(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, October 26, 2011

மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...


1904-ஆம் ஆண்டு. உலகின் மிகப்பெரிய கண்காட்சி ஒன்றிற்கு தயாராகிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரம். இன்றைய காலக்கட்டத்தில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை தொலைக்காட்சி, இன்டர்நெட் வாயிலாக நாம் கண்டுவிடுகின்றோம். ஆனால் அந்த காலக்கட்டத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாத போது, இம்மாதிரியான கண்காட்சிகள் தான் உலக நடப்புகளை அறிந்துக்கொள்ளும் இடங்களாக அமைந்தன. 

உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொருட்கள், புதிய கண்டுபிடிப்புகள், விலங்குகள், விவசாய யுக்திகள் என்று அனைத்தையும் ஒருசேர கண்டுகளிக்கும் இடங்களான திகழ்ந்தன இந்த கண்காட்சிகள். இதுப் போன்ற ஒரு பிரமாண்டமான கண்காட்சிக்கு தான் தயாராகிக் கொண்டிருந்தது செயின்ட் லூயிஸ் நகரம். 

அதெல்லாம் சரி.........விலங்குகளை, கண்டுபிடிப்புகளை, யுக்திகளை காட்சிக்கு வைக்கின்றார்கள்...ஓகே....

மனிதர்களை காட்சிக்கு வைத்தால்????? 

வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற பரிணாமக் கருத்தை நிரூபிக்க உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு இனத்தவரை அழைத்து வந்து காட்சிக்கு வைத்து, தாங்களே சிறந்தவர்கள் என்று நிரூபிக்க முற்பட்டால்??

ஆம். கேட்கவே கொடூரமாக இருக்கும் இதுப்போன்ற செயல்களை தான் அரங்கேற்றி காட்டியது அந்த கண்காட்சி. ஐரோப்பாவின் பெரிய நகரங்களில் இதுப்போன்ற கண்காட்சிகள் ஏற்கனவே நடைப்பெற்றிருக்கின்றன என்றாலும்,  பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் மனித இனத்தவரை அதிகமாக காட்சிக்கு வைத்தது இந்த கண்காட்சியில் தான்.  

மனிதனின் உடல், உள்ளம் மற்றும் கலாச்சாரம் குறித்த வரலாற்றை ஆய்வு செய்யும் துறைக்கு மானிடவியல் (Anthropology) என்று பெயர். இந்த துறையைச் சார்ந்தவர்களை மானிடவியலாளர் என்பார்கள். 

செயின்ட் லூயிஸ் கண்காட்சியின் மானிடவியல் துறையின் தலைவராக இருந்தவர் ஜான் மெக்கீ (John Mcgee) என்ற பிரபல மானிடவியலாளர். இவர் அமெரிக்க மானிடவியல் சங்கத்திற்கும் அப்போது தலைவராக இருந்தார். 

இவர் தான் நாம் மேலே பார்த்த கொடுமைகளுக்கு பின்னணியில் செயல்பட்டவர். வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வினின் கருத்தை இந்த கண்காட்சி வாயிலாக நிரூபித்துவிட வேண்டும் என்பதே இந்த விஞ்ஞானியின் நோக்கம். அதற்கு அவர் செய்த ஏற்பாடு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பரிணாமரீதியாக தாழ்ந்தவர்கள் என கருதப்படும் இனத்தவரை இந்த கண்காட்சிக்கு அழைத்துவருவது, அவர்களது நடவடிக்கைகளை செயல்முறையாக காட்டி, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்ற டார்வீனிய கோட்பாட்டை நிரூபிப்பது. 

தன்னுடைய இந்த எண்ணத்தை நிறைவேற்ற செயல்முறையில் இறங்கினார் மெக்கீ. தென் அமெரிக்க பழங்குடியினத்தவர், வட அமெரிக்காவின் பூர்வகுடிமக்கள், எஸ்கிமோக்கள் என்று பல இனத்தவர் இவருடைய லிஸ்ட்டில் இருந்தார்கள். அவர்களை அழைத்துவர குழுக்களை அனுப்பினார் மெக்கீ. 

நீங்கள் மேலே பார்த்த இனத்தவரையெல்லாம் விட, மெக்கீ ஆர்வமுடன் எதிர்பார்த்த ஒரு இனம், மத்திய ஆப்பிரிக்காவின் பிக்மீக்கள் (Pygmy).

பிக்மீக்கள் - இவர்கள் சராசரி மனிதர்களை விட உயரம் குறைந்தவர்கள். சுருட்டலான முடியும், மிக கருமையான நிறமும் கொண்டவர்கள். மத்திய ஆப்பிரிக்க காடுகளில் வசிக்கும் பழங்குடியினத்தவர்.  

இவர்களை கண்காட்சியில் வைக்க ஏன் அவ்வளவு ஆர்வப்பட்டார் மெக்கீ என்பதை இந்நேரம் புரிந்துக்கொண்டிருப்பீர்கள். பிக்மீக்களை கொண்டு வரும் பொறுப்பை, பயண ஆராய்ச்சிகளில் (Explorer) சிறந்தவராக கருதப்பட்ட சாமுவேல் வெர்னெரிடம் (Samuel Verner) ஒப்படைத்தார் மெக்கீ. 

மத்திய ஆப்பிரிக்கா நோக்கிய தன்னுடைய கடல்வழி பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

-------
ஓடா பெங்கா:

அதே காலக்கட்டம். மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாடு.  

அப்போது பெல்ஜியம் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது காங்கோ. இந்நாட்டின் காங்கோ ஆற்றையொட்டிய காட்டுப்பகுதிகளில் அதிகளவில் வசித்து வந்தனர் பிக்மீக்கள். திடீரென இவர்கள் மீது படையெடுத்தனர் பெல்ஜியம் மன்னரின் படைகள். இதற்கு காரணம், பிக்மீக்கள் இருந்த பகுதியில் உள்ள ரப்பர் மரங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர பெல்ஜியம் மன்னர் எண்ணியதே ஆகும்.

பிக்மீக்கள் துடைத்தெரியப்பட்டனர். 

வேட்டைக்கு சென்று விட்டு தன் இருப்பிடத்துக்கு திரும்பிய ஓடா பெங்கா (Ota Benga) என்ற பெயருடைய பிக்மீக்கு மிகுந்த அதிர்ச்சி. தன்னுடைய மனைவியையும், இரண்டு குழந்தைகளையும் இந்த அசம்பாவிதத்தில் இழந்திருந்தார் பெங்கா. தன்னுடைய இனம் துடைத்தெரியப்பட்டிருப்பதை முழுவதுமாக அறிந்துக் கொள்வதற்குள் மற்றொரு பழங்குடியினத்தவரிடம் சிக்கிக்கொண்டார். 

அவர்கள் பென்காவை கூண்டில் அடைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகினர். 

பிக்மீக்களை தேடி காங்கோ ஆற்றில் வந்துக்கொண்டிருந்தார் வெர்னெர். ஆற்றின் ஒரு பகுதியில் வெர்னெரின் நீராவிப் படகு பழுதடைந்தது. உதிரிப்பாகங்கள் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு மேலாகுமென சொல்லப்பட, அந்த இடத்திலிருந்து இறங்கி ஆற்றையொட்டிய காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார் வெர்னெர். 

ஆஹா...அவர் எதிர்ப்பார்த்து வந்த விசயம் கிடைத்துவிட்டது. ஆம், கூண்டில் அடைக்கப்படிருந்த பெங்காவை பார்த்தார் வெர்னெர். பரவசமடைந்தார்.

பெங்காவை கூண்டில் அடைத்தவர்களிடம் பேசி, பணய பொருட்களை கொடுத்து பெங்காவை விடுதலை செய்தார். பிக்மீக்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர்களுடைய மொழியையும் அறிந்திருந்தார் வெர்னெர். தன்னுடன் வரவேண்டுமென்று பெங்காவிடம் அவர் சொல்ல, இங்கே இந்த பழங்குடியினருடன் இருந்து வேதனைகளை அனுபவிப்பதைவிட வெர்னருடன் செல்வது சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார் ஓடா பெங்கா. 

தன்னுடைய இந்த முடிவு, உலகின் கோரமான ஒரு நிகழ்வுக்கு காரணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை அந்த அப்பாவி. 

பின்பு, வேறு இடங்களில் இருந்த சில பிக்மீக்களை பெங்காவின் உதவிக்கொண்டு சம்மதிக்க வைத்து அவர்களை அழைத்துக்கொண்டு அமெரிக்காவிற்கு பயணத்தை தொடங்கினார் வெர்னெர்.

செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சி:

வெர்னரின் நீராவிப் படகு பிக்மீக்களுக்கு முதல் ஆச்சர்யத்தை தந்தது. நீராவிப் படகு எப்படி வேலை செய்கின்றது என்று அவர்களுக்கு விளக்கினார் வெர்னெர். அமெரிக்காவை அடைந்தவுடன், உயர உயரமான கட்டிடங்களும் தொழில்நுட்ப விசயங்களும் பிக்மீக்களை ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றன. 

தான் மலேரியாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அமெரிக்காவை அடைந்தவுடன், பிக்மீக்களை ரயிலில் ஏற்றி செயின்ட் லூயிஸ் நகருக்கு அனுப்பிவைத்து விட்டார் வெர்னெர்.

கண்காட்சியில் இவர்கள் காட்சிக்காக வைக்கப்பட, மானிடவியல் ஆய்வாளரான மெக்கீ, தன்னுடைய எண்ணம் நிறைவேறியதை எண்ணி ஆனந்தப்பட்டார். கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர் பிக்மீக்கள். அதிலும் குறிப்பாக ஓடா பெங்காவின் மீது பலரின் பார்வையும் விழுந்தது. அதற்கு காரணம் அவரது பற்கள் தான். தன்னுடைய கலாச்சாரத்தின்படி சிறு வயதிலேயே தன்னுடைய பற்களை கூர்திட்டி இருந்தார் பெங்கா. 
கண்காட்சியின் நாட்கள் செல்ல செல்ல, வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்று இவர்களை காட்டி தன்னுடைய பரிணாம எண்ணங்களை மக்களுக்குள் வலுவாக விதைத்தார் மெக்கீ. அறிவியல்ரீதியாக வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை நிரூபித்துவிட்டதாக மகிழ்ந்துக்கொண்டார். 

ஏழு மாத காலம் நடந்த இந்த கண்காட்சியை, சுமார் இரண்டு கோடி மக்கள் வரை பார்த்ததாக குறிப்பிடும் சேனல் 4, அவர்களில் பெரும்பாலானவர்கள், வெள்ளையர்களே சிறந்தவர்கள் என்பதை அறிவியல்ரீதியாக இந்த கண்காட்சி நிரூபித்து காட்டிவிட்டதாக எண்ணினர் என்றும் கூறுகின்றது.

பிக்மீக்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற வாதம் முட்டாள்தனமானது. ஏனென்றால், அவர்கள் இருந்த சூழ்நிலைகேற்ப அறிவில் சிறந்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். இவர்களுடன் அதிக காலம் கழித்த வெர்னெர், இவர்கள் மனிதர்களை காட்டிலும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்களில்லை என்று தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

கண்காட்சியில் இவர்களின் சில நடவடிக்கைகளை விரும்பவில்லை மெக்கீ. ஏனென்றால் அவை புத்திசாலித்தனமாக, வெள்ளையர்களின் நடவடிக்கைகளுக்கு நிகராக இருந்தது. ஆக, பிக்மீக்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம், அறிவியல் அடிப்படையில் இனவெறியை நியாயப்படுத்த திட்டமிடப்பட்ட சதியே அன்றி வேறேதும் இல்லை.      

மலேரியாவில் இருந்து விடுபட்டு செயின்ட் லூயிஸ் நகருக்கு வந்த வெர்னெர், தான் அழைத்து வந்த பிக்மீக்கள் சிறைவாசிகள் போல நடத்தப்படுவதை உணர்ந்துக்கொண்டார். 

கண்காட்சி முடிந்தது. தன்னுடைய வாக்குறுதிக்கேற்ப பிக்மீக்களை மறுபடியும் ஆப்பிரிக்காவில் சென்று விட்டு விட்டார் வெர்னெர். 

தன்னுடைய இனம் அரசப்படையால் முழுவதுமாக அழிக்கப்பட்டிருப்பதை கண்டார் ஓடா பெங்கா. பிறகு, வேறொரு இனத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்து கொண்டார். அந்த பெண் பாம்பு கடித்து இறக்க, பெங்கா மீது பேய் இருப்பதாக கூறி அவரை நிராகரித்த்தனர் அந்த இனத்தினர். தன்னை அனைவரும் ஒதுக்குகின்றனர் என்று வேதனை அடைந்த பெங்கா, தன்னை மறுபடியும் அமெரிக்காவிற்கு அழைத்து செல்ல சொல்லி வெர்னரிடம் கேட்டுக்கொண்டார். 

முதலில் மறுத்த வெர்னர், பின்னர் ஒப்புக்கொண்டார். மறுபடியும் அமெரிக்காவிற்கு பயணமாகினர். இந்த முறை அமெரிக்காவின் நியூயார்க். 

தான் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வந்திருந்த கைவினை பொருட்களை நியூயார்க் அருங்காட்சியகத்தில் விற்க முயன்றார் வெர்னெர். ஆனால், அவருடைய பொருட்களை வாங்க மறுத்துவிட்டது அருங்காட்சியகம். இதனால் விரக்தியடைந்த வெர்னெர், ஓடா பெங்காவை அருங்காட்சியகத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு, பொருளாதார உதவி நாடி தன் குடும்பத்தினரை சந்திக்க சென்று விட்டார். 

மிக மிக கேவலமான, கேட்பவர் உள்ளங்களை கொதிப்படைய செய்யும் நிகழ்வுகள் நடந்தேற ஆரம்பித்தன. 

பரிணாமக் கோட்பாடு மறுபடியும் தன்னுடைய கோர முகத்தை காட்ட ஆரம்பித்தது.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலை:

அருங்காட்சிகத்தில் ஓடா பெங்கா இருக்கும் செய்தி, நியூயார்கின் ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலையின் (Bronx Zoo) டைரக்டரான வில்லியம் ஹார்னடேவிற்கு (William Hornaday) எட்டியது.

ஹார்னடேவும், அமெரிக்க உயிரியல் கழகத்தின் செயலாளருமான மாடிசன் கிரான்ட்டும் (Madison Grant) சேர்ந்து ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டினார்கள். அதாவது, டார்வினின் பரிணாம கோட்பாட்டை நிரூபிக்கும் ஆதாரமாக பெங்காவை காட்ட தீர்மானித்தார்கள்.

டார்வினின் கூற்றுப்படி, குரங்(கு போன்ற ஒன்றிலிருந்து)கிலிருந்து வந்தவன் மனிதன். அதாவது, குரங்கு போன்ற உயிரினங்கள் காலப்போக்கில் சிறுகச் சிறுக மாறி பின்னர் மனிதன் வந்தான் என்பது டார்வினின் கருத்து.

டார்வினின் இந்த கூற்றை தான் நிரூபிக்க முயன்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும். குரங்கிற்கும், மனிதனிற்கும் இடைப்பட்ட இனமாக (Missing link) பெங்காவை காட்ட தீர்மானித்தனர்.

ப்ரான்க்ஸ் மிருகக்காட்சி சாலைக்கு பெங்காவை அழைத்து சென்றனர். Zoo-வில் உள்ள யானைகளை நிர்வகிக்க தான் (யானைகளை அடக்குவதில் கில்லாடிகள் பிக்மீக்கள்) தன்னை அழைத்து செல்கின்றார்கள் என்று நினைத்தார் பெங்கா. ஆனால், ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டை நிரூபிப்பதற்காக அவருடைய இனத்தை கேவலப்படுத்த போகின்றனர் என்பது தெரியவில்லை அவருக்கு.

1908-ஆம் ஆண்டு, செப்டெம்பர் 8-ஆம் தேதி அந்த கொடூரமான சம்பவம் நடந்தது. மிருகக்காட்சி சாலையின் குரங்குகள் கூண்டில், குரங்குகளுடன் அடைக்கப்பட்டு காட்சிக்காக வைக்கப்பட்டார் பெங்கா. அந்த கூண்டிற்கு மேலே இருந்த விளம்பரப் பலகை இவரை "Missing Link" என்று சொல்லியது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு விலங்கிற்கும் ஒரு குறிப்பு எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டுவார்களே, அதுபோல பெங்காவை பற்றி எழுதி கூண்டிற்கு வெளியே மாட்டியிருந்தார்கள். ஒவ்வொரு நாளின் மதியமும் பெங்காவை பார்க்கலாமென்றும் அந்த பலகையில் எழுதியிருந்தது.

என்ன கொடுமை இது?...ஒரு மனிதனை இன்னொரு சக மனிதன் இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது. இனவெறியின் உச்சக்கட்டம். பின்னணியில் பரிணாமக் கோட்பாடு. தடுப்பதற்கு யாரும் இல்லை. ஏனென்றால், இவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அறிவியலே சொல்லிவிட்டதல்லாவா??

பார்க்கவரும் மக்களை நோக்கி தன்னுடைய வில் அம்பை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டார் பெங்கா. தன்னுடைய ஊஞ்சற் படுக்கையை அந்த கூண்டிலேயே பயன்படுத்த உற்சாகப்படுத்தப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்துக்கொண்டு உலாவ ஊக்குவிக்கப்பட்டார். ஓரங்குட்டான் குரங்கை இடுப்பில் வைத்தவாறு இவர் நிற்கும் காட்சி பார்ப்பவர் உள்ளங்களை துளைப்பதாக உள்ளது.


மக்கள் மத்தியில் மிக பிரபலமானது இந்த நிகழ்வு. ஒரு ஞாயிற்றுக்கிழமையின் போது (Sep 16, 1908), சுமார் 40,000 மக்கள் பெங்காவை பார்த்து சென்றிருக்கின்றார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பார்க்கவரும் மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றார் பெங்கா. சமயங்களில் ஆத்திரத்துடன் மக்களை நோக்கி தன் அம்பை எறிவாராம்.

இந்த நிகழ்ச்சி அமெரிக்க கறுப்பின மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியது. கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார்கள். தாங்கள் ஏற்கனவே சமூகத்தால் கீழ்த்தரமாக நடத்தப்படும்போது, குரங்குகளுடன் தங்கள் இனத்தவரை அடைத்து வைத்து மேலும் கேவலப்படுத்த வேண்டுமா என்று கொந்தளித்தனர். ஆனால் இவர்களின் நியாயக்குரலை காதுக் கொடுத்து கேட்க (ஆரம்பத்தில்) முன்வரவில்லை நியூயார்க் நகரின் மேயர்.  ஏனென்றால், அறிவியலை தானே நிரூபிக்க முயல்கின்றனர் ஹார்னடேவும், கிரான்ட்டும்?

பெங்காவின் இறுதி நாட்கள்:

மிகக் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் பெங்கா. இரண்டு வார zoo வாழ்க்கை முடிவுக்கு வந்தது. பின்னர் அனாதைகள் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு கல்வி கொடுக்கப்பட்டார்.

ஆங்கிலம் பேசுவதற்கும், படிப்பதற்கும் கற்றுக்கொண்டார். மிருகக்காட்சி சாலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை மறக்க முடியாமல் தவித்தார். "நானும் மனிதன் தான், நானும் மனிதன் தான்" என்று கூறி தன் மார்பில் அடித்துக்கொள்வாராம் பெங்கா.

ஆப்பிரிக்கா திரும்ப திட்டமிட்டார். அதற்காக வெற்றிலை தொழிற்சாலையில் வேலை செய்து பணம் சேர்த்தார். ஆனால், முதல் உலகப்போர் தொடங்கிவிட, அவரால் ஆப்பிரிக்காவிற்கு திரும்ப முடியவில்லை. இதனால் மன உளைச்சலடைந்த பெங்கா, 1916-ஆம் ஆண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இனவெறியை நியாயப்படுத்தி மற்றொரு உயிரை பலிவாங்கிவிட்டது பரிணாமக் கோட்பாடு.

உலகம் மறந்து போயிருந்த இந்த அசிங்கமான இரகசியத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு (1992) வெளிக்கொண்டு வந்தார் வெர்னரின் பேரன். சில ஆண்டுகளுக்கு முன்பு (2009) இதுக்குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது சேனல் 4.

பெங்காவின் சோக வரலாற்றை கேட்கும் போது, இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி...இங்கே யார் தாழ்ந்தவர்கள்? பெங்காவா? இல்லை அந்த பரிணாமவியலாளர்களா?

முடிவாக:

விடைபெறும் முன் இந்த செய்திகளையும் அறிந்துக்கொண்டு செல்லுங்கள்....

1. பெங்காவை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்து வந்தாரே கிரான்ட்...அவருக்கும் ஹிட்லருக்கும் ஒரு இணைப்பு உண்டு.

கிரான்ட்டின் "The Passing Of The Great Race" என்ற புத்தகம் மிகப் பிரபலமான ஒன்று. இதில், வெள்ளையர்களை இயற்கை உயர்ந்த இனத்தவராக உருவாக்கியிருப்பதால் அவர்கள் தாழ்ந்த நிலை மனிதர்களோடு சேர்ந்து தங்களின் தனித்துவத்தை இழந்துவிடக்கூடாது என்று வாதாடினார் கிரான்ட். இந்த புத்தகம் ஜெர்மன் மொழியில் 1930-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்ட போது, இந்த புத்தகத்தை பாராட்டி கிராண்டிற்கு ஒரு கடிதம் வந்தது. எழுதியவர் வேறு யாருமல்ல, அடால்ப் ஹிட்லர். இந்த புத்தகத்தை தன்னுடைய பைபிள் என்று குறிப்பிட்டிருந்தார் ஹிட்லர்.

இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இயற்கை தங்களை உயர் இனத்தவராக ஆக்கியதாக நம்பியவர் தானே ஹிட்லர்?? உயர்ந்த தன்னுடைய இனம், தாழ்ந்த இனத்தோடு சேர்ந்தால், இயற்கையின் ஆயிரமாயிர ஆண்டு கால உழைப்பு வீணாகிவிடும் என்று சொன்னவர் தானே அவர்?

2. இவ்வாண்டின் துவக்கத்தில் (Feb, 2011), Current Anthropology ஆய்விதழில் வெளிவந்த ஒரு ஆய்வுக்கட்டுரை, ஆரம்ப கால மனிதர்களுக்கும் இக்கால மனிதர்களுக்கும் அதிக அளவில் வேறுபாடுகள் இல்லை என்று கூறியது. அதாவது, கற்கால மனிதர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்றும், பின்னர் வந்தவர்கள் அறிவில் சிறந்தவர்கள் என்றும் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம் அல்லவா, அது தவறென்று கூறியது அந்த ஆய்வுக்கட்டுரை. மனிதன் தோன்றியதிலிருந்தே அறிவில் சிறந்தவனாகத் தான் இருந்திருக்கின்றானாம்.

3. இம்மாத துவக்கத்தில் (6th Oct 2011), Nature ஆய்விதழில் வெளிவந்த ஒரு புத்தக விமர்சனத்தில், Nature ஆய்விதழின் சீனியர் எடிட்டரான ஹென்றி ஜீ, மனித பரிணாம படத்தை முட்டாள்தனமானது (tosh) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, குரங்கிலிருந்து சிறுகச் சிறுக மனிதன் வருவதாக படம் பார்த்திருப்போமே, அந்த படத்தை தான் முட்டாள்தனமானது என்று குறிப்பிடுகின்றார் ஹென்றி ஜீ


பரிணாம கோட்பாட்டிற்கு எதிரான நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், கூடிய விரைவில் முழுவதுமாக அது ஒழிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...
ஆமீன்.இறைவனே எல்லாம் அறிந்தவன்...   

 My Sincere thanks to:1. Channel 4.2. Mail Online.3. Phillips V. BradfordReferences: 
1. Caged in the human zoo: The shocking story of the young pygmy warrior put on show in a monkey house - and how he fuelled Hitler's twisted beliefs - Mail Online, 31st October 2009. link
2. The Human Zoo: Science's Dirty Secret - Channel 4 documentary. link.
3. The Human Zoo: Science's Dirty Secret (p1) - Youtube. link
4. Ota Benga (ca. 1883–1916) - Encyclopedia Virginia. link
5. Ota Benga: The Pygmy Who Was Caged in the Bronx Zoo's Monkey House - Environmental graffiti. link
6. The Scandal at the Zoo - The New York Times, 6th August 2006. link
7. Ota Benga’s Life in Africa, Capture, and Journey to America - Phillips V. Bradford. link 
8. The Pygmy in the Zoo - concentric.net. link
9. Ota Benga - Wikipedia. link
10. Are Pygmies really human? - The Straight Dope, 20th Feb 2004. link
11. Race and People, Extracted from Mein Kampf, volume 1, chapter 11 - Adolf Hitler
12. The Human Zoo:Science’s Dirty Secret - Channel 4 Pdf documents. link
13. Human Zoo, Pygmy peoples, Madisan Grant, William Temple Hornaday, Louisiana Purchase Exposition, John McGee, Bronx Zoo - Wikipedia.
14. Earliest humans not so different from us, research suggests - 14th Feb 2011, Physorg.com. link
15. Palaeoanthropology: Craniums with clout - Nature 478, 34 (06 October 2011) doi:10.1038/478034a. link
16. Henry Gee in Nature: “We know that, as a depiction of evolution, this line-up is tosh. Yet we cling to it.” - Uncommon Descent, 6th December 2011. link
17. Prejudices in ideas about human evolution - arn.org, 10th Oct, 2011. link

ஜசாகல்லாஹ் : ஆஷிக் அஹ்மத் அ.-http://www.ethirkkural.com

Friday, October 21, 2011

உள்ளாட்சி தேர்தல் : நாகூரில் பெரும்பாலான வார்டுகளில் அதிமுக வெற்றி


கடந்த 17.10.2011 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கபட்டுள்ளன . நம் ஊரில் இரு வார்டுகளை தவிர அணைத்து வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது மேலும் நாகை நகராட்சி தலைவர் பதவியையும் அதிமுக தட்டிச்சென்றது.





நாகை நகராட்சி தலைவர்


Wednesday, October 19, 2011

கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லீம்கள்..!


தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை 
மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம்கள் புறக்கணித்தனர். 


கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. 
குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. 

இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது. 




95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும்,4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 95-வது வார்டுக்கு உள்பட்ட குறிச்சிப்பிரிவு நொய்யல்பாலம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். 


காலை 9 மணி நிலவரப்படி இப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் (1035) மேயர் பதவிக்கு 140 பேர் வாக்களித்தனர். ஆனால் கவுன்சிலர்களுக்கு 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 


133 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று
பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர். 



இதே பள்ளியில் மற்றொரு வாக்குச் சாவடியில் 130 பேர் மேயருக்கு வாக்களித்தனர். கவுன்சிலர்களுக்கு 20 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். எஞ்சிய 110 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தனர். 


87-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 


கவுன்சிலர் தேர்தல் புறக்கணிப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் ஜி.உமர்,தமுமுக மாவட்ட செயலர் எச்.ஹமீது  ஆகியோர் கூறியது: 


தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால்,குறிச்சி நகராட்சியில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள 2 வார்டுகளில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். 


மூன்றாவதாக ஒரு வார்டை சேர்த்து தனி வார்டாக மாற்றியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.(நன்றி-தினமணி 18 Oct 2011)
இது ஒரு வகையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற விஷயங்கள் தான் மாற்றத்திற்கான முதல் படி.


இது ஒரு புறம் இருக்க .. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாகூர் போன்ற ஊர்களில் ஏகோபித்த குரலில் ஒருவரை முன்னிறுத்தி ஆதரவளித்து போட்டியின்றி தேர்வுசெய்யும் திறமையும் ,பக்குவத்தையும் நம் சமூகம் இன்னும் பெறவில்லை என்பது வருத்தப்படவேண்டிய ஒன்று தான்.


நான்கு ,ஐந்து தெருவிற்குள் ஒரு வார்டு -கவுன்சிலர் தேர்தலுக்கு  போட்டியின்றி ஒருவரை நம்மால் தேர்வு செய்ய முடியவில்லை. தெருவிற்கு பத்துப்பேரு நான் நீன்னு போட்டியிட்டு  நம்மிடையே ஆயிரம் குரோதம் ,சுயநலம் ,விளம்பரம்,பொறாமை இது தான் மிச்சம். இதுல ஓட்டுக்கு லஞ்சம் வேற.. 


தயவு செய்து இனி யாரும் போலியாக ஒற்றுமை கோஷம் போட வேண்டாம்.


முதலில் நாம் சகோதரத்துவத்தையும் ,சகிப்புதமையையும் நம்மிலிருந்து நம் வீட்டிலிருந்து ,நம் தெருவிலிருந்து தொடங்குவோம்.பிறகு வாய்கிழிய நம் ஒற்றுமையை பற்றி பேசுவோம்.

Sunday, October 16, 2011

Sunday, October 9, 2011

நாகூரில் பைக்கை பறிகொடுத்தவர்கள் கவனத்திற்கு

சமீபகாலமாக நாகூர் நாகை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து  திருட்டு போனது.

இந்நிலையில் தற்போது பைக் திருடர்களை அவர்கள் திருடிய வாகனத்தோடு பிடித்துள்ளது காவல்துறை.. 

ஆகவே பைக்கை பறிகொடுத்தவர்கள் காவல்துறையை அணுகி உங்கள் பைக்குகளை (லஞ்சம் கொடுக்காம வாங்க முயற்சி செய்யுங்கள்) பெற்றுகொள்ளுங்கள்.





Saturday, October 8, 2011

வினவு தளத்தின் இஸ்லாமிய வெறுப்புக்கு நமது மறுப்பு



என்ற பெயரில் எழுதி வினவு இணையதளம் தனது இஸ்லாமிய வெறுப்பை .. வெளிப்படுத்தியிருந்தது.

இதற்கு Tntj - "உணர்வு" இதழ் மறுப்பு வெளியிட்டு இருந்தது.. இதற்கு வினவு இணையதளம் 

இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு! என்று மீண்டும் பதிலளித்துள்ளது...

அதில் ரொம்ப ரோசபட்டு உணர்வு பத்திரிக்கையையும் , நம் சமூகத்தையும் , இஸ்லாமிய சட்டங்களையும் கடுமையாக விமர்சித்து இருந்தது..

மேலும் முஸ்லிம்களின் ஒற்றுமையை பற்றி பேசி இருந்தது..
வினவின் இத்தகைய இரட்டை வேடம் ஒன்றும் புதிதல்ல என்றாலும் ...
இவ்விசயத்தில் உண்மையை உறிக்கும் முயற்சியில் இன்ஷாஅல்லாஹ் இறங்கிஇருக்கிறோம்.

அவர்கள் TNTJ வை சார்ந்தவர்களை,அவர்கள் பத்திரிகையை தான் விமர்சிக்கிறார்கள் என்று குறுகிய மனப்பான்மையில் தயவு செய்து தமுமுக , ஜாக் ,SDPI சகோதர்களும் ,மற்றசகோதர்களும் என்னாதீர்கள் .. 

இஸ்லாத்தை நோக்கி வீசப்படும் எதையும் முதலில் உரியமுறையில் எதிர்கொண்டு விட்டு பிறகு நம் பங்காளி சண்டையை வைத்துகொள்வோம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாம் இஸ்லாத்திற்காக போராடுகிறோம்.

அணைத்து சகோதர்களும் வினவு தளத்தில் தங்களின் கருத்துக்களை நாகரிகமாக அதே சமயம் , மண்டையில் உரைக்கும் விதமாக  பதிலடியாக பதிய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

நமது இணையத்தின் சார்பாக ஒரு சாட்டையடியாக ... நமது மறுப்பை தெரிவித்து இருக்கிறோம்.


முதலில் வினவு தளத்திற்கு சென்று மேற்கூறிய கட்டுரையை பார்வையிட்டுவிட்டு  இதை படியுங்கள் அல்லது வினவு தளத்திலேயே நமது மறுப்பையும் (மறுமொழி பக்கத்தில் ) பார்க்கலாம் 

இதோ உங்கள் பார்வைக்கு ...



வினவின் மறுப்பிற்கு மறுப்பு ...


இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக !

வினவு மீண்டும் ஒரு முறை தன்அரிப்பை நன்றாக தீரத்துகொண்டுள்ளது நலம்.. சரிங்க நிஜாம் ரோசபட்டுவிட்டார் பாவம்.. அதுக்கு மறுப்பு என்ற பெயரில் வினவு ஏன் இப்படி ரோசப்படுகிறது.. வினவுக்கு மட்டும் விதிவிலக்கா...? ஹி ஹி ... அப்போ நானும் கொஞ்சம் ரோசப்டுகிறேன் கேளுங்க..

சரி உங்க பிரச்சனை தான் என்ன ? பொதுவா நீங்க எத சொன்னாலும் ,செய்தாலும் அதை விமர்சிப்பதில் வல்லவர்கள், தங்களுக்கு தாங்களே நியாயம் கற்பிப்பதில் திறமைசாலிகள் எல்லாம் ஓகே அதனால் நீங்கள் சொல்லும் அனைத்தையும் தலை அசைத்து ஏற்றுகொள்ள வேண்டுமா என்ன ? 

//இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்? //
யாரு சொன்னது புதிய கலாச்சாரம் எங்களுக்கு பிடித்தமானது என்று– எக்ஸ்ட்ரா பிட் லாம் போடுறிங்க... எங்கள் சமுதாயத்தில் பலருக்கு அப்படி ஒரு பத்திரிக்கை இருப்பதே தெரியாதுங்கோ...

நீங்கள் யாரை எதிர்த்து எழுதினாலும் ,யாரை புகழ்ந்து எழுதினாலும் எங்களுக்கு எப்பவுமே “பதிய கலாச்சாரம்“ பிடிப்பதில்லை. எங்களுக்கு பிடித்தமானது இஸ்லாமிய கலாச்சாரம் மட்டுமே. அதை எங்களால் முடிந்த அளவிற்கு நாங்கள் கடைபிடிக்கிறோம்  ஆனால் நீங்கள் விமர்சிப்பதை நிறுத்தக்கூடாது ஆமா.. இன்னும் உங்களிடம் எதிர்பாக்கிறோம்... 

அடுத்து
// முதலமைச்சர் ஜெயலிதா முழுக்க போர்த்திக்கொண்டு வலம் வந்த போதும் அவரது முன்னேற்றத்தை தடுக்கவில்லையாம். சினாமாவில், இதற்கு முன் அரசியலில் கவர்ச்சியாக வந்தபோதும் அவரது முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தக் கவர்ச்சியே அவரை இன்றுவரை அரசியலில் அசைக்க முடியாத(!) முன்னேற்றத்தை தந்துள்ளது //  
வினவின் உடைகழற்றும் வெறித்தனம் பளிச்சிடுகிறது வாழ்த்துக்கள்.  

ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் .. உலகிலேயே உயர்ந்த(?) கொள்கையை கொண்ட நீங்கள் பெண்களுக்கு சிபாரிசு செய்யும் உடைகள் தான் என்ன ?

சரி புர்கா வேணாம் .. ம்ம நம்ம தமிழ் கலாச்சாரம் இருக்கே (சைடு விவ்) சாரி கட்ட சொல்லலாமா(?)  சரியா தெரியாதே .. அப்போ TWO PIECE ல அலைய விடலாமா(?)  இல்ல  இன்னும் பேட்டரா ?  பேசாம
“நிர்வாணமா அலைய விட்டுடலாம்  என்ன சொல்கிறீர்கள்  - இது முழு பெண் சுதந்திரம் தானே. துணி மணி காசு வேற மிச்சம்.

உங்கள் கூற்றுப்படி ஜெயலலித்தா அரைகுறை கவர்ச்சியில் மயங்கி நீங்களும்,அனைவரும் ஓட்டு போட்டனர்  அவர் முதல்வரா ஆகிவிட்டார்.. நிர்வாணமா நின்றால் பிரதமராக கூட ஆகிவிடலாம் , ஏன் அமெரிக்க ஜனாதிபதி கூட ஆகலாம்.. என்ன சொல்றிங்க பாஸ்..

இதற்கும் ஓகே சொன்னாலும் சொல்வீர்கள்..
ஏனென்றால் நீங்கள் “புதிய கலாச்சாரம்” ஆச்சே...
எது சரி – எது தவறு என்று யார் முடிவு செய்வது?
உங்கள் புதிய கலாச்சாரத்தின்  கொள்கைகளை வினவில் கொஞ்சம் விளக்கினால் எங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

நீங்கள் முஸ்லிம்களின் நடவடிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம்  - சில விமர்சனங்களை நாங்கள் ஏற்கிறோம் நாங்களும் கூட விமர்சிக்கிறோம்.. அதைப்போல தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று உங்களின் சில விமர்சனங்களை எதிர்க்கிறோம். ஆனால் இஸ்லாத்தை உங்களால் விமர்சிக்கவே முடியாது அப்படி நீங்கள் இஸ்லாத்தை விமர்சித்தால் சுவரில் அடிக்கப்பட்ட பந்துபோல் திரும்பி உங்கள் விமர்சனம் உங்களை நோக்கியே வரும்.

நாங்கள் விமர்சனங்களுக்கு ஓடுபவர்கள் அல்ல,எங்களுக்கு புதிதும் அல்ல அதை நேருக்கு நேராக எதிர்கொள்பவர்கள். உலக அளவில் எங்களின் நிலை இது தான். காரணம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பலவகையில் வஞ்சிக்கபடுகிறார்கள், தீவிரவாதி முத்திரை குத்தப்பட்டுவிட்டார்கள் அதனால் ஒரு முனையில் இஸ்லாத்தை திட்டி தீர்க்க ஒரு கூட்டமும் , மறு முனையில் இஸ்லாம் அப்படி என்ன தான் சொல்கிறது என்று இஸ்லாத்தை அறியும் கூட்டமும் முனைப்பு காட்ட... இன்று உலகம் முழுவதும் நாங்கள் மாற்று மத சகோதர்களுடன் , நாத்திகர்களுடனும் நேருக்கு நேராகவும்,இணைய தளத்தின் வாயிலாகவும் உரையாடி வருகிறோம். எங்களை எங்கள் மார்க்கத்தை இழிவுபடுத்த நினைபவர்களுக்கு நாங்கள் உண்மையில் நன்றி தான் சொல்ல வேண்டும்.

இல்லையென்றால் நாகரிகத்தின் தாய்(?) அமெரிக்கா, இங்கிலாந்து,ஜெர்மனி , பிரான்ஸ், என்று உலகம் பூராகவும் இன்று இஸ்லாத்தின் கொள்கைகள் சென்றடைந்து கவரப்பட்டு இஸ்லாத்தை நோக்கி அணி ,அணியாக வருவார்களா ?..  

உங்களுக்கு பொய்யான கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களுக்கு உண்மையான இறைவன் மேல் நம்பிக்கை இருக்கிறது நாங்கள் பகுத்து அறிபவர்களாக இருக்க வேண்டும் என்று எங்களுக்கு திருக்குரான் கட்டளையிடுகிறது.    
அநியாயமாக எந்த உயிர்களையும் கொள்ளக்கூடாது , அனைவரிடமும் அன்பு கட்ட வேண்டும், நீதி போற்றப்படவேண்டும் என்று இஸ்லாத்தின் உலக சமத்துவத்தை சொல்லிகொண்டே போகலாம் ஆனால் இதற்கு நீங்கள் ஒரே வார்த்தையாக நீ இஸ்லாமியன் அதனால் உன் மதத்தை நீ உயர்வாக தான் பேசுவாய் என்பீர்கள்.
இஸ்லாத்தின் எந்த போதனைகளுக்கு மனிதகுலத்திற்கு எதிரானது கிடையாது என்று அடித்து சொல்லலாம்.

பெண்கள் (மனைவி) வரம்பு மீறும்போது ஆண்கள் லேசாக அடிப்பதற்கு இஸ்லாம் அனுமதி வழங்கியிருப்பது உண்மைதான். (TWO PIECEல் பெண்கள் ஆடுவதை கேலிகூத்தாக ஆணாதிக்கத்தின் உச்சகட்டமாக இருக்க.)  இதில் என்ன தவறை கண்டீர்கள் ?

ஆண்கள் பெண்களை நிருவகிப்பவர்கள் தான் என்பது இஸ்லாத்தின் கருத்து.  இதை நீங்கள் ஒத்துகொண்டாலும் ,இல்லாவிட்டாலும் தற்போது உலகில் நடக்கும் எதார்த்தமும் இது.

உலகில் ஆணின் அரவணைப்பில் வாழும் பெண்கள் தான் பாதுகாப்பாகவும் , ஒழுக்கமாகவும் , மனஅழுத்தமில்லாமல் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
சரி அதற்காக அடிப்பதா என்றால் ? நீங்கள் நினைப்பது போல் தவறு செய்தால் இலுத்துபோட்டு சாத்து,தண்டனை கொடு என்று சொல்கிறதா இஸ்லாம் ? ...

இருவர் கணவன்,மனைவியாக வாழ்கிறார்கள் ,இவர்களில் கணவருக்கோ ,மனைவிக்கோ அல்லது இருவருக்குமா சேர்ந்து வாழவிருப்பமில்லை என்றால் அவர்கள் பிரிவதற்கு இஸ்லாம் அனுமதி அளிக்கிறது. அதை போல் அவர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் வந்து மனைவி வரம்புமீறி தவறாக நடந்து கொண்டால் அவளை திருத்தும் விதமாக லேசாக அடிக்க மார்க்கம் எங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது உண்மை.

இது எந்த விதத்திலும் கொடுமை கிடையாது மனைவி கணவனின் பொறுப்பில் இருப்பதால் இது அனுமதியே தவிர கடமையல்ல... ஒரு வாதத்திற்கு இந்த சட்டத்தை வைத்துகொண்டு ஒருவன் தன் மனைவியை நீங்கள் நினைப்பது போல் பின்னி எடுக்கிறான் என்று வைத்துகொள்வோம் அப்போது அவளுக்கு தெரிந்து விடும் இவன் நமக்கு ஏற்ற கணவன் கிடையாது கொடுமை படுத்துகிறான் என்று உடனே அவள் தன் கணவனை விவாகரத்து செய்ய முடியும் இஸ்லாத்தின் சட்டத்திற்கு உட்பட்டு மேலும் மனித உரிமை மீறல் என்று வழக்கும் போடலாம்..

அப்படி இந்த சட்டத்தை வைத்து தற்போது எத்தனை பேர் மனைவியை கொடுமை
படுத்துகிறார்கள்  கொஞ்சம் லிஸ்டை சொல்லுங்கள்... ?

ஆணுக்கும் ,பெண்ணுக்கும் மூளையிலையே வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் வணங்கும் அறிவியல் சொல்கிறது... (http://www.livescience.com/health/050120_brain_sex.html)
ஆனால் நீங்கள் உடல் ரீதியான வித்தியாசத்தையே ஏற்க மறுகிரீர்கள்.
ஒன்று மட்டும் புரியவில்லை சகோதரா ? உலக முழுவதும் பெண்களை இஸ்லாம் அடிமைபடுத்துகிறது என்று உங்களை போன்று ஆணாதிக்க சக்திகள் ஒய்யார ஒலமிடுகின்றன..

ஆனால் உலகம் முழுவதும் இஸ்லாத்தை தழுவுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே இருக்கிறது அதில் 100க்கு 70% பெண்கள்.

அதுவும் அமெரிக்க பெண்கள் தான் அதிகம்.. என்ன ஆச்சு ஏன் இவர்கள் இஸ்லாதிற்க்கு  வர வேண்டும் ? கணவனிடம் அடிவாங்கவா ? புர்கா அணிந்து உங்கள் அறிவுகூற்றுப்படி தங்களை சிறுமை படுத்திகொள்ளவா ? வீட்டில் அடைபட்டு கிடக்கவா ?.. என்ன தான் உங்க பிரச்சனை... உங்களுக்கு இஸ்லாத்தை பிடிக்கவில்லை ஓகே உங்களுக்கு பிடித்தே ஆகவேண்டும் என்றும்  அவசியமுமில்லை..

இஸ்லாத்தை படியிங்கள் என்று யாரும் உங்களை கட்டாயபடுத்தியும் இருக்கமாட்டார்கள். எங்களுகே இஸ்லாத்தை பின்பற்றுவது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. நாங்கள் எங்கள் வீட்டு பெண்களை கட்டாயபடுத்துகிறோமா ? என்ன பூச்சாண்டி இது..

இது என்ன காமெடி ... ////பிரான்ஸ் போன்ற நாடுகள், பொதுவிடங்களில் புர்கா அணிய தடைச் சட்டம் இயற்றி இசுலாமியப் பெண்களுக்கு உதவிட முயற்சிக்கையில், ஆசிட் வீச்சின் அலங்கோலமாகிப்போன பெண்கள் தமது அலங்கோலத்தை மறைக்க புர்காவை விரும்பி அணிய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுகின்றனர்///
நல்ல ஜோக் .. இதற்க்கு பதிலளிக்க வெக்கபடுகிறோம் – இப்படி ஒரு சுத்த முட்டாள் தனமான வாதத்தை இதுவரை நாம் கேட்டதில்லை.. இஸ்லாத்தை நோக்கி வரும் பெண்களே இதற்கு பதில்..

இஸ்லாம் அவர்களுக்கு கண்ணியத்தை கொடுத்திருக்கிறது அதனால் முஸ்லீம் பெண்கள் பர்தா அணிவதை என்றைக்கும் சுமையாக நினைக்கவில்லை, நினைக்கவும் மாட்டார்கள்.

உடலை காட்டி விபச்சாரத்திற்கு வித்திடும் சினிமா நடிகைகளை பார்த்து கெட்டு சீரழிவதற்காக சில முஸ்லீம் பெயர் தாங்கிகள் புர்காவை தூக்கி எரிந்தால்..அவர்கள் எரிவது இஸ்லாத்தை அல்ல - அவர்களின் புனிதமான மானத்தை.

நாங்கள் அவர்களுக்காக அவர்களின் அறியாமைக்காக வருத்தப்படுகிறோம் ஆனால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு போனால் வேதனை படமாட்டோம்..
நாங்கள் அதிக பிரசங்கிகள் கிடையாது எங்களுக்கு எங்கள் இறைவன் வழங்கிய அறிவு வாழ்வதற்கு போதுமானது. நாங்கள் எங்கள் மார்க்கத்தை நேசிக்கிறோம் ,உங்களையும் நேசிக்கிறோம்..

 எங்கள் மார்க்கம் எங்களுக்கு வழிகாட்டி – நீங்கள் எங்களுக்கு திசைகாட்டி

(அதாவது முஸ்லீம்கள் உலகின் எந்த திசையிலெல்லாம் தவறு செய்கிறார்கள் என்று எங்களுக்கு update செய்து எங்களை இன்னும் வீரியமாக இஸ்லாத்தை பின்பற்றுவதறக்கும்,எங்களின் தவறுகளை திருத்திகொள்வதற்கும் உதவுவதற்காக )

இறுதியாக சொல்கிறோம் உள்ளத்திலிருந்து சொல்கிறோம் இஸ்லாத்தை விமர்சிப்பதை தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள்– உங்கள் விமர்சனங்கள் எங்களை மேலும் மேலும் உற்சாகபடுத்துகிறது..


ஆனால் உங்கள் விமர்சனங்களுக்கு யார் பதிலளிகிறார்களோ இல்லையோ .. முஸ்லீம்கள் நாங்கள் எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருகிறோம் ஆதலால் இஸ்லாத்தை விமர்சிக்கும் முன்பு எந்த விசயத்திற்காக  விமர்சிகிறீர்களோ அதைவிட நீங்கள் சிறந்ததாக நினைக்கும் ஒரு தீர்வை சொல்லி விமர்சியுங்கள். அதாவது இதில் இஸ்லாத்தில் தவறு அதைவிட இது தான்,இந்த சித்தாந்தம் தான் எங்கள் புதிய கலாச்சாரத்தில் சிறந்தது என்பது போன்று.

இல்லையேல் வாய் சும்மா இருக்கு பேசுகிறேன் என்பதுபோல் தான் உங்கள் வாதத்தை எங்களால் பார்க்க முடியும்.

///நாங்கள் எத்தனை குழுக்களாக வேண்டுமானாலும் பிரிந்துகொண்டு அடிச்சிக்குவோம்; காறி துப்பிக் கொள்வோம்; ஆனால் கம்யூனிஸ்கள் ஏதாவது சொன்னா ஒண்ணா கட்டிப் புடிச்சிக்கிட்டு ஒப்பாரி வைப்போம் என்று கூறுகிறாரோ நிஜாம்?///

ஆமா நீங்கள் ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருக்கீங்க பாருங்க(?) அப்படி எங்களால் இருக்க முடியல ...சரி அப்பிடியே வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் நாங்கள் உங்களை அடிக்கவில்லை , உங்கள் மேல் கரி துப்பவில்லை நாங்கள் எங்கள் குடும்பதிற்குள் செய்து கொள்கிறோம். அதைக்கேட்பது உங்களுக்கு அவசியமில்லையே நாங்கள் உங்களிடம் நியாயம் கேட்கவில்லையே... சரிங்க இத்தோடு முடிச்சிக்கிறேன் –

அடுத்த இன்னொருத்தரு ஏதோ கேட்குராறு.. “அட இருங்கப்பா வருசையா வரேன் “...

(பர்தா அணியவில்லை என்று ஆசிட் அடித்தால் அது அவன் செய்த தவறு இதற்கு அவனை தண்டிக்க வேண்டும் இஸ்லாத்தின் கொள்கைபடி)

                           ---------------


(இன்ஷாஅல்லாஹ் கருத்துமோதல்கள் தொடரும்.. 

Sunday, October 2, 2011

உள்ளாட்சித் தேர்தலும் முஸ்லிம் கட்சிகளும்..!


நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எடுத்துள்ள முடிவுகள் வருத்தப்பட வைக்கின்றன. ஏற்கெனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளைப் பிரித்துப்போட்டு, பெண்களுக்காக எனவும் தலித்களுக்காக எனவும் ஒதுக்கி, முன்னாள் இந்நாள் முதல்வர்கள் முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைப்பதில் ஒன்றுபட்டுள்ளனர்.
குரங்கு பங்கு வைத்த ஆப்பத்தில் எஞ்சியிருக்கும் பகுதிகளிலாவது ஒன்றுபட்டுப் பொது வேட்பாளர்களை நிறுத்தினால்கூட முஸ்லிம்கள் அரசியல் பிரதிநித்துவம் பெற்றுப் பதவிக்கு வருவதென்பது சற்றே கடினம் எனும் சூழ்நிலையில், இம்முறை முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட எடுத்துள்ள மோசமான முடிவால், முஸ்லிம்கள் அதிகம் வாழும் உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஏதோ ஒரு சில வார்டுகள்கூட முஸ்லிம்களுக்குக் கிடைக்காமல் போகும் அவல நிலையை நினைத்துக் கவலை கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்து அரசியலுக்கும் கட்சிக்கும் மக்கள் கொடுத்த மரண அடியைத் தமக்குக் கிடைத்த வெற்றியாகக் கொண்டாடி, பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நரவேட்டை மோடியை அழைத்தும் மோடியின் உண்ணா(?)விரதக் கேலிக்கூத்து நாடகத்துக்குத் தம் அமைச்சர்களை அனுப்பிவைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கிலிருந்து தாம் திருந்தவேயில்லை என்று கூறாமல் கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்ட வேண்டுமானால் முஸ்லிம் அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் செய்ய வேண்டுவது என்ன? சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் தங்களைக் கூட்டணியாக இணைத்துக் கொண்ட மமகவையும் தேமுதிமுகவையும் கம்யூனிஸ்ட்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எட்டித் தள்ளிய ஜெயலலிதாவுக்குத் தகுந்த பாடம் புகட்டும் வழி என்ன? என்று யோசித்துச் செயல்பட்டிருக்க வேண்டும்.


அரசியல் களத்தில் நிற்கும் முஸ்லிம் லீக்குகளும் மமகவும் இன்னபிற அமைப்புகளும் அரசியலுக்காகவாவது ஒன்றுபட்டு நின்று, வெல்லும் கூட்டணி காண முயற்சிகள் மேற்கொண்டிருக்க வேண்டும். 


ஆனால் நடப்பதோ வேறு!  ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, புதிய தமிழகம் ஆகியவை தனித் தனியாகவும் கொங்கு வேளாளர் முன்னேற்றக் கழக ஆதரவோடு பாஜகவும் தேமுதிகவோடு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஓர் அணியாகவும் நிற்கும் நிலையில், 


முஸ்லிம் லீக், மமக ஆகியவையும் தனித் தனியாக நிற்கிறார்களாம்! 


ஆனால்  விடுதலைச் சிறுத்தைகளும் விடவில்லை. 


எஞ்சியுள்ள முஸ்லிம் அமைப்புகளான
 1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை, 
2. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, 
3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா,
4. இந்தியன் நேஷனல் லீக், 
5. சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, 
6. தேசிய லீக் கட்சி,
7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த், 
9. ஆல் இந்தியா மில்லி கவுன்சில், 
10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், 
11. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை, 
12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, 
13. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், 
14. இஸ்லாமிய இலக்கியக் கழகம் ஆகியவை விடுதலைச் சிறுத்தைகளோடு கூட்டணி.
     இந்தக் கூட்டணியில் 6 கிருஸ்துவ அமைப்புகளும் இடம்பெறுகின்றன. 


இப்படிச் சிதறிப் போவதோடு, தங்கள் கட்சித் தலைவர்/தலைவி சொல்வதை வேதவாக்குபோல் எடுத்துக்கொண்டு, உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வாக்களிக்கும், வாக்குச் சேகரிக்கும் 'கரை வேட்டி' முஸ்லிம்கள் இன்னமும் உள்ளனர். 

சமுதாயத்தை இப்படிச் சிதறவிடுவது யாருக்கு இலாபத்தைக் கொடுக்கும் என்ற சிறு சிந்தனைகூட முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இல்லாமல்போய் விட்டதே! 



திமுகவுக்குக் கொடுத்த மரண அடியால் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதா, திமுகவினரைச் சகட்டு மேனிக்குக் கைது செய்து சிறையிலடைத்தும் தம் அகங்காரத்தை விட்டுக்கொடுக்காமல் சமச்சீர் கல்வி விஷயத்தில் மாணவர்கள் நலனில் விளையாடி, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என வழக்கு நடத்தி, இறுதியில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து குட்டு வாங்கித் திரும்பியதையும் புதிய தலைமைச் செயலக விஷயத்தில் மக்களின் கோடிகணக்கான வரிப்பணத்தை வீணாக்கி மக்களிடம் வெறுப்புக்குரியவராக மாறியிருப்பதையும் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிமுகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபடாமல் தனித்தனியாகப் பிரிந்து நின்றால் அது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் பலனை ஏற்படுத்தும் என்பது இவர்களுக்குப் புரியவில்லையா? 


அரசியலில் கத்துக்குட்டியான, சினிமா கேப்டன் விஜயகாந்துக்கு இருக்கும் அரசியல் தொலைநோக்கு எண்ணம் இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல் போனது ஏனோ? 


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு இருக்கும் பரந்த எண்ணம்கூட இந்த முஸ்லிம் கட்சிகளுக்கு இல்லாமல்போனது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது! 


14 முஸ்லிம் அமைப்புகள் + 6 கிறிஸ்துவ அமைப்புகளை ஒன்றுகூட்டி அவர்களுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறார் திருமா. இந்த அணியில் புதிய எஸ் டி பி ஐ கட்சியும் இணைந்துள்ளது. 


இப்போதைய அரசியல் நிலையில், இந்த அணிக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ, சிறுபான்மையினரை அரவணைப்பதில் திருமாவின் அரசியல், ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. 


அதிமுக அணியிலிருந்து வெளியேறி/வெளியேற்றப்பட்டு, தனித்து நிற்கும் மமகவின் அணுகுமுறையால், அதன் பலன் நிச்சயம் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் கிடைக்கும் என்பது வெளிப்படை. இவ்வாறு எதிர்பார்த்தே, தம் மற்ற கூட்டணிக் கட்சிகளைப் போலவே மமகவையும் ஜெயலலிதா கழட்டி விட்டிருக்கக் கூடும். 


அரசியல் கட்சிகளாகத் தங்களை இனங் காட்டிக் கொள்ளும் மமகவும் முஸ்லிம் லீக்கும் திருமாவுடன் இணையட்டும். இல்லையேல் இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்கட்டும். 


அதைவிடுத்து, முஸ்லிம்கள் பொது வேட்பாளராக நின்று வெற்றிபெற வாய்ப்புள்ள பகுதிகளில் தத்தம் வேட்பாளர்களையும் போட்டியாளர்களாகக் களமிறக்கி, அதிமுக, பாஜக, திமுக, தேமுதிக என வேறு யாராவது வெற்றிபெற வழிவகுத்துத் துணை நின்றால் ... அதனை இச்சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது!


ஒற்றுமை வேண்டும் - ஒற்றுமையை சீர்குலைகிறார்கள் என்று வாய்கிழிய பேசும் த.மு.மு.க- ம.ம.க மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகளின் தற்போதைய நிலைமை என்ன ? 


மற்றவர்களுக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயமா ?...


இந்த உள்ளாட்சி தேர்தலில் அணைத்து இஸ்லாமிய கட்சிகளையும் ஓரணியில் இணைக்க பிரகாசமான வாய்ப்பு இருந்தும் - சொதப்புகிறீர்கலே..?


தயவு செய்து இனி போலியாக ஒற்றுமை கோசம் போடாதீர்கள்.. 


ஜசாகல்லாஹ் : http://www.satyamargam.com/
Related Posts Plugin for WordPress, Blogger...