(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, September 17, 2014

நாகூர் கிரசென்ட் பள்ளி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது.

தமிழகத்தில் சிறப்பாக பணிபுரிந்த 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை சேத்துபட்டில் உள்ள எம்.சி.சி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.

இதில் கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கொளரவிக்கப்பட்டது. 

இதில் நாகூர் கிரசென்ட் மெட்ரிக் பெண்கள் பள்ளி முதல்வர் ராபியா சிராஜுதின் அவர்களுக்கும்  நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...