(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, April 10, 2011

அரசியல் விளையாட்டில் அசிங்கப்பட்டு நிற்கும் இயக்கங்கள்..

ஒரு காலத்தில் தமிழக முஸ்லிம்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்க, முஸ்லிம்களை வழிநடத்த  இயக்கம் வேண்டுமே என்று  எதிர்பார்த்தது முஸ்லிம் சமூகம் .. ஆனால் இன்றோ முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சனையே இயக்கங்களால் தான் என்னும் அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது..

மார்க்க விஷயங்களுக்கு மோதிக்கொண்ட காலம் சென்று தற்போது அரசியலுக்காக மோதிகொள்கிறார்கள் நம்மவர்கள்.எந்த இயக்கமும் இதற்க்கு விதிவிலக்கு இல்லை என்றே சொல்லலாம்.
நேற்று இரவு (9/02/11) மமக வை சார்ந்த கோவை ஜாகிர் என்ற சகோதரர் நாகை தொகுதி அதிமுக வேட்ப்பாளர் ஜெயபாலுக்கு ஆதரவாக காரசாரமாக பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கும்போது  திமுக வை சேர்ந்த ராஜா சாஹிப் தாக்குதல் நடத்தியதாக மமக வினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் தர்கா அலங்கார வாசல் அருகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




மமக : கோவை ஜாஹிர் மீது திமுக ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல்


கோவை ஜாகிர் 50 பேர் கொண்ட கும்பல் இரும்பு தடி,உருட்டுக்கட்டை உடன் வந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக சொல்வது உண்மையா ? என்பது சம்பவத்தை பார்த்தவர்களுக்கு வெட்டவெளிச்சம்..


இது ஒரு புறம் இருக்க TNTJ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹமத்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது..

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா, திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.




என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடுங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.
மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களையும் குழண்ட்தைகளையும் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க, பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி என ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.


மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள் என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது இந்த இயக்கம்...

அங்கு நடந்தது அப்படியல்ல இப்படி தான் என்று செய்தி வெளியிட்டுள்ளது SDPI..

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்
" பரம்பர அரசியல்வாதிகள் எல்லாம் நம் இயக்கங்களின் முன் தொற்றுப்போனார்கள்... "
இதுவல்லவா அரசியல்.. இவர்கள் அல்லவா அரசியல்வாதிகள்...!!!

சமுதாய நன்மைக்காக அரசியலில் இறங்குவதாக கூறும் கட்சிகள் ,இயக்கங்கள் இன்று நம்மிடையே இருக்கும் கொஞ்ச நஞ்ச சகோதரத்துவ பாசத்தையும் அழிப்பதில் குறியாக இருகிறார்கள்.

இதுபோன்ற பிரச்சனைக்கு காரணமே இவர்களில் தேவை அற்ற செய்லபாடுகள் தான். திமுகக்கு ஆதரவாக பிரச்சாரம் என்று கூறிக்கொண்டு மமகவை சாடி பேசுகிறார்கள் , அதிமுகக்கு ஆதரவு என்று சொல்லிக்கொண்டுததஜ வை சாடி பேசிகிறார்கள். ஏன் இந்த வேலை ?

சும்மாவே உங்களால் இருக்க முடியாதா ? நாம எல்லாம் எல்லாத்திலையும் ஒழுங்கா ? நம்மட்ட ஆயிரத்து எட்டு ஓட்ட ஒடச்ச இருக்கு அத பாப்போமா அத விட்டுட்டு...

அது என்னங்க TNTJ  யின் கொள்கை   : யாருக்கு ஒட்டுபோடுரின்களோ  இல்லையோ  ஆனால் மமக விற்கு மட்டும் ஒட்டுபோடகூடாது...  
அவர்கள் நிற்கும் மூன்று தொகுதியிலும் தோற்கடிக்க படவேண்டுமாம் !! என்ன கொடும இது... அப்டி என்னங்க  அவர்கள் பாவம் செய்தார்கள் ?
ஏன் அப்படி சொல்றிங்க என்று கேட்டால் ... அவர்கள் முன்னேறினால் சமுதாயத்திற்கு ஆபத்து அவர்களால்  சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என்கிறார்கள்...  ஒ அப்ப கருணாநீதி - ஜெயலலித்தாவை விட இவர்கள் உங்களுக்கு மோசமாகிவிட்டார்கள்.  நல்ல கொள்கை..!!!???

ஆமா தெரியாம தான் கேட்கிறோம் இட ஒதுக்கீடு ,இட ஒதுக்கீடு என்று பேசுகிறீர்களே .. யாருக்கு பா அந்த ஒதுக்கீடு .. நம்ம சமூகத்திற்கு தானே ..? நம்ம சமுகத்தில் தானே நீங்கள் எல்லாம் இருக்கீங்க .. எப்படி இடஒதுக்கீடு கிடைச்சாலும் நமக்கு தானே லாபம் அப்பறம் ஏன் இந்த பொறாம, குரோதம் யாருக்காக இதெல்லாம் ?

இப்ப உங்களுக்கு முக்கியம்  இடஒதுக்கீடு அல்ல.. அந்த இடஒதுக்கீடு எந்த இயக்கம் மூலமாக கிடைத்தது என்பது தான் உங்களுக்கு முக்கியம்.

தேர்தலுக்கு தேர்தல் இடம் மாறும் நீங்கள் கோரிக்கையை முன்வைத்து இந்த கோரிக்கையை யார் நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு எங்கள் ஆதரவு என்று கூறி அதை ஏற்பவர்களை ஆதரிகிரீர்களா ? அல்லது எந்த கட்சி அதிக சீட்டு தரும் என்று பார்த்து ஆதரிகிரீர்களா ? ... கோரிக்கையை வைத்துத்தான் என்றால் அந்த கோரிக்கையை வைத்து தானே தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மாறாக அந்த கட்சி முஸ்லிம்களுக்கு எதிரி , நாங்கள் ஆதரிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு பாதுகாவலன் என்று கூப்பாடு போட்டீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் உங்கள் நிலையென்ன ? முதலில் நீங்கள் எதிர்த்த கட்சியை அப்போது  முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று வாய்கிழிய சொல்வீர்கள் தானே ...!!!  இப்போது மட்டும் என்ன நடக்கிறது.

கடந்த தேர்தலில் ததஜ அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது மற்றொரு அமைப்பு தமுமுக திமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது .. முஸ்லிம்கள் ஜெயலலிதா விற்கு ஒட்டுபோடலாமா
என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது தமுமுக , மற்றொருபுறம்  கருணாநீதி நம்பவைத்து கலுதருகிறார் அவரை 
நம்பகூடாது முஸ்லிம் சமூகத்திற்கு எது நன்மையோ அதை தான் 
பார்க்கவேண்டும் என்று கூறியது ததஜ.

ஆனால் இந்த தேர்தலில் அப்படியே தலைகீழாக மாறியது அமைப்புகளின் தேர்தல் நிலைப்பாடு..! இப்பவும் பாருங்க ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் குறை 
கூறியவரே இருகிறார்கள். முதலில் கலைஞரை ஆதரித்தவர்கள் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.

முன்பு ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இப்போது கருணாநீதியை ஆதரிக்கிறார்கள்.ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் மொத்த இஸ்லாமிய சமூகமும் ஏதோ உங்கள் பக்கம் தான் இருப்பதுபோல்  ஒவ்வொருவரும் நினைகிறீர்கள். அதை மாற்றிகொள்ளுங்கள் அதற்கான தகுதியை இன்னும் நீங்கள் பெறவில்லை. 

ஆக தமிழக அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு முஸ்லிம் மக்களின் முன்பு அசிங்கப்பட்டு நிற்கிறது நம் சமூக இயக்கங்கள் ,கட்சிகள்.
அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று உங்கள் ஈமானையும் சகஜமாக இழந்து விடாதீர்கள் இயக்க சகோதர்களே..!

யா அல்லாஹ் ! எங்களை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக !
எங்களுக்கு சகோதர பாசத்தை அதிகரிப்பாயாக !
வாழ்நாள் முழுவதும் எங்களை ஈமானோடு வாழசெய்வாயாக !

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...