(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Showing posts with label கிலாபத். Show all posts
Showing posts with label கிலாபத். Show all posts

Sunday, July 6, 2014

ISIS‬ கிலாபா அறிவிப்பு – நிஜங்களும் நிழல்களும்



************************************************************************
1.தற்போது இஸ்லாமிய உலகின் பிரதான பேசு பொருளாக ஏன் சர்வதேச ஊடகங்கள் உச்சரிக்கும் விஷயம் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல் பெற்ற வெற்றிகளும் அதை தொடர்ந்த கிலாபத் அறிவிப்புமே திகழ்கிறது என்றால் நிச்சயம் அது மிகையானதல்ல. குறிப்பாக அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினர் மத்தியில் மிகப் பெரும் சர்ச்சையையும் இரு வேறு கருத்துருவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை.

2.தற்போது இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐ.எஸ் மீது இரு வேறு கருத்துகள் இஸ்லாமிய உலகில் நிலவுகின்றன. ஒரு சாரார் உண்மையில் கிலாபத்தை நிலை நாட்டும் கறுப்பு கொடி ஏந்திய நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த படையே ஐ.எஸ் என்றும் ஒரு படி மேலாக சென்று அதன் அமீர் பக்தாதி தான் மஹதி என்றும் கருதுகின்றனர். எதிர் தரப்பாரோ இது ஒரு தற்காலிக வெற்றி என்றும் உண்மையில் கிலாபத்தை ஹைஜாக் செய்யும் முயற்சி என்றும் கருதுகின்றனர். மேலும் அமெரிக்கா அல்லது சவூதியின் கைப்பாவை ஐ.எஸ்.ஐ.எஸ் என்றும் குற்றம் சாட்டுகின்றனர். உண்மை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் நடந்தவற்றை முதற்கண் நோக்குவோம்.
சிரியாவில் நடந்தது என்ன ?
********************************
சிரியாவில் 2011ல் பஷார் அசதுக்கு எதிராக ஆரம்பித்த அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டமாக உருப்பெற்றது. எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் சட்டாம்பிள்ளை அமெரிக்கா இதிலும் மூக்கை நுழைத்து ஷியா பஷார் அல் அஸதுக்கு எதிரான சுன்னி போராளிகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தது. ஈரானின் நெருங்கிய துணையாக இருந்த சிரியாவை வீழ்த்த சவூதி அரேபியா, கத்தர் முதலான நாடுகளும் Free Syrian Army எனப்படும் குழுவுக்கு நிதியுதவிகளை வழங்கின.
சூழ்ச்சியாளர்களிலெல்லாம் மிகச் சிறந்த சூழ்ச்சியாளன் அல்லாஹ் என்பதற்கேற்ப இவ்வாய்ப்பை பயன்படுத்தி போராளிகள் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஜபல் அல் நுஸ்ரா சிரியாவில் நுழைந்து அசாதுக்கு எதிராக போராடி வருகின்றனர். ஜபல் அல் நுஸ்ராவுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்சுக்கும் உள்ள கருத்து வேறுபாடினால் தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ்ஸும் நேரடியாக களத்தில் குதித்து ஈராக் பகுதியை ஒட்டியுள்ள சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ளது.
ஈராக்கில் நடந்தது என்ன ?
*************************************************
1.சதாம் ஹுசைன் வீழ்த்தப்பட்ட பிறகு சதாம் ஹுசைன் ஆதரவு படையினர், அமெரிக்காவின் ஆதிக்கத்தை விரும்பாத போராளிகள், அல்காயிதா உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் ஈராக்கில் போராடி வருகின்றன. அல் காயிதாவை தனிமைப்படுத்த சுன்னிகளுக்கு நிதியுதவியும் பின்னாளில் ஈராக் ராணுவத்தில் இணைத்து கொள்ளப்படுவர் என்ற வாக்குறுதியோடும் ஸஹ்வா படைகள் அமெரிக்காவால் 2006ல் உருவாக்கப்பட்டு அல்காயிதா தனிமைப்படுத்தப்பட்டது.
2.ஆனால் நூர் அல் மாலிகி இரண்டாம் முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு சுன்னிகள் முழுமையாய் ஓரம் கட்டப்பட்டனர். இதனால் மீண்டும் ஐ.எஸ்.ஐ.எஸ் வீரியத்துடன் செயல்பட ஆரம்பித்துள்ளது. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஏராளமான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.
3.ஐ.எஸ் எதிர்ப்பாளர்களின் வாதங்கள்
தற்போது இஸ்லாமிய தேசத்தை அறிவித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை ஷியாக்கள், அமெரிக்கர்கள், சவூதியர்கள், ஹிஸ்புத் தஹ்ரீர், இஹ்வான் போன்ற அமைப்பினர்கள் (சிலர் அதிகாரபூர்வமாக) இஸ்ரேல் மற்றும் முக நூல் போராளிகள் உள்ளிட்டோர் எதிர்க்கின்றனர்.
4.இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் பிரதானமானவை
1.இஸ்ரேல், அமெரிக்காவின் தயாரிப்பே இவர்கள்
2.சவூதி, கத்தரின் கைப்பாவை
3.ஈரான் மற்றும் ஷியாவின் கைப்பாவைகள்
4.சிறுபிள்ளைதனமான முயற்சி
5.மனித உரிமை மீறல்கள்
6.இஸ்ரேல் அமெரிக்காவின் கையாட்களா ?
இதை விட போராளிகளை கொச்சைபடுத்த முடியாது என்று தெளிவாக சொல்லி விடலாம்.
உஸாமாவை அமெரிக்கா தொடக்கத்தில் ஆதரித்ததை போலவே ஆதரிக்கிறது என்று சொல்பவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்கா தன் நலனுக்காக ஆதரித்ததை போல் ஆப்கனிலிருந்து கம்யூனிஸத்தை துரத்தியடித்தல் எனும் பொது இலக்குக்காகவே அதை உஸாமா ஏற்று கொண்டார் என்பதும் பின் அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக திரும்பிய போது உஸாமா எதிர்த்ததால் ஷஹீதாக்கப்பட்டதும் வரலாறு. இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க வெளியுறவு துறை செயலர்களின் சமீபத்திய அறிக்கைகளை படித்தால் எந்தளவுக்கு அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை குறித்து அஞ்சுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
சவூதி கத்தரின் கைப்பாவைகளா ?
*************************************************************
1.Free Syrian Army க்கும் ஐ.எஸ்க்கும் வித்தியாசம் தெரியாத நல்லவர்களே இக்குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். அஸதுக்கு எதிராக Free Syrian Armyஐ ஆதரித்த அமெரிக்காவும் பிரிட்டனும் ஆயுதம் வழங்கும் நிலைக்கு வந்து அதை கைவிட்டதற்கு காரணமே அவை ஐ.எஸ் கையில் சிக்க கூடும் என்பதாலேயே. மேலும் ஆரம்பத்தில் வேகமாக சிரிய ஜிஹாதை ஆதரித்த சவூதி, கத்தர் மற்றும் துருக்கி போன்றவை மழுப்புவதற்கும் அதுவே காரணம் என்பதை உணர வேண்டும். மேலும் சமீபத்தில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக போரிடவே சகோதர சண்டைக்காகவே அமெரிக்கா FSAக்கு நிதியுதவி அளிக்க திட்டமிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2.மேலும் ஐ.எஸ்ஸின் கிலாபா அறிவிப்பு மேற்குலகை விட சவூதிக்கே அதிக கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை கிலாபா அறிவிப்பை அடுத்த சவூதியின் அதிகார மட்ட மாற்றங்களிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். "ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நம்பிக்கை இல்லாமல் ஜனநாயகம் மூலம் இஸ்லாத்தை நிலை நாட்ட முயன்ற எகிப்தின் முர்ஸியையே சகிக்க முடியாமல் கவிழ்த்த சவூதி எப்படி இவர்களை சகிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்".
ஈரான் மற்றும் ஷியாவின் கைப்பாவைகள் ?
*************************************************************************************
1.ஈராக்கில் சுன்னிகள் மூலம் வன்முறையை தூண்டுவதன் மூலம் ஈராக்கில் தன் பிடியை தக்க வைக்க ஐ.எஸ்ஸை ஈரான் உருவாக்கியது என்பது எவ்வளவு அபத்தம் என்பதற்கு ஷியா வீரர்களையும் அவர்களது அடக்கத்தலங்களையும் ஐ.எஸ் இடித்தது எனும் செய்தியிலிருந்தே புரிந்து கொள்ளலாம். மேலும் ஐ.எஸ்ஸை ஒழிக்க நிச்சயம் ஈரானும் , சிரியாவும் கூட அமெரிக்காவுடன் கை கோர்க்கும் என்பதை நாம் பார்க்க தான் போகிறோம்.
மனித உரிமை மீறல்கள்
**************************************************
1.ஷியாக்களை கொல்வது போன்ற வீடியோக்கள், கொன்று விட்டு ரத்தம் குடிப்பது போன்ற கொடூரமான புகைப்படங்கள் என இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இஸ்லாம் சொல்லும் போர் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்று குற்றம் சொல்லப்பட்டது. இவ்வாறாக ஐ.எஸ் மீது மனித உரிமை குற்றம் சுமத்துபவர்கள் முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களில் வெளியாகும் அனைத்தும் உண்மை அல்ல என்பதும் ஐ.எஸ்ஸை அசிங்கப்படுத்த மேற்குலக ஊடகங்கள் எடுக்கும் முயற்சி என்பது ஊடகத்தை நன்கு தெரிந்த அனைவருக்கும் தெளிவாக விளங்கும்.
2.FSA தளபதி ஒருவர் 2011ல் செய்த போர் கொடுமைகள் ஐ.எஸ் செய்ததை போல் இணையத்தில் உலாவுவதும் ஈராக்கிய படைகள் செய்த கொடுமைகள் ஐ.எஸ் மேல் போடப்படுவதும் நடைபெறும் யதார்த்தமாகும். சமீபத்தில் கூட திக்ரித்தில் பணி புரிந்த 46 இந்திய நர்சுகளை ஈராக்கிய அரசு படைகளின் தாக்குதலிருந்து காப்பாற்ற மொசூலுக்கு மாற்றிய ஐ.எஸ்ஸின் செயலை வழக்கம் போல் ஊடகங்கள் தீவிரவாதிகள் கடத்தல் என்று எவ்வாறெல்லாம் திரித்தன என்பது நாம் அறிந்ததே. ஜனநாயக நாடுகளின் ராணுவத்தினர் பெண்களை தேடி வேட்டையாடி வன்புணர்வு செய்யும் காலகட்டத்தில் எதுவும் செய்யும் அதிகாரமிருந்தும் மூச்சு காற்று கூட படாமல் அனுப்பி வைத்த ஒரு செயல் போதும் அவர்கள் எப்படிப்பட்ட மனிதாபிமானம் மிக்கவர்கள் என்பதற்கு. மேலும் போர்களத்தில் எல்லா எதிரிகளையும் ஓரே மாதிரி நடத்த முடியாது என்பதையும் விளங்கி கொள்ள வேண்டும்.
சிறுபிள்ளைதனமான முயற்சி
*****************************************************
1.கிலாபத்துக்காக போராடும் இயக்கவாதிகள், உலமாக்கள் உள்ளிட்டோர் ஐ.எஸ் கிலாபத் அறிவிப்பின் மூலம் அவசரப்பட்டு விட்டது, யாருடனும் கலந்து ஆலோசிக்கவில்லை, ஷரியாவுக்கு எதிரானது என்றெல்லாம் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் ஐ.எஸ் ஆலோசனை செய்தார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசனை செய்திருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. உண்மையில் இம்மார்க்கம் நிலை பெற போராடிய செசன்யாவின் ஷாமில் தொடங்கி ஆப்கனில் ஷஹீதான் உஸாமா வரைக்கும் உண்மையான எண்ணத்துடனே போரிட்டார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து ஷஹீது உடைய அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்று பிராத்திப்போமாக.
2.ஆனால் எல்லா அமைப்புகளும் கிலாபத்துக்காக போராடவில்லை என்பதும் லிபியாவின் உமர் முக்தார் போன்ற பலர் தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவுமே போராடினர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணத்தால் அவர்களின் தியாகத்தை நாம் எள்ளவும் குறைத்து மதிப்பிடவில்லை. இஸ்லாமிய உலகின் மதிப்புக்குரிய அறிஞர்களின் கருத்துகளை பார்க்கும் போது சில போது தாங்கள் வசிக்கும் நாட்டின் அதிகார பீடத்தை திருப்திபடுத்த கருத்துரைக்கின்றனரோ என்ற ஐயம் எழுவதை தடுக்க முடியவில்லை.
முஸ்லீம்கள் என்ன செய்ய வேண்டும் ?
***************************************************************************************
1.விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிலாபத் அறிவிக்கப்பட்டு இமாம் ஜும்மாவும் கொடுத்துள்ள சூழலில் முஸ்லீம்களாகிய நாம் (ஐ.எஸ்ஸை ஆதரிக்கும் / எதிர்க்கும்) என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.
2.ஐ.எஸ்ஸை ஆதரிக்கும் முஸ்லீம்கள் ஐ.எஸ் உண்மையிலேயே கிலாபத்துக்கான பாதையை நோக்கி பயணிக்கிறதா என்பதை கண்காணிப்பதோடு விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல ஐ.எஸ் என்ற உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்.
3.மேலும் ஐ.எஸ் JAN, AQ, உள்ளிட்ட பிற போராளி அமைப்புகளிடம் இணக்கமாக இருக்க முயற்சி செய்வதோடு தேவையற்ற முஸ்லீம் உம்மாவின் ரத்தம் ஓட்டப்படுவதை தடுப்பதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
4.ஐ.எஸ்ஸை எதிர்க்கும் முஸ்லீம்கள் யூத, பிராமண, நஸ்ரானியின் பிடியில் சிக்கியுள்ள ஊடகங்களின் வாயிலாக நிகழ்வுகளை பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
5.அறிவிக்கப்பட்ட கிலாபாவை உறுதிப்படுத்தும் முயற்சியில் துணை நிற்பதோடு அதை பரவலாக்கவும் பாடுபட வேண்டும்.
6.இதற்கு பிறகும் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் இறைவனிடத்தில் துஆ செய்து நிகழ்வுகளை அவதானிக்க வேண்டும்.
7.குறைந்த பட்சம் யூத கைக்கூலிகள் என்றெல்லாம் போராளிகளை கொச்சைப்படுத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
8.கடைசியாக ஐ.எஸ்ஸின் தளபதி ஒருவர் கேட்ட துஆவுடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
9."யா அல்லாஹ் இக்கூட்டம் உண்மையிலேயே கிலாபாத்துக்காக பாடுபட கூடிய ஒன்றெனில் இதை வெற்றி பெற செய்வாயாக. மாறாக இது கவாரிஜ்களாகாவோ, மேற்குலகின் கைப்பாவையாகவோ இருக்கும் பட்சத்தில் இதன் முதுகை முறித்து விடுவாயாக"
(அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)
Jazkallah to http://islamiyakolgai.blogspot.ae

Saturday, August 14, 2010

முதலில் போதிக்க வேண்டியது அகிதாவா ? கிலாபத்தா ?

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.

“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடத்த வேண்டும்.
அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.
எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும், என்கிறார்கள்.

மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.

அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும். ஒற்றுமை குழைந்து விடும். ஐக்கியம் கருதி அதனை விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும். அவரவர் விரும்புகின்ற போக்கில் விட்டுவிடவேண்டும், என்பதாக கூறுகிறார்கள்.

மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக் கூடிய பொது விடயங்கiளுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்கொண்டு செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அரசாங்கமொன்றை நிருவினால் அதிகாரபூர்வமாக ஒரே கொள்கையின் கீழ் மக்களை வழிநடத்தலாம் என வாதிக்கிறார்கள்.
உண்மையில் இந்த கொள்கையும் அணுகுமுறையும் சரியல்ல.

கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் அடிப்படைக்கே முரணானதாகும்.

ஒரு முஸ்லிமுடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமலும், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தில் பலரையும் கூட்டு சேரத்தும் (ஷிர்க் செய்தும்) செயற்படுவதும் அல்லாஹ்வுடைய வல்லமையை சிதைப்பதாகும்.

தனக்கு (ஷிர்க்) இணைவைப்பதை மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான். மக்களிடம் ஷிர்க் நுழைந்த போதுதான் இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

மனித ஆத்மாக்களை படைத்து “நானல்லவா உங்கள் ரப்பு” என்று அல்லாஹ் கேட்டபோது “ஆம்! நீயே எங்கள் ரப்பு” என்றே ஆன்மாக்கள் பதில் கூறின. உலகிற்கு வந்த பின் அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அசல் வடிவில் வணங்காது வாழந்தபோதுதான் இந்த இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

இறைநம்பிக்கை ஒழுங்கில்லாமல் ஒரு முஸ்லிம் வாழும் காலம் எல்லாம் அவன் புரிகின்ற அத்தனை அமல்களும் பாழாகிவிடும்;
அதே நிலையில் அவன் மரணித்தாலும் தண்டனைக்குரியவனாக மாறிவிடுவான். எனவே பிரச்சாரப் பணியில் முதலிடம் கொடுக்க வேண்டியது அகீதாவை சீர் படுத்துவதிலும் பின்பற்றுவதிலும்தான்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வர்ணிக்கின்ற பிரகாரமும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணிக்கின்ற பிரகாரமும் தான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும். அதுவே ஈமானுக்கு பாதுகாப்பாகும்.

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
எல்லா பொருட்களிலும் வஸ்துகளிலும் அல்லாஹ் சங்கமிக்கிறான்
அல்லாஹ் ஷைக்கிடத்தில் சூபியிடத்தில் காட்சியளிக்கிறான். அவர்களுடன் பேசுகிறான்.
அமல்கள் இபாதத்கள் செய்தால் அல்லாஹ்வை நெருங்கமுடியாது.
அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு புரோகிதர் (அவ்லியா) தேவை.
மறுமையின் வெற்றிக்கு அவரது சிபாரிசு தேவை, என்று ஒரு முஸ்லிம் நம்பினால்
அவன், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய ஈமானுக்கு மாற்றமான நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.

பள்ளிக்குச் சென்று தொழுது அல்லாஹ்விடம் முறையிடுவதை விட கப்றுகளுக்குச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி கஷ்டங்களை முறையிட்டு காணிக்கைகள் செலுத்தி பிள்ளை வரம் கேட்டு கப்றுகளை சுற்றி வந்து மண்டியிடுதல் என்பது இறை நம்பிக்கைக்கு எதிரானது.

தகடு தாயத்துக்கள் எழுதி மேனியிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தொங்க விடுவதும் பாதுகாப்பு தேடுவதும் இறை நம்பிக்கைக்கு விரோதமானது.

அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றாமல் முன்மாதிரியாகக் கொள்ளாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களை வழிமுறைகளை சரிவர செயற்படுத்தாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களுக்கு மாற்றமாக சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து செயல்படுத்தல் என்பது இறைத் தூதரை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.

கலிமாவுக்கு மாற்றமாக மக்கள் செயல்பட்டாலும் சமுதாய ஒற்றுமை கருதி பயணிக்க வேண்டும் என்ற கோஷம் குப்ரியத்தில் கொண்டு போய் சேர்க்கும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலும் இத்தகைய வழிகள் களையப்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் களையெடுக்க பாடுபட வேண்டும்.

இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் அரசாங்கத்தை (கிலாபத்தை) அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை.
மாறாக அரசாங்க தலைவர்கள், மன்னர்கள் புரிகின்ற ஈமானுக்கெதிரான செயல்பாடுகளையும் சமூக விரோத செயற்பாடுகளையும் கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி; அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்தவே நபிமார்களை அனுப்பி வைத்தான்.”
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்றே எல்லா இறைத்தூதர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.அதனூடாக சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் கண்டித்துப்பேசினார்கள்.

மூஸா நபி இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக போராடிய போதும்
லூத் நபி ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடிய போதும்
ஷூஹைப் நபி அளவை நிலுவை மோசடிக்கு எதிராக போராடியபோதும்
தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்வைத்தே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணமானார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரசார பணியினை ஆரம்பித்த போது தவ்ஹீதை முதன்மை படுத்தியே 13 வருடங்கள் பாடுபட்டார்கள்.
எதிரிகள் இப்பிரசார பணியினை தடுக்கும் முகமாக சமரசம் செய்ய முனைந்த போதும் நபிகளார்(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
நபிகளாருடைய பிரசாரப் பணி மதீனாவில் தாக்கம் செலுத்தி மதீனத்து மக்கள் இஸ்லாத்தை தழுவியபின் மதீனாவை தளமாக கொண்டு படிப்படியாக கிலாபத்தை நோக்கி மக்களை நகர்த்தினார்கள்.
மதீனாவில் அருளப்பட்ட வசன அமைப்புக்களும் இதனை நன்கு தெளிவுப்படுத்துகின்றன.
எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்ற வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக மக்கள் வாழ்கின்ற போது அகீதாவை பற்றியோ ஸுன்னாவைப் பற்றியோ பேசாமல், கிலாபத்தை பற்றி பேசவேண்டும் கிலாபத் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது.

இந்நிலையில் அகீதாவில் பிடிப்பு இல்லாமல் சுன்னாவுக்கு முக்கியமில்லாமல் சடங்கு சம்பிரதாய கொள்கையில் மரணிக்கின்ற மக்களுடைய நிலையோ படுமோசமாகி விடும் என்பதை கிலாபத் பற்றி பேசுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

கிலாபத் ஏற்பட முன் அகீதா பற்றி; பேசப் பயப்படுபவர்கள்
(ஒரு வாதத்திற்காக வழிகெட்ட கூட்டங்கள் பிரிவுகளின் ஆதரவில் கூட்டரசாங்கம் நடத்தினாலும்) கிலாபத் ஏற்பட்ட பின்பும் பேசவே மாட்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு நடந்து விடுமோ ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகி விடுமோ தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இருக்குமே தவிர அகீதாவை சீர்படுத்தி ஆதாரபூர்வமான சுன்னாவை அமுல்நடாத்துகின்ற பற்றிய எண்ணம் இருக்காது.

இஸ்லாமிய நாட்டுக்குள்ளே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறியவர்களால் கூட அகீதாவின் அத்திவாரத்தில் இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை ஏற்படுத்தமுடியவில்லை.

இளைஞர்களை ஒன்று கூட்டி கிலாபத் பற்றி பேசி புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர போராடும் இவர்களால் அந்த இளைஞர்களுக்கு ஈமான் பற்றியும் ஆதாரபூர்வமான சுன்னாவின் நிழலின் அமல்கள் பற்றியும் போதிக்க முடியவில்லை.

எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் அமல்கள்; செய்யலாம். எமது கிலாபத் பயணத்திற்கு அவைகளை தடைகளாக்கக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாகும்.

புரட்சிகரமான கிலாபத் சிந்தனைகளை வழங்கி ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்க முனைவதைவிட ஈமானிய உணர்வுகளை ஊட்டி பலபேருடைய ஹிதாயத்திற்கு வழிகாட்ட தயார்படுத்தலாம். .

மக்களிடத்தில் அகீதாவுக்கெதிரான கொள்கைளையும் சுன்னாவுக்கெதிரான செயற்பாடுகளையும் பேசுவதற்கு பயப்படும் இவர்கள் ¬குறைந்தபட்சம் தங்களுடைய வாழ்விலாவது அதை விட்டும் ஒதுங்கி வாழ்கிறார்களா என்றால்; அதுவுமில்லை.

தங்களுடைய வீடுகளிலும் ஜமாஅத்திலும்; குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான விடயங்களை ஒதுக்காமல் செய்துகொள்கிறார்கள். தங்களுடைய வியாபார ஸ்தலங்களிலும அகீதாவுக்கு முரண்பட்டவைகளை விற்பனைசெய்கிறார்கள்.

தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.
பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம்.
எதையும் எதிர்க்கவுமாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவுமாட்டோம்.

என்பதே இவர்களது கொள்கையாகும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் கொள்கை அதுவாக இருக்காது.

உலகாயுதமும் மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காக தெரிகிறதே தவிர அதற்குத்தான் கிலாபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதோ நிலைநாட்டுவதோ அல்ல.

இஸ்லாத்தின் ஆணிவேரை பிடுங்கி எறியத் துடிக்கும் தீய கொள்கைகள் உடைய வழிகெட்ட கூட்டங்கள் குறிப்பாக ஷீஆவும் ,காதியானியும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவல் செய்தமைக்கு தீனை விட்டு கொடுக்கும் இவர்களது தாராளமான கொள்கைகளும் அரசியல் இலாபமே காரணம்.

படித்த மக்களோ பாமர மக்களோ இந்த வழிகேட்டின் அடையாளத்தை கண்டு கொள்ளாமல் அதில் போய் வீழ்ந்தமைக்கும் இந்தஅணுகுமுறையே காரணம்.

ஈரானில் ஏற்பட்ட ஷீஆ புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்ததனால் இன்று ஷிஆயிஸம் வேகமாக பரவி வருகிறது.

ஸஹாபாக்களை, நபிகளாரின் மனைவிமார்களை தவறாக சித்தரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில காலங்களில் ஷிஆ-சுன்னி பிரச்சினை இந்த நாட்டிலும் (அவர்களது குடும்பத்திலும்) நடக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

எனவே அகீதாவையும் தூய்மையான சுன்னாவையும் மக்கள் மத்தியில் வைத்து புனரமைக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கினால் கிலாபத் ஏற்படாவிட்டாலும் ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டு தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்;. தீனுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவேபெரிய கிலாபத்தாகும்.எனவே அகீதாவுக்கு முதலிடம் கொடுத்து பிரசாரப்பணியினை செய்வோமாக! … இன்ஷால்லாஹ்

நன்றி : உஸ்தாத் இம்தியாஸ்(islamkalvi.com)

( மூச்சு முட்டும் வரை கிளபாத்தை பேசும் இளம் உள்ளங்கள் " இஸ்லாமிய ஆட்சி வந்தால் எல்லாவற்றுக்கும் முடிவு எட்டும் என்று நிச்சியம இல்லாத வற்றை பற்றி கனவு காண்கிறார்கள் " ஆனால் இவர்கலாலோ அல்லது இந்த கொள்கையை ஆதரிப்பவர்களோ தங்கள் தங்கள் இஸ்லாமிய ஊர்களில் கூட ஒற்றுமையை கொண்டு வர முடியவில்லை என்பது எதார்த்த நிலவரம் - நாம் ஒன்றும் கிலாபத் ஏற்பட கூடாது என்று சொல்லவில்லை , கிலாபத் என்ற கனவில் தற்போதைய எதார்த்த வாழ்வில் ஒரு இஸ்லாமியனாக செய்ய வேண்டிய விடையத்தை கோட்டை விட்டு விட கூடாது என்பதே )

அல்லாஹ்வே அனைத்தையும் நன்கு அறிந்தவன் !!
Related Posts Plugin for WordPress, Blogger...