(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, February 23, 2011

வி.ஏ.ஒ தேர்வும் எதிர்பாராத கேள்வியும்...

தமிழகம் முழுவதும் கடந்த பிப்.20  அன்று வி.ஏ.ஒ தேர்வு நடைபெற்றது. ஒன்பதுலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினார்கள்.




அதில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது..

யாருக்கு எதிராக கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்டது ?
1.ஆங்கில அரசு
2. இந்துக்கள்
3.முஸ்லிம்கள்
4.கிருஸ்துவர்கள்.


இதற்கு ஆங்கில அரசு என்பதே சரியான விடை.

முஸ்லிம்களுக்கு இந்திய விடுதலை போரில் சம்மந்தமில்லை என்பது போல் வரலாற்றில் திரிபு செய்யும் இக்காலகட்டத்தில் முஸ்லீம்கள் இந்திய விடுதலைக்காக ஒரு மார்க்கரீதியான இயக்கத்தை தோற்றுவித்தார்கள் என்பதை வெட்டவெளிச்சம் போட்டு காட்டும் செயலாக இதை பார்க்கலாம்.

லட்சக்கனக்கானோர் எழுதிய தேர்வு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.இருப்பினும் எத்தனை அறிவுஜீவிகள் 2.இந்துக்கள் என்று  விடை அளிதார்களோ என்னவோ..

என்னென்றால் சில மாற்றுமத சகோதர்களை பொருத்தவரை கிலாபத் என்றாலே ஏதோ ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்கள் செய்யும் வினை என்றே எண்ணுகிறார்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...