(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, July 31, 2013

தாமதமாக நோன்பு திறப்பது தான் நபிவழியா ? ? பேணுதலா ??

தற்போது பல  பள்ளிகளில் நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்துகின்றனர். எப்படியென்றால், சூரியன் மறைந்தவுடன் நோன்பைத் திறக்காமல், சூரியன் மறைந்து 5 – 7 நிமிடங்கள் கழிந்த பின்பே நோன்பு திறக்கின்றனர். அவர்கள் வெளியிடும் நோன்பு கால அட்டவணையில் கூட சூரியன் மறைவு என்று ஒரு நேரம் போட்டிருப்பார்கள். அதை விட 5 – 7  நிமிடங்கள் கூடுதலாக நோன்பு திறக்கும் நேரத்தைப் போட்டிருப்பார்கள். கேட்டால் பேணுதல் என்கின்றனர். 
இல்லை சூரியன் மறைந்துவிட்டால் விரைந்து நோன்பு திறந்துவிட வேண்டும் என்பது நபிவழி என்றால்...
என்னங்க நீங்க இவ்ளோ நாலா தர்கா குண்டு போட்டு தான் நோன்பு திறப்போம் இப்ப என்னானா புதுசு புதுசா எதாவது சொல்றதே உங்க வேலையா போச்சு..
காலைல இருந்து இவ்ளோ நேரம் இருந்துட்டோம் ஒரு ஐந்து நிமிஷம் இருக்க முடியாதா உங்களால என்கிறார்கள்.. இப்படி பட்ட அறிவுஜீவிகளுக்காக...
விளக்கமாக இங்கே தெளிவுபடுத்துகிறோம் இன்ஷால்லாஹ்...
நாங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில்  விரைந்து நோன்பு திறக்க வேண்டும் என்று கூறுகிறோம் என்பதை சிந்தித்து விளங்க வேண்டும்.

நோன்பானது பஜ்ர் ஆரம்பமாகும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரை உள்ள நேரம் தான்.
( SUNRISE TO SUNSET )
“இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006
சூரியன் மறைந்தவுடன் நோன்பை உடனே திறந்து விட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. அச்செயல் தான் நன்மைக்கு வழிவகுக்கும்.
“நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
நூல்: புகாரி 1957
நானும் மஸ்ரூக் (ரஹ்) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! இரு நபித்தோழர்களில் ஒருவர் விரைந்து நோன்பு துறக்கிறார்; (மஃக்ரிப் தொழுகையின் ஆரம்ப நேரத்திலேயே) விரைந்து தொழுகிறார். இன்னொருவர், நோன்பு துறப்பதையும் தாமதப்படுத்துகிறார்; தொழுகையையும் தாமதப்படுத்துகிறார் (இவ்விருவரில் யார் செய்வது சரி?)” என்று கேட்டோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “விரைந்து நோன்பு துறந்து, விரைந்து தொழுபவர் யார்?” என்று கேட் டார்கள். நாங்கள் “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)’ என்றோம். அதற்கு, “இவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஅத்திய்யா மாலிக் பின் ஆமிர் (ரஹ்)
நூல்: முஸ்லிம் 2004
சூரியன் மறைந்தவுடன் என்றால், இருட்டாகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை, சூரியன் மறைந்தாலும் உடனே முழுவதும் இருட்டாகி விடுவதில்லை, பகலின் வெளிச்சம் இருக்கத் தான் செய்யும். நாம் சூரியன் மறைந்தவுடன் நோன்பு திறந்து விட வேண்டுமே தவிர, இருட்டு வரவேண்டும் என்பதற்காக காலம் தாழ்த்தக் கூடாது.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், ‘இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! என்றார்கள். அதற்கவர் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!” என்றார். நபி(ஸல்) அவர்கள். ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்றார்கள். அதற்கவர், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!” என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். அதற்கவர் ‘பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?’ என்று கேட்டதற்கும் நபி(ஸல்) அவர்கள் ‘இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (ஸல்) அவர்கள் அருந்திவிட்டு, ‘இரவு இங்கிருந்து முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா (ரலி)
நூல்: புகாரி 1955

விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையைப் பெற்றுக்  கொள்கிறார்கள் என்ற நபிமொழி யை ஏற்று, நாம் பலவீனமானவர்கள்  அல்லாஹ் சொன்னதற்காக பட்டினி கிடந்தோம். இனி நம்மால் பொறுக்க முடியாது.  உன் கட்டளையை ஏற்று  நோன்பு திறக்கிறோம் என்று நம் அடிமைத் தனத்தை வெளிபடுத்தி விரைந்து  நோன்பு திறக்க கடமைப்பட்ட முஸ்லிம்கள் அப்படியே நிறைவேற்ற  வேண்டும்.

"எனக்கு தெம்பிருக்கின்றது  நான் இன்னும் 10 நிமிடம் கழித்து நோன்பை திறப்பேன்" என்று யாராவது முடிவெடுத்தால் அது இறைநம்பிக்கையின் செயலல்ல. அது அகங்காரத்தின் வெளிபாடு.  
எனவே நபி(ஸல்) அவர்களே செய்யாத ஒன்றை பேணுதல் என்ற பெயரில் யார் சொன்னாலும் ,செய்தாலும் அதனை ஏற்கத் தேவையில்லை. எனவே நோன்பு திறப்பதை தாமதிக்காமல், சூரியன் மறைந்தவுடன் திறந்து விட வேண்டும்.இதுவே நபிவழியாகும்.

அல்லாஹுடைய தூதரின் வழிகாட்டுதலுக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இதை ஏற்றுநடப்பார்களா ?

நடப்பவர்களே அல்லாஹ்வின் தூதருக்கு கட்டுப்பட்டவர்கள். 


 NAGORE, TAMIL NADU, INDIA

Latitude: N 10deg 49min    Longitude: E 79deg 51min
Qibla: 69:24:15 W (From N)

Ramadan 1434 AH

source : islamicity.com



Jul
Aug
Day
Fajr
(Dawn)
Shorook
(Sunrise)
Zuhr
(Noon)
Asr
(Afternoon)
Maghrib
(Sunset)
Isha
(Night)








7/30
Tue
4:44
5:59
12:17
3:36
6:35
7:50
7/31
Wed
4:44
5:59
12:17
3:36
6:35
7:50
8/1
Thu
4:44
5:59
12:17
3:35
6:35
7:49
8/2
Fri
4:45
5:59
12:17
3:35
6:34
7:49
8/3
Sat
4:45
5:59
12:17
3:34
6:34
7:48
8/4
Sun
4:45
6:00
12:17
3:33
6:34
7:48
8/5
Mon
4:45
6:00
12:17
3:33
6:33
7:47
8/6
Tue
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/7
Wed
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/8
Thu
4:46
6:00
12:16
3:32
6:33
7:47
8/9
Fri
4:46
6:00
12:16
3:30
6:32
7:46
8/10
Sat
4:47
6:00
12:16
3:29
6:32
7:45

Monday, July 22, 2013

காரைக்காலில் பா.ஜ.க அட்டுழியம் மத கலவரம் ஏற்படுத்த முயற்சி

முஸ்லிம்கள் மீது கொலைவெறி தாக்குதல் .பதட்டமான சூழல் .பிஜேபி புதுச்சேரி மாநில செயலாளர் அருள்முருகன் மற்றும் குண்டர்கள் காரைக்கால் மாதா கோவில் வீதி MAX WOMEN (கபீர் ) கடையை அடித்து நொறுக்கிஅங்கு பணிபுரியும் haja என்பவரை கத்தியால் குத்தினார்கள் .அரசு பொது மருத்துவமனையில் ஹாஜா அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார் .இதற்கு காரைக்கால் காவல்துறை பா.ஜ.க விற்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றது.
காரைக்காலில் இப்போது நடைபெற்று வரும் காவிகளின் பந்திற்கு காரைக்கால் காவல் துறை முழு ஆதரவு தெரிவித்து வருகிறது ,ஆம்!இன்று காலை பொதுமக்கள் கடைகளை திறந்தபோது வழமைபோல காவி கயவர்கள் கலவரம் ஏற்படுத்தும் நோக்கோடு கடைக்காரர்களை மிரட்டினர் .அதை தடுக்கவேண்டிய காவல்துறையோ கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது ,துணிச்சல் பெற்ற காவிகயவன் அருள்முருகன் முஸ்லிம் சகோதரர்களின் கடைக்குள் புகுந்து அவர்களை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளான் ,இதனை தடுக்க சென்ற முஸ்லிம்களை காவல் துறை அடித்து விரட்டியுள்ளது ,மட்டுமல்லாமல் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (s p )முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் முடிந்தால் பாண்டிச்சேரியில் பாம் வையுங்கள் என்றும் தான் ஒரு அரசு அதிகாரி என்பதைகூட மறந்து விட்டு காவிகளின் தலைவனை போல பேசியுள்ளார் 

இதனால் கொதித்து போயுள்ள முஸ்லிம்கள் அமைப்பு/கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று கூடி லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசலிலிருந்து பேரணியாக புறப்பட்டு மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளிப்பது என முடிவெடுத்துள்ளனர் .காவி பயங்கரவாதி அருள்முருகனை கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யவேண்டும் காவிகளின் தலைவனைபோல் பேசிய காவல் கண்காணிப்பாளர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
- நன்றி காரைக்கால் யூசுப் எஸ்.பி
- புகைப்படங்கள் இஸ்லாமிய சிந்தனை










இஸ்லாமியர்களை தீவிரவாதி என்று கூறிய காரைக்கால் காவல் துறை கண்காணிப்பாளரை (SP) பணிநீக்கம் செய்யக்கோரி காரைக்கால் இஸ்லாமிய மக்கள் மாவட்ட ஆச்சியரிடம் மனு கொடுத்தனர்.














Sunday, July 14, 2013

புனிதமிக்க இந்த ரமலானில் உங்களின் துஆவில் இவர்களை இணைத்துகொள்ளுங்கள்..



இலங்கை - கேகாலை மாவட்டத்தில் தல்கஸ்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த ஜனாப் முனவ்வர் , பாத்திமா ஹூசைனா தம்பதிகளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்தவள் அஸ்மா, 12 வயது. இளையவள் ஸைனப், 9 வயது
தமது பிறப்பு முதலேயே மிகவும் அரிதானதொரு தோல் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் அதனைக் குணப்படுத்துவதற்காக கடந்த பல  வருடங்களாக பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இவர்களின் சிகிச்சைக்காக இதுவரை பல இலட்சம் ரூபாய்கள் செலவளிக்கப்பட்டுள்ள நிலையில் வைத்தியர்களின் ஆலோசணைப்படி வாழ்நாள் பூராவும் தொடர்ந்தும் மருந்துகளைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

தமது வயதையொத்த ஏனைய சிறுமிகளைப் போல சாதாரணதொரு வாழ்க்கையை வாழ விரும்பும் இவர்கள் தற்போது தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர்.             

7ஆம் வகுப்பில் அஸ்மாவும் நான்காம் வகுப்பில் ஸைனப் உம் கல்வியை தொடர்கின்ற நிலையில் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்கள் அனைவரும் இவர்கள் கற்பதற்காக தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.


சவுதி அரேபியாவில் ஹோட்டல் இன்டகொண்டினன்டில் தொழில் புரிந்த ஜனாப் முனவ்வர் தனது சம்பாத்தியம் முழுவதையுமே இவர்களின் சிகிச்சைக்காக செலவிட்டுள்ளார். தனது முள்ளந்தண்டில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து தற்போது எந்த வித தொழிலுமே செய்ய முடியாத நிலையில் உள்ளார் ஜனாப் முனவ்வர்.

பாத்திமா அஸ்மா மற்றும் பாத்திமா ஸைனப் தமது வாழ்நாள் பூராவும் மருந்துகளுடனேயே வாழ வேண்டிய நிலையில் மாதாந்தம் சுமார் 25 ஆயிரம் ரூபாய்களை மருந்திற்காக மட்டும் செலவழிக்க வேண்டியுள்ளனர்.
எந்தவித தொழிலுமே செய்ய முடியாத நிரந்தர நோயாளியான ஜனாப் முனவ்வர் தனது பிள்ளைகளுக்கு அன்றாடம் தேவையாகும் மருந்துகளை தயார் செய்வதற்கு உங்களுடைய நிதியுதவிகளை நாடுகின்றார்.



எவரொருவர் தனது சகோதரனின் தேவையொன்றை பூர்த்தி செய்கின்றாரோ,அல்லாஹ் அவரின் தேவையொன்றை பூர்த்தி செய்வான் ' - ஹதீஸ்.

சுகத்தையும் துக்கத்தையும் வழங்குபவன் அல்லாஹ் ஒருவனே!

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.

இந்தச் சிறுமிகளின் மருத்துவச் செலவிற்காக உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.  உதவிகள் செய்யமுடியாத  நிலையில் இருந்தால்..
இந்த இருவருக்கும் அல்லாஹ்விடம் அன்றாடம் துஆ செய்யுங்கள்...
யா அல்லாஹ் நோயை தருபவனும் நீயே ..
அந்த நோயிர்க்கும் நிவாரணம் அளிப்பவனும் நீயே ..
யா அல்லாஹ் இந்த சகோதரிகளுக்கு பரிபூரண சுகத்தை தருவானாக...

CONTACT DETAILS
S.L.M MUNAWWAR
F 119/1, PANAPURAWATHA,
THALGASPITIYA,
ARANAYAKE.
SRI lANKA.
PHONE: 0094 77 91 77 33 9
email: amflanka@gmail.com

NAME OF ACCOUNTS.L.M MUNAWWAR
BANKCOMMERCIAL BANK
BRANCHMAWANELLA
A/C NO.
8790020192
SWIFT CODECCEYLKLXXXX




Tuesday, July 9, 2013

நாகூரை சேர்ந்த சகோதரர் கபீர் அவர்களுக்கு நம்மால் என்ற உதவிகளை செய்வோம்..

நாகூரில் புதுமனை தெருவில் வசிக்கும், முகம்மது கபீர் இரு சக்கர வாகன விபத்தில் மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கல்லீரல், மற்றும் கணையம் பாதிக்கப்பட்டு சென்னை, பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனையில் தீவிர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இரு கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளதால், மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது..ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அவரால் அனைத்து செலவுகளையும் பண்ண சக்தி இல்லாததால், அக்குடும்பத்தார் நம்மிடையே உதவியை நாடி இருக்கிறார்கள்..

இந்த செய்தியை அனைவரும் பகிர்ந்து, அவருடைய உடல் குணம் அடைய அல்லாஹுவிடம் துஆ செய்யுமாறும், தாங்களால் இயன்ற அளவு பண உதவி செய்திடுமாறும் கேட்டு கொள்கிறோம்.

இவர் இதற்க்கு முன் சிகிச்சை செய்த மருத்துவ ரசிதும் , நாகூர் ஜமாத் வழங்கிய சான்றும் இணைக்க பட்டு உள்ளது....உதவ விரும்புபவர்கள், அவர் குடும்பத்தை நாடி உதவி தொகையை கொடுக்கலாம் அல்லது கீழே குறுப்பிடபட்டுள்ள வங்கியின் மூலமாகவும் உதவலாம்...

அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் வெற்றியை கொடுப்பானாக,,,ஆமீன்...

CITY UNION BANK, NAGORE
Account No. 1206336
ifsc code -CIUB0000278

A.MOHAMED IBRAHIM (கபீர் சகோதரர்)
























நன்மைகளை கொள்ளைஅடித்துகொள்ள  ரமலான் வந்துவிட்டது ...
அதிலும் அடுத்தவரின் கஷ்டத்தை போக்கும் உயர்ந்த தொண்டுகளை செய்வோமானால் ... 

 படைத்தவனிடமிருந்து மகத்தான கூலி இன்ஷாஅல்லாஹ் நிச்சயம்.

Related Posts Plugin for WordPress, Blogger...