(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, November 6, 2009

திரை கிழியட்டும்.....




உன் உடலோடு சேர்த்து

அறிவுக்கும் யார் சொன்னார்
திரையிடச்சொல்லி?

பாத்திமாவும் ஆயிஷாவும்
திரையிட்டுத்தான் இருந்தார்கள்...
அறிவுக்கு திரை போட எப்போது சொன்னார்கள்?

உடம்பை மட்டும் தான் நீ மறைக்க வேண்டும்
அறிவையல்ல...

உன் கால்களுக்கு விலங்கிட்ட அந்தக் கயவன் யார்?

கிழித்தெரி
உன் அறிவுக்கு இட்ட திரையை..

உடைத்திடு
உன் கால்களுக்கு
விலங்கிட்டவன் கரங்களை...

மாறி விடு...

முகம்மத் நபி விரும்பிய  ஒரு
புதுமைப்பெண்ணாய் நீ...

நாளை ஒரு புது உலகம்
உன் கரங்களில் தயாராகட்டும்..

நன்றி : http://yaththirikan.blogspot.com

2 comments:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...