(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, July 30, 2012

குழந்தைகளின் I.Q - வை வளர்ப்பது எப்படி?

படிப்பதில் கவனச்சிதறல், வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளிடையே ஐ.க்யூ.வை எப்படி வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

அகிலா சரியாகப் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் புரிந்து கொள்வதும் இல்லை. எதைப்பற்றியாவது பேசும்போது, கவனம் சிதறி வேறு விஷயங்களில் மனதை அலைபாய விடுகிறாள். அமைதியில்லாமல் துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறாள். பள்ளியில் சேர்ந்தாற்போல பத்து நிமிடங்கள்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. மற்ற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறாள்.

ஐந்தாவது வகுப்பு படிக்கும் அகிலாவைப் பற்றி அவளுடைய வகுப்பு ஆசிரியை அளித்த புகார்ப் பட்டியல் இது.பார்ப்பதற்கு சராசரி வளர்ச்சியில் அகிலா இருந்தாலும், இது மன வளர்ச்சி குன்றியதற்கான அறிகுறிகள்தான் என்று ஆசிரியர்கள் கூறினார்கள். அகிலாவிடம் இருக்கும் குறையைக் கண்டறிவதற்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அகிலாவைப் பரிசோதித்த டாக்டர் ஐ.க்யூ. டெஸ்ட் செய்யச் சொன்னார். சோதித்துப் பார்த்தபோது, அகிலாவிற்கு சராசரிக்கும் குறைவான ஐ.க்யூ. மட்டுமே இருப்பது தெரியவந்தது. அவளுக்கு ஆக்குபேஷனல் தெரபி கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அகிலா கதை இருக்கட்டும். ஐ.க்யூ. என்றால் என்ன? இந்த ஐ.க்யூவுக்கும், குழந்தையின் படிப்புக்கும் என்ன தொடர்பு என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

ஐ.க்யூ. (I.Q .) என்பது கூரிய நுண்ணறிவு. நமது மரபியல்படி அதாவது ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் அறிவு, மூளை அறிவு எனப்படும். கற்பதால் வரும் அறிவு சோதனைக்குட்பட்ட அறிவு எனப்படும். அதைப்போலவே கற்றுக்கொள்வதால் வரும் அறிவு ரெப்ளக்டிவ் அறிவு எனப்படும்.

முதல் பிரிவைத் தவிர, மற்ற இரண்டு விதமான அறிவையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர்கள், கணக்குகள் ஆகியவற்றுக்கு விடை காண்பது, கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கான பயிற்சிகள் அளித்தல், காபி போன்ற பானங்களை அருந்துவது, ஐ.க்யூவை தற்காலிகமாக அதிகரிக்கும். ஆழமாக உள்ளிழுத்து மூச்சு விடுவதும் நல்ல பலனைத் தரும். ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும், ஐ.க்யூ. 70-க்கும் குறைவாக இருப்பவர்கள் மக்கு என்றும், ஐ.க்யூ. 29 ஆக இருப்பவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில், இரண்டு வயதுக்கும் குறைந்த குழந்தையின் மனநிலையில் இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்என்கிறார் டாக்டர் ஷாலினி. ஐ.க்யூ. பற்றி அவர் அளித்த விளக்கங்கள் இதோ:

ஐ.க்யூ. குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

அறிவுசார் முன்னேற்றம் அடைய முடியாமல் இருப்பது.
உட்காருதல், தவழுதல், நடை, பேச்சு ஆகிய முக்கிய முன்னேற்றங்கள் காலதாமதப்படும்.
பேச்சு, நடத்தையால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் குழந்தைத்தனமான நடவடிக்கைகளைக் கொண்டு இருப்பார்கள்.

பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்வு காணுவதில் சிரமப்படுதல் மற்றும் ஆர்வம் இல்லாமல் இருத்தல்.
குறைவான கற்கும் திறன் மற்றும் சரியாக சிந்திக்க முடியாமல் இருப்பார்கள்.
எந்த விஷயத்தையும் நினைவுபடுத்திப் பார்ப்பதில் சிரமப்படுவார்கள்.
பள்ளிகளின் கல்வி எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் இருப்பார்கள்.

பெற்றோர்கள் சொல்வதைக் குழந்தைகள் கேட்கமாட்டார்கள். பெற்றோர்களின் அடையாளத் திணிப்பை ஏற்றுக் கொண்டால் அவர்களின் தனித்தன்மை போய்விடும் என்று குழந்தைகள் எண்ணுகின்றனர்.இது ஓர் ஆளுமைக் குறைபாடாக உருவெடுத்து வாழ்க்கையின் பல தோல்விகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.



ஐ.க்யூ. அளவைக் எப்படி கண்டுபிடிக்கலாம்?

இளங்குழந்தைகளிடம் உள்ள ஐ.க்யூ. திறனை அளக்க பல முறைகள் உள்ளன. இதில், ஆறு முதல் பதினாறு வயதுக் குழந்தைகளின் ஐ.க்யூ.வை அளிக்க வெஸ்ச்லர் இன்டெலிஜென்ஸ் ஸ்கேல் ஃபார் சில்ரன் (The Wechsler Intelligence Scale for Children – WSIC ) என்ற தேர்வு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வெஸ்ச்லர் முறையில் தகவல், வார்த்தைகளை அறியும் திறன், விஷயங்களைக் கிரகித்தல், ஒற்றுமைகளைப் பார்த்து அறிதல், கணிதம், படத்தைப் பூர்த்தி செய்தல், ப்ளாக்குகளை வடிவமைத்தல், பொருள்களை இணைத்தல், படங்களை வரிசைப்படுத்தி குறித்தல் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு ஐ.க்யூ. அளவு கணக்கிடப்படுகிறது.

குழந்தைகளின் ஐ.க்யூ.வை கண்டுபிடிக்க மனநல மருத்துவரிடம் அழைத்துப் போகலாம். அவர்கள் குழந்தைகளின் வயதுக்கேற்ப செயல் விளக்கப் பயிற்சிகள் கொடுப்பார்கள். சின்னச் சின்ன டெஸ்ட் வைத்து அதில் அவர்கள் தேறும் விதத்தில் ஐ.க்யூ.வை கணித்துச் சொல்வார்கள்.

குழந்தைகளுக்கு ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி?

பெற்றோர் உன் வகுப்பில் படிக்கும் பையன் என்னெவெல்லாம் செய்கிறான், நீ தண்டம்என்றுகுழந்தையைச் சாடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை உடைக்கும் முதல் அடியாகும். பின்னால் குழந்தையே ஏதேனும் சாதிக்கலாம் என நினைத்தாலும் என்னால் முடியாது, நான் எதற்கும் லாயக்கில்லாதவன், திறமைகள் அற்றவன்என்ற அவநம்பிக்கை அதன் மனதில் தோன்றிவிடுகிறது. இம்மனநிலையைப் போக்கி எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும்என்ற நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்த பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்.

குழந்தைகளிடத்தில் எதிர்மறையாகப் பேசுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். கொஞ்சம் கடினமாக உழைத்துப் பயிற்சி செய்தால் வெற்றி பெறுவாய்என்று சொல்வது நல்லது.
போட்டிகளில் எப்போதும் முதல் பரிசுக்கே முயற்சி செய்யாமல் மூன்றாம் பரிசுக்கு முதலில் முயற்சி செய்ய கற்றுக் கொடுங்கள். மூன்றாம் பரிசும் முக்கியத்துவம் வாய்ந்ததே என்பதையும், முழுத் தோல்வியை விட மூன்றாம் பரிசு நல்லதே என்பதையும் கூறி குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும்.
தோல்விகளும் வெற்றிகளும் நிகழ்வுகளின் இருவிதப் பரிமாணங்களே என்பதை சற்று விளக்கமாக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். முயற்சித்துக்கொண்டு இருப்பதே ஒருவரை திறமைசாலிகளாக மாற்றும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும்.

பெற்றோர்களின் கட்டாயங்களுக்காக ஆர்வமில்லாத விஷயங்களிலெல்லாம் முயற்சித்து தோல்வியடையும் குழந்தைகளே அதிக அளவில் தன்னம்பிக்கை இல்லாமல் வளர்கின்றன.
குழந்தைகளிடத்தில் சுதந்திரமாக செயல்படும் ஆற்றலை உருவாக்க வேண்டும். குழந்தையைத் தானாக சாப்பிடுமாறு ஊக்குவிப்பது, தானாக உடையணிந்து கொள்வதை மகிழ்ச்சியுடன் ஆதரிப்பது, சாதனை ஊக்கத்தை குழந்தைகளிடத்தில் வளர்ப்பது போன்றவை பெற்றோரின் கடமைகள். குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சிகளை இளம் வயதிலேயே கற்பிப்பதும் அவர்களிடத்தில் சுதந்திரமாக செயல்படும் உணர்வைத் தூண்டி வளர்க்கும்.

சற்றே கடினமான ஆனால் நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதனை அடைய குழந்தைகளை ஊக்கப்படுத்துதல். எக்காரணம் கொண்டும் எதார்த்தத்திற்கு புறம்பான இலக்குகளை நோக்கி குழந்தைகளை ஊக்குவிக்கக்கூடாது.

, , , ஈ அல்லது அ, , , ஈ எழுத்துக்களை இரண்டு வயது குழந்தை சொல்ல இயலாத நிலையிலும் தொடர்ந்து அவ்வெழுத்துக்களை கற்று ஒப்பிக்குமாறு ஊக்கப்படுத்தி வரவேண்டும். அக்குழந்தை பல முயற்சிக்குப் பின் முதன்முறையாக எழுத்துக்களை ஒப்பிக்கும்போது கட்டிப்பிடித்தோ, ஓரு முத்தம் கொடுத்தோ அல்லது ஓரு  சாக்லேட் கொடுத்தோ மகிழ்ச்சியுடன் ஊக்கப்படுத்தவேண்டும்.

தோல்விகளும் கற்றுக் கொள்வதின் ஒரு பரிமாணமே என குழந்தைகளை உணரச் செய்து தோல்விகளை ஏற்றுக்கொள்ளப் பழக்கப்படுத்த வேண்டும்.குழந்தைகளின் மனதில் தோல்வி பயத்தைப் போக்கி வெற்றி அடையவேண்டும் என்னும் ஊக்கத்தினை உருவாக்க வேண்டும்.முயற்சி திருவினையாக்கும் என்னும் நம்பிக்கையினை குழந்தைகளின் மனதில் விதைக்க வேண்டும்.

குழந்தைகளை வீட்டிற்குள்ளேயே அடைத்துவைத்து அவர்களை சோம்பேறியாக்குவதை விட அவர்களுக்கு கற்பனைத் திறனை அதிகரிக்கும் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தலாம்.
குழந்தைகளிடம் அதிகமாகப் பேச வேண்டும்.அதிக சொற்களைப் பேசுதல் மிகவும் நல்லது. பெரியவர்கள்  பேசும்போது குழந்தைகளையும் அருகில் இருக்கச் செய்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஐந்து C”   க்களை நினைவில் கொள்ள வேண்டும்.

ஐந்து ’C ’ க்கள்:-
control, challenge, confidence, curiosity, contextualize ஆகியவைதான்!

கண்டரோல் என்பது எதிலும் கட்டுப்பாடுடன், தானே இருக்கக் குழந்தைகளைப் பழக்குவது.

சேலஞ்ச் என்பது சவாலைச் சமாளிக்க உங்கள் குழந்தையை அழைக்கும் விதமாக சவால் தரும் விஷயங்களை முன் வைப்பது.

கான்பிடன்ஸ் என்பது எதிலும் ஒரு நம்பிக்கையை குழந்தையிடம் ஏற்படுத்துவது.

க்யூரியாசிட்டி என்பது எதையும் ஓர் ஆர்வத்துடன் கூர்ந்து ஆராயும் பழக்கத்தை மேற்கொள்ள வைப்பது.

கான்டெக்ஸ்டுவைலஸ் என்பது ஒரு விஷயத்தை நிஜ உலகுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கும் அணுகுமுறையை சொல்லித் தருவது. திரைப்படத்தில் அல்லது தொலைக்காட்சியில் வருவதற்கும் நிஜத்திற்கும் உள்ள சம்பந்தம் போன்றவற்றை சொல்லித் தந்தால் நிஜ உலகின் வாழ்க்கை பற்றிய நல்ல அணுகுமுறை ஏற்படும்.

இறுதியாக ஒர்கிங் மெமரி அல்லது ஷார்ட் டெர்ம் மெமரி எனப்படும் குறுகிய கால நினைவாற்றலில் ஒரு சமயம் ஒருவர் ஏழு விஷயங்களுக்கு மேல் நினைவில் கொள்ளமுடியாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரே சமயத்தில் ஏராளமான விஷயங்களைத் திணிக்காமல் அறிவுத் திறனை அளவோடு வளர்ப்பதோடு, சீரான இடைவெளியில் நினைவுத் திறனைக் கூட்டும் பயிற்சியைத் தந்தால் எந்தக் குழந்தையும் நம்பர் ஒன் குழந்தைதான்.

நன்றி : ASHRAF & ANISH

இரவுத்தொழுகை (தராவிஹ்) இருபதா ? இருபத்தி இரண்டா ??


பொதுவா தராவிஹ் எட்டா – இருபதா என்று தான் பேசுவீங்க ...

இப்ப என்ன புதுசா இருபதா ? – இருபத்தி இரண்டா ? னு..

இது புது குரூப்பா என்று பயந்து விடாதீர்கள் ..சகோதர்களே 

நாங்க சுன்னத் ஜமாஅத் என்று சொல்லிகொள்ளும் சகோதரர்களிடம் நாம் கேட்க்கும் சந்கேகம் இது..



வஹாபி பயலுவோ நீங்க தௌஹீத் என்ற பெயரில் என்னத்த சொன்னாலும் அத படிக்க மாட்டோம் , கேட்க்க மாட்டோம் என்று  உறுதிமொழி எடுத்துகொண்டவர்கள்.. தயவு செய்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் உங்கள் வேலையை தொடரலாம்...

இருப்பினும் சரி நீ என்ன தான் சொல்ற சொல்லு பாக்கலாம் என்று தொடரும் நண்பர்களுக்காக இப்பதிவு...

உண்மையை சொல்லனும்னா... ஒரு பெரிய சந்தேகம் எங்களுக்கு ..

அதாவது இரவுத்தொழுகையை (தராவிஹ்) பொருத்தவரை அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள்

8 ரகாயத்தும் + வித்ரு 3 ரகாயத்தும், சில நேரங்களில் வித்ரு 9,7,5 அல்லது 1 ரகயாத்தும் தொழுதுள்ளார்கள்.

என்று ஆதாரத்தோடு சொல்லி வருகிறோம். நீங்கள் மறுத்து வருகிறீர்கள்.



நீங்கள் மறுக்கும் அல்லாஹ்வுடைய தூதரின் வழிமுறை :

'ரமளான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ரமாளானிலும், மற்ற மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினோரு ரக்அத்களுக்கு மேல் அதிகமாக்கியதில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும், நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகைப் பற்றியும் நீளத்தைப் பற்றியும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்' என்று விளக்கம் அளித்தார்கள். 
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி) நூல்: புகாரீ 1147, 2013, 3569

ஆயிஷா (ரலி) அவர்கள், ரமளானிலும் ரமளான் அல்லாத மாதங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்களுக்கு மேல் தொழுததில்லை' என்று விடையளிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், 'இரவுத் தொழுகை பற்றி என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். மிம்பரில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'இரவுத் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும்'என்று விடையளித்தார்கள். நூல்: புகாரி 472, 473, 991, 993, 1137

சுன்னத் ஜமாஅத் என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான்.

ஆனால் இவர்கள் தொழும் வித்ரு தொழுகையாவது சரியா என்றால் .. அதுவும் நபிவழிப்படி இல்லை.  வித்ரு தொழுகை தொழும் முறையில் மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.

வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180

 வித்ரு தொழும் முறை

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள்  அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: பைஹகீ

நபி (ஸல்) அவர்கள் ஐந்து ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அதன் கடைசியில் தவிர மற்ற ரக்அத்களில் அமர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: நஸயீ 1698

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ராகத் தொழுவார்கள். (ந்த ஐந்து ரக்அத்)தில் கடைசி ரக்அத் தவிர வேறு ரக்அத்களிலும் உட்கார மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள். ( முஸ்லிம் 1341 திர்மிதீ 421 அபூதாவூத் 1141 தாரமீ 1535 )

நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் ஐந்து ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். ஐந்தாம் ரக்அத்தில் மட்டுமே அமர்ந்தார்கள் அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி

நபி (ஸல்) அவர்கள் மூன்று ரக்அத்கள் வித்ரு தொழுதால் கடைசி ரக்அத் தவிர பிற ரக்அத்களில் அமர மாட்டார்கள் என்று தெள்ளத்தெளிவாக இருக்க தற்போது சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசல்களில் வித்ரு தொழுகை 2+1  என்று பிரித்து தொழப்படுகிறது. அதாவது முதலில் இரண்டு ரகாயத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்த பின்னர் மீண்டும் தனியாக ஒரு ரகாயத் தொழுகிறார்கள்.


(சில பள்ளிவாசலில் ஒரே நேரத்தில் ஷாபி ,ஹனபி என்று வித்ரை தனி தனி ஜமாஅத் வைத்து தொழுகிறார்கள் – நமது ஊரிலும் நடக்கிறது அது வேறு விஷயம் )

அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைப்படி பார்த்தால்....

இவர்கள் பிரித்து தொழும் வித்ரு தொழுகையில் கடைசியாக தொழுத ஒரு ரகாயத் தான் வித்ரு தொழுகையில் சேரும் ... அப்போ சுன்னத் ஜமாஅத் சகோதரர்கள் ஒரு ரகாயத் வித்ரு தான் தொழுகிறார்கள் மூன்று அல்ல என்ற கணக்கு சரி தானே !!!

அப்படி பார்த்தால் நீங்கள் தொழும் இரவுத்தொழுகை (தராவிஹ்) வித்ரை சேர்க்காமல் பார்த்தால் இருபதா ?,இருபத்தி இரண்டா ?? என்றால் இருபத்தி இரண்டு தானே ....             ( என்ன ஒரு கண்டுபிடிப்பு (?!))

அப்போ இனி நீங்க 8  நாங்க 20 என்று சொல்லாதீர்கள் .. 
நீங்க   8  நாங்க 22 என்று சொல்லுங்கள் பொருத்தமாக இருக்கும்..

அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை விட - தங்கள் முன்னோர்கள் என்ன செய்தார்களோ அது தான் முக்கியம் அதை விட்டு கொடுக்க மாட்டோம் அதை தான் பற்றி பிடித்துக் கொண்டிருப்போம் என்று இருந்தால் வேறு என்ன சொல்வது...

உங்களை பார்த்து தான் அல்லாஹ் கேட்கிறான் :

2:170மேலும், அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள்அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

31:21அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் (அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)


பதில் சொல்லுங்கள் .....

சுபஹானல்லாஹ் ...

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியில் வாழ்ந்து நேர்வழியில் மரணிக்கும் பாக்கியத்தை தர வேண்டும்.

Sunday, July 29, 2012

எங்கே மீடியாக்கள்...?


படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு கால் சுளுக்கு....
நாட்டின் ஜனாதிபதி, குடும்பத்துடன் கோவா பயணம்...
ஏழு ஆண்டுகளாக காவல் துறைக்கு உழைத்த நாய் மரணம்...
மழை வேண்டி கழுதையை மனம் முடித்த வாலிபர்...
அழகிப் போட்டிக்கு பங்கு பெற முடியாத நடிகை கதறல்...
இன்னும்... இன்னும்...

சொல்லிக் கொண்டே போகலாம்
இன்றைய சூடான செய்திகள்.

இதையெல்லாம் சொல்லும் மீடியாக்கள்




பல்லாயிரக்கணக்கானோர் பர்மாவில்
கொலை செய்யப்படும் கொடூரத்தை 
சொல்ல மறுக்கிறது அல்லது மறைக்கிறது...?

எங்கே மீடியாக்கள்...?

கண்ணுக்கெதிரே தன்னுடைய பிஞ்சுக்
குழந்தைகளும், கணவனும்
கொலை செய்யப்படுகிறார்கள்...

எங்கே மீடியாக்கள்...?

தாயின் கரங்களையும் குழந்தையின் 
கரங்களையும் ஒன்றாக கட்டி
கடலிலே வீசப்படுகிறார்கள்...!

எங்கே மீடியாக்கள்...?

நாய் வேட்டையில் கூட
இத்தனை உடல்கள் இருக்காது.
மனித வேட்டையில் 
குவியல் குவியலாக 
பல்லாயிரக்கணக்கானோர்...

எங்கே மீடியாக்கள்...?

மீடியாக்களே..!
நாங்கள் நோன்பை துறக்கும் செய்தியை
காட்ட வேண்டாம்.
பர்மாவில் உயிரை துறக்கும் செய்தியை
காட்டுங்களேன்...!



இறைவா...!
உன்னிடம் முறையிடாமல்
வேறு யாரிடம் முறையிடுவது?
அவர்களுக்கு உரிய பாதுகாப்பை
கொடுப்பாயாக...!
அவர்களுக்கு மன தைரியத்தை 
கொடுப்பாயாக...!

அவர்களுக்கு மறுமையில் சுவனத்தை 
கொடுப்பாயாக...! 

ஜசாகல்லாஹ் - அபு ஷம்ஷீர் http://www.islamvision.info

Sunday, July 22, 2012

நாம் குடிக்கும் டீயிலிருப்பது… மரத்தூளா, மஞ்சனத்தியா, குதிரை சாணமா?!


தூங்கி எழுந்தவுடன் எது நியாபகம் வருதோ இல்லையோ .. ஒரு கிளாஸ் டீ குடிச்ச நல்லா இருக்குமே என்று நமக்கு தோன்றும் ..
வீட்டிலோ ,கடையிலோ ஒரு கிளாஸ் டீ அடிச்சா ஒரு வித புத்துணர்ச்சி கிடைப்பதை மறுக்க முடியாது.. 

இந்திய தேசியப் பானம் என்ற அளவுக்குத் தேநீர் "டீ" கருதப்பட்டாலும்இன்று பெரும்பாலான இந்தியர்கள் பயன்படுத்துவது கலப்படத் தேயிலையைத்தான் என்கின்றன பல்வேறு சர்வேக்கள்.


ஏழைகளின் உற்சாக பானம்இப்படி விஷமாக மாற்றப்படுவது எப்படிஇதோ சில பகீர் உண்மைகள்:

இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்துகாயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாகபடு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் திக்’ காகவே இருக்குமாம்!

முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கிதேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!

மஞ்சனத்தி இலை  குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்துகாய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால்மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!

புளியங்கொட்டை: புளியங் கொட்​டையை லேசாக வறுத்துரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்துதண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!

மரத்தூள்தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிரடீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.

ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால்கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமைசெரிமானக் கோளாறுஅல்சர்மூட்டு வலிகிட்னி பாதிப்புபுற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!

எது ஒரிஜினல்?

தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலைஅதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டுஇவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டிரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால்நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.

இந்தத் தொழிலில் இருக்கும் பெரும்பாலான வட மாநில புரோக்கர்கள்தான் கலப்படத்துக்குக் காரணம் என்கிறார்கள்தேயிலைத் தோட்ட அதிபர்கள்.
ஒரிஜினல் தேயிலைத் தூளை நேரடியாக நாங்கள் விற்பனை செய்ய முடியாது. சிண்டிகேட் போட்டுக்கொண்டு கிலோ 30 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரைக்கும் எங்களிடம் வாங்கிமார்க்கெட்டில் 250 ரூபாய்க்கும் மேல் புரோக்கர்கள் விற்கிறார்கள். டீக்கடை வியாபாரிகளுக்கு ஒரிஜினல் டீத்தூள் விலை கட்டுப்படி ஆகாததால்தான்கலப்படத்தை நாடுகிறார்கள். அரசு நடவடிக்கை எடுத்து தேயிலைத் தூளுக்கு நியாயமான விலையை நிர்ணயித்தால்கலப்படத்தைத் தடுக்கலாம்” என்கிறார்கள்.

உணவுப் பொருளில் கலப்படம் செய்து விற்றால்ஆயுள் தண்டனை வழங்கலாம் என்கிறது சட்டம். தேசியப் பானம் ஆன பிறகாவதுதேயிலைக் கலப்​படத்தைத் தடுக்குமா அரசு?

நன்றி – விகடன்

Sunday, July 15, 2012

பள்ளிவாசலில் புகுந்து தாக்க முயன்றது நியாயமா SJAP..?

கடந்த வார (வெள்ளிகிழமை, 06 July 2012 )ஜும்மா மேடையில் முஸ்லிம் யார்? என்ற தலைப்பில் மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் சம்சுதீன் காசிமி உரை நிகழ்த்தியுள்ளார் அதில் அனாசாரங்ககள் ,பித் அத் பற்றியும், உண்மை சுன்னத் ஜமாஅத் என்றால் யார் என்று காரண காரியங்களோடு எடுத்துக்கூறியுள்ளார். (காண்க வீடியோ)





இதனால் ஆத்திரம் அடைந்த சுன்னத் ஜாமஅத் ஐக்கிய பேரவையை சார்ந்த அக்ரம்கான் மற்றும் மேலை நாசர் ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினர், சென்ற வாரம் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசலில் புகுந்து சம்சுதீன் காசிமியை தாக்க முயன்றனர். சம்பவம் கேள்விபட்டு பலர் மக்கா மஸ்ஜிதை நோக்கி படையெடுக்க இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்தை கேள்விப்பட்ட darul huda -முப்தி உமர் ஷரிப், intj-SM பாக்கர் ,tmmk-S .ஹைதர் அலி, jih-சிக்கந்தர் உள்ளிட்டவர்கள் மக்கா மஸ்ஜித்திற்கு நேரடியாக சென்று விசாரித்தனர்.

அப்பொழுது பேசிய அனைவரும் தனி தனியாக தங்களின் கண்டனத்தை பதிவு செய்தார்கள் மேலும் தாக்க முயன்ற அமைப்பினரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.



பள்ளிவாசல் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .

நாங்கள் தான் சுன்னத் ஜமாஅத் என்று தம்பட்டம் அடிக்கும் இவர்களுக்கு இப்படி பள்ளிவாசல் புகுந்து ரகளை செய்வதும் சுன்னத் தான் போலிருக்கிறது.

ஒரு மாற்று மதத்தை சார்ந்தவன் கூட பள்ளிவாசலில் அநாகரிகமாக நடந்துகொள்ள மாட்டான் ஆனால் இந்த பரோலிய கொள்கை குன்றுகள் இதையும் செய்ய தயங்குவதில்லை...

அறியாமையால் மூழ்கிகிடக்கும் இந்த சகோதரர்களுக்கு நேர்வழிக் கேட்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
Related Posts Plugin for WordPress, Blogger...