(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, March 31, 2013

நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகாப்பு ..!!



நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு கமாண்டோ படை பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி கூறினார்.

ஆய்வு கூட்டம்

நாகையை அடுத்த நாகூர் தர்காவில் வருகிற 11–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை கந்தூரி விழா நடைபெற உள்ளது. விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் தர்கா அலுவலகத்தில் நடைபெற்றது. நாகை உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு உதவி போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:நாகூர் கந்தூரி விழாவின்போது பதற்றத்திற்கு உரிய பகுதிகளாக 6 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொடி ஊர்வலம், சந்தனக்கூடு ஊர்வலங்களில் பங்கேற்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அணிவகுப்பு வாகனங்களுக்கு பல்வேறு அரசு துறைகள் மூலம் வழங்க வேண்டிய சான்றிதழ்கள் ஒற்றைச் சாளர முறையில் நாகூர் தர்கா அலுவலகம் மூலம் வழங்கப்படும்.


கமாண்டோ படை பாதுகாப்பு
விழா நாட்களில் நாகூர் பகுதியில் ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்படும். ஊர்வலங்களில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மத்தியில் அமைதியை குலைக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து பயிற்சி பெற்ற கமாண்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். கால்மாட்டுத்தெரு பெண்கள் கடைத்தெரு பகுதியில் ஆண்கள் காரணம் இன்றி செல்வதற்கு தடை விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் தர்கா மேனேஜிங் டிரஸ்டி எஸ்.ஏ.சேக்ஹசன்சாகிபு, பரம்பரை கலிபா மஸ்தான்சாகிபு, டிரஸ்டிகள் சுல்தான்கபீர்சாகிபு, பாக்கர்சாகிபு, தர்கா மேலாளர் திருநாவுக்கரசு, நாகை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஜெய்னுல்ஆபிதீன், நகர சபை துணைத்தலைவர் சுல்தான்அப்துல்காதர், காங்கிரஸ் சிறுபாண்மை பிரிவு மாநில பொறுப்பாளர் நவுசாத், தர்கா ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் கலீபாசாகிபு, அபுல்காசிம்சாகிபு, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், ராதாகிருஷ்ணன், சப்இன்ஸ்பெக்டர்கள் பாரதிதாசன், ஜார்ஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tuesday, March 26, 2013

அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!


அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.  தன் மகனை அருகழைத்தார்.
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான் உங்களனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?"

"என்னவென்று சொல்லுங்கள் தந்தையே!" என்றான் மகன். 

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்படும் போது, என்னுடைய பழைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என் எளிய கோரிக்கை"


ஊரில் மிகப் பெரும் செல்வந்தர் தன் தந்தை. ஆனால், என்ன இது விசித்திரமான கோரிக்கை என்று நினைத்துக் கொண்டாலும், எளிய ஒன்று தானே என்று மகனும் ஒப்புக் கொண்டான்.

அதற்கடுத்த சில நாள்களில் அந்த முதியவர், தன் சொத்துகளையும், மனைவி மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார்.  அவரை உலகிலிருந்து விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.  உடல் குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்படும் நேரம் நெருங்கியது. அப்போது மகனுக்கு தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து, குளிப்பாட்டியவரிடம் சென்று  தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை என் தந்தையின் கால்களில் அணிவியுங்கள்; இதுவே அவரின் இறுதி விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.  "இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று சொல்லிப் பார்த்தான் மகன்.  ஆனால் அவர் அசைந்து கொடுப்பதாக இல்லை. "இஸ்லாத்தில் இதற்கு இடமேயில்லை; எனவே, வாய்ப்பில்லை!" என்றார் உறுதியாக.

மகனோ மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர் கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான்.  வேண்டுமானால், நீ மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான் சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க அறிஞர்களை அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஆமாம்! ஷரீஅத்தில் இதற்கு அனுமதி இல்லை தான்!"

இக் களேபரம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், வயது முதிர்ந்த ஒருவர், அந்த மகனை நெருங்கினார். "தம்பி, உன் தகப்பனார் அவரது சடலம் துணியிடும் வேளையில் உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம் தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்த அறிஞரின் நீண்டகால நண்பர் அவர். தனது தந்தையின் கடிதத்தை ஆவலுடன் வாங்கிப் படித்தான்மகன். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் இறந்து விட்டேன். என் நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு பழைய காலுறையைக் கூட மேலதிகமாக என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;  நாளை இந்த நிலை உனக்கும் வரலாம்.  இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும் இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை  நீ நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம் இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும்  உதவும். ஆகவே, இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின் வயிற்றுப் பசிக்கும், அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்!"

அந்த நிமிடம் வரை உள்ளத்தில் பெருகியிருந்த ஆணவமோ மமதையோ சடசடவென எரிந்து பொசுங்குவதைப் போன்ற உணர்வுடன் கண்களில் நீர் கோர்க்க, தந்தையின் சொற்களை உறுதிமொழி எடுத்துக் கொண்டான் மகன்.

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது (திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.' (திருக்குர்ஆன் 9:72)

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும் என்கிற கருத்தை உணர்த்தும் திருக்குறள் உண்டு:


(ஆங்கில மடல் ஒன்றின் தமிழாக்கம்: சகோதரர் இப்னு ஹம்துன்)

Saturday, March 9, 2013

ஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..!


ஊர் மக்களை தலைகுனிய வைக்கும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது நம் நாகூரில்... நெற்றிக்கண் என்ற இதழ் இதை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது...

நாகூர் மைதீன் பள்ளித்தெருவை சார்ந்த ஜெகபர் சாதிக் சாஹிப் என்ற “முஸ்லீம் மைனர் (இப்படிதான் நெற்றிக்கண் இதழ் ஜெஹபர் சாதிக்கை பற்றி அட்டைபக்கத்தில் ஒட்டுமொத்த முஸ்லீம்களை கேலி செய்வது போல் முஸ்லீம் மைனர் என்று அழைக்கிறது – வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா ? )


அந்த நெற்றிக்கண் இதழில் குறிப்பிட்டுள்ள விசயங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

இவர் மலேசியா – இந்தியாவிற்கு பெருமளவில் ஹவாலா செய்து வந்திருக்கிறார், இதன் பெயரில் மலேசியாவிலும், இந்தியாவிலும் பண மோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஜெகபர் சாதிக் பெயரில் பல வழக்குகள் நாகூர் காவல்நிலையமும், மலேசியா காவல்துறையும் பதிவு செய்துள்ளது. மைதீன் பள்ளி ஜமாஅத்திலும் இது சமந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரின் தந்தை லத்திப் சாஹிப்பும் லேசுபட்டவர் அல்ல, அவரும் பல பண மோசடியில் ஈடுபட்டவர் என்ற கூடுதல் குற்றச் சாட்டையும் வைக்கிறது  நெற்றிக்கண் இதழ்...

இந்நிலையில் ஜெகபர் சாதிக் தமிழ்நாட்டில் பல பெண்களை காதலிப்பதாக கூறி மயக்கி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி அதன் மூலமாகவும் பணம் பரிதிரிக்கிறார் என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.

இதற்கான ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் கூறி சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


நெற்றிக்கண் பத்திரிகையில் மேற்கண்ட அந்த அசிங்ககேடான விசயத்தை படித்துகொண்டிருக்கும் போது மனது மிகவும் கனத்த தருணம் இந்த இறுதியான மூன்று வரிகள் படிக்கும் போது தான்...


“மோசடி பேர்வழி ஜெகபர் சாதிக் நாகூரில் பல நல்ல குடும்பத்து முஸ்லீம் பெண்களை காமவலை வீசி “ஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் சமந்தபட்ட பெண்கள் அந்த கிராதகன் மீது புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.”

ஒட்டுமொத்த ஊர்மக்களையும் இதற்க்கு மேல் அசிங்கபடுத்தவே முடியாது.

அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் சிறிதும் பெரிதுமாக நடந்தவண்ணம் உள்ளது...இது அம்பலப்படும்போது தான் பலருக்கு தெரியவருகிறது.

இதை தடுக்க முடியாதா ?.. 
அடுத்த தலைமுறை இந்த சீர்கேட்டில் தான் மூழ்கப்போகிறதா ?

இதற்க்கு தீர்வு காண என்ன செய்ய போகிறோம்  என்பதே நம் முன் எழும் கேள்வி ...........

Tuesday, March 5, 2013

நாகூர் வர்த்தக சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு


நாகூர் வர்த்தக சங்க சிறப்புப் பொதுக் குழுக் கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


நாகூர் வர்த்தக சங்கத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், நாகூர் முஸ்லிம் சங்கக் கட்டடத்தில் அண்மையில் நடைபெற்றது.

சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஏ.எச். அபுதல்ஹா தலைமை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வுப்படி,

சங்கத்தின் புதிய தலைவராக வி. முகமது ஹூசைன் மாலீம்,

செயலாளராக எஸ்.எம். நெய்னா மரைக்காயர்,

பொருளாளராக எம். முகமது பாரூக் மரைக்காயர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

துணைத் தலைவர்களாக
எம். கந்தசாமி,
எம். முகமது சித்திக் மரைக்காயர்,
ஜெ. முகமது ரபீக்,
ஏ. முகமது ரபீக் மரைக்காயர் ஆகியோரும்,

துணைச் செயலாளர்களாக
எஸ்.பி. சாகிப் மரைக்காயர்,
எம். முகமது அப்துல்காதர் மரைக்காயர்,
எச். மீரா மெய்தீன்,
எம். முகமது சித்திக் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Thursday, February 28, 2013

நாகூர் தர்கா யானைக்கு என்ன ஆச்சு ??

தர்கா யானைக்கு என்ன ஆச்சு இது தான் தற்போது யானையை பார்க்கும் போது மக்கள் மனதில் எழும் சந்தேகம்.

அப்டி யானைக்கு என்ன தான் ஆச்சி என்கிறீர்களா..முன் எப்போதும் இல்லாத அளவிற்கு யானை மிகவும் அடம்பிடிப்பதாக சொல்கிறார்கள்.


பாகன் சொல்படி கேற்பதில்லை மிகவும் அசௌகரியமாக இருப்பதாக தெரிகிறது இதனால் யானை பாகன் யானையை அடித்து துன்புறுத்துவதாக குற்றசாட்டும் எழுந்துள்ளது.

மேலும் நாகூர் கிரசென்ட் பெண்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கும் தர்கா தோட்டத்தில் யானைக்காக ஒய்வு எடுக்க கொட்டாய்  அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தினந்தோறும் யானையை அழைத்து சென்று வருவதற்குள் பாகன் படாதுபாடு படுகிறார் என்கிறார்கள்.

இதனால் பயத்தின் காரணமாக யானையை தூரமாக நின்றே வேடிக்கை பார்க்க விரும்புகிறார்கள் மக்கள்.



சிலர் இந்த கொட்டாய் அமைத்தது யானைக்கு பிடிக்கவில்லை போலும் அது தான் யானை இப்படி நடந்து கொள்கிறது என்று வியாக்கியானம் வேறு கொடுக்கிறார்கள் சிரிக்காமல்..
  
எது எப்படியோ யானைக்கு வயசு ஆயிடுச்சு என்பது தெளிவாக தெரிகிறது ... 
அதற்கு விருந்து தான் கொடுக்கல .. 
அதற்க்கு விடுதலையாவது கொடுங்க பா .. 

தன் இனத்தோடு சுற்றிதிரிந்து  சந்தோசமாக இருக்கட்டும் வயசான காலத்துல... 

நீங்க என்ன சொல்றிங்க ?

புகைப்படம் : Yosuf Ameen

மாடர்ன் சிட்டி மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு..!!


சமீபமாக "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு"  என்ற பெயரில்  மாடர்ன் சிட்டி மனை விற்பனையாளர்களுக்கு எதிராக குற்றம்சாட்டி நோட்டிஸ் விநியோகிக்க பட்டது அதை நாமும் வெளியிட்டு இருந்தோம் அதே போல் தற்போது அதற்க்கு மறுப்பு தெரிவித்து மாடர்ன் சிட்டி விற்பனையாளர்களும்  ஆதரங்களோடு நோட்டிஸ் வெளியிட்டுள்ளனர். அதையும்  உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 


Monday, February 25, 2013

மாடர்ன் சிட்டி என்ற பெயரில் மோசடியா ?

நாகூரில் "பொதுமக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு" என்ற பெயரில் கீழ்காணும் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டு வருகிறது.



Tuesday, February 12, 2013

காரைக்கால் வினோதினி மரணம் ..!! கொடுமையிலும் கொடுமை

ஒரு மனித வெறியனால் முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இவ்வளவு நாள் கொடுமைகளை அனுபவித்து வந்த காரைக்கால் சகோதரி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர் ...!! ஆனால் 

இந்த கொடுமையை செய்த அந்த மிருகத்திற்கு என்ன தண்டனை தெரியுமா ? ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டு வார வாரம் சிக்கன் பிரியாணியும்,முட்டையும் கொடுப்பது தான் தண்டனையாம்..??????




இதே நிகழ்வு நம் உடன் பிறந்த சகோதரிக்கு நிகழ்ந்தால் .. நம்முடைய நிலை என்ன ? .. மனிததன்மையே இல்லாமல் இதை செய்தவனுக்கு ஆதரவாக மனித உரிமையை பற்றி பேசி அதிக பட்ச தண்டனையை மறுப்பீர்களா..? 


நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் முகத்தில் அவன் மீது ஆசிட் ஊற்றி  தூக்கில் தொங்கவிட்டு இவனுக்கும் ,இவனை போன்று சிந்திக்கும் மனித மிருகங்களுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும் என்பீர்களா..?



"ஆசிட் வீச்சில் உயிர் இழந்த வினோதியின் தந்தை ஜெயபால் தனியார் மருத்துவமனையில் கதறி அழுதார். மகளின் இழப்பை தாங்க முடியாமல் அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:- 

என் மகள் உயிருடன் திரும்ப வருவாள் என்றுதான் நம்பி இருந்தோம். இப்படி எங்களை அனாதையாக்கி சென்று விட்டாளே. அவளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகதான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் இன்று காலையில் திடீரென இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

அவள் கண் பார்வை இழந்து உயிரோடு இருந்தாள்கூட பரவாயில்லை. அவளை நாங்கள் பார்த்து கொண்டே இருந்திருப்போம். இப்படி எங்களை தனியாக விட்டு அவள் சென்று விட்டாளே... 

சிகிச்சையின்போது அவள் வேதனைப்படுவதை நாங்கள் பார்த்து அழுதோம். அப்போது அவள் என்னிடம், நான்பட்ட கஷ்டத்தை அவனும் (சுரேஷ்) அனுபவிக்கணும் அப்பா... என்று கூறினாள்




இந்திய சட்டம் பாதிக்கப்பட்டவன் நிலையில் இருந்து தண்டனை வழங்குகிறதா ? 

பிறகு எப்படி வினோதினியின் கஷ்டங்களுக்கு நியாயம் கிடைக்கும்  ?

பெற்றோர்களின் மனக்குமுறல் அமைதியுறும் ?


உங்கள் கருத்தை பதியுங்கள்...

Sunday, February 10, 2013

நாகூருக்கு வரும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு

நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வரும் 14ம்தேதி முதல் நாகூர் வழியாக செல்லும் பஸ்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என நாகை கலெக்டர் முனுசாமி தெரிவித்துள்ளார். 



நாகை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தின்கீழ் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குழாய்கள் பதிக்கும் பணி தேசிய நெடுஞ்சாலையில் நாகூர் வெட்டாற்று பாலத்திலிருந்து, ஐ.டி.ஐ. பிள்ளையார் கோவில்வரை நடைபெறுகிறது. இப்பணிகள் வரும் 14ம்தேதி முதல் மார்ச் மாதம் 13ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது. எனவே நாகூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும், மயிலாடுதுறை, சிதம்பரம், காரைக்கால், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், நாகூர் வழியாக வராமல் வாஞ்சூரிலிருந்து இ.சி.ஆர். பைபாஸ் வழியாக திருப்பி விடப்படுகிறது. 

   நாகூர் தர்காவிற்கு வரும் யாத்ரீகர்களின் வாகனங்கள் நாகூர் சி.பி.சி.எல். சாலை, ரயிலடி சாலை தெருப்பள்ளி சாலை வழியாக நாகூர் தர்காவிற்கு செல்லவேண்டும். தர்காவிலிருந்து, செய்யதுப்பள்ளி தெரு, தெற்கு தெரு, பங்களாதோட்டம் வழியாக தெற்கு பால்பண்ணைச்சேரி ரோடு வழியாக தேசிய நெடுஞ்சாலையை சென்றடையும் வகையில் ஒரு வழி போக்குவரத்தாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

எனவே வரும் 14ம்தேதி முதல் வரும் மார்ச் மாதம் 13ம்தேதி வரை பொதுமக்களின் வசதிக்காக நாகை புதிய பஸ்நிலையத்திலிருந்து நாகூர் வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் சிறப்பு நகர பேருந்துகள் இயக்கப்படும் என நாகை கலெக்டர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Friday, February 1, 2013

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?


ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் பணி நாகூரில் கடந்த சில நாட்களாக வார்டு வாரியாக பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. பலருக்கு இது பற்றி பல சந்தேகங்கள் இருப்பதால் அது பற்றி விரிவாக பாப்போம்.

ஆதார் கார்ட் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகம் செய்யப்படுகின்ற இந்நேரத்தில் ஆதார் அட்டை பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். 

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.


ஆதார் என்றால் என்ன?

ஆதார் என்பது 12 எண்களைக் இலக்கங்களைக்கொண்ட ஒரு எண். இதை யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அதாரிடி ஆஃப் இந்தியா தனது எல்லா குடிமக்களுக்கும் வழங்குகிறது. இந்த எண்ணில் புகைப்படம் உள்ளிட்ட ஒருவரைப் பற்றின மிக முக்கிய தகவல்கள் ஒரு சென்ட்ரல் டேட்டா பேஸில் பதிய வைக்கப்பட்டிருக்கும். ஆதார் ஒப்புநோக்க எளிதானது மேலும் தனிதன்மையுடையது என்பதால் கள்ள எண்களையும் தவறான தகவல்களையும் தவிர்க்க ஏற்றது. ஜாதி மதபேதங்கள் இல்லாமல் அனைவருக்கும் ஒன்றானது.

1. இது ஒரு 12 இலக்க எண்,  அட்டை மட்டுமல்ல அனைவருக்கும் ஆனது. அதாவது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிரத்யேக ஆதார் யு.ஐ.டி எண் கொடுக்கப்படும்.
2. அது இங்கு வசிப்பவர்களுக்கு ஒரு அடையாளம் தருகிறது. 
3.குடியுரிமை பற்றினது அல்ல. இந்தியர்களுக்கு மட்டுமானதும் அல்ல.
4. ஆதார் கார்ட் பெற்றுக் கொள்வது விருப்பத்தின் பேரிலானதுகட்டாயம் அல்ல.
5. நம் நாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ளலாம். அதாவது அடையாள அட்டை ஏதும் இல்லாதவர்களும் பெற்றுக்கொள்ளலாம்.
6. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிபட்ட ஆதார் அடையாள எண் வழங்கப்படும். ஒருவருக்கு ஒரு எண்ணுக்கு மேல் கிடைக்காது.
7. யு.ஐ.டி ஒரு தனி நபர் பற்றின அரசாங்க மற்றும் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டுமே பதில் அளிக்கும். மேலும் விபரங்கள் ஏதும் யு.ஐ.டி கொடுக்காது.
8.ஆதார் யு.ஐ.டி எண் விபரங்கள் ரேஷன் அட்டைபாஸ்போர்ட் போன்றவற்றுக்கு பயன்படும்..ஆனால் அவற்றுக்கு மாற்றாகாது.

எதற்காக ஆதார் பெற வேண்டும்?
1. கிராமப்புரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மிகப் பயன் தரத்தக்கது
2. தெளிவான அடையாளம் தரும் ஒரு நபருக்கு
3. வங்கிகளில் ஏழைகளும் எளிதில் கணக்கு வைத்துக் கொள்ள ஏது செய்யும்
4. அரசாங்க மற்றும் தனி நபர் நிறுவனங்களின் சேவைகளை ஏழைகளும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்
5. பிரயாணிகளுக்கு அடையாளப் பிரச்சினைகளில் இருந்து விடுதலை
6. அரசாங்கத்தின் நலம் தரும் திட்டங்கள் மக்களுக்குப் பயன் தரவும் போய்ச் சேரவும் எளிதாக இருக்கும்

யாரெல்லாம் ஆதார் பெற்றுக்கொள்ளலாம்?
இந்தியாவில் வசிக்கும் மற்றும் யு.ஐ. டி.ஏ.ஐ யின் வெரிஃபிகேஷனை திருப்தி செய்யும் எவரும் ஆதார் பெறலாம்.

எப்படி பெறுவது?
உள்ளூர் ஊடகங்களில் ஆதார் பற்றின பிரச்சாரங்கள் செய்வார்கள். ஊடகங்களில் தெரிவிக்கப்படும் (ஆதாரங்களை)  எடுத்துப் போக வேண்டியிருக்கும்.

என்னென்ன ஆதாரங்கள் தேவைப்படும்?
பதிவு செய்யும் நேரம் தேவைப்படும்ஆவணங்கள்
1. (ஆதார் விண்ணப்பப் படிவம்) Aadhaar application form
2. வசிப்பிடம் பற்றின தகவல்
3. அடையாள அட்டை புகைப்படத்துடன்
ஒவ்வொரு ஊருக்கும் இவை மாறுபடலாம்.

தேவைப்படும் தகவல்கள்
1. பெயர்
2. பிறந்த தேதி
3. பால்
4. முகவரி
5. பெற்றோர் மற்றும் காப்பாளர் பற்றின தகவல்
6. தொடர்பு கொள்ள தொலைபேசி மற்றும் ஈ மெய்ல் முகவரி
மேலும்
1. புகைப்படம்
2. 10 விரல் அடையாளங்கள்
3. விழிப்படல அடையாளம்
எங்கு பதியலாம்?
விண்ணப்படிவம் எங்கு கிடைக்கும்?
பதிவு செய்து கொள்ளும் முகாம்களில் படிவங்கள் கிடைக்கும் 

மாதிரி விண்ணப்பம் :


ஆதார் ஹெல்ப் லைன் தொலை பேசி எண்: டோல் ஃப்ரீ எண் : 1800-180-1947
ஆதார் படிவத்தில் அச்சு மற்றும் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்ன செய்வது?
பதிவு செய்து கொள்ளும் போதே தவறுகளைநேரில் பார்த்து சரி செய்து கொள்ள வசதி உண்டு. அப்படியும் பிழைகள் நேர்ந்தால்.. 48 மணி நேரத்துக்குள் தேவையான ஆவணங்களை எடுத்து சென்று சரி செய்து கொள்ளலாம்.

ஆதார் கார்ட் விண்ணப்பித்து எத்தனை நாளில் கிடைக்கும்?
பல சோதனைகளைத் தாண்டி வர வேண்டியிருப்பதால் 60 லிருந்து 90 நாட்கள் ஆகலாம்.

விண்ணப்பம் மறுக்கப்படுமா?
மறுக்கப்படலாம்
1. தவறுகள் நேர்ந்தால்
2. மேலும் உங்களைப் பற்றின உடற்கூறு ரீதி ஆதாரம் மற்றும் ஒருவரின் ஆதாரமும் ஒன்று போல் இருந்ததால்.
சரி பார்க்கப்பட்ட பின் ஆதார் கார்ட் வழங்கப்படும்.

இதுகுறித்துஇ மேலும் விவரங்களை அறிய 044-28582798, 0431-241245, 0452-2526398, 0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனதமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...