(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, February 10, 2013

நாகூருக்கு வரும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு

நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வரும் 14ம்தேதி முதல் நாகூர் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என நாகை கலெக்டர் முனுசாமி தெரிவித்துள்ளார். 



நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி தேசிய நெடுஞ்சாலையில் நாகூர் வெட்டாற்று பாலத்திலிருந்து, ஐ.டி.ஐ. பிள்ளையார் கோவில்வரை நடைபெறுகிறது. இப்பணிகள் வரும் 14ம்தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. எனவே நாகூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும், மயிலாடுதுறை, சிதம்பரம், காரைக்கால், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், நாகூர் வழியாக வராமல் வாஞ்சூரிலிருந்து இ.சி.ஆர். பைபாஸ் வழியாக திருப்பி விடப்படுகிறது. 

   நாகூர் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்களின் வாகனங்கள் நாகூர் சி.பி.சி.எல். சாலை, ரயிலடி சாலை தெருப்பள்ளி சாலை வழியாக நாகூர் தர்காவிற்கு செல்லவேண்டும். தர்காவிலிருந்து, செய்யதுப்பள்ளி தெரு, தெற்கு தெரு, பங்களாதோட்டம் வழியாக தெற்கு பால்பண்ணைச்சேரி ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடையும் வகையில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே வரும் 14ம்தேதி முதல் வரும் மார்ச் மாதம் 13ம்தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக நாகை புதிய பஸ்நிலையத்திலிருந்து நாகூர் வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு நகர பேருந்துகள் இயக்கப்படும் என நாகை கலெக்டர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

1 comment:

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...