(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 26, 2012

நாகூர் தர்கா திருவிழாவுக்கு 40 சந்தனகட்டைகள் இலவசம் : தமிழக அரசு !!!


நாகூர் தர்கா சந்தனக்கூடு விழாவிற்காக ரூ. மூன்று இலட்சம் மதிப்பிலான 40 சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
தமிழக அரசின் செய்திக்குறிப்பு இத்தகவலைத் தெரிவிக்கிறது.

நாகூர் சந்தனக்கூடு விழாவுக்காக வாங்கப்படும் சந்தனக் கட்டைகளை மானியமாகvவழங்க வேண்டும் என்று நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், பரம்பரை ஆதினமுமாகிய  சையத் காமில் சாஹிப் காதிரி முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, சந்தனக்கூடு நாளன்று சமாதியில் பூசுவதற்காகத் தேவைப்படும் ரூ.3 லட்சம் மதிப்பிலான
சந்தனக் கட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு  தன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


இது நாட்டுக்கும் நம்ப ஊருக்கும் ரொம்ப முக்கியம்....??!!!!!!!!!


ரூம் போட்டு யோசிப்பாங்களோ ...


 நன்றி : இந்நேரம்.காம் 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...