(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, March 8, 2014

பிற்படுத்தபட்டோர் ஆணையதிற்கு கடிதம் எழுதியதற்கு ஆத்தா கட்சிக்கு ஆதரவா ?

சகோதர சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் ..

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ADMK) அதாவது ஆத்தா கட்சிக்கு ஆதரவு என தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அறிவித்து.. நம் சமூக மக்களை ஆத்தா கட்சியிடம் அடகு வைக்க முடிவு செய்துள்ளார்...


TNTJவின் கடந்த இரண்டு மாத அரசியல் கொள்கை பற்றிய சிறிய தொகுப்பு இங்கே உங்களுக்காக...:

கடந்த ஜனவரி 28ம் தேதி 7% இட ஒதுக்கீட்டை முன்னிறுத்தி பல லட்சம் செலவு செய்து, ஆயிரகணக்கான மக்களை இதற்காக ஒன்றுதிரட்டி சிறை செல்லும் போராட்டத்தை நடத்தினார்கள் TNTJ...

அதில் என்ன சொன்னார்கள் என்று கீழ்க்கண்ட வீடியோவை பாருங்கள்:

அடுத்து போராட்டதிற்கு பிறகு என்ன நிலைப்பாடு என்று அவர்களே விளக்குகிறார்கள் கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்...



பார்த்தீர்களா தெளிவா பேசுறாங்களா...ஓகே 

ஆனா  தற்போது   நிலைமை என்ன அடுத்த வீடியோவை பாருங்கள்....



திருமாவளவனை கூட நம்பிவிடலாம் , யாரை எப்போது ஆதரிக்க வேண்டும் என்று தீர்க்கமாக யோசித்து அணைத்து தரப்பிற்கு நன்மைபயக்கும் முடிவுகளை எடுக்கிறார்.

திமுக ஒரு சீட்டு தான் கொடுத்தது என்றாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவர் கூறிய காரணம் அருமை " ஓட்டை பிரித்து மத வாத சக்திகளுக்கு இடமளித்து விட கூடாது என்பதனால் ஒரு சீட்டு என்றாலும் ஏற்றுகொண்டோம் என்றார்..

ஆனால் நம்மவர்களோ அரசியல் வேண்டாம் , வேண்டாம் என்று .. மிக பெரிய அரசியலை செய்கிறார்கள் .. மக்களை அடகு வைக்கிறார்கள்... அதற்க்கு ஒரு காரணத்தை கற்பித்துகொள்கிறார்கள்.

நாளை நரபலி மோடியுடன் ஆத்தா கட்சி கூட்டு சேர்ந்தவுடன் அதுக்கு வேற எதாவது  ஒரு பிளான் போடுவாங்க .. 

அல்லாஹ் தான் நம்மை பாதுகாக்க வேண்டும்.. 

கடிதம் எழுதியதற்கு ஆதரவா.  அது எழுதி ஒரு வாரம் ஆச்சே. இப்ப தான் பேப்பர் படிச்சிங்களோ.. 




முகநூல் சகோ ஒருவரின் அர்த்தமுள்ள விமர்சனத்தை உங்கள்  பார்வைக்கு.. 


‪#‎ததஜ_இந்த_முடிவு_ஏன்‬ ?


இப்ப அஇஅதிமுகவுக்கு ஆதரவு கண்டிப்பா கொடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் என்ன ? கடைசி சட்ட மன்ற தேர்தலில் நீங்கள் திமுகவிற்கு ஆதரவு கொடுத்தீர்கள் ஏன் என்றால் இட ஒதுக்கீடை 3.5 சதவிதம் தந்ததற்காக என்று காரணம் கூறினீர்கள்...சரி ஒத்துக்கொள்ளலாம் ஆனால் இப்போது நீங்கள் எதிர்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை ...அப்படி இருக்கும் போது ஆதரவு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? அமைதியாக இருந்திருக்கலாம் ஏன் என்றால் நீங்கள் அரசியல் கட்சி அல்ல...உங்களின் முடிவை யாரும் எதிர்பார்த்து இருந்திருக்க மாட்டார்கள் .... வெறும் இட ஒதுக்கீடுக்காக மட்டுமே உங்களின் நிலைப்பாடு இருக்கும் போதே அதனுடன் பாசிச சக்திகளை ஆட்சிக்கு வர விடாத அளவு உங்களின் நிலைப்பாடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம் ...ஆனால் இப்போது அந்த இடஒதுக்கீடும் இல்லாமல் பாசிச சக்திகள் பற்றிய அக்கறையும் இல்லாமல் வெறுமனே சென்று ஆதரவு தெரிவிக்க என்ன அவசியம் ?

மார்ச் 2 ம் தேதி செயற்குழு கூடினீர்கள் ..ஆனால் அன்றைய தேதிய பத்த்ரிக்கையில் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஆணையத்திற்கு அரசு தகவல் அனுப்பி இருப்பதாக செய்தி வந்தது ... ஆனால் நீங்கள் அப்போது தேர்தல் தேதிக்கு பிறகு முடிவு சொல்வதாக சொன்னீர்கள் ஆனால் அன்றைய தேதியிலிருந்து இன்று வரை இட ஒதுக்கீடு குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாத போது எதற்க்காக பழைய அந்த ஆணை சம்பந்தப்பட்ட செய்தியையே சொல்லி ஆதரவு கொடுக்க வேண்டும் ?

ஜெயலலிதா சொன்ன சொல்லை காப்பார் என்று எந்த உத்திரவாதத்தின் பெயரில் ஆஅதரவு கொடுத்தீர்கள் ...ஏன் என்றால் போராட்டம் நடந்த ஜனவரி 28 ம் தேதியில் இருந்து நீங்கள் மூன்று முறை எச்சரிக்கை கொடுத்தும் அதை சட்டை செய்யாமல் மார்ச் 1 ம் தேதி ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருப்பதாக சொல்வது உண்மையாக இருக்குமா ? இல்லை தேர்தலுக்காக ஏமாற்று வேலையாக இருக்குமா ?

ஜெயலலிதாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்தாலும் எந்த ஆதரவும் எதிர்ப்பும் இல்லாமலாவது இருந்திருக்கலாம் ! இப்படி தன்னை மதிக்காத ஒரு கட்சிக்கு போயி வீம்பா ஆதரவு தெரிவித்து நீங்கள் நடத்திய போராட்டத்திற்காக வந்த மக்களின் கண்ணியத்திலும் , உங்களின் மரியாதையிலும் தான் குறைவை ஏற்படுத்தி உள்ளீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா ?

இனி வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொன்ன உங்க ஆவேசம் என்ன ஆயிற்று ?

நேற்று தான் " மமக மானம் காத்த லட்சனம்னு " சொல்லி பெருசா பேசுனீங்க...இப்ப நீங்க மொத்த முஸ்லிம்களின் மானத்தையும் காத்துல பறக்கவிட்டு வந்து நிற்க்குரீன்களே ? இது நியாயமா ?

இனி தயவு செய்து யாரையும் போராட்டம் , அறைகூவல் , என்று கூறி அழைத்து மொத்த மக்களையும் அசிங்கப்படுத்த வேண்டாம் ! பிளீஸ்.


நன்றி : நாகூர் மீரான்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...