(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, November 30, 2009

மஸ்ஜிதுந் நபவீ ஸியாரத்

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ?

மதீனா முனவ்வராவுக்குப் பயணம் செல்லும் பெரும்பாலோர் அதன் நோக்கத்தைப் புரியாமலே சென்று வருகின்றனர். சிலர் அதை ஹஜ்ஜூ வணக்கங்களில் ஒன்றாகவே கருதுகின்றனர்.

மதீனா சென்று ஸியாரத் செய்வது ஹஜ்ஜூடைய கடமைகளில் ஒன்றா ? அல்லது அதன் ஸூன்னத்தான வணக்கங்களைச் சார்ந்ததா? ஹஜ்ஜூக்காக வந்து மதீனாவுக்குச் செல்ல வில்லையெனில் ஹஜ்ஜூ நிறைவேறாதா? போன்ற கேள்விகள் நம்மில் பலருக்கு இன்றும் எழுகின்றன. கேட்கவும் செய்கின்றனர்.


மதீனா ஸியாரத் என்பது ஹஜ்ஜூ நிறைவேறுவதற்குரிய கடமைகளில் ஒன்றல்ல. அதன் ஸூன்னத்தான ஒரு வணக்கமுமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.


பின் எதற்காக அங்கே செல்ல வேண்டும் ?

தொழுவதற்காக’ என்ற எண்ணத்தில் (நிய்யத்தில்) மட்டுமே மஸ்ஜிதுன் நபவீக்குப் பிரயாணம் மேற்கொள்ள வேண்டும்.நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-

இந்த என் பள்ளியில் தொழுவது மஸ்ஜிதுல் ஹராமைத்தவிர உள்ள ஏனைய பள்ளிவாசல்களில் தொழுவதைவிட ஆயிரம் மடங்கு மேலானது. (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி); ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.)

மேலும் தெரிவித்துள்ளார்கள்:

மூன்று பள்ளிவாசல்களுக்கே தவிர வேறு எங்கும் பயணம் மேற்கொள்ளக்கூடாது. ஒன்று (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம். மற்றொன்று (மதீனாவிலுள்ள) எனது பள்ளிவாசல். புpறிதொன்று (ஜெரூஸலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் பள்ளிவாசல்.

இந்த இரு நபிமொழிகளின் மூலம் 'மூன்றே முன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அதுவும் நன்மையை நாடி, தொழுகை என்னும் வணக்கத்தை நிறைவேற்றுதற்காகவே செல்ல வேண்டும். ஸியாரத் செய்யும் நோக்கத்துடன் அல்ல’ என்பது தெளிவாகிறது.

இதிலிருந்து ’ஹஜ்ஜூக்கு முன்னரோ பின்னரோ மதீனா ஸியாரத்துக்குச் செல்வது ஹஜ்ஜூக் கடமையைச் சார்ந்ததல்ல’ என்பதையும் ‘ஹஜ்ஜூக்கும் இதற்கும் தொடர்பில்லை’ என்பதையும் நாம் நன்றாகப் புரிந்து கொள்ளலாம்.

மஸ்ஜிதுந்நபவிக்குச் சென்றால் நமது கடமைகள் என்னென்ன?


1. மஸ்ஜித் நபவியில் தொழுவது

ஏனைய பள்ளி வாசல்களில் கடைப் பிடிப்பதையே இங்கும் கடைப் பிடிக்கவேண்டும்.
1. வலது காலை முன்வைத்து உள்ளே நுழைய வேண்டும்.
2. உள்ளே செல்லும்போது ‘ பிஸ்மில்லாஹி, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலில்லாஹி, அல்லாஹும்ம ஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மத்திக்க’ என்ற துஆவை ஓதவேண்டும்.
3. பின்னர் இரண்டு ரகஅத்துகள் தஹிய்யத்துல் மஸ்ஜிது தொழவேண்டும்.


நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
உங்களில் யாரேனும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) , ஆதாரம் : புகாரி-1163)

உள்ளே சென்றதும் ஃபர்ளான தொழுகைக்கு ஜமாஅத் ஆரம்பிக்கப் பட்டு விட்டால் நேராகச் சென்று அதில் சேர்ந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?


2. ஸியாரத் செய்வது.

தொழுகை முடிந்ததும் நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கும் அவர்களின் அருகே அடக்கமாயிருக்கும் அவர்களின் இரு தோழர்களான அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோரின்ன் இரு கப்ருகளுக்கும் சென்று ஸலாம் சொல்வது முஸ்தஹப்- விரும்பத் தக்கதாகும்.

எவ்வாறு ஸலாம் சொல்ல வேண்டும்?

"அஸ்ஸலாமு அலைக்க யாரஸூலல்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று நபி (ஸல்) அவர்களுக்கும்,

அடுத்து, அங்கு அடங்கப் பட்டிருக்கும் அவர்களின் தோழர் அபூபக்ரு அவருகளுக்கு, "அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்கருஸ் ஸித்தீக் கலீஃபத்த ரஸூலில்லாஹி,
வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ !" என்றும்,

அடுத்து "அஸ்ஸலாமு அலைக்க யா உமர் ஃபாரூக் கலீஃபத்த ரஸூலில்லாஹி, வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ!" என்று உமர் (ரலி) அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட வேண்டும்.

பெருமானார் (ஸல்)அவர்களின் ஒவ்வொரு செயலையும் வழிமுறைகளையும் அணுவளவும் பிசகாது பின்பற்றிவந்த அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் இவ்வாறுதான் செய்து வந்துள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களிலே காணமுடிகிறது.

இதுவே ஸியாரத் செய்யும் முறையாகும்.

அங்கே நீண்ட நேரம் நிற்பதோ, அவர்களிடம் துஆ கேட்பதோ, குரலை உயர்த்திக் கோரசாக துஆக்களை ஓதிக்கொண்டிருப்பதோ கூடாது.

கிப்லாவை முன்னோக்கி நமது தேவைகளை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும்.

அங்கே ரவ்லாவுக்கருகே நின்று தொழுவதோ, தொட்டு முத்துவதோ கூடாது.


ஸியாரத்தின் நோக்கம் - நினைவிற் கொள்க!

1. மதீனா ஸியாரத் ஹஜ்ஜூக் கடமைகளில் ஒன்றல்ல.
2. பெருமானார் (ஸல்) அவர்களின கப்ரை ஸியாரத் செய்யும் நோக்கத்தை முன்வைத்து அங்குச் செல்வது கூடாது.
3. தொழுவதற்காகவே செல்லவேண்டும்.

மஸ்ஜிதுத் தக்வா-குபா பள்ளி வாசலில் தொழுவது

அடுத்தபடியாக, மதீனாவுக்கு வந்திருப்போர் மஸ்ஜிது குபாவுக்குச் சென்று தொழுவது நபி வழியாகும். இது, "தக்வா அடிப்படையில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல்" என்று இதற்கு ஓர் அங்கீகாரத்தையும் வழங்கி இறைவன் சிறப்பித்துள்ளான். (குர்ஆன்:9:108).

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"யார் தமது வீட்டில் உளுச் செய்துவிட்டு, பின்னர் குபா பள்ளிவாசலுக்கு வந்து இரு ரகஅத்துகள் (இன்னொரு அறிவிப்பில் ஒரு தொழுகையை) தொழுகிறாரோ அவருக்கு ஒரு உம்ரா செய்த நன்மைகிடைக்கும்"(ஆதாரம்:அஹ்மது,நஸயீ,அப்னுமாஜா,ஹாக்கிம்)

நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை தோறும் வாகனத்திலோ, கால்நடையாகவோ இங்கு வந்து செல்வார்கள்.

ஜன்னத்துல் பகீஃ, உஹது ஷுஹதாக்களை ஸியாரத் செய்வது.

நபி (ஸல்) அவர்கள் உஹதுக்குச் சென்று ஸியாரத் செய்து அவர்களுக்காக துஆ செய்து வருவார்கள்.

நபி (ஸல்) அவர்கள், மக்கள் கப்ருகளுக்குச் செல்வதன் நோக்கத்தைப் புரியாமலிருந்ததால் ஆரம்பத்தில் தடை செய்திருந்தார்கள். பின்னர் அதற்கு அனுமதி வழங்கினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:-
"கப்ருகளுக்குச் சென்று ஸியாரத் செய்வதை தடை செய்திருந்தேன். இப்போது (அதன் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொண்டதால்) ஸியாரத் செய்து வாருங்கள்" ஆதாரம்: முஸ்லிம்.

கப்ருகளுக்குச் சென்றால் எவ்வாறு ஸியாரத் செய்வது.? அங்கு என்ன செய்யவேண்டும் ? என்பதை நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு மிகத் தெளிவாகவே கற்றுக் கொடுத்துள்ளார்கள்.

ஃபாத்திஹா ஓதச் சொல்லவில்லை. யாஸீன் ஓதச் சொல்லவில்லை. இறந்தவர்களிடம் துஆ கேட்கச் சொல்லவில்லை. பின் என்ன சொன்னார்கள் ?


பின் வரும் துஆவை மட்டும் ஓதச் சொன்னார்கள்:-

‘அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல் முஸ்லிமீன்! வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிக்கும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியா’ - ஈமான் கொண்டு முஸ்லிமாக வாழ்ந்து அடக்கமாகியிருக்கும் நல்லடியார்களே! நிச்சயமாக விரைவில் நாங்களும் (மரணமடைந்து) உங்களோடு சேரவிருக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் நன்மையை வழங்க அல்லாஹ்வை வேண்டுகிறோம். ஆதாரம்: முஸ்லிம்.


இதைத்தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. பாத்திஹா ஓதுவதோ, யாஸீன் ஓதுவதோ, நேர்ச்சை நேருவதோ, இறந்தவர்களிடம் துஆ கேட்பதோ கூடாது.
இதையடுத்து உஹது சுஹதாக்களின் கப்ருகளுக்குச் சென்று இதைப்போன்றே ஸியாரத் செய்யவேண்டும்.


செய்யக் கூடாதவை:-


1. ஆண்களுக்கு மட்டுமே ஸியாரத் அனுமதியே தவிர பெண்களுக்கல்ல.
2. நமது தேவைகளுக்காக நபிகள் நாயகத்திடம் பிரார்த்திப்பது கூடாது.
3. கப்ரு திசையை நோக்கிப் பிரார்த்திப்பதும் கையை உயர்த்துவதும் கூடாது.
4. அங்கே நீண்ட நேரம் நிற்பதும் கூடாது.
5. அங்கு நுழையும்போதோ, உள்ளே சென்ற பிறகோ குறிப்பிட்ட துஆக்கள், விசேச துஆக்கள் ஓதவேண்டுமென்பது எதுவும் கிடையாது.
6. கூட்டாக (கோரஸாக) துஆ ஓதுவதும் கூடாது.
7. ஒவ்வொரு முறையும் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததும் கப்று ஸியாரத் செய்யவேண்டும் என்பதும் கிடையாது.
8. ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் கப்று ஸியாரத் என்பதும் இல்லை.
9. பெருமானாரின் கப்ருக்கருகே (மட்டுமல்ல; எந்தக் கப்ருக்கருகிலும்) தொழுவது கூடாது.
10. மிஹ்ராபில் தொழவேண்டும் என்பதும் அங்கே முண்டியடித்துக் கொண்டு தொழுவதும் கூடாது.
11. ரவ்லா தூண்களின் எல்லைக்குள்தான் தொழுது தீரவேண்டும் என்பதும் கிடையாது.


அங்கே எங்கு வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம். இந்த இரு இடங்களிலும் தொழுவதற்காக மக்கள் முண்டியடித்துக் கொள்வதையும் தாமும் சரிவரத் தொழாது பிறரையும் தொழவிடாது சிரமப்படுத்தும் செயல்களையும் மார்க்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. பிறருக்குத் துன்பம் விளைவிப்பது ஹராமாகும். ஒரு சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஹராமைச் செய்ய வேண்டுமா? நாம் சிந்திக்கவேண்டும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் பெயரைக் கேட்டதும் கை நகம் தொட்டு முத்தி நுகர்ந்து கண்களில் ஒற்றிக் கொள்வதும் மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

வேறு ஸியாரத் செய்யவேண்டிய முக்கியமான இடங்கள் ஏதேனும் உண்டா? என்றால் எதுவும் இல்லை.

நன்றி : அல் பாக்கவீ டாட் காம்.

Sunday, November 29, 2009

நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை

நாகூர் - ஒரு வரலாற்றுப் பார்வை ஜெ.ராஜா முகமது M.A., B.Sc., (காப்பாட்சியர் ,அரசு அருங்காட்சியகம் , புதுக்கோட்டை - 622 002 )

நாகூர் என்றதும் நம் சிந்தைக்கு இனிமையுடன் நினைவுக்கு வருவது நாகூர் ஆண்டவர் என்றழைக்கப்படும் இறைநேசச் செல்வர் ஹஜ்ரத் செய்யிது காதிர் ஷாஹ¥ல் ஹமீது மீரான் சாஹிபு அவர்களின் தர்கா ஒன்றுதான். ஆனால் தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாற்றிலும், இஸ்லாம் வளர்த்த இன்பத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் கூட நாகூர் சிறப்பான இடம் வகிக்கிறது. இவை குறித்த சில வரலாற்றுச் செய்திகளை இங்கு காண்போம்.



நாகூர், நாகப்பட்டினத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் ஷாஹ¤ல் ஹமீது வலி அவர்கள் நாகூருக்கு வந்த பிறகு நாகூரின் வரலாறு ஒளி பெறுகிறது. போர்த்துக்கீசியர்களின் பதிவேடுகள் நாகூரை ‘நாகூரு’ என்றும் நாகப்பட்டினத்தின் முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்றும் குறிக்கின்றன. போர்த்துக்கீசியர்கள் நாகப்பட்டினத்தை 16ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிடித்துக் கொண்டதும் நாகூர் முஸ்லீம்களின் வணிக வரலாறும் தெரிய வருகிறது.

நாகூர் ஷாஹ¥ல் ஹமீது வலி அவர்கள் கி.பி. 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களது காலம் கி.பி 1532-1600 என அறிஞர்கள் கருதுகின்றனர் (1). ஹிஜ்ரி 978ஆம் ஆண்டு (கி.பி. 1558) இவ்வுலக வாழ்வை நீத்தார்கள் எனவும் இவர்களது நினைவாக முதல் கந்தூரி 1559-ல் நடைபெற்றதாகவும் தர்காவின் வரலாறு கூறும் எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார் (2). ஆற்காட்டை ஆண்ட நவாபுகள் இவர்களது பெயரால் தஞ்சாவூர் நகரை காதர் நகர் என பெயரிட்டனர்(3). நாகூர் பகுதியில் அமைதி வழியில் தனது அன்பு அழைப்பால் எண்ணற்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்த பெருமை நாகூர் ஆண்டகை அவர்களைச் சாரும். இவர்களது அருட்கொடையைத் தொடர்ந்து பெறும் பொருட்டு தமிழகத்தின் பிற பகுதியிலிருந்தும் முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர். இஸ்லாமியர் பெருகினர். இப்பகுதியில் இஸ்லாம் செழித்தோங்கியது.

ஷாஹ¥ல் ஹமீது வலியுல்லா அவர்கள் நாகூருக்கு வருவதற்கு முன்பே அரேபிய நாட்டிலிருந்து செய்யிது முபாரக் வலியுல்லா அவர்களும், முகமது சித்திக் இப்னு மசூத் அவர்களும் நாகூரில் தங்கி இஸ்லாமிய மார்க்கப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இவர்களது கல்லறைகளும் நாகூரில் உள்ளன(4).

16ஆம் நூற்றாண்டில் நாகூர் பற்றிய வெளிநாட்டார் குறிப்புகளிலும், இலக்கியங்களிலும் பயணக் குறிப்புகளிலும் ஷாஹ¥ல் வலியுல்லா அவர்களைப் பற்றியோ அல்லது தர்கா பற்றியோ குறிப்புகள் ஏதும் இல்லை. இதே காலகட்டத்தில் (1545) நாகப்பட்டினம் பகுதிக்கு வருகைதந்து ஏராளமான பரதவர்களை கிருத்துவ மதத்திற்கு மாற்றம் செய்து கொண்டிருந்த புனித ப்ரான்சிஸ் சேவியர் அவர்களின் குறிப்புகளிலும் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் இல்லை (5).


நாகூர் ஆண்டவர் தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரின் (1560-1614) நோயினைத் தீர்த்து வைத்ததாகவும் அவர்களது அருளினால் மன்னனுக்கு ஒரு ஆண் மகவு பிறந்ததாகவும் ‘கஞ்சுல் கராமத்து’ கூறுகிறது. நாகூர் தர்காவிற்கும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களுக்கும் இக்காலம் முதல் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இக்காலத்தில் நாயக்க மன்னர்களைப் பற்றி எழுதப்பட்ட ரகுநாதபியுதாயமு, சாகித்ய ரத்னகாரா, சங்கீதசுதா ஆகிய தெலுங்கு இலக்கியங்களில் நாகூர் ஆண்டவர் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை. ஆனால் நாயக்க மன்னர்கள் அப்போது நாகப்பட்டினத்தை ஆக்ரமித்துக்கொண்டிருந்த போர்த்துக்கீசியருடன் பகைமை கொண்டிருந்த காரணத்தினாலும் நாயக்க மன்னர்கள் முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதாலும் நாகூர் ஆண்டவர் போன்ற வலிமார்கள் மிகப் பெரிய மருத்துவ மேதைகளாகவும் திகழ்ந்தார்கள் என்பதாலும் இத்தகைய வழக்குகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்பலாம். (6). இக்காலத்தில் நாகூர் ஆண்டகையின் செயற்பாடுகள் தொடக்க நிலையில் இருந்ததாகக் கொள்ளலாம்.

இறைநேசச் செல்வர்களான புனித அடியார்களைப் பற்றிய வரலாறுகளும், அவர்களது அற்புத ஆற்றல்களை சிறப்பித்து கூறும் செய்திகளும் ஏராளம் உண்டு. தொன்றுதொட்டு வழங்கிவரும் கதைகளை அப்படியே எழுதிவிடுவது என்பது வழக்கமாக உள்ளது. அவற்றை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி தெளிவுபடுத்த முஸ்லீம் எழுத்தாளர்கள் போதிய முயற்சிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும். நமது வரலாறு பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நாகூர் ஆண்டவர் குறித்து நிறைய படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் இவர்கள் பற்றிய வரலாற்றுச் சான்றிதழ்கள் வலுவிழந்து நிற்கின்றன. உதாரணமாக நாகூர் நாயகர் , கடலில் வந்த கப்பலில் உடைப்பு ஏற்பட்டு தத்தளித்துக் கொண்டிருப்பதை உணர்ந்து தமது கண்ணாடியை கடல் நோக்கி எறிந்ததாகவும் அக்கண்ணாடி கப்பலில் ஏற்பட்ட உடைப்பை அடைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி ஆபத்திலிருந்து தப்பிய கப்பல் ஹாலந்து நாட்டைச்சேர்ந்த டச்சுக்காரர்களின் கப்பல் என்றும், இதற்கு நன்றிக்கடனாக டச்சுக்காரர்கள் நாகூர் நாயக்கருக்கு நன்றி செலுத்தியதாகவும், ஒரு ஆசிரியர் குறிப்பிடுகின்றார் (7). நாகூர் ஆண்டவர் அவர்கள் காலத்தில் டச்சுக்காரர்கள் கிழக்குக் கடற்கரைக்குப் பகுதிக்கு வரவே இல்லை. அப்போது நாகப்பட்டினம் பகுதியில் இருந்தவர்கள் போர்த்துக்கீசியர் ஆவார்கள். டச்சுக்காரர்கள் முதன்முதலில் 1605ம் ஆண்டிலேயே கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு வருகின்றனர் (8). 1658-ம் ஆண்டில்தான் நாகப்பட்டினம் துறைமுகம் டச்சுக்காரர்கள் வசமாகிறது (9).

தஞ்சாவூரை ஆண்டுவந்த மராத்திய மன்னர்கள் நாகூர் தர்காவை விரிவுபடுத்துவதற்கு பல்லாற்றானும் உதவிகள் செய்துள்ளனர். கி.பி. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நாகூர் தர்கா சிறிய கட்டிடங்களுடனேயே இருந்து வந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். மராட்டிய மன்னர் பிரதாப்சிங் (1739-1763) நாகூர் தர்கா கட்டிடங்களை விரிவு படுத்திக் கட்டினார். இம்மன்னர் நாகூர் தர்கா கட்டிடங்களின் Founder என்று சொல்லப்படுகிறது. (10). மேலும் பிரதாப்சிங் தர்காவின் பராமரிப்பிற்கு பதினைந்து கிராமங்களை மானியமாக அளித்ததாக கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகிறது (11). தர்காவில் உள்ள மிக உயரமான (131) அடி மனோராவைக் கட்டியதும் இம்மன்னரே ஆவார். பிரதாப்சிங்கிற்குப் பிறகு வந்த மராட்டிய மன்னர்களும் தர்காவிற்கு பல கொடைகள் வழங்கியுள்ளனர். இக்கொடைகள் குறித்த செய்திகள் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் மோடிப் பதிவேடுகளில் நிறையக் காணப்படுகின்றன. கந்தூரி உற்சவத்தின்போது ஆண்டுதோறும் மராட்டிய மன்னர்களிடமிருந்து அலங்கார ஆடைகள் வருவது வழக்கமாக இருந்தது (12). நாகூர் பகுதி ஆங்கிலேயருடைய ஆட்சிக்குட்பட்டபின்னும் மராட்டிய மன்னர்கள் தர்காவின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து பெரிதும் அக்கறைகாட்டி வந்தனர். பிரதாப்சிங் கட்டிய மனோராவை ஆங்கிலேயர்கள் தங்களது கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தனர். மராட்டிய மன்னர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இப்பழக்கம் நிறுத்தப்பட்டதாக ஆங்கிலேயரின் பதிவுகள் தெரிவிக்கின்றன (13).

மேலும் ஜாதி மத பாகுபாடின்றி இந்துக்களும் முஸ்லீம்களும் தர்காவிற்கு வந்து வழிபடுவதை ஆங்கிலேயர் வெகுவாகப் பாராட்டி எழுதியுள்ளனர் (14).

இந்து மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் பலர் தர்காவின் கட்டிடங்களைக் கட்டுவதற்கு நிறைய பொருளுதவி செய்துள்ள செய்திகளை தர்காவில் காணப்படும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. 18-ம் நூற்றாண்டில் நடைபெற்ற கர்நாடகப் போரின்போது பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்ட செய்தியும் நமக்கு கிடைக்கிறது (15).

19-ம் நூற்றாண்டில் தர்காவின் தரிசனத்திற்கு வரும் கூட்டம் மிகவும் அதிகரித்துக் கொண்டுவந்தது. இதனால் தர்காவின் வருமானமும் பெருகியது. ஆகவே தர்கா நிர்வாகத்தைக் கவனிக்கப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டன. இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து இந்த தர்காவைப் போற்றி வந்ததால் ஒரு சமயம் முத்துசாமிப்பிள்ளை என்பவர் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் (16). தர்காவிற்கான மானியங்கள் முறைப்படுத்தப்பட்டன. மானிய நிலங்களிலிருந்து வரும் நெல் வருமானத்தை வலியுல்லா அவர்களின் சந்ததியினர் நிர்வகித்து வர வழிவகை செய்யப்பட்டிருந்தது (17). 1817-ம் ஆண்டு அறநிலைய சட்டப்படி ஆங்கிலேய அரசே தர்காவின் நிர்வாகத்துக்கு வந்தது. 1934-ம் ஆண்டு முஸ்லீம் அறநிலையங்களுக்கென தனிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது (18). 1954-ம் ஆண்டு வக்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டபின் தர்கா நிர்வாகம் இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்பட்டது.

நாகூர் தர்காவில் கந்தூரி 14 நாட்கள் நடைபெறுகிறது. அப்போது இந்தியாவில் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கூடி வலியுல்லா அவர்களின் அருள் வேண்டுகின்றனர். 9-ம் நாள் பீர் என்னும் பக்கீர் மௌனமாக அமர்ந்திருக்கும் பழக்கம் ஆந்திர மாநிலம் பெணுகொண்டா தர்கா நடைமுறைப் பழக்கங்களிருந்து பெறப்பட்டதாக தெரியவருகிறது (19). மேலும் இந்து கலாச்சாரத் தாக்கத்தினால் பல வழிபாட்டு முறைகள் தர்காவில் பின்பட்டு வருவதைக் காண்கிறோம்.

நாகப்பட்டினத்திலும், நாகூரிலும் முஸ்லிம் வணிகர்கள் பலர் வாழ்ந்து வந்தனர். நாகூரில் வாழ்ந்து வந்த முஸ்லிம் வணிகர்கள் பற்றிய செய்திகளும், நாகூர் துறைமுகம் குறித்த செய்திகளும் 16-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகப் பெருமக்கள் கப்பல் உரிமையாளர்களாகவும், கப்பல் செலுத்தும் தொழிலில் ஈடுபட்டவர்களாகவும், கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வாணிபம் செய்பவர்களாகவும் இருந்தனர். முஸ்லிம் வணிகர்கள் அனைவருமே கப்பல்கள் வைத்திருக்கவில்லை. ஒருசில வணிகர்களுக்குச் சொந்தமாக இருந்த கப்பல்களில் பிற வணிகர்கள் தங்களது வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்று வாணிபம் செய்துள்ளனர்.



நாகூர் கடற்கரையில் 16-ம் நூற்றாண்டில் ஐந்து கோயில்கள் இருந்தன. இந்தக் கோயில்கள் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தன. இத்துறைமுகத்திற்கு ஒன்றை மரப்பாய் கப்பலிலிருந்து, 300 டன் எடையுள்ள கப்பல் வரை வந்து சென்றன. இங்கு வாழ்ந்த முஸ்லிம் வணிகர்கள் சுமத்தரா, ஜாவா, மலாக்கா, மலேயா, பர்மா, இலங்கை ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் வணிகத் தொடர்பு வைத்திருந்தனர். முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாவன : அரிசி, சங்கு , மிளகு மற்றும் துணிவகைகள். இறக்குமதிப் பொருட்களாவன : பாக்கு, யானை, குதிரை, தேங்காய், உலோகங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் (20). நாகூர் துறைமுகத்திலிருந்து மேற்கு கடற்கரைத் துறைமுகங்களுக்கும் கிழக்குக் கடற்கரையோரமாக உள்ள பிற துறைமுகங்களுக்கும் வணிகத் தொடர்பு மிக அதிகமாக இருந்து வந்தது. மேலும் நாகூர் துறைமுகம் வெட்டாறின் கிளையான குடவளாற்றின் முகத்துவாரத்தில் இருந்ததால், ஆற்றில் தண்ணீர் அளவு கணிசமாக இருக்கும்போது, ஆற்றினுள் குறைந்த எடையுள்ள கப்பல்கள் மற்றும் படகுகள் போக்குவரத்து நடந்து வந்தது. இதன்மூலம் உள்நாட்டு விளைபொருட்களை, துறைமுகத்திற்கு ஏற்றிவர ஏதுவாக இருந்தது (21).

16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசியர் நாகப்பட்டினம் துறைமுகத்தைப் பிடித்துக் கொண்டனர். இயல்பாக அவர்கள் முஸ்லிம்கள் மீது காட்டிய பகை உணர்வு அங்கு வாழ்ந்த முஸ்லீம் வணிகர்களை நிலைகுலையச் செய்தது. போர்த்துக்கீசிரியன் அனுமதிச்சீட்டுடன் (cartaz) முஸ்லீம் வணிகர்களும் வாணிபத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் முஸ்லீம் வணிகர்கள் அவர்களை விட்டு விலகிச் சென்று நாகூர் துறைமுகத்திலிருந்து தங்களது வாணிப நடவடிக்கைகளை நடத்தி வந்தனர். நம் நாட்டு மன்னர்களிடையே ஏற்பட்ட பிணக்குகளினாலும் ஐரோப்பியர்களின் தலையீட்டினாலும் தமிழகத்தின் அரசியல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக முஸ்லீம் வணிகர்களும் அவர்களது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டன. பிரஞ்சு தளபதி லாலி நாகூர் தர்காவை கொள்ளையிட்டது மட்டுமின்றி நாகூர் துறைமுகத்திலிருந்த முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமான இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றார் என்பதிலிருந்து முஸ்லிம் வணிகர்களின் செல்வச் சிறப்பையும் அதே சமயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களையும் அறிய முடிகிறது (22).

1773-ல் மராட்டிய மன்னர் நாகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை டச்சுக்காரர்களுக்கு விற்றுவிட்டனர். இதை ஆற்காடு நவாப் எதிர்த்து தம் வசப்படுத்திக்கொண்டார் (23). பின்னர் 1788-ல் நாகூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 277 கிராமங்களை மராட்டிய மன்னர் இரண்டாம் துளஜா ஆங்கிலேயருக்கு அளித்தார். இதன்பின் நாகூர் துறைமுகம் ஆங்கிலேயரின் வசமானது (24).
1780-ல் ஹைதர்அலி நாகப்பட்டினத்தின் மீது படையெடுத்து வந்தார். அப்போது நாகூர் ஆங்கிலேயர் வசமிருந்தது. நாகப்பட்டினத்திலிருந்து டச்சுக்காரர்கள் ஹைதர்அலிக்கு உதவி அளித்தனர். ஹைதரின் படைகள் நாகூர்ப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தின. நாகூர் பகுதி மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. நாகூரிலிருந்த வணிகப் பெருமக்களும் பொதுமக்களும் பயந்து பல இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று நாகூரிலிருந்த ஆங்கிலேய பிரதியின் அறிக்கை கூறுகிறது (25).

தஞ்சாவூர் பகுதி முழுவதும் 1799-ல் ஆங்கிலேயர் வசமானது. நாகப்பட்டினமும் நாகூரும் ஒரே நகராகக் கருதப்பட்டது. நாகூர் மாவட்டத் தலைநகராக இருந்தது (26). பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத் தலைநகரானது (27). அரசியல் குழப்பங்களினால் குடிபெயர்ந்து சென்ற வணிகர்களையும், நெசவாளர்களையும் நாகூருக்கு வந்து குடியமர ஆங்கிலேய அரசு பல சலுகைகளை அளித்தது. முஸ்லீம் வணிகர்கள் மீண்டும் நாகூருக்கு வந்து சேர்ந்தனர். நாகூரில் பலவித வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டன (28). வீட்டுவரி தவிர பிற வரிகள் ரத்து செய்யப்பட்டன. வணிகர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் பொருட்டு ஆங்கிலேயர் ஒரு வங்கியை நாகூரில் ஏற்படுத்தினர் (29).

நாகூரில் ஒரு வகை ஊதா நிறத் துணி உற்பத்தி செய்யப்பட்டது. Naguri Blue Cloth எனும் இத்துணிக்கு இங்கிலாந்திலும் தூரக்கிழக்கு நாடுகளிலும் நல்ல கிராக்கி இருந்தது (30). நாகூரில் ஒரு சாயத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. நெசவாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டன. நாகூர் பகுதியில் சுமார் 4000 நெசவாளர்கள், 1100 தறிகளில் இவ்வகை ஊதா துணிகளை உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு அளித்து வந்தனர். நெசவாளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் மக்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உற்பத்தியாகும் ஊதா துணியில் பெரும் பகுதியை முஸ்லிம் வணிகர்கள் வாங்கி ஜாவா, இங்கிலாந்து, மலாக்கா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு தங்களது கப்பல்களிலும் ஆங்கிலேய வணிகர்களின் கப்பல்களிலும் அனுப்பினர். ஆங்கிலேய கம்பெனியும், செட்டியார் இன வணிகர்களும் ஆங்கிலேய தனியார் வணிக நிறுவனங்களும் இவ்வகைத் துணி ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்தனர். இந்து வணிகர்களும், முஸ்லிம் வணிகர்களும் ஒற்றுமையுடன் இருந்து வாணிபம் நடத்தி நாகூரின் வளம் பெருக்கினர் (31).

முஸ்லிம் வணிகர்களான மரைக்காயர்கள் குறித்த செய்திகள், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன. மரைக்காயர், நகுதா, மாலுமி, செறாங்கு, சுக்காணி போன்ற பட்டங்களுடன் ஏராளமான முஸ்லிம் வணிகர்களின் பெயர்கள் இப்பதிவேடுகளில் காணக்கிடக்கின்றன. இவர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகளிலெல்லாம் பெரும் செல்வாக்குடன் விளங்கினர். சில வணிகர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கும் அளவிற்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். 1722-ல் ஆங்கிலேயர் அச்சை நாட்டில் ஒரு வணிகச் சாவடி ஏற்படுத்தும் பொருட்டு அந்நாட்டு மன்னரிடம் அனுமதி பெற, முகமது காசிம் மரைக்காயர் மூலமாகவே அணுகவேண்டி வந்தது. இவர் நாகூரைச் சேர்ந்த ஒரு கப்பல் வணிகர்; மேலும் முகமது காசிம் மரைக்காயர் பினாங்கிலும் கெத்தானிலும் அந்நாட்டு மன்னர்களிடமும் பெரும் செல்வாக்கு உடையவராக இருந்தார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும் (32). இவருக்கு ஆங்கிலேய அரசு பல வரிச் சலுகைகளை அளித்துள்ளது (33). இது போன்று தூரக்கிழக்கு நாடுகளில் சிறப்புடன் விளங்கிய நாகூர் வணிகர்கள் பலர் குறித்த செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவர்களது வணிகச் சாவடிகள் பினாங்கு, அச்சை, சுமத்தரா, பெரு, கெத்தா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் வளமுடன் விளங்கியதை ஆங்கிலேயரின் பதிவேடுகள் தெரிவிக்கின்றன (34).

1796-ம் ஆண்டு பதிவேடு ஒன்று நாகூரில் சுமார் 70 முஸ்லீம்கள் கப்பல் வணிகர்களாகத் திகழ்ந்தனர் எனத் தெரிவிக்கிறது. இவர்கள் தங்களுக்குத் தேவையான கப்பல்களை நாகூரிலேயே கட்டிக் கொண்டனர். இவ்வாண்டில் ஏழு கப்பல்கள் மட்டும் நாகூர் மற்றும் நாகப்பட்டினத் துறைமுகங்களில் முஸ்லிம் வணிகர்களுக்குச் சொந்தமானவையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள வணிகர்கள் இக்கப்பல்களில் தங்கள் வணிகப் பொருட்களை ஏற்றிச் சென்றிருக்க வேண்டும். இதற்குரிய வாடகை, கமிஷன் போன்றவற்றை கப்பல் உரிமையாளர்கள் பெற்றுக் கொண்டனர். கப்பல் சரக்குக் கட்டணம், பொருட்களின் மதிப்பில் 14% கமிஷன், 7 1/2% இன்ஷ¥ரன்ஸ் திட்டமும் இருந்தது. பிரிமியம் 16% ஆகும். பெரும்பாலும் கப்பல் உரிமையாளர் கப்பலில் செல்வது கிடையாது. கப்பல் தலைவரான நகுதாவின் பொறுப்பில் கப்பல் ஒப்படைக்கப்படும். நகுதாவும் தனது ஊதியத்திற்குப் பதிலாக தனது வணிகப் பொருட்களை கப்பலில் ஏற்றிச் செல்லுவார். நாகூர் வணிகர்களின் வணிக நடைமுறைகள் பழக்கங்கள் குறித்த சுவையான பல செய்திகள் ஐரோப்பியரின் பதிவேடுகளில் நமக்கு கிடைக்கின்றன (35). தங்களது கப்பல்களை பதிவு செய்து கொண்டு உரிய சுங்கத் தீர்வைகளை செலுத்திய வணிகர்கள் மட்டுமின்று பதிவு செய்யப்படாத கப்பல்களும் பல இருந்தன. சுங்கத் தீர்வையை ஏய்த்து பொருட்களை ஏற்றிவந்த இதுபோன்ற கப்பல்கள் ஆங்கிலேயரால் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதமும் விதிக்கப்பட்டது. நாகூர் பக்கிரி மரைக்காயர் 1823-ல் இலங்கையிலிருந்து அனுமதியின்றி பாக்கு ஏற்றிக் கொண்டுவந்தபோது கண்டுபிடிக்கப்படு அவரது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (36). கபூல் முகமது மரைக்காயர் தனது கப்பலில் அனுமதின்றி வங்காளத்திற்கு சங்கு ஏற்றிச் சென்றபோது கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது (37).

நாகூர் துறைமுகக் கப்பல்களில் நகுதா, சிராங்கு, மாலுமி, கிராணி, சுக்காணி போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்த பல முஸ்லிம்களின் பெயர்கள் ஆங்கிலேயரின் பதிவேடுகளில் நிறைய காணப்படுகின்றன (38).

கி.பி. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாகூர் மரைக்காயர்கள் தங்களது கப்பல்களை கொழும்பு, அச்சை, பினாங்கு, மலாக்கா, மலேயா ஆகிய நாடுகளுக்கு வணிக நிமித்தம் அனுப்பி வந்தனர். ஐரோப்பாவில் நடைபெற்ற போர்களின் தொடர்பாக இந்தியாவிலும் ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் பகை மூண்டது. இப்போர்களில் நடுநிலை வகித்து வந்த டேனிஷ்காரர்களின் கொடி மற்றும் அனுமதிச்சீட்டுடன் நாகூர் மரைக்காயர்கள் தங்கள் கப்பல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வந்தனர். ஆனால் டேனிஷ்காரர்கள் நடுநிலையிலிருந்து மாறியபோது, அவர்களது அனுமதிச்சீட்டுடன் சென்ற கப்பல்களை பிரஞ்சு நாட்டு போர்க்கப்பல்கள் வளைத்துப் பிடித்தன. பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையிலிருந்து தங்களை காப்பாற்றக்கோரி நாகூர் முஸ்லிம் வணிகர்கள் ஆங்கிலேய அரசிடம் விண்ணப்பித்துக் கொள்ளுகின்றனர். இந்த விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ள பதினேழு பேர்களுள் பதிமூன்று பேர் முஸ்லிம்கள் ஆவர். அவர்களது பெயர்கள் வருமாறு :- முகமதலி மரைக்காயர், முகமது சையது மரைக்காயர், அலிசாயபு நகுதா, ஹபீப் முகமது மாலுமி, பீர் சாஹிப் நகுதா, முத்துனா சாஹிப், சையது இஸ்மாயில் லப்பை, முகமது ஹபீப் மரைக்காயர், மதார் சாஹெப் நகுதா, சையது முகமது நகுதா, சுலைமான் மாலுமி, பக்கீர் முகமது நகுதா, சித்தி முகமது இப்ராஹிம் நகுதா (39).பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நாகூர் வணிகர்களின் கப்பல்கள் வாணிகப் பொருட்களோடு பயணிகளையும் தூரக்கிழக்கு நாடுகளுக்கு ஏற்றிச் சென்றன. மலாக்கா, மலேஷியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளுக்கு பெருமளவிற்கு முஸ்லிம்கள் சென்றனர். அங்கெல்லாம் ஆங்கிலேய ஆட்சி ஏற்பட்டதின் பயனாக தொழிலாளர்கள் நிறைய தேவைப்பட்டனர். நாகூரிலிருந்தும் இந்நாடுகளுக்குச் சென்றவர்கள் அந்நாடுகளில் தொழிலாளர்களாகவும், வணிகர்களாகவும் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டும் இருந்தனர். 1786-ல் பினாங்கும் 1824-ல் சிங்கப்பூரும் உருவானபோது நாகூர் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்கள் அங்கெல்லாம் கணிசமான என்ணிக்கையில் இருந்தனர். நாகூரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற மரைக்காயர்கள் தங்களது ஆன்மீகத் தேவைகளுக்காக அங்கெல்லாம் நாகூர் ஆண்டவர் பெயரால் தர்காக்கள் கட்டி ஆண்டுதோறும் நாகூரில் நடைபெறுவதுபோல் கந்தூரியும் நடத்தினர். இதுபோன்ற கலாச்சார மையங்கள் (தர்காக்கள்) சிங்கப்பூரிலும், பினாங்கிலும் இன்ரும் உள்ளன (40). மேலும் நாகூர் தர்காவில் கந்தூரியின்போது ஏற்றுவதற்காக ‘கொடி’, கப்பல் மூலம் அனுப்பி வந்தனர்.

1848-ல் சுமார் பத்து கப்பல் உரிமையாளர்கள் மட்டும் நாகூரில் இருந்தனர் என்பதற்கு அங்கு பதிவாகியுள்ள கப்பல்களின் பெயர்களைக் கொண்டு அறிகிறோம். இவை அனைத்தும் பாய்மரக் கப்பல்கள். அவையாவன : காதர்மீரா, ஷம்ஷீர், ஜூலிக்ஸ், கூடு காதர் பக்ஸ், பதேகாசிம், சகியா, பால காதர், அகமது பக்ஸ் முகமது மைதீன் பக்ஸ், ஜஹாங்கீர், ஷாஹ¥ல் ஹமீது. இக்கப்பல்கள் சிங்கப்பூர், பினாங்கு, பர்மா, ஆகிய நாடுகளுக்கு பெரும்பாலும் பயணிகளை ஏற்றிச் சென்றன. குறைந்த அளவில் வணிகப் பொருட்களையும் ஏற்றிச் சென்றன (41).

19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு சில கப்பல் உரிமையாளர்களையும், கப்பல் வணிகர்களையும் நாகூரில் காண முடிகிறது. இவர்களும் பொருளாதரத்தில் முனைப்பாக இல்லை என்பதும் தெரிய வருகிறது. இக்காலத்தில் செட்டியார் வணிகர்கள் பெரும் பணக்காரர்களாக விளங்கினர். முஸ்லிம் வணிகர்கள் பலர் அவர்களிடம் கடன் பெற்று வணிகம் செய்துள்ளனர். நாகூரில் வசித்த அரசன் குத்தூஸ் மரைக்காயர், லார்டு ஹாரிஸ் என்ற கப்பலுக்கு உரிமையாளர். இவர் 1890-ல் சாமிநாத செட்டியார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, பெற்ற கடனை திருப்பி அளிக்க முடியாமல் கப்பலையே கொடுத்து ஈடு கட்ட வேண்டியதாயிற்று (42). இவரது சகோதரர் அகமது நைனா மரைக்காயர் ஒரு கப்பல் வணிகர் என்ற செய்தியும் கிடைக்கிறது (43). மேலும் பல கப்பல் வணிகர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களைப் பற்றிய செய்திகளை அறியக்கூடவில்லை. மரைக்காயர் தெரு, செராங்கு தெரு, மாலுமியார் தெரு, நகுதா தெரு, பயலட் தெரு என்பன இங்கு வாழ்ந்த கப்பல் வணிகர்களை நினைவு படுத்துகின்றன.

1867-ம் ஆண்டில் நாகூர் மற்றும் நாகப்பட்டினம் துறைமுகங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் நாகூர் வணிகர்களும் நாகப்பட்டினத்திலிருந்து தங்களது வாணிபத்தைத் தொடர்ந்தனர். சிறிய பாய்மரக் கப்பல்கள் மூலம் இலங்கை, மேற்குக் கடற்கரை, கல்கத்தா, துறைமுகங்கள், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத் துறைமுகங்கள் ஆகியவற்றுடன் சிறிய அளவில் வணிகம் செய்துவந்துள்ள செய்திகள் தெரிய வருகின்றன. ஆனால் பிற நாடுகளுக்குச் சென்ற செய்திகள் கிடைக்கவில்லை. அதிக எடை கொள்ளளவு உள்ள ஆங்கிலேயரின் நீராவிக் கப்பல்களுடன் மரைக்காயர்களின் பாய்மரக் கப்பல்கள் போட்டிபோட முடியவில்லையாதலாலும் ஆங்கிலேலேயரின் பெரும் மூலதனத்துடன் இவர்களது குறைந்த மூலதனம் ஈடுகொடுக்க முடியாததாலும் ஏறத்தாழ 16-ம் நூற்றாண்டிலிருந்து முஸ்லிம் இனம் சார்ந்த அரசுகளில் ஆதரவு இல்லாததாலும், கிழக்குக் கடற்கரை முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் நசிந்து மறைந்து போயிற்று. இதில் நாகூர் வணிகர்களும் அடங்குவர்.

17-18-ம் நூற்றாண்டுகளில் நற்றமிழ் புலவர்கள் பலர் நாகூரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இலக்கிய உலகிற்கும் தமிழுக்கும் நல்ல சேவை புரிந்துள்ளனர். இக்காலக்கட்டத்தில் ஏறத்தாழ 30-க்கும் மேற்பட்ட புலவர்களின் பெயர்களும் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளும் நமக்கு தெரிய வருகின்றன. நாகூர் தந்த நல்ல தமிழ் புலவர் வரிசையில் முதலிடம் வகிப்பவர் குலாம் காதிர் நாவலர் ஆவார்கள். திரைகடலோடி தேடிய திரவியத்தை தக்கார்க்கு வேளாண்மை செய்வதில் நாகூர் வணிகர்கள் சிறந்து விளங்கினர். இவர்களது கொடைத் தன்மையினால் பல இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாற்று நூல்கள் பெருமையுடன் பேசுகின்றன (44).

நாகூரின் வணிக, ஆன்மீக கலாச்சார வரலாறு குறித்த ஒரு அறிமுகமே இக்கட்டுரை. நாகூர் குறித்து பதிவேடுகள் கூறும் விரிவான செய்திகள் மூலம் தமிழக முஸ்லிம்களின் வரலாற்றை தெளிவுபட தெரிந்துகொள்ள மேலும் பல செய்திகள் நமக்குத் தெரியவருகின்றன.

References
1. T.W. Arnold , the Preacings of Islam, p. 267; Quadir Hussain Khan, South Indian Mussalmens pp.36-38
2. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை,. 1981, பக்கம் -32.
3. S,. Mohamed Hussain Nainar, Tuzuki Wallahjahi, Madras - part I p.60.
4. M. Abdul Rahim, the Dargah of Nagore and Culture of Tamil Muslims, in Bulletin of the Institute of Traditional Culture, Madras, 1973, Jan to June pp. 92-104.
5. M. Joseph Costilloe, Francis Xavior, His lilfe and his time, Rome, 1997 - Vol II pp. 544-545.
6. V. Vridhagirisan, The Nayak, of Tanjore, Annamalai Nagar, 1942 - pp-32-33; M. Abdul Rahim op. cit.
7. ஜே.எம். சாலி, தமிழகத்து தர்காக்கள், சென்னை, பக்கம் -34
8. Tapan Roy Choudry, Jan company in Coromandel 1605-1690. A study in the inter relations of European Commerce and traditional economies. The Hague 1963-pp. 15-16.
9. The Cambridge History of India Vol. V. p. 127; Viridagirisan, opt. cit. pp. 155-6.
10. Thanjavur District Collectorate Records (TDCR) No. 3396 dt. 11th Sep. 1785.
11. Rangachari, Inscription in the Madras Presidency (Tanjore Dist.) no. 893 A & B.
12. Thanjavur Saraswathi Mahal Modi script record (TR) 4-488; 2-271, 187/C2; 104/C/9.
13. TDCR No. 3396 July 9th 1783.
14. TDCR No. 3331, p. 63.
15. Tazaki Wallajahi, pt. II pp. 196-197.
16. TDCR No. 3268. pp. 182-183.
17. ibid No. 3416 p.9. 19th July 1814; No. 3224, pp. 64-65 7th July 1788; No. 3496 pp. 69. 20th Feb. 1809.
18. G.O. Ms. 882 Law Dept. 17-2-1934.
19. B.S. Baliga, Tanjore District hand Book.
20. S. Arasarathnam Merchants companies and come in Coromandel 1600 - 1740, Cambridge- pp. 27-29; TDCR No. 3335 p. 13.
21. TDCR No. 3271 p. 195.
22. Dodwell, the Madras Despatches, 1754-1765, p. 146. Sanjay Subramaniyam, Political Economy of South India and commerce, cambridge. p.92.
23. Tanjore Original papers, Vol I p. 239.
24. C.K. Srinivasachari, Maratha Rule in Carnatic p.306; Saraswathi Mahal Modi Script (Tr) No. 5-395.
25. Military consultations 1781-74A, letter from Sir Ire coot to Col. Barthwit, Ist March 1761 and also p. No. 728; M.C. 1781-47D p. 1371.
26. TDCR No. 3228 p.82.
27 ibid No. 3182 p.250.
28. FSG Public sundries Vol. No. 36, p.39; TDCR 4238 p. 2324.
29. TDCR No. 3175 p. 163.
30. FSG Commercial consultations for 1821, Vol. 29, p.1582.
31. Public consultations, 1806 pp. 56-57; Revenue sundries 1793-94 Vol. 18 pp. 1-15; TDCR No. 3349, p.5; No. 3325 p.65.
32. Public sundries No. 21, 25th June 1772.
33. FSG Board of Revenue No. 404 18th March 1805 pp 1842-1848.
34. TDCR No. 3337 p.45
35. TDCR No. 3325 p. 65; Public consultation Vol. 340 pp. 2450-60; Pleading of Mayors Court 1745, Vol V. pp. XV-XXI; India and Indian Ocean 1500-1800 (Ed) Ashin Das Gupta and M.N. Pearson, Calcutta-1987. pp. 10-19.
36. TDCR No. 4326 pp. 14-15
37. ibid No. 3336 pp. 38-42.
38. ibid No. 4252 pp. 148-49
39. FSG public consultation 1808, Vol 339, pp. 1314-1315.. 17th Feb. 1808
40. Susan Bayly, Saints, Goddesses and Kings, Muslims and Chiristians in South Indian Society 1700-1900 Cambridge p.93-94.
41. Public consultation, Vol. No. 831 p. 7-9. 1848; Vol. 832 p.7-9, 1848.
42. Indian Law Reporter Madras Series Vol. IXXII 1889 June - Dec. p.26-31.
43. Nagore Registration Dept. document No. 904/1893.
44. இஸ்லாமிய தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டு மலர், புதுக்கோட்டை 1992-பிப்ரவரி, மு.ஜாபர் முஹைய்தீன்,
நன்றி : இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆய்வுக்கோவை
நன்றி : ஜெ.ராஜா முகமது M.A., B.Sc. & ‘சொல்லரசு’ மு.ஜாபர் முஹையதீன்.
நன்றி : ஆபிதீன் பக்கங்கள்
நன்றி : facebook friends.

புகை பிடிக்கும் போது - புதிய ஆராய்ச்சி

வாஷிங்டன்: சிகரெட் புகைப்பவர்கள் வழக்கமான நிகோட்டினுடன், நச்சுக் கிருமிகளையும் (பாக்டீரியாக்கள்) உயிரோடு இழுத்து உடம்புக்குள் விட்டுக்கொள்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


புகை பிடிக்கும் போது சிகரெட்டில் இருந்து உடம்புக்குள் செல்லும் ரசாயணங்கள் மற்றும் வாயுக்களால் என்னென்ன பாதிப்பு என்ற ரீதியில் தான் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்போது, நிகோடினுக்கு இணையாக நுரையீரல் மற்றும் சுவாச உறுப்புகளை நேரடியாக பாதிக்கும் பாக்டீரியா கிருமிகளை மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

மனிதர்களிடம் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயக் கிருமிகள் உட்பட நூற்றுக்கணக்கான விதங்களில் கிருமிகள் சிகரெட்டுகளில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

புகை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கான காரணங்களில் இவையும் முக்கிய பங்காளிகள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

-NAGOREFLASH

Saturday, November 28, 2009

புனித காவ்பதுல்லாஹ் உள்ளே !!!!? எடுக்கப்பட்ட வீடியோ

புனித காவ்பதுல்லாஹ் உள்ளே !!!!?

புனித காவ்பதுல்லாஹ் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோ >






3D INSIDE KABAA




இன்ஷால்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரில் காணும் பாக்கியத்தை தருவானாக !
NAGOREFLASH

Friday, November 27, 2009

அரஃபா நோன்பு - ஐயமும் தெளிவும்

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.



அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.


"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் (பிறை)ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்"

அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

அரஃபா நோன்பை அவ்வருடம் ஹஜ்ஜிற்கு செல்லாதவர்கள் மட்டும்தான் நோற்க வேண்டும். ஏனெனில் துல்ஹாஜ் பிறை ஒன்பது அரபா நாள். அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.





அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.


அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.


அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.


"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; என்றாலும் ஒரு வீரன் தன்னுடைய உயிர், உடமைகளோடு சென்று அதில் ஒன்றைக் கொண்டும் அவன் திரும்பவில்லை எனில் அது மிகவும் சிறந்த செயலே" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.


இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.

"நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை" அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.


மற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.

நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான்மாதக் கடமையான நோன்பைத் தவிர துல்ஹஜ் மாதத்தில் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதேநேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வைப் புகழ்தல், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்), ஸதகாத் (தர்மங்கள் செய்வது) போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம்.

ஐயமும் தெளிவும்

தூதர் அவர்கள் பிறை பார்த்துதான் மாதத்தை அறிந்தார்கள். துல்ஹாஜ் ஒன்பது அரபா நாள் என்று அறிவித்து , அந்த ஒன்பது பிரைப்படிதான் அன்று நோன்பு நோற்றார்கள். அதே நேரம் அரபா அன்று எல்லா தேசங்களிலும் உள்ளவர்கள் ஒரே நாளில் நோன்பு இருக்க வாய்ப்பே இல்லை.. தூதர்,அவர்களுக்கு நிச்சயமா தெரிந்திருக்கும் அரபா ஒரே நாளில் எல்லோருக்கும் வராது என்று….

பல நூறு மைல்கு அப்பால் இருந்தவர்கள், அரபா நாளுக்கு அடுத்த நாளும் , அவர்களுக்கு அது பிறை ஒன்பது ஆக இருந்து, அன்றே நோன்பு பிடித்து இருப்பார்கள்…

அரபாவில் கூடும் நாளில் தான் நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி இருந்தால் அதை அறிந்து செயல் பட முயற்சியாவது செய்திருப்பார்கள் ...மதீனாவில் இருந்த அவர்களுக்கு இது சாத்தியம் தான்.இஸ்லாத்தில் எந்த ஒருவணக்கமும் எளிதாகவும் , எல்லோராலும் பின்பற்ற கூடியதாக இருக்கும்.

ஆகவே உலகம் முழுவதும் ஒரே நாளில் அரபா தினத்தை அடையவது சாத்தியமற்றது . நேர வேற்றுமையால் நாட்களும் வேறுபடுகின்றது .. எல்லா வற்றுக்கும் மேலாக அல்லாஹ்வின் தூதர் உலகம் முழுவது ஒரே நாள் விதியை பின்பற்றவில்லை.

ஒன்பது ஆண்டு காலம் மதினாவில் இருந்த நபி அவர்கள் - எந்த ஒரு அரபா தினத்தையும் ,மக்காவில் அல்லது வேறு எங்கும் தென் பட்ட பிறையின் அடிப்படையில் செயல் படுத்த முற்படவில்லை .மதினாவில் பார்த்த பிறையின் அடிப்படையில் தான் செயல் படுத்தினார்கள் . மதினாவில் பிறை பார்த்து மட்டுமே மாதத்தை தீர்மானித்தார்கள்
பிறை பாக்கும் அடிப்படையில் , பிறை ஒன்பதை , அரபா நோன்புக்காக நிர்ணயித்து சொல்லி உள்ளார்கள் என்று நன்கு சிந்திக்கும் பொது விளங்குகிறது…

என்ன தான் நாம் பிறை ஆரம்பிக்கும் அந்த மைக்ரோ வினாடியை கண்டுபிடித்து அறிவித்தாலும் (எல்லோரும் ஒரே தினத்தில் , நோன்பு , பெருநாள் ,அரபா தினம் எடுக்க வேண்டும் என்பதற்காக ) இவ்வுலக நாடுகள் எந்த ஒருநாளையும் ஒரு சேர அனுபவிக்க முடியாது அதன் நேர -நாட்கள் வித்தியாசம் நமக்கு அறிவிக்க வில்லையா இதன் சூட்சமத்தை .( மக்ரிபில் நாட்கள் ஆரம்பம் இஸ்லாமிய முறைப்படி ) அனுமானத்தை விடுத்து எதார்த்தத்தை புரிந்து நடப்பது தான் இஸ்லாம் நமக்கு காட்டி தரும் வழி.
இதையெல்லாம் தாண்டி நம் செய்வது தவறு என்று வைத்துகொள்வோம் (இன்ஷால்லாஹ் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை ) அல்லாஹ் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான் இன்ஷால்லாஹ் இதுவே நபி பின்பற்றிய முறை என்பதனால் .
குழப்பங்கள் அதிகரிக்கும் போது - அல்லாவின் பக்கமும் ,அவனின் தூதரின் பக்கமும் சென்றுவிடுவது சால சிறந்தது .. நபி அவர்கள் உம்மி நபி .., நாமும் ஒரு வகையில் உம்மி சமுதாயம் தான் இல்லையென்றால் நபி அவர்கள் செயல்படுத்திய விஷயத்தில் நம் மன இச்சைகளை புகுத்தி இருக்க மாடோம் .

நபி அவர்கள் செயல் படுத்தியது நமக்கு போதுமானது என்பதே இந்த கருத்து மோதல்களுக்கு தீர்வாக அமையும்.

நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்.


அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.

தியாகப் பெருநாள் சிந்தனை

தியாகப் பெருநாள் சிந்தனை

பாரான் பள்ளத்தாக்கில் கிடத்தப் பட்ட ஒரு பாலகன், அப்பாலகனின் பெற்றோர் ஆகிய மூவரது சொந்த வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், உலகம் முழுவதும் வாழ்ந்த/வாழும்/வாழப் போகிற முஸ்லிம்களுக்கு மாறாத படிப்பினையாகவும் அம்மூவரது செயல்பாடுகளில் சில முஸ்லிம்களின் கடமையான வழிபாடுகளாகவும் மாறிப் போயின.

ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் - எண்ணியெண்ணி வியக்கும் அந்த வரலாறு,

"எங்கள் இறைவா! விவசாயமற்ற இப்பள்ளத்தாக்கில், மாண்புமிகு உன் இல்லத்தை அடுத்து என் வழித்தோன்றலை (குடும்பத்தாரை) வசிக்க விட்டிருக்கிறேன். தொழுகையை நிலைபெறச் செய்வதற்காகக் குடியேற்றி இருக்கிறேன். எனவே, எங்கள் இறைவா! ஆதரவுள்ளம் கொண்ட மக்களை இவர்களுக்கு ஏற்படுத்துவாயாக! இவர்கள் உனக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, கனிகளைக் கொண்டு இவர்களுக்கு உணவளிப்பாயாக!" (அல்-குர்ஆன் 14:37) என்று தொடங்குகிறது.

தன் வாழ்க்கைத் துணைவியையும் வயோதிக காலத்தில் தனக்கு வாரிசாகப் பிறந்த பால்குடி மாறாப் பாலகனையும் பாலைவனத்தில் விட்டுச் செல்ல அண்ணல் இபுறாஹீம் நபி (அலை) எப்படித் துணிந்தார்கள்?

அதுதான் தியாகம்! அல்லாஹ்வின் கட்டளைக்காக அனைத்தையும் துறக்கத் துணிந்த தியாகம்!

"இறைவன்தான் இந்தப் பாலைவனத்தில் எங்களை விட்டுச் செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிட்டான் எனில், அவனே எங்களைப் பாதுகாப்பான்" என்று உறுதியோடு உரைக்க அன்னை ஹாஜராவுக்கு எப்படி மனம் வந்தது?

அல்லாஹ்வின் மீதுள்ள அளவு கடந்த நம்பிக்கையில், வானமே கூரையாக சுட்டெரிக்கும் பாலையிலும் வாழ்ந்திடத் துணிந்த தியாகம்!

மகன் மட்டும் தியாகத்தில் சளைத்தவரா?

"... என்னருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உன் கருத்து என்ன என்பதை யோசித்துச் சொல்"

"என்னருமைத் தந்தையே! உங்களுக்கு என்ன கட்டளையிடப் பட்டதோ அதையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால், (எதையும்) சகித்துக் கொள்ளக் கூடியவர்களுள் ஒருவனாக என்னை நீங்கள் காண்பீர்கள்" (அல்-குர்ஆன் 37:102).

இங்குக் கொடுத்திருக்கும் இஸ்லாத்துக்கே சொந்தமான தியாக வரலாற்றின் மிகச் சில வரிகள் வாசிப்பதற்கு மட்டுமா? என்ற கேள்வியை நாம் நம்மையே கேட்டுக் கொள்ள இந்நாளில் கடமைப் பட்டிருக்கிறோம்.

தியாகத்திருநாளை இரு ரக்அத் சிறப்புத் தொழுகையுடனும் நபி இபுறாஹீம் குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுபடுத்தும் ஒரு குத்பா கொண்டாடுவதோடு நம் தியாகங்களும் முடிந்து விட்டன என்ற தவறான எண்ணத்திலிருந்து விடுபட்டு... இத்தியாகத் திருநாளில் ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுப்போம்.

தியாகம் நினைவுபடுத்துவதற்கோ நினைவுகூர்வதற்கோ மட்டும் அல்ல; ஒவ்வொருவரின் வாழ்விலும் செயல்படுத்துவதற்கும் சேர்த்தேதான்!

உலகம் முழுதும் இஸ்லாத்துக்கு எதிரான திட்டமிட்ட, பல்முனைத் தாக்குதல்கள் பெருகி வரும் காலமிது. குறிப்பாக ஊடகத்துறையில் இஸ்லாத்தைப் பற்றிய பொய்களும் பூஞ்சைத் தனமான குற்றச்சாட்டுகளும் தற்போது தமிழ் இணையத்திலும் பெருகி வருகின்றன. தடுத்துச் சற்றே கையை உயர்த்தினாலே பொடியாகிப் பறந்து விடும் என்ற கருத்தில்தான் 'பூஞ்சைத் தனமான' குற்றச் சாட்டுகள் என்று இங்குக் குறிப்பிடப் படுகிறது.

கை உயர்த்துவதற்குத்தான் ஆட்கள் தேவை. வெறும் கையைன்று; எழுதுகோல் எனும் ஆயுதம் ஏந்திய கைகள்!

அண்ணல் இபுறாஹீம் எதிர் கொண்ட சோதனைகள் இன்று நமக்கில்லை. அன்னை ஹாஜரா தாங்கிக் கொண்ட வேதனைகள் நமக்கில்லை. அண்ணல் இஸ்மாயீல் ஏற்றுக் கொண்ட 'சுயபலி'யும் நமக்கில்லை. நமக்குள்ள நேரத்தைக் கொஞ்சம்போல் தியாகம் செய்தால் போதும். எழுத்துலகுக்கு இன்னும் இன்னும் இன்னும் முஸ்லிம்கள் வேண்டும்.

கையை உயர்த்துங்கள் - எழுதுகோல் ஆயுதத்தோடு!

சகோதர, சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காமின் நெஞ்சம் நிறைந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்!

ZAZAKALLAHAIRUN TO SATYAMARKAM.COM

ஜாகிர் நாயக் -வாழ்க்கை குறிப்பு

Zakir Abdul Karim Naik (Urdu: ذاکر نائیک, Hindi: ज़ाकिर अब्दुल करीम नायक; born 18 October, 1965) is an Indian Muslim public speaker, and writer on the subject of Islam and comparative religion. By profession, he is a medical doctor, attaining a Bachelor of Medicine and Surgery (MBBS) from Maharashtra, but since 1991 he has started getting involved in Islamic proselytism (da'wah) and Comparative Religion part-time.[1] For few years he continued his practice as a Doctor and was also doing part-time "Da'wah". Since 1997 he started doing Da'wah full-time. He states that his main goal is to revive the crucial fundamentals of Islam in the context of modernity.

Zakir Naik is the founder and president of the Islamic Research Foundation (IRF)[1][2], which is a non-profit organization that owns and broadcasts the free-to-air global Peace TV channel from Mumbai, India.



Biography

Zakir Naik was born on October 18, 1965, in Mumbai, India.[3] He attended St. Peter's High School (ICSE) in the city of Mumbai. Later he joined the Kishinchand Chellaram College and then studied medicine at Topiwala National Medical College and Nair Hospital in his native city. He then received his MBBS degree from the University of Mumbai. In 1991 he started working in the field of Da'wah or proselytizing of Islam part-time[4]

Naik says he was finally inspired by the late Ahmed Deedat[5] who had himself been active in the field of Da'wah for more than forty years.[6] In 1994, Ahmed Deedat called Zakir Naik "Deedat plus". In May 2000, Deedat awarded Zakir by presenting him a plaque with the engraving "son what you have done in 4 years had taken me 40 years to accomplish, Alhamdullilah" written on it.[7]

According to Naik, his goal is to "concentrate on the educated Muslim youth who have become apologetic about their own religion and have started to feel the religion is outdated"[8] and that it was the duty of every Muslim to remove perceived misconceptions about Islam to counter what he considers as the Western media’s anti-Islamic bias in the aftermath of September 11, 2001 terrorist attacks upon the United States. [9] He has lectured and authored several books on Islam and Comparative religion[10] as well as those directed towards removing misconceptions about Islam.[11][12] Some of his articles are also frequently published in Indian magazines like the Islamic Voice.[13][14][15]

Thomas Blom Hansen, a sociologist who held academic positions at various universities, has written that Naik's style of memorizing the Qur'an and hadith literature in various languages, preaching Islam to Muslims and non-Muslims alike and travelling abroad to debate Islam with theologians, has made him extremely popular in Muslim and non-Muslim circles. Although he regularly speaks to audiences of several hundreds, and sometimes thousands, it is the videotapes and DVDs of his talks which are widely distributed. His talks are usually recorded in English, to be broadcast at weekends on several cable networks in Mumbai's Muslim neighborhoods,[8] and on the channel Peace TV, which he co-promotes. [2][16] Topics he speaks on include: "Islam and Modern Science", "Islam and Christianity", and "Islam and secularism", among others.[8]

Lectures and debates
Naik has held many debates and lectures around the world, he regularly holds lectures in Mumbai, India, and every year since 2007 leads a 10-day "Peace Conference" at Somaiya Ground, Sion, Mumbai with other prominent scholars, which included Malaysian politician, Anwar Ibrahim in 2008. [17]

In April 2000, Naik took part in a debate with William Cambell, the topic was Islam and Christianity in the light of science, where both discussed perceived scientific errors in the scriptures.[18]

Delivering a lecture titled Why Westerners embrace Islam in November 2002 at King Fahd Hospital auditorium in Jeddah, Zakir Naik argued that Islam offers practical solutions to various problems facing the West such as adultery, alcoholism and filial ingratitude. Naik also stated that "despite the strident anti-Islam campaign, 34,000 Americans have embraced Islam from September 2001 to July 2002." He cites a report published in the Time Magazine which said that about 60,000 books on Islam and the Orient have been written between 1800 and 1950 alone. - [19] [20]

In 2004, Naik visited New Zealand[21] and then Australian capitals at the invitation of Islamic Information and Services Network of Australasia. In his conference in Melbourne, according to journalist Sushi Das however, "Naik extolled the moral and spiritual superiority of Islam and lampooned other faiths and the West in general", adding that Naik's words "fostered a spirit of separateness and reinforced prejudice". [22]

On 21 January 2006, Naik held an inter-religious dialogue with Sri Sri Ravi Shankar. The event was about the concept of God in Islam and Hinduism, the aim being to bring understanding between the two major religions of India, and at best to point out the commonalities between both Islam and Hinduism, such as how idolatry is prohibited. It was held in Bangalore, India with up to 50,000 attending at the Palace Grounds.[23]

In August 2006, Naik's visit and conference in Cardiff (UK) were the object of controversy when Welsh MP David Davies called for his appearance to be cancelled.
He described him as a 'hate-monger', and said his views did not deserve a 'public platform'; Muslims from Cardiff, however, defended Naik's right to speak in their city. Saleem Kidwai, Secretary General of the Muslim Council of Wales, disagreed with Davies, stating that "people who know about him (Naik) know that he is one of the most uncontroversial persons you could find. He talks about the similarities between religions, and how should we work on the common ground between them", whilst also inviting Davies to discuss further with Naik personally in the conference. The conference went ahead, after the Cardiff council stated it was satisfied that he would not be preaching extremist views.[24][25]

Following a lecture by Pope Benedict XVI in September 2006, Naik offered to engage in a live public debate with him, but the Pope has not responded to this invitation.[26][27]

In November 2007, the IRF organized a 10-day international Islamic conference and exhibition titled The Peace Conference at the Somaiya grounds in Mumbai. Lectures on Islam were presented by Naik as well as twenty other Islamic scholars from around the world.[28]

During one of the lectures, Naik provoked anger amongst members of the Shia communities at the conference when he mentioned the words “Radiallah ta'la anho” (meaning 'May Allah be pleased with him') after mentioning the name of Yazid I and made remarks that the battle of Karbala was political.[29] Others however believed the comment was blown out of proportion [30]

In a lecture delivered on 31st July 2008 on Peace TV, Naik argued that 9/11 was an insider's job done by George Bush himself so that Bush could then attack oil-rich countries.[31][32]

In the issue dated 22 February, 2009 of the Indian Express list of “100 Most Powerful Indians in 2009” amongst the billion plus population of India, Zakir Naik was ranked No. 82. In the special list of the “Top 10 Spiritual Gurus of India” Zakir Naik was ranked No. 3, after Baba Ramdev and Sri Sri Ravi Shankar, being the only Muslim in the list.

Political Analyst Khaled Ahmed considers that Zakir Naik, by his claims of Islam's superiority over other religious faiths, practices what he calls reverse Orientalism. [33] In a lecture at Melbourne University, Naik argued that only Islam gave women true equality.[34] He stressed the importance of the headscarf by arguing that the more "revealing Western dress" makes women more susceptible to sexual harassment

Dr. Zakir Naik - Can astronomical evidence be used to sight the new moon? (Eid & Ramadhaan)

Dr. Zakir Naik - Can astronomical evidence be used to sight the new moon? (Eid & Ramadhaan)

Dr. Zakir Naik - Can Eid be celebrated on the same day throughout the world?

Dr. Zakir Naik - Can Eid be celebrated on the same day throughout the world?

Thursday, November 26, 2009

எல்லாம் யாருக்காக? -ஜெஸிலாவின் வரிகள்

எல்லாம் யாருக்காக? -ஜெஸிலாவின் வரிகள்

என் வயதொத்த
பிள்ளைகள்
கனவின் நடுவிலிருக்க
நான் நித்திரை விட்டு
குளிர் நடுக்கத்தில்
முக்காடில் நுழைந்து
மதரஸா விரைந்தேன்
புரியாத அரபி கற்க
அம்மம்மா மெச்சுதலுக்காக.

அழைப்பு விடுத்தவுடன்
கண்ணாமூச்சியில்
கண்கட்டவும் மறந்து
புரியாமல் மனனம் செய்த
பாடங்களை ஒப்பித்தபடி
தொழுதேன்
அன்புடன் அணைத்துக் கொள்ளும்
அப்பாவுக்காக


விதவிதமான ஆடையில்
தோழிகள்
பள்ளி விழாவிற்கு
பவனி வர
வெதும்பிய மனதை
ஹிஜாபில் ஒளித்தேன்
பெருமையுடன் முகர்ந்து முத்தமிடும்
அம்மாவுக்காக

விவரம் தெரியாத வயது ஓய்ந்து
பொருள் புரியாத மொழி
புலப்பட்டதும்
அறிந்து கொண்டேன்
ஓதலும், தொழுகையும், ஹிஜாபும்
நிலையில்லா உறவுக்காக அல்ல
ஒழுக்கத்தை விரும்பும்
இறைவா எல்லாம்
உனக்காகவென்று.


BY
Jazeela
நன்றி ஜெஸிலா

பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்று-கல்யாண் சிங்

டெல்லி: லிபரான் கமிஷன் அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதில் அரசியல் நெடி வீசுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டிய ஒன்றதான். அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் நிச்சயம் வரும் என்று கூறியுள்ளார் லிபரான் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள உ.பி. முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்.



லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து கல்யாண் சிங் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த அறிக்கையை ஒரு அரசியல் சதியாகவே நான் கருதுகிறேன். 1992ம் ஆண்டு,டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்ட கட்டடத்திற்குப் பதிலாக அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் நிச்சயம் வரும். நிச்சயம் ஒரு கோவில் வரும், கோவில் வரும், கோவில் வரும்.

லிபரான் அறிக்கையில் அரசியல் நெடிதான் வீசுகிறது. மசூதியை இடிக்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக லிபான் கூறுவது அபத்தமானது. மசூதியை அடிக்க சதித் திட்டம் தேவைப்பட்டிருக்கவில்லை. முன்கூட்டியே திட்டமிடத் தேவையில்லாமல்தான் இருந்தது. டிசம்பர் 6ம் தேதி நடந்தது மக்களின் கொதிப்பு. ஒரு குண்டுவெடிப்பைப் போன்றது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இஸ்லாமிய சமூகத்தினர் ஒத்துழைக்க வேண்டும். அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு விட்டால் நாட்டில் அமைதி நிலவும். இந்தப் பதட்டமெல்லாம் முடிவுக்கு வந்து விடும்.

காலவரையின்றி ராமர் கோவில் கட்டுவதை தள்ளிப் போட்டால், அது இந்துக்களுக்கும் சரி, முஸ்லீம்களுக்கும் சரி எந்தவிதப் பலனையும் தராது.

எவ்வளவு விரைவில் கோவில் கட்டப்படுகிறதோ, அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லது. மீண்டும் அங்கு மசூதி வர முடியாது.

சம்பவ நாளன்று, பெரும் திரளாக கூடியிருந்த கரசேவகர்களைக் கலைக்க தடியடி, கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை பயன்படுத்துமாறும், துப்பாக்கிச் சூட்டில் இறங்கக் கூடாது என்றும் போலீஸாருக்கு நான் உத்தரவிட்டிருந்தேன். துப்பாக்கிச் சூடு நடத்த நான் உத்தரவிட்டிருந்தால் ஆயிரக்கணக்கானோர் இறந்து போயிருப்பார்கள். பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மிகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

எனக்கு முன்பு அப்போது இருந்த கேள்வி, நான் யாரைக் காக்க வேண்டும் என்பதுதான். பெரும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் நான் தடுத்தேன், மிகப் பெரிய உயிரிழப்புகள் நேராமல் நான் தடுத்தேன். இந்த களேபரத்தில் மசூதி இடிக்கப்பட்டு விட்டது.

இதற்காக நான் வருத்தமே படவில்லை. அங்கு ராமர் கோவில் வர வேண்டும். அதற்கு இந்த கட்டடம் (மசூதி) போக வேண்டியதிருந்தது என்றார் கல்யாண் சிங்.

என்ன கூத்து பாத்திர்களா சகோதர்களே ? என்ன சொல்ல வருகிறார்கள் இவர்கள் !!!
தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் இவர்கள் தான் - நம்மை பார்த்து தீவிரவாதி என்கிறார்கள்..,

எவ்வளவு விரைவில் கோவில் கட்டப்படுகிறதோ, அவ்வளவுக்கு நாட்டுக்கு நல்லதாம்

எவ்ளோ விரைவில் மீண்டும் மசூதி கட்டப்படுகிறதோ அவ்வளவுக்கு உனக்கு நல்லது பார்த்துக்கொள் ..

விடியலை நோக்கி பயணம் புறப்பட்டு விட்டது .. அதி சீக்கிரம் புரிந்துகொள்வாய் ..
உன்னை படைத்த இறைவனின் நாட்டத்தோடு



THANKS 2 THATSTAMIL

பாபர் மசூதி-முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷேக்

லக்னோ: பாபர் மசூதி தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்தவர் ஹாஜி ஷேக் என்பவர்தான். இன்று அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் ஹாஜி மகபூப்.



1949ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாபர் மசூதியின் கதவுகளை உடைத்து சிலர் உள்ளே புகுந்து ராமர் சிலையை வைக்க முயன்றனர். இதையடுத்து ஹாஜி ஷேக் போலீஸில் புகார் கொடுத்தார். அதுதான் பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட முதல் வழக்காகும்.

ஷேக்குவின் மறைவுக்குப் பின்னர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தி வருகிறார் அவரது மகன் மகபூப்.

லிபரான் கமிஷன் அறிக்கை குறித்து மகபூப் கருத்து தெரிவிக்கையில், இது எங்களுக்குக் கிடைத்த முதல் வெற்றி.

பாபர் மசூதி தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நான்கு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரேபரேலி, லக்னோ கோர்ட்டுகளில் தலா ஒரு கிரிமினல் வழக்கு உள்ளது. அனைத்தும் ஆமை வேகத்தில் நகர்ந்து வருகின்றன.

வழக்கு தொடர்பாக வாரத்திற்கு மூன்று முறை அயோத்திக்கும், லக்னோவுக்கும் நான் அலைந்து கொண்டிருக்கிறேன்.

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி நடந்த வன்முறையில் எனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் எனது குடும்பம் சிதறிப் போனது, மனதொடிந்து போனேன். நானே கூட நான்கு முறை இதுவரை உயிர் தப்பியுள்ளேன்.

ஒவ்வொரு முறையும் நான் லக்னோ செல்லும்போது எனக்கு மிரட்டல் விடுக்கப்படும். இது வழக்கமாகி விட்டது. இதை நான் இப்போதெல்லாம் பெரிதுபடுத்துவதில்லை என்கிறார் மகபூப்.

இதேபோல பாபர் மசூதிக்காக தொடர்ந்து சட்டரீதியாக போராடிக் கொண்டிருக்கும் இன்னொரு முதியவர் ஹாசிம் அன்சாரி. இவருக்கு வயது 90. பாபர் மசூதி தொடர்பாக தொடரப்பட்ட இன்னொரு வழக்கை முதன் முதலாக தொடர்ந்தவர் இவர்.

தற்போது மெக்காவுக்கு புனித யாத்திரை போயிருக்கிறாராம் அன்சாரி.

( நீதிக்காக குரல்கொடுக்கும் அவருக்கு இஸ்லாமிய சகோதரன் என்ற முறையில் நாம் பிரார்த்தனை செய்யவேண்டிய கடமை நமக்கு உண்டு )

thanks 2 thats tamil.

Wednesday, November 25, 2009

நீதிபதி லிபரன் விசாரணை- 68 குற்றவாளிகள் விவரம்

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ஆம் நாள் உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி லிபரன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை செவ்வாய்க் கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 68 குற்றவாளிகள் விவரம் வருமாறு:

1. அகிலேஷ் மெஹ்ரோத்ரா (பைசியாபாத் கூடுதல் எஸ்பி)

2. அசோக் சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

3. அலோக் சின்ஹா (சுற்றுலாத்துறைச் செயலாளர்)

4. ஆச்சார்ய தர்மேந்திர தேவ் (தரம் சன்சத், உறுப்பினர்)

5. ஆச்சாரிய கிரிராஜ் கிஷோர் (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்)

6. ஆர்.கே.குப்தா (உ.பி

7. உமா பாரதி (விஸ்வ ஹிந்து பரிஷத்)

8. எச்.வி.சேஷாத்ரி (ஆர்எஸஎஸ்)

9. ஏ.கே.சரண் (பாதுகாப்புப் பிரிவு, ஐ.ஜி)

10. ஓங்கார் பாவே (விஸ்வ ஹிந்து பரிஷத்)

11. ஓம் பிரதாப் சிங்

12. கல்யாண் சிங் (உ.பி

13. கல்ராஜ் மிஸ்ரா (பாஜக உ.பி

14. குர்ஜான் சிங் (விஎச்பி, ஆர்எஸ்எஸ்)

15. குஷபாவ் தாக்கரே (ஆர்.எஸ்.எஸ்)

16. கெளர் (மாவட்ட ஆணையர்)

17. கோவிந்தாச்சார்யா (ஆர்எஸ்எஸ்)

18. சக்சேனா (உபி தலைமைச் செயலாளர்)

19. சங்கர் சிங் வகேலா (குஜராத் மாநில பாஜக தலைவர்

20. சதீஷ் பிரதான் (சிவசேனா)

21. சம்பத் ராய் (அயோத்தி கட்டுமானப் பிரிவு மேலாளர்)

22. சாத்வி ரிதாம்பரா (சந்த் சமாஜ் தலைவர்)

23. சிதா ராம் அகர்வால்

24. சுதர்ஷன் (ஆர்எஸ்எஸ் தலைவர்)

25. சுரேந்தர் சிங் பண்டாரி (பாஜக)

26. சுவாமி சச்சிதானந்த சாக்ஷி (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)

27. சுவாமி சத்மிட் ராம் ஜி (சந்த் சமாஜ்)

28. சுவாமி சத்யானந்த் ஜி (சந்த் சமாஜ்)

29. சுவாமி சின்மயானந்த் (வி்ஸ்வ ஹிந்து பரிஷத்)

30. சுவாமி வாம் தேவ்ஜி (சந்த் சமாஜ்)

31. சூர்ய பிரதாப் சாகி (உ.பி

32. டி.பி.ராய் (பைசியாபாத் மூத்த எஸ்பி)

33. தாவு தயால் கன்னா (பாஜக)

34. திரிபாதி (உபி போலீஸ் டிஜிபி)

35. தேவ்ரஹா பாபா (சந்த் சமாஜ் தலைவர்)

36. பத்ரி பிரசாத் தோஸ்னிவால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

37. பரம் தத் திவிவேதி (உ.பி

38. பால் தாக்கரே (சிவசேனா)

39. பாஜ்பாய் (பைசியாபாத் போலீஸ் டிஐஜி)

40. பி.பி.சிங்கால் (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

41. பிரபாத் குமார் (உ.பி உள்துறை முதன்மை செயலாளர்)

42. பிரமோத் மகாஜன் (பாஜக, காலமாகிவிட்டார்)

43. பிரவீன் தொகாடியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)

44. புருஷோத்தம் நாராயண் சிங் (விஸ்வ ஹிந்து பரிஷத் செயலாளர்)

45. பைகுந்த் லால் சர்மா (விஸ்வ இந்து பரிஷத் தலைவர்)

46. மகந்த் அவைத்யநாத் (இந்து மகாசபா)

47. மகந்த் நித்யகோபால் தாஸ் (ராம் ஜென்ம பூமி நியாஸ் தலைவர்)

48. மகந்த் பரமஹம்ஸ் ராம் சந்தர் தாஸ் (விஸ்வ ஹிந்து பரிஷத்)

49. முரளி மனோகர் ஜோஷி (பாஜக)

50. முன்னாள் துணை பிரதமர் அத்வானி (பாஜக)

51. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (பாஜக)

52. மோர்பந்த் பிங்கலே (சிவசேனா)

53. மோரேஸ்வர் தினாநாத் சவே (சிவசேனா)

54. யோத் நாத் பாண்டே (சிவசேனா)

55. ராம் சங்கர் அக்னிஹோத்ரி (பாஜக, விஸ்வ ஹிந்து பரிஷத்)

56. ராம் விலாஸ் வேதாந்தி (சந்த் சமாஜ் தலைவர்)

57. ராஜேந்கிர சிங் என்ற பேராசிரியர் என்ற ராஜு பையா (ஆர்.எஸ்.எஸ் தலைவர்)

58. ராஜேந்திர குப்தா (உ.பி. அமைச்சர்)

59. லல்லு சிங் செளஹான் (பா.ஜ.க அயோத்தி எம்எல்ஏ)

60. லால்ஜி தண்டன் (உ.

61. வினய் கத்யார் (பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ்)

62. விஜயராஜே சிந்தியா (பாஜக)

63. விஷ்ணு ஹரி டால்மியா (விஸ்வ ஹிந்து பரிஷத்)

64. ஜி.எம்.லோதா (பாஜக)

65. ஜெய் பகவான் கோயல் (சிவசேனா)

66. ஜெய் பன் சிங் பவாரியா (பஜ்ரங் தள்)

67. ஸ்ரீ சந்தர் தீட்சித் (பாஜக)

68. ஸ்ரீவஸ்வதா (பைசியாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட்)

நன்றி : இந்நேரம்.காம்

Tuesday, November 24, 2009

டார்வினிசத்தை அறிவியல் நிராகரிக்கிறது...!

"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் டார்வினிஸம் குறித்து சில குறிப்புகளை தந்து போதிய அடிப்படைகளற்ற ஒரு வாதம் அது எனச் சொன்னோம். சாள்ஸ் டார்வின் அவர்கள் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்து மேலும் சில அம்சங்களை இங்கு நோக்குவோம்.


சார்ள்ஸ் டார்வின் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தான் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்த சிந்தனையின் மூலம் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மட்டுமல்ல, வரலாற்று ஓட்டத்திலேயே குறிப்பிடத் தக்க மாற்றங்களை உண்டு பண்ணினார்.

அவரது கொள்கை உயிரினங்களின் தோற்றம் குறித்து உலகளவில் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் கற்பிக்கப் படுகின்ற ஒரே கொள்கையாகவும் காணப்படுகின்றது.

பெரும்பான்மையாக நம்பப் படுவதாலோ, பிரதான நீரோட்ட மீடியாக்களில் முக்கியத்துவப் படுத்தப் படுவதாலோ எந்தவொரு உண்மையும் பொய்யாகவோ, எந்தவொரு பொய்யும் உண்மையாகவோ மாறுவதில்லை. இந்த மாயைகள் அனைத்தையும் தாண்டி, பகுத்தறிவு ரீதியாக ஒரு அம்சத்தை மிகச் சரியாக பகுத்தாராய்வதன் மூலம் உண்மைகளை கண்டறிவதுதான் விஞ்ஞானம் என்பதை புரிந்துகொண்டால், எங்கோ ஒரு முலையில் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை கண்டறியலாம். உண்மையானதொரு அறிவியல் வாதியின் வேலையும் அதுதான்.

சார்ள்ஸ் டார்வின் தனது புரட்சிகரமான நூலான "The Origin of Species" என்ற நூலில் முன்வைக்கும் வாதங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
ஆரம்பத்தில் மிகச்சிக்கலான அமைப்பில் பூமியில் உயிர்கள் தோற்றம் பெற்றன. அவை தமக்கு மத்தியில் எப்போதும் வாழ்தலுக்கான போட்டியில் ஈடு பட்டிருந்ததால் சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தன. அவ்வாறு மாற்றிக்கொள்ள முடியுமானவை பிழைத்தன. இயலாதவை அழிந்து போயின. இவ்வாறு கடும் போட்டியில் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருந்த உயிர்களை, இயற்கை தேர்வின் மூலம் தெரிவுசெய்யப் பட்ட உயிர்கள் என டார்வின் வர்ணித்தார். இவ்வாறு மில்லயன் கணக்கான ஆண்டுகள் இடம் பெற்று வருவதால் உயிர்கள் இன்றுள்ள சிக்கலான அமைப்பை பெற்றன. காலப்போக்கில் வித்தியாசமான சூழல் காரணிகளுக்கு ஏற்ப வித்தியாசமான உயிர்களாகவும் அவை பரிணாமம் அடைந்தன.

டார்வின் தனது நூலில் குறிப்பிட்ட வாதத்தின் சாராம்சம் இதுதான். டார்வின் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இன்றிருக்கின்ற விஞ்ஞான தொழிநுட்ப வசதிகள் இருக்கவில்லை. மிக எளிய பரிசோதனை உபகரணங்களைத்தான் டார்வின் தனது பரிசோதனைகளுக்கு பயன்படுத்தினார். உயிர்களின் மிக சிக்கலான உடலயியல் கூறுகளை மிக இலகுவாக அவற்றால் கண்டறிய முடியவில்லை. அன்றைய காலப் பிரிவில் இன்று கண்டறியப்பட்டுள்ள விஞ்ஞான உண்மைகளில் மிகவும் ஒரு சிறிய பகுதியே கண்டறியப்பட்டிருந்தது. அதனால், டார்வின் தனது கொள்கையை மிகவும் பலகீனமான அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப அது வாய்ப்பாக இருந்து விட்டது.
அவர் தனது H.M.S.Beagle என்ற கப்பலில் செய்த சுற்றுப்பிரயாணத்தின் மூலமும், மற்றும் சில அனுபவங்களின் மூலமும் பெற்ற சில சிந்தனைகளை மையப் படுத்தியாக மட்டுமே அதனை கருத முடிகிறது.

டார்வினிசம் குறித்த ஆய்வில் நீண்ட காலம் ஈடு பட்டு இது தொடர்பில் பல அறிய படைப்புகளை வழங்கியவர்களில் ஹாருன் யஹ்யா என்ற துருக்கி அறிஞர் முதன்மையானவர். தனது எழுத்துகளுக்காக பல முறை சிறை வாசமும் அனுபவித்திருக்கிறார். டார்வினசம் குறித்து தனது படைப்புகள் ஊடாக எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறார் ஹாருன் யஹ்யா. அவரது படைப்புகளை http://www.harunyahya.com/ என்ற இணைய தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம்.


இப்பத்தியில் டார்வினிசம் குறித்து ஹாருன் யஹ்யா முன்வைக்கும் சில கேள்விகளை மட்டும் இங்கு தொகுத்து நோக்கலாம்.

முதல் உயிரின் தோற்றம்
ஒரே மூதாதையரில் இருந்து படிப்படியாக உயிர்கள் பரிணாமம் பெற்றது என ஏற்றுக்கொண்டாலும், உலகில் தோன்றிய மிக எளிமையான அந்த முதல் உயிர் எவ்வாறு ஒருவானது என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து டார்வின் ஒன்றும் குறிப்பிடவில்லை.

டார்வின் வாழ்ந்த காலத்தில் உயிரினங்கள் மிக எளிமையான கட்டமைப்புக் கொண்டவை என நம்பப்பட்டன. பழைய உணவுப் பதார்த்தங்களில் இருந்து சிறிய உயிரினங்கள் தானாகவே உருவாக முடியும் என நம்பப்பட்டு வந்தது. அவ்வாறே பக்டீரியாக்கள் உயிரற்ற பண்டங்களில் இருந்து தானாகவே உருவாக முடியும் என பரவலாக நம்பப்பட்டது.

இத்தகைய ஒரு பின்னணியில் டார்வின் தனது கொள்கையை வடிவமைத் தமையால் முதல் உயிரினம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்ற கேள்விக்கு பதில் தர வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. எனினும் இன்று பரிணாம வளர்ச்சி குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்வியாக இது இருக்கிறது.

பரம்பரை அலகுகள் கடத்தப்படல்
பரம்பரை அலகுகள் எவ்வாறு சந்ததிக்கு சந்ததி கடத்தப்படுகிறது என்பது டார்வின் வாழ்ந்த காலத்தில் சரிவரப் புரியப்பட்டிருக்கவில்லை. இரத்தம் மூலமே அவை கடத்தப் படுவதாக பரவலாக நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே டார்வின் தனது கொள்கையை உருவாக்கினார். இயற்கை தேர்வை பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு படுத்த டார்வின் முற்பட்டார்.


வெளிச் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளப் படும் இயல்புகள் பரம்பரை இயல்பாக கடத்தப்பட மாட்டாது என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், அவ்வாறு கடத்தப்படும் என டார்வின் நம்பியதுதான் டார்வினின் முதல் தவறாக இருந்தது.

எனினும், இதற்கு சிறிது காலத்திற்குப் பிறகு கிரகர் மெண்டல் என்ற பாதிரி கண்டறிந்த பரம்பரை இயல்புகள் குறித்த ஆய்வு முடிவுகள் இதனை பிழை என நிறுவின. இவ்வாய்வு பரம்பரை ஆய்வுகள் சில மாறாத விதிகளின் மூலம் கடத்தப் படுவதாக நிறுவியது. அந்த விதிகளின் படி, உயிர்களின் தன்மைகள் பொதுப்படையாக மாறாத்தன்மை கொண்டதாகத்தான் இருந்தது.


மெண்டலின் சிந்தனைகள் டார்வினின் சிந்தனைகளை எதிர்த்தன.
இந்த ஆய்வுகள் டார்வினிசத்தின் அடிப்படைகளையே தகர்த்தெரிவதாக அமைந்திருந்தது. இந்த கருத்தியல் சிக்கல்களை கருத்தில் கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கூருகளில் நியோ-டார்விநிசம் முன்வைக்கப்படுகிறது. இந்த நியோ- டார்வினிஸ்டுகள் கூர்ப்பின் அடிப்படையாக பரிணாம வளர்ச்சி இடம்பெறுவதாக வாதிட்டனர். கூர்ப்பு என்பது சூழலியல் காரணிகளால் DNA எனப்படும் பரம்பரை இயல்புகளே மாறுவதாக இவர்கள் வாதிட வேண்டி ஏற்பட்டது.

சுவட்டு ஆதாரங்கள்
டார்வினசம் குறித்து மிக ஆழமான சந்தேகங்களை எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது சுவட்டு ஆதாரங்கள். டார்வின் தனது நூலில் சுவட்டு ஆதாரங்கள் தனது கொள்கையை மெய்ப்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்று வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள சகல சுவட்டு ஆதாரங்களும் டார்விநிசத்தின் அடிப்படைகளையே கேள்விக்குற்படுத்தும் விதத்தில்தான் அமைந்துள்ளன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிர்களின் சுவடுகளை ஆராய்ந்த போது அவை இன்று வாழ்கின்ற உயிர்களில் இருந்து ஒரு சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை என்பது தெளிவானது.



அதே போன்று பரிநாமத்தொடரில் இரண்டு உயிர்களுக்கு இடையில் வாழ்ந்த உயிர்களின் சுவடுகளும் கண்டறியப்படவில்லை. இதனை டார்வினும் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், தொடர்ந்துவரும் ஆய்வுகளில் அவை கண்டறியப்படும் எனக்குறிப்பிட்டார். எனினும் இருநூராண்டுகால ஆராய்ச்சிகளின் பின்னும் இன்னும் எதுவும் கண்டறியப்படவில்லை.

டார்வின் தனது கொள்கையை மெய்ப்படுத்த முன்வைத்த மிகப்பலமான ஆதாரம் இங்கு வலுவிழந்து போகிறது.

இயற்கை தேர்வு
வாழ்க்கை தேவைகளுக்காக கடும் போட்டியில் உயிர்கள் ஈடுபட்டிருப்பதும், இயற்கை தேர்வும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிக முக்கியமாக வர்ணிக்கப்பட்டது.

இதனை புரிந்து கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட எந்த ஆதாரமும் இயற்கை தேர்வு எவ்விதம் ஒரு புது உயிரினத்தின் தோற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள போதுமானதாக இல்லை.

எனவே நியோ- டார்வினிஸ்டுகள் கூர்ப்பை இயற்கை தேர்வோடு சேர்க்க வேண்டி ஏற்பட்டது.

இருப்புக்கான போராட்டம்
தனது இருப்புக்காக உயிர்கள் எப்போதும் கடும் போட்டியில் ஈடு பட்டிருக்கிறது என்று சொல்வதை கூட முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார் ஹாருன் யஹ்யா. உயிர்கள் கிடைக்கக் கூடிய உணவுக்கு ஏற்ப தமது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தமது எண்ணிக்கையை கட்டுப் படுத்துகின்றன. இங்கு கடும் போட்டி என்பதை விட, இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்துவதன் மூலமே அவை பெருமளவில் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.

சில உயிர்கள் தமது மற்ற அங்கத்தவர்களுக்காக தியாகங்கள் கூட செய்வது தெரிய வந்துள்ளது.

உதாரணமாக, வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சில பற்றீரியாக்கள் மற்ற பாக்டீரியாக்களுக்கு அவை பரவாமல் இருக்க தம்மைத்தாமே அழித்துக் கொள்கின்றன.

எனவே, முழுமையான வாழ்தலுக்கான போராட்டம் என்பது அர்த்தம் அற்றுப் போகிறது என்கிறார் ஹாருன் யஹ்யா.

பரிசோதனை, அவதானம் என்பவற்றின் ஊடான முடிவுகள்
சார்ள்ஸ் டார்வினும் அவர் வழி வந்த அறிஞர்களும் பரிசோதனை ரீதியாக டார்விநிசத்தை நிரூபிக்க தவறி விட்டனர்.

இதனை மிக மெதுவாகத்தான் மாற்றங்கள் இடம் பெறுகிறது எனக் கூறி தட்டிக் கழித்து விட முடியாது. ஒரு மனிதனின் வாழ்வுக்குள், சில நாட்களே வாழும் பல உயிர்களின் பல ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வாழ்ந்து முடிந்து விடுகின்றன. அவற்றில் எதிலும் இயற்கை தேர்வு மூலம் ஒரு புது உயிர் தோன்றுவது அவதானிக்கப் படவில்லை.

முடிவாக...

மேலே சொன்ன காரணங்களால் டார்விநிஸம் தனது இடத்தை முழுமையாக இழக்கிறது. இந்த பலகீனங்கள் காரணமாகத்தான் நியோ- டார்விநிஸம் முன்வைக்கப் படுகிறது. இவர்களின் கருத்தில் பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வோடு, கூர்ப்பும் சேர்ந்துதான் புதிய உயிரினங்களை தோற்று விக்க முடியும் என நம்பினர்.


கூர்ப்பை பரம்பரை இயல்புகளில் ஏற்படும், அடுத்த பரம்பரைக்கு கடத்தப்பட முடியுமான இயல்பு மாற்றங்கள் என இவர்கள் குறிப்பிட்டனர்.

நியோ- டார்விநிஸம் பேசுபவர்களில் பலர் டார்வினின் அடிப்படையான சிந்தனைகளில் இருந்து மிகவும் விலகியும் சென்றுள்ளனர்.



சுருக்கமாகச் சொன்னால், நியோ- டார்விநிசத்தின் தோற்றம் டார்விநிசத்தின் பெறுமானத்தை இழைக்கச் செய்கிறது என்றால், மறு புறத்தில் நியோ- டார்விநிச வாதிகள் டார்விநிசத்தில் இருந்து விலகிச் செல்வது அதனை மேலும் பெறுமானம் இழக்கச் செய்கிறது.

கூர்புக்கொள்கை குறித்தும், அதன் ஆழ, அகலங்கள் குறித்தும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்.

தற்போதைக்கு சார்ள்ஸ் டார்வின் முன்வைத்த சிந்தனைகளை விஞ்ஞானம் நிராகரித்து விட்டது என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. நாம் முன்பு சொன்னது போல் மிகவும் சிரமத்தோடு அதிகார வர்க்கத்தின் உட்ச பட்ச பிரயத்தனத்தோடுதான் டார்விநிஸம் இன்னும் உயிர் வாழ்கிறது. பிரசார ஊடகங்களின் மாய வலையில் சிக்காமல் இருந்தால் எம்மை யாரும் ஏமாற்ற முடியாது. இல்லாவிட்டால், ஹோளிவூடில் மட்டும் சாத்தியமான அம்சங்களை விஞ்ஞானம் என்ற பெயரில் எம்மை நம்பச் செய்து விடுவார்கள்.

THANKS 2 YATHRIGAN http://feeds.feedburner.com/blogspot/DHSX

விமர்ஷனங்களை -தடைகளை தகதெரிந்த ருகையா சகோதரி

ஹிஜாப் உனக்கு தடையா??

ruqaya-alghasra-விமர்ஷனங்களை -தடைகளை தகர்த்தெறிந்த ருகையா சகோதரி

Al Ghasara wins women's 200m gold for Bahrain.

Rugaya Al Ghasara of Bahrain spurts during the women's 200m final of athletics at Doha Asiad, Qatar, Dec. 11, 2006. She timed 23.19 seconds to win the gold medal in the event.(












பாத்திமாவும், ஆயிஷாவும்,( ரலி )
திரையிட்டுத்தான் இருந்தார்கள்...
அறிவுக்கு திரை போட எப்போது சொன்னார்கள்?

உடம்பை மட்டும் தான் நீ மறைக்க வேண்டும்
அறிவையல்ல...

உன் கால்களுக்கு விலங்கிட்ட அந்தக் கயவன் யார்?

கிழித்தெரி
உன் உடைதிரையை அல்ல...
உன் அறிவுக்கு இட்ட திரையை..

உடைத்திடு
உன் கால்களுக்கு
விலங்கிட்டவன் கரங்களை...

மாறி விடு...


முகம்மத் நபி காட்டி தந்த ஒரு
புதுமைப்பெண்ணாய் நீ...

நாளை ஒரு புது உலகம்
உன் கரங்களில் தயாராகட்டும்!

இறைவனின் நாட்டத்தோடு ...





உன் வெற்றி தொடர வாழ்த்துக்கள் சகோதரி ......

Monday, November 23, 2009

பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய்-அத்வானி -ஜோஷிக்கு தொடர்பு: லிபரான் கமிஷன்

டெல்லி: பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் கூறியுள்ளது.


நாடாளுமன்றம் கூடியுள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கப் பயணத்தில் இருக்கும் நிலையில் இந்தக் கமிஷனின் அறிக்கையின் சில பகுதிகள் 'லீக்' ஆகியுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு திடீரென உணர்ச்சி வேகத்தில் நடந்துவிடவில்லை. அது மிகவும் திட்டமிட்ட சதி.

இந்தச் சதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு நிச்சயமான தொடர்பு உண்டு.

இவர்களுக்குத் தெரியாமல் இந்த சம்பவம் நடந்ததாகவோ அல்லது இவர்கள் குற்றமற்றவர்கள் என்றோ கூற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லிபரான் சமர்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரிலேயே இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில், எந்த நாளில் தாக்கலாகும் என்பது குறித்து அரசு திட்டவட்டமாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது.

இந் நிலையில் இந்தப் பகுதிகள் 'லீக்' செய்யப்பட்டுள்ளன. இதை மத்திய அரசே கசிய விட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.


நாடாளுமன்றத்தில் அமளி:


லிபரான் கமிஷன் அறிக்கையின் குறிப்பிட்ட தகவல்கள் வெளியானது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக அமளியில் ஈடுபட்டது.

அறிக்கையின் ஒரு சில பகுதிகள் மட்டும் வெளியானதற்கு காரணம் என்ன, தகவல்கள் எப்படி கசிந்தது என்று மக்களவையில் எதிர்கட்சித் தலைவர் அத்வானி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

உள்துறை லீக் செய்யவில்லை-சிதம்பரம் :


இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், லிபரான் கமிஷன் அறிக்கையும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையும் மக்களவைத் கூட்டத்தொடர் முடியும்போது டிசம்பர் 21ம் தேதி தாக்கல் செய்யப்படும்.

லிபரான் கமிஷன் அறிக்கையின் ஒரே ஒரு நகல்தான் எங்களிடம் உள்ளது. அதை பத்திரமாக வைத்துள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள விவரம் பற்றி உள்துறையில் இருந்து யாரும் பத்திரிகைகளிடம் சொல்லவில்லை என்றார்.



நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:

அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டதால் அவையில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதே போல ராஜ்சபாவிலும் பாஜக எம்பிக்கள் கூச்சலிட்டு குழப்பம் ஏற்படுத்தியதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அறிக்கையை நான் கசியவிடவில்லை-லிபரான்:

இந் நிலையில் நீதிபதி லிபரான், அறிக்கையின் எந்த ஒரு அம்சத்தையும் தான் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கசியவிட்டது காங்கிரஸ் தான்-பாஜக:

பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில், லிபரான் கமிஷன் அறிக்கையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வேண்டும் என்றே வெளியே கசிய விட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால் அதில் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் காங்கிரஸ் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

விசாரணை அறிக்கைகளை நாடாளுமன்றம் கூடும் முதல் நாளிலேயே தாக்கல் செய்வது வழக்கம். இப்போது மட்டும் அறிக்கையை தாமதமாக தாக்கல் செய்ய முடிவெடுத்ததில் ஏதோ மர்மம் உள்ளது.

அறிக்கை எப்படி வெளியானது என்பது பற்றி மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். யாரும் குறை சொல்ல முடியாத வாஜ்பாய் பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதைச் செய்துள்ளனர் என்றார்

நாளையே தாக்கல் செய்யனும்..லாலு-முலாயம்:

இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாளையே நாடாளுமன்றத்தில் லிபரான் கமிஷன் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், இந்த அறிக்கையை உடனே தாக்கல் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அவையை நடத்த விட மாட்டோம் என்றார்.

வாஜ்பாய் பெயர் இல்லை...

இந் நிலையில் லிபரான் கமிஷனி்ல் இடம் பெற்றிருந்த மூத்த அதிகாரியான் அனுபம் குப்தா கூறுகையில், கமிஷனின் அறிக்கையில் வாஜ்பாயின் பெயர் இருப்பதாக எப்படி தவறான தகவல் வெளியானது என்று தெரியவில்லை.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தொடர்பே இல்லாத ஒரே மூத்த பாஜக தலைவர் வாஜ்பாய் தான். அயோத்தி இயக்கத்திலும் அவர் தீவிரமாக இருந்ததில்லை. கமிஷன் கூட வாஜ்பாயை விசாரித்ததில்லை. இந் நிலையில் அவரது பெயர் எப்படி அறிக்கையில் உள்ளதாக தவறான தகவல் வெளியானதோ தெரியவில்லை என்றார்.

சோனியா தீவிர ஆலோசனை:

இந்த அறிக்கை விவகாரம் குறித்தும், அதை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது இல்லத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் டிசம்பர் 21ம் தேதிக்கு முன்பே, பிரதமர் நாடு திரும்பியபின் இந்த அறிக்கை தாக்கலாகலாம் என்று தெரிகிறது.

ஹதீஸ்கள் வேண்டுமா? ஆய்வு .

குர்ஆன் முழுமையடைந்து விட்டது இந்நிலையில் நாம் ஏன் ஹதீஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஹதீஸ்களை எழுதி வைக்குமாறு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா..? ஹதீஸ் என்றப் பெயரில் நிறைய தவறான கருத்துக்கள் இருக்கின்றனவே?


ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும்.

முஹம்மத் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்றால் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பது உலக முஸ்லிம் அறிஞர்களின் முடிவு. எத்தகைய ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உள்ளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் தென்பட்டாலும் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கடந்தக் காலங்களில் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்தில் காலாகாலமாக பிரபல்யமாக இருந்து வரும் ஹதீஸ் தொகுப்புகளுக்கும் இருந்த கால இடைவெளிகளையெல்லாம் உலக அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள். இதில் மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கால இடைவெளிகளை நிரம்பும் மனிதத் தொடர்கள் அறிவுப்பூர்வமானவைதான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். சில அறிஞர்கள் கால இடைவெளியில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று ஹதீஸ்களைப் புறக்கணிக்கும் மனநிலையைப் பெற்றுவிட்டார்கள்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் 'அஹ்லுல் குர்ஆன்' என்பவர்கள் 'குர்ஆன் மட்டும் போதும்' என்றக் கொள்கையை மக்களிடம் முன் வைக்கிறார்கள். இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் படித்த - சிந்தனை தெளிவுமிக்க சிலர் கூட தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமானால் எப்படி எதைப் பார்த்துப் பின்பற்றுவது என்றத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும்.

குர்ஆனில் ஏராளமான வசனங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்றக் கட்டளையை முன் வைக்கிறது. அவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்தால் குர்ஆனோடு சேர்த்து 'இது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாடம் தான்' என்று நிரூபணமான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டும் என்பதை ஐயமின்றி விளங்கலாம்;.

முதலில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய வசனங்களைப் பார்ப்போம்.

1)மக்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் (அதை) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் நாம் இதை இறக்கி வைத்துள்ளோம். (அல் குர்ஆன் 16:44)

2)(நபியே!) அவர்கள் முரண்பட்டு நிற்பதை அவர்களுக்கு நீர் விளக்குவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் அருளினோம். (அல் குர்ஆன் 16:64)

இந்த இரண்டு வசனங்களில் 'நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும்' என்று இறைவன் கூறுவதின் விளக்கம் என்ன என்பதை ஆராய முற்படும் எவரும் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிகப் படியான விளக்கம் நபி(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்வர்.

குர்ஆனில் பார்த்தவுடன் - படித்தவுடன் சட்டென்று புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும் சற்று சிந்தித்தவுடன் புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும், 'இதற்கு ஏதாவது விளக்கம் இருக்க வேண்டும்' என்று கூடுதலாக ஆய்வு செய்யத் தூண்டும் வசனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வசனத்திற்கும் சஹாபாக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கவுமில்லை. நபி(ஸல்) விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவுமில்லை. ஏனெனில் பெருவாரியான வசனங்கள் பார்த்தவுடன், கேட்டவுடன் விளங்கி விடும் விதத்திலேயே இறங்கிக் கொண்டிருந்தன. சில வசனங்கள் சிலருக்கு புரியாத தருணங்களில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டு தெரிந்துள்ளனர். இன்னும் சில வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வலியவே விளக்கமளித்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவைகளையெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை. இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால் 'நீர் அவர்களுக்கு விளக்குவதற்காக..' என்று இறைவன் குர்ஆன் விளக்கவுரையாளராக நபி(ஸல்) அவர்களை குறிப்பிடுவதிலிருந்து 'குர்ஆனுக்கு நபி(ஸல்) மேலதிக விளக்கம் கொடுத்துள்ளார்கள் அதை இறைவன் அங்கீகரித்துள்ளான்' என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இறைச் செய்தி வெளிப்படும் விதங்கள்.

3)இறைவன் எந்த ஒரு மனிதரிடத்திலும் பேசுவதாக இருந்தால்,

வஹியின் மூலமாகவோ அல்லது

திரைக்கு அப்பாலிருந்தோ அல்லது

ஒரு தூதர் வழியாக அவன் நாடியதை அறிவிப்பதன் மூலமாகவோ தவிர வேறு விதத்தில் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல் குர்ஆன் 42:51)

இந்த வசனத்தில் 'தூதர் வழியாக நாடியதை அறிவிப்பதன் மூலமாக..' என்பது எதைக் குறிக்கிறது? பெரிய ஆராய்ச்சியே தேவையில்லை. ஜிப்ரயீல் வழியாக வந்த குர்ஆன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். (வானவர்கள் நேரடியாக நபிமார்களை சந்தித்து உரையாடியுள்ள விதமும் இதில் அடங்கும் இப்ராஹீம்(அலை) லூத்(அலை) ஆகியோரை வானவர்கள் சந்தித்து உரையாடியுள்ளார்கள்).

நபிமார்களுக்கு வானவ தூதர்கள் மூலம் சொல்லப்பட்டு - வெளிப்பட்டு தொகுக்கப்பட்டது வேதங்கள் என்றால் 'வஹியின் மூலமாகவோ..' என்று இறைவன் குறிப்பிடும் அந்த வஹி என்ன?

ஜிப்ரயீல் வழியாக குர்ஆன் வந்து விட்டது. இது இறைவன் பேசக்கூடிய ஒரு விதம். வஹியின் மூலம் பேசுவேன் என்று இறைவன் கூறுகின்றானே அந்த வஹி எது? இது நிச்சயம் நபிமார்களுக்கு மனஉதிப்பை ஏற்படுத்தும் வஹியாகவே இருக்க முடியும். குர்ஆன் மட்டுமில்லாமல் மன உதிப்பின் மூலமாகவும் இறைச் செய்தி வெளிப்படும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக உள்ளது. அப்படியானால் மன உதிப்பின் மூலமாக வந்த அந்த செய்திகள் எங்கே? குர்ஆனோடு நிருத்திக் கொள்ளலாம் என்று கூறுவோர் குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனத்திற்கு என்ன விளக்கமளிப்பார்கள்?. மன உதிப்பின் வழியாக வந்த வஹியின் தொகுப்புகளே ஹதீஸ்களாகும். (தொகுப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் வஹிதானா.. என்று அவசரமாக யாரும் கேள்வி கேட்டுவிட வேண்டாம். எத்தகைய ஹதீஸ்கள் வஹியின் வெளிபாடு என்பதை பின்னர் விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்)

திரைக்கு அப்பாலிருந்து பேசுவேன் என்கிறான் இறைவன். மூஸா(அலை) அவர்களோடு நடந்த உரையாடல் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. முஹம்மத்(ஸல்) அவர்களோடும் உரையாடல் நடந்துள்ளது இதை பலமான ஹதீஸ்கள் வழியாக அறியமுடிகிறது.

4)எந்த ஒரு தூதரையும் அந்த சமுதாயம் பேசும் மொழியிலேயே அனுப்பினோம் அந்த சமுதாயத்திற்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக. (அல் குர்ஆன் 14:4)

வெறும் வேத வெளிப்பாடு மட்டுமே போதும் என்ற நிலை இருந்தால் விளக்கிக் கூறும் தகுதி தேவையில்லாமல் போயிருக்கும். விளக்கிக் கூறும் தகுதியை இறைவன் பிரத்யேகப் படுத்துவதிலிருந்தே வேதங்களுக்கு நபிமார்கள் மேலதிக விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருந்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது.

வேதம் என்று ஒன்று வந்து விட்டால் போதும் அதை தேவையான இடங்களில் மேலதிகமாக விளக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றால் எந்த சமுதாயத்திற்கு வேதம் வருகிறதோ அந்த சமுதாயத்தின் மொழியில் வேதம் மட்டும் இருந்தால் போதும். வேதத்தை வெளிபடுத்தும் தூதரருக்கு குறைந்தபட்சம் அந்த மொழி பேச தெரிந்தால் போதும். வேதத்திற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என்றால் தூதருக்கு 'விளக்கும் திறன்' அவசியப்பட்டிருக்காது. ஆனால் இந்த வசனத்தில் 'அவர் தம் சமுதாயத்திற்கு விளக்குவதற்காக அவர்களின் மொழியில் அனுப்பினோம்' என்கிறான் இறைவன். வேதத்திற்கு மேலதிக விளக்கம் நபிமார்களால் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது என்பதை இந்த வசனம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனை!

5)என் இறைவா! என் உள்ளத்தை எனக்கு விரிவாக்கு. எனது பணியை எனக்கு எளிதாக்கு. என் நாவில் உள்ள முடுச்சுகளை அவிழ்த்து விடு (அப்போதுதான்) என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். (அல் குர்ஆன் 20:25-28)

ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய வேண்டிய மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் ஏற்கனவே எழுதப்பட்ட தவ்ராத் என்ற ஏட்டை(வேதத்தை) வழங்கி இருந்தான். தவ்ராத்தைப் பெற்ற நிலையில்தான் அவர்கள் ஃபிர்அவ்னை சந்திக்க செல்கிறார்கள். இந் நிலையில் வேதத்தை மட்டும் சமர்பித்துவிட்டு வருவது அவர்களின் பணி என்றால் திக்குவாயைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் அவர்கள் கவலைப்படுகிறார்கள். தன் நாவில் உள்ள முடுச்சால் தன்னால் இறைச் செய்திகளை ஒழுங்காக விளக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால்தான் இறைவனிடம் முறையிடுகிறார்கள். 'அவர்கள் என் சொல்லை விளங்கிக் கொள்வதற்காக என் நாவின் முடுச்சை அவிழ்த்து விடு' என்ற மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனையும் அதை ஏற்றுக் கொண்டேன் (20:36) என்ற இறைவனின் உத்திரவாதமும் மூஸா(அலை) வேதத்தை மேலதிகமாக விளக்கும் கடமையில் இருந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவில்லையா..?

6)(முஹம்மத்) உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார். உங்களைத் தூய்மைப் படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் (அதன்) ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். (அல் குர்ஆன் 2:151)

இந்த வசனத்தையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இதில் நபி(ஸல்) அவர்களின் பணி பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார்.

உங்களைத் தூய்மைப் படுத்துவார்;.

வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்.

அறியாதவற்றையும் கற்றுக் கொடுப்பார்.

உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பிப்பார் என்பதோடு இறைவன் நிருத்தி இருக்கலாம் அதாவது நபிமார்களுக்கு மேலதிக பணி இல்லையென்றால். உங்களைத் தூய்மைப் படுத்துவார் என்கிறான். இது ஆன்மீகத் தூய்மையைக் குறிப்பதாகும். பின்னர் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்கிறான் இறைவன்.

வேதத்தை ஓதிகாண்பித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது மட்டும் அவர்களின் பணியாக இல்லாமல் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் அதன் ஞானத்தை விளக்குவதும் கூட அவர்களின் பணியாக இருந்துள்ளது.

இங்கு கற்பித்தல் என்பது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கற்பித்தல்: விளக்குவது.

கற்பித்தல்: வாழ்ந்துக் காட்டவது

வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இறைவன் சொல்வதிலிருந்தே அவைகள் பதிவு செய்யப்பட வேண்டும் - அடுத்தடுத்தத் தலைமுறைக்காக அவை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது விளங்குகிறது.

குர்ஆன் மட்டுமே போதும் என்றால் இறைத்தூதர் கற்பித்த அந்த ஞானம் எங்கே என்பதற்கு பதிலில்லாமல் போய் விடும்.

எனவே இன்றைக்கும் அந்தத் தலைவர் பின்பற்றத்தக்கவராகத் தான் இருக்கிறார் என்பதை குர்ஆன் மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அவரைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன குர்ஆனில்.

'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' அலு இம்ரான் 3:31.

ஹதீஸ்களில் - முரண்பாடுகளும் கலப்படங்களும் உள்ளதால் 'குர்ஆன் மட்டுமே' போதும் என்ற வாதத்தை சிலர் முன் வைக்கிறார்கள் அது குர்ஆன் வசனங்களுக்கே முரண்படுகிறது என்பதை மேலே சுட்டியுள்ளோம்.

குர்ஆன் வசனங்களில் பலவற்றிற்கு கூடுதலான விளக்கம் தேவை என்ற தோரணையில் அமைந்துள்ள வசனங்கள் குர்ஆனில் நிறையவே உண்டு. அது போன்ற இடங்களில் இறைத்தூதர் என்ற முறையில் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ள கூடுதல் விளக்கம் ஹதீஸ்களில் வருகிறது. ஹதீஸ்களைத் தவிர்த்து குர்ஆனின் மற்றப்பகுதிகளில் அந்த வசனங்களுக்கான விளக்கத்தைத் தேடினால் கிடைக்காது என்பதுதான் உண்மை.

அத்தகைய வசனங்களை நாம் இந்தத் தொடரில் பார்ப்போம்.

(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை- அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. (அல் குர்ஆன், 2:149.)

(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:150)

இந்த வசனங்களின் நேரடிப் பொருள் என்ன? முஹம்மத்(ஸல்) அவர்கள் உட்பட இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் தங்கள் முகங்களை எந்நேரமும் புனித பள்ளிவாசலான கஃபத்துல்லாஹ்வின் பக்கமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நேரடிப் பொருள்.

தொழுகையின் போது முகத்தைக் கஃபாவின் பக்கம் திருப்புங்கள் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பொதுவாக முகத்தை அதன் பக்கம் திருப்புங்கள் என்றே குர்ஆனில் வருகிறது. ஹதீஸ்களைக் கொண்டு இதன் பொருளை விளங்காவிட்டால் - குர்ஆனுடைய எந்த வசனத்தையும் நான் நேரடியாகத்தான் புரிந்துக் கொள்வேன் என்று யாராவது கூறினால் அவர்கள் இந்த வசனத்தை நடைமுறைப் படுத்தும் போக்கு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தொழுகையின் போது முகத்தை கஃபாவின் பக்கம் திருப்புவதற்கும் - எந்த நேரமும் கஃபாவின் பக்கமே முகத்தை வைத்துக் கொள்வதற்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வித்தியாசங்கள் உள்ளன. ஹதீஸ்களைக் கொண்டு இதை விளங்காமல் நடை முறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை இறைவன் குர்ஆனில் குறிப்பிட்டு விட்டான் என்று முடிவுக்கு வர முடியுமா..? இந்த வசனம் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை அறிவிக்கவில்லையா..

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:287)

இந்த வசனத்தை ஊன்றிக் கவனியுங்கள். 'நீங்கள் இரகசியமாக உங்களை நீங்களே வஞ்சித்துக் கொண்டிருந்ததை இறைவன் அறிவான். எனவே அவன் உங்கள் மீது இரக்கம் கொண்டு உங்களை மன்னித்தான்'. என்கிறான் இறைவன். நபித்தோழர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் இறைவன் விதித்த ஏதோ ஒரு சட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியாமல் போய் அந்த சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் என்பது விளங்குகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஆரம்பத்தில் நோன்புக் கால இரவில் மனைவியுடன் கூடக் கூடாது என்ற சட்டம் இருந்து நபித்தோழர்கள் அதை மீறி பாவம் செய்திருந்தால் தான் இவ்வாறு கூறமுடியும். இந்த வசனம் இந்தக் கருத்தைத்தான் உள்ளடக்கி நிற்கிறது. அப்படியானால் 'நோன்புக் கால இரவில் மனைவியுடன் சேரக் கூடாது' என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. ஹதீஸ்களில் தான் 'நபித்தோழர்கள் தங்கள் நல்லமல் அழிந்து விடுமோ.. என்ற அச்சப்பட்ட நிலையிலேயே தங்கள் மனைவியுடன் சேருவார்கள்' என்ற விபரம் கிடைக்கின்றது. ஹதீஸ்களை விடுத்து இந்த வசனத்தை விளங்க வேண்டுமென்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன என்பதை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. (அல் குர்ஆன் 2:197)

இந்த வசனத்தில் 'ஹஜ்ஜூக்குரிய மாதங்கள்' என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. பிரிதொரு இடத்தில் 'புனித மாதங்கள்' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாதங்கள் யாவை என்ற விபரம் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஹதீஸ்களை புரட்டும் போது தான் ஹஜ்ஜூக்குரிய மாதங்கள் யாவை?. 'புனித மாதங்கள்' என்று கூறப்படுபவை எது? அவற்றிற்கும் ஹஜ்ஜூக்கும் தொடர்பு உண்டா..? போன்ற விபரங்கள் கிடைக்கும். 'விசுவாசிகளே. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள் என்று (நபியே) நீர் கூறும்' என்ற வசனம் இன்றைக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதற்கு இதுவும் சான்றாகும்.

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (அல் குர்ஆன் 2:203)

குறிப்பிட்ட நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் - இரண்டு நாட்களில் கிளம்பி விட்டாலும் குற்றமில்லை. மூன்று நாட்கள் முழுமையாக தங்கினாலும் குற்றமில்லை என்கிறது இந்த வசனம். குறிப்பிட்ட நாட்கள் என்பது என்ன? இரண்டு மூன்று நாட்கள் என்பது எதிலிருந்து துவங்குகிறது போன்ற விபரங்கள் குர்ஆனில் இல்லை. இதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால் முஹம்மத்(ஸல்) அவர்கள் இந்த நாட்களை எப்படி கணக்கிட்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்தால் தான் முடியும்.

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. (அல் குர்ஆன் 2:228)

இந்த வசனத்தில் மூன்று மாதவிடாய்கள் என்று வருகிறது. அரபு மூலத்தில் இதை குறிக்க 'ஸலாஸத குரூஃ' என்ற பதம் வருகிறது. மூன்று மாதவிடாய்கள் என்றும், மூன்று மாதவிடாய்களிலிருந்து தூய்மையடையும் காலம் என்றும் இதற்கு இரண்டுப் பொருள்கள் உண்டு. இப்போது இந்த வசனத்திற்கு எப்படிப் பொருள் எடுப்பது என்பதை தீர்மானிக்க நாம் ஹதீஸ்களைத் தான் நாட வேண்டியுள்ளது. 'மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையடைவதே அதன் பொருள் என்ற விளக்கம் ஹதீஸ்களில் கிடைக்கின்றது.

பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடுங்கள். (அல் குர்ஆன் 2:237)

ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- (அல் குர்ஆன் 2:238)

இந்த இரு வசனங்களிலும் 'தீண்டுதல் - தடவுதல்' போன்ற வெளிப்படையான பொருளைக் கொடுக்கக் கூடிய பதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வசனங்களின் நோக்கம் 'உடலுறவுக்கு முன்' என்பதுதான் என்பதை ஹதீஸ்கள் விளக்குகின்றன.

இரண்டாவது அத்தியாயமான சூரத்துல் பகராவிலிருந்து மட்டும் சில வசனங்களை எடுத்துக் காட்டியுள்ளோம். இதே போன்று ஹதீஸ்களில் மேலதிக விளக்கம் கிடைக்கும் வசனங்கள் நிறையவே உண்டு. அவற்றையெல்லாம் பட்டியலிடுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வசன அடிப்படையில் இன்றைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதை 'குர்ஆன் மட்டும் போதும்' என்பவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்ற கட்டளை குர்ஆனில் ஏராளமான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.

நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை (அல் குர்ஆன் 3:32)

அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல் குர்ஆன் 3:132)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள். (அல் குர்ஆன் 8:20)

எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:52)

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுவச் செய்தியை உங்களிடம் அறிப்ப)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்முடைய) இத்தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24:54)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல் குர்ஆன் 47:33)

குர்ஆன் மட்டுமே போதும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்றால் - தூதர் என்பது அவர் வாழ்ந்தக் காலத்திற்கு மட்டும் தான் இப்போது பொருந்தாது என்றால் - 'தூதருக்கு கட்டுப்படுங்கள்' என்ற வசனங்களை (சிலரைப்போல) செல்லாத வசனங்களாக கருத வேண்டி வரும் (அத்தகைய எண்ணங்களை விட்டு அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்பது எப்படி குர்ஆனைப் பின்பற்றுவதாக அமையுமோ அதே போன்று இத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பது குர்ஆனுக்கு மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிவழி செய்திகளுக்குப் பொருந்தும்.

'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' (அலு இம்ரான் 3:31.)

நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் இடம் பெறும் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கட்டளை இன்றைக்கும், நாளைக்கும், யுக முடிவுவரையிலும் செயல்படுத்த வேண்டிய கட்டளையாகும்.
நபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே தனது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்கள்::

"நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை"

நபியவர்களின் வழிமுறைகள் தானே ஹதீஸ்களில் அறிகிறோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...