(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, November 12, 2010

சினிமா, டிவி சீரியல்களை பார்ப்பதை புறக்கணித்து குழந்தைகளை பாதுகாப்போம்..


கோவை பள்ளி மாணவர்கள் ரித்திக் (8) மற்றும் முஸ்கான் ஆஸ்வால் (11) ஆகிய இருவர், கால் டாக்சி ஓட்டுனரால் கடத்தி கொலை செய்யப்பட்டனர். இத்தகைய சம்பவம், இனிமேல் நடக்காமல் தவிர்ப்பது தொடர்பாகவும், சமீப காலமாக அதிகரித்து வரும் குழந்தைகள் மீதான தாக்குதல் சம்பவங்களுக்கு தீர்வு காண்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம், கிக்கானி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்,  கோவை மாவட்ட மெட்ரிக் அகாடமிக் கவுன்சில் சார்பில்  நடத்தப்பட்டது.  அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் முதல்வர்கள், மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோர் பெரும்திரளாக பங்கேற்றனர்.
.
பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் பேசியதாவது,
நம் குழந்தைகள் அணியும் உடைகள் கூட பெரிய பிரச்னைகளை கொண்டு வந்து விடுகின்றன. தந்தையின் பின்னால் அமர்ந்து செல்லும் நம் மகள்களின் பள்ளி சீருடைகள், பிறர் கண்களை உறுத்தும் அளவுக்கு உள்ளன.  சீருடைகளை மாற்ற வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மட்டுமே நாட்டின் பாதுகாப்பு. பெண் குழந்தைகளுக்கு நிகராக ஆண் குழந்தைகளும் இன்று பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை ஒத்துக் கொள்ள வேண்டும். அரைகுறை உடை அணிவித்து “ரியாலிட்டி Showக்களில் நம் குழந்தைகளை காட்சிப் பொருளாக்கும் நாம்தான் இதற்கு காரணம்.
ஆட்டோக்களில் மூன்று பேருக்கு மேல் பயணிக்க கூடாது என போக்குவரத்து துறை சட்டம் கூறுகிறது. அதே ஆட்டோவில் இருபது குழந்தைகளை திணித்து கொண்டு சென்றால் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?
முதுகில் புத்தக மூட்டையை சுமந்தபடி அரசு பஸ்சின் பின்னால் ஓடும் நம் மாணவியரின் விலகும் உடைகளை அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம். நிறுத்தாமல் வேகம் எடுக்கும் பஸ்சை எவரும் கண்டிப்பதில்லை. உடைகளை சரி செய்தபடி பஸ்சை பிடிக்க ஓடும் அந்த மாணவியின் இடத்தில் இருந்து பிரச்னையை நாம் பார்க்க வேண்டும்.
பெண்களையும் குழந்தைகளையும் மோசமாக சித்திகரிக்கும் சினிமாக்களையும் “டிவி’ சீரியல்களையும் புறக்கணிப்போம். குழந்தைகளுடன் தினமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுங்கள். பள்ளியில் நடந்தவற்றை தினமும் காது கொடுத்து கேளுங்கள், என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...