(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, March 25, 2011

வருகிற சட்டமன்ற தேர்தலில் நம் தொகுதியில் யாருக்கு ஒட்டு போடலாம்...?

 நாகை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்

 1.தி.மு.க+இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்-எம்.ஷேக் தாவூது   மரைக்காயர் (சூரியன் சின்னம்)
 2. அ.தி .மு .க -கே.ஏ.ஜெயபால்(இரட்டைஇலை சின்னம் )

 3. பி. ஜெ .பி - முருகானந்தம்(தாமரை சின்னம் )

இதுல தாமரை சின்னத்துக்கும் நமக்கும் ஒத்துவராது முதலில் அத விட்டுத்தள்ளுங்க..மீதி இருக்குறது சூரியனும் - இரட்டை இலையும்.. ஒட்டு போடுற ஐடியா நமக்கு இருந்தா.. இதுல ஒன்ன தேர்ந்தெடுக்கணும். இல்லேன்னா ஒட்டு போடக்கூடாது.

இதுல ரெண்டு விதமா நாம யோசிச்சு முடிவெடுக்கலாம்...

1.தி.மு.க -அ.தி.மு.க எது பெஸ்ட்னு பார்த்து - வேட்பாளரை கண்டுகொள்ளாமல் முடிவெடுக்கலாம்.

2.எம்.ஷேக் தாவூது மரைகாயரா ? - கே.ஏ.ஜெயபாலா?  என்று கட்சியை கண்டுகொள்ளாமல் வேட்பாளரை பார்த்து முடிவெடுக்கலாம்.

இப்ப நம்ம தொகுதியில் எதை அளவுகோலாக வைப்பது நமக்கு நல்லதுன்னு பாக்கணும்...

கல்லானாலும் -கலைஞர் & புல்லானாலும் - புரட்சித்தலைவினு.
கோசம் போடுபவர்கள் யாரும்  சமுதாயத்தை பற்றி யோசிப்பவர்கள் கிடையாது. அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன ஆதாயம் கிடைக்கும் என்று தான் பார்ப்பார்கள் ஆதலால் எது நமக்கும் ,நம் ஊருக்கும் நன்மை பயக்குமோ அதை யோசிச்சு முடிவெடுப்பது தான் நமக்கு சிறந்தது.

யாரு ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் எப்போதும் அரசியல் வாதிகள் தான் எப்போதும் ஒரே மாதிரியாக தான் இருப்பார்கள். அதிமுகவும்,திமுகவும் ஆட்சி செய்து இருக்கின்றன.இரண்டு  கேட்டவர்களில் யாரு குறைவாக கேட்டது செய்து இருகிறார்கள் என்று தான் யோசிக்கவேண்டி இருக்கிறது. யாரும் எதிலும் சளைத்தவர்கள் இல்லை..

நம் சமுகத்திற்கு எதில் நன்மையை பெறமுடியுமோ அதை அவ்வப்போது  சமார்த்தியமாக நடந்து பெற்று கொள்ளவேண்டும்.அந்த வகையில் யாரு  பதவிக்கு வந்தா நம்ம ஊருக்கு நல்லதுன்னு பாக்கணும்... அதிமுக ஜெயபால் தற்போது நம்ம ஊருக்கு வந்து கையை பிடித்து ஓட்டு கேட்கிறார் நாளை ஜெயபால் வெற்றிபெற்றால் நம்ம ஊரு பக்கம் வருவாரா ?? வாய்ப்பே இல்ல..


இப்ப மாரிமுத்துனு நாகை தொகுதிக்கு ஒரு MLA  இருக்காரு எத்துன பேருக்கு தெரியும் ?   இதே கதித்தான் ஜெயபாலு வந்தாலும் நமக்கு..

நமக்கெல்லாம் ஒரு வெட்டிகொவ்ருவம் ஒன்னு இருக்கு தெரியுமா ?  நமக்கு ஏதாவது ஒரு காரியம் ஆவனும்ன எவன் முன்னாடி வேணாலும் கைகட்டி நிப்போம் ஆனா அவன் நம்மாலா இருந்தா நமக்கு கொவ்ருவம் பாதிக்கும்...உண்மையில் இது கொவ்ருவமில்ல கர்வம் .. 

நாமலும் தேர்தலில் நிக்கல , நமக்காக நிக்கிரவங்களையும் நாம ஆதரிக்க மாட்டோம் என்றால் அர்த்தமற்றது. அது என்னங்க நம்மாளு ஒருத்தன் தேர்தலில் நின்னா அவர் அப்படி ,இப்படின்னு பேசியே ஒண்ணுமில்லாம பண்ணிடுறோம்...  வேற எவனோ ஊரு பேரு தெரியாதவனுக்கு வாய போத்திகிட்டு ஒட்டு போடுரோம்.இப்டி இருந்தா நாம முன்னேற முடியாது ,நம்மல்ல வெச்சு மத்தவங்க முன்னேறிடுவாங்க என்பது நமக்கு தெரியவில்லை... 


நாளைக்கு நமக்கு ஒரு பிரச்சனைனா ஜெயபாலுவ பார்க்க ஓடனும் ... ஆனா சகோ. ஷேக் தாவூது MLA என்றால் ஊர்ல எப்டியும் புடிச்சிடலாம் புதுமனைத்தெருவிலோ, தெற்கு தெருவிலோ... சகோ. ஷேக் தாவூது வெற்றி பெற்றால் குறைந்தபட்ச நன்மையாவது நாம் பெற்றுக்கொள்ளமுடியும் ஆனால் மற்றவர்கள் வந்தால் ?? 

சகோ.ஷேக் தாவூது வை ஒரு சமூக ஊழியனாக பார்க்க முடியவில்லை என்றால் ஒரு இஸ்லாமிய  சகோதரனாக பார்த்து வாக்களிக்கலாம்..
அதுவும் முடியவில்லையேன்றால் நம் ஊருகாரர் என்பதற்காகவாவது வாக்களிக்கலாம்.மார்க்கம் மற்றும் சமுதாயபற்றுள்ள எவரும் ஜெயபாலுக்கு ஓட்டு போட மாட்டார்கள். சகோ.ஷேக் தாவூது வை விட ஜெயபால் மார்க்கம் மற்றும் சமுதாய பற்றுள்ள நபரா.. ?


இவ்வளது ஏங்க இப்ப இருக்குற MLA வ யாருக்காவது தெரியுமாங்க ? குறிந்தபட்சம் அவன் எங்க இருக்கானு தெரியுமா ? தெரியாது... ஜெயபாலு வந்தாலும் இதே கதித்தான். ஒரு மாசத்துக்கு ஜெயபாலு பேரு நியாபகம் இருக்கும் அப்பறம் மறந்துட்டு நம்ம வேலையப்பாபோம்... அதுக்கு நம்ம ஊரு காரருக்கு வக்களிக்கலாமே... அவர் ஊருக்கு நல்லது செய்யபோவதில்லை என்றே வைத்துக்கொள்வோம் ... அவர் வீட்டுக்கு முன்னாடி நின்று போராட்டம் நடத்தவாவது நமக்கு முடியுமே ....  இதை விட எதார்த்தமாக எடுத்து சொல்லவார்த்தை  தெரியவில்லை.

இல்லங்க என்ன இருந்தாலும்  ஷேக் தாவூதுக்கு ஓட்டு போடமாட்டோம் என்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் சகோ.ஷேக் தாவூதுக்கு ஓட்டு போடவில்லை என்றால் குறைந்தபட்சம் உங்கள் ஓட்டை வேறு யாருக்கும் போடாமல் இருங்கள் அது கூட ஒரு வகையில் நல்லது தான்... 

சகோ.ஷேக் தாவூது வெற்றிபெற முடியாது என்று சிலர் சொல்லிக்கொண்டு இருகிறார்கள்.. இருக்கலாம் அல்லாஹ் அறிவான் அவர் வெற்றியும் பெறலாம் - தொற்றும்போகலாம்.. வெற்றி பெற்றால் சகோ.ஷேக் தாவூது MLA  உங்க ஊர்ல இருப்பார் .. தோல்வியடைந்தால் கே.ஏ.ஜெயபால் MLA  எங்க இருப்பார்னு விசாரிச்சு தான் பாக்கணும். 


வெற்றி -தோல்வி என்பதை நிர்ணயிக்கும் ஆய்தம் பல தொகுதியில் முஸ்லிம்களிடம் இருக்கிறது ஆனாலும் அதை நாலா புறமும் பிரித்து ஒன்னுமில்லாமல் ஆக்கும் முயற்சியில் நம் இஸ்லாமிய இயக்கங்கள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன. அந்த வாக்குகளை ஒன்று திரட்டினால் நாளை நம் சமுகம் எழுச்சிபெறும் இன்ஷால்லாஹ்.. 

நாங்க அந்த கூட்டணிக்கு ஆதரவு ,இந்த கூட்டணிக்கு ஆதரவு என்பதையெல்லாம் வேறு தொகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.முஸ்லிம்கள் நிற்கும் தொகுதியில் இதை அளவுகோலாக வைத்தால் நம்  சமூகத்தின் குரலின் வலிமை குன்றிவிடும் என்பதே எதார்த்த உண்மை. 


1) ஆயிரம் விளக்கு - அசன் முகமது ஜின்(திமுக)
2) தஞ்சாவூர் - உபயதுல்லா(திமுக)
3) மதுரை மத்தி - கவுஸ் பாஷா(திமுக)
4) பாளையங்கோட்டை - மைதீன்கான்(திமுக)
5) ஆவடி - அப்துல் ரகீம்(அதிமுக)
6) ராணிப்பேட்டை - அ.முகமத்(அதிமுக)
7) திருச்சி மேற்கு - என்.மரியம்பிச்சை(அதிமுக)
8) துறைமுகம் - அல்தாப் ஹுசைன் (திமுக+முஸ்லீம் லீக்)
9) வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்(திமுக+முஸ்லீம் லீக்)
10) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது(திமுக+முஸ்லீம் லீக்)
11) கடையநல்லுர் நெல்லை முபாரக்.(எஸ்டிபிஇ)
12) தொண்டமுத்தூர்-உமர்.(எஸ்டிபிஇ)
13) பூம்புகார் நாகை மாவட்டம் -முஹம்மது தாரிக்.(எஸ்டிபிஇ)
14) பாண்டிச்சேரியில் நிரவி திருப்பட்டினம்-பத்ருதீன்.(எஸ்டிபிஇ)
15)  ஆம்பூர்- ஏ.அஸ்லம் பாஷா (தமுமுக+மமக)
16)  சேப்பாக்கம் -எம்.தமிமுன் அன்சாரி (தமுமுக+மமக)
17)  இராமநாதபுரம் -எம்.ஹெட்ச்.ஜவாஹிருல்லா (தமுமுக+மமக)
18) உளுர்பேட்டை - முகம்மது யூசுப் (விடுதலை சிற்த்தை,திருமாவளவன்)
19) Mugibur Rahman- Thiruvadanai-  தெ மு தி க
20) பாளையம்கோட்டை - ஷாகுல் ஹமீது உஸ்மானி (எஸ் டி பி ஐ)
21) திருப்பூர் - அமானுலாஹ் (எஸ் டி பி ஐ)


முஸ்லீம் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமின்றி , மற்ற கட்சிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதிகளிலும், நம் முஸ்லீம் மக்கள், கட்சி வேறுபாடு இன்றி,வாக்களித்து நமது பலத்தை சட்ட சபையில் அதிகப்படுத்த பாடு பட வேண்டும்

நாகை தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.



Thursday, March 24, 2011

மருத்துவரின் இயலாமையும்,மருத்துவமனையின் வசதிகுறைவும்,கருவில் இறந்த இரண்டு குழந்தையும்

(நாகூரை சார்ந்த சகோதரர் ராஜிக் பாரித் என்ற சகோதரர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நமக்கு அனுப்பி அதை மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார் அதை ஏற்று இதை வெளியிடுகிறோம்)

என்னை அறிமுகம் செய்துகொள்ள விரும்புகிறேன் எனது பெயர் ராஜிக் பாரித் நான் நாகூரை சார்ந்தவன். நான் எனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் இனி யாருக்கும் நிகழக்கூடாது என்பதால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 மருத்துவமனையின் வசதி குறைவாலும்,மருத்துவரின் தவறான நடத்தையினாலும், தவறான அணுகுமுறையினாலும்  கடந்த 2005 மற்றும் 2010ஆம் ஆண்டு முறையே என்னுடைய முதல் குழந்தையையும் , மூன்றாம் குழந்தையையும் இழந்து தவிக்கிறேன்.

என்னுடைய மனைவி 2005 ஆம் ஆண்டு கருத்தரித்து இருந்தார் நாங்கள் நாகை Dr.Greta Arthur டாக்டரிடம் ஆரம்பத்திலிருந்து மருத்துவ ஆலோசனை பெற்றுவந்தோம். ஏழாவது மாதத்தில் திடீர் என்று இரத்தப்போக்கு ஏற்பட்டது உடனடியாக நாங்கள் Arthur மருத்துவமனையில் அட்மிட் செய்தோம். அப்போது அந்த மருத்துவமனையில் தேவையான SCAN செய்யும் வசதியில்லை ஆதலால் டாக்டரால் ரத்தபோக்கிர்காண காரணத்தை கண்டறியமுடியவில்லை. மறுநாள் ADVANCED SCANNING CENTERரில் SCAN செய்து பார்த்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள்(இன்னாலில்லாஹ்..) மருத்துவமனையின் வசதிகுறைவால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை..

பிறகு 5 வருடம் கழித்து என் மனைவி மூன்றாவது குழந்தையை கருத்தரித்தார் முதல் ஏழு மாதங்கள் துபையில் வசித்தார் அங்கு நல்லமுறையில் மருத்தவ உதவியை பெற்றுவந்தார். ஏழாவது மாத இறுதியில் இந்தியாவிற்கு வந்து Dr.Greta Arthur டாக்டரிடம் TREATMENT தொடர்ந்தார். நாங்கள் மீண்டும் அதே டாக்டரை தொடர்பு கொண்டதற்கு காரணம் அவர் என் மனைவின் MEDICAL HISTORYயை நன்கு தெரிந்தவர் என்பதனால்.2nd of Sep.2010 என் மனைவி மருத்துவ ஆவணங்களை Dr.Greta Arthurரிடம் கொடுத்து விட்டார்.
பிறகு ஒருவாரம் கழித்து என் மனைவிக்கு கடுமையான காய்ச்சலும் , சளியும் ஏற்பட்டது உடனே 6th of Sep 2010 மருத்துவரை சந்தித்தார்.
டாக்டர் என் மனைவிக்கு மருத்துவ ஆலோசனைகளை கூறி  மீண்டும்  29th Sep சந்திக்க சொன்னார். blood and urine test எடுக்க 27th of Sep 2010 வருமாறு கூறினார்.  அது போல் அன்று blood and urine test எடுத்தோம் ஆனால் டாக்டர் மருத்துவமனையில் இல்லை. மருத்துவமனையில் உள்ள எந்த ஊழியர்களும் என் மனைவிக்கு இரத்த அழுத்தத்தை சோதிக்கவில்லை  மேலும் அவர்கள் யாருக்கும் முறையான முன்னுபவமில்லை என்றே எண்ணுகிறேன்.

அதே நாள் என் மனைவி உயர் இரத்தஅழுத்தம் மற்றும்  கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இரவு சரியாக  4.15 AM மணிக்கு மருத்துவமனையில் சேர்த்தோம்.Doctor என் மனைவிக்கு IV fluid மற்றும்  two units ரத்தம் ஏற்றினார். மேலும் இரண்டு மணி நேரத்தில் சுக பிரவசம் ஏற்படலாம் என்றும் கூறினார். பிறகு மணி 9.10 AM க்கு ultra scan னும் எடுத்தார்கள்.

அந்த நேரம் குழந்தையின் இதயத்துடிப்பு நன்றாக இருந்தது(heart rate is 149/minute).
மீண்டும் மணி 10.00AMக்கு என் மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்ப்பட்டது பிறகு டாக்டர் குழந்தை இறந்துவிட்டதாகவும் தன்னால் குழந்தையை காப்பற்ற முடியவில்லை என்றும்  கூறினார். டாக்டர் என் குழந்தையை காப்பாற்ற தேவையான நடவடிக்கையை முறையாக எடுக்கவில்லை என்றே எண்ணுகிறேன். ஒரு மணி நேரத்திற்குள்ளாக என் மனைவி இறந்தநிலையில் குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை வெளிவந்ததற்க்கு பிறகும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. doctor did not remove the complete baby cord (Placenta) from her uterus.

 என்னை பொருத்தவரை என்னுடைய குழந்தையை நான் இழந்ததற்கு காரணம் அவசரகால மருத்துவ உதவியை  செய்ய மருத்துவருக்கு  போதிய மருத்துவ அறிவில்லாமை மற்றும் மருத்துவமனை போதிய  வசதியில்லாமை  என்றே எண்ணுகிறேன்.

மேலும் என் மனைவியின் உடல்நிலை பற்றி எனக்கு முழுமையான ஆவணத்தை(reports) அவர் தரவில்லை. நான் உடனடியாக துபையில் இருந்து ஊருக்குவந்து டாக்டரை சந்தித்தேன். என்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தேன் என்னுடைய சந்தேகத்தை கேட்டேன். இரண்டு பிள்ளையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் எனக்கு டாக்டர் சரியான பதிலை தெரிவிக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் இரண்டு குழந்தையும் இறந்ததற்கு வேறு வேறு காரணம் இதற்கும் அதற்கு சம்மந்தமில்லை என்பதே.

Dr.Greata Arthur  எந்தவித அனுதாபத்தையும் எங்களிடம் காண்பிக்கவில்லை பிறகு சிறிய கடிதத்தை எழுதி Dr.Ramesh Babu MD. ரிடம் அனுப்பிவைத்தார் அவர் என் மனைவியின் உடல்நிலையை பார்த்துவிட்டு தஞ்சாவூரில் உள்ள நரம்பியல் நிபுணர் Dr.Vanjilingam மிடம் அனுப்பிவைத்தார் 02.10.10.

பிறகு சென்னை செல்லவேண்டி இருந்ததால் மனைவியை எப்படி அழைத்துசெல்வது என்பதுபற்றி எனக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டது Dr.Greata Arthur ரை சந்திக்க முயற்சித்தேன். பலமணி நேரம் காத்திருந்தோம் ஆனால் அவர் வேண்டும் என்றே சந்திக்காமல் புறக்கணித்தார். அவருக்கு சுகபிரசவ போன்ற சாதாரண மருத்துவ விஷயங்கள் தான் தெரிந்திருக்கிறது மற்றவை பற்றிய போதிய அறிவு இல்லையென்பதால் சரியாக அவர் எங்களிடம் ஒத்துழைக்கவில்லை.

பிறகு சென்னையில் என் மனைவிக்கு உடல் சம்மதமாக முழுமையான மருத்துவ ஆய்வை மேற்கொண்டதில் என் மனைவிக்கு Falciperum Malaria தாக்கி இருப்பது தெரியவந்தது. (Refer attached Chennai clinic Report).   
நாகப்பட்டினம் டாக்டர் என் மனைவிக்கு இந்த testகளை எடுக்கவில்லை என்பதும் இதற்கான மருந்துகளும் அங்கு இல்லை என்பது தெரிகிறது.(Postpartum period and Antipartum Period).

 மேலும் இதுபோன்று பிரசவ நேரத்தில் ஏற்படுவதற்கு என்ன காரணம் ? எதனால் ஏற்படுகிறது .. இதை தடுப்பதற்கு என்ன வழி என்று ஆய்வு
 செய்து பல டாக்டர்களிடம் கேட்டு தெரிந்ததில்.Preeclampsia என்ற நோய் தாக்கி இருப்பது தெரியவந்தது.
(One of common abnormal pregnancy had happened to my wife. It is called Preeclampsia) 
அதை பற்றிய முழுவிபரம் இங்க கொடுக்கப்பட்டுள்ளது முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

PLS CLICK FOR DOWNLOAD









If the infant is died there was “STILL BIRTH FORM” Is available we have to filled up and submitted to the government. Also they would ask detailed report to the doctor. Don’t accept this bloody postcard report. As I experienced this incident this is small initiative to create public awareness.
After countless effort I have tried to contact W.H.O. Stillbirth estimation director Dr.Joy Lawn and briefed about my two incidents. She sent to Register General in India Delhi and she replied.
"Dr.Joy Lawn (Director of Global Evidence and Policy) from World Health Organization. She has conducted Global estimation on Stillbirth at London last 14th April.
If any pregnancy women after delivery the baby dies that baby only counting most of the place, But during the labor or before full term if the baby dies not counted. Now World Health Organization started for counting on stillbirth"

 
ஏதேனும் சந்தேகம் இருந்தால் எனது மின்னஜ்ஜலுக்கு அனுப்புங்கள்
J.RAJIK FAREED
Dubai
U.A.E.
Any Feedback pls contact me : My personal email id : rajik_fareed@yahoo.co.in.
Related Posts Plugin for WordPress, Blogger...