(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, December 31, 2009

அஹமது தீதாத் - வாழ்க்கை குறிப்பு


இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்

பிறப்பு -ஜுலை 1, 1918

பிறந்த ஊர்- குஜராத், (இந்தியா)

1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள்


இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார். இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்). இவர் தனது 16 வது வயதில் வேலை செய்ய துவங்கினார்.


1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால் “இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார் இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!


1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை

சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள ”அவோலன்-சினிமா” என்ற ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா? மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே! இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சில காலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15 பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில் 1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் (அல்ஹம்துலில்லாஹ்). இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பது, ஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவது சகோதரத்துவத்தை வளர்த்தார்.



இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் – 1956-1986

இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும், இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டு இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர் தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தை பிளவுபடுத்தவில்லை) இந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்). இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பது, புதிதாக இஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!


1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் ”அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.


இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும் மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார், இஸ்லாமிய பிட்நோட்டீஸ்கள், பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்! இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமிய வகுப்புகளையும் நடத்தினார்! இதன்மூலம் இவருக்கு இஸ்லாம், கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!




இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995


1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!

1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ”ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் 2 இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.


1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு ”கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!


இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10 ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!


இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)

சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)
ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985 முதல் 1988 வரை)

பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்-ஐ சந்தித்தார்), ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும்
மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும் கவுரவித்தார்
சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)

US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டு, ராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் அரிஜோனா மாகாணம், US)

ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் 3 இஸ்லாமிய சொற்பொழிவுகள்)
மறுபடியும் US அமெரிக்க, கனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)

ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம், இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)

1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட வாழ்க்கை

மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர் ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்! இவருக்கு ஏற்பட்ட இந்த நிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள ”கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனை”க்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரது இந்த நிலைமை 9 ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி 9 ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்). இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது! (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.za)


சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காக பாடுபட்டுச்சென்றார்! இவரது பாணியில் நாமும் நமது வாழ்க்கைப்பயணத்தை துவக்குவோம்! பிரிந்துகிடக்கும் நம் ஜமாஆத் மக்களிடம் இணைப்பை ஏற்படுத்துவோம் மரணம் வரை முஸ்லிம் என்று சொல்வோம்!


ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:—

சதக்கத்துல் ஜாரியா,பலன் தரும் கல்வி,பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான)பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள்,அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள்,பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.


இரண்டாவதாக தான் வாழ்ந்த காலத்தில் மக்களுக்கு பலனளித்து கொண்டிருந்த அவரது மார்க்க கல்வியும் மனிதர்களுக்கு பலனளிக்கும் மற்ற கல்வியும், இறந்தவர் தன் கல்வி அறிவால் போதித்தவைகள் பலனாக நன்மைகள் செய்தவருக்குறிய பலன்கள் குறைவில்லாமல் கிடைப்பதோடு அந்நன்மைகளை செய்ய ஊக்குவித்த கல்வியாளருக்கும் அவரது மரணத்திற்குப் பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

மூன்றாவதாக மார்க்க நெறிகளை பேணி ஒழுக்கமுடன் வளர்க்கப்பட்ட மக்கள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும் மரணமடைந்த பெற்றோர்களுக்கு நன்மைகள் சேர்ப்பவையாகும். இத்தகைய சாலிஹான பிள்ளைகளின் இறைவணக்கம், அவர்களின் பிள்ளைகள் இறை உணர்வோடு நிறைவேற்றும் அனைத்து செயல்களும் பெற்றோர்களுக்கு அவர்களின் மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்ப்பவையாகும்.

Wednesday, December 30, 2009

செய்யது பள்ளி குளம் - செய்ய வேண்டியது என்ன ??

ஆண்டி குளம் என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது செய்யது பள்ளி குளம் என்று அழைக்கபடுகிறது இந்த குளம்.


பலருக்கு இன்னும் பழைய ஆண்டிக்குளம் என்ற பெயர்தான் வாயில் வருகிறது...

செய்யது பள்ளி குளம் என்று அழைப்பது தான் சரி, இல்லையென்றால் ஆண்டிகுளம்,கோயில்,சாமி என்று “அயோத்தி-பாபரி பிரச்சனை” கதை ஆகிவிடும் என்கிறார்கள் சிலர் புருவம் உயர்த்தி... (பயபுள்ள செஞ்சாலும் செய்வானுங்க)

இந்த பயத்திலேயே நாம் செய்யதுபள்ளி குளத்தின் பூர்விகத்தை அதாவது குளத்தின் வரலாற்றை தேடி பிடிப்பதை தவிர்த்து விட்டோம்.. வரலாறு இப்போது பயனளிக்க போவதில்லை என்று முடித்து கொண்டோம் .



இந்த குளத்தை பொறுத்தவரை முழுவதும் செய்யதுபள்ளியின் கட்டுப்பாட்டில் தான் குளம் இருப்பதாக பலர் சொல்கிறார்கள்.பள்ளி அருகில் உள்ள குளத்தின் சுவரில் விளம்பரம் வரைய பெரும் கட்டணம் பள்ளிக்கு தான் செல்கிறது என்பதில் இருந்து இது உறுதி ஆகிறது.

இந்த குளம் ஒரு காலத்தில் குளிப்பதற்கு பயன்பட்டு தான் வந்துள்ளது.ஆனால் என்னவோ தெரியவில்லை வர வர சுத்தமில்லாமல் போய்விட ( குப்பை ,கல் , மண் இன்னும் கொட்டப்பட்டு வருகிறது )கேட்பார் அற்று கிடக்கிறது இந்த குளம்..

இருந்துட்டு போகுது உங்களுக்கு என்னவாம் என்கிறீர்களா ?
"இருக்கிறது மேட்டர் முழுவதும் படிங்க புரியும்"

அதற்கு முன்னால்.,வீணாக கிடக்கும் இந்த குளத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வி பரவலாக சமூக ஆர்வலர்களிடம் இருக்கிறது.

செய்யது பள்ளி குளத்தை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில்கள் இதோ :

1 .குளத்தை முதலில் தூர்வாரவேண்டும் , தூய்மை படுத்தி , சுவர் உயர்த்தி குளிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

2 . குளத்தை மூட வேண்டும் இடம் வீணாக கிடக்கிறது. எதாவது பயன்பாட்டுக்கு கட்டிடம் கட்டலாம் (குறிப்பாக : திருமண மண்டபம் )

3 .குளத்தை தூர்வாரி சுத்தபடுத்தி மீன் வலக்கலாம் குறிகிய காலத்திலேயே வருமானம் கிடைக்கும்,தொடர்து நன்றாக நிர்வாகம் செய்து வந்தால்,செய்யது பள்ளிக்கு நிரந்தர வருமானம் நிச்சயம் .

4 .இதை மூடக்கூடாது ஏனென்றால் இந்த குளம் நமதூருக்கு சிறந்த மழை நீர் சேகரிப்பு களம். மூடினால் நிலத்தில் நீர் சோராமல் கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடால் ஊர்வாசிகள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் , இதை நன்கு தூர்வாரி , இதை மக்கள் தர்கா குளத்தை போல் பயன்படுத்தலாம்.

5 . எதுக்கு ஒன்னும் தேவ இல்லை சும்மா இருக்கட்டும் .. எதாவது செய்ய போறோம் என்ற பெயரில் வீணா போய்டும்

என்று பல ஆலோசனைகள் தருகிறார்கள். இவை வெறும் வார்த்தைகளாகவே இருக்கிறது.எந்த மாற்றமும் ஏற்படவில்லை இதுவரை.

சரி அது இருக்கட்டும் திடீர் என இப்போது செய்யது பள்ளி குளத்தில் என்ன பிரச்சனை என்கிறீர்களா ?
இப்போது இன்னும் பிரச்சனை ஆகவில்லை, இனி பிரச்சனை வந்துவிட கூடாது என்பதே நமது விருப்பம்.

பல வருடங்களுக்கு முன்பு பஸ் ஒன்று விபத்துக்குளாகி குளத்தில் விழுந்து பின்பு அது மிகுந்த சிரமத்திற்கு பிறகு எடுக்கபட்டது நமக்கு நினைவிருக்கலாம் .


அப்போது இடிந்த சுவர்கள் ஒரு முறை பள்ளி நிர்வாகிகளால் சரிசெய்யப்பட்டன. அதன் பிறகு குளத்திற்கு என்று யாரும் ஒன்றும் செய்ததில்லை என்றே தெரிகிறது. குளத்தை ஒட்டிய சாலைகள் தொடர்ந்து சில வருடங்களுக்கு ஒரு முறை என சீர்செய்ய படுவதால் சாலை மட்டம் உயர்ந்துவிட்டது – அதலால் குளத்தின் சுவர் மட்டம் குறைந்துவிட்டது.குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் செய்யதுபள்ளி குளம் வட்டாரமான கார்கள் நிறுத்தும் பகுதிக்கு எதிர்பகுதியில் மிக குறைவாக ஒரு அடிக்கு தான் சுவர் இருக்கிறது,

இது மிக ஆபத்தான நிலை ஆனால் பலர் இதை கண்டுகொண்டதாக தெரியவில்லை. குளத்தை சார்ந்த தெருவில் உள்ள குழந்தைகள் இந்த இடங்களில் தான் தான் விளையாடி கொண்டு இருகிறார்கள்.. குளம் தற்போது உள்ள நிலையில் குளம் என்று சொல்ல முடியாத நிலையில் செடிகளால் மூடியுள்ளது. வழக்கம் போல குளத்தில் கல் எரிந்து பார்த்தோம் தண்ணீர் சத்தம் கூட இல்லை அந்த அளவிற்கு அடர்த்தியான செடிகள் வளர்ந்து உள்ளது.


தவற்தளாக குழந்தைகளோ ,யாரேனும் விழுந்து விட்டால் ( அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்) உயிருக்கே ஆபத்தாக முடியலாம். ஆகவே என்ன பன்றிங்களோ இல்லையோ, குளத்தின் சுவரை முதலில் உயர்த்தி விடுங்கள் சம்பந்த பட்ட மக்களா...

நமக்கு என்ன ,யாருக்கோ என்று இல்லாமால் இதை முஹல்லாவாசிகள் செய்யவேண்டும்.. செய்வதற்கு பணவுதவி தேவைபட்டால் வெள்ளிகிழமைகளில் பள்ளியில் ஊர் மக்களிடம் பணம் திரட்டலாமே
செய்வார்களா….???????????

>>உங்கள் விமர்ஷனங்களை எதிர் பார்க்கிறோம்<<

(புகைப்படம் அனுப்பி தந்த சகோதரருக்கு நன்றி )

NAGOREFLASH

Sunday, December 27, 2009

குஜராத்: கொடூரத்தின் பதிவாக ஒரு குறும்படம் ‘திற' சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்ற திரையிடலும் திறனாய்வும்

குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் உலகையே உறைய வைத்தன. இந்துத்துவத்தின் சோதனைச் சாலை என வர்ணிக்கப்பட்ட குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திர மோடியின் ஆசிகளோடும், வழிகாட்டுதல் மற்றும் அரசு எந்திர உதவிகள் துணையுடனும் சங்பரிவார பயங்கரவாதிகள் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெண்களும், குழந்தைகளும் ஏராளம் அடங்குவர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சூறையாடப்பட்டன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொந்த ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டனர்.




மத்தியிலும், மாநிலத்திலும் பாஜகவின் ஆட்சி நடந்தால் இத்தகைய இனப்படுகொலைகள் அரசு உதவியுடன் அரங்கேறும் என்று குஜராத்தில் காட்டப்பட்டது.

இதையெல்லாம் முன்னின்று நடத்திய கொலை பாதகன் மோடிக்கு மறுபடியும் முதலமைச்சர் பதவி, தண்டனையாக(?) வழங்கப்பட்டது. (முஸ்லிம்களை அகதி முகாம்களில் அடைத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக.

குஜராத் இனப்படுகொலைகளின் போது முஸ்லிம் பெண்களின் மீது சங்பரிவார ஆண் மிருகங்கள் நடத்திய பாலியல் கொடுமைகள் எழுத்தில் வடிக்க இயலாதவை. இந்தக் கொடியவர்களுக்கு நீதிமன்றங்களில் கண்டனம்தான் தெரிவிக்க முடிந்ததே தவிர, நடந்த கொலைகளுக்கு உரிய தண்டனைகளை வழங்க முடியவில்லை.

மறதியால் சபிக்கப்பட்ட மக்களை திசைதிருப்ப எத்தனையோ வேடிக்கைகள் இங்கே அரங்கேறும். மதவெறியின் கொடூரங்களை அதனால் நடத்தப்பட்டக் கொடுமைகளை, அதை வழிநடத்திய தலைமைகளை, சட்டக் காப்பாளர்களின் கயமைகளை, மக்கள் மறந்துவிடாமலும், மனங்கள் மரத்துவிடாமலும் யாராலும் தடுக்க முடியும்.

அதைச் செய்யவல்ல ஒரே ஆயுதம் கலை ஊடகம்தான். குஜராத்தின் கொடுமைகளை சுப்ரதீப் சக்ரவர்த்தியின் கோத்ரா தக், ரமேஷ் டாம்பிளின் ஆக்ரோஷ் ஆகிய குறும்படங்களின் வாயிலாக வெளிக்கொணரப்பட்டன.

ஆனால் தமிழில் குஜராத்தின் கொடுமைகளை அதியற்புதமாய்ப் பதிவு செய்துள்ளார் இளம் இயக்குநர், பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார்.

திற' (Open) என்ற அவரது குறும்படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு 17.12.09 அன்று சென்னை ரஷிய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவரான பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியார், மக்கள் மனசாட்சியை உலுக்கும் வகையில் இந்தக் குறும்படத்தை எடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் அயோக்கியத்தனங்களை, அராஜகங்களை இப்படித் தோலுரித்துக் காட்டிய படம், நாமறிந்த வரை தமிழில் இதுபோல வேறில்லை எனலாம்.

படம் 12 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அது ஏற்படுத்தும் தாக்கமோ மணிக்கணக்கில், ஏன் நாள்கணக்கில் நீள்கிறது.

‘திற’ குறும்படம், ஒட்டுமொத்த தேசத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கிறது என்றால் மிகையில்லை.

குஜராத் கலவரத்தில், தாயைப் பறிகொடுத்து, தந்தையிடமிருந்தும் பிரிக்கப்பட்ட 18 வயது முஸ்லிம் பெண் சகீனா, சங்பரிவாரக் கொடியவர்களால் சிதைக்கப்படும் கொடுமையைப் படம் பதிவு செய்கிறது. இது, மதவெறியால் தெறித்த ரத்தத்தின் ஒரு துளி என்கிறது.

திற படத்தின் திரையிடல் மற்றும் திறனாய்வு நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்றார். சாக்ரடீஸ் பெரியார் வரவேற்புரையாற்றினார். கவிஞர் ராஜசேகர் சிறப்பாகத் தொகுத்து வழங்க, தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், நக்கீரன் கோபால், தமுமுக மாநிலச் செயலாளர் ஜெ. ஹாஜாகனி, பேரா.சுபவீ, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘நிழல்’ ஆசிரியர் திருநாவுக்கரசு, தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, திரைப்படக் கல்லூரி பேரா. வி.எம். ரவிராஜ், பட இயக்குநர் ஃபாத்திமா பீவி ஆகியோர் திறனாய்வு உரையாற்றினர்.

நன்றியுரை ஆற்றிய குறும்பட இயக்குநர் பிரின்சு என்.ஆர்.எஸ்.பெரியார், “பட விழாக்களுக்கு இப்படத்தை அனுப்பி வைப்போம். படம் பார்த்த உடனேயே ‘அருமையாக இருக்கிறது’ என்று தொலைபேசி வரும். பிறகு என்ன நடக்குமோ நடக்குமோ தெரியாது. நடுவர்கள் இப்படத்தைத் திரையிடவே அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று தகவல் வரும். இப்படி ஏராளமானப் புறக்கணிப்புகள், தடைகளைத் தாண்டி இந்தக் குறும்படம். தமிழக அரசின், சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றிருக்கிறது என்றார்.

வழக்குரைஞர் அருள்மொழி, “55 ஆண்டுகளுக்கு முன்னால் உருது எழுத்தாளர் மண்டோ எழுதிய மூலக்கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் இன்றைக்கும் அப்படியே பொருந்துகிறது. பெண்கள் மீதான கொடுமைகளை இப்படம் உள்ளத்தை உலுக்கும் வகையில் பதிவு செய்துள்ளது என்றார்.

தலித் முரசு புனிதப் பாண்டியன், ‘பிற்படுத்தப்பட்டோருக்கும், தலித் மக்களுக்கும் இடையில் கூர்மைப்படுத்தப்படும் சாதி ஆதிக்க உணர்வை எடுத்துரைத்து, அதை அடியோடு களைய அணிதிரள வேண்டும் என்றார்.

பேராண்மை, ஈ, இயற்கை ஆகிய படங்களின் மூலம் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களால் வெற்றி பெற்றுள்ள இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், படத்தை வெகுவாகப் பாராட்டினார். ‘இளம் வயதில் எனக்கு எழுத்தாளர் மண்ட்டோவைத் தெரியவில்லை. பிரின்சுக்குத் தெரிந்திருக்கிறது. சினிமா எடுப்பது ஒன்றும் கஷ்டமான வேலையில்லை. இதுபோன்ற குறும்படங்களை எடுப்பதுதான் சிரமம். வளரும் தலைமுறையை வாழ்த்துகிறேன் என்றார்.

இப்படத்தை எடுக்க அனுமதியளித்த திரைப்படக்கல்லூரி பேராசிரியர் ரவிராஜ், “எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரியைப் பார்வையிட வந்தவர்கள் கல்லூரியின் கட்டடங்கள் மற்றும் வசதிகளைக் குறை சொன்னார்கள். அவர்களிடம் ‘திற’ படத்தைப் போட்டுக் காட்டினேன். வியந்து போனவர்கள், திரைப்படக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த படைப்பு இது” என்றார்கள்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேரா. சுபவீ, “படம் எடுப்பது மட்டுமல்ல, மேடையில் பேசுவது, கவிதை எழுதுவது, நடிப்பது என எதுவுமே சிரமமானதில்லை. அதை மனிதநேயத்தோடும், கொள்கைக்காகவும் செய்வதுதான் சிரமமானது. தாழ்த்தப்பட்டவர்களை சங்பரிவாரத்தினர் மக்கள் தொகைக் கணக்கில்தான் சேர்த்துக் கொள்கின்றனர். கோவிலுக்குள் சேர்ப்பதில்லை. சூலம் வழங்கும் நிகழ்ச்சியில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மதச்சார்பற்ற இந்துக்களையும் சேர்த்தே அழிப்போம் என்றுதான் சொல்கிறார்கள். இத்தகையக் கொடியவர்களை உயிருள்ளவரை எதிர்க்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இத்திரைப்படம் தெருத்தெருவாக பாராட்டப்பட வேண்டும்' என்றார்.

தமுமுக மாநிலச் செயலாளர் பேரா. ஹாஜாகனி, “திற என்ற இத்திரைப்படம், மனதைத் திறப்பதாகவும், மௌனப் பூட்டுக்களைத் திறப்பதாகவும் அமைந்துள்ளது. இப்படத்தில் காட்டப்பட்ட கொடுமைகளைச் செய்தவர்கள், நாங்கள்தான் இதைச் செய்தோம் என்று பெருமைபொங்க பேட்டி கொடுத்தார்கள். தெஹல்கா இதழ், அதைப் படம்பிடித்து ஒளிபரப்பியது. அவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனைக் கொடுத்தது?

பாபரி மஸ்ஜிதை இடிக்க ரதயாத்திரை போன அத்வானியையும், அந்த இடத்தை சமப்படுத்துங்கள் என்று இடிப்பதற்கு ஆணையிட்ட வாஜ்பாயையும், பாபரி மஸ்ஜித் இடிப்பை முன்னின்று நடத்திய குற்றவாளிகளையும் சட்டத்தால் தண்டிக்க முடிகிறதா?

மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்களைப் படுகொலை செய்த சூத்ரதாரி என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தால் அடையாளம் காட்டப்பட்ட பால்தாக்கரேவைத் தண்டிக்க முடிந்ததா? உச்சநீதிமன்றம் ராகவன் கமிட்டி என்ற கமிட்டி அமைத்து மோடியின் கொடுமைகளை விசாரித்ததே, மோடி சிறையிடப்பட்டாரா?

இல்லை. சட்டத்தால் சங்பரிவாரத்தின் சல்லிவேரைக் கூட கிள்ளிப்போட முடியவில்லை. ஆனால், செய்த குற்றம் என்னவென்றே தெரியாமல் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில், எந்த ஆதாரமும் இல்லையென்றாலும் கூட, கூட்டு மனசாட்சியின்படி அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை அளிக்கிறது நீதிமன்றம். நாங்கள்தான் செய்தோம் என்று குற்றவாளிகளே கூறினாலும், நீதிமன்றங்களில் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

எனவே உறங்குகின்ற நாட்டின் மனசாட்சி உலுக்கி எழுப்பப்பட வேண்டும். அதை இப்படம் திறம்படச் செய்துள்ளது'' என்றார்.

நக்கீரன் கோபால்-“இந்தப் படத்திற்குக் கைதட்ட வேண்டும் என்று தோன்றவில்லை. அந்த அளவுக்கு இது உள்ளத்தை பாதித்தது. இந்தக் கொடுமைகளைச் செய்தவர்களை தண்டிக்க முடிந்ததா? என்று பேரா. ஹாஜாகனி கேட்டார். அந்தக் கேள்விக்கு நம்மிடம் பதிலில்லை. ஆனாலும் இந்தக் கொடுமையைச் செய்தவர்களுக்கு இறங்குகாலம் தொடங்கிவிட்டது.

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு விழுந்த அடி, அந்தக் கூட்டத்தையே ஆட்டிவிட்டது (கூட்டத்தில் சிரிப்பு). இப்போதுவரை அவரது சீடர்களின் லீலைகளை நாங்கள் சீரியலாக எடுத்து வருகிறோம். இந்தக் கொடியவர்களின் முகமூடியைக் கிழிப்பதில் தெஹல்கா பத்திரிகை முக்கியப் பங்காற்றியது. எங்களுக்கு அதில் பெருமை. ‘திற' படம் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநரின் குடும்பமே படத்தின் தயாரிப்புச் செலவை ஏற்றதால் இவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.

தலைமையுரை ஆற்றிய கி.வீரமணி, “தீவிரவாதம் என்றவுடனேயே அதை முஸ்லிம்களோடு முடிச்சுப் போடுகிறார்கள். முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சொல்பவர்கள் எப்படிப்பட்டக் கொடிய பயங்கரவாதிகள் என்பதைத்தான் நாம் குறும்படத்தில் பார்த்தோம். எங்கள் இயக்கக் குடும்பத்துப் பிள்ளை பிரின்சு என்.ஆர்.எஸ். பெரியாரும் அவரது குழுவினரும் இதைச் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். கும்பல் முஸ்லிம்களை அந்நியர்களாக சித்தரிக்கிறார்கள். முஸ்லிம்கள் இம்மண்ணின் மைந்தர்கள். அவர்களை அந்நியர்கள் என்று செல்பவர்கள்தான் எங்கோ இருந்து வந்த வந்தேறிகள் என்பதுதான் உண்மை. இங்கே உண்மை தலைகீழாக ஆகியுள்ளது.

மாலேகானில் குண்டுவைத்தது இந்துத்துவ தீவிரவாதிகள்தான். அதை அம்பலப்படுத்திய ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான அதிகாரியைக் கொன்றததும் அவர்கள்தான்.

‘கர்கரேவைக் கொன்றது யார்? என்ற புத்தகம் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான முஹ்ஷி என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

ஊடகத்துறையிலும், காவல்துறையிலும், ஐ.பி. எனப்படும் உளவுத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளது. கலை ஊடகங்களைக் கைப்பற்றி மக்களை மூளைச்சலவை செய்து தங்கள் லட்சியத்தை அடையலாம் என சங்பரிவாரக் கும்பல் சதித்திட்டம் தீட்டி அதை நிறைவேற்றியும் வருகிறது. அதை முறியடிக்கும் வேலைகளில் நாம் இறங்க வேண்டும்.

ஒரு கலைப்படைப்பு மக்கள் மனங்களில் எந்த விளைவை ஏற்படுத்துகிறது என்பதை வைத்தே அதை மதிப்பிட வேண்டும் என்றார் தந்தை பெரியார். - என்றார் கி.வீரமணி.

மதவெறிக்கு எதிரான உணர்வையும், மனிதநேயத்தையும் உருவாக்கும் இந்தக் குறும்படக் குழுவினரை வாழ்த்துகிறேன்

THANKS 2 MARAICOIR.COM

Saturday, December 26, 2009

அளவில் சிறியது ஆற்றலில் பெரியது : மூளை !

ஒரு சராசரி மனிதனுடைய மூளையின் எடை 1300g முதல் 1400g வரை ஆகும் .

இது யானையின் மூளையின் ஏடையை விட மிக அதிகமானதாகும். யானையின் மூளையின் எடை 800g.


நமது உடம்பு முழுவதும் உள்ள மொத்த ஆக்சிஜனில் 20% ஐ மூளை தனது தேவைக்கு எடுத்து கொள்கிறது.
மூளையில் மொத்தம் 100 பில்லியன் நியுரோன்கள் உள்ளன. இது பூமியிலுள்ள மொத்த மக்கள் தொகையைப் போல் 166 மடங்கிலும் அதிகமானது.

மூளையின் நான்கில் மூன்று பங்கு முழுவதும் நீரால்நிரப்பப்பட்டுள்ளது.
நமது மூளைக்கு உலகிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிக அளவு எண்ணங்களை சேமித்து வைக்கும் ஆற்றல் உள்ளது.
மனித மூளை 25 watts அளவு சக்தியை உருவாக்கும் திறன் கொண்டது. இது ஒரு குமிழ் விளக்கை (Light Bulb) பிரகாசமாக ஒளிரச் செய்ய போதுமானதாகும்.

நமது மூளை 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இடது மூளை உடலின் வலது பக்கத்தினையும் வலது மூளை உடலின் இடது பக்கத்தையும் கட்டுப்படுத்துகின்றது.

ஆனால் வலது மூளையை விட இடது மூளை 186 million நியுரோன்களை மேலதிகமாக கொண்டுள்ளது.

ஆக்சிஜன் இல்லாமல் மூளை நான்கு முதல் ஆறு நிமிடம் வரை உயிர்வாழும். அதன் பிறகு செல்கள் இறக்கத்தொடங்கிவிடும்.

மூளையின் மிகக் குறைந்த வேகம் 416 km/hour அல்லது 260 mph.இது நவீனயுகத்தின் “Super Car” களினால் அடைய கூடியமிகக்கூடிய வேகமாகும்.

மூளையின் எடை உடலின் எடையில் வெறும் 2% மட்டுமே,ஆனால் உடலின்மொத்த சக்தியில் 20% ஐ தனது தேவைக்கு எடுத்து கொள்ளுகின்றது.

மூளையானது பகலில் சிந்திக்கும் திறனை விட இரவில்சிந்திக்கும் திறன்கூடியது. இதனால் தான் நாம் இரவில் நித்திரைக்கு செல்லும் முன் படிப்பது அதிக நாட்கள் மனதில் நிற்கின்றது.

அளவில் சிறியதும் ஆற்றலில் பெரியதுமான மூளையைப் போல் இயங்கக் கூடிய கணினியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஐபிஎம் நிறுவனம். ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தயாரித்துள்ளது.

இக்கணினி உருவாக்க பயன்படுத்தப்பட்ட CPU with Processor மொத்தம் 1,47,456 மற்றும் அதன் நினைவகம் 144 Terabyte (1Terabyte(TB) = 1024 GB)) நாம் பயன்படுத்தும் கணினியை விட இலட்சம் மடங்கு சக்தி வாய்ந்தது இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.



ஆனால் பல ஆண்டு ஆராச்சிக்கு பிறகு பல கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர்.(?) புனையின் முளையை விட 100 மடங்கு குறைந்த அளவே செயல்படக் கூடியது.

படத்தை பார்த்தால் இந்த கம்யூட்டரை வைப்பதற்கு எத்தன க்ரவுண்ட் இடத்தை தேவையோ தெரியவில்லை?




மூளை என்பது நூறு கோடி நியூரான் மற்றும் அதை இணைக் கூடிய ஆயிரம் கோடி நரம்பு முனைகளையும் உள்ளடக்கியது . இது எவ்வாறு இயங்குகிறது என்ற ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் இவ்வளுவு சிறிய அளவில் மிகப் பெயரிய ஆற்றல் கொண்ட மூளை ஆராய்ச்சியாளர்களுக்கு இது புரியாத புதிராகவே உள்ளது!

தொகுப்பு: அபு நபீலா
thanks 2 tntj.net

Tuesday, December 22, 2009

கேஸ் தட்டுப்பாடு-புதிய விதிமுறை என அவதியில் நமதூர் மக்கள்.




சமீபமாக இன்டேன் கேஸ் நிர்வாகம் செயல்பாடுகள் மோசமாகிக்கொண்டு வருகிறது.
கேஸ் பதிவு செய்ய போன் செய்தால் பெரும்பாலும் போனை எடுப்பதில்லை,ஆண்கள் இல்லாத வீட்டு பெண்கள் -நேரில் போய் தான் பதிவு வைக்க வேண்டிய நிலை..

அப்படியே போனை எடுத்தாலும் உங்களுக்கு கேஸ் வர பத்துநாள் ஆகும் , இருபது நாள் ஆகும் என அதிக அவகாசங்கள் சொல்லபடுகிறது.

இப்படி பதிவு செயும் கேஸ்கள் உரிய நேரத்தில் வந்து சேர்வதுமில்லை - சமீபகாலமாக மிக தாமதமாகிறது.கேட்டால் கேஸ் பற்றாகுறை என்று கூறிவந்தனர்.



கேஸ் பதிவு செய்பவர்களின் பட்டியல் பிரகாரம் கேஸ் விநியோகிக்கும் போது எப்படி பற்றா குறை ஏற்படும் என்ற கேள்வில் இருந்த மக்களுக்கு செவிவழி செய்தியாக வந்தது ஒரு செய்தி

"இனி கேஸ் வாங்க வேண்டும் என்றால் -இன்டேன் கேஸ் ஆபிசில் ஏதோ பேப்பர் குடுக்குராங்கலாம் அத வாங்குனாத்தான் இனி கேஸ்ஸாம்" என்ற செய்தி

கேள்வி பட்டதும் ஆண்களும் பெண்களும் ஒருவர் பின் ஒருவராக படையெடுத்தோம் நாகையை நோக்கி!

கூட்டம் குமிந்ததும் முன்னறிவிப்பு செய்யாமலே இவ்ளோ கூட்டமா என தினரிபோனது நிர்வாகம். பல சலசலபிர்க்கு பிறகு புரிந்தது விஷயம்.

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் கேஸ்களை கொண்டுவருபவர்களிடம் கடைகாரர்கள் , அதிக கேஸ் தேவைபடுபவர்கள் , வாகனத்திற்கு கேஸ் பயன்படுத்துபவர்கள் என பலர் அதிக பணம் குடுத்து வாங்கி கொள்கிறார்களாம்.

அதும் நாம வீட்ல இல்லைனா அவ்ளோ தான் வசதியா போகிறது அவர்களுக்கு.
இதுபோன்று முன்புஇருந்தே நடைபெறுகிறது என்றாலும் தற்போது மிக அதிகரித்துவிட பிரச்னை ஆகிருக்கிறது. இதற்க்கு அனைத்திற்கும் INDANE கேஸ் நிர்வாகிகள் உடந்தை,
தட்டுப்பாடு எல்லை மீறவே பிரச்சனை உருவாகிவிட்டது

தட்டுப்பாடு காரணமாக கேஸ் வாங்குவதற்கு புதிய நிபந்தனைகளை INDANE GAS நிர்வாகம் விதித்துள்ளது. இதற்க்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்-மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது.

அதாவது >

1.ரேஷன் கார்டு
2.கேஸ் வேண்டி முதல் முதலாக பதிவு செய்தபோது கொடுக்கும் சிறிய நீல நிற பூக்கு அல்லது
3.பழைய கேஸ் பில்

ஆகியவற்றோடு ரேஷன் கார்டில் பெயர் உள்ள நபர் செல்லவேண்டும்.அவர்கள் பதிவு செய்து விட்டு ஒரு வருடத்திற்கு உள்ள 12 ஸ்டிக்கர்களை இலவசமாக தருகிறார்கள். அதை
ஒவ்வொரு முறை நம் வீட்டிற்க்கு கேஸ் கொண்டுவருபவர்களிடம் கேஸ் பில் இல் ஒட்டி அனுப்பவேண்டுமாம்.இது தான் மேட்டர் இப்படி பண்ணினால் பிரச்சனை தீரும் என்பது அவர்கள் நம்பிக்கை.


இதற்க்கு எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்-மக்களை அவதிக்குள்ளாகி வருகிறது நிர்வாகம் . தினம் நீண்ட வருசை காணமுடிகிறது. பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது.
பிப்ரவரி வரை இதை பதிவு செய்யலாம் என்பதை மட்டும் சொல்லி இருந்தார்கள் ஆனால் இப்போது தற்காலிகமாக இதையும் நிறுத்தி வைத்துள்ளார்கள் . இதிலும் பிரச்சனையாம். மேலும் 19kg கேஸ் commercial ஆகா விற்பனை செய்கிறார்கள். முன்பணம் 1500 ரூபாய் -ஒவ்வொரு கேஸ் க்கும் ருபாய் 1050 என்கிறார்கள்.

இந்த பிரச்சனை பல ஊர்களிலும் இருப்பதாக சொல்லபடுகிறது.
இநத நிலைக்கு நம் மக்களும் ஓர் காரணம்.

NAGOREFLASH.

ரேஷன் அட்டைகள் ( குடும்ப அட்டை) செல்லுபடி காலத்தை ஜூன் 2011 வரை நீட்டித்து தமிழக அரசு

தமிழகத்தில் தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வரும் ரேஷன் அட்டைகள், ஜூன் 2011 வரை செல்லுபடியாகும் என அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் அட்டைகள் 2009 டிசம்பருடன் காலாவதியாகும் வகையில் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் புதிய அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டது.

ஆனால், புதிய அட்டைகள் வழங்கவும், போலி அட்டைகளை கண்டுபிடித்து ஒழிக்கவும் வீடுவீடாக சென்று தணிக்கை செய்யும் பணிகள் இன்னும் முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இப்பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே புதிய அட்டைகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படும்.

எனவே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ரேஷன் அட்டைகளையே மேலும் ஒராண்டுக்கு நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரேஷன் அட்டைகளின் செல்லுபடி காலத்தை ஜூன் 2011 வரை நீட்டித்து தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகரிவோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

'பொதுமக்கள் இப்போது வைத்துள்ள ரேஷன் அட்டைகள் மூலம் அந்தந்த நியாயவிலைக் கடைகளில் எப்போதும் போல பொருள்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.​

பொருட்கள் வழங்கும் போது தேவைக்கேற்ப புதிய உள்தாள்களை அந்தந்த நியாயவிலைக் கடைகளிலேயே சேர்த்து ஒட்டவும் அறிவுறுத்தி உள்ளோம் என்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

Monday, December 21, 2009

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! (39:53)

இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான்.
''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும்; எனக்கு எதையும் இணையாக்காதே''
என்பது தான் அது!
இவ்வாறு இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களில் ஒன்று தான் பிரார்த்தனை!

''பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ''என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள். நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதீ 3372

எனவே இந்தப் பிரார்த்தனை என்ற வணக்கத்தை இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும். இறைவன் அல்லாத வேறு எவரிடமும் நம்முடைய தேவைகளைக் கேட்கக் கூடாது.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் ''நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த் தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!) (அல்குர்ஆன் 2:186)

பிரார்த்தனையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்

பணிவோடு பிரார்த்திக்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது அனைத்து ஆற்றல்களையும் உள்ளடக்கியிருக்கும் சர்வ வல்லமை படைத்தவனின் முன்னிலையில் நாம் இருக்கின்றோம் என்ற எண்ணத்துடன் அடக்கத்தோடும் பணிவோடும் பிரார்த்திக்க வேண்டும்.

உங்கள் இறைவனைப் பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)

அவர் (ஸக்கரிய்யா) தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 19:3)

உறுதியான நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்

பிரார்த்தனை செய்யும் போது ''இறைவன் கட்டாயம் தருவான், அவனால் தர முடியும்'' என்ற உறுதியான நம்பிக்கையுடன் பிரார்த்திக்க வேண்டும்.

அச்சத்துடனும், நம்பிக்கையுடனும் அவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு அருகில் உள்ளது. (அல்குர்ஆன் 7:56)

வலியுறுத்திக் கேட்க வேண்டும்

இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது, ''நீ விரும்பினால் தா! இல்லையென்றால் தர வேண்டாம்'' என்பது போன்று கேட்கக்கூடாது. மாறாக, ''இதை நீ தந்து தான் ஆக வேண்டும்; உன்னால் தான் தர முடியும்; வேறு யாராலும் தர முடியாது'' என்று வலியுறுத்திக் கேட்க வேண்டும்.



'நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை'' என்று நபியவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: புகாரி 6338

பாவமானதைக் கேட்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று (மனிதன்) கூறுகின்றான். உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும் பாவமானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது. அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2735.

அவசரப்படக்கூடாது

பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு நான் பிரார்த்தித்தேன் எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த்தனை செய்தால் அது ஏற்கப்படாது.

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340

நிராசை அடையக் கூடாது

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் அந்தக் காரியம் நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87)

உணவும் உடையும் ஹலாலாக இருத்தல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு

தூதர்களே! நல்ல பொருள் களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல் குர்ஆன் 23:51)


நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மை யானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல் குர்ஆன் 2:172)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள்.
''அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை அவனது உணவு அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1844

இந்த ஒழுங்கு முறைகள் அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்து பிரார்த்தனை செய்கிறார். இருந்தும் அவரது பிரார்த்தனை அங்கீகரிக்கப் படவில்லை என்றால் அதனால் அவர் நம்பிக்கை இழந்து விடக் கூடாது. தமது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணி விடக் கூடாது.

இறைவன் தன் அடியார்கள் மீது மிகவும் கருணையுள்ளவன். அந்த அடியான் வெளித் தோற்றத்தை வைத்துக் கொண்டு அவனுடைய அறியாமையினால் தனக்குத் தீங்கு தரக் கூடியதைக் கேட்பான். உதாரணமாக தனக்கு நிறைய செல்வம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வான். ஆனால் அந்தச் செல்வம் அவனை இறை நிராகரிப்புக்கு இழுத்துச் செல்லும் என்றிருந்தால் அதைக் கொடுக்காமல் அதைவிடச் சிறந்ததை இறைவன் கொடுப்பான். ஒருவன் தனக்கு ஏற்படவுள்ள ஆபத்தை உணராமல் தனது தேவையைக் கேட்கின்றான். அனைத்தையும் அறிந்த இறைவன் அதைக் கொடுப்பதற்குப் பதிலாக அவனுக்கு வரவிருக்கும் ஆபத்தை நீக்குகின்றான். அதுவும் இல்லையெனில் அவன் கேட்டதைக் கொடுக்காமல் அதற்குப் பகரமாக மறுமையில் அவனது நிலையை உயர்த்துவான்.

''உறவைத் துண்டிக்காமலும் பாவமான காரியத்தில் அல்லாமலும் எந்த ஒரு பிரார்த்தனையை ஒரு முஸ்லிம் செய்தாலும் அவரது அந்தப் பிரார்த்தனைக்கு விரைவாகப் பதில் அளிக்கப்படும். அல்லது அதை அல்லாஹ் மறுமையில் ஒரு சேமிப்பாக ஆக்குகின்றான். அல்லது அந்தப் பிரார்த்தனைக்குத் தக்கவாறு அவனது பாவத்தை அழிக்கின்றான். இவ்வாறு மூன்று விதங்களில் ஏதேனும் ஒரு விதத்தில் அல்லாஹ் பதிலளிக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''நாங்கள் அதிகமாகப் பிரார்த்தனை செய்தால் என்ன?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு ''அல்லாஹ் அதிகமாக்குவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஸயீத் (ரலி) நூல்: அஹ்மத் 11150

ஓர் அடியான் தன்னிடம் பிரார்த்தனை செய்யும் போது அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகின்றான்.
'உங்களுடைய இறைவன் சங்கையானவன். அவனுடைய அடியார் தனது கையை அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளையும் வெறுமனே அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஸல்மான் (ரலி) நூல்: இப்னு மாஜா 3911

பாவமானதையும் உறவைத் துண்டிக்கும் விதத்திலும் இல்லாத எல்லா துஆக்களும் ஒப்புக் கொள்ளப்படும் என்றாலும் சில குறிப்பிட்ட நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகள் மற்ற நேரங்களில் செய்யப்படும் பிரார்த்தனைகளை விட அதிகமதிகம் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பதிலளிக்கப்படும் துஆக்கள் :

கடமையான தொழுகைக்குப் பின்..

கடமையான ஒவ்வொரு நேரத் தொழுகையையும் நிறைவேற்றிய பின் கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்.

''எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்'' என்று பதிலளித்தார்கள். அபூஉமாமா (ரலி) நூல்: திர்மிதீ 3499

ஸஜ்தாவின் போது...

ஓர் அடியான் அல்லாஹ்விடம் மிக நெருக்கமாக இருக்கும் நேரம் ஸஜ்தாவாகும். எனவே இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகின்றது.

''ஸஜ்தாவில் இருக்கும் நிலையில் ஓர் அடியான் தன்னுடைய இறைவனை நெருங்குகின்றான். எனவே ஸஜ்தாவில் துஆவை அதிகப்படுத்துங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 482

இரவின் கடைசி நேரத்தில்...

இரவின் கடைசிப் பகுதியில் செய்யும் துஆவும் பதிலளிக்கப்படும் துஆக்களில் ஒன்று. எனவே அந்த நேரத்திலும் அதிகமாகப் பிரார்த்திக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவை மூன்றாகப் பிரித்து, கடைசிப் பகுதியில் இறைவன் முதல் வானத்திற்கு தினமும் இறங்குகின்றான். ''என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் நான் அதை ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் மன்னிப்பு கேட்டால் நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6321

தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ பிரயாணத்தின் போது... நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பிரார்த்தனைகள் இருக்கின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கப்படும். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 1. அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை. 2. பிரயாணியின் பிரார்த்தனை. 3. தந்தை தனது மகனுக்காகச் செய்யும் பிரார்த்தனை. அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 3908

நோன்பாளி நோன்பு துறக்கும் போது...

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேரின் பிரார்த்தனை மறுக்கப்படாது. நீதியான அரசன் நோன்பாளி நோன்பு துறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை பாதிக்கப்பட்டவர் செய்யும் பிரார்த்தனை. அதை அல்லாஹ் புழுதிகளை விட்டும் உயர்த்துவான். அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா 175

பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில்...

''பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 521

போர்க்களத்தில்...

''பாங்கின் போதும் சிலர் சிலருடன் மோதும் போர்க் களத்திலும் பிரார்த்தனைகள் மறுக்கப் படுவதில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: அபூதாவூத் 2540

ஜும்ஆ நாளில்...

''வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் தொழுகையில் நின்று அல்லாஹ் விடம் எதையேனும் கேட்டால் அதை அல்லாஹ் அவருக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை'' என்று அபுல்காஸிம் (நபிலிஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த நேரம் மிகக் குறைவானது என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6400

எனவே நாம் பிரார்த்தனை செய்யும் போது நம்மைப் படைத்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் மட்டுமே முறையிட்டு அவனுடன் யாரையும் கூட்டாக்காமல் பிரார்த்தனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்து பிரார்த்திப்போமாக!

NAGOREFLASH

Saturday, December 19, 2009

உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் - இந்தியர்கள்


உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லீம்களின் பட்டியலை
Dina Rabie, IOL Staff என்பவர் புத்தகமாக வடிவமைத்துள்ளார்.
அவர் இந்த புத்தகத்தை பற்றி குறிப்பிடுகையில் ...

"This book is not only for Muslims but for non-Muslims who do not know much about Islam and the Muslim world and how diverse it is," Esposito told IOL.

The book, "The 500 Most Influential Muslims – 2009", starts with an overall top 50 influential Muslims list, and then surveys the remaining 450 most prominent Muslims in 15 categories, from politics to religion, media, arts, science and development, but without ranking.


உலகின் மிக செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் இந்தியர்களான இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஜாகிர் நாயக், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர் ஷாருக் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.



அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் உள்ள முஸ்லிம்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தி செல்வாக்கு மிக்க 500 பேரின் பட்டியலைத் தயாரித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம், ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


அதே போல சூஃபி இஸ்லாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அலிகார் பல்கலைக்கழகப் பேராசிபரியர் சையத் அமீன் மியான் காத்ரியும் இந்தப் பட்டியலில் 44 இடத்தைப் பிடித்துள்ளார்.

தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்து வரும் ஜமாத் உலமே இ ஹிந்த் அமைப்பின் தலைவரும் எம்பியுமான மெளலானா மெஹ்மூத் மதானியும் இந்தப் பட்டியலில் 36 இடத்தைப் பிடித்துள்ளார்.

தாவூதி போரா பிரிவுத் தலைவரான அஸ்கர் அலி என்ஜினியர், பிரபல இஸ்லாமிய அறிஞரான வகீதுன் கான், மிகப் பிரபலமான நியூஸ் வீக் இதழின் ஆசிரியரான பரீத் ஷகாரியா ஆகியோரும் இதில் இடம் பிடித்துள்ளனர்.

இவர்கள் தவிர அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன், மெளலானா மசூத் அசார், ஹபீஸ் முகமது ஆகியோரும் இந்த செல்வாக்கு மிக்க முஸ்லீம்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த புத்தகத்தை download செய்ய copy&paste
http://www.scribd.com/doc/22854716/The-500-Most-Influential-Muslims?autodown=pdf

nagoreflash team.

"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு"

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

இசை என்பதன் விளக்கம் என்ன …?

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். வடமொழியில் நாதம் என அழைப்பர். இந்த நாதம் இருவகைப்படும் 1) ஆகத நாதம், 2) அனாகத நாதம்.

ஆகத நாதம்

மனிதனது முயற்சியால் வேண்டுமென்றே உருவாக்கப் படுவதற்கு *ஆகத நாதம்* என்று பொருள் இவை இசைக் கருவிகளைக் கொண்டு உருவாக்கப்படுவதை குறிக்கும்.


அனாகத நாதம்


மனிதனது முயற்சியில்லாமல் இயற்கையாக கேட்கப்படும் நாதம் அனாகத நாதம் என்று கூறுவர் அதாவது கடல் அலைகளின் ஓசை, தேனிக்களின் ரிங்காரம், வண்டுகளின் ஓசை, மரங்களில் காற்றின் உராய்வினால் எழும் ஓசை போன்றவற்றை கருதலாம்.

இசையால் நமக்கு நன்மை-தீமை என்ன ?

நன்மை :

1. இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறது.

2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறது.

3. புத்துணர்ச்சி கிடைக்கிறது.

4. நேரம் போவது தெரியாது - டைம் பாஷ்.

தீமை :

1. மனிதன் இசையை கேட்கும் போது அவனை அறியாமலேயே ஒருவிதமான மதி மயக்கத்தில் ஆழ்ந்து விடுகிறான். இறை சிந்தனை மறந்து போகிறது

2. இசையை ரசிப்பவர்கள் குடிபோதையில் இருப்பவர் களுடைய மனோ நிலையை பெற்றுவிட்டார்களோ என்று கூட சில நேரம் எண்ணத் தோன்றிவிடுகிறது அந்த அளவுக்கு அது மனிதனை குறிப்பாக இளைஞர்களை சீரழிக்கிறது
3. இன்றைய இளைஞர்கள் சினிமா, டான்ஸ், கூத்து கும்மாளம் என்று செல்வதற்கு எது மூலகாரணமாக இருக்கிறது இசைதானே! அந்த இசையைக் கொண்டுதானே பல்வேறு பாவங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

4. இசையைக் கேட்பதால் மனம் நிம்மதியடையுமா? என்றால் நிச்சயம் இல்லை. மாறாக இசையைக் கேட்பதால் நரம்புகள் பாதிப்படைதல் தூக்கமின்மை அமைதியின்மை ஆகியவை தான் ஏற்படுகின்றன.


5. செல்போன், எஃப்.எம். ரேடியோ அல்லது இதர உபகரணங்களைக் கொண்டு ஏதாவது இசையை ரசித்துக் கொண்டே படுப்பது, நடப்பது, வாகனம் ஓட்டுவது இன்று அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இதனால் அதிக டெசிபல் அல்லது நிறுத்தாமல் (Non stop) பாடிக் கொண்டிருக்கும் ரேடியோ அதிர்வலைகளால் காது நரம்புகளுக்கு நல்லதல்ல என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

6. ஹெட்போனை அதிகளவில் பயன்படுத்துவதால் தூக்கம் கெடுதல், தலைவலி, காதுவலி போன்றவை சாதாரணமாக ஏற்படும் என்றும் தெரிய வந்துள்ளது.


இஸ்லாம் என்ன சொல்கிறது இசையை பற்றி :

1.இசையினால் உள்ளம் அமைதியுறும் என்று பெரும்பாலும் மக்களால் நம்பப்படுகிறதா..?
இதைப்பற்றி அறிய திருமறையை புரட்டிப்பார்த்தால் கீழ்கண்ட இறைவசனமே நம் முன் வருகிறது! இசையால் உள்ளம் அமைதி பெறும் என்று கூறுவோரின் வாதம் அல்லாஹ்வின் திருமறைக்கு மாற்றமாக உள்ளது!

நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன. (13:28)
இதனால் முதல் வாதம் பொய்யாகிறது.

2. இதை கொண்டு மருத்துவம் செய்யபடுகிறதா..?

இசையை வைத்து மருத்துவம் செய்யலாம் ( மன ரீதியான, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு ) என்பது உண்மையான ஒன்றுதான் . இது இன்னும் பரவலாக வரவில்லை என்பது வேறு விஷயம் .
ஆனால் இதை வைத்துகொண்டு இசை கேட்கலாம் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியாது. ஏன் என்றால் இசை கேட்பது வேறு இசையால் மருத்துவம் செய்வது வேறு ,உதரணமாக சொல்லவேண்டும் என்றால்
மதுவில் இருக்கும் alcohal என்னும் பொருள் நம் உடல்நலத்தை கெடுக்கிறது தெரிந்த விஷயம்

ஆனால் அதே மது நாம் குடிக்கும் இருமல் மருந்தில் சிறிதளவு கலக்க பட்டுள்ளது. இதை மருத்துவத்திற்காக நாம் ஏற்றுகொள்கிறோம். இதை வைத்து கொண்டு மது அருந்துவது கூடும் என்போமா ? என்று சிந்தித்தால் நமக்கு விளங்கிவிடும்.

3,4. புத்துணர்ச்சி கிடைக்கிறதா..? நேரம் போவது தெரியாதா..?

இது நிரூபிக்க பட்ட உண்மை அல்ல..., இவர்கள் கூறும் புத்துணர்ச்சிக்கு பின்னாள் மனசோர்வு தான் மிஞ்சும் .. நேரம் வீணடிப்பதை நல்ல விஷயம் என்று சொல்ல முடியாது. வாழ்கையில் பல விஷயங்கள் தெரிந்துகொள்ள அந்த நேரத்தை செலவிடலாம்.

இது போக இசையை ஒரு வரம்புக்கு உட்பட்டு அளவோடு , ஒளி அழவை நிதானமாக கேட்பதனால் ஒன்றுமில்லையே என்று வாதிடுபவர்கள் உண்டு மேலும் மற்றொரு கேள்வி இறை நினைப்பை ஏற்படுத்தும் நல்ல கருத்துள்ள இஸ்லாமிய பாடலை ஏன் கேட்ககூடாது என்பது....

இஸ்லாத்தை பொறுத்த வரை ஒரு விஷத்தை தடுக்க வேண்டும் என்றால் அதன் ஆரம்ப நிலையை தகர்க்கும் ,அப்போது தான் ஒரு தீமை முழுவதுமாக தடுக்க படுகிறது என்று பொருள். வளர்ந்து வரும் தீமைக்கு தடை போட்டால் அவை உண்மையான தடையாக இருக்காது..



இஸ்லாத்தில் இசை பற்றிய டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கண்ணோட்டம்:தமிழாக்கம்



பல்வேறு ஆதாரப்புர்வ ஹதீதுகளில் இசைக்கு தடைகள் உள்ளன:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :

(வரும் நாளில்) எனது உம்மத்தவர்கள் மது அருந்துவார்கள்.ஆதன் உண்மையான
பெயரைக் காட்டிலும் அதை வேறு ஒரு பெயரால் அழைப்பார்கள். இசைக்கருவிகளை இசைத்தும் பெண் பாடகர்கள் கொண்டு பாட்டும் பாடுவதுமான கேளிக்கைகளை தமக்கு ஏற்படுத்திக் கொள்வார்கள். அல்லாஹ் அவர்களின் காலடியில் பூமியைப் பிளந்து அதில் அவர்களை புகச் செய்து விடுவான். மற்றவர்கள் குரங்குகாளகவும் பன்றிகளாகவும் மாற்றி விடுவான்.
(இப்னு மாஜா - கிதாபுல் ஃபிதன்)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில
கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம் பட்டு,மது,இசைக்
கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில
கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகைள இடையன்
(காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான்.
அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான்.(எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். நூல்: புகாரி 5590

ஆனால் சில ஹதீதுகளில் ”தஃப் (கொட்டு)” இசைப்பதற்கு அனுமதிகப் பட்டுள்ளது போன்று குறிப்புகள் உள்ளன. (அதாவது ஒரு புறம் மூடப்பட்டும் மறுபுறம் திறந்த நிலையிலும் இருக்கும்) தாம்புரைன்.



ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் அருகே இரண்டு சிறுமியர் “ தஃப்”எனும் *கொட்டு அடித்துக்
கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக்
கொண்டிருந்தனர். அப்போது அபூ பக்ர்(ரலி) வந்து அவ்விருவரையும்
விரட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் தம் முகத்தைவிட்டும் ஆடையை விலக்கி அபூ
பக்ரே! அவ்விருவரையும்விட்டு விடுவீராக! ஏனெனில் இவை பெருநாள்களாகும்"என்று
கூறினார்கள். அந்த நாள்கள் மினவின் நாள்களாக (10,11,12,13) அமைந்திருந்தன.
*(புகாரி 987)



ருபய்யிஉ பின்த் முஅவ்வித் இப்னி அஃப்ரா(ரலி) (காலித் இப்னு ஃதக்வான்(ரஹ்)
அவர்களிடம்) கூறினார்.
எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி(ஸல்) அவர்கள் (எங்கள்
வீட்டுக்கு) வந்தார்கள்.எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று
நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில
(முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக்கொண்டு
பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்)பாடிக்
கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி எங்களிடையே
ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள்.உடனே நபி(ஸல்) அவர்கள் '(இப்படிச் சொல்லாதே!) இதைவிட்டுவிட்டு
முன்பு நீ சொல்லிக்கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!'என்று
கூறினார்கள். (புகாரி 5147)

இதன்மூலம் மேற்கண்ட ஆதாரத்தின்படி தஃப் இசைக்கருவியைத் தவிர மற்ற பொதுவான இசை கருவிகளுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது போன்ற முடிவு கிடைக்கிறது!

இசை பொதுவாக ஒரு மனிதனை மயக்கி அல்லாஹ்வின் பாதையிலிருந்து விலக்குகிறது. மேலும் இசையானது ஆண் அல்லது பெண்ணுடைய மூளையில் (சிந்திக்கும் ஆற்றல்) இடம் பிடித்து தன்னை படைத்த படைப்பாளனையும் தாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற நினைவையும் மரக்கடிக்க விடுகிறது.

இசையுடன் கூடிய பாடல்களை ரசிக்கும் மக்கள் அதன் மூலம்
உருவாகும் அர்த்தமற்ற, தவறான, மார்க்கத்திற்கு முரணான கருததுக்களையும்
வரவேற்கின்றனர் எனவே இது போன்ற ஆங்கில, இந்தி பாடல் வரிகளையும், கஜல்களையும் ரசிக்கக்கூடியவர் அதில் உள்ள தவறுகளை உணர வேண்டும்.
எனவே தான் இசை ஒரு மனிதனது மூளையை வசப்படுத்தி அவனை நேரான பாதையிலிருந்து தடம்புரளச் செய்கிறது என்பதாக கூறுகிறோம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!

Thursday, December 17, 2009

செல்போனால் -தொடரும் மரணங்கள்...

செல்போன் இன்று அத்தியாவிசய தேவை ஆகிவிட்டது .. செல்போன்லாம் வைத்து இருக்கிறீர்களா..!!!! என்று கேட்ட காலம் போய், இன்று உங்கட்ட செல்போன் இல்லையா...? என்று கேட்கும் காலம் ஆகிவிட்டது..

இருப்பினும் எதுவும் அளவிற்கு மீறினால், நஞ்சு தான் மிஞ்சும் என்பார்போல் , இன்று செல்போன் பயன்பாட்டால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையின் உச்சக்கட்டமாக தலைவலி , புற்றுநோய் என்று சொல்லிகொண்டிருந்த நிலை மாறி,மரண அபாய சங்குகள் ஒழிக்க தொடங்கி உள்ளது..??- காரணம் செல்போனால் தொடரும் மரணங்கள்..

பீகாரில் நடந்தது , டெல்லியில் நடந்தது , அமெரிக்காவில் நடந்தது என்ற தொலை தூர செய்தியே கேள்வி பட்ட நமக்கு,நமது ஊரிலேயே செல்போனால் நடந்த மரணசெய்தி கேள்வி பட்ட உடன் பதட்டத்துடன்
- இந்த செல்போனா ? என்று சற்று நம் செல்போனையே உற்று பார்க்க செய்ததை மறுக்க முடியாது.

மரணத்தை தடுக்க முடியாது என்றாலும் , விபத்துக்களை விழிப்புணர்வு மூலம் தடுக்கலாம் என்ற ரீதியிலே எங்கு இச்செய்தியை பதிவு செய்கிறோம்.

கடந்த டிசம்பர் 6 அன்று பீரோடும் தெருவை சார்ந்த சகோதரர் நிஜாம் அவர்களின் திடிர் மரணம்..நாகூர் வாழ் மக்களை அதர்ச்சியில் ஆழ்த்தியது நினைவிருக்கலாம்.

மரணத்திற்கு மருந்தில்லை, இறைவனின் நாட்டம் என்று சொல்லிக்கொண்டு தான் நம்மை நாம் சாந்த படுத்த முடிந்தது.அவரின் குடும்பத்தாருக்கு மண அமைதியை , பொறுமையை அல்லாஹ் வழங்க வேண்டும் என்ற துஆவை தவிர நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மரணமடைந்த சகோதருக்காக நாம் பிரார்த்திக்க கடமைபட்டுளோம்.

செல்போனை தவறாக கையாண்டதால் தான் இந்த மரணம் என்று பொத்தாம்பொதுவாக சொல்ல முடியாது - இன்று பல பேர் அப்படிதான் பயன்படுத்துகிறார்கள்.
செல்போனை ச்சார்ஜரில் வைத்துகொண்டே எத்தின பேர் பேசுகிறோம் ? .. அப்படி முக்கியமாக பேசக்கூடிய நாம் இந்த செல்போன் வருவதற்கு முன் நம் நிலையை நினைவு படுத்திபார்க்க வேண்டும்.

இன்று பல பேர் கைகளும் , செல்போன்களும் ஒன்றிவிட்டன.இதில் காமெடி என்ன வென்றால் -சிலர் ப்ளூ டூத் மூலம் காதில் மாட்டிகொண்டு பேசுவார்களே, அவர்களை பலர்(அது பற்றி தெரியாதவர்கள் ) பயத்தியமா இவனுக்கு தனியா பேசிக்கிட்டு போறான் என்று ஏளனமாக பார்க்க கூடிய நிலைமை இப்போது.

தற்போதைய இளைஞர்களின் கைகளில், எம்.பி 3, மற்றும் எம்.பி 4 உள்ள அலைபேசிகள் உள்ளன. அதனை அவர்கள் ஒரு நாளில் பல மணி நேரங்கள் வரை காதில் வைத்து கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவற்றினால் வரும் பின் விளைவுகள் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அதிக நேரங்கள் அலைபேசிகளை காதில் வைத்து உபயோகப்படுத்துவதால் மூளை புற்றுநோய் வருவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. தலை வலி என்று சிறிது வயதிலேயே கண்ணாடி போடும் பல இளைய சமுதாயத்தினர் அதிகரித்து விட்டனர்.

ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் மொபைல் போனை பேசும் போது உபயோகப்படுத்தினால் காதானது கேட்கும் சக்தியினை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக்கொண்டே வரும். அத்துடன் ஒரு நாளில் யார் அதிகமான நேரம் மொபைல் போனை உபயோகத்தினாலும் இந்த அவஸ்தை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதாவது ஆங்கில எழுத்துக்களான S, F, H, T மற்றும் Z போன்ற எழுத்துக்களை நம் கேட்கும் சக்தியினை இழக்கின்றோம். இந்த எழுத்துக்களை அதிக உச்சரிப்பில் சொன்னால் தான் நம்மால் கேட்க முடியும். இந்த அறிக்கையானது, சென்ற மாதம் லண்டனில் நடைபெற்ற காது, மூக்கு, தொண்டை சம்மந்தமாக நடைபெற்ற கருத்தரங்கில் கூறப்பட்டது.

அலைபேசிகளில் பல ரேடிய கதிர்கள் உள்ளன. அலைபேசியினை பேசும் போது நம்முடைய காதானது அதனை ஈர்த்துக்கொள்கிறது. சட்டை பைகளிலோ அல்லது பேண்ட் பைகளிலோ மற்றும் உடம்பில் எங்கு வைத்து இருந்தாலும் ரேடிய கதிர்களால் உடம்பானது பாதிக்கப்படும். ஒரு நபர் பத்து வருடங்கள் தொடர்ந்து அதிகமான நேரங்களை அலைபேசி பேசுவதில் செலவு செய்தால் அவருக்கு மூளை புற்று நோயானது வருவதற்கு காரணமாக அமைந்து விடும் என்ற ஆய்வானது சுவீடன் நாட்டிலிருந்து வெளியாகி உள்ளது.

Professor. Lennart Hardell of the University Hospital in Orebro and Professor Kjell Hansson Mild of Umea University ஆகிய இருவரும் 11 நாடுகளில் நடத்தி ஆராய்ச்சிக்கு பின் இந்த அறிக்கையினை தந்துள்ளனர்.

அலைபேசிகளில் விளையாட்டுகளை அதிகமாக சிறார்கள் விளையாடுகிறார்கள். இதனால் அவர்களும் உடல் உபாதைகளுக்கு ஆளாகி விடுகிறார்கள். ஆகையால் அலைபேசி விளையாட்டுகள் (Mobile Games) உள்ள மொபைல் போன்களை சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று கோரிக்கையினை 17 நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

இப்போது எல்லாம் வாகனங்களில் போய் கொண்டு இருக்கும் போது, மொபைல் போனில் பேசிக்கொண்டு சென்றால் அது ஒரு ஸ்டைலாக இருக்கிறது. ஆனால் சிறிய கவனம் நம்மிடம் இல்லாமல் போனால் அதுவே நம்முடைய மரணத்திற்கு கொண்டு செல்லும்.


செல்போன் பயன்படுத்தும் பொது கொஞ்சம் கவனிங்க இத >

1.தேவைக்கு செல்போனை பயன்படுத்துங்கள்
2.தூங்குபோது தூரமாக வையுங்கள்.
3.நீண்ட நேரம் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால் earphone பயன்படுத்துங்கள்
4.சார்ஜரில் வைத்துகொண்டு பேசாதிர்கள்.
5.உரிமம் பெற்ற சார்ஜரை பயன்படுத்துங்கள்.
6.குழந்தைகள் எடுக்கும்படி செல்போனையோ,சர்ஜரையோ வைகாதிர்கள்.
7.தேவைக்கு அதிக மாக சார்ஜ் செய்யாதிர்கள்.
8.உடலில் ஒரே இடத்தில செல்போனை வைகாதிர்கள் , மாற்றி மாற்றி வையுங்கள்.
9.பெரும் மழை , இடி போன்ற சமயங்களில் வெளியில் செல்லும்போது swithoff செய்வது சிறந்தது.
10.எல்லாவற்றுக்கும் மேலாக - செல்போன் பயன்பாட்டை குறைத்துகொல்வது மிக சிறந்தது.



சென்ற மாதம் பெங்களூர் மற்றும் லக்னோவில் மொபைல் போன் பேட்டரி வெடித்து சிதறியது என்ற செய்தியானது சில ஊடகத்துறையில் வந்தது. கான்பூரில் நகரில் உள்ள ராஜீவ் நகர் என்ற இடத்தில் பார்மஸிஸ்ட் படித்துக்கொண்டு இருந்த இளைஞனின் காதானது நோகியா 1100 போன் வெடித்ததால் சிதறியது. மற்றும் அதே போல் ஒரு சம்பவம் பெங்களூரில் பி.எல். 5சி என்ற அலைபேசி பேட்டரி வெடித்து சிதறியது. தரம் குறைந்த போனை சார்ஜில் வைத்து பேசிக்கொண்டு இருந்ததால் அது வெடித்து இருக்கிறது.

தற்போது காலங்கள் வேகமாக சென்று கொண்டு இருக்கிறது. ஆகையால் அவற்றிற்கு ஈடுக்கொடுக்க முடியாத மனிதன் டென்ஷன் டென்ஷன் என்று சொல்லியே மற்றவர்களுக்கு டென்ஷனை உண்டாக்கிக்கொண்டு இருக்கிறான். மன நிம்மதி இல்லாத வாழ்வில் மனிதன் தற்போது மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறான். மனிதன் நிம்மதியற்று இருப்பதற்கு ஒரு காரணமாக தொலைபேசியையும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உலகில் தொல்லைக்கொடுக்கும் தொலைபேசியோ அல்லது அலைபேசியோ இல்லாத கைகளை பார்க்க முடியாது. உலகம் உங்கள் கைகளில்.. அதுபோல் ஆபத்துகளும் நம்முடைய கைகளில்..



தற்போது பல மரணங்கள் நிகழ செல்போன்கள் காரணமாக இருக்கிறது.

என் நண்பர் ஒருவர் கீழ் காணும் மின்னஜலை அனுப்பினார் பாருங்கள் :

A few days ago, a person was recharging his mobile phone at home.

Just at that time a call came in and he answered it with the
Instrument still connected to the outlet.

After a few seconds electricity flowed into the cell phone unrestrained
and the young man was thrown to the ground with a heavy thud.

His parents rushed to the room only to find him unconscious,
with a weak heartbeat and burnt fingers

He was rushed to the nearby hospital, but was pronounced dead on arrival.

Cell phones are a very useful modern invention.

However, we must be aware that it can also be an instrument of death.

Never use the cell phone while it is hooked to the electrical outlet!






NAGOREFLASH TEAM// THANKS 2 FRIENDS MAIL//

வைரஸ் ரீமுவர் சேவை- தமிழன் சாதனை

கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை.

தர்போது வைரஸுக்கு எதிரான மென்பொருள்கள் அநேகம் இருந்தாலும் அவை முழுமையான் தீர்வாக அமைவதில்லை என்று கூறும் வின்ம்ணி குழு அத்தகைய முழுமையான வைரஸ் நீக்க சேவையாக இதனை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.கம்ப்யூட்டரை பாதுகாப்பதோடு பலவகையான வைரஸ்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் பீட்டா வடிவம் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.

ஜிம்பாப்வே ரக்பி சங்கத்தின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த‌ வைர‌ஸ் நீக்க‌ சேவையின் பின்னெ உள்ள‌ இணைய‌தள‌ம் தேடிய‌ந்திர‌த்தில் முன்ன‌ணி பெறுவ‌த‌ற்கான‌ ம‌ற்றொரு சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.சேப்சைட் என்னும் அந்த‌ சேவை உங்க‌ள் த‌ள‌த்தை தேட‌ல் ப‌ட்டிய‌லில் முன்ன்ணிக்கு கொண்டுவ‌ர‌ உத‌வும் என்று கூற‌ப்ப‌ட்டுள்ள‌து.


இந்த‌ மென்பொருளின் பின்னே உள்ள‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் த‌ன்னைப்ப‌ற்றி அட‌க்கத்தோடு குறிப்பிட்டுள்ள‌தை இங்கே த‌ருகிறேன்.

”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த
தமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்..

என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும் ஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி ஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று யோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.

கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின் வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள் வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.

த‌மிழ‌னின் பெருமையை உல‌க‌றிய‌ச்செய்யும் முய‌ற்சியாக‌ ந‌ன்ப‌ர்க‌ளோடு சேர்ந்து இதில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் தெரிவித்துள்ளார்.அவ‌ர‌து முயற்சிக்கு வாழ்த்துக்க‌ள்.

மென்பொருள் பதிவிறக்கம் செய்ய - for software download.. use following link
http://www.winmani.com/WinmaniVirusRemoverV1.0.zip

http://www.winmani.com/

// heartly thanks 2 naagamani brother//

ஷைத்தானின் அடிச்சுவடுகள்!

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?

சந்தனக்கூடு
கொடிமரம்
சமாதி வழிபாடு
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
கப்ரை உயர்த்திக் கட்டுதல்
தஸ்பீஹ் மணி உருட்டுதல்
மவ்லூது பாடல்கள்
கவ்வாலி இசைக்கச்சேரிகள்
உரூஸ் உண்டியல்
யானை குதிரை ஊர்வலங்கள்
பிறந்த நாள் விழா எடுப்பது
இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
வட்டி வாங்குதல்
வரதட்சணை பிடுங்குதல்
ஜோதிட நம்பிக்கை
கருமணி தாலி கட்டுதல்
வாழைமரம் நடுதல்
ஆண்கள் தங்கம் அணிவது
மஞ்சள் நீராட்டுவிழா
சுன்னத் கத்னா திருவிழா

ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)











இணைவைத்தால் மன்னிப்பு கிடையாது

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)



தாயத்தை கட்டாதீர்கள்


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்.
தாயத்தை கட்டித் தொங்க விட்டுக் கொண்டிருப்பவன் நிச்சயமாக -அல்லாஹ்வுக்கு- இணைவைத்து விட்டான். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: அஹமத் 16781)



அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுங்கள்


அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (அல்குர்ஆன் 22:31)



இணைகற்பித்தால் உங்கள் சுவனம் ஹராமாக்கப்படும்

அல்லாஹ் கூறுகிறான்: -
“…எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.” (அல்குர்ஆன் 5:72 )



இணைகற்பித்தால் சொர்க்கம் செல்லவே முடியாது
‘இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப் பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை’ என்றே மஸீஹ் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) கூறினார். (திருக் குர்ஆன் 5:72)


இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)



இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்

அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)


இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்
நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)


இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

//THANKS 2 SHARHARATAMIL//

Wednesday, December 16, 2009

பாபரி மஸ்ஜித் இடிப்பு: 68 குற்றவாளிகள் பிரிட்டனுக்குள் நுழைய தடை?

இந்தியாவின் மாண்பை குலைத்து சர்வதேச அளவில் இந்தியர்கள் அனைவரையும் வெட்கித்தலைகுனிய வைத்த அந்த 68 குற்றவாளிகளின் மீதான பிடி இறுகுகிறது.

இந்தியாவின் இறையாண்மை நீதிபரிபாலனம், மதசார்பின்மை, ஹிந்து மக்களின் பெருந்தன்மை அனைத்தின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்த முஸ்லிம்களை வேதனைப்படுத்திய அந்த கடப்பாரை கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரிட்டன் முன்னணி மனித உரிமை அமைப்புகள் நாடெங்கும் கோரிக்கை விடுத்து வருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிப்புசதி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட பரான் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றவாளிகளை மட்டுமின்றி மேலும் பலரை குற்றவாளிப்பட்டியல் சேர்க்க வேண்டுமென்று கோப கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


லிபரான் சுட்டிக்காட்டிய அந்த அறுபத்தெட்டு அயோக்கியர்களையும் பிரிட்டனுக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என பிரிட்டனின் முன்னணி மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

பாப்ரி மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகள் எதிர்காலத்தில் பிரிட்டனில் நுழைய அனுமதிக்கப்பட்டால் அது அந்த நாட்டின் கவுரவத்திற்கே இழுக்காகும் என பிரிட்டனின் முன்னணி சமூக நல அமைப்புகளில் ஒன்றான கவுன்சில் ஆஃப் இன்டியன் முஸ்லிம்ஸ் அறிவித்துள்ளது.

லிபரான் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட குற்றவாளிகளை பிரிட்டனில் நுழைய ஒரு போதும் அனு மதிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பாப்ரி மஸ்ஜித் இடித்தசதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குற்றவாளிகள் என்பதை பரான் அறிக்கை மூலம் உலகம் கண்டது. பரான் கூறிய குற்றவாளிகள் மஸ்ஜித் இடிப்பிற்காக மட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களல்ல, முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து கலவரங்களையும் நடத்தி ஆயிரக் கணக்கான அப்பாவி முஸ்ம் களை படுகொலை செய்வதற்கும் மூலகாரணமாக விளங்கிய அவர்களை பிரிட்டிஷ் மண்ணில் வரவேற்க வேண்டாம். அவ்வாறு வரவேற்றால் அது மதவாதத்தை வரவேற்பதாக அமையும் என பிரிட்டிஷ் இந்திய முஸ்லிம் கவுன்சின் தலைவர் முஹம்மது முனஃப்ஷீகா தெரிவித்திருக்கிறார்.

இந்திய அரசும் வேக நடவடிக்கை கள் வாயிலாக உடனடியாக தகர்ப்புக்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கவுன்சில் ஆஃப் இந்தியன் முஸ்லிம்ஸ் அமைப்பின் அறிக்கையினைத் தொடர்ந்து பிரிட்டனில் செயல்பட்டு வரும் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளன. மஸ்ஜித் இடிப்புக் குற்றவாளிகளை பிரிட்டனுக்குள் நுழைய விடக்கூடாது என்ற போர்க்குரல் எழத் தொடங்கியதைத் தொடர்ந்து கடப்பாரைக்கும்பல் உச்ச கட்டபீதியில் இருப்பதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் மனித குலவிரோதிகள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது இது முதல்முறையல்ல 2006-ஆம் ஆண்டே குஜராத் படுகொலைகளின் சூத்ரதாரியான நரேந்திர மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முதல் மோடிக்கு அமெரிக்காவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் பல தடவை மோடியின் சார்பில் அனுமதிக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் படுகேவலமாக மோடி தரப்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதே ஆண்டில் பிரிட்டனும் மோடிக்கு அனுமதி இல்லை என அறைந்து சாத்தியது. கடந்த 2008-ஆம் ஆண்டில் மீண்டும் அமெரிக்கா செல்ல மோடி தரப்பினரால் விசாவிற்கு விண்ணப்பம் கோரிய போதும் அனுமதி மறுக்கப்பட்டது. சமீபத்தில் ஓமனிருந்தும் மோடிக்கு மூக்கறுப்பு அறிவிப்புகள் வெளிவந்தன. இந்நிலையில் பரான் கூறிய குற்றவாளிகளை பிரிட்டனில் நுழையத்தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழத் தொடங்கியிருப்பதால் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட பயங்கரவாதிகள் வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாப்ரி மஸ்ஜித் உடனடியாக கட்டியெழுப்பப்பட வேண்டும். இடிப்புக் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் என அமெரிக்காவின் முன்னணி சமூகநல அமைப்பான இண்டியன் முஸ்லிம் கவுன்சில் ஆஃப் யு.எஸ்.ஏ. கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர். ஹைதர்கான் இது குறித்து விடுத்த அறிக்கையில் இந்தியாவின் தற்போதைய ஆட்சியாளர்களின் மீது தங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருப்பதாகவும் குற்றவாளிகள் நிச்ச யம் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இவரது அறிக்கை கடப்பாரை கும்பலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ஹபிபா பாலன்//tmmk.in//

Saturday, December 12, 2009

நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரி..!!!

இரவுகள் நீண்டு செல்கின்றன...!

நாய்களின் குறைப்போசையோடு உருவாகும் இரவு நேரத்து
வெறுமை உள்ளத்தை வாட்டி எடுக்கிறது...!

எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்றியே
விருப்பமின்றிச் செய்யும் தர்மத்தின் கஷ்டத்தோடு
விழிகளைத் தழுவுகிறது உறக்கம்...!

எதுவும் செய்வதற்கு வேலைகளற்ற
காலைப் பொழுதுகள்...!

உற்சாகமற்ற விடியல்கள்...!
அர்த்தமற்று கழிந்து செல்லும் நேரம்...!

கையாலாகாத் தனத்தை நொந்து கொண்டு
உள்ளத்தை பிழியும் வேதனை...!

பொறுப்பற்ற சமூகத்தின் குத்தல்
மொழிகள்...!

உதவி புரியும் போர்வையில் நடக்கும்
கழுத்தறுப்புக்கள்...!



படித்த படிப்பும், விழித்த இரவுகளும்
ஒரு பெறுமானம் அற்றுப் போகும் கணங்கள்...!

கைச்செலவையும் சொந்தப் பணத்தால்
செய்ய முடியாத கையாலாகாத்தனம்...!

தோள் கொடுக்க வேண்டியவர்களே உதைத்துத் தள்ளும்
கஷ்டமான அனுபவங்கள்...!

கழுத்தருப்பிற்கே காத்திருக்கும்
கழுகுக் கூட்டங்கள்...!

நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரி...!

உற்சாகத்தோடு விடியும்
ஒரு விடியலை எதிர் நோக்கிக்
காத்திருக்கிறேன்...!

அச்சம் சூழ்ந்த ஒரு யுத்த பூமியின் இரவைப் போல்
அதுவும் நீண்டு செல்கிறது...!

Friday, December 11, 2009

இந்தியாவையே கூறுபோட வைக்கும் தனி மாநில கோரிக்கை : தொடரும் கோரிக்கைகள் ஒரு அலசல்

ஆந்திராவில் தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிப்பது குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில்...

வகுப்பறையில் சார் தண்ணி , சார் ஒன்னுக்கு என்று சைகை செய்யும் மாணவன் ஒருவனை ஆசிரியர் அனுப்பிய உடன் ஒருவர் பின் ஒருவர்ராக கேட்பார்களே..
அந்த கதையாகிவிட்டது இந்த தனி மாநில பிரச்சனை.


தெலுங்கானாவைப் போல தமிழகத்தையும் இரண்டாகப் பிரித்து மதுரை யைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது.



இந்தக் கோரிக்கையை எழுப்பியவர்கள் - மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் டாக்டர் சேதுராமன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் ஆகியோர். பழ. நெடுமாறன் போன்ற தலைவர்கள் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்து காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தை, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வலியுறுத்தி அடுத்த மாதம் போராட்டம் நடத்தப்படும் என்று காரைக்கால் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

தற்போது தனி தெலுங்கானா கோரிக்கைக்கு மத்திய அரசு இசைவு தெரிவித்துள்ள நிலையில் காரைக்கால் போராட்டக் குழுவினர் தங்களின் கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர்.

காரைக்கால் போராட்டக் குழுவின் சார்பில் வக்கீல் செல்வ சண்முகம் இதுகுறித்து கூறுகையில்,

'ஆந்திரா மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை, காரைக்கால் போராட்டக்குழு வரவேற்கிறது. அதேபோல், காரைக்கால் மாவட்டத்தை, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் ஆணையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

இதுமட்டுமா ? வருது பாருங்க லிஸ்ட் >

'எங்களுக்கும் தனி ஸ்டேட்': சூடு பிடிக்கும் மாநிலப் பிரிவினை கோரிக்கைகள்

டெல்லி: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கை கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்கனவே எழுப்பப்பட்டு வரும் புது மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் மத்திய அரசு பெரும் குழப்ப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெரிய மாநிலங்களைப் பிரித்து சிறிய மாநிலங்களாக்கும் கோரிக்கைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. இதுதொடர்பாக பல பகுதிகளில் இயக்கங்களும், போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருப்பினும் அவற்றில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு புதிய மாநிலங்கள் அமைக்கப்பட்டன. உதாரணத்திற்கு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் உள்ளிட்டவை.

இந்த நிலையில் தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக நீண்ட காலமாக தனி மாநிலம் கோரி வரும் பல்வேறு பகுதிகளில் அந்தக் கோரிக்கைகள் மீண்டும் தூசு தட்டி எழுப்பப்பட்டுள்ளன.

கூர்க்கா மாநிலம்:

மேற்கு வங்க மாநிலத்தில் கூர்க்கா இனத்தவர் அதிகம் வாழும் பகுதிகளை தனியாகப் பிரித்து கூர்க்காலாண்ட் என்ற மாநிலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை உள்ளது.

விதர்பா:

மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியைத் தனியாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்க கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

புந்தல்கண்ட்:

அதேபோல ஏற்கனவே உத்தராஞ்சல் மாநிலத்திற்காக தங்கள் மாநிலத்தின் பல பகுதிகளை இழந்த உ.பியும், மத்தியப் பிரதேசமும் புந்தல்கண்ட் தனி மாநிலக் கோரிக்கைப் பிரச்சினையை சமீப காலமாக எதிர்கொண்டு வருகின்றன.

உ.பி, ம.பியில் உள்ள பந்தா, சித்ரகூட், ஜான்சி, லலித்பூர், சாகர் ஆகியவற்றை இணைத்து புந்தல்கண்ட் மாநிலம் அமைக்க வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் இது உள்ளது.

போஜ்பூர்-மிதிலாஞ்சல்:

இதேபோல கிழக்கு உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள பகுதிகளைப் பிரித்து போஜ்பூர் மாநிலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது.

அதேபோல பீகாரில், மிதிலாஞ்சல் என்ற தனி மாநிலக் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

ஹரித் பிரதேஷ்:

அதே போல மேற்கு உத்தரப் பிரதேசத்தின் 20 மாவட்டங்களைப் பிரித்து ஹரித் பிரதேஷ் என்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளது.

செளராஷ்டிரா:

குஜராத்தில் உள்ள செளராஷ்டிர பகுதிகளைப் பிரித்து தனி செளராஷ்டிரா மாநிலம் அமைக்கும் கோரிக்கையும் உள்ளது.

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் உள்ள சில பகுதிகளைப் பிரித்து கிரேட் கூச் பிகார் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

கூர்க்:

கர்நாடகத்தில் கூர்க் பகுதியைப் பிரித்து தனி கூர்க் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.

இப்படி நாடு முழுவதும் தனி மாநிலக் கோரிக்கைள் பெருமளவில் உள்ளன. இவற்றில் சில மட்டுமே நிறைவேறியுள்ளன. மற்றவை அப்படியே கிடப்பில் உள்ளன.

தற்போது தெலுங்கானாவை தொடர்ந்து இந்தப் புது மாநிலக் கோரிக்கைகள் மீண்டும் உயிர் பெற்று மத்திய அரசுக்கு பெரும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன.

மாவாயதி ஆதரவு:

இதற்கிடையே பெரிய மாநிலங்களைப் பிரித்து தனித்தனியான சிறிய மாநிலங்களை உருவாக்கினால் அது தேசத்துக்கு நல்லது என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து ஹரித் பிரதேஷ், பூர்வாஞ்சல், புந்தேல்கண்ட் ஆகிய மாநிலங்களை உருவாக்கினால் அதை ஆதரிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்

விட்டா ஒவ்வொரு ஊரையும் மாநிலமா ஆக்கு என்பார்கள் போல...


சரி ஒரு கோரிக்கை வலியுறுத்த படுகிறது என்றால் அதற்கு ஒரு முறை இல்ல.அப்பாவி மக்களை தூண்டிவிட்டு குளிர்காயும் எந்த அரசியல்வாதிகளை விட மோசமானவர்கள் யாரும்கிடையது .அந்த மாநில மக்களையே அடித்துக்கொள்ள வைத்துவிட்டார்கள்.

தனி மாநிலம் வேண்டும் vs தனி மாநிலம் வேணாம் என்ற நிலை ஆகிவிட்டது.

வாய்கிழிய நாங்கள் இந்தியர்கள் என்று பேச இவர்களுக்கு என்ன இருக்கிறது ?

ஆனா ஒன்னு ஒரு மாநிலம் தனியா குடுத்தா காங்கிரஸ் தலைல துண்ட போடா வேண்டியது தான் -பொறுத்திருந்து பாப்போம்.

-NAGOREFLASH TEAM

வறுமையின் ரணங்கள் - அதிரவைத்த கதை




இஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் ?

திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை சந்தோசமாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு.

ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது.அதுவே இந்தக் கட்டுரை.

திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.

உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம். (அல்குர்ஆன் 13:38)

''திருமணம் செய்ய வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' என நபி (ஸல்) அவர்களும் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

''இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில் அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு (ஆசையைக்) கட்டுப் படுத்தக் கூடியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
மனிதனின் வாழ்க்கையில் மிக அவசியமான இத்திருமணத்தை வசதியில்லாத ஜோடிகளுக்கு வசதியுள்ளவர்கள் முடித்து வைக்குமாறும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணையற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)

மனிதனின் வாழ்க்கையில் அவசியம் தேவைப்படும் இந்தத் திருமணம், பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் புரிந்த பிறகு சில நாட்கள் அல்லது சில மாதங்களில் பெரும் பிரச்சனைகள் ஏற்பட்டு, அது தொடர்கதையாக மாறி விடுகிறது. பலரின் வாழ்க்கையே தொடர்பு அறுந்து அந்தரத்தில் தொங்குகிறது.

மனித வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத இந்தத் திருமணம் ஏன் சில நாட்களில் கசக்கத் துவங்குகிறது? இதற்குக் காரணம் என்ன? இன்பமான வாழ்க்கை அமைய என்ன வழி வகைகள் இருக்கின்றன? என்பன குறித்து மார்க்கம் என்ன சொல்கிறது? என்று பார்ப்போம்.

இல் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமானால் முதலில் முக்கியமான ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் தவறு செய்பவர்களே! என்பதை ஆழமாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

தாம் எதிர் பார்த்த அளவிற்கு முழுமையாக யாரும் இருக்க மாட்டார்கள். கொஞ்சம் அப்படியும் இப்படியும் தான் இருக்கும். குறிப்பாக பெண்கள் நாம் எதிர் பார்த்த அளவிற்கு இருப்பது மிகக் கஷ்டம் தான். அவர்களிடம் பல குறைகள் நமக்கு தென்படலாம். அப்போது நாம் பொறுத்துக் கொண்டு அவளிடம் இருக்கும் மற்ற நற்பண்புகளை எண்ணி திருப்தி கொள்ள வேண்டும். அப்பெண்ணிடம் இருக்கும் சில குறைகள் கூட நமக்கு நன்மைகளை பெற்றுத் தரலாம்.

அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

தான் விரும்பியபடி நடக்கவில்லை, என் விருப்பதிற்கு மாற்றமாக நடக்கிறாள் என்ற எண்ணம் தான் பெரும்பாலும் கணவன், மனைவியிடம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணத்திற்கு முதலில் முட்டுக்கட்டை போட வேண்டும்.

திருமணம் வாழ்க்கை சிக்கலாக அமைவதற்கு இன்னொரு காரணம் மணப்பெண்ணை மார்க்கத்தின் அடிப்படையில் தேர்வு செய்யாமல் பணத்தையும் அழகையும் மட்டும் பார்த்து தேர்வு செய்வது தான்.

''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளது செல்வத்திற்காக 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக 3. அவளது அழகிற்காக 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.
மார்க்கம் தெரிந்து, அதன் படி நடக்கக் கூடிய பெண்ணை மணமகளாகத் தேர்வு செய்ய வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளை முழுமையாக புறக்கணிக்கப்படுவது குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தக் காரணமாக அமைகின்றது.

கணவன், மனைவிக்கு மத்தியில் சிக்கல் ஏற்படும் போது, அவர்களைச் சேர்த்து வைக்கும் நல்ல நோக்கத்தில் அவர்களை அழைத்து, மார்க்கம் கூறும் அறிவுரைகளைச் சொல்லும் போது, மார்க்கத்தைப் பற்றி தெரிந்திருந்தால் அந்த அறிவுரைகளை மதித்து சேர்ந்து வாழ முயற்சிப்பார்கள். மார்க்கத்தின் அடிப்படையே தெரியாதவர்களாக அந்தத் தம்பதி இருந்தால் எப்படி மார்க்கத்தின் போதனைகளை செவி சாய்த்துக் கேட்பார்கள்?

எனவே மணமகளையோ, மணமகனையோ தேர்வு செய்யும் போது இஸ்லாத்தின் அடிப்படை பற்றித் தெரியுமா? தொழும் பழக்கம் இருக்கிறதா? திருக்குர்ஆன் ஓதத் தெரியுமா? நற்பண்புகள் இருக்கிறதா? என்பதை முதலில் தெரிந்து இதற்கு முதலிடம் கொடுத்துத் தேர்வு செய்யுங்கள்.

''இவ்வுலகம் இன்பங்களாகும். இவ்வுலக இன்பங்களில் சிறந்தது நல்லொழுக்கமுள்ள பெண்ணாவாள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: முஸ்லிம்

''அதிகம் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடிய, அன்பு செலுத்தக் கூடியவர்களை திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: மஃகல் பின் யஸார் (ரலி), நூல்: நஸயீ.

''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! என்ற வசனம் இறங்கிய போது முஸ்லிம்களுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது. அப்போது உமர் (ரலி) அவர்கள், ''நான் உங்கள் கவலையை நீக்குகிறேன்'' என்று கூறி விட்டு (நபியவர்களிடம்) சென்று ''அல்லாஹ்வின் தூதரே! தங்களின் தோழர்களுக்கு இந்த வசனம் பெரும் கவலையை ஏற்படுத்தி விட்டது'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''உங்களில் மீதமுள்ள செல்வங்களை தூய்மைப் படுத்துவதற்குத் தான் அல்லாஹ் ஸகாத்தை கடமையாக்கியுள்ளான். வாரிசுரிமையை உங்களுக்குப் பிறகு வருபவர்களுக்காக ஏற்படுத்தியுள்ளான்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ''அல்லாஹு அக்பர்'' என்று கூறினார்கள். பின்னர் ''மனிதன் சேமிப்பதிலேயே சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டு விட்டு ''கணவன் பார்க்கும் போது மகிழ்ச்சியூட்டுவாள். அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் இல்லாத போது கற்பைப் பாதுகாப்பாளே அப்படிப்பட்ட நல்லொழுக்கமுள்ள பெண்மணி'' என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத்.

மேற்கூறிய நபிமொழிகளின் படி மணமக்களைத் தேர்வு செய்திருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம்.
குடும்ப வாழ்க்கை அமைதியாக இன்பமாக இருக்க மார்க்கம் சொல்லும் வழிமுறைகள் என்ன?

சிறு சிறு உதவிகளைச் செய்தல்
கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பு அதிகரிக்க, மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவளுக்குத் துணையாக இருந்து உதவ வேண்டும். காய்கறி நறுக்கும் போது, ரொட்டி சுடும் போது இது போன்ற காரியங்களில் மனைவி ஈடுபடும் போது சிறு சிறு உதவிகளைச் செய்தால் கணவன் மீதுள்ள அன்பு மேலும் அதிகரிக்கும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்து வந்துள்ளார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ''நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை) செவியுற்றால் (தொழுகைக்குப்) புறப்பட்டு விடுவார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் நூல்: புகாரி.

''நபி (ஸல்) அவர்கள் வீட்டில் வேலை செய்வார்களா?'' என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ''தனது ஆடையைத் தைப்பார்கள்; கிழிந்த செருப்பை தைப்பார்கள்; வீட்டில் ஆண்கள் செய்ய முடிகின்ற வேலைகளை செய்வார்கள்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: உர்வா நூல்: அஹ்மத்.அஹ்மதின் மற்றொரு அறிவிப்பில் ஆட்டின் பாலைக் கறப்பார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டில் ஆண்கள் செய்ய முடிந்த வேலைகளைச் செய்து தம் மனைவியருக்கு உதவியாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எத்தனையோ அலுவல்கள் இருந்தும் தம் குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்கியது அவர்களின் சிறந்த பண்பாட்டைக் காட்டுகிறது. இறைத்தூதர் அவர்களே இவ்வாறு நடந்திருந்தால் நாம் எந்தளவிற்கு நடக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் சிறு சிறு உதவிகள் கணவன் மனைவிக்கு மத்தியில் அன்பையும் பாசத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்.

ஊட்டி விடுதல்
சாப்பிடும் போது மனைவிக்கு ஒரு கவள உணவையாவது ஊட்டி விட்டால் கணவனின் மீது உள்ள அன்பை அதிகரிக்கச் செய்வதோடு இறையருளையும் பெற்றுத் தரும்.

''உன் மனைவியின் வாயில் ஊட்டக் கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்குக் கூலி வழங்கப்படாமல் இருக்காது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதவிடாய் நேரத்தில்...
பெண்கள் மாதவிடாய் நேரத்தில் சுத்தமாக இருக்க மாட்டார்கள் என்று கூறி யூதர்கள் அவர்களைத் தனி அறையில் அடைத்து வைத்தனர். பொதுவாக இந்த நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பார்கள். எனவே இதைப் போன்ற நேரங்களில் அவர்களிடம் அன்புடன் நடந்து கொண்டால் கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

யூதர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுடன் அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். வீடுகளில் அவர்களுடன் ஒட்டி உறவாடாமல் (ஒதுங்கி) இருப்பார்கள். எனவே நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (இது குறித்து) நபியவர்களிடம் கேட்டனர். அப்போது, ''நபியே! அவர்கள் மாதவிடாய் பற்றி உம்மிடம் வினவுகின்றார்கள். அது ஓர் (இயற்கை) உபாதை என்று நீர் கூறுவீராக! எனவே மாதவிலக்குற்ற போது பெண்களை (தாம்பத்திய உறவு கொள்வதை) விட்டு விலகியிருங்கள்'' என்று தொடங்கும் (2:222வது)


வசனத்தை அல்லாஹ் அருளினான். அதையடுத்து நபி (ஸல்) அவர்கள், ''தாம்பத்திய உறவைத் தவிர மற்ற காரியங்களைச் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரத்தில் உடலுறவைத் தவிர மற்ற அனைத்துக் காரியங்களையும் செய்து கொள்ளலாம். அவர்களுடன் பேசுவது, அவர்கள் சமைத்ததைச் சாப்பிடுவது போன்ற எந்தக் காரியத்தையும் செய்யலாம். இதற்கு நபி (ஸல்) அவர்களே சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துள்ளார்கள்.

நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவிவிடுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது எனது மடியில் சாய்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கும் போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் நிலையில் அவர்களது தலையைக் கழுவுவேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது நான் (ஏதேனும் பானத்தை) பருகி விட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் ஏற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்து விட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதவிடாய் என்று கூறி மற்றவர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியரிடம் அனைத்து உதவிகளையும் பெற்று வந்துள்ளார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் தண்ணீரை வாய் வைத்துக் குடித்து விட்டுத் தரும் போது, ஆயிஷா (ரலி) அவர்கள் எந்த இடத்தில் வாய் வைத்து குடித்தார்கள் என்பதைக் கவனித்து, அதே இடத்தில் வாய் வைத்து குடித்துள்ளார்கள். இறைச்சியைக் கொடுக்கும் போதும் ஆயிஷா (ரலி) அவர்கள் கடித்த அதே இடத்தில் கடித்து, மாதவிடாய் நேரத்தில் பெண்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெரியப்படுத்துகின்றார்கள்.

இந்த நேரம் மட்டுமல்ல! ஒரு பெண் கவலையோடு இருக்கும் போதும், தனக்கு உறுதுணையாக யாரும் இல்லை என்று அவள் எண்ணும் போதும் அவளிடம் கணவன் இது போன்று நடந்து கொண்டால் நிச்சயம் கணவனிடம் மனைவி மதிப்பும் மரியாதையும் வைப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.

இல்லற வாழ்க்கை இனிக்க மார்க்கம் தடை செய்யாத விஷயங்களில் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்கள் விரும்பியதைச் செயல் படுத்த வேண்டும்.

இவ்வாறு செயல் படுத்தும் போது அவர்களின் ஆசை நிறைவேறுவதுடன் கணவன் மீதும் மதிப்பும் மாரியாதையும் உயரும்.
உதாரணமாக எதாவது ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு சொன்னால் அந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். முடியவில்லையானால் இன்னொரு நாளில் அழைத்துச் செல்வதாகக் கூறி அதன்படி நடக்கவேண்டும்.

இவ்வாறு செய்வதால் கணவன் மனைவி உறவு சீர்படும்; சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே நடந்து கொண்டார்கள்.
ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, ''நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?'' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) ''அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்'' என்று கூறினார்கள். நான் பார்த்து சலித்த போது, ''உனக்கு போதுமா?'' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ''அப்படியானால் (உள்ளே) போ!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை.

மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தன் தோளை விளையாட்டை பார்க்கும் சாதனமாக மாற்றிக் கொடுத்துள்ளார்கள்.

இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள்.அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி.

ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை; தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களின் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

இதைப் போன்று மனைவியின் தோழிகளைப் பார்ப்பதற்கு அவர்களுடன் பேசுவதற்கு அனுமதி கேட்டால் கணவன்மார்கள் அனுமதி அளிக்க வேண்டும். பெற்றோர்களிடம் கூட பேசுவதற்கும் பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கும் கணவன்மார்கள் நபிகளாரின் இந்த முன்மாதிரியை சிந்திக்க வேண்டும்.

விளையாடுதல்
திருமணம் முடிப்பவர்கள் கணவன் மனைவி அன்புடனும் பாசத்துடனும் இருக்க, தாங்கள் அன்பை வெளிப்படுத்தும் வண்ணம் சிரித்து விளையாடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது; ஆர்வப் படுத்தப்பட்டுள்ளது.


''கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே! நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி.


கணவன் மனைவியுடனும் மனைவி கணவனுடனும் விளையாடு வதற்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போது நான் இளம் வயதுப் பெண்ணாக இருந்தேன். எனக்கு சதை போட்டு உடல் கனத்திருக்க வில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள். என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். அவர்களை முந்திச் சென்று (இறுதியில்) நானே முந்தினேன். நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள்.

எனக்கு சதை போட்டு நான் கனத்து விட்டேன். (ஓட்டப் பந்தயம் விஷயத்தையும்) நான் மறந்து விட்டேன். இன்னொரு முறை அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றேன். அப்போதும் மக்களிடம் (ஓட்டப் பந்தயம் வைத்து) ''முந்தித் செல்லுங்கள்!'' என்றார்கள். அவர்கள் முந்திச் சென்றார்கள்.

பின்னர் என்னைப் பார்த்து ''வா! உன்னை நான் முந்திச் செல்கிறேன்'' என்றார்கள். நான் அவர்களுடன் ஓடினேன். (இறுதியில்) என்னை நபிகளார் முந்தி விட்டார்கள். சிரித்துக் கொண்டு ''அதற்கு இது சரியாகி விட்டது'' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.


எந்தப் பயணத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது என்ற விவரம் இல்லை. எனினும் குறைந்த பட்சம் நபிகளாரின் வயது என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும். நபி (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுடன் கலந்து கொண்ட பயணங்கள் மதீனா வாழ்க்கையில் தான் நடந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் போகும் போது வயது 53. மதீனா சென்றவுடனே இந்த நிகழ்ச்சி நடந்திருந்தாலும் அவர்களின் வயது 53 ஆக இருக்க வேண்டும்.

நபிகளாரின் வயது (குறைந்த பட்சம்) 53 ஆக இருக்கும் போது தன் மனைவியிடம் ஓட்டப் பந்தயம் வைத்து தோற்றுப் போய், பல வருடங்கள் கழித்து அதை நினைவில் வைத்து வெற்றிக் கொண்டது, மனைவியிடம் கணவன் வயது வரம்பின்றி இதுபோன்று விளையாடி மகிழ்விக்கலாம் என்பதை மிகத் தெளிவாகப் பறை சாற்றுகிறது.

இவ்வாறு நடப்பதும் கணவன், மனைவியிடம் அன்பை அதிகரிக்க உதவும் என்பதை அறியலாம்.




nagoreflash // THANKS 2 G.N //
Related Posts Plugin for WordPress, Blogger...