(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, February 25, 2011

நாகூரில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம்லீகின் மாநில பொதுக்குழு கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம்  நாகூர் மாடர்ன் மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் 24.2.2011 காலை 10.30 மணி யளவில் தொடங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 1,176 பொதுக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழுவில் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-

தமிழக சட்டமன்ற தேர்தலில்

வெற்றி வாகை சூடுவோம்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளது.

மக்கள் நலப் பணிகளில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக செயல்படும் டாக்டர் கலைஞர் தலைமையிலான அரசு மீண்டும் தொடர தி.மு.க தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யும் வகையில் திட்டமிட்டு செயலாற்றுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இந்த மாநில பொதுக்கூட்டம் உறுதி மேற்கொள்கிறது.

மதம் மாறிய முஸ்லிம்களுக்கு

பிற்பட்ட வகுப்பு சான்று

தமிழகத்தில் மதம் மாறிய முஸ்லிம்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் மறுப்பதோடு வற்புறுத்தி கேட்பவர்களுக்கு """"இஸ்லாம் மதம் மாறியவர்�� என்றே சான்றளிக் கின்றனர்.

தமிழக சாதி பட்டியலில் ``இஸ்லாம் மதம் மாறியவர்�� என்று ஒரு சாதி இல்லாததால், முஸ்லிம்களாக மதம் மாறியோர் கல்வி கற்கவோ, அரசு நிதியுதவி பெறவோ, வேலை வாய்ப்பு பெறவோ முடியாத நிலையில் உள்ளனர்.

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு பிற்பட்ட வகுப்பு சான்று வழங்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கு தாழ்த்தப்பட்ட வர்களுக்கான சலுகைகள் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இது தவிர வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அண்மையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே மதம் மாறிய முஸ்லிம்களுக்கும் பிற்பட்ட வகுப்பினருக்கான சான்று வழங்க அரசாணை பிறப்பிப்பதோடு, வரும் கல்வியாண்டில் பயன்பெறும் வகையில் சாதி சான்று கேட்டு விண்ணப்பித்த இஸ்லாத்தில் சேர்ந்தவர்களுக்கு """"பிற்பட்ட வகுப்பு�� என சான்று வழங்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்கள் அனைவரையும் பிற்பட்ட வகுப்பினர் என அறிவிக்க வேண்டுதல்
முஸ்லிம்களை லெப்பை, தக்னி, மாப்பிள்ளா, தூதேகுளா அன்சர், ஷேக், செய்யது என சாதி வாரியாக மத்திய மாநில அரசுகள் பிரித்துள்ளன. மாநில அரசு அங்கீகரித்துள்ள சில பிரிவுகள் மத்திய அரசில் அங்கீகரிக்கப்படவில்லை.

கணக் கெடுப்புக்களின் போதும், சாதி சான்றிதழ் பெறும் போதும் என்ன பிரிவு போடுவது என்பதில் தமிழக முஸ்லிம்கள் தடுமாறுகின்றனர். ஏழு பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்ய நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் குழு அமைத்து 27.01.2011 -ல் அரசு ஆணை வெளியிட்டது போல் அரசு பிரித்து வைத்துள்ள முஸ்லிம்களின் அனைத்துபிரிவுகளையும் ஒன் றிணைத்து, புதிதாக இஸ்லாத்தில் இணைந்த வர்களையும் சேர்த்து முஸ்லிம்கள் அனைவரும் ``பிற்பட்ட வகுப்பினர்�� என அறிவித்து அரசு ஆணை வெளியிட தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

சமச்சீர் கல்வியில் சிறுபான்மை மொழிகள்
தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டதை அனைவரும் வரவேற்கின்றனர். அதே சமயம் சிறுபான்மை மக்களின் தாய் மொழியை கற்கவும் வாய்ப்பு ஏற்படுத்த கோரிக்கை வைத்தனர்.

2010 டிசம்பர் 11 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அறிவித்த தற்கிணங்க, சமச்சீர் கல்வி திட்டத்தில் உருது, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழிகளை கற்கவும் தேர்வு எழுதவும் வாய்ப்பளித்து 15.12.2010-ல் அரசாணை பிறப்பிக் கப்பட்டது.

விரும்பும் பள்ளிக் கூடங்கள் அனைத்திலும் உருது, அரபி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை கற்க இந்த அரசாணை வாய்ப்பு ஏற்படுத்தி தந்ததற்காக மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம். அதே நேரம் சிறுபான்மை மொழிகளின் தேர்வு மதிப்பெண்கள் தேர்ச்சிக்கு கணக்கிடப்பட்டால்தான் அம்மொழிகளை கற்கும் ஆர்வம் வரும் என்பதால் அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

திருமண கட்டாய பதிவு சட்டத்தில் திருத்தம்உச்ச நீதி மன்றத்தின் ஆலோசனையைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாகப் பதிவு செய்ய 30.06.2009-ல் சட்ட முன் வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு 24.11.2009 முதல் அமலுக்கு வந்தது.

இச்சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்திற்கு பாதகம் ஏற்படுத்திவிடுமோ என முஸ்லிம்கள் தரப்பில் தெரி விக்கப்பட்ட அச்சங்களைத் தொடர்ந்து தமிழக அரசு அச்சட்டத்திற்கு திருத்தம் செய்து 26.08.2010 அன்று அரசாணை வெளியிட்டது.

ஆயினும் திருமணங்களை பதிவு செய்வதில் சிரமங்களும் நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டன.

இஸ்லாமியத் திருமணங்களைப் பொறுத்தவரை அவை உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு பள்ளிவாசல்களில் பராமரிக்கப்படுகின்றன.

இந்து மத முறைப்படி கோவில்களில் செய்யப்படும் திருமணங்களை பதிவு செய்யும் கோவில் நிர்வாக அதிகாரிகளையே திருமண பதிவாளர்களாகவும் அறிவித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனவே காஜி சட்டம் நடைமுறையில் உள்ள தமிழ்நாட்டில் காஜிகள், நாயிப் காஜிகள் என்ற இமாம்கள் பள்ளிவாசல் திருமண பதிவேடுகளில் பதிவு செய்யும் இஸ்லாமிய திருமணங்களை, பதிவிற்கு அப்படியே ஏற்க தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை

5 சதவிகிதமாக உயர்த்தி தர வேண்டுதல்


கல்வி வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ள சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதோடு, அந்த இட ஒதுக்கீட்டின் பலன் முஸ்லிம்களை முழுமையாக சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கோடு தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழு அமைத்து உத்தரவிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

11.12.2010 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் முன் மொழியப்பட்டு மாண்புமிகு தமிழக முதல்வர் பரிசீலனை செய்வதாக அறிவித்த முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 5 சதவிகிதமாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கையை விரைவாக நிறைவேற்றித் தருமாறு மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தல்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும், மீனவர்கள் உயிர் உடமைகள் பாதுகாக்கப்படவும், நிம்மதியாக மீன்பிடி தொழில் செய்யவும் உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

நிலக்கரிதுகள்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுதல் காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த நிலக்கரி திறந்த வெளியில் கொட்டப்பட்டு தடுப்புகள் இல்லாததால் நிலக்கரி துகள்கள் காற்றின் மூலம் பரவி நாகூர் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்கள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் ஆஸ்த்மா உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே இத்துறைமுகத்திலிருந்து நிலக்கரி துகள்கள் காற்றில் பரவாமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய துறைமுக நிர்வாகத்தையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் விழிப்புணர்வு

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த பிப்ரவரி 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது.

அதே போன்று வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வர்களின் பெயர்கள் சேர்க்கப்படு வதற்கான காலக்கெடுவும் நீட்டித்துத் தரப்பட் டுள்ளது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு போன்ற அத்தியாவசிய கடமைகளில் விழிப்புடன் பணியாற்றுமாறும், எவரது பெயரும் விடுபடாமல் சேர்ப்பதற்கு உடனடியாக முயற்சிக்குமாறும் பள்ளிவாசல்களில் உரிய அறிவிப்பு செய்ய மஹல்லா ஜமாஅத்துக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...