(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, December 1, 2012

கடமையை மட்டும் அல்ல கயமையையும் செய்யும் சட்டம்..!!

அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டு விட்டார்கள்


அப்துல் நாசர் மதானியை சிறையில் பூட்டி விட்டார்கள்


அல் உம்மா பாஷாவுக்கு 'ஆயுள்' விதித்து விட்டார்கள்


அதிரை அன்சாரியிடம் 'அவர்கள் பாணியில்' வாக்குமூலம் பெற்று விட்டார்கள்...


அயோத்தியில் பாபர் மஸ்ஜி
தை இடித்தவர்கள் நாடாளுமன்றத்தில்..


குஜராத்தில் பல்லாயிரம் முஸ்லிம்களை படுகொலை செய்தவர்கள் 
சட்டமன்றத்தில்..

மும்பையில் வெறியாட்டம்  போட்ட தாக்கரேயின் உடல் ராணுவ மரியாதையில்...

சென்னையில் கூடிய ஆர்.எஸ்.எஸ். செயற்குழு உயர்பாதுகாப்பு வளையத்தில்...







காந்தியையே கொன்றாலும் அவர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதி உண்டு


குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டாலும் அவர்கள் கூடிப்பேச பாதுகாப்பு உண்டு


கொலைக் குற்றமே செய்தாலும் சங்கராச்சாரிக்கு ஜாமீன் உண்டு


காவிகளை எதிர்த்தால் செய்யாத குற்றத்துக்கு தண்டனை உண்டு...




எல்லோருக்கும் 'கடமை'யைச் செய்கிற சட்டம்

எங்களுக்கு மட்டும் 'கயமை'யைச் செய்கிறது!



நன்றி : ஆளூர் ஷாநவாஸ்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...