(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, March 30, 2012

மார்க் துறைமுக பிரச்சனையில் ஆதாயம் அடைந்தது யார் ? அதிர்ச்சி பின்னணி

ஷாகுல் ஹமீது சாஹிப் (nagoredarghatrustee@gmail.com ) என்ற சகோதரர்

மார்க் துறைமுகம் தொடர்பாக தமது ஆதங்கத்தை நம்மிடம் பதிவு செய்துள்ளார்.
மிக வெளிப்படையாக ஆதார பின்னணியில் தாம் சிலர் மீது குற்றம் சுமத்துவதாக கூறும் ஷாகுல் ஹமீது சாஹிப் தேவைபட்டால் அதற்க்கான ஆதாரத்தையும் வெளியிட முடியும் என்கிறார்...

அவர் நமக்கு இமெயிலில் அனுப்பியதை எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்( முழுமையாக படித்து விட்டு  உங்கள் கருத்தை பதிவுசெய்யுங்கள் )



 \"மார்க்\"கினால் - காரைக்கால் பெற்றது வரம்...ஆனது தரம்.... ஆனால் .நாகூர் ??????

நாகூர் - காரைக்கால் மார்க் துறைமுகம் என்று நிலக்கரியை இறக்குமதி செய்ததோ.. அன்றிலுருந்து நாகூர் மக்கள் கருக்க தொடங்கினர். அதன் மூலம் எண்ணற்ற நோய்கள் காற்று மூலம் பரவி மக்களை வாட்டி வைதைத்தாலும் பல தரப்பட்ட போராட்டங்களை சில சங்கங்ககள் மக்களுக்காக செய்தாலும் கருக்க தொடங்கிய மக்களின் நிறத்திலும் தனது சுய நிறத்தை மெருகேற்றிய புன்னியாவான்களின் மறுபக்கம் இந்த கட்டுரை..

பணமே குறிக்கோள் என்று மார்க் நிறுவனம் போதுமான முன்னேற்பாடு / வசதியின்றி / பாதுகாத்தல் வசதி இல்லாத போதிலும் பணமே வெல்லும் என்றே ஒரே குறிக்கோளுடன் நிலக்கரியை இறக்குமதி செய்தனர். கருமலை போல நிலக்கரி எந்தவித பாதுகாப்பும் அன்றி அப்படியே கொட்டி வைக்கப்பட்டது. கடலோர மாவட்டம் / காற்று அடிக்கும் திசை நாகூர் என்பதாலே அனைத்து கரி துகள்களும் கரி காற்றாகி நமது வீட்டை மட்டுமல்லாமல் நிலத்தையும் சொல்ல போனால் நாம் அணியும் ஆடையும் கூட கரி துகள் படிந்த காரிருள் பொருளாய் மாற்ற தொடங்கியது.. துவக்க காலத்தில் என்னவென்று அறியா மக்கள் நிலக்கரி இறக்குமதி விபரம் அறிய சில மாதங்கள் ஆனது..

சில பல சங்கங்கள் அங்காங்கே ஒன்று கூடி \"சில்லறை\" போராட்டங்கள் நடத்தி நாளிதழில் தங்கள் பேர் வரும் வரை போராடினர். வெற்றி அவர்களுக்கே.. வந்தது.. நாகை மாவட்ட செய்திகளில் கடைசி கட்டம் இவர்கள் செய்திதான். வருங்கால பிரமதர்காளகிய நாகூர் வட்டங்களுக்கு மகா திருப்தி... நாகூர் மட்டுமல்லாமல் காரைக்கால் மக்களும், இன்னும் சில மக்களும் போராட்டங்கள் நடத்தினர்.

போராட்டங்களின் விளைவு.. மார்க் நிறுவனம் போராட்ட குழுவினை தரம் பிரித்து தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் காரைக்கால் குழுவினர்.. போராட்டத்தில் நிறைய பேர் இந்து மத பிரிவினர், குறிப்பாக கோயில் பின்னநரி உள்ளவர்கள். இவர்கள் வாயடைக்க காரைக்கால் கோயில் குளப்பணி தொடங்கப்பட்டது..கோயில் குளம் நன்றாகவே சீரமைக்க பட்டது.. சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்பளவில் குளம் செம்மை படுத்த பட்டுள்ளது.

அடுத்து நமது நாகூர்... போராட்ட குழுவை பார்த்தால் அப்பப்பா ஏக்க சக்கம்.. நாலு பேருக்கு ஒரு சங்கம் , ஏழு பேருக்கு ஒரு கட்சி. என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கும் சமயத்தில் நுழைந்தார் நமது நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி ஷேக் ஹசன் சாஹிப். நான் தான் தலைவன். என் சொல் படி நாகூர் நடுங்கும் என பல பில்டப் கொடுத்து மார்க்கின் ஆழம் தெரியாமல் சுறா புடிக்க வேண்டிய கடலில் செனகுன்னி மீன் பிடித்தார். தன மகனுக்கு ( சுல்தான் கபீர் ) மார்க் துறைமுகத்தில் மாதம் 25000௦ சம்பளத்தில் வேலையும் நாகூர் தர்கா கந்தூரிக்கு தர்கா மினராக்கு மார்க் துறைமுகம் செலவில் வெள்ளையும் அடித்தும் மற்றும் தனக்கு தனியாக கவர் தரவேண்டும், அப்படி தந்தால் நாங்கள் உங்களுக்கு சப்போட் செய்வோம் என்றும் பேசப்பட்டது.. மார்க் நிறுவனமோ என்ன கேட்கபோரார்களோ என்று அச்சத்தில் இருந்த போது இவர்கள் சுய நலத்தில! ் க ��ட்டது மிக சொற்பமாக தெரிந்து உடனே ஒப்பு கொண்டது மார்க் நிறுவனம்.

இப்பொழுது நாகூர் மினாராக்கள் வெள்ளை அடிக்கும் பணி நடை பெறுகிறது.. மார்க் நிறுவனம் வெள்ளை அடிப்பது கந்தூரியினால் மினராக்களுக்கு மட்டுமல்ல.. கரியினால் கருப்பாகிய மினாரக்களுக்கும் தான் .. இன்னும் சில மாதங்களில் திரும்ப கரித்தூள் நம்மை கருக்கும் என்பதை நாகூரை நடுக்க வைக்கும் அந்த மானேஜிங் டிரஸ்டி அறியாதது ஏனோ ? .. படித்த மகனோ அப்பாவின் வழி காட்டியின் பேரில் தினமும் இப்போது வேலைக்கு ( ராஜ மரியாதையாம் அங்கு !!! ) செல்கிறார். தன் மகன் வேலைக்கு போய் மாதம் 25000 சம்பளம் வாங்கி வாழ்வது மார்க் நிறுவனம் பிறர் வாழ்வில் கரியை பூச கொடுக்கும் கையுட்டு பணம் என்று இவர் அறியாதது ஏனோ ?..

அறியாமை மக்கள் கூட்டத்தில் பதவியையும் பொய் பெயரையும் பயன்படுத்தி தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் சொத்து சேர்க்கும் இதை போன்ற சாஹிப் மார் சகோதர்களால் பிற நல் சாகிப்மார் சகோதர்களும் பாதிக்க படுகின்றனரே.. இதை தர்கா மணாஜிங் டிரஸ்டி உணர்ந்து மக்களோடு மக்காளாக இணைந்து தான் வாங்கிய அனைத்து கையுட்டுகளையும் திரும்ப கொடுத்து ஒரு நாள்... ஒரே ஒரு நாள்... வெயிலில் மக்கள் நலனுக்காக போராடுவாரா !!

அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் நல் எண்ணங்களையும இறைபணி நாட்டங்களையும் கொடுப்பானாக.. ஆமீன்..

குறிப்பு : எந்த ஒரு விசயத்தையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.. எதிர்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.. ஆதாரம் காண்பிக்கப்படும்.ஆதாரம் இதன் உடன் கொடுத்து அன்னாரின் எதிர்காலம் (கரியினால் ) இருட்டாகா நாங்கள் விரும்பவில்லை.. அதே சமயம் எங்கள் முகம் இருட்டாக்க படுமாயின் ஆதாரம் வெளியிடப்படும். இதை பார்த்து படித்து அன்னார் திருந்த வேண்டும் என்ற நல் எண்ணத்திலேயே இதை வெளியிடுகிறோம் )

இன்ஷாஅல்லா அடுத்த பதிவு : சென்னையில் மார்க் நிறுவனத்தில் நாகூர் சம்மந்தமாக நடந்த :\"பேர கோடி \" - உண்மை உரை...

30 comments:

  1. ஆதாரம் தேவை , 25000/- வேலையில் இருக்கிறார் என்பது உங்கள் பொறாமையை காட்டுகிறது அவர் சொந்த முயற்சியில் இருக்கலாம் அல்லவா ?

    ReplyDelete
  2. ASSALAMU ALAIKKUM WARH ......
    nagoore makkal nala sangam enbavarghal(MARG PORT ai ethirthu) poradi kondu varugirargal.Intha nilaiyil patthirikai seithi vanthal pothum endru thirupthi adainthu vittarghal endru eluthi irupathu . Ungalidam pakkuvam illai enbathai unarthugindrathu enn endral avargalin adutha poratathai NOTICE moolamagha arivithu irukirarghal.
    Dharga Managing Trusty Marg Port il peyram peysi kaiutu pettru kondathu unmai endral.notice moolam Nagoore Makkaluku unarthi vilipunarvu erpaduthi irukalamey .Athai seyathathal... Ungaludaya Kolaithanam Velipadugirathu!!!
    aadharam iruku aadharam iruku enbathu PULI Varum kathaiyagha Irukirathu..
    Appadi aadharam irunthal merkonda seithigalil veli ituirukalamey????
    MY CONTACT NO : 8903788480

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
      உங்கள் கேள்வி சரியானதே.
      அவர்களிடம் ஆதாரம் இல்லை. நாகூர் தர்கா மானேஜிங் டிரஸ்டி வஹ்ஹாபிகளுக்கு எதிராக செயல்படுவதால் இப்படி ஒரு செய்தியை போட்டிருப்பார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது.

      Delete
  3. @Anonymouys -

    alaikumsalam.. மேற்கண்ட உங்களின் கேள்விகளுக்கு ஷாகுல் ஹமீது சாஹிப் (nagoredarghatrustee@gmail.com ) என்ற சகோதரர்தான் பதிலளிக்க வேண்டும். உங்கள் சார்பாக அவருக்கு இந்த கேள்வியை முன்வைக்கிறோம்.

    ஷாகுல் ஹமீது சாஹிப் தன் குற்றசட்டிர்க்கு ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. தம்பி ஷாகுல் ஹமீது சாஹிப் அவர்களே!
    அந்த ஆதாரத்தை உடனே nagorethambi@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கலாமே!

    ReplyDelete
  6. தம்பி ஷாகுல் ஹமீது சாஹிப் அவர்களே!
    அந்த ஆதாரத்தை உடனே nagorethambi@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால் தக்க நடவடிக்கை எடுக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. நாகூர் தம்பி .. நீங்கள் யார்...
      உங்களுக்கு நாங்கள் என் அனுப்ப வேண்டும்... உண்மை நிலவரம் ஏற்கனேவே ஜட்ஜுக்கும் தர்கா நிர்வாகத்த்ரிக்கும் மற்றும் தேவையானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் வாய்ஸ் ரெகார்ட் , மற்றும் புகைப்படங்கள் அனுப்ப பட்டுள்ளது.. ஆமாம்.. உங்களுக்கு என் குறுகுறுக்குது ??????? மேற்படியோர் உங்கள் சம்மந்த பட்டவரா ????? செம அக்கறைதான் போங்கள்..

      வூருக்காகா வுழைன்கப்பா என்றால் வீட்டையே பார்த்தால் எப்படி சார் ????

      Delete
  7. intha seithiyai anuppiyavarin ul nokkathaiyum, veliyittavarin ul nokkathaiyum ALLAH (Jal) Arivaan......

    ReplyDelete
  8. Assalamualaikum anonymous..,

    சரியாக சொன்னீர்கள் .. தங்கள் கருத்துக்களுக்கு நன்றி

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    ஆதாரம் இல்லையென்றால் இந்த பதிவை நீக்கலாமே!

    ReplyDelete
  10. அழைக்கும் ஸலாம் சகோதரே ...

    ஆதாரம் சம்மந்தபட்டவரிடம் கேட்கப்பட்டுள்ளது. பதிலளிப்பார் என்று நம்புகிறோம்.

    ஒருவேளை மேற்காணும் குற்றசாட்டு தவறு என்பதற்கு ஏதும் ஆதாரமிருந்தால் நீங்கள் பதியலாமே ..

    மேலும் நம்முடைய ஒரு ஐயம் இருக்கிறது அதாவது... மேற்காணும் குற்றசாட்டு சரியோ ? தவறோ இருக்கட்டும் ..

    ஊரே துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் வேளையில்
    மீலாதுவிழாவிற்கு தர்கா நிர்வாகம் மார்க்துறைமுக உரிமையாளரை அழைத்தது ஏன் ?

    உங்களுக்கு தெரியுமா ?

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    அவரை தர்கா ஷரீப் சார்பா மீலாது விழாவிற்கு அழைக்கவில்லையாமே!
    அவர் கலந்து கொண்டால் கூட இதை கருத்தில் கொள்ளலாம்.
    அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முதலில் ஆதாரம் வெளியிடுங்கள்.
    அவர் எதிர்காலத்தை பற்றி நீங்கள் ஏன் கவலைபட வேண்டும்.
    தவறு என்றால் ஆதாரத்தை வெளியிடுங்கள். அதை விட்டுவிட்டு ஆதாரம் இருக்கு என்றால் புலி வரும் கதையாகத்தான் இருக்கு.

    ReplyDelete
  12. ///அவரை தர்கா ஷரீப் சார்பா மீலாது விழாவிற்கு அழைக்கவில்லையாமே! ///
    நாகூரில் தானே இருகிறீர்கள் ? ... தெருமுழுவதும் போஸ்டர் இருந்ததே பார்க்கவில்லையா ?

    //அவர் கலந்து கொண்டால் கூட இதை கருத்தில் கொள்ளலாம்.//

    எதிர்ப்பு வலுத்ததால் அவர் வரவில்லை .. முதலில் ஏன் கூப்பிட்டார்கள் என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை ..

    //அவர் எதிர்காலத்தை பற்றி நீங்கள் ஏன் கவலைபட வேண்டும்.//

    யாரை சொல்கிறீர்கள் .. யாரை பற்றியும் இங்கே யாரும் கவலைப்படவில்லை அன்பரே... ஆதாரத்தை கேட்டிருக்கிறோம் அவர் தரும் பட்சத்தில் வெளியிடுகிறோம்.

    ReplyDelete
  13. யார் அழைத்தது?
    நாகூர் தர்கா ஷரிப் நிர்வாகமா அல்லது வேறு அமைப்புக்களா?
    அவர் ஆதாரம் இருந்தால் தானே தருவதற்கு?
    அவருடைய மெயில் ஐடி-க்கு ஆதாரம் கேட்டு மெயில் அனுப்பினால் ரிட்டர்ன் வந்து விட்டதே!
    இது ஒரு போலி ஐடி.
    நீங்களே தயார் செய்து கொண்டு மிரட்டுகிறீர்கள் என்று எண்ணம் ஏற்படுகிறது.

    ReplyDelete
  14. அவரிடம் ஏதாவது நீங்கள் எதிர்பார்த்து தான் இப்படி மிரட்டுகிறீர்கள் என்று எண்ணம் ஏற்படுகிறது. அவர் வஹ்ஹாபிகளுக்கு எதிராக ஆர்.டி.ஒ மீட்டிங்கை புறக்கணித்ததன் விளைவுதான் இந்த மிரட்டல் என்று எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
  15. சகோதரே ஊரறிந்த விஷயத்தை ஏன் நம்பமறுகிறீர்கள் ?.. வேறு அமைப்பா ? அது எந்த அமைப்பு ... வஹாபி பயலுங்க தான் தெருவிற்கு ஒரு அமைப்பு வெச்சிருப்பங்க .. சுன்னத் ஜமாத் ஒன்று தானே .. அது எந்த அமைப்பு அழைத்து .. கொஞ்சம் எல்லோருக்கும் தெரியட்டும் சொல்லுங்க...

    ReplyDelete
  16. கோபம் வேண்டாம்.
    நீங்கள்தான் ஆதாரத்துடன் சொல்லுவீங்களே. யார் அழைத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லுங்கள். தர்கா ஷரிப் நிர்வாகம் அழைத்ததா அல்லது வேறு யார் என்று தெளிவாக சொல்லுங்கள்.
    நாங்கள் அழைக்கவில்லை என்றுதான் சொல்லுகிறோம்.

    ReplyDelete
  17. //நீங்களே தயார் செய்து கொண்டு மிரட்டுகிறீர்கள் என்று எண்ணம் ஏற்படுகிறது //

    சரியா போச்சு .. இது வேறையா .. நாகூர் தம்பி எங்களுக்கு ஏன் மா இந்த பொழப்பு .. ஊர்ல எல்லா சாஹிப் பேரும் இவரால் கேட்டுவிட்டது .. என்று ஷாகுல் ஹமீது சாஹிப் என்று பெயரில் ஆதங்கப்பட்டு பின்னூட்டமாகவும் , மின்னசல் மூலமாகவும் அவர் அனுப்பி கேட்டுகொண்டதன் அடைப்படையில் தான் நாம் வெளியிட்டோம்...

    மற்றப்படி இந்த விஷயத்திற்கு நாங்கள் இப்படியெல்லாம் மிரட்டுவதற்கு எங்களுக்கு அவசியமில்லை .. நிறைய வேலை இருக்கிறது.. சரியா ...

    சரி இது முற்றிலும் தவறு என்றால் ...

    ஷாகுல் ஹமீது சாஹிப் கூறிய குற்றசாட்டுகள் இந்த இந்த காரணத்தினால் தவறு என்று ஒரு மறுப்பை எங்கள் அனுப்புங்கள் .. நாங்கள் வெளியிடுகிறோம்.

    ReplyDelete
  18. கோபமா ? என்னங்க ... காமெடி பன்றின்களா ... இதுல என்னங்க கோபப்பட இருக்கு ... /// நாங்கள் அழைக்கவில்லை என்றுதான் சொல்லுகிறோம். ///
    நீங்கள் தர்கா நிர்வாகமா ?

    ReplyDelete
  19. ///அவரிடம் ஏதாவது நீங்கள் எதிர்பார்த்து தான் இப்படி மிரட்டுகிறீர்கள் என்று எண்ணம் ஏற்படுகிறது. அவர் வஹ்ஹாபிகளுக்கு எதிராக ஆர்.டி.ஒ மீட்டிங்கை புறக்கணித்ததன் விளைவுதான் இந்த மிரட்டல் என்று எண்ணத் தோன்றுகிறது.///

    இந்த நெனப்ப வேற உங்களுக்கு இருக்கா .. உங்களிடம் பேசுவது நேரம் தான் வேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. சரிங்க. அப்ப எதற்காக வெளியிட்டீர்கள்?
      போது நலமா?
      அப்ப ஆதாரத்தை கொடுக்கலாமே?
      //குறிப்பு : எந்த ஒரு விசயத்தையும் தகுந்த ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை.. எதிர்கருத்து இருந்தால் தெரிவிக்கவும்.. ஆதாரம் காண்பிக்கப்படும்.ஆதாரம் இதன் உடன் கொடுத்து அன்னாரின் எதிர்காலம் (கரியினால் ) இருட்டாகா நாங்கள் விரும்பவில்லை.. அதே சமயம் எங்கள் முகம் இருட்டாக்க படுமாயின் ஆதாரம் வெளியிடப்படும். இதை பார்த்து படித்து அன்னார் திருந்த வேண்டும் என்ற நல் எண்ணத்திலேயே இதை வெளியிடுகிறோம் )// ஆதாரம் இருக்கா?

      Delete
  20. மேற்கண்ட கருத்து உண்மையா என்று அல்லா அறிவான்.. ஆனால் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் இது உண்மையோ என
    என்னையும் யோசிக்க வைக்கிறது... அதே சமயம் நெருப்பில்லாமல் புகையாது... எதோ இருக்கிறது ???
    உண்மையை அல்லாஹ் அறிவான்...

    நாகூர் தம்பி மற்றும் இந்த கருத்தை நம்ப மறுக்கும் தோழருக்கு எனது கேள்வி...

    நாகூர் தர்காவிற்க்கு இந்த வருடம் கந்தூரி விழாவுக்காகா மார்க் நிறுவனம் பெயின்ட் அடித்து கொடுக்கிறதா இல்லையா ?
    மேல குறிப்பிட்ட நபர் சமிபகாலமாக ( துறைமுக போராட்டத்திற்கு பிறகு ) வேலைக்கு / பணிக்கு அமர்த்த பட்டுள்ளாரா ?? இல்லையா ???
    இல்லை என்று நிருபித்தால் என்னால் முடிந்த ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக தருகிறேன்...

    இல்லை என்று கூற முடியாது.. ஏனென்றால் இரண்டும் உண்மை.. நொண்டி சாக்கு சொல்லமல் ..... நிருபிக்கா தயாரா ???

    ஒரு சாஹிப்மார் செய்யும் தவறால் ஒட்டு மொத்த சமுதாயம் தலைகுனியும் அவலம் இனியும் வேணாம்...ஏனெனில் எனது மிக முக்கிய நண்பரும் ஒரு சாஹிப்மாறே.. அவரை பற்றி எனக்கு நன்கு தெரியும்...

    இப்படிக்கு..
    காதர் ஷா

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    காதர் ஷா அவர்களே! இந்த புகாரை நிருபிப்பது இதை வெளியிட்டவர்களின் கடமை. எனக்கும் பல சாஹிபுகள் நண்பர்களே!. அவர்களிடமும், மற்ற நாகூர்வாசிகளிடமும் விசாரித்த வகையில் மேனேஜிங் டிரஸ்டி பத்தி நல்லபடியாக தான் அறிந்தேன். அவர் மகனும் படித்தவர் தானாமே!. அவர் மகன் சொந்த முயற்சியில் வேலையில் சேர்ந்து இருக்கலாம் அல்லவா?
    அடுத்து மார்க் துறைமுகம் ஆரம்பித்த வருடமே கந்தூரி விழாவுக்காக பெயிண்ட் அடித்து கொடுப்பதாக சொன்னார்களாம். மர்ஹும் சச்சா முபாரக் அவர்கள் செய்வதால் வேண்டாம் என்று சொன்னார்களாம். இந்த வருடம் மர்ஹும் சச்சா முபாரக் அவர்கள் இறந்துவிட்டபடியால் மார்க் துறைமுகம் பெயிண்ட் அடித்து கொடுக்கிறதாக சொல்கிறார்கள்.
    காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கலாமே!
    அப்படி ஆதாரம் இருப்பதாக சொல்கிறவர்கள் ஆதாரத்தை வெளியிடலாமே?
    (முக்கிய குறிப்பு: நிலக்கரி பிரச்சனையில் சட்டரீதியாக மாவட்ட ஆட்சியர் முதல் தமிழக முதல்வர் வரையில் நடவடிக்கை எடுத்தது நாகூர் தர்கா நிர்வாகம் தானாமே?)

    ReplyDelete
    Replies
    1. தம்பி இது நல்ல இருக்கே... /// மார்க் துறைமுகம் ஆரம்பித்த வருடமே கந்தூரி விழாவுக்காக பெயிண்ட் அடித்து கொடுப்பதாக சொன்னார்களாம். மர்ஹும் சச்சா முபாரக் அவர்கள் செய்வதால் வேண்டாம் என்று சொன்னார்களாம். இந்த வருடம் மர்ஹும் சச்சா முபாரக் அவர்கள் இறந்துவிட்டபடியால் மார்க் துறைமுகம் பெயிண்ட் அடித்து கொடுக்கிறதாக சொல்கிறார்கள். /// நீங்களே ஆதாரத்தை கொடுப்பதற்கு நன்றி தம்பி... ஆரம்பத்திலே இருந்து மார்க் துறைமுகத்தொடு தொடர்பில் தர்கா நிர்வாகம் இருந்தது என்பதை நீங்களே ஒப்புகொள்கிறீர்கள்.
      துறைமுகத்தொடு தர்கா நிர்வாகத்திற்கு என்ன வேலை இருக்கிறது ..

      துறைமுகம் புதுச்சேரி மாநில எல்லையில் இருக்கிறது .. அவர்கள் ஏன் தர்கா மினாராவிற்கு பெயிண்ட் அடிக்கணும் ?....

      சரி தெரியாமல் தான் கேட்கிறோம் .. தர்காவில் எல்லா வேலையும் ஒவ்வொரு ஆல வெச்சி முடிச்சிடுரிங்க ... தர்காவிற்கு வரும் வருமானத்தை என்ன தான் செய்கிறீர்கள் ???...
      சரி ஒரு வாதத்திற்கு எல்லாம் சரி என்று வைத்துகொள்வோம் ... இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடந்துகொண்டிருக்கும் போது.. தர்கா நிர்வாகம் என்ன சொல்லி இருக்க வேண்டும் ..

      தர்காவிற்கு பெயிண்ட் அடிக்க வேணாம் .. நாங்கள் (நாகூர் வாசிகள்) உங்களால் (துறைமுகத்தால்) பாதிக்க படுகிறோம் - நீங்கள் நிலக்கரி இறக்குமதியை நிறுத்துங்கள் என்று கண்டனத்தை அல்லவா பதிவு செய்திருக்க வேண்டும் ?? தம்பி ... இப்படி சொந்த ஊர்மக்களை அடமானம் வைக்கிறீர்களே என்ன கொடுமை.
      ////(முக்கிய குறிப்பு: நிலக்கரி பிரச்சனையில் சட்டரீதியாக மாவட்ட ஆட்சியர் முதல் தமிழக முதல்வர் வரையில் நடவடிக்கை எடுத்தது நாகூர் தர்கா நிர்வாகம் தானாமே ///
      முதலில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று சொல்லுங்கள் ??
      நிலக்கரி இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டார்களா ?? தம்பி ...

      இதுவரை ரோட்டில் நின்று போராடியது ஊர் மக்கள் தான் .. எந்த தர்கா பொறுப்பாளிகளும் வந்து நிற்கவில்லை , அவர்கள் செய்ததெல்லாம் தர்கா நிர்வாகத்தின் சார்பாக கலெக்டர் அலுவலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் ,
      ரெட்டியுடனான தனிபட்ட ஒப்பந்த ஆலோசனைகளிலில் கலந்த கொண்டது தான்.

      காதர்ஷா .. கேட்கிறாரே ///நாகூர் தர்காவிற்க்கு இந்த வருடம் கந்தூரி விழாவுக்காகா மார்க் நிறுவனம் பெயின்ட் அடித்து கொடுக்கிறதா இல்லையா ?
      மேல குறிப்பிட்ட நபர் சமிபகாலமாக ( துறைமுக போராட்டத்திற்கு பிறகு ) வேலைக்கு / பணிக்கு அமர்த்த பட்டுள்ளாரா ?? இல்லையா ???
      இல்லை என்று நிருபித்தால் என்னால் முடிந்த ஒரு லட்சம் ரூபாய் சன்மானமாக தருகிறேன்... /// இது பற்றி உங்கள் கருத்து என்ன நாகூர் தம்பி

      Delete
  22. அன்பு நாகூர் தம்பிக்கு...

    நீங்கள் யார் என்று எனக்கு தெரியும். அதை விடுங்கள்.. முதல் கேள்வி நாகூர் பிளாஷ் கேட்டது சரியே... தர்கா மினாராக்கு ஏன் மார்க் பெயின்ட் அடித்து தரனும் ஏன் என்றால் நிலக்கரி பட்டு கருப்பாகி போனா மினாரக்கு உங்கள் ( சொந்தம் ) மானேஜிங் டிரஸ்டி சேக் ஹசன் துட்டு காசு கேட்டார்.. அதுக்கு மார்க் நிறுவனமோ நாங்க அடிச்சு தர்றோம்னு சொன்னுச்சு.. உண்மையா !!!! இல்லையா !!!!! பதில் சொல்லுங்கள்...

    அதென்ன சந்தடி சாக்குல நீங்க போராடிநிங்க என்று சொல்றீங்க... அது சரி.. எந்த போராட்டுத்துல தர்கா மானேஜிங் டிரஸ்டி கலந்துகிட்டார்.. எந்த வெயில்லா நின்னார்.. சும்மா கதை சொல்லாதீங்க..

    படிச்சவரா !!!! அது சரி.. அவர் பர்சனல் லைப் எங்களுக்கு எதுக்கு.. ஒரே கேள்வி தம்பி.. வேலைக்கு சேர்த்து விட்டது யார்.. என்ன டீல் நடந்துச்சு... அதுதான் மேட்டரு...

    நாங்க தர்காவை எதிர்க்கணும்னு நினைக்கலை... அதே சமயம் சும்மா ஒரு குடும்ப சாங்கை பாடிகிட்டு டைம் பாஸ் பண்ணாதீங்க.. ஜெயபால் மந்திரியின் மூலம் என்ன என்ன தர்கா பேரை வைச்சு காரியம் சாதிக்க நினைச்சிங்க , பண்றீங்க எல்லாம் எங்களுக்கு தெரியும்.. கவுதியா ஸ்கூல் வூழியர் விஷயம் சொல்லட்டுமா !!!!! வீணா வாயை கிலாரதீங்க...நாகூர் என்றாலே நமக்கு நினைவில் வருவது தர்கா தான்.. நான் இல்லைன்னு சொல்லலை.. அதுல எங்க வூழல் பண்றீங்க....
    மரைக்காயருக்கு என்று வூர்ல ஒரு மரியாதை இருக்கு.. ஒரு சில சில்லறை தூக்கிகளை ( மறைக்காயர்களை ) வார்டில் ஜெயிக்க வைச்சு வூர்லே பெரிய ஆள் மாதிரி சீன எல்லாம் வேணாம் தம்பி.. ஒரிஜினல் மரைக்கான் அப்படியே தான் இருக்கான்... உங்க கூட இருக்குறவன் எல்லாம் மறைகானே இல்லை.. ஏன் மனுசனே இல்லை...

    நெருப்பில்லாமல் புகையாது.. மேல உள்ள கட்டுரை முற்றிலும் உண்மையே.. நாகூர் பஜார் லைன் வந்து கடை கடையா கேட்டு பாருங்க ... உங்களுக்கு புரியும் தம்பி...

    வஸ்ஸலாம்
    காதர் ஷர்

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    அன்பு சகோதரர் காதர் ஷா அவர்களே!
    நான் தர்கா சார்பாக பேசவில்லை.
    நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியும் என்றால் என்னிடம் நேரிடையாக தொடர்பு கொள்ளலாமே!
    அதே போல் தர்கா மானேஜிங் டிரஸ்டியிடம் நேரிடையாக சொல்லலாமே?
    நான் பின்வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
    எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும் நீங்கள் சரியான வழியில் நடவடிக்கை எடுக்கலாமே?
    இங்கு எது பேசினாலும் "உங்களைப்பற்றிதான் தெரியுமே? உங்கள வண்டாவளத்தை எடுத்து விட வா? " என்று பேசுபவர்களிடம் நான் பேச விரும்பவில்லை.
    (நான் யாருக்காகவும் பயப்படவில்லை. அல்லாஹ் போதுமானவன்)

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    அன்பு சகோதரர் காதர் ஷா அவர்களே!
    நான் தர்கா சார்பாக பேசவில்லை.
    நான் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியும் என்றால் என்னிடம் நேரிடையாக தொடர்பு கொள்ளலாமே!
    அதே போல் தர்கா மானேஜிங் டிரஸ்டியிடம் நேரிடையாக சொல்லலாமே?
    நான் பின்வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம்.
    எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லும் நீங்கள் சரியான வழியில் நடவடிக்கை எடுக்கலாமே?
    இங்கு எது பேசினாலும் "உங்களைப்பற்றிதான் தெரியுமே? உங்கள வண்டாவளத்தை எடுத்து விட வா? " என்று பேசுபவர்களிடம் நான் பேச விரும்பவில்லை.
    (நான் யாருக்காகவும் பயப்படவில்லை. அல்லாஹ் போதுமானவன்)

    ReplyDelete
  25. assalamu alaikum

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...