(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, July 14, 2013

புனிதமிக்க இந்த ரமலானில் உங்களின் துஆவில் இவர்களை இணைத்துகொள்ளுங்கள்..



இலங்கை - கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் முனவ்வர் , பாத்திமா ஹூசைனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் அஸ்மா, 12 வயது. இளையவள் ஸைனப், 9 வயது
தமது பிறப்பு முதலேயே மிகவும் அரிதானதொரு தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அதனைக் குணப்படுத்துவதற்காக கடந்த பல  வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்காக இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் ஆலோசணைப்படி வாழ்நாள் பூராவும் தொடர்ந்தும் மருந்துகளைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

தமது வயதையொத்த ஏனைய சிறுமிகளைப் போல சாதாரணதொரு வாழ்க்கையை வாழ விரும்பும் இவர்கள் தற்போது தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.             

7ஆம் வகுப்பில் அஸ்மாவும் நான்காம் வகுப்பில் ஸைனப் உம் கல்வியை தொடர்கின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவரும் இவர்கள் கற்பதற்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


சவுதி அரேபியாவில் ஹோட்டல் இன்டகொண்டினன்டில் தொழில் புரிந்த ஜனாப் முனவ்வர் தனது சம்பாத்தியம் முழுவதையுமே இவர்களின் சிகிச்சைக்காக செலவிட்டுள்ளார். தனது முள்ளந்தண்டில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து தற்போது எந்த வித தொழிலுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார் ஜனாப் முனவ்வர்.

பாத்திமா அஸ்மா மற்றும் பாத்திமா ஸைனப் தமது வாழ்நாள் பூராவும் மருந்துகளுடனேயே வாழ வேண்டிய நிலையில் மாதாந்தம் சுமார் 25 ஆயிரம் ரூபாய்களை மருந்திற்காக மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளனர்.
எந்தவித தொழிலுமே செய்ய முடியாத நிரந்தர நோயாளியான ஜனாப் முனவ்வர் தனது பிள்ளைகளுக்கு அன்றாடம் தேவையாகும் மருந்துகளை தயார் செய்வதற்கு உங்களுடைய நிதியுதவிகளை நாடுகின்றார்.



எவரொருவர் தனது சகோதரனின் தேவையொன்றை பூர்த்தி செய்கின்றாரோ,அல்லாஹ் அவரின் தேவையொன்றை பூர்த்தி செய்வான் ' - ஹதீஸ்.

சுகத்தையும் துக்கத்தையும் வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே!

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.

இந்தச் சிறுமிகளின் மருத்துவச் செலவிற்காக உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.  உதவிகள் செய்யமுடியாத  நிலையில் இருந்தால்..
இந்த இருவருக்கும் அல்லாஹ்விடம் அன்றாடம் துஆ செய்யுங்கள்...
யா அல்லாஹ் நோயை தருபவனும் நீயே ..
அந்த நோயிர்க்கும் நிவாரணம் அளிப்பவனும் நீயே ..
யா அல்லாஹ் இந்த சகோதரிகளுக்கு பரிபூரண சுகத்தை தருவானாக...

CONTACT DETAILS
S.L.M MUNAWWAR
F 119/1, PANAPURAWATHA,
THALGASPITIYA,
ARANAYAKE.
SRI lANKA.
PHONE: 0094 77 91 77 33 9
email: amflanka@gmail.com

NAME OF ACCOUNTS.L.M MUNAWWAR
BANKCOMMERCIAL BANK
BRANCHMAWANELLA
A/C NO.
8790020192
SWIFT CODECCEYLKLXXXX




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...