(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, July 22, 2013

காரைக்காலில் பா.ஜ.க அட்டுழியம் மத கலவரம் ஏற்படுத்த முயற்சி

முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் .பதட்டமான சூழல் .பிஜேபி புதுச்சேரி மாநில செயலாளர் அருள்முருகன் மற்றும் குண்டர்கள் காரைக்கால் மாதா கோவில் வீதி MAX WOMEN (கபீர் ) கடையை அடித்து நொறுக்கிஅங்கு பணிபுரியும் haja என்பவரை கத்தியால் குத்தினார்கள் .அரசு பொது மருத்துவமனையில் ஹாஜா அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதற்கு காரைக்கால் காவல்துறை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது.
காரைக்காலில் இப்போது நடைபெற்று வரும் காவிகளின் பந்திற்கு காரைக்கால் காவல் துறை முழு ஆதரவு தெரிவித்து வருகிறது ,ஆம்!இன்று காலை பொதுமக்கள் கடைகளை திறந்தபோது வழமைபோல காவி கயவர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கோடு கடைக்காரர்களை மிரட்டினர் .அதை தடுக்கவேண்டிய காவல்துறையோ கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது ,துணிச்சல் பெற்ற காவிகயவன் அருள்முருகன் முஸ்லிம் சகோதரர்களின் கடைக்குள் புகுந்து அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளான் ,இதனை தடுக்க சென்ற முஸ்லிம்களை காவல் துறை அடித்து விரட்டியுள்ளது ,மட்டுமல்லாமல் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (s p )முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் முடிந்தால் பாண்டிச்சேரியில் பாம் வையுங்கள் என்றும் தான் ஒரு அரசு அதிகாரி என்பதைகூட மறந்து விட்டு காவிகளின் தலைவனை போல பேசியுள்ளார் 

இதனால் கொதித்து போயுள்ள முஸ்லிம்கள் அமைப்பு/கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று கூடி லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவெடுத்துள்ளனர் .காவி பயங்கரவாதி அருள்முருகனை கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும் காவிகளின் தலைவனைபோல் பேசிய காவல் கண்காணிப்பாளர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
- நன்றி காரைக்கால் யூசுப் எஸ்.பி
- புகைப்படங்கள் இஸ்லாமிய சிந்தனை










இஸ்லாமியர்களை தீவிரவாதி என்று கூறிய காரைக்கால் காவல் துறை கண்காணிப்பாளரை (SP) பணிநீக்கம் செய்யக்கோரி காரைக்கால் இஸ்லாமிய மக்கள் மாவட்ட ஆச்சியரிடம் மனு கொடுத்தனர்.














1 comment:

  1. I would request all the muslim shop owners across to insure their shops from these anti-social elements to avoid losses..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...