றது குற்றம். இதுக்கு கடுமையான தண்டனையுண்டு. நம் பேச்ச மொபைல் கம்பெனிங்க ரெக்கார்ட் பண்ண வாய்ப்பு குறைவு.  குளோனிங் சிம், மினி ஆண்டனாவெல்லாம்  புது விவகாரமா யிருக்கு. இதனால பெரிய பிரச்சினைகள் வர்றதுக்கு வாய்ப் பிருக்கு. நாங்க இத தீவிரமா கண்காணிக் கிறோம்''’ என்றார் உறுதியான குரலில்.

மொபைல் போனில் பேசும் முன் யோசித்து பேசுங்கள். இல்லையேல்.... உங்கள் அந்தரங்கமும் நாளை உலகமெங்கும் உலா வரலாம். 


நன்றி : haja mohamed.

Sunday, September 26, 2010

நமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்...!! முடிவிற்கு வருமா ?

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)..


அன்பு சகோதர்களே !

சமீபகாலமாக நமதூரிலே எப்போதும் இல்லாத அளவிற்கு திருட்டு சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன..

முன்பெல்லாம் எப்போதாவது அங்கொன்றும் , இங்கொன்றுமாக அரிதாக நடக்கும் PART TIME JOB ஆக இருந்த திருட்டு தொழில் இப்போது FULL TIME JOB ஆக மாறி இருக்கிறது...



வாரம் வாரம் திருட்டு வாரம் என்று சொல்லும் அளவிற்கு வாரம் ஒரு திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

திருடர்களின் இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றால் முழுமூச்சாக நின்று முயற்சி எடுத்து திருடர்களை பிடிப்பதில்லை..

இன்னும் சிலர் பணம்-காசு ஒன்னும் போகல.. சும்மா வீட்ல இருந்த சாமான தான் எடுத்துட்டு போய்கிறான் கள்ளபைய என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொள்கிறார்கள். அதிகபச்சம் பார்த்தல் திருட்டு நடந்தால் போலீஸ்ட கம்பிளைன்ட் பண்ணியாச்சு என்று சொல்லி விட்டு சும்மா இருந்து விடுகிறார்கள்.

சிலர் அதுவும் செய்வதில்லை, இன்னும் சிலர் தங்கள் வீட்டில் திருட்டு போன பொருளை கூட சொல்ல மாறுகிறார்கள் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்ற நோக்கத்தில்..
திருடனுக்கு தெரிந்தாலும் பரவாயில்லை அடுத்த வீட்டுக்கு தெரிய கூடாது என்று நினைகிரார்களோ என்னவோ ...

போலீசை பொருத்தவரை பெரும்பாலும் நம்ம ஏரியா திருடர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்கள் தான். கம்பிளைன்ட் கொடுத்ததோட சேரி ரெண்டுநாள் ENQUIRY செய்துவிட்டு அடுத்த கேசுக்கு போய்டுவாங்க.. அதிகபச்சம் பாத்தா எப்பயாவது ஒருத்தன புடுச்சி பெருமைபட்டு கொள்வார்கள்.

இதுல ஊர் பாதுகாபிற்கு " குர்கா" வேறு இவர் ஒரு தெருவுக்கு உள்ளே போகும்போதே நான் வரேன் திருடா ஓடு என்று சொல்வது போல் விசிலடித்து கொண்டே போறாரு.. திருடனை பொறுத்தவரை டைமாச்சுALERT அ வேலைய முடிச்சிட்டு கெளம்பு என்பதை போன்று தான் இந்த விசுலு என்று என்ன தோன்றுகிறது.

இவ்வாறு போலீசும், குர்கா ஏதும் செய்யவில்லை என்பதனால் திருடர்களுக்கு நமதூரில் நல்ல தீனி கிடைக்கிறது எந்த பயமும் இல்லாமல்..


இப்போது நடந்து வரும் இந்த திருட்டு சம்பவங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு - திருடப்பட்ட அணைத்து வீடும் பூட்டி கடந்த வீடுகள்.. ஒவ்வொரு வீட்டையும் நன்கு நோட்டமிட்டு வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு பதட்டம் இல்லாமல் ரூம் போட்டு தங்குறமாதிரி தங்கி இருந்து திருடுகிறார்கள்.

இந்த திருட்டில் ஒருவரோ , இருவரோ இல்லை நிச்சயம் ஒரு திருட்டு கும்பலுக்கே இதில் பங்கு இருக்கிறது என்பது நடந்த நிகழ்வுகள் பிரதிபலிகின்றன.

இதுபோன்ற திருட்டை தடுக்க இன்ஷால்லாஹ் நாம் ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

"அஹ ஊட்ல தானே திருட்டு போனுசி நம்ம ஊட்ல இல்லைல" என்று சுய நலத்தோடு இருபது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல.. தனக்கு விரும்பியதை தனது சகோதரனுக்கும் விரும்பும் வரை ஒருவன் உண்மையான முஸ்லிமாக இருக்க முடியாது என்பது நபி (ஸல்) அவர்களின் வாக்கு.

நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை வருமாறு :


1 . வீட்டை பூட்டி விட்டு வெளியவோ , வெளி ஊருக்கோ சென்றால் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் சொல்லிவிட்டு போக வேண்டும். இங்கே போறோம்  , இத்துண நாளுல வருவோம் என்று சொல்லி விட்டு போகும் பழக்கம் வேண்டும். தேவைபட்டால் வீட்டு சாவியை கூட கொடுத்து கவனித்து கொள்ள சொல்லலாம்.

2 . அது போன்று நாம் வீட்டில் இருக்கும்போதோ இரவு படுத்திருக்கும் போதோ அக்கம் பக்கம் ஏதும் சப்தம் கேட்டால் என்ன , ஏதுனு பாக்கணும் எனகென்ன என்று இருக்க கூடாது.குறைந்தபச்சம் போனிலாவது தொடர்பு கொண்டு விசாரிக்கணும்..

3. ஊரில் இருக்க கூடிய சகோதர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தெருவுல தேவ இல்லாம சுத்திகிட்டு இருப்பானுங்க மூஞ்ச பாத்தாவே தெரியும்.. இவர்களை கவனத்தில் கொள்ள வேண்டும் இதை இங்கே குறிப்பிட காரணம்.. பீரோடும் தெரு , பொறையாதா கடைதெரு, வாணகார தெரு ,தெற்கு தெரு,சாமுதம்பி மரைக்காயர் தெரு போன்ற பகுதிகளில் தான் அதிக திருட்டு சம்பங்கள் நடக்கின்றன.

இந்த ஏரியாக்களில் இரவு நேரங்களில் கவனித்து பார்த்தால் சம்மந்தமில்லாத ஆசாமிகள் சிலர் நடந்தும் , வண்டியிலும் , ஷேர் ஆட்டோவிலும் வலம் வருகிறார்கள்.. இவர்கள் மேல் தான் பலத்த சந்தேகம் வருகிறது.

4 . இரவு நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் சகோதர்கள் தமது பகுதியில் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் செலுத்தினால் இரவு நேரங்களில் பாதுகாப்பு சூழல் ஏற்படலாம்.

5 . திருட்டு நடந்தால் அதை செய்தவர்களை பிடிக்க எடுக்கும் முயற்சியை தளர்த்த கூடாது.காவல் துறைக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். நம்முடைய பேச்சு எடுபடவில்லை என்றால் யாராவது ஊர் பிரபலங்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மூலமாவது நெருக்கடி கொடுத்து திருடர்களை பிடிக்க நெருக்கடி கொடுக்க வேண்டும்.

சமீபத்தில் நாகையில் ஒரு டாக்டர் வீட்டில் திருடிய குப்பலை  காவல் துறை கைது செய்துள்ளது. டாக்டர் வீட்டில் திருட்டு போனதால் நெருக்கடியால் காவல் துறை துரிதமாக செயல்பட்டுள்ளது.

6 . பின்தங்கிய கிராமங்களில் கூட திருட்டு சம்பவங்கள் நடப்பதில்லை காரணம் பஞ்சாயத்து - கட்டுப்பாடு என கட்டுகோப்பாக இருக்கிறது.
இதுபோன்ற ஒரு பிரச்சன என்றால் எடுத்து செல்ல நாகூர்ல ஒரு பொதுவான ஜமாஅத் இல்ல.. மார்க்க விஷயத்தில தான் தனி தனியா இருக்கிறோம். பொது பிரச்சனையிலாவது ஒற்றுமையா இருக்கலாம்னு பாத்தா அதுவும் முடிய மாட்டேங்குது.இதை வளரும் தலைமுறை இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு எச்சரிக்கை :


ஒரு கும்பல் வியுகம் அமைத்து , அமைதியாக ஒவ்வொரு வீடாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆட்டைய போட்டுக்கிட்டு இருக்கு... போலீஸ் புடிகிறோம், நெருங்கிட்டோம் என்று சொல்லி கொண்டு இருகிறார்கள்..

இதுவரை அந்த திருடர்களை பிடித்தபாடில்லை அவர்களும்
திருட்டை நிறுத்தியபாடும்மில்லை..

என்ன செய்ய போகிறோம் ??

NAGOREFLASH

Wednesday, September 22, 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும் - நாம் செய்ய வேண்டியதும் !!

அன்பு சகோதரர்களே....

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)

இந்தியா முழுவதும் பதட்டம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.. டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத் , பாம்பே என முக்கிய நகரங்கள் பீதியில் இருந்தன.காரணம் பாப்ரி மஸ்ஜித் விவகாரம் இறுதி தீர்ப்பு சென்ற  வெள்ளிகிழமை வெளியாக இருந்தது.

இந்நிலையில் வெள்ளிகிழமை வழங்கப்படுவதாக இருந்த அயோத்தி தீர்ப்பின் நிலை செப்டம்பர் 28 ல் முடிவு எடுக்கபடும் என்று    உத்தரவிட்டது  உச்சநீதிமன்றம்.
செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவிக்கப் போகும் உத்தரவைப் பொறுத்தே அயோத்தி தீர்ப்பின் எதிர்காலம் இருந்தது. அதன் படி  இன்று அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து வரும் 30ம் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கவுள்ளது.


60 வருடங்களாக நடந்து வரும் இவ்வழக்கு இப்போதாவது முடிவை எட்டும் என்று பார்த்தல் தள்ளி கொண்டே போகிறது...

நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் முடிவு எட்டுமா அல்லது மீண்டும் பதட்டத்தை கருத்தில் கொண்டு இழுத்தடிக்க படுமா என்று தெரியவில்லை..

எப்போது தீர்ப்பு வந்தாலும் , எப்படி தீர்ப்பு வந்தாலும் முஸ்லிம் சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இதில் யாருக்கு சாதக பாதகமாக இருந்தாலும் பாதிப்பு என்பது இஸ்லாமியராக இருக்கும் நமக்குத்தான் என்பதை கடந்த கால சம்பவங்களில் நாம் கண் கூடாக கண்ட மறுக்க முடியாத உண்மையாகும் .ஆதலால் தீர்ப்புகளின் எதிர் விளைவுகளை நாம் எதிர் கொள்ள ஆயத்தமாகவேண்டும்.

தீர்ப்பை பொறுத்தவரை கீழ்காணும் மூன்று வகைகளில் ஏதாவது ஒரு வகையில் தீர்ப்பு அமையும் என்று எதிர்பாக்கபடுகின்றது

தீர்ப்பு 1 : முஸ்லிகளுக்கு சாதகமான தீர்ப்பு - (மீண்டும் மஸ்ஜித் கட்டலாம் )
தீர்ப்பு 2 : ஹிந்துத்துவ ஆர் .எஸ் .எஸ் போன்ற இயக்கங்களுக்கு சாதகமான தீர்ப்பு. (கோவில் கட்டலாம்)-பெரும்பாலான நடுநிலையான ஹிந்து சகோதர்கள்
இந்த விஷயத்தில் முஸ்லிம்களுக்கு சாதகமாவே சாட்சியம் அளிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தீர்ப்பு 3 : இது அரசு சொத்து யாரும் உரிமம் கொண்டாட முடியாது
என நடுநிலையாக பிரச்சனையை கருத்தில் கொண்டு வழங்கப்படும் தீர்ப்பு


இந்த தீர்ப்பு நமக்கு சாதகமா பாதகமா என்பது இறைவன் ஒருவனுக்கே வெளிச்சம் ஆனாலும் இந்த தீர்ப்புக்கு பின் ஒருக்கால் பிரச்சனை என்று வருமேயானால் வரக்ககுடிய விளைவுகளை எதிர் கொள்ள நாம் தயாராக இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

நாம் செய்ய வேண்டியது என்ன :

1 . தீர்ப்பு சத்தியத்தின் பக்கம் இருக்க வேண்டும் என்றும் ,அதனால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வலிமையை முஸ்லிம்களுக்கு தரவேண்டும் என்றும் அல்லாஹ்விடம் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டும்.தீர்ப்பு வெளியான நிமிடத்தில் இருந்து இதன் பதட்டம் குறையும் வரை நாம் மிக விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

2.தீர்ப்பு அன்று வெளியூருக்கு செல்வதை தவிர்த்து கொள்ள வேண்டும். நமது பிள்ளைகள் வெளியூருக்கு போய்-வந்து படிப்பவர்களாக இருந்தால் அன்று விடுமுறை எடுத்துகொள்வது சிறந்தது. முக்கியமாக பெண்கள் அன்று பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவசர தேவை இருந்தால் உரிய ஆண் துணையோடு செல்ல வேண்டும்.

3.இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. இது போன்ற சந்தர்ப்பங்கள் கலவரகாரர்களால் எதிர்பாக்கபடுகின்றன அல்லது ஏற்படுத்தப்படுகின்றன.

4.ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள் பிரச்சனையை தூண்டும் முகமாக செய்யல்பட்டால் அதை உடனே காவல் துறைக்கு தெரியபடுத்தி முறியடிக்க வேண்டும்.

5 . ஒரு வேலை இதையும் தாண்டி நமக்கு , நம் உடைமைக்கு ஆபத்து நேர்ந்தால்.. தற்காப்பு நடவடிக்கையில் இறங்குவதை தவிர வேறு வழி இல்லை நமக்கு... நம் உயிரை கொடுத்தாவது நம்மை, நம் உடமையை காக்க வேண்டும். ஆனால் ஒருகாலும் நாம் வரம்பு மீறக்கூடாது. இன்ஷால்லாஹ்.

(9:51: ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!)

நாம் செய்ய கூடாதது என்ன :


1 . இரவு நேரங்களில் வீதியில் கூட்டம் போட்டு பேசிகொண்டிருக்க கூடாது. ஏனெனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் காவல்துறை கைது நடவடிக்கையும் நடக்கும்.

2 . தீர்ப்பு எப்படி வந்தாலும் - நம் சகோதர்கள் யாரும் பிரச்சனையை தூண்டும் முகமாக நடந்து கொள்ள கூடாது. முஸ்லிம் அல்லாதவர்களும் நம் சகோதர்களே ! ஹிந்து என்று சொல்லிக்கொண்டு ஆர் எஸ் எஸ் போன்ற இயக்கங்கள் செய்யும் தீவிரவாத செயல்களுக்கு அப்பாவி ஹிந்துக்கள் பொறுப்பாளிகள் அல்ல..

ஒரு முஸ்லிமான நாம் எந்த நிலையிலும் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். யாருக்காகவும் , எதற்காகவும் கலங்க கூடாது.

அல்லாஹ்வே நமக்கு போதுமானவன் இல்லையா ?

நாம் இஸ்லாத்தை கொண்டு செல்ல வேண்டிய மக்கள் நிறைய இருகிறார்கள் பாப்ரி மஸ்ஜிதை இடித்தவர்களே இஸ்லாத்தில் இணைந்த நிகழ்வுகள் எல்லாம் அல்லாஹ் நிகழ்த்தி காட்டி இருக்கிறான். ஆதலால் தீர்ப்பு எப்படி வந்தாலும் சகிப்பு தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்.


(விசுவாசிகளே!) உங்களுக்கிடையிலும்,இன்னும் நீங்கள் எவர்களிருந்து விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும், மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்வன்; மிக்க கிருபையுடையவன்.(60:7)

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.( 60:8)


இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது.தீர்ப்பு எப்படி வந்தாலும் , யாருக்கு சார்பாக வந்தாலும் மீண்டும் அது எந்த தரப்பிலாவது மேல் முறைஈடு செய்வார்கள் ஆதலால் இன்னொரு அரை நூற்றாண்டுகளுக்கு கூட இந்த வழக்கை இழுத்தடிப்பு செய்தாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றுமில்லை.

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்;
(ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (திருக்குர்ஆன் 3:200)

சூழ்ச்சிகாரனக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்..
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.


NAGOREFLASH

Saturday, September 18, 2010

240 நாடுகளின் பின்கோடு (அஞ்சல் குறியீட்டு எண்) வைத்து ஊரை கண்டுபிடிக்கலாம்

இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து நாடுகளின் அஞ்சல்
குறியீட்டு எண்ணை வைத்து எந்த நாடு என்பதையும் தெருவின்
பெயரையும் எளிதாக கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்த சிறப்புப் பதிவு.

அஞ்சல் குறியீட்டு எண் வைத்து நாட்டை கண்டுபிடிக்கலாம் ஒரு
நாட்டு அஞ்சலக் குறியீட்டு எண் மட்டும் அல்லாமல் 240 நாடுகளின்
அஞ்சல் குறியீட்டு எண் வைத்து எந்த ஊர் என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

http://www.addressdoctor.com/lookup/default.aspx?lang=en

இந்த முகவரியைச் சொடுக்கி இந்தத்தளத்திற்கு சென்று எந்த நாடு
என்பது தெரிந்திருந்தால் நாட்டை தேர்ந்தெடுக்கவும் தெரியாவிட்டால்
நாடு என்பதில் Worldwide எனபதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.
அடுத்து Postal code என்பதில் பின்கோட் ( அஞ்சல் குறியீட்டு எண்)
கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்தவும்.

உடனடியாக சில நொடிகளில் நமக்கு எந்த ஊர் என்று காட்டுகிறது.
வரும் முடிவின் வலது பக்கம் இருக்கும் Select என்பதை சொடுக்கி
மாவட்டம், தாலுகா, தெரு வாரியாக பார்க்கலாம். கண்டிப்பாக இந்தத்
தகவல் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக நாம்
இந்தியாவில் இருக்கும் நம் கிராமத்தின் பின்கோடு முகவரி கொடுத்து
தேடினோம் முடிவு மிகச்சரியாக இருந்தது.


- நன்றி அதிரை எக்ஸ்பிரஸ்

Friday, September 17, 2010

ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுவது - அறிவியலுக்கு முரணா ?

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!

1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?

குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்கிறார்கள்.... பார்த்தீர்களா...
எவ்வளவு பெரிய விஞ்ஞான முரண்பாடு. ஆஹா..... குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி தான் குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை தவறான புரிதலுடன் அணுகுகிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தான் உண்மை!

மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்

முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் 6
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது

இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும்.

பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள்,கட்டங்கள்,நிலைகள் (STEPS/ STAGES )என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,
அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
வசனம் :54

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்

Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)


அத்தியாயம் :யூனுஸ் (10)
வசனம் :03
நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)


அத்தியாயம் :ஹுது (11)
வசனம் :7
மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.

Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)


அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
வசனம் :59
அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)


அத்தியாயம் :காஃப் (50)
வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)


அத்தியாயம் :அல் ஹதீத்(57)
வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.

Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)


மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...
ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.

இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக.. 6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?

பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு
6 X 24 = 144
144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்., குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.

ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள்.

அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது ,ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!

மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.

தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.
ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.


இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்
அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,
"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.


அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).


பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.


ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.


இதில் முதல் வசனத்திற்கு - 2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு -2 நாட்கள்
ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!


இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?
குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையே நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம்.ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது

ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)
(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)

ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்ப்டையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான்- தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்


அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)


அல்லாஹ் மிக்க அறிந்தவன்
http://peacetrain1.blogspot.com/2010/09/blog-post_16.html

Thursday, September 16, 2010

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர் (The Origin of Creation: Clay&Water)

அருள் மறை திருக் குரானில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம். (அல் குரான் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே நினைவு கூறுவீராக!) "நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்" என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில் ;(71) நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்" (72) (அல்-குரான் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய மூலக்கூறுகளை பெற்றுள்ளன. மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. நாம் மேலே கூறியது போன்று இன்னொரு இறை வசனம் கூறுகின்றது:

நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம். (அல்-குரான் 23:12).

அரபிக் வார்த்தையான 'சுளால' (sulala) என்பதன் பொருள் 'தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (Extract) ' என்பதாகும். அதாவது 'திரவசாறு' (Essence) என்பதனைக் குறிக்கும். இதற்கு அல்லாஹ் 'களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்' என்று தனது வசனத்தில் குறிப்பிடுகின்றான். இதனை நாம் சற்று சிந்திப்போமானால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமான குரானில் கூறப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை இன்றைய நவீன அறிவியல் (வளர்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட) 'மனித உடலில் மண்ணின் தாதுக்கள்' இருப்பதை உறுதிசெய்கிறது.

சுமார் 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் கீழ்க்கண்ட மூலக்கூறுகள் அமையப்பெற்றுள்ளன:


நாம் மேலே கண்ட காரணிகளை உற்று நோக்கும் போது, மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது என்பதை அறிகின்றோம். அல்லாஹ் தான் திருமறை குரானிலே கூறுகின்றான்:

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்-குரான் 21:45)

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? (அல்-குரான் 21:30)

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். (அல்-குரான் 25:54)

மனிதனும் மற்ற உயிரினங்களும் படைக்கப் பட்ட விதத்தினை விவரிக்கும் இவ்வசனங்களைக் காணும்போது ஒரு தலை சிறந்த இன்னும் பல அற்புதத்திற்கான சான்றுகள் குர்ஆனில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றில் ஒரு அற்புதம்தான் மனிதனும் மற்ற உயிரினங்களும் நீரிலிருந்தும் படைக்கப் பட்டதாக கூறும் இறை வசனங்கள். மனிதர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதுவும் மைக்ரோஸ்கோப்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னால் அதன் உதவிகொண்டு இவ்வசனங்கள் கூறும் உண்மையான தகவல்களை இன்று நாம் அறிகின்றோம்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கின்றது. பாலைவன மற்றும் வரட்சியான பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரின் பற்றாக்குறையை தாங்கும் வகையில் தங்களது உடலில் ஜீவத்துவ பரிணாம வளர்ச்சியைப் (metabolism) பெற்றிருக்கின்றன. மேலும் தண்ணீர் கிடைக்கும் போது அப்பிராணிகள் அவற்றிலிருந்து தமக்கு தேவையான பலன்களையும் பெறுகின்றன.

ஒரு சராசரி மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். சில காரணங்களினால் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அககுறைவினை சரியான தருணத்தில் ஈடு செய்யவில்லையெனில் நாம் உயிருடன் வாழ முடியாது என்பதை அறிவோம். 17-ம் நூற்றாண்டு வாழ்ந்த அறிவியலறிஞர் ஜான் பப்டிச்டா வான் ஹெல்மொன்ட் (Jan Baptista van Helmont) என்பவர் 1640-ம் ஆண்டுதான் தாவர வளர்ச்சிக்கு மண்ணிலிருக்கும் தண்ணீர் சத்து மிகவும் அவசியம் என்பதனை கண்டறிந்தார்.
http://alaipupani.blogspot.com/2010/07/blog-post_26.html

நிலையை உயர்த்து... நினைப்பை உயர்த்தாதே...!


1) நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (EGO) விடுங்கள்.

2) அர்த்தமில்லாமலும், பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள் (LOOSE TALKS).

3) எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள் (DIPLOMACY), விட்டுக் கொடுங்கள் (COMPROMISE).

4) சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள் (TOLERANCE).

5) நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள், குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள் (NARROW MINDEDNESS).

6) உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள் (CARRYING TALES).

7) மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள் (SUPERIORITY COMPLEX).

8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள் (OVER EXPECTATION).

9) எல்லோரிடத்திலும், எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10) கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11) உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாக இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள் (FLEXIBILITY).

12) அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் (MIS-UNDERSTANDING).

14) மற்றவர்களுக்கு மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (COURTESY).

15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் விட்டு பேசுங்கள்.

18) பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்.

19) நிலையை உயர்த்து; நினைப்பை உயர்த்தாதே.

20) விட்டுக் கொடுப்பவன், கெட்டுப் போவதில்லை.


email :ansar mohamed

Wednesday, September 15, 2010

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக..!!

(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)



1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.


9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.


பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.


குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே


(Gain peace.org எனும் இணையத்தில் வெளியான மடலை தழுவி சில மாற்றங்களுடன் எழுதப்பட்டது)

Tuesday, September 14, 2010

உலக வர்த்தக மையம் தகர்க்கபட்டது - உள்நாட்டு சதி என நிருபிக்க பட்ட ஆவணங்களின் தொகுப்பு.

உலக வர்த்தக மையம் தகர்க்கபட்டது திட்டமிட்ட உள்வேலை என ஆணித்தரமாக நிருபிக்கும் வீடியோ ஆவணங்கள்.



























everything preplanned... damn..!

THE TOP 40 REASONS TO DOUBT THE OFFICIAL STORY OF 9/11, 2001


THE DAY ITSELF - EVIDENCE OF COMPLICITY


1) AWOL Chain of Command
a. It is well documented that the officials topping the chain of command for response to a domestic attack - George W. Bush, Donald Rumsfeld, Richard Myers, Montague Winfield - all found reason to do something else during the actual attacks, other than assuming their duties as decision-makers.
b. Who was actually in charge? Dick Cheney, Richard Clarke, Norman Mineta and the 9/11 Commission directly conflict in their accounts of top-level response to the unfolding events, such that several (or all) of them must be lying.

2) Air Defense Failures
a. The US air defense system failed to follow standard procedures for responding to diverted passenger flights.
b. Timelines: The various responsible agencies - NORAD, FAA, Pentagon, USAF, as well as the 9/11 Commission - gave radically different explanations for the failure (in some cases upheld for years), such that several officials must have lied; but none were held accountable.
c. Was there an air defense standdown?

3) Pentagon Strike
How was it possible the Pentagon was hit 1 hour and 20 minutes after the attacks began? Why was there no response from Andrews Air Force Base, just 10 miles away and home to Air National Guard units charged with defending the skies above the nation''s capital? How did Hani Hanjour, a man who failed as a Cessna pilot on his first flight in a Boeing, execute a difficult aerobatic maneuver to strike the Pentagon? Why did the attack strike the just-renovated side, which was largely empty and opposite from the high command?

4) Wargames
a. US military and other authorities planned or actually rehearsed defensive response to all elements of the 9/11 scenario during the year prior to the attack - including multiple hijackings, suicide crashbombings, and a strike on the Pentagon.
b. The multiple military wargames planned long in advance and held on the morning of September 11th included scenarios of a domestic air crisis, a plane crashing into a government building, and a large-scale emergency in New York. If this was only an incredible series of coincidences, why did the official investigations avoid the issue? There is evidence that the wargames created confusion as to whether the unfolding events were "real world or exercise." Did wargames serve as the cover for air defense sabotage, and/or the execution of an "inside job"?

5) Flight 93
Did the Shanksville crash occur at 10:06 (according to a seismic report) or 10:03 (according to the 9/11 Commission)? Does the Commission wish to hide what happened in the last three minutes of the flight, and if so, why? Was Flight 93 shot down, as indicated by the scattering of debris over a trail of several miles?


THE DAY - POSSIBLE SMOKING GUNS

6) Did cell phones work at 30,000 feet in 2001? How many hijackings were attempted? How many flights were diverted?

7) Demolition Hypothesis
What caused the collapse of a third skyscraper, WTC 7, which was not hit by a plane? Were the Twin Towers and WTC 7 brought down by explosives? (See "The Case for Demolitions," the websites wtc7.net and 911research.wtc7.net, and the influential article by physicist Steven Jones. See also items no. 16 and 24, below.)


FOREKNOWLEDGE & THE ALLEGED HIJACKERS

8) What did officials know? How did they know it?
a. Multiple allied foreign agencies informed the US government of a coming attack in detail, including the manner and likely targets of the attack, the name of the operation (the "Big Wedding"), and the names of certain men later identified as being among the perpetrators.
b. Various individuals came into possession of specific advance knowledge, and some of them tried to warn the US prior to September 11th.
c. Certain prominent persons received warnings not to fly on the week or on the day of September 11th.

9) Able Danger, Plus - Surveillance of Alleged Hijackers
a. The men identified as the 9/11 ringleaders were under surveillance for years beforehand, on the suspicion they were terrorists, by a variety of US and allied authorities - including the CIA, the US military''s "Able Danger" program, the German authorities, Israeli intelligence and others.
b. Two of the alleged ringleaders who were known to be under surveillance by the CIA also lived with an FBI asset in San Diego, but this is supposed to be yet another coincidence.

10) Obstruction of FBI Investigations prior to 9/11
A group of FBI officials in New York systematically suppressed field investigations of potential terrorists that might have uncovered the alleged hijackers - as the Moussaoui case once again showed. The stories of Sibel Edmonds, Robert Wright, Coleen Rowley and Harry Samit, the "Phoenix Memo," David Schippers, the 199i orders restricting investigations, the Bush administration''s order to back off the Bin Ladin family, the reaction to the "Bojinka" plot, and John O''Neil do not, when considered in sum, indicate mere incompetence, but high-level corruption and protection of criminal networks, including the network of the alleged 9/11 conspirators. (Nearly all of these examples were omitted from or relegated to fleeting footnotes in The 9/11 Commission Report.)

11) Insider Trading
a. Unknown speculators allegedly used foreknowledge of the Sept. 11th events to profiteer on many markets internationally - including but not limited to "put options" placed to short-sell the two airlines, WTC tenants, and WTC re-insurance companies in Chicago and London.

b. In addition, suspicious monetary transactions worth hundreds of millions were conducted through offices at the Twin Towers during the actual attacks.
c. Initial reports on these trades were suppressed and forgotten, and only years later did the 9/11 Commission and SEC provide a partial, but untenable explanation for only a small number of transactions (covering only the airline put options through the Chicago Board of Exchange).

12) Who were the perpetrators?
a. Much of the evidence establishing who did the crime is dubious and miraculous: bags full of incriminating material that happened to miss the flight or were left in a van; the "magic passport" of an alleged hijacker, found at Ground Zero; documents found at motels where the alleged perpetrators had stayed days and weeks before 9/11.
b. The identities of the alleged hijackers remain unresolved, there are contradictions in official accounts of their actions and travels, and there is evidence several of them had "doubles," all of which is omitted from official investigations.

c. What happened to initial claims by the government that 50 people involved in the attacks had been identified, including the 19 alleged hijackers, with 10 still at large (suggesting that 20 had been apprehended)? http://www.chicagotribune.com/news/nationworld/sns-worldtrade-50suspects,0,1825231.story


THE 9/11 COVER-UP, 2001-2006

13) Who Is Osama Bin Ladin?
a. Who judges which of the many conflicting and dubious statements and videos attributed to Osama Bin Ladin are genuine, and which are fake? The most important Osama Bin Ladin video (Nov. 2001), in which he supposedly confesses to masterminding 9/11, appears to be a fake. In any event, the State Department''s translation of it is fraudulent.

b. Did Osama Bin Ladin visit Dubai and meet a CIA agent in July 2001 (Le Figaro)? Was he receiving dialysis in a Pakistani military hospital on the night of September 10, 2001 (CBS)?

c. Whether by Bush or Clinton: Why is Osama always allowed to escape?
d. The terror network associated with Osama, known as the "base" (al-Qaeda), originated in the CIA-sponsored 1980s anti-Soviet jihad in Afghanistan. When did this network stop serving as an asset to covert operations by US intelligence and allied agencies? What were its operatives doing in Kosovo, Bosnia and Chechnya in the years prior to 9/11?

14) All the Signs of a Systematic 9/11 Cover-up
a. Airplane black boxes were found at Ground Zero, according to two first responders and an unnamed NTSB official, but they were "disappeared" and their existence is denied in The 9/11 Commission Report.
b. US officials consistently suppressed and destroyed evidence (like the tapes recorded by air traffic controllers who handled the New York flights).
c. Whistleblowers (like Sibel Edmonds and Anthony Shaffer) were intimidated, gagged and sanctioned, sending a clear signal to others who might be thinking about speaking out.
d. Officials who "failed" (like Myers and Eberhard, as well as Frasca, Maltbie and Bowman of the FBI) were given promotions.

15) Poisoning New York
The White House deliberately pressured the EPA into giving false public assurances that the toxic air at Ground Zero was safe to breathe. This knowingly contributed to an as-yet unknown number of health cases and fatalities, and demonstrates that the administration does consider the lives of American citizens to be expendable on behalf of certain interests.

16) Disposing of the Crime Scene
The rapid and illegal scrapping of the WTC ruins at Ground Zero disposed of almost all of the structural steel indispensable to any investigation of the collapse mechanics. (See also item no. 23, below.)

17) Anthrax
Mailings of weapons-grade anthrax - which caused a practical suspension of the 9/11 investigations - were traced back to US military stock. Soon after the attacks began in October 2001, the FBI approved the destruction of the original samples of the Ames strain, disposing of perhaps the most important evidence in identifying the source of the pathogens used in the mailings. Were the anthrax attacks timed to coincide with the Afghanistan invasion? Why were the letters sent only to media figures and to the leaders of the opposition in the Senate (who had just raised objections to the USA PATRIOT Act)?

18) The Stonewall
a. Colin Powell promised a "white paper" from the State Department to establish the authorship of the attacks by al-Qaeda. This was never forthcoming, and was instead replaced by a paper from Tony Blair, which presented only circumstantial evidence, with very few points actually relating to September 11th.
b. Bush and Cheney pressured the (freshly-anthraxed) leadership of the Congressional opposition into delaying the 9/11 investigation for months. The administration fought against the creation of an independent investigation for more than a year.
c. The White House thereupon attempted to appoint Henry Kissinger as the chief investigator, and acted to underfund and obstruct the 9/11 Commission.

19) A Record of Official Lies
a. "No one could have imagined planes into buildings" - a transparent falsehood upheld repeatedly by Rice, Rumsfeld and Bush.
b. "Iraq was connected to 9/11" - The most "outrageous conspiracy theory" of all, with the most disastrous impact.

20) Pakistani Connection - Congressional Connection
a. The Pakistani intelligence agency ISI, creator of the Taliban and close ally to both the CIA and "al-Qaeda," allegedly wired $100,000 to Mohamed Atta just prior to September 11th, reportedly through the ISI asset Omar Saeed Sheikh (later arrested for the killing of Wall Street Journal reporter Daniel Pearl, who was investigating ISI connections to "al-Qaeda.")

b. This was ignored by the congressional 9/11 investigation, although the senator and congressman who ran the probe (Bob Graham and Porter Goss) were meeting with the ISI chief, Mahmud Ahmed, on Capitol Hill on the morning of September 11th.
c. About 25 percent of the report of the Congressional Joint Inquiry was redacted, including long passages regarding how the attack (or the network allegedly behind it) was financed. Graham later said foreign allies were involved in financing the alleged terror network, but that this would only come out in 30 years.

21) Unanswered Questions and the "Final Fraud" of the 9/11 Commission:
a. The September 11th families who fought for and gained an independent investigation (the 9/11 Commission) posed 400-plus questions, which the 9/11 Commission adopted as its roadmap. The vast majority of these questions were completely ignored in the Commission hearings and the final report.
b. The membership and staff of the 9/11 Commission displayed awesome conflicts of interest. The families called for the resignation of Executive Director Philip Zelikow, a Bush administration member and close associate of "star witness" Condoleezza Rice, and were snubbed. Commission member Max Cleland resigned, condemning the entire exercise as a "scam" and "whitewash."

c.The 9/11 Commission Report is notable mainly for its obvious omissions, distortions and outright falsehoods - ignoring anything incompatible with the official story, banishing the issues to footnotes, and even dismissing the still-unresolved question of who financed 9/11 as being "of little practical significance."

22) Crown Witnesses Held at Undisclosed Locations
The alleged masterminds of 9/11, Khalid Sheikh Mohamed (KSM) and Ramzi Binalshibh, are reported to have been captured in 2002 and 2003, although one Pakistani newspaper said KSM was killed in an attempted capture. They have been held at undisclosed locations and their supposed testimonies, as provided in transcript form by the government, form much of the basis for The 9/11 Commission Report (although the Commission''s request to see them in person was denied). After holding them for years, why doesn''t the government produce these men and put them to trial?

23) Spitzer Redux
a. Eliot Spitzer, attorney general of New York State, snubbed pleas by New York citizens to open 9/11 as a criminal case (Justicefor911.org).
b. Spitzer also refused to allow his employee, former 9/11 Commission staff member Dietrich Snell, to testify to the Congress about his (Snell''s) role in keeping "Able Danger" entirely out of The 9/11 Commission Report.

24) NIST Omissions
After the destruction of the WTC structural steel, the official Twin Towers collapse investigation was left with almost no forensic evidence, and thus could only provide dubious computer models of ultimately unprovable hypotheses. It failed to even test for the possibility of explosives. (Why not clear this up?)

25) Radio Silence
The 9/11 Commission and NIST both allowed the continuing cover-up of how Motorola''s faulty radios, purchased by the Giuliani administration, caused firefighter deaths at the WTC - once again showing the expendability, even of the first responders.

26) The Legal Catch-22
a. Hush Money - Accepting victims'' compensation barred September 11th families from pursuing discovery through litigation.
b. Judge Hallerstein - Those who refused compensation to pursue litigation and discovery had their cases consolidated under the same judge (and as a rule dismissed).

27) Saudi Connections
a. The 9/11 investigations made light of the "Bin Ladin Airlift" during the no-fly period, and ignored the long-standing Bush family business ties to the Bin Ladin family fortune. (A company in which both families held interests, the Carlyle Group, was holding its annual meeting on September 11th, with George Bush Sr., James Baker, and two brothers of Osama Bin Ladin in attendance.)
b. The issue of Ptech.

28) Media Blackout of Prominent Doubters
The official story has been questioned and many of the above points were raised by members of the US Congress, retired high-ranking officers of the US military, the three leading third-party candidates for President in the 2004 election, a member of the 9/11 Commission who resigned in protest, a former high-ranking adviser to the George W. Bush administration, former ministers to the German, British and Canadian governments, the commander-in-chief of the Russian air force, 100 luminaries who signed the "9/11 Truth Statement," and the presidents of Iran and Venezuela. Not all of these people agree fully with each other, but all would normally be considered newsworthy. Why has the corporate-owned US mass media remained silent about these statements, granting due coverage only to the comments of actor Charlie Sheen?


GEOPOLITICS, TIMING AND POSSIBLE MOTIVES

29) "The Great Game"
The Afghanistan invasion was ready for Bush''s go-ahead on September 9, 2001, with US and UK force deployments to the region already in place or underway. This followed the failure earlier that year of backdoor diplomacy with the Taliban (including payments of $125 million in US government aid to Afghanistan), in an attempt to secure a unity government for that country as a prerequisite to a Central Asian pipeline deal.

30) The Need for a "New Pearl Harbor"
Principals in US foreign policy under the current Bush administration (including Cheney, Rumsfeld, Wolfowitz, Perle and others) have been instrumental in developing long-running plans for worldwide military hegemony, including an invasion of the Middle East, dating back to the Ford, Reagan and Bush Sr. administrations. They reiterated these plans in the late 1990s as members of the "Project for a New American Century," and stated a clear intent to invade Iraq for the purpose of "regime change." After 9/11, they lost no time in their attempt to tie Iraq to the attacks.

31) Perpetual "War on Terror"
9/11 is supposed to provide carte-blanche for an open-ended, global and perpetual "War on Terror," against any enemy, foreign or domestic, that the executive branch chooses to designate, and regardless of whether evidence exists to actually connect these enemies to 9/11.

32) Attacking the Constitution
a. The USA PATRIOT Act was written before 9/11, Homeland Security and the "Shadow Government" were developed long before 9/11, and plans for rounding up dissidents as a means for suppressing civil disturbance have been in the works for decades.
b. 9/11 was used as the pretext to create a new, extra-constitutional executive authority to declare anyone an "enemy combatant" (including American citizens), to detain persons indefinitely without habeas corpus, and to "render" such persons to secret prisons where torture is practiced.

33) Legal Trillions
9/11 triggers a predictable shift of public spending to war, and boosts public and private spending in the "new" New Economy of "Homeland Security," biometrics, universal surveillance, prisons, civil defense, secured enclaves, security, etc.

34) Plundered Trillions?
On September 10, 2001, Donald Rumsfeld announced a "war on waste" after an internal audit found that the Pentagon was "missing" 2.3 trillion dollars in unaccounted assets. On September 11th, this was as good as forgotten.

35) Did 9/11 prevent a stock market crash?
Did anyone benefit from the destruction of the Securities and Exchange Commission offices at WTC 7, and the resultant crippling of hundreds of fraud investigations?

36) Resource Wars
a. What was discussed in the Energy Task Force meetings under Dick Cheney in 2001? Why is the documentation of these meetings still being suppressed?
b. Is Peak Oil a motive for 9/11 as inside job?

37) The "Little Game"
Why was the WTC privatized just before its destruction?


HISTORY

38) "Al-CIA-da?"
The longstanding relationship between US intelligence networks and radical Islamists, including the network surrounding Osama Bin Ladin. (See also point 13d.)

39) Historical Precedents for "Synthetic Terror"
a. In the past many states, including the US government, have sponsored attacks on their own people, fabricated the "cause for war," created (and armed) their own enemies of convenience, and sacrificed their own citizens for "reasons of state."
b. Was 9/11 an update of the Pentagon-approved "Project Northwoods" plan for conducting self-inflicted, false-flag terror attacks in the United States, and blaming them on a foreign enemy?

40) Secret Government
a. The record of criminality and sponsorship of coups around the world by the covert networks based within the US intelligence complex.
b. Specifically also: The evidence of crime by Bush administration principals and their associates, from October Surprise to Iran-Contra and the S&L plunder to PNAC, Enron/Halliburton and beyond.


REASON NUMBER 41:
RELATED MOVEMENTS AND PARALLEL ISSUES

Ground Zero aftermath movements:
- Justice for the air-poisoning cover-up (wtceo.org)
- "Radio Silence" (radiosilencefdny.com)
- Skyscraper Safety (www.skyscrapersafety.org).

Election fraud and black box voting, 2000 to 2004. (BlackBoxVoting.org)

Lies to justify the invasion of Iraq. (afterdowningstreet.org)

Use of depleted uranium and its multi-generational consequences on human health and the environment.

Longstanding development of contingency plans for civil disturbance and military rule in the USA (See, "The War at Home")

Oklahoma City Truth movement. (Offline, but not forgotten - May 9, 2008!)

Whether you call it "Globalization" or "The New World Order" - An unsustainable system of permanent growth ultimately requires warfare, fraud, and mass manipulation.


GOING FORWARD ...

"But an inside job would involve thousands of people! How could they keep a secret?" Counter-arguments, red herrings, speculations and false information.

Selected essays, books and websites that make the case for 9/11 as inside job. (See Resources)

Demanding a real investigation of the September crimes - Not just a patriotic duty, but a matter of survival.

9/11 தாக்குதல் குண்டுவெடிப்பின் மூலம் நடத்தப்பட்டதே: 9/11 ட்ரூத் அமைப்பு அறிக்கை

வர்த்தகமையம் நிலைக்கொண்டிருந்த அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது விமானத் தாக்குதலில் அல்ல என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. வாஷிங்டனில் உலகவர்த்தக மையம் தகர்க்கப்பட்ட ஒன்பதாவது நினைவுத் தினம் அனுஷ்டிக்கும் வேளையில் ஆர்கிடெக்ட்ஸ் அண்ட் என்ஜினீயர்ஸ் ஃபார் 9/11 ட்ரூத் என்ற அமைப்பு உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்டது குண்டுவெடிப்பின் மூலம்தான் என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருந்தனர்.



இச்சம்பவம் தொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விளக்கம் தவறு என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் ரிச்சார்ட் காஜ் தெரிவித்துள்ளார். கட்டிடங்களின் மீது விமானங்கள் மோதியதால் அது நடக்கவில்லை எனவும், அக்கட்டிடங்களில் நடந்த குண்டுவெடிப்பினால்தான் உலக வர்த்தக மையம் தகர்ந்தது என காஜ் கூறுகிறார். உலக வர்த்தக மையம் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து உருகியநிலையிலான உலோகச் சிதறல்கள் கிடைத்துள்ளன. விமான எரிபொருள் இரும்பையோ அல்லது ஸ்டீலையோ உருக்குவதில்லை. ஆதலால் கட்டிடத்தின் உள்பகுதியிலிருந்து ஏதேனும் பொருள்தான் கட்டிடம் தகர்வதற்கு காரணமாகயிருக்கும்-அறிக்கை கூறுகிறது.

விமானம் மோதாமலேயே 6.5 வினாடிகளில் கட்டிடங்கள் தகர்ந்தது எப்படி? என்பதுக் குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என 600 ஆர்கிடெக்டுகள் மற்றும் என்ஜினீயர்கள் அடங்கும் அவ்வமைப்பு கோரியுள்ளது. உலக வர்த்தகமையம் தகர்க்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உலோக சிதறல்களில் நானோ தெர்மிட்டிக் ஒருங்கிணைப்பின் சிதறல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கட்டிடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதற்கு ஆதாரம் எனவும் அவ்வமைப்பு கூறுகிறது.

உலக வர்த்தக மையம் தகர்க்கப்ட்டபோது அங்கு பணியில் இருந்த கிட்டத்தட்ட 3000 அதிகமான யூதர்கள் அன்று பணிக்கு வராமல் விடுப்பில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இது பல சந்தேகங்களை எழுப்புவதாகவும் எப்படி ஒரு நாளில் இதனை பேர் திடீர் என்று விடுப்பு எடுத்தார்கள் என்பது விசாரணைக்கு உட்படுத்தபடவேண்டியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மைநிலையை தோலுரித்து காட்டும் ஆவணங்களை
பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் லிங்கை கிளிக் செய்யுங்கள்.
http://www.ae911truth.net/ppt/index.php
http://www.911truth.org/downloads/slideshows/woolsey_co_free_u.pdf
http://www.journalof911studies.com/volume/200609/DrJonesTalksatISUPhysicsDepartment.படப்
http://911truthstore.com/911truth/catalog/
http://www.911truth.org/downloads/flyers/zogbypollgeneric.படப்
http://www.911truth.org/downloads/flyers/whitewashaspublic.படப்

Friday, September 10, 2010

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

நாகூர் மார்க்கெட்-காய்கறி கடை கௌது அவர்கள் இன்று காலை தெற்கு தெருவில் நடந்த விபத்து ஒன்றில் மௌத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

பெருநாள் அன்று நிகழ்ந்த இந்த சம்பவத்தால் ஊரே அதிர்ச்சியில் உள்ளது..
இந்த சகோதருக்காகவும் , இவரின் பிரிவில் செய்வதறியாது திகைத்து நிற்கும் இந்த சகோதரரின் குடும்பத்திற்கும் இறைவனிடம் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே.

மேலும் மற்றுமொரு இழப்பாக சாஹா மாலிம் அவர்களின் மகள் உடல் நலம் சரி இல்லாமல் மௌத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவுன்.....

இந்த இருவரின் நல்லடக்கம் இன்ஷால்லாஹ் நாளை (11/9/10)நடக்கும்.
இவர்களின் குடும்பத்தாருக்கு மன அமைதியை கொடுக்க வேண்டியும் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே !

அல்லாஹ் இவர்களுடைய பாவத்தை நீக்கி மறுமையில் உயர்ந்த சொர்க்கத்தை தருவானாக !

Tuesday, September 7, 2010

வளைகுடா நாடுகளுக்கு கசகசா கொண்டு சென்றால் சிறைத் தண்டனை: ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு..?!!

சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர். தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செய்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.


அவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை.இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம். இந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.

இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது!' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது.

இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்!

சென்னை செய்த எச்சரிக்கை!
முதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம்.

''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை!

இந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது.

கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கசகசா விவகாரம் முதலில் பெரிதாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது.

ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே, மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர். கசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன.

இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக 10 வருட சிறைத் தண்ட னை விதிக்கப்பட்டது! இந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.

கசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள். நாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம்.

கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்!'' என்றார்கள்.

கசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.

'கீட்டமைன்' கெட்ட நேரம்!
ஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத்தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது. அதுதான் - கீட்டமைன் (ketamine). சிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன்! மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது. அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

நம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10 லட்ச ரூபாய். ஆனால், கசகசாவைப்போல இதிலும் இந்தியர்களுக்கு கெட்ட நேரம்தான். இந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால், ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து,

'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது. உண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்! சென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன.

அவற்றுக்கு, மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழிற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம். உலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள்.

அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள்,இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள். அவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள். கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள்.

உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான். சென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு.
எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்...

மரண தண்டனைதான்!'' என்றார் ராஜன்.ஸ்டார் பார், குளிர்பான கிக்!இப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.

கசகசா ஏன் கதி கலக்குது?


உலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது. இந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா.

ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது... அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது, அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி' செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான்.
மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

நன்றி :ஜூனியர் விகடன்
Related Posts Plugin for WordPress, Blogger...