(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, January 2, 2011

இந்த சமூகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள், நாங்களும் இருக்கிறோம்.

95 வீதமான தீமையை சினிமாத்துறை தாங்கிப் பிடிக்கிறது என்றால் புத்தி ஜீவிகள் வாழும் உலகில் ஏன் இது இன்னும் உயிர் வாழ்கிறது?
சினிமாத்துறையில் காலம் கடத்தும், சினிமாவை வைத்து வயிறு வளர்க்கும் வல்லவர்கள் ஏன் இந்த உண்மைக் கண்டுகொள்கிறார்கள் இல்லை?

சினிமாவை வைத்து பணம் சம்பாதிக்கும், வங்கிக் கணக்கை பெருக்கிக் கொள்ளும் ஆல்கள் ஏன் சமூக நலனை பற்றி சிந்திப்பதில்லை?

கல்லூரிகளில், பல்கல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் ஏன் சினிமாவுக்காக அதிக நேரங்களை வீண் விரயம் செய்கிறார்கள்?

இப்படிப் பல கேள்விகள், கேள்விக்கு மேல் கேள்வி சிலரின் தலையை பிய்த்து போட்டிருக்கிறது.
சாரயம் குடிப்பவன் இருக்கும் வரை சாரயக் கடைகள் மூடப் படுவதில்லை.

சாரயக் கடைகளுக்கு லைசன்ஸ் வழங்கும் அதிகாரிகள், அரசியல் வாதிகள் இருக்கும் வரை சாரயக் கடைகள் மூடப் படுவதில்லை. சிகரெட் கம்பனி, தான் விற்கும் சிகரெட்களை விற்பனை செய்யும் பேதே இது புற்று நோயை ஏற்படுத்தும்சுகாதராத்திற்கு கேடு விலைவிற்கும்என்று பகிரங்கமாக பொட்டை எழுத்தில் எழுதிக் கொண்டே ஏன் வியாபாரத்தை அதிகரிக்கிறார்கள்? இந்த வியாபாரத்தில் இலாபம் சம்பாதிக்கும் அதிகார வர்க்கங்களும் ஆணவ வர்க்கங்களும், பணக்கார வர்க்கங்களும் ஒத்துழைப்பது தான் ஒரே ஒரு சரியான காரணமாகும்.

சாரயம், மது, சிகரெட் பாவணையில் ஆயிரக் கணக்கில் செத்து மடியும் மனித உயிர்களை விட இவர்களுக்கு பணமும், புகழும் தான் முக்கியம் என்பதுவேயாகும்.

இதே செய்திதான் சினிமாக் காரர்களுக்கும், ஆனால் சினிமாத்துறையில் கொஞ்சம் முன்னேரி பல்துறை சார் வித்தவான்கள் பங்குகொண்டு பகிர்ந்துகொள்கிறார்கள்.

இலக்கியத்திலும் கவி நயத்திலும் ஆர்வம் கொண்டவர்கள்,
கற்பனையிலும் கதையிலும் தேர்வு பெற்றவர்கள்,
விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள்,
உடல் அழகன், அழகி  என தன்னை எண்ணிக் கொள்பவர்கள்,
குரல் வலம் பிரமாண்டம், அதை வைத்து சம்பாதிக்கலாம் என சிந்திப்பவர்கள்,
எப்படியாவது துட்டுக் கிடைத்தால் போதும் என நினைக்கும் லஞ்சத்திற்கு அடிமையாகிக் கிடக்கும் அதிகாரிகள்,தொலைக் காட்சி, வானொலி அலைவரிசைகளுக்குச் சொந்தக்காரர்கள்,
நேரங்களை திட்டமிட்டு கடத்தத் தெரியா அறிவிளிகள்,
இலக்கற்று வாழ்க்கையை செலுத்துபவர்கள் என்று பல வேறுபட்ட குழுக்கள் சேர்ந்து சங்கமிக்கும் சேறு நிறம்பிய, ஒரு கலங்கிய குட்டைதான் இந்த சினிமா.

இது தான் நடைமுறை உண்மை.

கவிதை எழுதத் தெரியும், பாடல் எழுதத் தெரியும் ஆனால் அது சமூகத்திற்கு பிரயோசனம் தரும் வகையில் எழுதத் தெரியாது, அதனால் தான் காதலையும் காமத்தையும் கண்ணீரையும் கலந்து எழுதுகிறேன் இந்த சினிமாவில்.

எதையும் கற்பனை பண்ணத் தெரியும், கதை எழுதத் தெரியும், ஆனால் அது சமூகத்திற்கு பயன் தரும் விதத்தில் எழுதத்  தெரியாது அதனால் தான் இந்த சினிமாவில் நான்.

விளம்பரம் எனக்கு கைவந்த கலை, ஆனால் அதிக பணம் சம்பாதிக்க ஏற்றது இந்த சினிமா தான் என்பதால் நான் இந்த கலங்கிய குட்டியில்.

நான் உயர் பொருப்பில் பதவி வகிக்கின்றவன், ஆனால் ஆடம்பர வாழ்க்கையில் கொண்ட பேராசை, அதிக பணம் சம்பாதிக்கச் செய்து எப்படியாவது துட்டுக் கிடைத்தால் போதும் என நினைக்கும் லஞ்சத்திற்கு அடிமையாகி சினிமாவுக்கு வந்தேன்.

தொலைக் காட்சி, வானொலி அலைவரிசைகளுக்குச் சொந்தக்காரன், ஆனால் நேரத்தைக் கடத்த, மக்களை மகிழ்விக்க என்னிடத்தில் போதிய நிகழ்ச்சி நிரல்கள் இல்லை, புகழ்ச்சியும் தேவை. அதனால் இந்த பயனற்ற சேற்றில் புதைந்தேன்

நேரங்களை திட்டமிட்டு கடத்தத் தெரியாது அறிவிளியாகி நிற்கிறேன். அது என்னை சீரழியச் செய்திருக்கிறது,

இலக்கற்று வாழ்க்கையை சொந்தமாக்கிக் கொண்டேன், இப்போது இங்கு தள்ளி விட்டிறுக்கிறது.

சினிமாத்துறையில் ஏதாவது ஒரு விதத்தில் சேவை செய்யும் அல்லது பணம் சம்பாதிக்கும் ஒருவரிடத்தில் இருந்து வரக்கூடிய, அல்லது வர வேண்டிய ஒரு காரணம் தான் நான் மேலே சொன்னவைகள்.

சினிமாவில் புதைந்து கிடக்கும் கவிஞர்களே! சமூகத்தைப் பற்றியும் ஒரு நிமிடம் சிந்தியுங்கள்,

பாடல் வரிகள் இளைஞர்களை காமுகனாக்குகிறது, பாடல்வரிகள் அவர்களை உணர்ச்சிவசப்படுத்துகிறது. தாயும் சேயும் ஒன்றாக இருந்து இந்த பாடல் வரிகளை செவிசாய்க்க முடியவில்லை.

பதக்கங்கள், பட்டங்கள் பல வேண்டிய பாடகர்களையும், கவிஞர்களையும் இசையமைப்பாளர்களையும் சவால் விட்டுக் கூவியழைக்கிறேன்,
இந்த சீர்கெட்ட சினிமாவை விட்டால் உங்களால் கை நிறைய சம்பாதிக்கத் தெரியாது, முடியாது, வேறு வழியில் புகழ் சம்பாதிக்கத் தெரியாது. முடியாது. முடிந்தால் இப்போதே சினிமாவை இடை நிருத்திவிட்டு வேறு முயற்சியில் இறங்குங்கள் பார்க்கலாம்.

கற்பனைக் கதைகளை அல்லது நடந்த உண்மைச் சம்பவங்கள் என்ற பெயரில் சினிமாவிற்கு கதை எழுதும், கதை நடை சொல்லும், வரிகள் வரையும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நட்சத்திரங்கள் வெட்கம் என்கிற உணர்வு நாளங்களை வெட்டி எரிந்து விட்டு சினிமாவைச் சொல்ல.வீதிக்கு வந்தீர்களா? நாட்டு நடப்புக்களை, அறிவுச் சாதனைகளை, கல்வித் தகவல்களை தேடி ஒரு பத்திரிகையையோ, தொலைக்காட்சி, வானொலி பக்கத்திற்கோ போக முடியவில்லை. ஆபாசமும் காமமும் கற்பளிப்புமாக நிறைந்து வழிகிறது அந்த சமூக சேவைப் பகுதிகள். எந்த நாட்டு அலைவரிசையைப் பார்த்தாலும் இதே கெதி.

ஒரு இடத்தில் குண்டு வெடுப்பு என்ற செய்தியைக் கேள்விப் பட்டதும், ஒரு குடும்பத் தலைவர் திடுக்கிட்டு தனது வீட்டு தொலைக்காட்சிப் பெட்டியை திறந்து செய்திக்காக காத்திருக்கிறார். வயதுக்கு வந்த மகள், மகன், மனைவி அனைவரும் காத்திருக்கிறார்கள். செய்திக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே இருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 10க்கும் மேலான விளம்பரங்கள், சில பாடல்கள்.

இந்த மூன்று நிமிடங்களில் ஒளிபரப்பப்பட்ட சில பாடல்களும் விளம்பரங்களும் அந்த தந்தையை தூக்கிப் போட்டது, கடைசியில் செய்தியும் இல்லை, வீட்டில் டீவியும் இல்லை, தூக்கி ஓரங்கட்டி விட்டார். அவ்வளவு ஆபாசமான வாசகங்களும் அதற்கேறறாட் போல் காட்சிகளும் அவரை வெட்கித் தலைகுனியச் செய்தது.

இந்த தொலைக் காட்சி, வானொலி, பத்திரிகை நிறுவனங்களுக்கு நாம் விடும் சவால், சமூகத்தை அநாகரிகத்தின், நரகத்தின் விளிம்பில் தள்ளிக்கொடுக்கும் சினிமாப் பாடல்களையும் காட்சிகளையும் ஒரு வாரத்திற்கு இடை நிருத்திவிட்டு ஏனைய சமூக பயன் தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிப் பாருங்கள்.

தெளரியமாக சவால் விடலாம், உங்களால் முடியாது,
ஏன்? தகுதியான நிகழ்ச்சிகள் உங்களிடத்தில் இல்லை,
தகுதியான விளம்பரங்கள் உங்களிடத்தில் இல்லை,
நேயர்களை ஈர்க்கும் வகையில் பயனுள்ள ஏனைய நிகழ்ச்சிகளை உங்களால் சொந்தமாக தயாரிக்க முடியவில்லை.

இரண்டு நாளைக்கு முன் புத்தகம் சுமந்து கல்லூரிக்குச் சென்றவள்
நேற்று வகுப்பு நண்பனுடன் சினிமாக் கொட்டகைக்குச் சென்றால், இன்று அவள் விபச்சார விடுதியில் கலவிக் காரியாய் கண்ணீரும் காமமுமாய் காலம் கடத்துகிறால். இந்த வாழ்க்கைக்கு வித்திட்டது சினிமா என்ற ஷாத்தானாகும்.

நேற்று சிறந்த மாணவன் என்ற புகழ் வாங்கிய வாலிபன் இன்று பெரிய ரவுடியாக பார்க்கப் படுகிறான். இந்த ரவுடி என்கிற புகழையும் கொடுத்தது சினிமாதான்.

அதனால் தான் சினிமாத் துறையில் இருக்கும் அனைவருக்கும் சவால் விடுக்கிறோம் அல்லது அன்பு வேண்டுகோள் வைக்கிறோம், கொஞ்ச நேரம் சமூகத்தைப் பற்றியும் சிந்தியுங்கள்.

இந்த சமூகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள், நாங்களும் இருக்கிறோம்.

மாற்றங்கள் தேவை தளத்திலிருந்து .........

Saturday, January 1, 2011

நபி (ஸல்) அவர்களைப்பற்றி ஓர் எதிரியின் வாக்குமூலம்!

நபி (ஸல்) அவர்கள் அரசர்களுக்கு இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த காலமது. அன்று வல்லரசு நாடுகளில் ஒன்றான உரோமமப் பேரரசருக்கு ஒரு கடிதத்தை தமது தோழர் திஹ்யா இப்னு கலீபா அல்கல்ஃபீ அவர்கள் மூலமாக பஸராவின் கவர்னரிடம் கொடுத்து ரோமப்பேரரசரிட்ம் சேர்ப்பிக்குமாறு அனுப்பிவைத்தார்கள்.


அப்பொழுது ரோமானியப் பேரரசர் கைஸர் (ஹெர்கலிஸ்) சிரியா நாடு வந்திருந்தார்.சிரியாவின் தலை நகரில் (மஸ்ஜிதுல் அக்ஸாவில்) அவரது அவை கூடியது. அப்பொழுது அவரது அமைச்சர்களில் ஒருவர் ஒரு கடிதத்தை அரசரிடம் கொடுத்தார்.அதனைப் பெற்றதும் அப்பேரரசரின் தலையும் சுழன்றது. ஒரு நொடி நேரத்தில் எத்தனையோ எண்ணங்கள் அவரது உளக்கடலில் அலைமோதின.

அரபு நாட்டிலிருந்து இங்கு யாரும் வந்துள்ளனரோ? என்று விசாரித்தார் மன்னர் மன்னர். ‘ஆம்’ என்றார் அங்கு வீற்றிருந்த ஒருவர்.உடனே அவரை அழைத்து வருமாறு ஆணை பிறப்பித்தார் அரசர். அவ்வாறே அந்நாட்டிற்கு வாணிபத்தின் பொருட்டு வந்திருந்த குரை ஷpகள் சிலர் அரசவைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் அண்ணல் நபியின் பெரும் பகைவர் அபூசுஃபயானும் நின்று கொண்டிருந்தார்.

உங்களுடைய நாட்டில் யாரோ ஒருவர் தம்மை ‘நபி’ என்று கூறிக் கொள்;கிறாராமே! இங்கு வந்திருப்பவர்களில் அவருக்கு நெருங்கிய உறவினர் எவரேனும் உண்டோ? என்று வினவினார் அப்பேரரசர்.
“நான் அவரது நெருங்கிய உறவினர் தான்” என்று கூறிக்கொண்டே அவர் முன் வந்து நின்றார் அபூசுஃப்யான்.

அப்பொழுது அப்பேரரசர் மற்ற அரபிகளைப் பார்த்து, இப்பொழுது நான் அபூசுஃப்யானிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் அதற்கு மறுமொழியாக அவர் பொய் கூறுவாராயின் நீங்கள் என்னிடம் எடுத்துரைக்கவேண்டும் என்று எச்சரித்தார்.(அபூசுஃப்யான் பி;ன்னர் ஒருசந்தர்பத்தில் கூறும் பொழுது ‘ரோமானியப் பேரரசர் அன்று மட்டும் அவ்வாறு எச்சரிக்கை செய்திராவிட்டால் நான் நிச்சயமாக அவர் முன்னிலையில் பொய்யே சொல்லி யிருப்பேன்’ என்று கூறினார்.)அதன் பின் கைஸருக்கும் அபூசுஃப்யானுக்கும் இடையே பின் வரும் உரையாடல் நிகழ்ந்தது.

கைஸர் : தம்மை நபி என்று கூறிக்கொள்பவரின் குடும்பத்தகுதி என்ன?
அபூசுஃப்யான் : அரபு நாட்டின் மிக உயர்ந்த குடும்பம் அவரது குடும்பம்.
கைஸர் : இதற்கு முன்னர் எவரேனும் அவரது குடும்பத்தில் தம்மை ‘நபி’ என்று கூறிக்கொண்டனரா?
அபூசுஃப்யான் : இல்லை.

கைஸர் : வரது குடும்பத்தில் எவரேனும் அரசர்களாக இருந்துள்ளனரோ?
அபூசுஃப்யான் : இல்லை.

கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளா? செல்வந்தர்களா ?
அபூசுஃப்யான் : ஏழைகள்.
கைஸர் :அவரைப் பின்பற்றுவோர் பெருகிக் கொண்டு போகிறதா? குறைந்து கொண்டு போகிறதா?

அபூசுஃப்யான் : நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே தான் செல்கிறது.
கைஸர் : அவர் எப்பொழுதேனும் பொய்யுரைத்ததை நீங்கள் கேட்ட துண்டா?
அபூசுஃப்யான்:ஒருபோதும் இல்லை.

கைஸர் : உடன்பாட்டுக்கு அவர் மாறு செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :இது வரையிலும் இல்லை.இப்பொழுது எங்களுக்கும் அவருக்குமிடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் பார்க்கவேண்டும்.

கைஸர் :அவருடன் நீங்கள் போர் செய்ததுண்டா?
அபூசுஃப்யான் :ஆம்.

கைஸர் :அதன் முடிவு என்ன ?
அபூசுஃப்யான் :சில சமயங்களில் எங்களூக்குவெற்றி.மற்றும்சில சமயஙகளில் அவருக்கு வெற்றி.

கைஸர் : அவர் மக்களுக்கு என்ன உபதேசம் செய்கின்றார்?
அபூசுஃப்யான் : ஒரே இறைவனை வணங்குங்கள் என்றும்,அவனுக்குஇணைவைக்காதீர்கள் என்றும்,அவனைத் தொழுது தூய வாழக்கை வாழுங்;கள் என்றும்,உண்மை பேசுமாறும்,உறவினருடன் ஒற்றுமையாயி ருக்குமாறும் அவர் போதிக்கிறார்.

இப்பொழுது ரோமானியப் பேரரசரின் கண்கள் சுடர் விட்டன. அவருடைய முகத்தில் என்றுமில்லாத ஒளி தோன்றியது. அவர் அரபுகளைப்பார்த்து பின்வருமாறு கூறினார்.

அவர் உயர் குடியிற் பிறந்தோர் என்று கூறினீர்.தீர்க்கதரிசிகள் எல்லாம் இதுகாறும் உயர் குடியில் தான் பிறந்துள்ளனர்.
அவருடைய குடும்பத்தில் இதுவரை யாரும் தம்மை நபியென்று கூறிக் கொள்ளவில்லை என்றும் கூறினீர். அவ்விதம் இருப்பின் அவரைப் பின்பற்றி இவரும் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்கிறார் என்று எண்ணலாம். அவ்விதம் எண்ணுவதற்கு இடம் இல்லை.

அவருடைய குடும்பத்தில் இதற்கு முன் யாரும் அரசர்களாய் இருந்ததில்லை என்றும் கூறிகின்றீர். அவ்விதம் இருந்திருப்பின் இவரும் ஓர் அரசராவ தற்காக இவ்வாறு வேடம் புனைந்துள்ளார் என்று நான் எண்ணி இருப்பேன்.

அவர் பொய்யுரைப்பதில்லை என்றும் கூறினீர்.பொய்யுரைக்காத ஒரு மனிதர் எவ்வாறு இறைவனைப்பற்றிப் பொய்யுரைப்பார்?
அவரைப் பின்பற்றுவோர் ஏழைகளே என்றும் கூறுகின்றீர். இறைவனின் தூதர்களை முதலில் பின்பற்றுவோர் ஏழைகள் தாம்!

அவர் உடன்பாட்டை முறித்ததில்லை என்றும் கூறினீர். இறைவனின் திருத்தூதர்கள் ஒருபோதும் பித்தலாட்ட வேலைகளில் ஈடுபடமாட்டார்கள்.
சிலபொழுது போரில் உங்களுக்கு வெற்றியும், சிலபொழுது அவருக்கு வெற்றியும் ஏற்பட்டதாகக் கூறுகின்றீர்.

இவ்வாறே வெற்றியையும்,தோலவியையும் மாறி மாறி வழங்கி இறைவன் அவர்களைச் சோதிப்பான். அவருடைய அறிவுரைகள் யாவும் எல்லோராலும் பின்பற்றத் தக்கவை.

நீர் கூறியது உண்மையாயிருப்பின் அவர் நிச்சயமாக இறைவனின் இறுதித் தூதரேயாவார். ஒரு காலத்தில் இந்நாடும் அவர் வயமாகும். இறைவனின் தூதர் தோன்றப்போகின்றார் என்பதை நான் அறிந்தே இருந்தேன்.

ஆனால் அவர் அரபு நாட்டில் தோன்றுவார் என்று நான் எண்ணவில்லை.எனக்கு அங்கு செல்ல வாய்ப்பு கிட்டின் நான் அவர்களுடைய கலடிகளிலே நின்று குற்றேவல்; புரிவேன். அதன் பின் அக்கடிதத்தைப் படிக்குமாறு பணித்தார் மன்னர்.

‘அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால், அவனுடைய அடியாரும் திருத்தூத ருமாகிய முஹம்மத், ரோமானியப் பேரரசர் ஹெர்குலிஸுக்கு எழுதும் கடிதமாவது :-

இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவனுடைய திருத்தூதரைப் பின்னற்றி ஒழுகுபவர்களுக்கு இறைவனின் சாந்தி உண்டாவதாக!

வேதத்தையுடையோரே! அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் வணங்க மாட்டோம். அவனுக்குஇணைவைக்கவும் மாட்டோம்.

நாம் நம்மில் ஒருவரை ஒருவர் கடவுளாக ஆக்கிக் கொள்ள மாட்டோம் என்ற பொதுக் கொள்கைக்கு வாருங்கள் என்று கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் ‘நாங்கள் முஸ்லிம்கள்’ என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்’ என்று கூறிவிடுங்கள். (குர்ஆன்-3.64) என்ற மறைவசனத்தை துவக்கமாகக் கொண்டு கடிதம் எழுதப்பட்டிருந்தது. (புகாரி)

அல்லாஹ்வைத்தவிர்த்து வணக்கத்திற் குரியோன் வேறு யாருமில்லை என்றும், நான் எல்லா மக்களுக்கும் எச்சரிக்கை செய்து அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பெற்ற அவனது திருத்தூதர் என்றும் சான்று பகர்கின்றேன்.

நீரும் இஸ்லாத்தைத் தழுவிவிடும்;.அப்போது நல்வாழ்வு வாழ்வீர்! இல்லையேல் உம்முடைய குடிகளின் பாவங்களும் உம்மையே வந்து சேரும்.முடங்கல் எழுப்பிய முழக்கத்தைக் கேட்டதும் அங்கு வீற்றிருந்த பாதிரிமார் களின் மூளை கலங்கியது.

அதன் பின்னர் மன்னர், அபூஸுஃபயான் முதலானோரைப் போய்வருமாறு பணித்தார்.அபூஸுஃபயான் வெளியே வரும்பொழுது அடகடவுளே! மன்னாதி மன்னரும் முஹம்மதைக்கண்டு அஞ்சுகிறானே.அவருடைய மடலைச் செவியுற்று அவனுடைய அவையி லுள்ளோர் அனைவரின்; உள்ளமும் உடலும்; நடுநடுங்குகின்றனவே! ‘இதென்ன புதுமை!’ முனங்கிக் கொண்டு சென்றனர்.

பின்னர், அப்பேரரசர் தம் அவையினரை யெல்லாம் பார்த்து இஸ்லாத்தின் பெருமையினை எடுத்துரைத்து அதனைப் பின்பற்றின் தங்களுக்கு வளவாழ்வும், வான்புகழும் வந்து சேரும் என்றும் கூறினார்.

மேலும் பெருமானாரின் தூதர் திஹ்யாவுக்கு மன்னர் பெரும் பரிசில்களையும் செல்வத்தையும், உயர் ரக ஆடைகளையும் அளித்து கவுரவித்தார். மன்னர் மனத்திலே அக்கடிதம் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது.(ஸீரத்துந்நபி, இப்னு ஹிஷாம்)

ஜசக்கல்லாஹ் : http://albaqavi.com/home/?p=241
Related Posts Plugin for WordPress, Blogger...