(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, April 28, 2012

நாகூரில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் - நடவடிக்கை தேவை

நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பெயரில் கடந்த 25ம் தேதி நாகை நகரில் சுற்றிதிரிந்து வந்த மனநலம் பாதிக்கபட்டவர்கள் பிடிக்கப்பட்டு - சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.



இது மிக அவசியமான நடவடிக்கை இதற்க்காக மாவட்ட கலெக்டரை பாராட்டியாக வேண்டும்.. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதை விட சிறந்த உதவி வேறு ஏதும் இருக்க முடியாது.


இதை போல் நாகூரிலும் மனநலம் பாதிக்கபட்டவர்கள் அதிகமாக சுற்றி திரிகிறார்கள். நாகூர் ரயில் நிலையம் முன்பு கடைசி நிறுத்தமாக இருந்ததால் பல மனநோயாளிகள் இங்கே இறக்குமதி செய்யபட்டுள்ளர்கள்.


அதே போல் மனநோயிற்கு மருத்துவம் வழங்க முடியாமல் சில நோயாளிகளின் குடும்பதினர் தர்காவில் அவர்களை விட்டு சென்றுள்ளனர். ஆகவே இவர்களையும் மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட கலெக்டருக்கு நாகூர் மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறோம்.


குறிப்பு : இது சம்மந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மாவட்ட கலெக்டருக்கு மின்னஜ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...