(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, April 21, 2011

ரஹீம் வீட்டு சாய்பாபா சிலையில் எண்ணெய் வடிந்தது...!!!

ஆந்திர மாநில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை,ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.


தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும்,தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.
சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

உலகத்தில் மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும் இதற்கு சாய்பாபா ஒன்றும் விதிவிலக்கு அல்ல.. தனக்கு ஏற்பட்ட உடல் பாதிப்பை  கூட தீர்த்து கொள்ளமுடியாமல் மரணபடுக்கையில் இருக்கும் சாய்பாபா,  இன்னமும் பல மக்களால் கடவுள் என்ற நிலையில் பார்க்கபடுகிறார் என்பது நிச்சியமாக சிந்திக்கும் மக்களுக்கு சிரிப்பை தான் வரவழைக்கும்... 

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால் ... சாய்பாபாவை கடவுளாக நினைக்கும் அறிவுஜீவிகள் ,தனக்கு என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும் சாய்பாபாவிடம் தான் கேட்ப்பார்களாம்.. ஆனால் இப்போது சாய்பாபாவிற்கே கஷ்டம் என்பதால் யாரிடம் பொய் உதவி தேடுவது என்று  கலக்கம் அடைந்த பக்தர்கள் சுதாரித்து கொண்டு சாய்பாபாவின் உருவபடத்திற்கே பூஜை செய்து அவரிடமே பிரார்த்திக்கிரார்களாம்..!!
இது கூட வித்தியாசமா இருக்குல்ல ? ... என்ன கொடும போங்க..

இது இப்டி இருக்க நம்மாலு ஒருவர் ரஹீம் என்ற பெயர் தாங்கிய முஸ்லிம். அவருக்கு சாய்பாபா கனவில் வந்து சாய்பாபாவின் சிலையை வழிபட சொன்னாராம். அதனால் அவர் வழிபட்டுதாராம்... மிச்ச கதையை நீங்களே படித்து பாருங்க... அதை பற்றி எழுத எரிச்சலாக இருக்கு... இவர்கள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி கொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு  முஸ்லிம் என்றால் யார் என்றே தெரியவில்லை பாவம்... அல்லாஹ் தான் காப்பாற்றவேண்டும்.


இந்நிலையில் இன்று (24/4/11) சாய்பாபா இறைவனின் நாட்டப்படி மரணமடைந்தார். தான் 96 வயது வரை மக்களுக்கு அருள் தருவேன் என்று கூறி வந்த பாபா ,தனது 85  வயதிலையே மரணித்து போனது குறிப்பிடதக்கது. தன்னையே நோய் நொடியில் இருந்து காத்துக்கொள்ள முடியாமல் இறந்து போன பாபாவிற்காக அவரின் பக்தர்கள் அழுது புரண்டு அறியாமையின் விளிம்பிற்கே சென்று விட்டனர். இதில் அதர்ச்சியில் இருவர் இறந்து விட்டார்களாம்...!! என்ன கொடும இது.. 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...