(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, February 28, 2013

நாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு ??

தர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கிறீர்களா..முன் எப்போதும் இல்லாத அளவிற்கு யானை மிகவும் அடம்பிடிப்பதாக சொல்கிறார்கள்.


பாகன் சொல்படி கேற்பதில்லை மிகவும் அசௌகரியமாக இருப்பதாக தெரிகிறது இதனால் யானை பாகன் யானையை அடித்து துன்புறுத்துவதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.

மேலும் நாகூர் கிரசென்ட் பெண்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தர்கா தோட்டத்தில் யானைக்காக ஒய்வு எடுக்க கொட்டாய்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தினந்தோறும் யானையை அழைத்து சென்று வருவதற்குள் பாகன் படாதுபாடு படுகிறார் என்கிறார்கள்.

இதனால் பயத்தின் காரணமாக யானையை தூரமாக நின்றே வேடிக்கை பார்க்க விரும்புகிறார்கள் மக்கள்.



சிலர் இந்த கொட்டாய் அமைத்தது யானைக்கு பிடிக்கவில்லை போலும் அது தான் யானை இப்படி நடந்து கொள்கிறது என்று வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள் சிரிக்காமல்..
  
எது எப்படியோ யானைக்கு வயசு ஆயிடுச்சு என்பது தெளிவாக தெரிகிறது ... 
அதற்கு விருந்து தான் கொடுக்கல .. 
அதற்க்கு விடுதலையாவது கொடுங்க பா .. 

தன் இனத்தோடு சுற்றிதிரிந்து  சந்தோசமாக இருக்கட்டும் வயசான காலத்துல... 

நீங்க என்ன சொல்றிங்க ?

புகைப்படம் : Yosuf Ameen

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...