(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, November 29, 2009

புகை பிடிக்கும் போது - புதிய ஆராய்ச்சி

வாஷிங்டன்: சிகரெட் புகைப்பவர்கள் வழக்கமான நிகோட்டினுடன், நச்சுக் கிருமிகளையும் (பாக்டீரியாக்கள்) உயிரோடு இழுத்து உடம்புக்குள் விட்டுக்கொள்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


புகை பிடிக்கும் போது சிகரெட்டில் இருந்து உடம்புக்குள் செல்லும் ரசாயணங்கள் மற்றும் வாயுக்களால் என்னென்ன பாதிப்பு என்ற ரீதியில் தான் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்போது, நிகோடினுக்கு இணையாக நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளை நேரடியாக பாதிக்கும் பாக்டீரியா கிருமிகளை மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மனிதர்களிடம் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயக் கிருமிகள் உட்பட நூற்றுக்கணக்கான விதங்களில் கிருமிகள் சிகரெட்டுகளில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான காரணங்களில் இவையும் முக்கிய பங்காளிகள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

-NAGOREFLASH

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...