(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, June 8, 2010

ஜட்கா ஹராமானது! ஹலால் மாமிசம் உண்ண வாங்க!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமிழ்ஹிந்து தளத்தில் ஜட்கா என்ற உயிர்பலியிடும் முறைக்கு வரவேற்பு அளித்து இஸ்லாமியர்கள் உண்ணும் ஹலால் மாமிசத்தை இகழ்ந்து பேசுகிறார்கள் எனவே தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு ஜட்கா பற்றிய உண்மையை அறியச் செய்த பதிலளிக்கிறோம்!

ஜட்கா என்பது என்ன?

ஜட்கா (Jhatka) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது இதற்கு கொல்வது என்று பெயர். ஜட்கா என்ற பெயரை வடமாநிலத்தவர்கள் சட்கா (Chatka) என்றும் அழைப்பர்.

ஜட்கா முறைப்படி எவ்வாறு பலியிடுகிறார்கள்?

ஒரு பலியிடக்கூடிய பிராணியை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அந்த பிராணியின் கழுத்தை நோக்கி ஓங்கி ஒரே அடியாக கூர்மையான கத்தி, வால் மற்றும் கோடாரியால் வெட்டுவதுதான் ஜட்கா எனப்படு வதாகும். ஒரு பிராணியை இவ்வாறு வெட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.


தமிழ்ஹிந்து என்ற தளத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்: ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களின் வாதம் அடிப்படை ஆதாரமற்றதாகும் மேலும் ஜட்கா முறையில் பிராணியின் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை கவனிக்கவும்!

பலி பிராணியின் கழுத்தை ஓங்கி வெட்டுவதால் அந்த பிராணியின் தலை முழுவதுமாக வெட்டப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. இதனால் மூளை செயலிழந்துவிடுகிறது மேலும் மூளைக்கும் உடலுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டு அந்த பிராணியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுகிறது. இதனால் அந்த பிராணியின் இரத்தில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற வழியின்றி மாமிசத்தில் தங்கிவிடுகிறது. நோய்க்கிருமிகள் கலந்த மாமிசத்தை உண்பதில் ஏனோ இவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி!


ஜட்கா முறையும் சீக்கியர்களின் ஈனச் செயலும்


ஜட்கா முறையில் ஒரு பலி பிராணியை கொல்வது சீக்கியர்களின் விருப்பமான நடவடிக்கையாகும் ஏனெனில் சீக்கிய மதம் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை எதிர்க்கும் மதமாகும். இந்த சீக்கிய மதவாதிகள் இஸ்லாம் எதை தடுக்கிறதோ அதை செய்து காட்டும் திறமைசாலிகள் அந்த அளவுக்கு அவர்களின் மத போதகர்களால் மூலைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

சீக்கியர்களின் வீரதீர விளையாட்டுக்களில் ஜட்கா என்பதும் ஒன்றாகும் இவர்கள் பலி பிராணியை மக்கள் நிறைந்த கூட்டத்திற்கு நடுவே நிற்க வைத்து அதன் பின்னால் நின்று ஆரவாரமிட்டு அந்த பலி பிராணி பயந்து நடுங்க வேண்டும் இப்படிப்பட்ட சித்திரவதைக்கு பின்னர் ஒரே வெட்டு தலையும் உடலும் இரண்டாக பிரிந்துவிடும் இவ்வாறு பலி பிராணியை வெட்டுவது சீக்கியர்களின் வர்மக்கலையாம்!


சீக்கியர்களின் முட்டாள்தனம்!

சீக்கியர்கள் இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்பதால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாவத்திற்கு ஆளாகிறார்களாம் காரணம் நாம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆடு வெட்டுகிறோமாம்! எனவேதான் அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்து வெட்டப்படும் ஹலால் மாமிசத்தை இவர்கள் விரும்புவதில்லையாம்! எனவேதான் ஜட்கா முறையில் இவர்கள் பலிகொடுக்கும் போது Sat Sri Akaal” (சாத்திரிகால்) என்ற போர் முழக்கமிட்டு பலியிடுகிறார்கள்! ஆடு வெட்ட போர் முழக்கமா? என்ன வேடிக்கை இது!


சீக்கிய மதத்தில் இரு பிரிவுகள் உள்ளன அதில் ஒரு பிரிவினர் மட்டும்தான் ஜட்கா முறையில் அறுத்த மாமிசத்தை உட்கொள்கிறார்கள்! மேலும் இன்றொரு சீக்கிய பிரிவினர் அசைவ உணவை வெறுக்கிறார்கள். குறிப்பாக முக்கிய பிரதிநிதிகளான SGPC (SHIROMANI GURDWARA PARBANDHAK COMMITTEE) அதாவது சிரோன்மனி குருத்துவாரா பிரபந்தக் கமீட்டியும், தம்தாமி தக்சால் (Damdami Taksal) என்ற அமைப்பும் அசைவ உணவையும் ஜட்கா முறையையும் கடுமையாக எதிர்க்கிறார்கள் மேலும் இவர்களின் கூற்றுப்படி தங்களுடைய எந்த சீக்கிய குருவும் ஜட்கா முறையை ஆதரிக்கவில்லை என்று குரல் எழுப்புகிறார்கள்.


பொற்கோவில் என்று பரவலாக பேசப்படும் குருத்துவாராவில் ஜட்கா முறை நடைபெறுவதில்லை மேலும் இந்த ஜட்கா முறையை பல்வேறு சீக்கிய அமைப்பகளும் வருடாவருடம் கண்டிக்கின்றன. ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக கலம் இறங்கக் கூடிய சில மாற்றுமத தீவிரவாதிகள் தான் இந்த ஜட்கா என்ற முறையை ஆதரிக்கின்றன மாறாக மாற்றமதத்தவர்களில் பெரும்பாலானோர் ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட இறைச்சி யைத்தான் புசிக்கின்றனர் இதிலிருந்தே ஜட்கா முறைக்கு மாற்று மத்தவர்களிடம் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாக புரிகிறது!


ஜட்கா என்ற பழக்கம் பகவத் கீதைக்க எதிரானது

பகவத் கீதையில் உயிர் பலியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்ற அப்படியிருக்க உயிர்பலி கொடுக்க ஜட்கா முறையை அனுமதிப்பது ஏன்?


ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது என்றும் ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படுகிறது என்றும் தமிழ்ஹிந்து என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் ஜட்கா முறையில் நடைபெறும் அக்கிரமங்களை மூடிமறைத்துவிடுகிறார்கள் இதோ ஹிந்துக்களின் ஜட்கா முறையில் உயிர் எவ்வாறு சித்ரவதை செய்யப்படுகிறது என்பதை சற்று கேளுங்கள்!


ஜட்கா கொடுப்பதற்கு முன் பலி பிராணியின் Testicles எனப்படும் இந்திரிய விதைகள் அறுக்கப்படுகின்றன அந்த பலி பிராணி துடிக்கிறது இதற்கு இவர்களின் வேத புராணங்களில் ஆதாரம் உள்ளது மற்ற வேத புராணங்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை படியுங்கள்!


விருஷ்னிக மேஷ சம்பந்தா க்ரஹீ

(Vrishanika mesha sambanda grahee)

முக்தைக மேஷ ஜீவோத சாஹி

(Muktaika meshaha jeevoda sahee)



மேஷம் எனப்படும் ஜட்கா கொடுக்கும் போது உயிருள்ள ஆட்டின் விந்து விதைகளை அறுக்க இந்த சுலோகம் வலியுறுத்து கிறதாம்! இந்த வேத சுலோகங்களை இந்த தமிழ்ஹிந்து மறுக்குமா?


கோழியாக இருந்தால் அதன் தலையை கதவின் துவாரத்தில் இட்டு நசுக்குகிறார்கள்

காளியம்மண் பண்டிகைகளின் போதும் சுடுகாட்டு கொல்லி என்ற விழாவின் போதும் ஆடு, கோழி இவைகளை பலி பிராணியாக நேர்ச்சை செய்து உயிரோடு இந்த மிருகங்களை பற்களால் கடித்து கொல்கிறார்கள்!


இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்ண அருள்மறையின் வசனங்களை இந்த தமிழ்ஹிந்து இணைய தளவாதிகளிடம் இங்கிருந்தே சமர்பிக்கிறோம் இனியாவது இவர்கள் இஸ்லாத்தை சிந்தித்து நேர்வழிக்கு வர முயலட்டும்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)


அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:88)

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்5:93)

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:173)

இஸ்லாத்திற்குள் வாருங்கள்! தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பிதழ் இனிதே விடப்பட்டுள்ளது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்
thanks to http://islamicparadise.wordpress.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...