(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, April 2, 2011

முஸ்லிம்களின் ஓட்டுக்களை சிதறடிக்கும் அமைப்புக்களும் ,கட்சிகளும்

தமிழக அரசியல்களம் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது மாறுபட்ட சூழலை சந்தித்து வருகிறது . அதுவும் முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமான சூழலில் தான் இருக்கிறது.

திமுக ,அதிமுக என்று பெரும் கூட்டணியில் இரு அணிகள் இருந்தாலும் இந்த இரு அணிகளின் ஓட்டு வங்கியை பிரிக்க பெருவாரியான கட்சிகள், பேரவைகள் களத்தில் தனித்து நிற்கின்றன.

பரிவேந்தனின் இந்திய ஜனநாயக கட்சி ,
தலித்களை குறிவைத்து ஜான்பண்டியனின் 
தமிழக மக்கள் முன்னேற்றகழகம்,
பிள்ளையார் சாதிகளை குறிவைத்து வ.உ.சி பேரவை ,
தலித் சமூகத்தை சார்ந்த முன்னால் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமியின் 
சமூக சமத்துவப்படை,
செட்டியார்களின் ஓட்டுகளை குறிவைத்து 
நம்பி வாணிப செட்டியார் பேரவை,
முதலியார்களின் ஓட்டுகளை குறிவைத்து
,சி சண்முகம்களத்தில் இறங்குகிறார். 
தேவர்களின் ஓட்டுகளை பிரிக்க கார்த்திகின் 
நாடாளும் கட்சி,
தலித் ஓட்டுகளை மேலும் பிரிக்க பூவை ஜெகன் மூர்த்தியின் 
புரட்சி பாரத கட்சி ஆகியவை தனி அணியாக நிற்கின்றன.
தனி தனியாக வேட்பாளர்களை களமிறக்கி இருக்கின்றன.
இந்த சாதி கட்சிகளால் நிச்சயம் சாதி ஓட்டுகள் பிரியும்.
மேலும் மதவெறியர்களின் ஓட்டுக்களை குறிவைத்து 
பா.ஜ.க தலைமையில் ஒரு அணி.

இதுபோக அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து ஆங்காங்கே போட்டி வேட்ப்பாளர்களும்,சுயேட்சைகளும் களத்தில் உள்ளனர்.மேலும் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் திமுக மேல் அதிருப்தியில்  உள்ள காங்கிரஸ் ஆதரவு தொண்டர்களும் ,காங்கிரஸ் மேல் அதிருப்தியில்  உள்ள திமுக ஆதரவு தொண்டர்களும் இருகின்றனர்.இவர்கள் ஓட்டும் இடம்மாறலாம். 

இது போதாது என்று மதிமுக தேர்தலை புறக்கணித்தாலும் அதன் ஆதரவு மக்களின் ஓட்டும் சிதறும் நிலையில் இருக்கிறது. பத்தாத குறைக்கு அதிமுகவை அவமதிக்கும் விதமாக விஜயகாந்த் நடந்து வருவதால் தேமுதிகவிற்கு அதிமுக தொண்டர்கள் ஓட்டு போடுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 
   
இப்படி ஆங்காங்கே ஓட்டுகள் பிரிவதால் முஸ்லிம்களின் ஓட்டுகளுக்கு குறிப்பாக இந்த தேர்தலில் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது..

சில வேட்ப்பாளர்கள் சில நூறு ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றிபெறுவார்கள் என்றும்.. இன்னும் பெருபான்மையான வேட்ப்பாளர்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ஓட்டுகளுக்குல்லாகவே தான் வெற்றி பெற முடியும் என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த வெற்றி ஓட்டுக்கள் தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் முஸ்லிம்களிடம் தான் இருக்கிறது என்பதை முஸ்லிம் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும்...

ஒரு வேலை முஸ்லிம் சமூகத்தின் ஓட்டு ஒரு சேர மொத்தமாக ஒரே நிலைபாட்டில் இருக்குமானால் இந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லீம்கள் பெருபான்மையாக இருக்கும் தொகுதியில் வெற்றி,தோல்வியை நிர்ணயிக்கும் ஓட்டு ஆயுதம் முஸ்லிகளின் கையில்...

ஆனால் இதை வீணடிக்கும் முயற்சியில் இஸ்லாமிய கட்சிகள் ,இயக்கங்கள்,அமைப்புகள் முனைப்புடன் செயல்பட்டுவருவது வேதனைக்குரியது..


இஸ்லாமிய கட்சிகளின் மற்றும் அமைப்புகளின் நிலைப்பாடு 
  
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் :

திமுகவின் சிறுபான்மை பிரிவு  என்று சொல்லும் அளவிற்கு கல்லானாலும் கலைஞர் என்று தனது கட்சியை தாரைவார்த்துவிட்டது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.மூன்று தொகுதிகளை பெற்றுக்கொண்டு சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுகிறது.

 
மனிதநேய மக்கள் கட்சி:
அதிமுக ம.ம.க விற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கி சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்ததால் மமக - அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது.


Social Democratic Party of India(SDPI):
தமிழகத்தில் SDPI போட்டியிடும் 8 தொகுதிகள் போக எஞ்சிய தொகுதிகளில் சேப்பாக்கம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சிக்கும்,அறந்தாங்கி தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சிக்கும்,எஞ்சிய தொகுதியில் தி.மு.க கூட்டணிக்கும் SDPI தனது ஆதரவை பிரித்து அறிவித்துள்ளது SDPI.

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் :
திமுக தனது தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு உயர்த்துவதற்கு வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எந்த ஒன்றையும் அளிப்பதாக தெரிவிக்கவில்லை ஆதலால் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு  என்று அறிவித்துள்ளது.

இந்திய தௌஹீத் ஜமாஅத்:
அதிமுக ஆட்சியில் தான் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் புதுபிக்கபட்டது. கருணாநீதி வழங்கிய இடஒதுக்கீட்டிற்கு முக்கிய காரணம் அதிமுக ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் புதுபிக்கபட்டதுதான் ஆதலால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு என்று தெரிவித்துள்ளது.

 
இப்படியாக ஆளுக்கு ஒருபுறம் தங்களின் ஓட்டுக்களை சிதறடித்து வருகின்றனர்.இதில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் , இந்திய தௌஹீத் ஜமாஅத் இரெண்டும் தேர்தலில் போட்டியிடுபவை கிடையாது ஆதரவு மட்டுமே.மற்ற மூன்று கட்சியும் ( இ.யூ.மு.லீ , ம.ம.க, எஸ்.டி.பீ.ஐ ) தேர்தலில் போட்டியிடுகின்றன..

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் நிலைப்பாடு தான் சரி என்று வாதிடுகின்றனர்.. அத்தோடு நில்லாமல் ஒருவரை ஒருவர் சாடி வருகிறார்கள்.

கடந்த தேர்தலில் ஒரு அமைப்பு அதிமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது மற்றொரு அமைப்பு திமுக விற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது .. முஸ்லிம்கள் ஜெயலலிதா விற்கு ஒட்டுபோடலாமா
என்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது ஒரு அமைப்பு, மற்றொருபுறம்  கருணாநீதி நம்பவைத்து கலுதருகிறார் அவரை 
நம்பகூடாது முஸ்லிம் சமூகத்திற்கு எது நன்மையோ அதை தான் 
பார்க்கவேண்டும் என்று கூறியது எதிர் அமைப்பு.

ஆனால் இந்த தேர்தலில் அப்படியே தலைகீழாக மாறியது அமைப்புகளின் தேர்தல் நிலைப்பாடு..! இப்பவும் பாருங்க ரெண்டு பெரும் ஒருத்தரை ஒருத்தர் குறை 
கூறியவரே இருகிறார்கள். முதலில் கலைஞரை ஆதரித்தவர்கள் இப்போது ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள்.
முன்பு ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இப்போது கருணாநீதியை ஆதரிக்கிறார்கள். சரி ஒரு கோரிக்கையை வச்சு த்தானே ஆதரிகிறாங்க அதுல ஏன் மாறுபடுகின்றார்கள்.?இது நமக்கு எரிச்சலை த்தான் தருகிறது   தேர்தலுக்கு,தேர்தல் இதே நிலைத்தான் நீடிக்கிறது.

கிட்டத்தட்ட பாத்திங்கன்னா எல்லாரும் தேர்தலில் பேசுறது இடஒதுக்கீடு ..அதவச்சு தான் ஆதரவு தெரிவிகிறாங்க , கூட்டணி வைக்கிறாங்க .. ஒரே கோரிக்கையை வச்சு ஆளுக்கு ஒருபக்கம் ஆதரவு தெரிவிகிறாங்கலே அது எப்டின்னு தான் புரியமாட்டேங்குது.
  

ஒவ்வொரு தேர்தலிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்று  ஆதரிக்க வேண்டியது. தேர்தல் முடிவுகள் வந்தவுடன் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெரும் உடனே எங்களால் தான் வெற்றி பெற்றது முஸ்லிம் சமூகம் எங்கள் பக்கம் என்று பேட்டி கொடுக்கவேண்டியது.உண்மையில் நம் சமூகத்தின் ஓட்டுதான் வெற்றிக்கு மூலதனம் என்று இந்த குளறுபடியில் உறுதியாக சொல்லமுடியாது.

ஹிந்துக்களில் ஜாதி ஓட்டுக்கள் பிரிவதுபோல் நம் சமூகத்தில் கட்சிகள்,அமைப்புகள் மூலமாக ஓட்டுக்கள் பிரிகின்றன. 

போதுபிரச்சனைக்கு ஒன்று கூடுவோம் என்று இவர்களை ஒன்றிணைக்க பல வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எல்லாமே இறுதியில் தோல்வியைத்தான் சந்தித்தன.

ஒற்றுமைகாக அனைத்து அமைப்புகளையும் இணைத்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தும் கூட அதில் யார் முதலில் பேசுவது , எந்த இயக்கத்தின் பெயரில் தலைமை தாங்குவது , யாருடைய கருத்தை ஏற்பது என்று பிரச்சனை வருகிறது என்றால் என்னவென்று சொல்வது.

கடந்த அதிமுக ஆட்சியில் அதிசயமாக பல தலைவர்கள் ஒன்றிணைந்து இடஒதுக்கீடை முன்னிறுத்தி  பல கோரிக்கைகளோடு முதல்வரை சந்தித்தார்கள் ..  அந்த சந்திப்பு  முடிந்தது தான் தாமதம் ஆளுக்கொரு விதமாக பேசிக்கொண்டு ,குற்றசாட்டி கொண்டு பிரிந்துவிட்டார்கள்..

சமீபத்தில் சென்னை பாரிமுனை பள்ளி வளாகத்தை கைபற்ற முனைந்த சமூக விரோதிகளை எதிர்த்து நின்று ஆர்பரித்து அனைத்து அமைப்பும் ஒன்றுகூடி மீட்டது!

ஏன்  எல்லாரும் போனிங்க ? அல்லாஹ்வுடைய பள்ளிவாசலை விட்டுகொடுக்க கூடாது என்று தானே. அதே அல்லாஹ் நம்மை இந்த மார்க்கத்தின் மூலம் சகோதர்களாக ஆக்கினான் அதை நீங்கள் ஏற்றுகொள்ளவில்லையா?

(திருக்குரான் 3:103 )இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.

இராக்கில், பாலஸ்தீனத்தில் ஒரு முஸ்லிம் பாதிக்கப்பட்டால்
நாம் மனம் கலங்ககுகிறோம் ஏன்?  இந்த பாசத்தை ,சகோதரதுவத்தை கொடுத்தது எது ? நாம் ஏற்றுக்கொண்டு இருக்கும் சத்தியமார்க்கம் அது தான் நம்மை ஒன்றினைகிறது. எங்கோ இருக்கும் பாதிக்கப்படும் சகோதரனுக்காக கவலைப்படும் நாம் .. பக்கத்தில் இருக்கும் ஒரு இஸ்லாமிய சகோதரனுக்கு அவன் வேறு அமைப்பு என்ற காரணத்திற்காக  ஸலாம் கூட சொல்ல மறுக்கிரொமே இது தான் இஸ்லாம் நமக்கு வழிகாட்டியதா சகோதர்களே ?

நீங்கள் எந்த அமைப்பை சார்ந்தவராகவும் இருங்கள் ஆனால் மற்றவர்களை மதியுங்கள். கருத்துவேறுபாடு என்பது மனிதனுக்கு இயல்பானது அதற்காக குரோதத்தை வளர்த்துகொல்வது நல்லதா ?

ஆக ஒன்றிணைந்த சரியான தலைமை இல்லாமல் தமிழக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்பதே எதார்த்த உண்மை

இப்படி பிளவுபட்டு நிற்கும் போதே அரசியல் கட்சிகள் நம்மை தாங்கி பிடிக்கிறது.. ஒன்றுபட்டால் ...? வருங்காலத்தில் அரசியல் கட்சிகள் நம் சமூகத்தின்  பிடியில் இருக்கும் இன்ஷாஅல்லாஹ்...

இஸ்லாமிய இயக்கங்கள்,அமைப்புகள்,ஜமாஅத்கள்,பேரவைகள் அனைத்திற்கு ஒரு வேண்டுகோள் :
நீங்கள் நல்ல நோக்கதிற்காக உங்கள் இயக்கங்களை ,அமைப்புகளை வழிநடத்தி வருகிறீர்கள்.. உங்கள் அமைப்புகள் சார்பாக அனேக நல்ல காரியங்கள் செய்து வருகிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அதையெல்லாம் மறுக்க முடியாது அதே சமயம் உங்களிடம் இயக்கவெறி சற்று இருக்கத்தான் செய்கிறது.. இது தலைமை பொறுப்பில் இருக்கும் உங்களிடம் மட்டும் இருந்தால் கூட சகித்துகொள்ளலாம் ஆனால் உங்கள் இயக்கத்தில் இருக்கும் என் சகோதரன் ஒவ்வொருவரின் இடத்தும் அவர்களுக்கு தெரிந்தோ ,தெரியாமலோ இருக்கத்தான் செய்கிறது. இதை களைய வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது.. 

நீங்களும் உங்கள் இயக்க சகோதர்களும் மற்ற சகோதர இயக்கத்தை அரவணைத்து செல்லவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.   

ஜசகல்லாஹ்.

2 comments:

  1. நன்றாக எடுத்து சொன்னிர்கள், அல்லாஹ்தான் எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டும்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Assalamu Alaikkum,
    It is a very good article. We pray to The ALMIGHTY to give Hidayath to our so called leaders.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...