(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, January 21, 2010

பிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை

பிரான்ஸ் , டென்மார்க் நாட்டில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது இஸ்லாமிய சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது ....


பாரிஸ் : "பிரான்சில் பொது இடங்களில் பர்தா அணிந்து நடமாடினால்

50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்ற புதிய சட்டம் பிரான்ஸ் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, "பர்தா அணிவது அடிமைத் தனத்தைக் குறிக்கிறது. ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும் பிரான்சில், இதுபோன்ற உடைகளை அனுமதிக்க முடியாது' என்று அறிவித்திருந்தார்.


இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கண்டனம் வந்தாலும், இம்மாதம் முதல்வாரத்தில் பிரான்ஸ் பார்லிமென்டில், "பொது இடங்களில் பர்தா மற்றும் நிக்கா உடை அணிந்து வந்தால், 51 ஆயிரம் ரூபாய் (750 யூரோ) அபராதம் விதிக்கப்படும்' என்ற மசோதா கடும் வாக்குவாதங்களுக்கிடையில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது.


அதிபர் கட்சியின் பார்லிமென்ட் குழுத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் கோப் இது குறித்து கூறியதாவது: உடலை முழுவதுமாக மறைத்து, கண்களுக்கு மட்டும் திரையிடும் பர்தாவுக்கும், உடலை மறைத்து கண் மட்டும் தெரியும் வகையில் உள்ள நிக்கா உடைக்கும் இந்த அபராதம் பொருந்தும். கலாசார விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் மட்டும் இதற்கு விதிவிலக்கு உண்டு. இந்த சட்டம் மத அடிப்படையில் அல்ல. மத மற்றும் மதச்சார்பின்மை சார்ந்த அறிஞர்களிடம் நாங்கள் பேசிய போது, பர்தா என்பது மத அடிப்படையில் உருவானதல்ல என்று அவர்கள் உறுதிபடுத்தினர். இவ்வாறு கோப் தெரிவித்தார்.


கோபன்கெகன் :
டென்மார்க் நாட்டு பத்திரிகை ஒன்று முகமதுநபி படத்தை வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தது. இப்போது அங்கு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை விதித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர்.

டென்மார்க் நாட்டில் மொத்த மக்கள் தொக 55 லட்சம். இதில் 1.9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். 1 லட்சம் முஸ்லிம் பெண்கள் உள்ளனர்.


அவர்கள் பர்தா அணிய தடை விதிக்கலாம் என்று சிபாரிசு செய்தனராம்
இதையடுத்து அந்த நாட்டு பிரதமர் ரசும்சென் டென்மார்க்கில் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

டென்மார்க் வெளிப்படையான ஜனநாயக நாடு. இங்கு யார்-யாரை சந்தித்தாலும் அவர்களுக்குள் பேசிக்கொள்ளலாம். எனவே யாரும் முகத்தை மறைத்து செல்வதற்கு அனுமதிக்க முடியாது. எனவேதான் பர்தா அணிய தடை விதிக்கப்படுகிறது என்று பைத்தியகார தனமான காரணத்தை கூறி வருகின்றனர் .


அல்லாஹ்வின் ஒளியை வாயால் ஊதி அணைக்க முயல்கிறார்களா ? என்ன ..!!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...