(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, February 1, 2013

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?


ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் பணி நாகூரில் கடந்த சில நாட்களாக வார்டு வாரியாக பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. பலருக்கு இது பற்றி பல சந்தேகங்கள் இருப்பதால் அது பற்றி விரிவாக பாப்போம்.

ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். 

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.


ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக்கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மதபேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.

1. இது ஒரு 12 இலக்க எண்,  அட்டை மட்டுமல்ல அனைவருக்கும் ஆனது. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
2. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. 
3.குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானதுகட்டாயம் அல்ல.
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டைபாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது.

எதற்காக ஆதார் பெற வேண்டும்?
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
5. பிரயாணிகளுக்கு அடையாளப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை
6. அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச் சேரவும் எளிதாக இருக்கும்

யாரெல்லாம் ஆதார் பெற்றுக்கொள்ளலாம்?
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ.ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.

எப்படி பெறுவது?
உள்ளூர் ஊடகங்களில் ஆதார் பற்றின பிரச்சாரங்கள் செய்வார்கள். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் (ஆதாரங்களை)  எடுத்துப் போக வேண்டியிருக்கும்.

என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும்ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
2. வசிப்பிடம் பற்றின தகவல்
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்.

தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
எங்கு பதியலாம்?
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கும்?
பதிவு செய்து கொள்ளும் முகாம்களில் படிவங்கள் கிடைக்கும் 

மாதிரி விண்ணப்பம் :


ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947
ஆதார் படிவத்தில் அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பதிவு செய்து கொள்ளும் போதே தவறுகளைநேரில் பார்த்து சரி செய்து கொள்ள வசதி உண்டு. அப்படியும் பிழைகள் நேர்ந்தால்.. 48 மணி நேரத்துக்குள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்று சரி செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்ட் விண்ணப்பித்து எத்தனை நாளில் கிடைக்கும்?
பல சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் 60 லிருந்து 90 நாட்கள் ஆகலாம்.

விண்ணப்பம் மறுக்கப்படுமா?
மறுக்கப்படலாம்
1. தவறுகள் நேர்ந்தால்
2. மேலும் உங்களைப் பற்றின உடற்கூறு ரீதி ஆதாரம் மற்றும் ஒருவரின் ஆதாரமும் ஒன்று போல் இருந்ததால்.
சரி பார்க்கப்பட்ட பின் ஆதார் கார்ட் வழங்கப்படும்.

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனதமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...