(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, November 4, 2009

ஏழுலெப்பை பள்ளியின் பரிதாப நிலையும்-காசிம் மஹ்லரியின் மார்க்க பித்தலாட்டங்களும்!

சில வருடங்களுக்கு முன்பு நாகூருக்கு அருகில் உள்ள காரைக்கால் பெரியபள்ளியில் இமாமாக இருந்தவர்  சகோதரர் காசிம் மஹ்லரி அவர்கள்  ஆனால் உலகத்தில் உள்ள இயக்கத்தில் எல்லாம் மிகவும் பொறுமைவாய்ந்த  இயக்கம் தப்லீக் இயக்கம் , அந்த இயக்கமே இவரின் மார்க்க விரோத செயல் மற்றும் மார்க்க அறியாமையால் வலுக்கட்டாயமாக இவரை பொறுப்பில் இருந்து நீக்கியது , அதன் பின் அவருக்கு அடைக்கலம் கொடுத்து தனது பெருந்தன்மையை ( இது பெருந்தன்மை அல்ல அது வேறு விஷயம் ) காட்டியது ஏழு லெப்பை நிர்வாகம் , ஆனால் இது காரைக்கால் வாசிகளை மறைமுகமாக கேவலப்படுத்துகிறது என்பதை நினைக்க மறுத்தவர்கள் நிர்வாகிகள்.



சம்பந்த பட்டவருக்கு வசதியாகி விட்டது அதன் விளைவு தான்,நாகூரில் முழுவதுமாக தஞ்சம் அடைத்து விட்டார்.இவர் தஞ்சம் அடைவதற்கு காரணம் உண்டு - அது தர்கா ,தகடு , தாயத்து , தௌஹீது எதிர்ப்பு என என்னத்தை சொன்னாலும் அதை பிசிறு இல்லாமல் ஏற்று கொள்ளும் பக்குவத்தில் இருந்தார்கள் நம்மவர்கள்,மேலும் தர்கா சுரண்டல் சாகீப்களுக்கு இவர் உத்வேகத்தை தந்தார். இவரின் சூழ்ச்சி புரியாமல் இவரின் உருவத்தையும் , சில உருப்படியான வார்த்தையையும் மனதில் கொண்டு இவருக்கு எல்லா விசயங்களிலும் உதவுகிறார்கள் முஹல்லா வாசிகள் (!) (யோசிக்க கடமை பட்டவர்கள் )..

இதில் வேடிக்கை என்ன வென்றால் ஒரு இஸ்லாமிய சகோதரர் காசிம் அவர்களின் கையை பிடித்து முத்தமிட்டாராம் (பக்தி முத்தியதால்)..


இதற்கு சுன்னத் ஜமாஅத் தலைவரே ஒப்புதல் அளிக்கிறார் பாருங்கள்.

இஸ்லாத்தின் போர்வையில் - இவர் செய்யும் பாவகரமான செயல்களை பிரார்த்தனைகள் என்று நம்பி என் சகோதரர்கள் வழி தவறுவதை பார்க்கும் போதும் , மனம் கனக்கிறது சகோதரர்களே!

இவரின் மார்க்க தத்துவத்தை தவிடுபொடியாக்க மார்க்க சட்டங்கள் கரைத்து குடிக்க தேவை இல்லை ... அடிப்படை மார்க்க அறிவு இருந்தால் போதும் ஆனால் அவைகளை பற்றி சிந்திக்க கூட நம்மவர்களுக்கு நேரமில்லை -
ஏன் பா ? நாம இஸ்லாத்தை படிச்சு தெரிஞ்சிக்க முடியாத என்று கேட்டால் - பதில் வருகிறது பாருங்கள் : அதெல்லாம் நமக்கு புரியாது, புரிஞ்சிக்க முடியாது , இமாமுக்கு தான் புரியும் ,குர்ஆன் எப்படி பட்டது தெரியுமா ? தமிழில் படிக்க கூடாது ,அது இமாம்களின் வேலை , எல்லாதிற்கும் எல்லாம் புரிந்துவிடுமா ? ,
அவர்கள் என்ன சொன்னாலும் ஏற்க வேண்டும் அது சரியாக தான் இருக்கும் …
என அறியாமையின் விழும்பில் ஒரு கூட்டம் மொவ்னமாக செல்கிறது வேதனைக்கு உரியது .!!

பிறகு எதற்கு இந்த குர்ஆன் - உலகமக்களுக்கு வழிகாட்டி என்றும் -நபி (ஸல் ) அவர்களை இவ்வுலக மக்களுக்கு அருட்கொடையாக அனுப்பி இருக்கிறோம் என்று அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான் ?? ..

இவரின் பேச்சில் உள்ள சூட்சமம் என்ன வென்றால் :
பொய்யையும் , உண்மையையும் கலந்து விடுவார்.


அவரின் கண்டுபிடிப்புகள் சில:

1. தர்கா வில் உள்ள சங்கிலி கரைந்தால் உலகம் அழிந்து விடுமாம் .

2. ஹதீஸில் ஆதாரபூர்வமானது / பலகீனமானது என்றெல்லாம் ஒன்றுமில்லையாம் அணைத்து ஹதீஸையும் (எப்படி இருந்தாலும்) ஏற்க வேண்டுமாம் ..

3.பெண்களுக்கு கத்னா செய்யவேண்டுமாம் ? ( இதற்கு மார்க்க ஆதாரம் கேட்ட போது, நாகூரிலும் இதை முன்பு செய்திருக்கிறார்கள் என்று சொல்லி திகைக்க வைத்தாராம் -இது தான் மார்க்க ஆதாரம்)

4. அல்லாஹ்வின் பெயர் அல்லாஹ்வை குறிக்காதாம்
( நம் பெயர் போன்று வெறும் பெயர்தானாம்.அல்லாஹ் என்ற பெயரை வைத்து நாம் அல்லாஹ்விடம் உதவி தேடுகிறோம் என்கிறார் )

5. நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது

6. அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது.
(அல்லாஹ்வின் அர்ஷை அவர் வீட்டு கட்டிடம் என்று நினைத்தாரோ என்னவோ!)

7.நபி (ஸல்) அவர்கள் கற்றுகொடுத்த சலவாத்தைவிட ,மார்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பித்ஹத் சலவதுன்னாரியா சிறந்ததாம்.

என்று எத்தனை எத்தனை ?? சொல்லி கொண்டே போகலாம் இதை கேட்க ஆளில்லை அப்படி கேட்டால் - அவ்ளோ தான் அவர் நஜாத்காரர் , குழப்பவாதி என்று பட்டம் சூட்டப்பட்டு - டம்மி ஆக்கிவிடுவார்கள்.








இவரின் தர்கா விசுவாசம் தலைக்கு ஏறி சொல்கிறார் பாருங்கள்


கிழக்கு தேசத்தில் வாழும்

என் சீடன் ஒருவன் தூங்கும் போது

அவனது ஆடை விலகினால்

நான் மேற்கு தேசத்தில் இருந்தாலும்

அவனின் விலகிய ஆடையை சீர் செய்து

அவனது மானத்தை காப்பேன் !!!



முகையதீன் ஆண்டகை அவர்கள் சொன்னதாக காசிம் மஹ்லரி ஹஜ்ரத் அவர்களின் உரையில் இருந்து ....


இந்த மௌலானா மௌலவிகள் பயபக்தியுடன் பாடும் இந்த யாகுத்பா பாடலின் சில வரிகளைப் பார்ப்போம்!


வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களுக்கு முஹ்யித்தீன் தான் குத்பு!!!!

வானம் பூமி இரண்டிலும் வாழ்பவர்களின் குத்பு அவர்களே!

எதையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவர் முஹ்யித்தீன்!

(அப்துல் காதிர் ஜீலானி அவர்களே!) நீங்கள் விரும்பிய அத்தனை ஆற்றலையும் அல்லாஹ் தங்களுக்கு வழங்கிவிட்டான். எனவே தாங்கள் அவனது படைப்புகளில் எதனையும் சாதிக்கும் ஆற்றல் மிக்கவராயும் அவர்களின் கீழ்படிதலுக்கு உரியவராயுமிருக்கிறீர்கள்.

------------------------------------------------------------------------

யா முஹ்யித்தீன் என்றோ அல்லது யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே! என்றோ அல்லது வேறு எந்த அவுலியாவின் பெயரை அழைத்தவாறே ஒருவர் மரணித்தாரானால் அவரின் இருப்பிடம் நரகமே!

“யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்” (ஸஹீஹுல் புகாரி)

அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கின்றார்களோ, அவர்களால் எந்தப் பொருளையும் படைக்க முடியாது. மாறாக அவர்களே படைக்கப்பட்டவர்கள் தான். அவர்கள் இறந்தவர்களே! உயிருள்ளவர்களன்று மேலும் எப்பொழுது எழுப்பப்படுவர் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.(அல்குர்ஆன் 16 : 20, 21)

இது புது கதை




நம்பிக்கை கொண்டோரே!


3: 102 நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

(இது தனி நபரை தாக்கி எழுத வேண்டும் என்பதில்லை. ஒரு ஊரையே மார்கத்தின் பெயரால் தவறாக வழிநடத்தி கொண்டு இருப்பவரை மறுபடியும் நியாபக படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது - இருப்பினும் சகோதரர்  காசிம் மஹ்ளரியின்  அறியாமையை கருதி அவருக்காக அவரின் நேரான வழிக்கு துஆ செய்வது நமது கடமை.)


இங்கே விமர்சிக்கப்பட்டது அவர் மார்கத்தின் பெயரால் பொதுமக்களிடம் எடுத்துவைத்த விஷயங்கள் தான் மற்றப்படி சகோதர் என்ற அடிப்படையில் காசிம் மஹ்ளரி அவர்களை மதிக்கிறோம் அவரின் நேரான வழிக்கு பிரார்த்திக்கிறோம்.

SOURCE: AL-ASRAR (MALAR-2 / MANAM-2- JUNE 2008)PAGE-45 -47.
AL-ASRAR (MALAR -2/MANAM -8- DECEMBER2008 )
வீடியோக்கள் மற்றும் புத்தகங்கள்.

16 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    படிக்க மிகவும் வேதனையாக இருக்கிறது அல்லாஹ்தான் நாகூர் மக்களையும் அந்த இமாமையும் நேர்வழியில் நடத்த வேண்டும்

    ReplyDelete
  2. ALAIKUMSALAM BROTHER.. INSHAALLAH ALWAYS DO DUA FOR NAGORE PEOPLES

    ReplyDelete
  3. nengal solluvathuruku enna than aatharam, unga vaaruthagalai thavira, eruntha poluthum nan atahi nambu kiran, ethu sampathamaka antha pakuthil ulla varukan (nagore youth) yen eppadi patavarai ellam imam maka vaithu erukirargal ket kava kevalama eruku penna yetharu ku ellaigan yendru solli kolla vendum . include me

    ReplyDelete
  4. உண்மையை சொன்னால் இவரின் விஷயத்திற்கு நாம் அதாரம் குறிப்பிட தேவை இல்லை இருப்பினும் நாம் குறிப்பிட்ட பெரும்பாலான விஷயங்களுக்கு நேரடி ஆதாரங்கள் இருக்கிறது , அதை இந்த கட்டுரையிலே குறிப்பிட்டு இருக்கிறோம் . மேலும் சில விஷயங்கள் நானும் , எனது நண்பர்களும், நானும் நேரடியாக சம்பந்த பட்டவை அதை தான் குறிப்பிட்டுலோம்.. நாம் எதையும் அவதூறாக கூற வில்லை , அதற்க்கு அவசியமும் இல்லை . உங்களை போன்ற முஹல்லா வாசிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்ஷால்லாஹ் இந்நிலை மாறும் . நன்றி சகோதரர் fareezal

    ReplyDelete
  5. if u wish you can add it in nachikulam முஸ்லிம் ஊர்களின் தளம்

    http://nachikulam-nkm.blogspot.com/

    ReplyDelete
  6. zazakallah brother.. thanks ur information. i will add nachikulam blog right know.

    ReplyDelete
  7. BROTHEN WHENEVER YOU ARE COMPOSING THE ARTICLE PLS PROVOIDE YOUR CONTACT NUMBERS AND YOUR PATRICULARS. IF U COMPOSSING ARTICLES MEANS THAT DOESN'T MEANING YOU ARE CORRECT. IF U CAN'T DNT COMPOSSING ANY COMMENTS OR ARTICLES.

    ReplyDelete
  8. சகோதரே.. நீங்க என்ன சொல்ல வரிங்க என்பதை தெளிவாக சொல்லுங்க...

    நான் இங்கே கட்டுரை எழுத என் முழு விலாசத்தையும் தந்தால் தான் கட்டுரையை படிப்பீர்களா ?

    ReplyDelete
  9. பெண்களுக்கு கத்னா செய்யவேண்டும்.
    : இதற்கு மார்க்க ஆதாரம் : link darsalaf.webs.com பெண்களுக்கான கத்னா ஒரு பண்டைய கால மரபு வழியே அன்றி , இஸ்லாத்தில் சொல்லப்பட்ட விடயம் அல்ல என்று இன்று சிலர் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும். இது மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒரு விடயமாகும். கீழ் வரும்
    நபி மொழி இதனை உறுதி செய்கின்றது.

    ‘(கத்னா செய்யப்பட்டது ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் . இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரியே’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)

    ‘(கத்னா செய்யப்பட்டது ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் என இமாம் புஹாரி ரஹீமஹுல்லாஹ் தலைப்பிட்டிருக்கிறார்கள் .

    நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் , உம்மு அதிய்யா, பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்த பெண்ணிடம், ஒட்ட நறுக்கி விடாதே! அது அவளுக்கு நல்லதும் கணவனுக்கு இன்பம் அளிக்கக் கூடியதுமாகும் என்றார்கள் .
    (அபூதாவுத் , இமாம் அல்பானி ரஹீமஹுல்லாஹ் ஹசன் என தீர்ப்பளித்துள்ளார்கள் , பார்க்க சில்சிலத்துல் சஹிஹா, ஸஹிஹ் அபூதாவுத் ).

    இறைத்தூதர் சல்லல்லாஹு அளஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை என அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார், புஹாரி

    இமாம் ஷாபி உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர்.

    இமாம் நவவி அவர்களது மஜ்மூவில் கூறுகிறார்கள் : ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமையாகும் என்பது எங்களுடைய கருத்தாகும். இமாம் அல் கத்தாபி கூறுவது போன்று , இது சலபுகளின் வழிமுறையாகும். இது வாஜிபானது என்று கருதுபவர்களில் இமாம் அஹ்மதும் ஒருவர். இந்த முடிவே இமாம் ஷாபியும் கொண்டிருந்தார் என்பது பிரபல்யமானதும் சரியானதும் ஆகும்.
    கத்னா ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையானது என்பது தான் தீர்ப்பு. இது பெண்களுக்கு சொல்லப்படவில்லை என்றோ அல்லது , இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டது என்றோ அல்லது, வெறுக்கத்தக்கது என்றோ அல்லது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விடயம் என்றோ சலபுகளில் யாருமே கூறவில்லை. -இது தான் மார்க்க ஆதாரம்)

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அழைக்கும்.. தங்களின் பதிவிற்கு நன்றி. தாங்கள் சொல்லவருவது பெண்களுக்கு கத்னா செய்வது கடமை என்றா? சுன்னத் என்றா ? நீங்கள் கத்னா செய்வது சுன்னத்தா - கடமையா என்பதையே இன்னும் முடிவு செய்யவில்லை என்று எண்ணுகிறேன். அதற்கான மார்க்க ஆதாரம் என்று சிலதை நீங்கள் கொடுத்து இருகிறீர்கள். இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயத்தையும் நாம் முடிவு செய்ய வேண்டும் என்றால் அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லி இருக்கவேண்டும் இது தான் நிபந்தனை. அப்படி இருக்கும் பட்சத்தில் அதை ஏற்று நடப்பதில் நமக்கு எந்த மறுப்பும் இல்லை. இதே நிலையில் தான் தாங்களும் இருகிறீர்கள் என்று நம்பியவனாக தங்கள் ஆதாரத்தை பார்க்கிறேன்.( கத்னா என்பது சுன்னத் -நபிவழி என்பது இஸ்லாத்தின் நிலைபாடு)

    முதல் ஆதாரம் :‘(கத்னா செய்யப்பட்டது ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் . இந்திரியம் வெளியாகாவிட்டாலும் சரியே’ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி, இப்னுமாஜா)

    ‘(கத்னா செய்யப்பட்டது ) ஆணுறுப்பும் பெண்ணுறுப்பும் சந்தித்தால் குளிப்பு கடமையாகும் என இமாம் புஹாரி ரஹீமஹுல்லாஹ் தலைப்பிட்டிருக்கிறார்கள் . /// இதில் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரியவில்லை கத்னா செய்யப்பட்டது என்று BRACKETல் இருக்கிறதே அதுவா ? சகோதரே இது யாருக்கு குளிப்பு கடமை என்பதை விளக்கும் ஹதீஸ் இதற்கும் நீங்கள் சொல்வதற்கும் சம்மந்தமில்லை. பெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்று நேரடியாகவோ ,மறைமுகமாகவோ இங்கே சொல்லப்படவில்லை

    ReplyDelete
  11. ஆதாரம் இரண்டு : இறைத்தூதர் சல்லல்லாஹு அளஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்காக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை என அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவித்தார், புஹாரி ... இதிலும் பெண்கள் கத்னா செய்யவேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

    ReplyDelete
  12. ஆதாரம் மூன்று : இமாம் ஷாபி உள்ளிட்ட பலர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமை என்கின்றனர்.

    இமாம் நவவி அவர்களது மஜ்மூவில் கூறுகிறார்கள் : ஆண்களுக்கும் பெண்களுக்கும் கத்னா கடமையாகும் என்பது எங்களுடைய கருத்தாகும். இமாம் அல் கத்தாபி கூறுவது போன்று , இது சலபுகளின் வழிமுறையாகும். இது வாஜிபானது என்று கருதுபவர்களில் இமாம் அஹ்மதும் ஒருவர். இந்த முடிவே இமாம் ஷாபியும் கொண்டிருந்தார் என்பது பிரபல்யமானதும் சரியானதும் ஆகும்.
    கத்னா ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையானது என்பது தான் தீர்ப்பு. இது பெண்களுக்கு சொல்லப்படவில்லை என்றோ அல்லது , இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டது என்றோ அல்லது, வெறுக்கத்தக்கது என்றோ அல்லது இஸ்லாத்தில் இல்லாத ஒரு விடயம் என்றோ சலபுகளில் யாருமே கூறவில்லை. -இது தான் மார்க்க ஆதாரம்)////

    முதலில் கத்னா என்பது சுன்னத் அது கடமை அல்ல என்பதற்கு தங்களின் பதிலை ஆதாரத்தின் அடிப்படையில் தாருங்கள். அடுத்து இது சலபுகளின் வழிமுறையாகும் என்று குறிப்பிட்டு இருகிறீர்கள் .. முஸ்லிம்களுக்கு நபி (ஸல் ) அவர்கள் வழிமுறைத்தான் மேலானது ,அல்லாஹ்வினால் எற்றுகொள்ளபட்ட வழிமுறையாகும் ஆதலால் சலபுகளின் வழிமுறை அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கும் மாற்றமாக இருந்தால் தூக்கி எறியவேண்டும்.

    ReplyDelete
  13. ஆதாரம் நான்கு : நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் , உம்மு அதிய்யா, பெண்களுக்கு கத்னா செய்பவராக இருந்த பெண்ணிடம், ஒட்ட நறுக்கி விடாதே! அது அவளுக்கு நல்லதும் கணவனுக்கு இன்பம் அளிக்கக் கூடியதுமாகும் என்றார்கள் .
    (அபூதாவுத் , இமாம் அல்பானி ரஹீமஹுல்லாஹ் ஹசன் என தீர்ப்பளித்துள்ளார்கள் , பார்க்க சில்சிலத்துல் சஹிஹா, ஸஹிஹ் அபூதாவுத் ). // இந்த செய்தியில் தான் குறிப்பிட்ட தலைப்போடு சம்மந்தப்படுத்தி ஆதாரத்தை உங்கள் சார்பாக வைத்து இருகிறீர்கள். ...


    முதலில் நான் கேட்கவிரும்புவது இந்த ஹதீஸ் இடம்பெறும் நூல்களின் பெயர் மற்றும் ஹதீஸ் எண் தெளிவாக தரவும்.
    மூலநூலில் அந்த ஹதீஸ் இருகிறதா என்பதை பார்க்கவேண்டும் அடுத்து அந்த ஹதீதின் நம்பகத்தன்மையை பார்க்கவேண்டும்..

    ReplyDelete
  14. asselamua alaikkum, allah andhe imamuku muttthirai veitthuvitaano ennemo,markem vilengadhe mekkel theveru saidhal allah neyrvelikkatte voippuledhu, aanal indhe beduva,rashkel kaasukkage islathei vilekodukkiran,aver thirundhevilleyendral allahudeye saabem avruku yendrum undagettum,avooodhubillah

    ReplyDelete
  15. அழைக்கும் ஸலாம் உங்களின் கருத்துக்களுக்கு நன்றி சகோதரே

    ReplyDelete
  16. Inda Imam WAHABEEKUM, THABLEEQ JAMATHUkum NALLA adi kudupar adanal awari awangaluku pudikathu. Kathunavilaya puriuda, awar ulla hadeedai than sonar .................

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...