(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, July 16, 2010

அப்பாடா ....!!!??? கோழி - முட்டை கேள்விக்கு விடை கிடைத்தது !!!

அப்பாடா ....!!!???

கோழி வந்ததா? முதலில் முட்டை வந்ததா?என்ற கேள்வி, இது வரை யாராலுமே விஞ்ஞான பூர்வமாக பதில் அளிக்க முடியாதா ஒரு கேள்வியாக இருந்தது.

கோழியில் இருந்து தான் முட்டை வந்தது என்றால் கோழி எப்படி வந்தது என்பார்கள் ... இல்லை முட்டையில் இருந்து தான் கோழி வந்தது என்றால் முட்டை எப்படி வந்தது என்பார்கள் ..

ஆனால், தற்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாம். இது குறித்து,
இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டு இதற்கான விடையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வின் முடிவாக, கோழிலிருந்துதான் முட்டை வந்தது என்று உறுதி செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது பற்றி ஆய்வு நடத்தினார்கள். விஞ்ஞானிகள், முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர்.

அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக மாறி இருக்கிறது. இந்த வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அவங்க என்ன சொன்னாலும் நாங்க அந்த முட்டை ,கோழி மேட்டரை விடமாடோம் என்று நீங்கள் சொல்வது புரிகிறது ...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...