(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, November 6, 2011

நாகூர் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி !

நாகூரில் ஏ டி எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற ஒருவர் சிக்கினார்.

நாகூர் மெயின் ரோட்டில் IOB வங்கியின் ஏ டி எம் உள்ளது. அந்த ஏ டி எம் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீடீர் என்று அலாரம் ஒலித்தது. சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் ஏ டி எம் மையத்திற்கு ஓடிவந்தனர்.அப்போது அங்கிருந்து 4 பேர் தப்பி ஓடினர்.

உடனே இதுபற்றி நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது , போலீசார் தப்பி ஓடியவர்களை துரத்தி சென்றனர். இந்நிலையில் ஓடியவர்களில் ஒருவரை பிடித்துவிட்டதாகவும் அவரிடம் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

அவர்கள் யார் என்ன என்ற விஷயம் இன்னும் சரியாக தெரியவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...