(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, January 11, 2010

அநீதியால் நிகழ்ந்த அசம்பாவிதம் - ஏன் ?

6/01/10 காலையில் எழுந்ததும்"யாரையோ கொல செஞ்சிடாங்கலாம்"
என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு முதலில் ஒரு கனம் இது கனவோ? என யோசிக்க தோன்றியது..

யாருன்னு தெரியலையே என சொல்லிக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைதோம்.. போகும் போதே ஊர் மக்களின் பதிஷ்டமான மனநிலையை உணர முடிந்தது
எங்களுக்கும் தான்- இருக்காத பின்ன ) ஒரு வழியாக பெரும் கூட்டத்திற்கு மத்தியில் நுழைந்து பார்த்தால்,சடலம் ஒன்று சாக்கடையில் கிடக்க எல்லோரும் வேடிக்கை பார்க்க , போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கையில் இருந்தார்கள்.

யாருங்க இது என்று விசாரித்தோம்:

இவர் fazulur rahman என்று சொல்லிக்கொண்டு அவரின் வீட்டை காட்டினார்கள் சிலர் -கேள்வி பட்ட பெயரா இருக்கே என்று நாம் யோசிக்கவும் " அது தாங்க ஒரு லேடீஸ் மேட்டரு பிரச்சனையா போனதே அதுல இவரு இன்வால்வாம் , அதற்க்கு பதிலடியாக யாரோ இந்த கொலையை செஞ்சி இருக்காங்க என்கிறார்கள் " என்றார்.



ஓவ் இவர் தான் சமீபகாலமாக அரசபுரசலாக பெயர் அடிபட்ட நபரா என்று சொல்லி கொண்டு இடத்தை நாம் காலி செய்ய, காவல்துறையும் சடலத்தை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி விட்டு கிளம்பினார்கள். பிரேதபரிசோதனை முடிந்ததும் அன்று மதியமே உடல் அடக்கம் செய்யப்பட்டது .

இது திட்டமிட்ட கொலை என்பதால் இந்த கொலை சம்மந்தமாக தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறது காவல்துறை பலரை விசாரித்து வருவதாக சொல்கிறார்கள். கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவே தெரிகிறது .

இதுபோக பல நம்ப முடியாத கட்டுக்கதைகள் கொலை சம்மந்தமாக
உலா வருவது வேடிக்கையாக இருக்கிறது. பெரும்பாலும் இவை வெளிநாட்டு வாழ் நாகூரார்களிடம் உலாவுகிறது என்பது கூடுதல் செய்தி.

பொதுவாக இது போன்ற கொலை சம்பவங்கள் எங்கு நடந்தாலும் ஏன் இந்த கொலை..?? என்ற உடன் பலர் பலவிதமாக காரணம் சொல்வார்கள்...

ஆனால் இது போன்ற கொலைகள் தடையத்தோடு சில செய்திகளையும் அதாவது காரணத்தையும் விட்டு செல்கின்றன...

" நான் அல்லது நாங்கள் பாதிக்கப்பட்டோம்-யாரால் பாதிக்க பட்டோமோ அவர்களை தண்டிக்கிறோம் "என்ற பதிவு செய்யா வாக்குமூலம் இது போன்ற கொலைகளில் தெரிகின்றது.

இதைதான் பொதுவாக தீவிரவாததிற்க்கு ஒரு அடிப்படை விளக்கமாக சொல்கிறார்கள் >

" எங்கு அநீதி இழைக்கபடுகிறதோ அங்கு தீவிரவாதம் தலைதூக்குகிறது "

இதை வேறு விதமாகவும் சொல்லலாம்

" எங்கு நீதி மறுக்கப்படுகிறதோ அங்கு தீவிரவாதம் தலைதூக்குகிறது"


ஒரு சாதாரண மனிதன் பாதிக்கபடும்போது அவன் தன்னை பாதிப்புக்குள்ளாகிய நபரை அவன் செய்த தவறுக்கு ஏற்ப அரசாங்கத்தால் தண்டனை வழங்க பட வேண்டும் என்று துடிக்கிறான். அரசாங்கம் செய்ய தவறும்போது தானே தண்டிக்க முன் வருகிறான்

இதனால்
1. பாதிக்கபட்டவன் மனம் ஆறுதல் பெறுகிறது

2. செய்த தவறுக்கு உடனடி தண்டனை வழங்கபட்டால்
மற்றவர்கள் இது போன்று தவறு செய்ய யோசிப்பார்கள்,இதனால் தவறுகள் குறையும்.

இப்படி எங்கெல்லாம் அரசாங்கத்தால் செய்த தவறுக்கு உடனுக்கு உடன் தண்டனை வழங்க படுகிறதோ அங்கெல்லாம் இது போன்ற எதிர் தாக்குதல்கள் இல்லாமல் போகும்.
(இதனால் நாமே அவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போகிறது)
இல்லையென்றால் இதுபோன்ற கொலைகளை உலகம் சந்தித்து கொண்டு தான் இருக்கும்.

சட்டம் கடுமையாக இருந்தால் மட்டும் போதாது அந்த சட்டம் பாரபச்சம் இல்லாமல் இருக்க வேண்டும் . தப்பு செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்க பட வேண்டும் மிக முக்கியமாக உரிய காலத்திற்கு உள்ளாக தண்டிக்க பட வேண்டும் அப்போது தான் இது போன்ற கொலைகள் முடிவு பெரும் .

ஆனால் இப்போதைய காலங்களில் இந்தியாவில் இது சாத்தியமா ? குதிரை கொம்புதான் !!

நமதூரில் நடந்த கொலையை பொறுத்தவரை இதற்கு முன் நடந்த சில விரும்பதகாத நிகழ்வின் பின்னணில் தான் இந்த கொலை நடந்ததாக தெரிகிறது.

இதற்கு முன்பே இவர்கள் உரிய முறையில் தண்டிக்க பட்டிருந்தால் இந்த கொலையை இன்ஷாஅல்லாஹ் தடுத்திறுக்கலாம். இவர்கள் தண்டனையில் இருந்து தப்பியதால் இன்று யாராலோ தண்டிக்க பட்டிருக்கிறார்கள்

சிலர் இது தவறு என்கிறார்கள் ,சிலர் இது தேவை தான் என நியாய படுத்துகிறார்கள் ..

அரசாங்கம் செய்யவேண்டிய செயலை தனிமனிதன் செய்தால் அது தவறு தான் ஆனால் அரசாங்கம் செய்யவேண்டியதை செய்ய வில்லை என்றால் ??
என்ன செய்வது என்ற பாதிக்கப்பட்டவர்கள் கேட்பதற்கு இன்னும்
பதில் இல்லை .. ஆனால் “ஒரு சரியான இலக்கை அடைய தவறான வழிமுறையை கையாள்வது தவறு” எல்லோரும் இது போல் சிந்தித்தால் என்ன ஆவது ??!!!

இவற்றுக்கு யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை !!!!

எனவே தான் இயற்கை மார்க்கமாம் இஸ்லாம் குற்றவியல் சட்டங்களை கடுமையாக ஆக்கி இருக்கின்றது . இநத சட்டத்தை எந்த நாடு முறையாக பயன் படுத்துகிறதோ அங்கே இது போன்ற குற்ற செயல்கள் அரிதாக தான் இருக்கும் .

இஸ்லாமிய ஆட்சி மட்டுமே இவைகளை சாத்தியமாக்கும் அதுவரை இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதை வேடிக்கை பார்க்கும் யோகம் நமக்கு என்று தான் என்ன தோன்றுகிறது .

ஒரு முஸ்லிம் பெயரளவில் இல்லாமல் முழு இஸ்லாமியானாக இஸ்லாத்தின் கடமைகளை தன் வாழ்வியல் நெறியாக ஏற்று அதன் படி நடந்தால் மட்டுமே அவன் இம்மையிலும் , மறுமையிலும் வெற்றி பெற முடியும்.இது போன்ற நிகழ்வுகளையும் தவிர்க்க முடியும் .

இன்ஷால்லாஹ் அல்லாஹ் நம்முடைய வாழ்க்கையையும் , நம் சமுதாயத்தின் வாழ்வையும் அமைதியாக்கி வைப்பானாக !

-அல்லாஹ்வே மிக அறிந்தவன்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...