(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, November 20, 2014

தமிழகத்தில் ஜனவரி முதல் நேரடி சிலிண்டர் மானியம் – அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜனவரி முதல் சமையல் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஜனவரி 1 முதல் சமையல் சிலிண்டர்களுக்கான நேரடி மானியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


சமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கே வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. நாட்டின் ஒரு சில பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுளள இந்த திட்டம் தமிழகத்தில் ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது, முழு தொகையையும் செலுத்த வேண்டும். பதிலுக்கு அவர்களுக்கான மானியத் தொகையை அரசு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும். 


இந்த மானியத்தைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரத்தை எரிவாயு முகவர்களிடம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி : ஒன் இந்தியா.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...