பேஸ்புக் : ஒருவர் தனது தளத்தில் பேச்சுச் சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்போர் நபிகள் நாயகத்தின் படத்தை அனுப்பி வைக்கலாம் என பேஸ்புக்ல் அழைப்பு விடுத்து இருந்தார்.

இதை அடுத்து கிட்ட தட்ட ஒரு லட்சம் பேரின் கவனத்தை இந்த பக்கம் கவர்ந்தது , ஏராளமான படங்கள் குவிந்தன ( இவை எல்லாம் இவர்களாக கற்பனை செய்தது , டென்மார்க் பத்திரிக்கை முன்னதாக வெளிட்ட படங்கள் ஆகும் - நவுதுபில்லாஹ்)
இது கவனிக்கபட்டதுடன் பாகிஸ்தானில் இந்த விஷயம் பெரும் புயலை கிளப்பியது நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் செயலை பேஸ்புக் நிர்வாகம் அனுமதித்ததை கண்டித்து பேஸ்புக்கை தடை செய்தது பாகிஸ்தான் .
மேலும் youtube – twitter தளங்களையும் பாகிஸ்தான் அரசு தடை செய்தது .
நபி நாயகத்தின் பெயரால் பரப்பும் அவதூறை நிறுத்தினால் மட்டுமே தடை திரும்ப பெறபடும் என்று அறிவித்தது.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த பக்கம் நீக்க பட்டதாக தெரிவித்துள்ளது பேஸ்புக் நிர்வாகம்.அதை உருவாக்கிவரே அப்பக்கத்தை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளது .
(அந்த பக்கத்தின் லிங்கை கிளிக் செய்தால் அந்த சர்ச்சைக்குரிய பக்கம் நீக்கபட்டுள்ளது -அல்ஹம்துலில்லாஹ் )
இது போன்ற துரித நடவடிக்கையில் இஸ்லாமிய நாடுகள் எடுக்க வேண்டும் .இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை பாராட்டுக்குரியது .
இது போன்ற ஒட்டு மொத்தமாக எடுக்கபடும் ஆக்க பூர்வமான நடவடிக்கை தான் தீர்வை பெற்று தரும் . ஆனால் பல நண்பர்கள் நம்முடைய பேஸ்புக் தளங்களை நீக்க வேண்டும் என்றும் மேலும் சிலர் மூன்று நாட்கள் அனைவரும் பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும் அதன் மூலம் நிர்வாகத்திற்கு இழப்பை ஏற்படுத்தலாம் என்றும் கூறி வருகிறார்கள் .
ஆனால் உண்மையில் இவைகளால் நிர்வாகத்திற்கு எந்த நெருக்கடியையும் நாம் கொடுக்க முடியாது ..
எப்போதுமே ஒட்டு மொத்தமாக செயல்படும் போது தான் அதெற்கு பிரோஜனம் இருக்கும் .இதற்கு தான் இஸ்லாம் ஒற்றுமை அவசியம் என்று வழிவுருத்துகிறது
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் நபி (ஸல் ) அவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவர்கள் செய்தாலும் உண்மையில் நபி (ஸல் ) அவர்களின் பெருமையை , மகத்துவத்தை இவர்கள் மேலும் மேலும் அதிக படுத்துகிறார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.
Newyork 9/11 trade centre தகர்க்கபட்ட பொது இதை வைத்து முஸ்லிம்களுக்கு கேட்ட பெயரை உண்டு பண்ணலாம் என்று நினைத்தார்கள் சுழ்ச்சிக்காரகள்.. ஆனால் விளைவு அந்த சம்பவத்திற்கு பிறகு லச்சக்கனகான மக்கள் இஸ்லாத்தின் பக்கம் வந்துள்ளனர் - அல்லாஹ் சுழ்ச்சிகாரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் இல்லையா !
அதை போல் நபி (ஸல் )அவர்களை கலங்க படுத்த நினைக்கும் இந்த கயவர்களை வைத்தே இவ்வுலகில் நபி (ஸல்) அவர்களை தெரியாத மூல முடுக்கில் உள்ள மக்களுக்கும் அவர்களின் புகழை அல்லாஹ் கொண்டு சேர்கிறான்..
முதலில் இவர் யார் என்ற கேள்வியில் ஆரபித்து , இஸ்லாம் என்றால் என்ன என்ற கேள்வி கடைசியில் பிறக்கும் இதை நாம் இஸ்லாத்தை ஏற்கும் மக்களின் வாழ்க்கை வரலாறை படிக்கும் போது உணரலாம் .
அதற்காக இவைகளை கண்டு கொள்ளாமல் இருக்கணும் என்பது பொருள் அல்ல .. நம் உயிரிலும் மேலான நபி (ஸல் )அவர்களை கலங்கபடுத்த நினைபவர்களுக்கு நாம் ஆக்கபூர்வமான முறையில் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் இன்ஷால்லாஹ் .
சில சகோதர்கள் தங்களின் facebook தளங்களை நீக்கி விட்டார்கள் அதில் தவறில்லை அது அவர்களின் தனி பட்ட விஷயம் ஆனால் நபி (ஸல்)அவர்களின் புகைபடம் வெளியிட்டதனால் என்றால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை என்றே தோன்றுகிறது.
காரணம் facebook நிர்வாகம் இதை தன்னிச்சையாக இதை செய்யவில்லை தனி நபரின் தூண்டுதலாலையே இவை ஏற்படுத்தபட்டுள்ளது .பாகிஸ்தான் அரசு கூட அதை நீக்கி விட்டால் தடை நீக்க படும் என்றே கூறி உள்ளது என்பது குறிப்பிடதக்கது .
அது மட்டுமல்ல googleல் MUHAMMAD IMAGE என்று IMAGE SEARCH செய்தால் பல வரை படங்கள் முஹம்மது என்ற பெயர் தாங்கி வருகிறது ஆகையால் நாம் GOOGLE பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.
அடுத்து YAHOO ,YOUTUBE , TWITTER என்று பட்டியல் நீண்டு கொண்டே வரும் .. கடைசியில் இன்டர்நெட் பயன்பாட்டை நிறுத்துவது தான் மிச்சம் .
இதனால் அவர்கள் இவைகளை நீக்கி விட போகிறார்களா ?
நாம் களத்தில் இருந்து தான் குரல் கொடுக்க வேண்டும் ,
ஒதுங்கி விட்டால் அவர்களுக்கு வழி விட்டது போல் ஆகிவிடும் .
ஒற்றுமையாக குரல் கொடுப்போம் –
ஓங்கி வாழ்வோம் முஸ்லிம்களாக !
அல்லாஹ் மிக அறிந்தவன்.
(இதற்கு மாற்று கருத்து உடைய சகோதர்கள் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் . தவறு இருந்தால் அதை திருத்தி கொள்ள வசதியாக இருக்கும் )
NAGOREFLASH
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன