(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, December 17, 2009

ஷைத்தானின் அடிச்சுவடுகள்!

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?

சந்தனக்கூடு
கொடிமரம்
சமாதி வழிபாடு
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
கப்ரை உயர்த்திக் கட்டுதல்
தஸ்பீஹ் மணி உருட்டுதல்
மவ்லூது பாடல்கள்
கவ்வாலி இசைக்கச்சேரிகள்
உரூஸ் உண்டியல்
யானை குதிரை ஊர்வலங்கள்
பிறந்த நாள் விழா எடுப்பது
இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
வட்டி வாங்குதல்
வரதட்சணை பிடுங்குதல்
ஜோதிட நம்பிக்கை
கருமணி தாலி கட்டுதல்
வாழைமரம் நடுதல்
ஆண்கள் தங்கம் அணிவது
மஞ்சள் நீராட்டுவிழா
சுன்னத் கத்னா திருவிழா

ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)











இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)



தாயத்தை கட்டாதீர்கள்


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)



அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்


அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)



இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்

அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )



இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)


இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)



இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)


இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)


இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

//THANKS 2 SHARHARATAMIL//

2 comments:

  1. அப்போ ஹரம் ஷரீபை தவாப் செய்வதும், கோவிலில் விக்கிரகத்தை சுற்றி வருவதும் ஒன்றா..?

    ஜம் ஜம் நீரை பருகுவதும்... கோவிலில் தீர்த்ததை பருகுவதும் ஒன்றா..?

    ஹஜ் பயணம் செய்வதும், காசி யாத்திரை செல்வதும் ஒன்றா..?

    முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள்....

    அல்லாஹ் உங்களை நேர் வழி படுத்துவானாக ஆமீன்......

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அழைக்கும் –
    உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
    சகோதரரே முதலில் பொறுமையாக இருங்கள் :

    நீங்கள் >>//அப்போ ஹரம் ஷரீபை தவாப் செய்வதும், கோவிலில் விக்கிரகத்தை சுற்றி வருவதும் ஒன்றா..?

    ஜம் ஜம் நீரை பருகுவதும்... கோவிலில் தீர்த்ததை பருகுவதும் ஒன்றா..?

    ஹஜ் பயணம் செய்வதும், காசி யாத்திரை செல்வதும் ஒன்றா..? // என்று கேட்கிறீர்கள்..

    இவைகள் எல்லாம் ஒன்று தான் என்று நாம் சொல்லவில்லை , ஒரு விசயத்தை புரிந்து கொள்ளுங்கள்

    " இஸ்லாத்தின் கலாச்சாரத்தை மாற்று மதத்தவர் பின்பற்றினால் அதெற்கு நாம் ஒன்றும் பொறுப்பாளிகள் இல்லை , இஸ்லாம் இயற்கை மதம் ஆதலால் மற்றவர்கள் இஸ்லாத்தின் நடைமுறையை காப்பி அடிக்கலாம் அது ஒன்றும் ஆச்சரியம் இல்லை , ஆனால் சத்திய மார்க்கத்தை பின்பற்ற கூடிய நாம் அவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றலாமா ? தூதர் என்ன நமக்கு சொல்லி கொடுத்தார்கள் அதை பாருங்கள்.இந்த கட்டுரையில் உள்ள மார்க்க ஆதாரத்திற்கு பதில் சொல்லுங்கள் . அது தான் நமக்கு நன்மை பயக்கும் ..

    சகோதரரே தயவு செய்து நம் மார்க்கம் என்ன சொல்கிறது என்று பாருங்கள் .. 500 வருடம் நாம் செய்து வருவது முக்கியமில்லை அல்லாஹ்வின் தூதர் என்ன சொன்னார்கள் ,செய்தார்கள் அதை நாம் எப்படி செய்கிறோம் என்பது தான் முக்கியம் , அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் .

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...