(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, January 3, 2011

காரைக்காலில் பழமையான பாலம் சேதம்: போக்குவரத்து நிறுத்தம்




காரைக்கால்: தேசிய நெடுஞ்சாலையில் நாகபட்டினத்தையும் காரைக்காலையும் இணைக்கும் பழமை வாய்ந்த பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் டி. ஆர். பட்டினத்தில் உள்ளது திருமலைராஜனார் பாலம். இந்த பாலம் கடந்த 1853-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டவர்களால் கட்டப்பட்டது

இதன் அடிப்பகுதியில் திடீர் என்று செங்கல் கற்கள் பெயர்ந்து விழுந்தன. இந்த தகவல் அறிந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் பாலத்தை பார்வையிட்டனர்.

பாலம் இனி வாகனப் போக்குவரத்திற்கு பயன்படாது என்று அவர்கள் தெரிவித்தனர். , நாகப்பட்டினம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் பனங்காட்டான்குடி வழியாகத் திருப்பிவிடப்பட்டன.

இந்த பாலம் பழுதடைந்து இருப்பதாக நெடுங்காலமாகவே மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...