(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, August 28, 2012

வார்டு கவுன்சிலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா..? ?

நமதூரில் ஏற்கனவே நல்லா இருந்த ரோட்டை கொத்து புரோட்டா போட்டு நாசம் பண்ணியாச்சு ... 

அப்படி இப்படின்னு எல்லாத்தெருவையும் உண்டு இலைன்னு பண்ணியாச்சு சரி எப்பதான் ரோடு போடுவீங்க என்றால் ...

இந்தல , அந்தல என்று சொல்லிகொண்டு இருகிறார்கள்.... இதுல இந்த பிரச்சனை வேறு ..


இது மாதிரி ஊர்ல பல இடம் இருக்கிறது .. இது ஒரு சாம்பிள் என்றே சொல்லலாம்.. மேற்கண்ட படத்தில் உள்ள பிரச்சனை செய்யது பள்ளி குளத் தெரு வார்டு:8 ல் வருகிறது. 

இந்த வார்டு கவுன்சிலர் சகோ. ப ஜெகபர் சாதிக் சாஹிபு . - 9750629494.

நாகூரின் முக்கிய சாலை சந்திப்பு , அருகில் பள்ளி கூடம்.. ஈஸியா கொசு உருவாகும்..

நீங்க ஆளும் கட்சி வேற ..  அதிகாரம் இருக்கு .. ஒட்டு கேட்கும் போது அப்டி இப்படி என்று சொன்னீர்கள்.

கொஞ்சம் பார்த்து ஏதாவது ஊர் மக்களுக்கு செய்ங்க..  ப. ஜெகபர் சாதிக் சாஹிபு...

இத உங்கட்ட தானே கேட்க்க முடியும் ... 

அப்பரும் தமுமுக -மமக சகோதரர்கள் இருகிறார்கள்... நீங்கலும் கொஞ்சம் இதில் கவனம் செலுத்தலாம் .. உங்களால தான் அதிமுக அங்க ஜெயித்தது(?) இங்கு ஜெயித்தது(?) என்று சொன்னால் மட்டும் போதுமா ... 

ஏதாவது ஊர் மக்களுக்கு செஞ்சி உங்க பெயர காப்பாத்த வேணாமா ?..


நன்றி : NAGORE 611002 PAGE & ABDUL SALAM.


நாகூர் கவுன்சிலர்கள் :

Serial NoNamePosition and WardContact NumberEmail & WebSite
ResidenceMobile
1ப மகாலட்சுமிவார்டு 19965085546
2ரா செந்தில்குமார்வார்டு 29443885134
3பா கனகவள்ளிவார்டு 39942975135
4அ மெஹர்பானுவார்டு 49942158585
5மு சின்னப்பிள்ளவார்டு 59787359921
6அ சுல்தான் அப்துல் காதர்வார்டு 69150147433
7மு ஹலிமாபீவீவார்டு 79944036855
8ப ஜெகபர் சாதிக் சாஹிபவார்டு 89750629494
9ஹ முஹம்மது கபீர்வார்டு 99865072744
10வெ நாகையன்வார்டு 109894160347


Tuesday, August 21, 2012

நோன்பு பெருநாள் தொழுகை புகைப்படங்கள்

நாகூர் பீரோட்டம் தெரு திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றபோது எடுத்த புகைப்படம்.





நன்றி : தினத்தந்தி.
செல்ல மரைக்கார்.

Wednesday, August 15, 2012

சுதந்திர இந்தியாவில் - சுதந்திரமில்லா ஓர் தேசம் !!

எல்லை பாதுகாப்பு படையில் COMMANDO INSTRUCTOR பணி புரியும் ஒரு சராசரி இந்திய குடிமகனின் பதிவு ...


விடைகள் தான் இந்தியாவிடமே இல்லை ?????????????






மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும்.

பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால் கைது என்று அறிவித்தால் எப்படி இருக்கும்?

வாகன சோதனை என்ற பெயரில் உங்களின் வாகனமும் நீங்களும் பலமுறை சோதனை செய்யப்படும்போதும் தாமதப்படுத்தும்போதும் எப்படி உணர்வீர்கள்?சுதந்திரமாக?

போர்வைக்குள் குறுந்தகவல் அனுப்பும் அன்பர்களே போராட்ட பரப்புரை செய்யும் நண்பர்களே அங்கே இந்த பருப்பெல்லாம் வேகாது.காஷ்மீரில் குறுந்தகவல் தடை என்பதை அறிவீர்களா?ஒரே நாடு ஒரே சிம் என்று புரட்சி செய்யும் இந்தியா காஷ்மீர் சிம் கார்டுகள் ஜம்மு காஷ்மீர் தவிர்த்து எங்கேயும் செயல்பட அனுமதிப்பதில்லை.அப்படின்னா


 காஷ்மீர் தேசம் தனி என்பதை ஒப்பு கொள்வீர்களா?

உங்கள் ஊரை எப்போது வேண்டுமானாலும் முற்றுகை இடலாம் முடக்கி வைக்கலாம் சோதனை போடலாம் என்றால் சம்மதிப்பீர்களா?அவ்வாறு செய்யும்போது பெண்களிடம் கொஞ்சம் அப்படி இப்படி என்று நடைபெற்றால் கண்மூடிக்கொள்வோமா?இல்லை கொல்வோமா?

கடைகளில் செய்திதாளால் சுற்றப்பட்டு கருப்பு பாலிதீனில் வைத்து தரப்படும் நாப்கின் வைத்துள்ள கைப்பையை வேறு ஆண்களிடம் தருவீர்களா சகோதரிகளே? வாகன சோதனையின் போது அவ்வாறு வேற்று மனிதன் தன் கைப்பையை சோதனையின் பேரில் திறப்பதும் நாப்கினை எடுத்து பிதுக்கி பார்க்கும்போது உணரும் அவமானமும் வெறுப்பும் நீங்கள் அனுபவித்ததுண்டா சகோதரிகளே?

உங்களால் பாதுகாப்புபடை வாகனங்களை மீறி சாலையில் வண்டி ஓட்ட முடியாது.எதிர் பாரா விதமாக நீங்கள் பாதுகாப்பு படை வீரர்களின் வாகனங்களுக்கு வழி தரவில்லை என்றால் பலவித மொழிகளில் உங்கள் பிறப்பு சந்தேகிக்கப்படும்.பதில் பேசும் பட்சம் தாக்கப்படுவீர்கள்.

சந்தேகக் கைதுகளில் தாக்கப்பட்டு உயிரிழக்கும் காஷ்மீரிகளுக்கு குரல் எழுப்ப முடியாது.எழுப்பினால் நமது வீட்டு தொலைக்காட்சிகள் காஷ்மீரில் கலவரம் என்று கலகம் செய்யும்.நாமும் துலுக்க பயலுவளுக்கு வேற வேலை இல்லை என்று மென்று துப்புவோம்.வாழ்க சுதந்திரம்.

கைது செய்யப்பட்ட காஷ்மீரி மனிதர் 35 வயதுக்கு மேல் இருக்கும்.


ஆயுதங்கள் எங்கே உள்ளன என்று பல விதங்களில் விசாரணை.



அடி உதைக்கு பயந்து அவர் சும்மானாச்சும் ஓரிடம் சொல்லி கொஞ்ச நேரம் தப்பித்து மூச்சு வாங்க ஏமாந்து திரும்பிய நாங்கள் அவரை முதலில் நிர்வாணப்படுத்தி மல்லாக்க படுக்க வைத்தோம். 



ஏசு போல கை கால்களை விரித்து வைத்து ஒவ்வொரு கை கால்களின் மேல் ஆளுக்கொருவர் ஏறி நின்று கொள்ள வலுக்கட்டாயமாக திறக்கப்பட்ட அவர் வாயில் வாளி வாளியாக குளிர்ந்த தண்ணீர் மூச்சு திணற திணற ஊற்றப்பட்டது.



வாய் மூடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட பாவிகளில் ஒருவன் நான்.
நீர் நிறைந்த அந்த வாய் மூச்சு காற்றை கேட்குமா? தேசிய கீதம் பாடுமா?





எனது அதிகாரி ஒருவர் மாலையில் சிலரை பிடித்து கொண்டு வந்து தேநீர் கொடுத்து பாயாசம் கொடுத்து அப்புறமாக இரவினில் அடித்து துவைப்பார்.அது அவர் சுதந்திரமாம்.

இப்படி குரல்வளையை இறுக்கி பிடித்து கொண்டு கருத்து சுதந்திரம் தருகிறேன் பேசுங்கள் ஆனால் செயல்படுத்த முடியாது என்பது எப்படி உண்மையான சுதந்திரம் ஆகும்?அதை கொண்டாடுங்கள் என்றால் மனசார எப்படி முடியும்?

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

இதை அனுபவித்து விட்டு சொல்லட்டும். எனது இந்தியா வாழ்க என்று


Thanks -Mgpt Caa

Sunday, August 12, 2012

ஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா ?

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..


1) ஸலாத்துல் லைல் + வித்ரு
2) கியாமுல்லைல் + வித்ரு
3) தஹஜ்ஜத்து + வித்ரு
4) தராவீஹ் + வித்ரு

இவ்வாறு நான்குப் பெயர்களால் அழைக்கப்படுவது ஒரே தொழுகையை தான் என்பது நம்மில் பலருக்கு இன்னும் தெளிவாகவில்லை.. மேற்கண்ட எல்லா தொழுகையிலும் வித்ரு சேர்ந்து வருவதே இது ஒரே தொழுகை தான் என்பதை விளக்கிவிடும்.

நபி(ஸல்) அவர்களின் தொழுகைகள் பற்றிய ஹதீஸ்ககளை ஆய்வு செய்யும் எவரும் இவைகள் வெவ்வேறு தொழுகைகள் அல்ல. மாறாக ஒரே தொழுகைக்கு சூட்டப்பட்டுள்ள வெவ்வேறு பெயர்கள்தான் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி விளங்கிக் கொள்வார்கள்.

தூங்கியெழுந்து தொழுதால் தஹஜ்ஜுத் என்கிறோம். ரமழானில் தொழுதால் தராவீஹ் என்கிறோம்.ஆனால் இது இந்தத் தொழுகை! இது இந்தத் தொழுகை!! என்று நபி(ஸல்) பெயர் சூட்டி இரவில் எந்தத் தொழுகையையும் தொழவில்லை அவர்களின் வழமையான தொழுகைகளும் அதன் எண்ணிக்கைகளும் ஒரே விதமாக இருந்தன. அதை மக்களுக்கு விளக்க வந்தவர்கள் தான் ஒரே தொழுகையை பல பெயர்களால் அறிமுகப்படுத்தி விட்டனர்.

இரவில் தொழுவதால் ஸலாத்துல் லைல்இரவுத் தொழுகை என்றும்இரவில் நின்று வணங்குவதற்கு ஆர்வமூட்டப்பட்டதால் கியாமுல் லைல்என்றும்,குர்ஆனில் தஹஜ்ஜத்என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் தஹஜ்ஜத்என்றும் அந்த தொழுகை ஒற்றைப்படையில் முடிவதால் வித்ருஎன்றும் அந்த தொழுகைக்கு பெயர்வந்தது.

தராவீஹ் என்ற பெயரிலோ அல்லது அப்படி புரிந்துக் கொள்ளும் விதத்திலோ நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எந்த ஒரு தொழுகையும் தொழப்படவில்லை.மற்ற வார்த்தைகளாவது ஹதீஸ்களில் கிடைக்கின்றன. தராவீஹ் என்ற வார்த்தை எந்த ஒரு ஹதீஸிலும் வரவே இல்லை.

இரவின் கடைசிப் பகுதியில் எழுந்து தொழமுடியாமல் போகும் என அஞ்சுபவர் அதன் ஆரம்பப் பகுதியில் ஒற்றைப்படையாகத் தொழட்டும். யார் இரவின் கடைசிப் பகுதியில் தொழ ஆர்வங்கொள்கிறாரோ அவர் அதன் கடைசிப் பகுதியிலேயே ஒற்றைப்படையாகத் தொழட்டும் ஏனெனில் இரவின் கடைசிப் பகுதியின் தொழுதல் சாட்சி கூறப்படும் அதுவே சிறந்ததுஎன நபியவர்கள் கூறினார்கள் 
ஆதாரம் : முஸ்லிம் 1802.

தொழுகை ஒன்றுதான் அந்த தொழுகையின் தன்மையையும் நேரத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டவர்கள் பல பெயர்களை அந்த தொழுகைக்கு சூட்டி விட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் இந்த தொழுகைகளை பெயர் குறிப்பிட்டு தொழுததில்லை என்று கூறுகிறீர்களேஆனால் வித்ரு என்று ஏராளமான ஹதீஸ்களில் பெயர் வருகிறதே..என்று சந்தேகம் வரலாம்.

வித்ருஎன்ற வார்த்தையை மொழிப் பெயர்க்காமல் விட்டுவிடுவதால் தான் இந்த சந்தேகம் வருகிறது.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியாக வித்ரை ஆக்குங்கள்என்பது ஹதீஸ். ஹதீஸ் வாசகங்கள் எல்லாவற்றையும் மொழி பெயர்க்கும் நாம் வித்ருஎன்பதை அப்படியே விட்டுவிடுகிறோம். அதனால் அது தனி தொழுகைப் போன்று தெரிகிறது. வித்ரை மொழிப் பெயர்க்கும் போது இந்த குழப்பங்கள் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்து விடும்.

வித்ருஎன்ற வார்த்தைக்கு ஒற்றைஅல்லது ஒற்றைப்படைஎன்று பொருள்.உங்கள் இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையிலாக்குங்கள் என்று மொழி பெயர்க்கும் போது தெளிவான விளக்கம் கிடைத்து விடுகிறது.

எந்த ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகைத் தனி தராவிஹ் தொழுகைத் தனி, ஸலாத்துல் லைல் தனி என்று கூறுகிறார்களோ அதே ஹதீஸ் நூல்களில் அந்தந்த தலைப்பிற்கு கீழ் ஒரே ஹதீஸ் வார்த்தை மாறாமல் “வித்ரு- ஒற்றைப்படை” இடம் பெற்றிருப்பதை ஊன்றி கவனிக்க வேண்டும்.

வெறும் தலைப்புகளை மட்டும் பார்த்து சட்டங்களை வகுத்துவிடக் கூடாது. அந்தந்த தலைப்பிற்கு கீழுள்ள ஹதீஸ்களின் வார்த்தைகளைப் பார்த்து அதிலிருந்துதான் சட்டங்களை வகுக்க வேண்டும். அப்படி ஆய்வு செய்பவர்களுக்கு இது தனி தனி தொழுகை என்ற குழப்பம் ஏற்படவே செய்யாது.

எல்லாம் வேறு வேறு தொழுகை என்றால் எல்லா தொழுகை முடிவிலும் கடைசி தொழுகையாக “ஒற்றைப்படை - வித்ரு” தொழுகை எப்படி வரும்.?

நபி(ஸல்) இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் வித்ரு தொழுவார்கள் மரணத்தை நெருங்கிய காலத்தில் அவர்களின் வித்ரு தொழுகை ஸஹர் நேரம் வரை சென்றது என ஆய்ஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் திர்மிதி 419)

மேற்கண்ட ஹதீஸ் மூலமாக.. இரவு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் இரவின் முற்பகுதியிலும், நடுப்பகுதியிலும், இரவின் கடைசிப் பகுதியிலும் தொழுதிருக்கிறார்கள். இதன் மூலம் ஒரே தொழுகை தான் வேறு வேறு நேரங்களில் தொழுதிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.


11 ரக்அத்கள் :

ரமளானில் நபி(ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் ஆய்ஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். ரமளானிலும் ரமளான் அல்லாத காலங்களிலும் நபியவர்கள் பதினோரு ரக்அத்களை விட அதிகப்படுத்தியதில்லை. முதலில் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் கேட்டுவிடாதே.. (அதாவது அந்த தொழுகை அவ்வளவு அழகாக இருக்கும்) பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள் அதன் அழகையும் நீளத்தையும் பற்றி கேட்டுவிடாதேபின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். 
                                                                    
(ஆய்ஷா(ரலி) புகாரி ஹதீஸ் எண் 1147, திர்மிதி 403 அனைத்து ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது)

ரமளான் ரமளான் அல்லாத நாட்கள் என்று நபி(ஸல்) எந்த வித்தியாசமும் செய்யாமல் இரவுத் தொழுகையை 11 ரக்அத்களாகவே நீடித்துள்ளார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் வலுவான சான்றாக உள்ளது.

நபியவர்கள் பதினோரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தார்கள் அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. (ஆய்ஷா(ரலி) புகாரி அத்தியாயம் வித்ரு எண் 994)

இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) பதினோரு ரக்அத்கள் தொழுவார்கள். ஒவ்வொரு இரண்டு ரக்அத் முடிவிலும் ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுவார்கள். (ஆய்ஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத், நஸயி)

நாம் மேலே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸில் இஷாவிலிருந்து சுப்ஹ் வரை நபி(ஸல்) அவர்கள் ஒரே தொழுகையை தான் தொழுதுள்ளார்கள் என்பதும். நபி(ஸல்) இஷாவிலிருந்து சுப்ஹ் வரை 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள். தஹஜ்ஜத்தும்; அதுதான், தராவீஹூம் அதுதான், இரவுத் தொழுகையும் அதுதான், வித்ருத் தொழுகையும் அதுதான் என்பது எந்த சந்தேகதிற்கு இடமின்றி தெளிவாகிறது.


தராவிஹ் தனி தஹஜ்ஜத் தனி முரண்பட்ட நிலைப்பாடு :

தராவிஹ் 20 ரகாயத் தொழுகிறார்கள் ..ஏன் ? என்று கேட்டால் உமர் (ரலி) தொழுதிருகிரார்கள் என்று அவர்கள் மேல் பழியை போடுகிறார்கள். ஆனால் அது கூட சரியா என்றால் அதுவும் தவறு .. சரி அது இருக்கட்டும் ..

மேலும் சொல்கிறார்கள் .. நபி (ஸல்) அவர்கள் தராவிஹ் முன் இரவில் தொழுதிருகிரார்கள் அதனால் நாம் தொழுகிறோம்.. பின் இரவில்  தஹஜ்ஜத் கியாமுல்லைல் 8 ரகாயத் தொழுதிருகிறார்கள் அதனால் நாம் தொழுகிறோம் என்கிறார்கள்.

இதற்க்கு இவர்கள் எந்த சான்றையும் காண்பிப்பது இல்லை.. மேலும் இவர்களின் செயலை கவனித்தாலே தெரிந்துவிடும் இவர்கள் செய்வது தவறு என்று...

அதாவது முன் இரவில் தராவிஹ் 20 ஜமாத்தாக தொழுகிறார்கள்..
நள்ளிரவில்  தஹஜ்ஜத் தனியாக 8 ஜமாத்தாக தொழுகிறார்கள்
ஆக 28 ஜமாத்தாக தொழுகிறார்கள்...

இவை வேறு வேறு தொழுகை என்றால் ... இந்த இரண்டு தொழுகைக்கும் அல்லாஹ்வின் தூதர் தனி தனி ஜாமஅத்தாக தொழுக அனுமதித்திருகிறார்களா ? தொழுதிருகிறார்களா? காண்பிக்க முடியுமா ?

உங்கள் செயல்களே காண்பிக்கிறது இது ஒரே தொழுகைதான் என்று..


அதிகம் தொழுதால் நன்மை தானே - குற்றமா என்று கேட்கிறார்கள்

நல்ல எண்ணத்தில் தான் இப்படி கேட்கிறார்கள் .. ஆனால் நாம் இதே அளவுகோளை மற்ற சுன்னத்தான விசயங்களுக்கு வைக்கமாட்டோம்.

உதாரணமாக மக்ரிப் பின் சுன்னத் இரண்டு தொழுவது நபிவழி .. நான் சொல்கிறேன் நாளையில் இருந்து மக்ரிப் பின் சுன்னத் ஆறு ரகாயத் தொழப்போகிறேன் ...இது முறையா ? 

பிறகு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறோம் நாம் ..!! சிந்திக்க வேண்டும் சகோதரர்களே ..

உலகத்திற்கு வழிகாட்டியான நபி(ஸல்) அவர்களின் அழகிய செயல்களே நமக்கு சிறந்த முன்மாதிரியாகும் ..
உலகத்திற்கு அருட்கொடை அல்லவா அவர்கள் !! 
நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தாலும் அவர்களை விட சிறந்த செயலை செய்ய முடியாது.. 

ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையே சிறந்தது .. அவர்களை விட நாம் அல்லாஹ்வை அதிகம் நேசிக்கிறோமா என்ன ...

இல்லை நாங்கள் எங்களின் விருப்படித்தான் ,வழக்கப்படி தான் தொழுவோம் என்று நீங்கள் கூறமுற்பட்டால்... எங்களிடம் பதிலில்லை..

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.                               (அல்குர்ஆன் 5:3)

அல்லாஹ்வின் துாதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். 
                                                          அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) 
                                                          ஆதாரம்: புகாரி 2697

அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்   

Thursday, August 2, 2012

வெளிநாட்டிலிருந்து GOLD கொண்டு வருகிறீர்களா (!) ALERT


வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்கு தங்க நகைகள் கொண்டு வர மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது வெளிநாடு வாழ் இந்தியர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

45 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுங்க சட்டத்தை இந்திய அரசு மறுபடியும் அமல்படுத்தியுள்ளது.அதன்படி வெளிநாடுகளில் வாழும் இந்திய ஆண்கள் தங்கள் ஊருக்கு வருகையில் ரூ.10,000 மதிப்புள்ள தங்க நகையும், பெண்கள் ரூ.20,000 மதிப்புள்ள நகைகளையும் மட்டுமே சுங்க வரியின்றி எடுத்து வர முடியும்.


தற்போதுள்ள தங்க விலையைப் பார்க்கையில் ஆண்கள் 3.5 கிராமும், பெண்கள் 7.1 கிராம் தங்க நகைகள் மட்டுமே எடுத்து வர முடியும். அதை விட அதிக தங்க நகைகள் கொண்டு வந்தால் நகையின் மதிப்பில் 10 சதவீதம் மற்றும் 3 சதவீத வரி செலுத்த வேண்டும். முன்பெல்லாம் 10 கிராம் தங்க நகைக்கு ரூ.300 வரியாக செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.


சும்மாவே ஏர்போர்ட் செக்கிங் ஓவரா இருக்கும் .. கோல்ட் வச்சிருக்கியா என்று நேரடியாகவே விசாரிகிறார்கள். 
இருக்குது என்றாலும் பிரச்சனை, இல்லை என்று சொல்லி சோதனை செய்து மாட்டி கொண்டாலும் பிரச்சனை.

வியாபாரம் செய்பவர்கள் கூட ஆள் செட்டப் பண்ணி கொண்டு வந்து விடுகிறார்கள்.. ஆனால் பல வருடம் வெளிநாட்டில் இருந்துவிட்டு பணம் சேர்த்து மனைவி ,மக்களுக்கு கோல்ட் வளையலோ , சைனோ வாங்கிட்டு வருவோருக்கு தான் திண்டாட்டம்.

இந்நிலையில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது தெரியாமல் சமீபக்காலமாக ஏராளமான தங்க நகைகள் கொண்டு வந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் விமான நிலையங்களில் சிக்கினர்.

தமிழகத்தில் திருச்சி மற்றும் சென்னை விமானநிலையத்திலும்  தங்க நகைகள் கொண்டு வந்து மாட்டிகொண்டனர்.இதில் திருச்சியில் அதிகம் என்றே சொல்லலாம்.

தனது குடும்பத்தாரை இந்தியாவில் கொண்டுபோய் விட்டுவிட்டு அமீரகம் திரும்பிய விஜு நாயர் சவூதி கெசட் பத்திரிக்கைக்கு தெரிவித்ததாவது.

எங்களின் நெருங்கிய உறவினரின் மகள் திருமணப் பரிசாக தங்க நகைகளை என் மனைவி இந்தியா கொண்டு சென்றார். கொச்சி விமான நிலையத்தில் எங்களை நிறுத்தி எங்களிடம் எவ்வளவு தங்க நகைகள் உள்ளது என்று விசாரித்ததும் அதிர்ச்சி அடைந்தோம். நகைகளுக்கு எக்கச்சக்க சுங்கத் தீர்வை செலுத்த நாங்கள் விரும்பவில்லை. அதனால் நகைகளை விமான நிலையத்திலேயே வைத்து விட்டு ஊருக்கு சென்றோம். அந்த நகைகள் என் மனைவி அடுத்த மாதம் அமீரகம் திரும்பும்போது எடுத்து வருவார் என்றார்.

இந்த சட்டப்படி வழக்கமாக 40 முதல் 50 கிராம் தங்க நகைகள் அணியும் இந்திய பெண்கள் இனி ஒரு தங்க மோதிரம் மட்டுமே அணிந்து செல்ல முடியும் என்று அப்துல் ஜமீல் என்பவர் தெரிவித்துள்ளார்.


இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என்றும், முரண்பாடானது என்றும் சவூதி அரேபியாவில் உள்ள கேரள சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கூட்டமைப்பின் தலைவர் ஆர். முரளிதரன் சவூதி கெசட் பத்திரிக்கையிடம் கூறுகையில்,வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இந்த சட்டத்தை இந்திய அரசு வேண்டும் என்றே மீண்டும் அமல்படுத்தியுள்ளது. 

அதில் அடிக்கடி  இந்தியா வரும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை குறிவைத்து இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த சட்டம் மாற்றப்படும் வரையாவது கொஞ்சம் அடக்கி வாசிங்க குருவிகளா..


ஒரு வேலை  வெளிநாடு  செல்லும்போது  அதிகமாக நகை அணிந்து இருந்தால் .. கீழ்காணும் சான்றிதளை  விமான நிலையத்தில் பெற்றுக்கொண்டு சென்றால் ..  நாடு திரும்பும் போது இது பயன்பாட்டில் உள்ள நகை என்ற சான்றிதளை காண்பித்து சுங்க வரியில் இருந்து தப்பலாம்..




நன்றி : தட்ஸ் தமிழ்.காம்
Related Posts Plugin for WordPress, Blogger...