(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, March 18, 2011

மருத்துவ முகாமை புறக்கணிப்போம் !!!

அஸ்ஸலாமு அழைக்கும்....

மார்க் - காரைக்கால் துறைமுகம் மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ நிறுவனம் இணைந்து -

பொதுமக்களுக்கு இலவச  சிறப்பு பொது மருத்துவ முகாமை நாளை சனிக்கிழமை 19-03-2011 அன்று நாகூர் முஸ்லிம் சங்கத்தில் (குஜ்சாலி மரைக்காயர் தெரு)  நடத்துவதாக அறிவித்துள்ளது..

இதில் கவனிக்க படவேண்டியது என்னவென்றால்...

# சமீபகாலமாக இதே காரைக்கால் துறைமுகத்தால் பல சுற்றுசூழல் பிரச்சனைகளை நம் ஊர் சந்தித்து வருகிறது அதற்க்கு எந்த வித முழுமையான நடவடிக்கைகள் துறைமுகம் எடுத்தப்பாடில்லை இவ்வேளையில் இவர்கள் நமக்காக மருத்துவமுகாம் நடத்துவது தேவை அற்றது.

#  நிலக்கரி துகள்களால் ஏற்படும் பாரதுரமான விளைவுகளை எண்ணி நாம் செய்து வரும் போராட்டங்களை செயலிழக்க செய்யும் உக்கதியாக இது பார்க்கப்படுகிறது.

# இந்த மருத்துவ முகாமை நடத்துவதற்கு நாகூர் முஸ்லிம் சங்கம் எந்த விதத்தில் அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.

# ஆகவே குழந்தையை கிள்ளிவிட்டு -தொட்டி ஆட்டும் காரைக்கால் துறைமுகம் நடத்தும் இந்த மருத்துவ முகாமை நம் ஊர் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

# மேலும் துறைமுகதினால் ஏற்படும் பாதிப்புக்களுக்கு நிரந்தர தீர்வுக்கான நடத்தப்படும் போராட்டங்களுக்கு ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

- நாகூர் மக்கள் நலம்விரும்பிகள். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...