(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, January 4, 2013

காரைக்கால் சகோதரி வினோதினிக்கு நாமும் உதவலாம்

காதல் என்ற ஒற்றை விசயத்தை வைத்துக்கொண்டு சமூகத்தை தவறான பாதையில் கொண்டுசெல்லும் கேடுகெட்ட சினிமா சமூகத்திற்கு சொல்லிகொடுத்த வக்கிரங்கள் கொஞ்ச நஞ்சமில்ல... 

காரைக்காலை சேர்ந்த வினோதினி. சென்னை சைதாப்பேட்டையில் தங்கி இருந்து சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரை ஒருதலையாக காதலித்த கட்டிடத் தொழிலாளி சுரேஷ் தனது காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது ஆசிட் வீசினார். 

இதில் வினோதினியின் முகம் மற்றும் உடலில் பல பகுதிகள் கருகிப்போனது. முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வினோதினி. நேரடியாக ஆசிட் வீசப்பட்டதால் வினோதினியின் இரு கண்களும் எரிந்து பார்வை பறிபோய் விட்டது. தொடையில் உள்ள சதையை வெட்டி எடுத்து முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.



 கண்ணையும் சதையால் தைத்து மூடி உள்ளனர். வருங்காலத்தில் கண்ணின் அடையாளமாக செயற்கை கண்கள் பெருத்தலாம் என்று கூறப்படுகிறது. வினோதினியின் தந்தை ஜெயபாலன் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறார். உயர் சிகிச்சை அளிக்கப்படுவதால் மகளின் மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். 

கண்கள் இழந்து, எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் வாழப்போராடிக்கொண்டிருக்கும் இந்த இளம்பெண்ணுக்கு உதவி கரம் நீட்டும்படி பொதுமக்களுக்கு வினோதினியின் உறவினர்களும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வினோதினிக்கு உதவி செய்ய விரும்புவோர் அவரின் தந்தை வங்கி கணக்கில் தங்கள் உதவியினை அனுப்பி வைக்கலாம்: 

JAYAPALAN a/c number 603899558, 
INDIAN BANK, Kilpauk branch, Chennai, IFCS CODE: IDIB000k037

புதுச்சேரி முதல்வர் நிதி உதவி இதனிடையே புதுவை முதல்வர் ரங்கசாமி அரசு சார்பில் நிதியுதவி அளிக்கவேண்டுமென வினோதினியின் தந்தை ஜெயபாலன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம் மூலம் அரசை அணுகினார். 

அவருக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கவேண்டுமெனவும், ஜெயபாலின் கோரிக்கையை நாஜிம் முதல்வருக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்ற முதல்வர் ரங்கசாமி ரூ.2 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். இணையதளம் தொடக்கம் வினோதினியைத் தொடர்பு கொண்டு உதவிகளைத் தெரிவிக்க 

விரும்புவோருக்கான தொலைபேசி எண் ரமேஷ், வினோதினியின் தாய்மாமன் - 0-9944161416. வினோதினிக்கு மேலும் உதவி செய்ய விரும்புவோர் http://www.helpvinodhini.com/#!news-in-medias/cs57 இந்த இணையதளத்திற்குச் சென்று தகவல்களை அறிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...